அப்துல் பஹா மறைவின் நூறாம் நினைவாண்டு: பல நாள்கள் ஆன்மீக ஆயத்தங்களுக்குப் பின் முறையான நிகழ்வு ஆரம்பிக்கின்றது
புனித நிலத்தில் அப்துல் பஹா மறைவின் நூறாம் ஆண்டு நினைவேந்தலைக் குறிக்கும் நிகழ்வின் ஆரம்பத்திற்காக பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற கட்டிடத்தில் குவிகின்றனர்
25 நவம்பர் 2021
பஹாய் உலக மையம் – பெரும் எதிர்ப்பார்ப்புடனும் மரியாதையுடனும், உலகம் முழுவதிலும் இருந்து வந்த பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற இருக்கையின் மண்டபத்திற்குள் முறையான நிகழ்ச்சியின் ஆரம்பத்திற்காக ஒன்றுகூடினர்.
அந்தக் கூட்டத்திற்கான உலக நீதிமன்றத்தின் செய்தி ஒன்றை அதன் உறுப்பினர் ஒருவரால் படிக்கப்பட்டது. அச்செய்தியின் ஒரு பகுதி இவ்வாறு கூறுகிறது: “இந்த நிலையற்ற நேரங்களில், “மனிதகுலம் அனைத்திற்கும் அடைக்கலமும்”, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் ஒரு கேடயமுமான” அப்துல்-பஹாவின்பால் ஆர்வநம்பிக்கையுடனும் பேராவலுடனும் திரும்பி, சேவையின் பாதையில் அவரது உதாரணத்தைப் பின்பற்றிடும் முயல்வில் விண்ணுலக இராஜ்யங்களின் உதவியை வேண்டினர்.”
நிகழ்ச்சி நிரல், அனைத்துலக போதனை மைய உறுப்பினர் ஒருவரின் பிரதான உரை, பல்வேறு மொழிகளில் பிரார்த்தனைகள், இந்த வரலாற்று தருணத்தை கௌரவிக்கும் இசை நிகழ்வுகள், அப்துல்-பஹா நினைவாலயத்தின் கட்டுமானம் குறித்த ஒரு குறு காணொளி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.
இன்றைய நிகழ்வு நிரலின் சில தருணங்களை கீழ்க்காணும் படங்கள் காட்டுகின்றன.
பங்கேற்பாளர்கள் நினைவுப்பூங்காவின் வழி நிகழ்விடமான உலக நீதிமன்ற கட்டிடத்தை நோக்கிச் செல்கின்றனர்.
பங்கேற்பாளர்கள் நூல்கள் ஆ்யவு மையத்தைக் கடந்து செல்கின்றனர் இன்று காலையில் பங்கேற்பாளர்களின் மற்றொரு குழுவினர்பங்கேற்பாளர்கள் பல நாடுகளிலிருந்து வருகின்றனர்இன்றைய நிகழ்வின் ஆரம்பத்திற்கு முன் – பங்கேற்பாளர்களின் மற்றொரு காட்சிஉலக நீதிமன்ற இருக்கைக்கு வரும் பங்கேற்பாளர்களின் ஆகாய காட்சிநிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற இருக்கையின் படிக்கட்டுகளில் கூடியிருக்கின்றனர்உலக நீதிமன்ற இருக்கையின் முன் கூடியிருக்கும் பங்கேற்பாளர்களின் மற்றொரு காட்சிநிகழ்வின் ஆரம்பத்திற்கு முன் ஆர்வத்துடன் காத்திருக்கும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் பங்கேற்பாளர்கள்நிகழ்விட மண்டபத்தின் கதவுகள் திறக்கப்பட்டவுடன் பங்கேற்பாளர்கள் பிரவேசிக்கும் காட்சிநிகழ்விட மண்டபத்திற்குள் பங்கேற்பாளர்கள் வரவேற்கப்படுகம் காட்சிநிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன், நிகழ்விட மண்டபத்திற்குள்நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன் மண்டபத்தின் மற்றொரு காட்சிபங்கேற்பாளர்கள் அமர்ந்து நிகழ்வின் ஆரம்பத்திற்காக தயாராகின்றனர்மண்டபத்தின் மற்றொரு காட்சிநிகழ்வு நிரல் பல்வேறு மொழிகளில் பிரார்த்தனைகளை உள்ளடக்கியிருந்ததுபிரார்த்தனைகள் ஒன்றுகூடலின் ஆன்மீகச் சூழ்நிலைக்குப் பங்களித்தனநிகழ்ச்சி நிரல், அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினர் ஒருவரான முனா தெஹ்ரானியின் உரையை உள்ளடக்கியிருந்தது: “இங்கு கூடியுள்ள நாம், அப்துல்-பஹாவின் விண்ணேற்றத்தை நினைவுகூரவும் அவருக்கு அஞ்சலி செலுத்தவும் இந்த புனித மலையின் மீது பார்வையைத் திருப்பும் உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மில்லியன் கணக்கானோரை பிரதிநிதிக்கின்றோம்.”