உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் நனவாக்கிட முயன்று வரும் சமூக வாழ்க்கைமுறையின் மையத்தில் சேவையும் வழிபாடுமே உள்ளன. அவை இரண்டும் தனித்துவமான, இருப்பினும் சமூகத்தின் வாழ்வை முன்னோக்கி உந்தித்தள்ளும் பிரிக்கப்பட முடியாத இரண்டு அம்சங்களாகும். “வெற்றியும் செழுமையும் சேவை மற்றும் கடவுள் வழிபாட்டைப் பொறுத்துள்ளன,” என அப்துல்-பஹா கூறுகின்றார்.
தனிநபர், சமூகம், அல்லது ஸ்தாபனங்களின் மட்டத்திலாயினும் பிரார்த்தனை என்பது பஹாய் வாழ்க்கையுடன் ஒருங்கிணைவானதாகும். நாள் முழுவதும் பஹாய்கள் பிரார்த்தனையுடன் தங்கள் இதயங்களை கடவுளின்பால் திருப்பி, அவரது உதவியை வேண்டுகின்றனர், தங்கள் அன்புக்கினியோரின் சார்பாக அவரிடம் மன்றாடுகின்றனர், போற்றுதலையும் நன்றியையும் வழங்குகின்றனர், தெய்வீக உறுதிப்பாடுகளையும் வழிகாட்டலையும் நாடுகின்றனர். மேலும், கலந்தாலோசனைக்கான கூட்டங்களும் ஏதாவது ஒரு செயல்திட்டத்தை மேற்கொள்வதற்கான நண்பர்களின் ஒன்றுகூடல்களும் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து பிரார்த்தனையுடன் முடிகின்றன.
நண்பர்களும் பஹாய்களும் மற்றும் பிறரும் பிரார்த்தனைக்காக ஒன்றிணையும் ஒன்றுகூடல்களை பஹாய்கள் ஏற்பாடு செய்கின்றனர். இவை பெரும்பாலும் ஒருவர் மற்றவரின் இல்லங்களில் நடைபெறுகின்றன. இது போன்று வழிபாட்டுக் கூட்டங்கள் பங்கேற்பாளர்களில் ஆன்மீக ஈர்ப்புத்திறத்தை தட்டி எழுப்பிட உதவுவதுடன், அவர்கள் மேற்கொள்ளும் சேவை செயல்களுடன் ஒன்றாக, பக்கி உணர்வினால் ஊடுருவப்பட்டதும் ஆன்மீக மற்றும் லௌகீக செழிப்பை அடைவதில் கவனம் செலுத்தும் ஒருவித சமூக வாழ்வு வடிவத்திற்கு வழிவகுக்கின்றன.
பக்தி மற்றும் சேவையின் ஒருங்கிணைவு, மாஷ்ரிஃகுல்-அஸ்கார் ஸ்தாபனத்தில் வெளிப்பாடு காண்கின்றது. இந்தக் கட்டமைப்பு ஒரு புவியியல் பகுதியில் வழிபாட்டு மையபுள்ளியாக இருக்கும் ஒரு மைய கட்டிடத்தை உள்ளடக்கியதுடன், சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துடன் தொடர்புடைய கல்வி, சுகாதாரம் மற்றும் பிற சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட துணைஸ்தாபனங்களை உள்ளடக்கியதாகும். இன்று உலகில் சில மாஷ்ரிஃகுல்-அஸ்கார்களே இருந்தாலும், அவற்றை ஸ்தாபிப்பதற்கான வித்துகள் அதிகரித்து வரும் சமூகங்களில் விதைக்கப்படுகின்றன, மற்றும் எதிர்காலத்தில் ஒவ்வோர் உள்ளூரும் அத்தகைய பௌதீக கட்டமைப்பினால் பயனடையும்.
பசிபிக் பகுதியில் உள்ள முதல் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தை சனிக்கிழமை அர்ப்பணிப்பதற்கான ஏற்பாடுகளில் உதவுவதற்காக வானுவாத்து முழுவதிலும் இருந்து பலர் தன்னாவுக்கு வருகின்றனர்.
தன்னா, வானுவாத்து, 12 நவம்பர் 2021, (BWNS) – வானுவாத்துவில் உள்ள உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லம் சனிக்கிழமை காலை திறக்கப்படுவதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில், உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை, இரவு 10:00 மணிக்குத் GMT தொடங்கும் அர்ப்பண விழாவை முன்னிட்டு, நாடு முழுவதிலும் இருந்து பெருகி வரும் மக்கள், தன்னா தீவில் உள்ள கோவில் தளத்திற்கு வெள்ளிக்கிழமை வந்துகொண்டிருக்கிறார்கள். .
“நாங்கள் விவரிக்க முடியாத மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றோம்! திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் வந்துள்ளனர்” என போர்ட் வில்லாவில் இருந்து வந்தவர்களில் ஒருவரான சிமோன் கூறுகிறார்.
தொடர்ந்து அவர் கூறுவதாவது: “வழிபாட்டு இல்லத்தின் கதவுகள் இன்னும் திறக்கப்படாவிட்டாலும், தங்கள் சமூகத்திற்கு சேவை செய்ய ஏற்கனவே பலரை அது ஊக்கப்படுத்தியுள்ளது.”
இந்த வார தொடக்கத்தில் வந்த இஃபிரா தீவைச் சேர்ந்த மற்றொரு பங்கேற்பாளர், சனிக்கிழமை அர்ப்பணிப்பு விழாவின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார், இந்த தருணத்திற்கு வழிவகுத்த முந்தைய தலைமுறையினரின் முயற்சிகளை நினைவு கூர்ந்தார்.
“அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக இந்த மண்ணின் முதல் பஹாய்களாக இருந்த, அவர்களின் தாத்தா பாட்டி மற்றும் கொள்ளு தாத்தாக்கள் மேற்கொண்ட அதே முயற்சிகளின் ஒரு பகுதியாக தங்களைக் கருதும் என் பிள்ளைகளுடன் நான் இங்கு பயணம் செய்து வந்துள்ளேன்.”
COP26-இல் பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதிகள். இடமிருந்து வலம்: பீட்டர் அபூரி, கென்யா, டேனியல் பேர்ரல், BIC நியூ யார் அலுவலகம், மஜா கிரொஃப், நெதர்லாந்து, மற்றும் செரிக் தொக்பொலாட், கஸாக்ஸ்தான்.
கிளாஸ்கோ, ஐக்கிய அரசு – கடந்த இரண்டு வாரங்களாக, பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) பிரதிநிதிகள், COP26 என அழைக்கப்படும் 2021 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில் ட்டு, சமூகத்திற்கும் இயற்கை உலகத்திற்கும் இடையிலான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.
“மனிதகுலம் அதன் இன்றியமையாத ஒருமையை அங்கீகரிக்க வேண்டிய ஒரு முக்கிய தருணத்தில் உள்ளது-நாம் அனைவரும் ஒரே காற்றுமண்டலத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், மேலும் வரும் தசாப்தங்களில் நாம் எதிர்கொள்ளும் அழுத்தமான, வாழ்வியல் கேள்விகளுக்கு தீர்வு காண அனைத்து நாடுகளுக்கிடையிலும் ஒத்துழைப்பு தேவை” என்கிறார் மாநாட்டில் BIC இன் நியூயார்க் அலுவலகத்தின் பிரதிநிதி டேனியல் பெரல்.
மாநாட்டிற்கான BIC குழுவில் திரு. பெரெல்கஸாக்ஸ்தானைச் சேர்ந்த திரு செரிக் டோக்போலாட்டுடன் , கென்யாவைச் சேர்ந்த பீட்டர் அபூரி மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த மஜா க்ரோஃப் ஆகியோர் இணைந்தார்.
கீழே இடப்பக்கம் CO26-இல் BIC பிரதிநிதிகள்
விவாதங்களுக்கான அவர்களின் பங்களிப்புகளில், BIC பிரதிநிதிகள் பல உறுதியான பரிந்துரைகளை வழங்கினர். “இயற்கை உலகுடன் மனிதகுலத்தின் உறவின் அம்சங்களை ஒருங்கிணைக்க ஒரு பொறிமுறையின் (mechanism) தேவை உள்ளது” என திரு. பெரல் கூறினார்.
“உதாரணமாக, அத்தகைய பொறிமுறையானது சுற்றுச்சூழல் இலக்குகளைச் சுற்றி நிதி வளங்களைத் திரட்டவும், அவற்றின் விநியோகத்தை மேற்பார்வையிடவும் உதவிடும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கொள்கைகளிலிருந்து விலகி, மேலும் நிலையான மாற்றுகளை நிறுவுவதற்கு தேசிய அரசாங்கங்களுக்கு இது ஆதரவு நல்கிடக் கூடும்.
தொடர்ந்து திரு. பெரெல், இது முயற்சிகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு சாத்தியமான வழி என்றாலும், முக்கிய விஷயம் யாதெனில், ஒருமித்த கருத்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும், மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் எந்தவொரு அணுகுமுறையும் அல்லது பொறிமுறையும் அதன் முழுமைநிலையில் பார்க்கப்பட வேண்டும். தொடர்ந்து அவர்: “இறுதியில், வேறுபட்ட சுற்றுச்சூழல் நிர்வாக அமைப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள், ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டால், அது காலநிலை மாற்றத்தை மேற்பார்வையிடும் நிர்வாக அமைப்புகளில் அதிக ஒத்திசைவை உறுதி செய்திடும்.”
மஜா க்ரோஃப் (வலது) பஹாய் உத்வேகம் பெற்ற அமைப்பான சர்வதேச சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடத்திய விவாதத்தில்.
பன்னிரண்டு நாள் மாநாடு வெள்ளிக்கிழமை முடிவடைகிறது மற்றும் 120-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள், அத்துடன் பல சிவில் சமூக அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், வணிகங்கள் மற்றும் காலநிலை ஆர்வலர்கள், கிளாஸ்கோ, ஸ்காட்லாந்தில், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளை ஆய்வு செய்வதற்காக அம்மாநாடு ஒன்றிணைத்துள்ளது.
விவாதங்களுக்கான அவர்களின் பங்களிப்புகளில், BIC பிரதிநிதிகள் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழலின் சுரண்டல் மற்றும் சீரழிவுடன் தொடர்புடைய அதிகப்படியான பொருள்முதல்வாதம் தொடர்பான தார்மீக கேள்விகளை ஆராய்ந்தனர்.
“வளர்ச்சி என்பது பெரும்பாலும் லௌகீகப் பொருட்களை ஈட்டுவதற்கான திறனை விரிவாக்குவதன் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காலநிலை மாற்றம் மீளமுடியாத விளைவுகளுக்கு வழிவகுப்பதற்கு முன், மேம்பாடு என்றால் என்ன என்பது பற்றிய கருத்துக்கள் அவசரமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,” என டாக்டர் டோக்போலாட் கூறினார்.
திரு. அபூரி மேலும் விரிவுபடுத்தினார்: “இந்தத் திசையிலான இயக்கமானது, பொருளாதார ஏற்பாடுகள் உயர்ந்த இலட்சியங்கள் மற்றும் பொது நலன்களின்படி ஒழுங்குபடுத்தப்பட வேண்டுவதை தேவையாக்கும்.”
பல்வேறு மன்றங்களில் BIC பிரதிநிதிகளால் முன்னிலைப்படுத்தப்பட்ட மற்ற கருப்பொருள்கள் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் சர்வதேச கட்டமைப்புகளின் பங்கை உள்ளடக்கியிருந்தன, BIC தனது அறிக்கையில் “ஒரு பொருத்தமான ஆளுமை: மானிடமும் ஓர் உலகளாவிய ஒழுங்குமுறையை நோக்கிய பாதை” என்னும் அறிக்கையில் இதை ஆராய்ந்துள்ளது.
பஹாய் உத்வேகம் பெற்ற அமைப்பான சர்வதேச சுற்றுச்சூழல் மன்றம் நடத்திய கலந்துரையாடலில், பருவநிலை நடவடிக்கைக்கு நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்வது எவ்வாறு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கும் என்பதை திருமதி கிராஃப் விளக்கினார். “உலகளாவிய பருவநிலை கொள்கை தீர்வுத்தளத்திற்கான பரிந்துரை எங்களிடம் உள்ளது, இதன் மூலம் நாடுகள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம், சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளலாம் மற்றும் காலநிலை கொள்கைகளை செயல்படுத்துவதை உண்மையில் துரிதப்படுத்தலாம்,” என அவர் கூறினார்.
உலக வனவிலங்கு நிதியம் நடத்திய விவாதத்தில் டேனியல் பெரல் (இடமிருந்து இரண்டாவது).
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் தனிநபர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கையும் BIC பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
“கோவிட் பெருந்தொற்று தனிநபர்களின் உள்ளூர் நடவடிக்கைகளின் சக்தியைக் காட்டுகிறது. குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடையே பொதுவான நன்மையை நோக்கிய ஓர் உண்மையான ஊக்கமளிக்கும் ஆற்றலை நாங்கள் கண்டிருக்கிறோம்,” என உலக வனவிலங்கு நிதியத்தால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு. பெரல் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: “இது ஆர்வநம்பிக்கைக்கான ஆதாரமாகும், இதிலிருந்து நாம் படிப்பினைகளைப் பெறலாம் மற்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் பல சவால்களை நாம் கூட்டாக எதிர்கொள்ளும்போது இந்த மன்றங்களில் விவாதங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தலாம்.”
BAHÁ’Í உலக மையம், 8 நவம்பர் 2021, (BWNS) – மாஸ்ரா’யி மாளிகை என அழைக்கப்படும் பஹாய் புனித யாத்திரைத் தளத்தைப் பாதுகாக்கும் திட்டம் இப்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. மிகவும் குறிப்பாக, பஹாவுல்லாவின் அறை இப்போது வருகையாளர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை அனைத்து பஹாய் தேசிய ஆன்மீகக் சபைகளுக்கும் எழுதிய கடிதத்தில் உலக நீதிமன்றம் இந்தப் புனித ஸ்தலத்தை, “அந்த அமைதியும் புனிதமும் மிக்க இடமும், அக்காநகர சுவர்களுக்குள் ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு பஹாவுல்லாவின் முதல் குடியிருப்பும்,” என வர்ணித்துள்ளது.
பஹாவுல்லாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஜூன் 1877-இன் தொடக்கத்தில் மாஸ்ரா’யி-யில் குடியேறினர்; அங்கு யாத்ரீகர்கள் பஹாவுல்லாவை தரிசிக்க முடிந்ததுடன், அங்கு அவர் பல நிருபங்களையும் எழுதினார்.
ஒரு வருடத்திற்கு முன்பு தொடங்கிய பாதுகாப்புப் பணிகள், முற்றம் மற்றும் அதன் சுவர்கள், தளத்தின் வழியாக செல்லும் நீர்வழியின் பகுதிகள், தொழுவங்கள் மற்றும் மாளிகைக்கு அருகிலுள்ள பிற கட்டமைப்பு கூறுகள் மற்றும் தளத்தின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டன.
உலக நீதிமன்றம் மேலும் கூறுவதாவது: “வரவிருக்கும் ஆண்டுகளில், மாளிகையின் மற்ற அறைகளில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த ஆசீர்வதிக்கப்பட்ட திருவிடத்தின் அமைதியான ஆவியை ஈர்க்க விரும்பும் பார்வையாளர்கள், அவ்விடத்தைச் சுற்றிலும் நடந்து ரசிப்பதற்காக ஒரு பெரிய, திறந்தவெளியை வழங்குவதற்கு சுற்றியுள்ள பகுதி நிலவடிவமைப்பு செய்யப்படும்.
பஹாவுல்லாவின் அறையின் உட்புற காட்சி
சுவர்களிலிருந்து பழைய வர்ணப் பூச்சு மற்றும் காரைகளை அகற்றும் பணியின் போது ஒட்டோமன் காலத்து சித்திரங்கள் வெளிப்பட்டன.
பல ஆண்டுகளுக்கு முன்பு பூசப்பட்ட பாரம்பரிய மலர் ஓவியங்களின் நெருக்கமான தோற்றம், அவை இப்போது பாதுகாப்புப் பணியாளர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய கண்ணாடி உருவாக்க தொழில்நுட்பத்தின் மூலம் பஹாவுல்லா அறையின் ஜன்னல் கண்ணாடிகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
பஹாவுல்லா, தோப்புகளையும், மலைகளையும் கடலையும் இந்த ஜன்னல்களின் வழி பார்த்து வந்தார்.
பஹாவுல்லாவின் அறைக்கு அருகில் உள்ள மாளிகையின் வெளிப்புறச் சுவர் அதன் அசல் நிலைக்குத் திரும்பியது மற்றும் மூடப்பட்ட ஒரு ஜன்னல் மீட்டெடுக்கப்பட்டது. இடதுபுறத்தில் மறுசீரமைப்புக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம். வலதுபுறத்தில் வீட்டின் அதே பகுதியின் தற்போதைய காட்சி.
பஹாவுல்லாவின் அறையின் வெளிப்புறச் சுவர்களில் இருந்து சாயம் மற்றும் பிளாஸ்டரை அகற்றியதில், பழைய ஜன்னல்களின் வெளிப்புறங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அவை காரைகளால் நிரப்பப்பட்டிருந்தன. ஜன்னல்களை மீட்டெடுக்கும் பணியின் வெவ்வேறு கட்டங்களில் அறையின் கிழக்கு முகப்பின் ஒரு பகுதியின் காட்சிகள் இங்கே காணப்படுகின்றன.
வீட்டை ஒட்டிய முற்றத்தில், பாதை புனரமைக்கப்பட்டு, சுவர்கள் பல்வேறு கட்டங்களில் பழுதுபார்க்கப்பட்டு, அவற்றின் மையத்தை வலுப்படுத்தி, மீண்டும் பூச்சு பூசப்பட்டுள்ளன.
முற்றத்தின் சுவர்களை மறுசீரமைக்கும் செயல்பாட்டின் போது, 1700-களின் நடுப்பகுதி சார்ந்த பல செதுக்கல்கள் மீட்டெடுக்கப்பட்டன, இப்போது அவை தெளிவாகத் தென்படுகின்றன. அக்காலத்தில் அக்காநகர் கடல் வழியாகச் சென்ற ஒரு பாய்மரக் கப்பலின் மாதிரியைச் சித்தரிக்கும் அத்தகைய ஒரு செதுக்கல் இங்கே படத்தில் காணப்படுகிறது.
முற்றத்தின் கடைசியில், சமயலைறைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகளை அகழ்வாராய்ச்சி பணிகள் வெளிப்படுத்தியுள்ளன. அவை அக்கால வழக்கப்படி வெளியே அமைக்கப்பட்டிருந்தன. சமயலறையின் மீது மரத்திலான கூரை அமைக்கப்பட்டுள்ளது.
குதிரை லாயத்தில் மரத்திலான கூரை அமைக்கப்பட்டுள்ளது; சுவர்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன; தரை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.தளத்தின் வழி செல்லும் ஒரு கால்வாய் மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாய் பஹாவுல்லாவின் காலத்தில் சிதைவுற்றிருந்தது, ஆனால், அக்கநகர் ஆளுனர் ஏதாவது சேவையை வழங்கிட முன்வந்த போது, பஹாவுல்லாவின் ஆலோசனைப்படி அது மறுபடியும் கட்டப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது
மாஸ்ரா’யி வழி செல்லும், மீட்கப்பட்ட கால்வாயின் மற்றொரு பகுதியின் காட்சி
கட்டிடத்தின் வடபகுதியில், அதன் பெரும் அளவுக்கும் கொத்துக் கட்டுமானத்திற்கும் தனித்தன்மையுடைய கிணறு மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
கிணற்றுக்கு அருகே ஒரு பெரிய நீர்ப்பாசன குளம் உள்ளது. அதன் சுவர்களும் தரையும் இப்போது மீட்டெடுக்கப்பட்டு மறுவலுப்படுத்தப்பட்டடுள்ளன.
