உலகளாவிய மாநாடுகள்: கலை படைப்புகள் அமைதியை ஊக்குவித்து, சமுதாய சேவையைத் தூண்டுகின்றன


26 ஏப்ரல் 2022

பஹாய் உலக மையம் – உலகெங்கிலும் பரவியுள்ள மாநாடுகளின் அலை தொடர்கையில், இந்தக் கூட்டங்களில் இருந்து வெளிவரும் கலை வெளிப்பாடுகள் மனித ஆன்மாவின் அத்தியாவசிய ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன: நல்லிணக்கத்தை நாடவும், தன்னலமற்ற முறையில் சமூகத்திற்குச் சேவை செய்வதன் தேவையும்.

இசை, நாடகம், காட்சிக் கலை, பாரம்பரிய நடனம், கைவினைக் கலைகள் அல்லது பிற கலை வடிவங்கள் என இந்தக் கலைப் படைப்புகளின் மூலம், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அடித்தட்டில் உள்ள பங்கேற்பாளர்கள் நீதி, சமாதானம் மற்றும் ஒற்றுமை போன்ற ஆழமான ஆன்மீகக் கருத்துக்களை ஆராய்ந்து வருகின்றனர்.

பின்வருபவை உலகளாவிய மாநாடுகளின் தொடர்களால் ஊக்குவிக்கப்பட்ட எண்ணற்ற கலைப் படைப்புகளின் மாதிரிகளாகும்.

பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத்தில், ஓர் உள்ளூர் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான நல்லிணக்கம், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் தப்பெண்ணங்களிலிருந்து விடுபடுதல் போன்ற கருப்பொருள்களில் கலைப் படைப்புகளுக்கு பங்களித்தனர்.

மேலும் பல கலை வெளிப்பாடுகளைக் காண்பதற்கு பின்வரும் இணைப்பிற்குச் செல்லவும்:

https://news.bahai.org/story/1592/