நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது – இது துணைபுரிகிறதென அறிவியல் நிரூபிக்கமுடியுமா?


1 அக்டோபர் 2008

ஸான் டியேகோ, ஐக்கிய அமெரிக்கா – சமீபத்தில் நடைபெற்ற வட அமெரிக்க பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் 32வது வருடாந்திர மாநாட்டின் பேச்சாளர்களில் ஒருவரான, டாக். தயீத் குட்டுஸி, “நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது நோய் நிவாரணத்திற்கு உதவுகின்றது” என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிப்பது சற்று சிறமமான முன்மொழியாகும் என்கிறார்.

பிரார்த்தனையால் நாம் ஏற்படுத்த விரும்பும் விளைவுகள் பற்றி ஏதும் அறியாத நிலையில், இது குறித்த முதல் பிரச்சினை, அது பற்றிய ஒரு பரிசோதனையை வடிவமைப்பதாகும்.

“பிரார்த்தனையின் நோக்கம் ஆயுள்காலத்தை நீட்டிப்பது மட்டுமா?” என அவர் மாநாட்டிற்குப் பிறகு நடைபெற்ற ஒரு நேர்முகத்தின்போது வினவினார்.

அவர் பஹாய் போதனைகள் குறித்த தமது அறிவின் அடிப்படையில், அக்கேள்விக்கு பதிலளிக்க முனைந்தார். “இவ்வுலக வாழ்வின் நோக்கம் நீண்ட ஆயுள்காலம் மட்டுமல்ல. நமது வாழ்வின் நோக்கம் கடவுளை அறிந்துகொள்வது, அவரை வழிபடுவது மற்றும் அவருக்குச் சேவைபுரிவதாகும்.”

ஒருவரின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதன் வாயிலாக அவருக்கு மேலும் அதிகமான கடுந்துன்பங்கள் ஏற்படுமாயின், அச்சூழ்நிலைகள் குறித்து என்ன செய்வது?” என அவர் வினவினார். அப்படியாயின், பிரார்த்தனையால் நாம் விரும்பும் விளைவுகள்தான் என்ன?

நாம் பிரார்த்திக்கும் போது அப்பிரார்த்தனையால் நாம் விரும்பக்கூடிய விளைவுகள் யாதென நமக்கே தெரியாத நிலையில், ஓர் அறிவியலாளர் ஒரு பிரார்த்தனை தேவையான விளைவை ஏற்படுத்தியதாவென எவ்வாறு தீர்மானிக்கக்கூடும்?

“உண்மையில் நாம் இங்கு எதை அளவிடுகின்றோம் என்பது நமக்கே தெரியாது,” என டாக். குட்டுஸி கூறினார்.

“நலமடைதல் மற்றும் மறுதேர்ச்சியில் பிரார்த்தனையின் விளைவுகள்: “இதன் தொடர்பான எழுத்துக்களை மீளாய்வு செய்தல்,” என்பதே சான் டியேகோவில் 1 செப்டம்பரில் முடிவுற்ற பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் நான்கு நாள் நிகழ்ச்சியில் அவரின் படைப்பாக இருந்தது.

கனடாவின் மனிடோபா பல்கலைகழகத்தில் otolaryngology எனப்படும் கண், காது, மூக்கு மற்றும் தலை தொடர்பான நோய்கள் குறித்த மூன்றாவது ஆண்டு ரெசிடன்ட் மருத்துவரான டாக். குட்டுஸி, பிரார்த்தனையின் விளைவுகள் குறித்த தமது ஆய்வு குழப்பமான முடிவுகளையே வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

ஆனால் “meta-analysis” எனப்படும் ஆய்வுமுடிவுகளை தொகுதி சேர்க்கும் முயற்சி அளவிடக்கூடிய எவ்வித பயன்விளைவையும் வெளிப்படுத்தவில்லை, என அவர் தெரிவித்தார்.

ஆகவே, பிரார்த்தனை எவ்வித விளைவையும் ஏற்படுத்தவில்லை எனப் பொருள்படுமா?

இல்லை, என்கிறார் அவர், ஏனெனில், எதை அளவிடுவது என்பதைத் தீர்மானிக்கும் பிரச்சினை போக, இவ்விஷயத்தைக் குழுப்பிவிடும் வேறு பல விஷயங்களும் உள்ளன – இவை அறிவியல் ரீதியான ஆய்வுக்குத் தங்களை உட்படுத்தும் தேவைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாகும். உதாரணமாக:

— தீவிரமாகப் பிரார்த்திப்பது அவசியமாகின்றதா? அவ்வாறு இருப்பின், அத்தீவிரத்தை நாம் எவ்வாறு அளவிடக்கூடும்?

— எத்தனை பேர்கள் பிரார்த்திக்கின்றனர் என்பது முக்கியமா?

— நாம் யாருக்காகப் பிரார்த்திக்கின்றோமோ அந்நபர் அதற்குப் பாத்திரமானவர்தானா? தெய்வீக மன்னிப்பு இதில் என்ன பங்காற்றுகின்றது?

— நோயின் தீவிரத்தை நாம் கருத்தில்கொள்ள வேண்டுமா?

— இதில் சம்பந்தப்பட்ட மக்களின் சமய நம்பிக்கை, அல்லது அத்தகைய ஈடுபாடில்லாமை, பயன்விளைவைப் பாதிக்கின்றதா?

— மக்கள் சதா யாருக்காவது பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றனர், மற்றும் கடவுளின் கருணை தொடர்ச்சியானது மற்றும் எல்லையற்றதாக இருக்கும் பொழுதினில், இந்த ஆய்வுக்குச் சீர்நிலையான அல்லது நிலைமாற்றம் உறாத (control) ஆய்வுக் குழுமம் ஒன்றை நாம் உண்மையில் கொண்டிருக்க முடியுமா?

தமது அளிக்கை நிகழ்வில், டாக் குட்டுஸ் பஹாய் எழுத்துக்களிலிருந்து பல குறிப்புக்களை எடுத்துக்காட்டினார். அவற்றின் வாயிலாகப் பிரார்த்தனை இன்றியமையாதது ஆனால் அதன் விளைவுகள் எப்போதுமே வெளிப்படையானவையல்ல என்பது எடுத்துக்காட்டப்பட்டது.

பிரார்த்தனைகள் குறித்த பஹாய் போதனைகள்

அவர் பஹாய் எழுத்தோவியங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன என்றார்: “உனது பிரார்த்தனை உன்னை நெருப்பிற்ககே வழிநடத்திச் சென்றாலும், அதே போன்று உனக்குச் சுவர்க்கமே பிரதிபலனாகக் கிடைத்தாலும் உனது வழிபாட்டில் எவ்வித மாறுபாடுமற்ற முறையில் நீ கடவுளைப் பிரார்த்திப்பாயாக.”

கடவுளின் ஓர் அவதாரமென பஹாய்களால் கருதப்படும் பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, நோய்கண்ட காலங்களில் “திறமையான மருத்துவர்களை” நாடவேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்துகின்றார், அதே வேளை நோய் நிவாரணத்திற்கான பிராத்தனைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குணப்படுதலுக்கான சில பிரார்த்தனைகளை பஹாவுல்லாவின் மூத்தத் திருமகனாரும் அவரது போதனைகளுக்கான விளக்கவுரையாளருமான அப்து’ல்-பஹா அவர்கள்: “குணப்படுத்துதலுக்காக வெளியிடப்பட்டுள்ள பிரார்த்தனைகள் பெளதீக, ஆன்மீக நிலைகள் இரண்டிற்குமே பொருந்தும். ஆகவே, ஆன்மா, உடல் இரண்டுமே குணமடைய அவற்றை(பிரார்த்தனைகளை) கூறுங்கள். நோயாளிக்கு உடல்நலனே முறையானதெனும்போது அது நிச்சயமாக வழங்கப்படும்; ஆனால் சில நோயாளிகளுக்கு அந்த நோயிலிருந்து குணப்படுவது வேறு பல நோய்களுக்குத் தோற்றுவாயாக நேரிடும், ஆகவே அப்பிரார்த்தனைக்கான உறுதியான பதிலை விவேகம் அனுமதிக்கவில்லை.”

டாக். குட்டுஸி அப்து’ல்-பஹாவின் பின்வரும் வாசகக் குறிப்பைப் படித்துக் காட்டுகின்றார்: “நீ வேண்டுவதை அவரிடம் மட்டுமே கேள்… ஒரே பார்வையில் அவர் ஓர் நூறாயிரம் நம்பிக்கைகளை வழங்கிடுவார், ஒரு தலையசைவில் அவர் காயம் ஒவ்வொன்றிற்கும் தைலமிடுவார்.”

டாக். குட்டுஸி வாசித்த பின்வரும் பகுதியில் அப்து’ல்-பஹா பிரார்த்தனை மற்றும் குணப்படுதலை விசேஷமாகக் குறிப்பிடுகின்றார்: “நோய் என்பது இருவகைப்படும்: ஆன்மீகம் மற்றும் பெளதீகம். வெட்டுக்காயம் பட்ட ஒரு கையை எடுத்துக்கொள்ளுங்கள்; காயம் ஆற வேண்டுமென மட்டும் பிரார்த்தித்துவிட்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்தாமல் இருப்பது எவ்வித நன்மையையும் விளைவிக்காது; பெளதீக ரீதியான குணப்பாடு தேவைப்படுகின்றது.”

மேலும்: “பெளதீக விபத்துக்களால் ஏற்படும் நோய்கள் மருந்துகளால் குணப்படுத்தப்பட வேண்டும்; ஆன்மீகக் காரணங்களால் ஏற்படும் நோய்கள் ஆன்மீக ரீதியில் குணப்பாடு காணும்… இவ்விருவகையான வைத்தியமுறைகளும் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், அவை இரண்டும் ஒன்றுக்கொண்று எதிரானவையல்ல, மற்றும், தமது சேவகர்கள் அத்தகைய வைத்தியத்தாலும் பயனடைய வேண்டுமென மருத்துவ அறிவியலை வெளிப்படுத்தியுள்ளவரான, கடவுளின் கருணை மற்றும் சலுகைகளிலிருந்தே பெளதீக நிவாரணங்கள் தோன்றுகின்றனவென நீர் அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்ளவேண்டும். நீர் ஆன்மீக வைத்தியமுறைகளுக்கும் சரிசமமான கவனம் செலுத்தவேண்டும், ஏனெனில் அவை வெகுசிறப்பான பயன்விளைவை ஏற்படுத்துகின்றன.”

டாக். குட்டுஸ் அவர்களால் வாசிக்கப்பட்ட மற்றொரு குறிப்பில், அப்து’ல்-பஹா நோயுற்றோருக்கான பிரார்த்தனை குறிப்பாக எவ்வாறு செயல்படுகின்றது என்பதை விவரிக்கின்றார்:

” ஒரு வலுவான மனிதர் ஒரு நோயாளி ஆகியோருக்கிடையே ஓர் இணக்கமான தொடர்பு ஏற்படும் வகையில் தனது முழுநம்பிக்கைக் குவிப்புடன் ஒருவர் ஒரு வலுவான மனிதரின் ஆன்மீக ஆற்றலிலிருந்து குணப்பாடு விளையும் என ஒரு நோயாளி எதிர்ப்பார்க்கும்போது அந்த வலுவான மனதினர் நோயுற்றவரின்பால் செலுத்தும் முற்றான கூர்கவனத்தால் (ஆன்மீக குணப்பாடு) விளைகின்றது. அந்த வலுமிக்க மனிதர் அந்த நோயாளியை குணப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார், பிறகு அந்த நோயாளி தாம் குணப்படுவோம் என்பதில் உறுதியடைகின்றார்…

“ஆனால் இவை யாவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே விளைவுகள் உண்டாக்குகின்றன, அதுவும் எல்லா வேளைகளிலும் அது நடைபெறுவதில்லை. ஏனெனில், ஒருவர் மிகவும் கொடுமையான நோயால் பாதிப்படைந்திருக்கும்போதோ, காயமுற்றிருக்கும்போதோ, இத்தகைய வழிமுறைகள் அந்நோயை அகற்றவோ அக்காயத்தை ஆற்றிடவோ முடியாது.

அறிவியல் ஆராய்ச்சி

பிரார்த்தனை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த அப்துல் பஹாவின் விளக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படுவதை தாம் வெகு ஆர்வத்துடன் காண விரும்புவதாக டாக். குட்டுஸி கூறினார். இருந்தபோதும், சாத்தியமே இல்லாத அச்சூழ்நிலையில் அத்தகைய ஆராய்ச்சி ஒன்றை வடிவமைக்க முடிந்தாலும் (“ஆன்மீக ரீதியில் ‘வெகு வலுவானவர்’ ஒருவரை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?” என அவர் வினவினார்,) பிரார்த்தனைகள் “ஒரு குறிப்பிட்ட அளவே விளைவுகள் ஏற்படுத்தும், அதுவும் அது எல்லா வேளைகளிலும் நடைபெறப்போவதும் இல்லை,” எனும் அப்துல் பஹாவில் கூற்றின் அடிப்படையில் நாம் எதையுமே நிரூபிப்பது சாத்தியப்படாது.

குணப்படுத்தும் பிரார்த்தனைகளின் ஆக்கவிளைவுகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி அப்து’ல்-பஹா விவரித்துள்ள அச்சூழ்நிலைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளிலேயே நடந்துள்ளது.

உதாரணமாக, சில ஆய்வுகளில், இருதய சிகிச்சை குறித்த ஆபரேஷனுக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இருதய கண்கானிப்புப் பிரிவில் உள்ள நோயாளிகள் ஆபரேஷனுக்குப் பிறகு எவ்வாறு தேறி வருகின்றனர் என்பதை சில ஆய்வுகளின் வாயிலாக ஆராயப்பட்டது. ஒவ்வொரு ஆய்விலும் நோயாளிகள் ரேண்டம் முறையில் பாதி பாதியாக பிரிக்கப்பட்டனர். அவற்றில் பாதி பேர்களுக்கு அந்த நோயாளிகளுக்கே தெரியாத சிலரைக் கொண்டு அவர்கள் குணமடைய பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. தங்களுக்கு ஒருவர் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

பொதுவாக, அளவிடப்படக்கூடிய எவ்வித விளைவும் அங்கு காணப்படவில்லை எனவும், வழங்கப்பட்ட சூழ்நிலையை கவனத்தில் கொள்ளும் போது அம்முடிவுகள் தமக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும் டாக். குட்டுஸி கூறினார்.

தமது அளிக்கையின் போது, திடீரென டாக். குட்டுஸி, மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை வெளியிடுவதனால் கடவுள் தாம் விரும்பும் குறிக்கோளிலிருந்து அப்பால் விலகுவாறா என வினவினார்.

அவர் டாக். எட்வர்ட் சி. ஹால்பெரின் எனும் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவரின் ஆய்வை எடுத்துக்காட்டினார். ஒரு மருத்துவரீதியான ஆய்வில், முன்பின் அறியாதாரால் பிரார்த்திக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டோரைக் காட்டிலும் எவ்வித பிரார்த்தனைக்கும் உட்படுத்தப்படாதோரை குணப்படுத்தும், தன்விருப்பமாக குணப்படுத்தும் ஒரு கடவுள் குறித்த கருத்தை ஏற்றுக்கொள்வது ஒருவருக்கு சற்ற சிரமாகவே இருக்கும். கடவுள் இவ்வாறாக முறண்பாடானவர் என கருதப்படக்கூடாது.”

டாக். குட்டுஸி தமது முடிவுரையில் பிரார்த்தனை குறித்த இவ்விதமான ஆராய்ச்சி சிலர் கூறுவது போல் கடவுள் நிந்தனையென தாம் கருதவில்லையென கூறினார்.

ஆனால் அறிவியல் நோய் நிவாரணத்திற்கு ஏதுவாக பிரார்த்தனையின் பயனுறுதியை அதன் அடிப்படையிலான ஆய்வின் போது வெளிப்படுத்தக்கூடுமாவென அவர் சந்தேகம் தெரிவித்தார்.

இது முக்கியமா எனும் கேள்விக்கு, அவர் அது முக்கியமல்லவென கூறினார். இருந்த போதும் அதை நிரூபிப்பது ஆர்வமளிப்பதாகவே இருக்கும் என்றார்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/656/

அஸர்பைஜான்: ஒற்றுமை குறித்த பஹாய் கோட்பாடு சகவாழ்வு மீதான மாநாட்டை ஊக்குவிக்கின்றது


இச்செய்தி குறித்த கூடுதல் படங்களுக்கு, https://news.bahai.org/story/1600/ செல்லவும்

ஓகுஸ், அஜர்பைஜான், 24 ஜூன் 2022, (BWNS) – அஜர்பைஜானில் சகவாழ்வைப் பேணுவதற்கான முதல் தேசிய மாநாடு சனிக்கிழமையன்று அரசாங்கத்தின் மத சங்கங்களுக்கான மாநில குழுவால் நடத்தப்பட்டது, அதிகாரிகள், பல்வேறு மத சமூகங்களின் பிரதிநிதிகள், பொது சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்களை இம்மாநாடு ஒன்றுகூட்டியது.

வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பஹாய் கொள்கை பற்றி பல்வேறு சமூக நடவடிக்கையாளகர்களிடையே கலந்துரையாடல்கள் நடந்த ஆறு நாள்களுக்குப் பிறகு மாநிலக் குழுவால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. அஸர்பைஜான் சமூகத்தில் உள்ளடங்கலான ஒரு தேசிய அடையாளத்தைப் பற்றிய கேள்விகளை ஆராய்வதில் அதிகரித்து வரும் ஆர்வத்திற்கு இந்த கூட்டம் ஒரு விடையிறுப்பாக இருந்தது.

ஓகுஸ் மாவட்ட நிர்வாக ஆணையத்தின் தலைவர் எய்வாஸ் குருபானொவ் தொடக்கக் கருத்துகளை வழங்கினார், பன்முக கலாச்சாரத்திற்கான ஒரு நீண்ட பாரம்பரியத்தை அஸர்பைஜான் கொண்டுள்ளது எனவும், சகவாழ்வு மற்றும் சகிப்புத்தன்மை கலாச்சாரத்தை வலுப்படுத்துவதற்கு நாட்டில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் கூறினார்.

அஜர்பைஜானின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ரமஸான் அஸ்கர்லி, ஒரு பிரதான அமர்வின் போது இந்த யோசனையை விரிவாகக் கூறினார்: “பன்முக கலாச்சாரம் ஓர் இயக்கமற்ற யதார்த்தத்தைப் பிரதிநிதிக்கவில்லை. இது ஆற்றல்மிகு, உள்ளடக்கிய மற்றும் மாறிவரும் உலகின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒன்றைக் குறிக்கிறது.”

அடையாள நெருக்கடியே உலக மக்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான போராட்டங்களுக்கு அடிப்படைக் காரணம் என திரு.அஸ்கர்லி விளக்கினார். “வெவ்வேறு நாடுகளும் குழுக்களும் உலகில் அவற்றிற்கான இடம் எது என்பதைக் கண்டுபிடிக்க முயல்கின்றன, பொதுவான அடையாளம் இல்லாத நிலையில், அவர்களின் உறவுகள் நெருக்கடிக்கு ஆளாகின்றன.”

அவருடைய கருத்துகள் ஒரே நேரத்தில் ஒற்றுமையைப் பேணும் மற்றும் பன்முகத்தன்மையின் இன்றியமையா கருத்தாக்கத்தை உள்ளடக்கிய எண்ணங்களின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

“நாம் அனைவரும் ஒரே தோட்டத்தின் மலர்கள் போன்றவர்கள்,” என அவர் கூறினார், “எல்லா பூக்களும் ஒரே நிறமாகவும், வடிவமாகவும் இருந்தால், அந்தத் தோட்டம் வசீகரிக்காது, நிறம், வடிவம், வாசனை ஆகியவற்றில் வேறுபாடுகள் இருப்பதால் அதன் அழகு மெருகூட்டப்படுகிறது.

“இதன் அடிப்படையில் நாம் அனைவரும் நம்மைப் பார்த்தால், நம் உறவுகள் மாறும். தோட்டத்தின் மலர்கள் ஏன் ஒன்றுக்கொன்று முரண்பட வேண்டும்?”

மாநாட்டின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் தங்கள் விவாதங்களைத் தொடரவும், தங்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றாகப் பிரார்த்தனை செய்யவும், ஒவ்வொரு மதத்துடனும் தொடர்புடைய வெவ்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு கூட்டாகச் சென்றனர்.

மாநாட்டின் முடிவில், மற்றொரு பங்கேற்பாளரும் ஓகுஸ் பஹாய்களின் பிரதிநிதியுமான அல்மாஸ் அப்துரஹ்மானோவா, இவ்வாறு கூறினார்: “அஸர்பைஜானில் சகவாழ்வு மதிக்கப்படுகிறது என்றாலும், பல்வேறு மதத் தலங்களுக்கான குழு விஜயம் பல தடைகளைத் தகர்த்து நம்பிக்கையை உருவாக்கிட குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தது.”

பரந்த தேசிய கவனத்தைப் பெற்ற இந்த மாநாடு, உள்ளடங்கலான அடையாளத்தை வளர்ப்பது தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கான எதிர்கால கருத்தரங்குகளுக்குப் பங்கேற்பாளர்களிடையே மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1600/

பஹாய் சமயம் பற்றிய வட்டிக்கன் 2-இன் சுற்றறிக்கை-8


பிற சமயத்தைச் சார்ந்தவர்களைத் தெரிந்துகொள்ளுதல் – எண். 8

வட்டிக்கனிலிருந்து  வெளிவந்த பிற சமயங்களைப் பற்றிய சுற்றறிக்கை – 2002

பஹாய் சமயம் என்றால் என்ன?

அறிமுகம்

கிருஸ்துவர் அல்லாதாரோடுடனான சபையின் உறவைப் பற்றி வட்டிக்கன் ii-ன் பிரகடனத்தில், பிற சமய விசுவாசிகளை ஒரே மாபெரும் பணியின் பங்காளிகள் என வாஞ்சையுடனும் திறந்த மனதுடனும் சபை வரவேற்பதைக் காணலாம். இச்சமயங்கள், பல நன்மைகளும் பவித்திரமும் நிறைந்து, உலக முழுவதுமுள்ள பல கோடி மக்களுக்கு ரட்சிப்பை அளிக்கவல்லவைகளாக விளங்குகின்றன. நம்முடையதினின்று வேறுபடும் சமயங்களை ஏற்றுள்ளவர்களை மதித்து, ஏற்று மற்றும் நண்பர்களாக. அவர்களைக் காண இந்த வட்டிக்கன் ii-ன் வெளியீடுகள் ஊக்குவிப்பதைக் காணலாம். இதே உணர்வில் பஹாய் சமயமும் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

பஹாய்கள் யார்

பஹாய் சமய ஸ்தாபகர்கள் இஸ்லாமிய பூர்வீகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும், கடந்த கால சமயங்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் ஒரு புதிய சமயத்தை ஸ்தாபிப்பவர்களென பஹாய்களால் கருதப்படுகின்றனர். பல்வேறு சமயப் பிண்ணனிகளைச் சார்ந்தவர்களாக இன்றைய பஹாய்கள் உள்ளனர். அவர்கள், கிருஸ்துவர்களாக, யூதர்களாக, முஸ்லிம்களாக, ஹிந்துக்களாக, சீக்கியர்களாக, பௌத்தர்களாக, பார்சிகளாக இருந்துள்ளதோடு, எச்சமயத்தையும் சாராதவர்களாகவும் இருந்துள்ளனர். கடந்தகால அவதாரபுருஷர்கள் அனைவருக்கும் ஒருங்கே வந்தனம் செலுத்தினாலும், சமயம் கட்டம் கட்டமாக வளர்கின்றது எனவும் பஹாவுல்லா இறைவனின் இக்கலாத்திற்கான இறைத்தூதர்  எனவும் நம்புகின்றனர். பஹாய்கள் பல்வேறு சமய, இன, தேசிய, பொருளாதார, சமூகச் சூழ்நிலைகள் ஆகியவற்றைச் சார்ந்தவர்களாக இருப்பினும், பஹாய் போதனைகள் அவர்களுக்கு இவற்றினும் உயர்ந்த, மனிதகுலத்திற்கான விசுவாசத்தை வழங்குகின்றது.

