அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டுக்கால நினைவேந்தல்: பக்திமிகு நிகழ்வு எடுத்துக்காட்டான வாழ்க்கை மீதான ஆழ்ந்த பிரதிபலிப்பைத் தூண்டுகிறது
பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தை வலம் வருகின்றனர்
27 நவம்பர் 2021
பஹாய் உலக மையம் – நவம்பர் 27, சனிக்கிழமை அதிகாலையில், ஹைஃபா யாத்ரீகர் இல்லத்தின் முற்றத்தில், ‘அப்துல்-பஹாவின் விண்ணேற்றத்தைக் குறிப்பதற்கு புனிதமும் பயபக்தியும் கூடிய சூழலில் நூற்றாண்டு நினைவேந்தல் கூட்டத்தின் பங்கேற்பாளர் ஒன்றுகூடியிருந்தனர்.
அப்துல் பஹாவின் மறைவுக்குப் பிறகு அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட பாப் பெருமானார் நினைவாலயத்திலிருந்து சிறிது தூரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மனித குலத்திற்கான அப்துல்-பஹாவின் முன்மாதிரியான சேவை குறித்து பங்கேற்பாளர்களிடையே ஆழமான சிந்தனையைத் தூண்டியது.
இந்த நிகழ்விற்காக உலக நீதிமன்றம் எழுதிய அஞ்சலி அதன் உறுப்பினர்களுள் ஒருவரால் வாசிக்கப்பட்டது. அஞ்சலியின் ஒரு பகுதியாக: “அவர் ஒற்றுமையின் ஆற்றல்களை எவ்வாறு உருவகப்படுத்தினார் என்பதற்கு அவரது இறுதி ஊர்வலத்தின் காட்சியை விட வேறு தெளிவான வெளிப்பாடு எதையும் கற்பனை செய்திட இயலாது. இந்த நிலத்தில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையைச் சார்ந்த துக்கம் அனுசரிப்போர் தங்களுக்கு ஏற்பட்ட பொதுவான இழப்பை வெளிப்படுத்துவதற்கு ஒன்றுகூடினர்.”
அஞ்சலி தொடர்கிறது: “அவரது அன்பின் உலகளாவிய தன்மையானது அந்த நேரத்தில் கூட, சமூகத்தின் குறுக்களவான ஒன்றென உரிமை கோரக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கியது. புத்துயிர் பெற்ற அவரது அன்பு, பேணப்பட்டது, உத்வேகமூட்டியது; அது பிரிவினையை விலக்கி, அனைவரையும் இறைவனின் விருந்து மேசைக்கு வரவேற்றது.
கீழே உள்ள படங்கள் மாலை நிகழ்ச்சியின் காட்சியை வழங்குகின்றன.
நிகழ்வு ஆரம்பிப்பதற்கு சிறிது முன்னர் பங்கேற்பாளர்கள் ஹைஃபா யாத்ரீகர் இல்லத்தின் முற்றத்தில் ஒன்றுகூடினர்மாலை நிகழ்வின் ஆரம்பத்திற்கு முன் பங்கேற்பாளர்கள் அப்துல்-பஹாவின் வாழ்க்கை மீது தியானமும் பிரதிபலிப்பும் செய்கின்றனர்பிரார்த்தனை மற்றும் பிரதிபலிப்பில் மூழ்கியிருக்கும் பங்கேற்பாளர்களின் மற்றொரு காட்சிஉலக நீதிமன்றம் அப்துல்-பஹாவுக்காக எழுதிய ஓர் அஞ்சலி அதன் உறுப்பினர் ஒருவரால் வாசிக்கப்பட்டது: “அவரது அன்பின் உலகளாவிய தன்மையானது அந்த நேரத்தில் கூட, சமூகத்தின் குறுக்களவான ஒன்றென உரிமை கோரக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்கியது. புத்துயிர் பெற்ற அவரது அன்பு, பேணப்பட்டது, உத்வேகமூட்டியது; அது பிரிவினையை விலக்கி, அனைவரையும் இறைவனின் விருந்து மேசைக்கு வரவேற்றது.நிகழ்வு நிரலில், அரபு, ஆங்கிலம், பிரஞ்சு, மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் பேசப்பட்ட பஹாய் திருவாசகங்களிலிருந்து பிரார்த்தனைகள், உரைப்பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன. பஹாய் போதனைகளிலிருந்து பிரார்த்தனைகளும் திருவாசங்களும் பாரசீகம், ரஷ்ய, ஸ்பேய்னிய, மற்றும் போர்த்துகீசிய மொழிகளிலும் வாசிக்கப்பட்டனபங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தை நோக்கிச் செல்கின்றனர்பங்கேற்பாளர்கள் பாப் பெருமானார் நினைவாலயத்தை வலம் வருகின்றனர்பாப் பெருமானார் நினைவாலய தோட்டத்தில் பங்கேற்பாளர்களின் மற்றொரு காட்சிபாப் பெருமானார் நினைவாலயத்துடன் கார்மல் மலை காட்சி தருகின்றது. இங்குதான் அப்துல்-பஹா விண்ணேற்றம் அடைந்த பிறகு அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.