கஃஸாக்ஸ்தான்: பத்திரிக்கையாளர்கள் சமுதாய ஐக்கியத்தை ஊக்குவிப்பதில் ஊடகத்தின் பங்கை ஆராய்கின்றனர்.



8 அக்டோபர் 2021


நூர்-சுல்தான், கஜகஸ்தான்-தொற்றுநோய்களின் போது இன்னும் வெளிப்படையாகத் தோன்றிய சமூக சவால்களைப் பற்றி கவலைப்படுகையில், கஜகஸ்தானில் அதிகரித்து வரும் ஊடகவியலாளர்கள் சமூக முன்னேற்றத்திற்கு ஊடகங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்று தேடல் கேள்விகளைக் கேட்கின்றனர்.

இந்த வளர்ந்து வரும் ஆர்வத்திற்கு விடையிறுப்பாக, அந்த நாட்டின் பஹாய் வெளியுறவு அலுவலகம் அதிக ஒத்திசைவான சமுதாயத்தை உருவாக்கும் பரந்த சூழலில் பத்திரிகையின் நெறிமுறை மற்றும் தார்மீகப் பரிமாணங்களைப் பற்றிய ஆழமான விவாதங்களுக்கு.பத்திரிகையாளர்களை ஒன்றுகூட்டுகிறது,

“நம் சமுதாயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம்? அது ஒற்றுமைப்படுவதை நாம் காண விரும்பினால், ஒற்றுமைக்குப் பங்களிக்கும் திறனுடைய ஓர் ஆக்கபூர்வ சக்தியாக ஊடகத்தின் பங்கை கற்பனை செய்வோம், ”என்கிறார் பஹாய் வெளியுறவு அலுவலகத்தின் இயக்குனர் லியாசாத் யங்கலியேவா.

அவர் மேலும் கூறினார்: “பத்திரிகையாளர்கள் சமுதாய மாற்றத்திற்குப் பெரிதும் பங்களிக்க முடியும். ஆனால், ஒவ்வொரு மனிதனின் மேன்மையைக் கருத்தில்கொள்ளும் மனித இயல்பு பற்றிய ஒரு புதிய கருத்தாக்கம் தேவை.”

கூட்டத்தின் பங்கேற்பாளர்கள் மனிதர்களின் ஆன்மீக இயல்பை புறக்கணிப்பது அல்லது நிராகரிக்கும் போக்கானது எவ்வாறு மக்கள் துல்லியத்தை விட உணர்ச்சியூட்டலை அதிகமாக ஆதரிக்கின்றனர் என்னும் பொதுவான கருத்துக்கு வழிவகுக்கும் என்பதை ஆராய்ந்தனர், இது,பிரசுரிக்கப் படுபவற்றிற்கான பொறுப்பை அவற்றின் ஆசிரியர்களைவிட பார்வையாளர்களின் மீதே அதிகமாக சுமத்துகிறது.

ஒரு பதிவரான இலியாஸ் நுகுமனோவ், இந்தப் பார்வைக்கு சவாலிட்டார். தார்மீகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஊடக வெளியீடுகளின் தேவையைப் பற்றி பேசினார்: “என் அனுபவத்தில், ஒன்றிணைக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இடுகைகளின்பால் பல மக்கள் ஈர்க்கப்படுவதுடன், பிரிக்கின்ற அல்லது உணர்ச்சியூட்டும் கதைகளைவிட அவற்றின்பால்தான் அதிகம் ஈர்ப்புறுகின்றனர்.

“மக்கள் தங்கள் வேறுபாடுகளைத் தாண்டி ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தத் தூண்டும் கதைகளால் ஈர்க்கப்படுகிறார்கள்”

பத்திரிகையாளர்களை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வழிநடத்தும் ஆன்மீகக் கோட்பாடுகளுடன் மனித இயல்பு பற்றிய கேள்விகள் பிணைக்கப்பட்டுள்ளன எனவும் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.

“ஒரு பத்திரிகையாளராக இருப்பதற்கு ஒருவர் தொடர்ச்சியாகத் தம்மை மேம்படுத்திக்கொள்வது தேவையாகும். அவர் மிகவும் நெறிமுறையுடனும் கனிவாகவும் தப்பெண்ணத்தை எதிர்த்துப் போராடுவதும் மக்கள்பாலும் நாம் கருத்தில்கொள்ளும் பிரச்சனைகள்பாலும் அதிக மரியாதையுடன் இருக்க வேண்டும்” என ‘ஸ்டெப்பி’ என்னும் ஊடக வெளியீட்டின் ஆசிரியர் டேனல் கோஜேவா கூறினார். .

“இது நமது பொதுவான மனிதத்தன்மை குறித்த கேள்வி,” எனத் தொடர்ந்து கூறினார், “ஒரு சிறந்த பத்திரிகையாளராக இருப்பதற்கு ஒரு சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்.”

வெளியுறவுத்துறை அலுவலகம் இந்த விவாதங்களின் போட்காஸ்ட் அத்தியாயங்களை தயாரித்து வருகிறது, இந்த யூடியூப் சேனலில் அதை ரஷ்ய மொழியில் காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1539/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: