அப்துல்-பஹா மறைவின் நூறாம் நினைவாண்டு: பிரதிநிதிகள் ஓர் ஆன்மீகச் சூழலில் தங்களைத் தயார்படுத்திக்கொள்கின்றனர்
பிரதிநிதிகள், பஹாவுல்லா மற்றும் அப்துல்-பஹாவின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட பஹாய் புனிதத்தளங்களுக்கு விஜயம் செய்து நூற்றாண்டுக்காக தயாராகின்றனர்.
24 நவம்பர் 2021
பஹாய் உலக மையம் — கடந்த இரண்டு நாட்களாக பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹாவின் வாழ்க்கை தொடர்பான பஹாய் புனித ஸ்தலங்களுக்கு உலகெங்கிலும் உள்ள பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் குழுவாகச் சென்று வருகின்றனர். வியாழன் அன்று முறையான நிகழ்ச்சி தொடங்குவதற்கான சூழலை இவ்விஜயங்கள் உருவாக்கி, நூற்றாண்டு ஒன்றுகூடலின் ஆன்மீக சூழ்நிலை உயர்த்தியுள்ளன.
கீழே உள்ள படங்கள் பஹாவுல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு பிரதிநிதிகளின் வருகைகளைக் காட்டுகின்றன; அப்துல்-பஹா இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த அக்காநகரில் உள்ள ‘அப்புட் இல்லம்; ஹைஃபாவில் உள்ள ‘அப்துல்-பஹா காலமான அவரது வீடு மற்றும் அனைத்துலக பஹாய் காப்பகம்.
பங்கேற்பாளர்கள் 28 நவம்பர் 1921 அதிகாலையில் காலமானதற்கு முன் வாழ்ந்து வந்த, ஹைஃபாவில் உள்ள அப்துல்-பஹாவின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.
பங்கேற்பாளர் குழு ஒன்று அப்துல்-பஹாவின் இல்லத்தை அணுகுகின்றனர்
பங்கேற்பாளர்களுக்கு புனிதஸ்தல பூங்காக்களின் அமைதிச் சூழலில் பிரார்த்தனையிலும் தியானத்திலும் ஆழ்ந்திருப்பதற்கான வாய்ப்பு
பங்கேற்பாளர்களின் குழு, சர்வதேச பஹாய் ஆவணக் காப்பகங்களுக்குச் செல்வதற்கு சற்று முன்பு, பஹாய் சமயத்தின் மையநாயகர்களின் வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய கலைப்பொருட்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.
பங்கேற்பாளர்கள் காப்பக கட்டிடத்திற்கு வருகை தருகின்றனர்
பக்தி மனப்பான்மையுடன், பங்கேற்பாளர்கள் காப்பக கட்டிடத்தின் வாசலை அணுகுகின்றனர்
ஆகஸ்ட் 1868 இல் ‘அக்காநகருக்கு வந்ததைத் தொடர்ந்து பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோட்டையை பங்கேற்பாளர்கள் அணுகுகின்றனர். இந்த நேரத்தில், ‘அப்துல்-பஹா நோயுற்றவர்களைக் கவனித்து, அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களுக்கான நலனுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேல் படம் 1907 இல் சிறைச்சாலையின் வரலாற்று காட்சியை வழங்குகிறது.
பஹாவுல்லாவும் பிர நாடுகடத்தப்பட்டோரும் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு பங்கேற்பாளர்கள் குழுவாகப் பிரவேசிக்கின்றனர்
பஹாவுல்லாவின் மகன்களுள் ஒருவரான மிர்ஸா மிஹ்டி வானொளி சாளரத்தின் வழியாக கீழே விழுந்து மரணமுற்ற இடத்தில் ஒன்றுகூடி பிரார்த்திக்கின்றனர்
இந்தப் படங்களில், இடமும் வலமும் உள்ள படங்கள் பஹாவுல்லா சிறைவைக்கப்பட்டிருந்த அறையை காண்பிக்கின்றன
பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் 1871 இல் இந்த இடத்திற்கு வந்தபின் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலும் நாடுகடத்தப்பட்டவர்களாகவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த அப்புட் இல்லத்திற்கு பங்கேற்பாளர்கள் வருகை தந்தனர்
அப்புட் இல்லத்தில் பங்கேற்பாளர்கள்
பங்கேற்பாளர்கள் அப்புட் இல்லத்திற்கான வருகையின் முடிவில் முன்புற முற்றத்திற்கு வருகின்றனர்
இடப்புறம் அப்புட் இல்லத்தின் பழைய (1920-கள்) படம். வலப்புறம் பங்கேற்பாளர்கள் அவ்வில்லத்திற்கு விஜயம் செய்கின்றனர்
பங்கேற்பாளர்கள் பார்வையிடும் புனித ஸ்தலங்களில் பஹாவுல்லா நினைவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள பாஹ்ஜி மாளிகையும் உள்ளது. ‘அப்துல்-பஹா இந்த வீட்டை 1879 செப்டம்பரில் தமது தந்தைக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வசிப்பிடமாக வாடகைக்கு எடுத்தார். பஹாவுல்லா பலகனியில் இருந்து தமது அன்பு மகன் அப்துல் பஹா அக்காவிலிருந்து வருவதைப் பார்ப்பார்.
ஹைஃபாவில் உள்ள நினைவுப் பூங்காவில் பங்கேற்பாளர்கள், நவ்வாப் (பஹாவுல்லாவின் மனைவி), மிர்சா மிஹ்டி (பஹாவுல்லாவின் இளைய மகன்), பஹிய்யா கானும் (பஹாவுல்லாவின் மகள் – இடது) மற்றும் அப்துல் பஹாவின் மனைவி முனிரி கானும் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வலது உள்ளன.
அருமை, இம்மாதிரியான செய்திகள் மிக பயனுள்ளதாக இருக்கிறன. மேலும் படங்களுடன் பார்க்கும் போது மனதுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது. நன்றி வாழ்த்துக்கள்.
தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு இந்த இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தவும்