பஹாய்களைப் பொறுத்தமட்டில் தினசரி வாழ்க்கைக்கும் சமயத்திற்குமிடையிலும் வேறுபாடு கிடையாது. பிரார்த்தனைகளிலேயே மிகவும் உயர்ந்த பிரார்த்தனை ஒரு மனிதனின் தினசரி வாழ்க்கையே என பஹாய்கள் கூறுகின்றனர். அதாவது, சமயம் தினசரி வாழ்க்கையில் வெளிப்படும் இறைவனை நோக்கிய ஒரு மனப்பான்மையே ஆகும்.

உலகம் முழுவதும் இன்று முந்நூற்று நாற்பது நாடுகள், பிரதேசங்கள், தீவுகள் ஆகியவற்றுக்கும் மேல் பரந்து 50 அல்லது 60 இலட்சம் பஹாய்களுக்கு மேல் உள்ளனர். இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட (1989ல்) சுமார் 6000 பஹாய்கள், 180 உள்ளூர் ஆன்மீகச் சபைகளுடன், 400 உள்ளூர் சமூகங்களில் உள்ளனர். ஓர் உள்ளூர் ஆன்மீகச் சபையை அமைக்க குறைந்தது 9 பேர் தேவைப்படுகின்றனர். பஹாய்களின் புனித வாசகங்கள் அவர்கள் சமய ஸ்தாபர்களின் எழுத்து வடிவங்களாகவும் சுமார் 600 மொழிகளுக்கும் மேல் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டும் உள்ளன. பஹாய்கள் கண்டுவரும் துரித வளர்ச்சியானது அவர்களை இறைவெளிப்பாட்டுச் சம்பிரதாயத்தில் ஓர் ஆக சமீபத்திய உலக சமயத்தினர், எனும் அந்தஸ்திற்கு உயர்த்தியுள்ளது.

பஹாய் சமயத்தின் பூர்வீகம்

பஹாய் சமயத்தின் முன்னறிவிப்பாளராக பாப்(வாசல்) என்னும் நாமத்துடன் இளம் பாரசீக வணிகர் ஒருவர், 1844-இல் தம்மை ஓர் இறைத்தூதர் என அறிவித்ததுடன் தாம் தம்மைவிட, உயர்ந்த வேறு ஓர் இறைத்தூதரின், சமயம் மற்றும் நாகரீகத்தில் ஒரு புதிய யுகத்தைத் தோற்றுவிப்பவராகவும் உள்ள ஒருவரின், முன்னோடி எனவும் அறிவித்தார் முன்வந்த எல்லா இறைத்தூதர்களைப் போலவே பாப் அவர்களும் பல எதிர்ப்புகளையும் பழிச்சொற்களையும் சந்தித்தார். சுமார் 6 வருடகால துன்புறுத்தலுக்குப் பிறகு தம்முடைய 30-வது வயதில், தப்ரீஸ் நகரில் (750 துப்பாக்கிகளின் இரவைகளுக்கு இறையாகி) தியாக மரணத்தைத் தழுவினார்.

அதன் ஸ்தாபகராக ஒரு பாரசீகப் பிரபு வம்சத்தைச் சார்ந்த பஹாவுல்லா (கடவுளின் ஜோதி) 1863ல், பாப் அவர்களும் கடந்தகால  இறைத்தூதர்கள் அனைவரும் முன்னறிவித்த அந்த இறைத்தூதர் தாமே எனப் பிரகடனப்படுத்தினார். தமக்கு முன் வந்தவர் போலவே, அவரும் கடுந்துன்புறுத்தலுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகினார். தாம் சிறைப்பட்டிருந்த, நாடுகடத்தல் அனுபவித்த சுமார் 40 வருடகாலத்தில் தமது வெளிப்பாட்டின் போதனைகள், சில அக்காலத்து அரச, சமயத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டவை மேலும் தமது நம்பிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட போதனை, பயிற்சி ஆகியவை சம்பந்தப்பட்டவை அனைத்தையும் ஏட்டில் பதித்தார். 1865-இல் அடைந்த நான்காவதும் இறுதியானதுமான சிறைவாசம் பாலஸ்தீனத்தைச் சார்ந்த சிறை நகரான அக்காநகர சிறைவாசத்தின் இறுதியில் தமது எழுபத்துநான்காவது வயதில் இறையடி சேர்ந்தார்.