கூட்டத்திற்கான உலக நீதிமன்றத்தின் செய்தி ஒன்று அதன் உறுப்பினர் ஒருவரால் படிக்கப்பட்டது: “இந்த நிலையற்ற நேரங்களில், “மனிதகுலம் அனைத்திற்கும் அடைக்கலமும்”, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவருக்கும் ஒரு கேடயமுமான” அப்துல்-பஹாவின்பால் ஆர்வநம்பிக்கையுடனும் பேராவலுடனும் திரும்பி, சேவையின் பாதையில் அவரது உதாரணத்தைப் பின்பற்றிடும் முயல்வில் விண்ணுலக இராஜ்யங்களின் உதவியை வேண்டினர்.”பிரதான உரை அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினரான குலோரியா ஜாவிட்-டினால் வழங்கப்பட்டது. திருமதி ஜாவிட், அப்துல் பஹாவின் தியாகபூர்வமான மற்றும் தன்னலமற்ற இயல்பைப் பற்றி பேசினார். தமது உரையை உலக நீதிமன்றத்தின் செய்தியின் ஒரு பகுதியை வாசிப்பதுடன் முடித்தார். “(எவரையும் அந்நியராகக் காணாதீ்ர், மாறாக அனைவரையும் ஒரே குடும்பத்தின் உறுப்பினராகக் கருதுங்கள்…”பிரதான உரையை செவிமடுக்கும் போது சில பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுக்கின்றனர்பங்கேற்பாளர்கள் பிரதான உரையை உன்னிப்பாக செவிமடுக்கின்றனர்ஏழு மொழிகளில் சம நேர மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டதுஇந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் இசை நேரங்களும் அடங்கும். சில்லி நாட்டிலிருந்து ஒரு பங்கேற்பாளர் ஒரு கிட்டார் இசை கருவியை வாசிப்பதை இங்கே காணலாம்.அப்துல் பஹா நினைவாலயத்தின் கட்டுமானம் பற்றி ஒரு குறு காணொளியை பங்கேற்பாளர்கள் காணுகின்றனர். இக்காணொளி விரைவில் செய்தி சேவையில் வெளியிடப்படும்நிகழ்ச்சி நிரல் பஹாய் உலக மைய இசை குழுவினரின் இசைப்படுத்தப்பட்ட பஹாய் திருவாக்குப் பகுதிகளோடு ஒரு முடிவுக்கு வந்தது. இப்படத்தில் இசைக்குழு பிஸ்லாமா மற்றும் ஃபிஜி மொழிகளில், பஹாவுல்லாவின் திருவாக்குகளிலிருந்து ஒரு பகுதியுடன் வேறு இரண்டு வாசகப்பகுதிகளைப் பாடுகின்றனர்.
“இதுவே, இறைவனின் மிகச் சிறந்த சலுகைகள் மனிதர்மீது பொழியப்பட்டுள்ள நாள்; அவரது வலுமிக்கக் கிருபை எல்லாப் பொருட்களினுள்ளும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ள நாள். தங்களிடையே உள்ள வேற்றுமைகளை அகற்றி மீண்டும் ஒன்றிணைந்து, பூரண ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் அவரது பாதுகாப்பு, அன்புப்பரிவு என்னும் விருட்சத்தின் நிழலின் கீழ் வாழ வேண்டியது உலக மக்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது.”
மற்றொரு குழு “நண்பனே! உனது உள்ளமெனும் பூங்காவில் அன்பெனும் ரோஜாவைத் தவிர வேறெதனையும் பயிரிடாதே. அன்பு, ஆவல் ன்னும் இராப் பாடியிலிருந்து உனது பிடியைத் தளர்த்தி விடாதே. நேர்மையாளரின் நட்பைப் பாதுகாத்து, இறை க்தியற்றோருடன் தோழமையைத் தவிர்ப்பாயாக.” எனும் மேற்கோளுடன் பஹாய் திருவாக்குகளை பிரெஞ்சு, சுவாஹிலி மொழிகளில் பாடினர். நிகழ்ச்சி நிரல் ஸ்பேய்ன் மொழியில் ஒரு பிரார்த்தனையுடன் முடிவுற்றதுசில பிரதிநிதிகள் ஒன்றுகூடலின் போது, மானிடத்தின் பல்வகைமையைக் கொண்டாடும் தங்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தியிருந்தனர்காலைப் பொழுது நிகழ்ச்சி நிரலின் முடிவில் உலக நீதிமன்ற இருக்கையை விட்டு பங்கேற்பாளர்கள் வெளியேறுகின்றனர்