அக்கா சிறைநகரில் ஒன்பது ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு, இந்தச் சூழலில்தான் நாட்டுப்புறத்தின் அழகையும் பசுமையையும் காண பஹாவுல்லாவின் கண்களுக்கு வாய்ப்பேற்பட்டது.
இந்த நிகழ்வு பஹ்ரைன் மன்னரைப் பிரதிநிதிக்கும் ஷேக் காலித் பின் கலீஃபா அல் கலீஃபாவையும், மற்ற முக்கிய நபர்களையும் ‘அப்துல்-பஹாவின் அமைதிக்கான அழைப்பைப் பற்றி பிரதிபலித்திட ஒன்றிணைத்தது.
மனாமா, பஹ்ரைன், 5 நவம்பர் 2021, (BWNS) – பஹ்ரைனின் மன்னர் ஹமட் பின் இசா அல் கலீஃபாவைப் பிரதிநிதிக்கும் ஷேக் காலித் பின் கலீஃபா அல் கலீஃபா, அந்த நாட்டு பஹாய்களால்,’அப்துல்-பஹாவின் மறைவின் நூறாம் நினைவாண்டைக் குறிக்கும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நமது பஹாய் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து, அமைதிக்காக அழைப்பு விடுத்த, தனது வாழ்க்கையையும் அவரது அனைத்து முயற்சிகளையும் மனிதகுல சேவைக்கு அர்ப்பணித்த ஒரு தனித்துவமான மற்றும் குறிப்பிடத்தக்க திருவுருவைக் கொண்டாடுவதற்கு நம்மை ஒன்றிணைத்ததற்காக [பஹாய்களுக்கு] நாங்கள் நன்றி கூறுகிறோம், என டாக்டர் ஷேக் காலித் பின் கலீஃபா அல் கலீஃபா கூறினார், அவர் King Hamad Global Center for Peaceful Coexistence அறங்காவலர் குழுவின் தலைவரும் ஆவார்.
அதிகாரபூர்வ அரச செய்தி நிறுவனம் மற்றும் பிற முக்கிய தேசிய செய்தி நிறுவனங்களால் ஒலி/ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வு, ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை, அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகள் ஆகியன பற்றி சிந்திக்க அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மதத் தலைவர்களை ஒன்றிணைத்தது.
டார் அல்-பிலாத் செய்தித்தாள் குழுவின் தலைவர் அப்துல்நபி அல்-ஷோலா கூறியதாவது: “இந்தக் கூட்டம், அப்துல்-பஹாவின் கருத்துக்கள், சாதனைகள் மற்றும் செயல்களின் ஒப்புதலைப் பிரதிபலிக்கிறது, அவை அனைத்தும் பெண் மற்றும் ஆண்களுக்கிடையிலான சமத்துவம், அன்பு, மற்றும் அனைத்து மக்கள் மத்தியில் சகவாழ்வு ஆகியவற்றின் அடித்தளங்களை அடிப்படையாக கொண்டவை.
“எல்லா மதங்களையும் மதிப்பது மற்றும் ஏற்றுக்கொள்ளல், கடவுளின் ஒருமை மற்றும் ஒரே நம்பிக்கையின் கீழ் அனைத்து மனிதகுலத்தின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு வாழ்க்கை அவருடையதாகும்” என திரு. அல்-ஷோலா தொடர்ந்து கூறினார். “இதுவே அவரது தொலைநோக்கு, இதுதான் எல்லோருடைய கனவும் ஆகும்.”
மற்றொரு பங்கேற்பாளரும், கல்வி அமைச்சின் ஊடகப் பணிப்பாளருமான ஃபவாஸ் அல்ஷூரூக்கி, “பூமியில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும் ஆதரிக்க வேண்டிய அப்துல் பஹாவின் செய்தியைப் பற்றிப் பேசினார்.
