DRC: கோவிலின் மேற்கட்டுமானம் முடியும் தருவாயில் உள்ளது
காங்கோ ஜனநாயகக் குடியரசின் பஹாய் கோவிலின் பணி ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது, 26 மீட்டர் உயரமான குவிமாடத்திற்கான எஃகு மேற்கட்டமைப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது.
26 ஜனவரி 2022
கின்ஷாஷா, காங்கோ ஜனநாயகக் குடியரசு — காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) உள்ள தேசிய பஹாய் வழிபாட்டு இல்லத்தின் 26-மீட்டர் உயரமான குவிமாடத்திற்கான எஃகு மேற்கட்டமைப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது, இது கட்டுமானப் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. .
வழிபாட்டு இல்லங்கள் பஹாய் போதனைகளில் முக்கிய ஸ்தாபனங்களாக விவரிக்கப்பட்டுள்ளன, அவை வழிபாடு மற்றும் சேவையின் ஒருங்கிணைப்பை உறுதியான வடிவத்தில் எடுத்துக்காட்டுகின்றன. இந்த உண்மை கோவில் தளத்திலும் அந்தப் பரந்த நாடு முழுவதிலும் DRC இல் இன்னும் அதிகமாகத் தெளிவாகிறது.
கட்டுமானப் பணிகளின் முன்னேற்றமும் சுற்றியுள்ள சமூகங்களின் ஆன்மீக வாழ்வில் உருவாகி வரும் கோவிலின் விளைவுகளெனும் ஒளிக்கீற்றுகள் கீழே உள்ள படங்களின் வரிசையில் வழங்கப்பட்டுள்ளன.
கோவிலின் தரை மற்றும் கேலரி மட்ட காண்கிரீட் கட்டமைப்பு பூர்த்தியானவுடன் (மேலே), குவிமாட மேற்கட்டமைப்பிற்குத் தேவையான எஃகு அம்சங்கள் தளத்திற்கு வநதுள்ளன.தொழிலாளர்கள் தரையில் உள்ள எஃகு கூறுகளை மேற்கட்டமைப்பின் பெரிய பகுதிகளாகச் அடுக்கினர், பின்னர் அவை அந்த இடத்திற்கு உயர்த்தப்பட்டன. முதல் பிரிவின் நிறுவல் இங்கே காட்டப்பட்டுள்ளது.குவிமாட அமைப்பு மூன்று முக்கிய கட்டங்களில் எழுப்பப்பட்டது, ஒவ்வொன்றும் ஒன்பது பிரிவுகளைக் கொண்ட வளையத்தை உள்ளடக்கின. இந்த அமைப்பு கேலரி மட்டத்தில் உள்ளது, ஒன்பது கான்கிரீட் ஸ்ட்ரட்டுகளுடன் பூட்டப்பட்டுள்ளது, அவை தரை தளத்தில் இருந்து படிக்கட்டுகளாகவும் செயல்படுகின்றன.பிரதான கட்டமைப்பு உயர்த்தப்படும் போது கோவிலின் மேலிருந்து கீழ் காட்சி. குவிமாடத்தின் உச்சியில்-தரை மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில்- நிறுவப்பட்டிருக்கும் விட்டங்கள் இங்கே காணப்படுகின்றன. கட்டமைப்பை முடிக்க மீதமுள்ள கூறுகள் இப்போது சேர்க்கப்படுகின்றன.கோயிலின் தரை மட்டத்தின் வெளிப்புறச் சுவர்களும் கட்டப்பட்டுள்ளன. கோயிலுக்குள் வெளிப்புற சத்தத்தை குறைக்கும் போது காற்று அதன் வழியாக செல்ல அனுமதித்து அமைதியான சூழ்நிலையை உருவாக்க வடிவமைக்கப்பட்ட சிண்டர் பிளாக்களிலிருந்து அவை கூட்டப்பட்டுள்ளன.மையக் கட்டிடத்தைச் சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் பாதைகளின் வேலைகளில் ஒரு நீரூற்று, ஒரு நீரோடை மற்றும் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு பிரதிபலிக்கும் குளம் ஆகியவை அடங்கும்.பிரதிபலிக்கும் குட்டை மற்றும் ஓடையின் காட்சிகள்நுழைவாயிலில் வருகையாளர் மையம் சமீபத்தில் பூர்த்தியாகிவிட்டதுமேலே உள்ள படம், பார்வையாளர்கள் மையத்திற்கு அடுத்ததாக ஒரு மூடப்பட்ட வெளிப்புறக் கூடும் இடமாகும், இது பெரிய குழுக்களுக்கு இடமளிக்கும் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான வசதிகளை வழங்கும்.
கின்ஷாஷா, காங்கோ ஜனநாயகக் குடியரசு — காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) உள்ள தேசிய பஹாய் வழிபாட்டு இல்லத்தின் 26-மீட்டர் உயரமான குவிமாடத்திற்கான எஃகு மேற்கட்டமைப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது, இது கட்டுமானப் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. .
வழிபாட்டு இல்லங்கள் பஹாய் போதனைகளில் முக்கிய ஸ்தாபனங்களாக விவரிக்கப்பட்டுள்ளன, அவை வழிபாடு மற்றும் சேவையின் ஒருங்கிணைப்பை உறுதியான வடிவத்தில் எடுத்துக்காட்டுகின்றன. கோவிலின் இடத்திலும் மற்றும் அந்த பரந்த நாடு முழுவதிலும் இந்த உண்மை DRC இல் இன்னும் அதிகமாகத் தெளிவாகிறது.
கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் சுற்றியுள்ள சமூகங்களின் ஆன்மீக வாழ்வில் உருவாகி வரும் கோயிலின் விளைவின் ஒளிர்வுகள் கீழே உள்ள படங்களின் வரிசையில் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டு மாத திட்டமானது, தளத்தில் மற்றும் வெளியே அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் நடத்தப்படும் வகுப்புகளை உள்ளடக்கியது, மேலும் பங்கேற்பாளர்கள் தங்கள் சமூகங்களின் தேவைகள் மற்றும் அவர்கள் தங்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதைப் பற்றி விவாதிக்கும் ஆய்வு அமர்வுகளையும் உள்ளடக்கியது.தளத்தில் உள்ள ஒரு வெற்று அறையை வீடாக மாற்றும் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர்களின் குழுவை இங்கே காணலாம்.கோவில் தளத்தில் இளைஞர்கள் புதுப்பித்த, சில துணை அமைப்புகளின் முன் பின் காட்சிகள். திட்டத்தின் சில முன்னாள் பங்கேற்பாளர்கள், வீடு திரும்பிய பிறகு, பழுது மற்றும் புதுப்பித்தல் தேவைப்படும் சமூக இடங்களை அடையாளம் கண்டு, திட்டத்தின் மூலம் தாங்கள் கற்றுக்கொண்டதை மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து உடனுழைக்கின்றனர்.பலதரப்பட்ட பின்னணிகள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்ட மக்களை ஒன்றிணைத்து, பிரார்த்தனைக்கான வழக்கமான கூட்டங்கள் கோவில் தளத்தில் நடைபெறுகின்றன.டிஆர்சி முழுவதும் உள்ள சமூகங்களில் உள்ள மக்கள், பஹாய் எழுத்துக்களில் மஷ்ரிகுல்-அத்கார், அதாவது “கடவுள் துதியின் உதயஸ்தலம்” என குறிப்பிடப்படும் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் காட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர்கள் பொது நன்மைக்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.