
பஹாய் உலக மையம், 6 மே 2022, (BWNS) – அமைதியான உலகம் பற்றிய பஹாய் நம்பிக்கையின் அடிப்படையில் துடிப்பான சமூகங்களை அவர்கள் எவ்வாறு நிர்மாணிக்கலாம் என்பதைப் பற்றி ஆலோசிக்க, நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அண்டைப்புறங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள அறிமுகமானவர்கள், வீடுகள் மற்றும் கொல்லைப்புறங்கள், தாழ்வாரங்கள் மற்றும் கூரைகள் மற்றும் பல வேறுபட்ட அமைப்புகளில்-பெரிய மற்றும் சிறிய— இடங்களில் ஒன்றுகூடுகின்றனர்.
இந்தக் கூட்டங்கள் ஒரு வரவேற்கும் மற்றும் ஆன்மீகமான சூழலை வழங்கி, அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் சமூகங்களின் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு ஆழமான நோக்கத்துடன் ஊக்கமளிக்கும் நட்பின் வலுவான பிணைப்பை உருவாக்க உதவுகின்றன.
பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் இருந்து அவர்களின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்துடன் கலந்துரையாடல்களை வளப்படுத்த, கூட்டங்களில் இளைஞர்கள் குறிப்பாக முக்கிய பங்கு வகித்துள்ளனர். மக்கள் தன்னலமின்றி சக குடிமக்களுக்கு சேவை செய்யும் போது சமூக மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை அவர்களின் அனுபவம் வெளிப்படுத்துகிறது.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் எண்ணற்ற கூட்டங்களின் மாதிரியைப் பெற news.bahai.org ஐப் பார்வையிடவும்.

மேலும் இது போன்ற ஒன்றுகூடல்கள் பற்றிய படங்களைப் பார்க்கவும் விவரங்களைப் பெறவும் இங்கு செல்லவும்: https://news.bahai.org/story/1593/