“இது உலகத்தின் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை தீர்க்க ஒற்றுமை… மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அழைப்பு. அவரது யோசனைகள் இக்காலத்தைச் சேர்ந்தவையாகும்.
பல பங்கேற்பாளர்கள் ‘அப்துல்-பஹாவால் விளக்கப்பட்ட கொள்கைகளின் தன்மைமாற்றும் சக்தியைப் பற்றி பேசினர். பஹ்ரைன் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் ஷரஃப் அல்-மெசால் கூறுகையில், “உலகம் முழுவதும் நன்கு அறிமுகமான ஒரு திருவுரு மறைந்த நூறாம் நினைவாண்டை இன்று மாலை நாம் நினைவுகூர்கின்றோம்.
அவர் மேலும் கூறியதாவது: “பஹ்ரைனில் உள்ள நாங்கள், ஒன்றுபட்ட மக்களாக, அவரது முன்மாதிரியை வரவேற்பதுடன் மகிழ்ச்சியும் அடைகிறோம். உலகம் முழுவதும் சகவாழ்வு மற்றும் உலகளாவிய அமைதி கொள்கையை ஊக்குவிக்க அவர் முயன்றார்.
டாக்டர் அல்-மெசால் தொடர்ந்து, எந்த அளவுக்கு மக்கள் இந்த கொள்கைகளைப் பின்பற்றுகிறார்களோ அந்த அளவுக்கு “பஹ்ரைனில் அதிக அமைதியும் ஒற்றுமையும் பரவும்” என கூறினார்.
பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞரான இப்ராஹிம் அல் அன்சாரி ‘அப்துல்-பஹா’வின் வாழ்க்கைக் கதைகளை விவரித்தார், ஒரு கலைஞர் மணல் ஓவியம் மூலம் அக்கதையின் சில பகுதிகளை விளக்கினார்.
சமீபத்திய ஆண்டுகளில், அமைதியான சகவாழ்வு என்னும் கருப்பொருள் பஹ்ரைனின் பொது நனவின் முன்னணியில் உள்ளது. பஹாய் சமூகத்தின் பிரதிநிதியான படீ ஜபேரி, இந்தச் சொல்லாடலுக்குப் பங்களிப்பதற்கான பஹ்ரைன் பஹாய்களின் முயற்சி குறித்து பேசினார், குறிப்பாக சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில் மதத்தின் பங்கு பற்றி பேசினார்.
“இப்போது நாம் காணும் பன்முகத்தன்மை, ‘அப்துல்-பஹா எடுத்துக்காட்டியவற்றின் மிக அற்புதமான பிரதிபலிப்பாகும், அதாவது மதம் என்பது மக்களிடையே அன்புக்கும் ஒற்றுமைக்கும் காரணமாக இருந்து, அவர்கள் தங்களின் வேறுபாடுகளைக் கடந்திட உதவிட வேண்டும்” என டாக்டர் ஜாபெரி கூறினார்.
“மதமானது, நேர்மை, கருணை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் போது, அனைத்து மதங்களின் விசுவாசிகளும் சமுதாயத்தில் அருகருகே வாழவும் அதற்குச் சேவை செய்யவும் ஒரு பொதுவான அடித்தளம் உள்ளது.”
பஹாய் உலக நிலையம், 3 நவம்பர் 2021, (BWNS) – செய்தி சேவையின் சமீபத்திய கதைகள் இம்மாத இறுதியில் நிகழவிருக்கும் அப்துல்-பஹாவின் உலகளாவிய நினைவேந்தல்கள் குறித்து கலை படைப்புகள் மற்றும் பிரசுரங்களின் அதிகரிப்பு பற்றி அறிவித்துள்ளன.
இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் முயற்சிகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தக் காலகட்டம் பல காணொளிகள் மற்றும் ஆவணப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள், பாட்காஸ்ட்கள் மற்றும் வலைத்தளங்களின் வெளியீட்டைக் கண்டுள்ளது. இது மனிதகுலத்திற்கான அப்துல்-பஹாவின் இடைவிடாத சேவை வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.