இதன் அதிகாரபூர்வ விளக்கவுரையாளராகவும் உதாரண புருஷராகவும் பஹாவுல்லாவின் மூத்த குமாரர், பஹாவுல்லாவினால் அவரது திருவொப்பந்தத்தின் மையம் என நியமிக்கப்பட்டார் மேலும் சகலரும் வழிகாட்டுதலுக்கும் பயிற்றுவிப்பிற்கும் திரும்பவேண்டியவராக அப்துல்-பஹா (கடவுள்ட்ட ஜோதியின் சேவகர்) இருந்தார். தமது தந்தையாருக்கு நெருங்கிய சகாவாகவும் எந்நேரத்திலும் அருகிலிருந்து உதவுபவராகவும், அவரது துன்பங்களில் பங்கெடுப்பவராகவும் இருந்தார். துருக்கி அரசாங்கத்தின் பழைய அரச வம்சம் பதவியிலிருந்து இறக்கப்பட்டுத் துருக்கி சாம்ராஜ்யம் முழுவதும் இருந்த சமய மற்றும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரையில், 1908-வரையில் கைதியாகவே வாழ்ந்தார். அதன் பிறகு அவர் எகிப்து, ஐரோப்பா அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பரவலாகப் பிரயாணம் செய்து, தமது சமயத்தின் கோட்பாடுகளை விளக்கியும் அவற்றிற்கு உதாரணமாகவும் இருந்து உலகம் முழுவதும் இருந்த பஹாய் நம்பிக்கையாளர்கள் அனைவரையும் ஊக்குவித்தும் வழிகாட்டியும் வந்தார். அவர் 1921-இல் ஹைஃபா நகரில் எல்லா சமயங்களைச் சார்ந்தவர்களும் துக்கித்த நிலையில் இறைவனடி சேர்ந்தார். எல்லாருக்கும் அவர் வாழ்வு ஒரு பிரகாசமான வழிகாட்டியாக இருந்தது. இப்போதும் இருந்து வருகின்றது. தமது உயில் மற்றும் சாசனத்தில் தமது மூத்த பேரரான ஷோகி எஃபெண்டியைச் சமயத்தின் பாதுகாவலராகவும் அதன் போதனைகளின் வியாக்கியானராகவும் நியமித்தார். அவரது வழிகாட்டும் கரங்களின் கீழ் பஹாய் சமயம் பல்கிப் பரந்த வளர்ச்சி கண்டது. அவர் 1957-இல் லண்டன் மாநகரில் காலமானார். 1963-இல் இருந்து  உலக நீதி மன்றத்தின்’ வழிகாட்டுதலின் கீழ் பஹாய் சமயம் இருந்து வருகின்றது.

பஹாய் சமயம்… பிரகடனப்படுத்துவது:-

இறைவனின் ஒருமைத்தன்மை, சமயங்கள், மானிடம் ஆகியவற்றின் ஒற்றுமை, ஆண், பெண் சமத்துவம், சகலவிதமான முன்தீர்மானங்களையும் தப்பெண்ணங்களையும் நீக்குதல், வேறுபட்ட கலாச்சாரங்களைப் பாதுகாத்தல். அது தன்னிச்சையாக உண்மையைத் தேடுவதை ஆதரிக்கின்றது. அறிவியல், சமயம் இரண்டிற்குமிடையே இணக்கம், ஓர் அனைத்துலக மொழியும் உலக அரசாங்கமும்.

பஹாய் வழிபாட்டு இல்லங்கள்

பஹாய் கோவில்கள் எல்லா தேசங்கள், இனங்கள் வகுப்புகள் மற்றும் சமயங்கள் சார்ந்த அனைவருக்கும் திறந்திருக்கும். அனைவருக்கும் அது பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றைச் செய்வதற்கான தலமாக பஹாய்கள் வழங்கும் ஓர் அன்பளிப்பாகும், இறைவனின் ஒருமைத்தன்மை, இறைத்தூதர்கள், மானிடம் இரண்டிற்கிடையிலான ஒற்றுமை பற்றிய அவர்களுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு. ஒவ்வொரு கண்டத்திலும் ஒரு தலையாய பஹாய் கோவில் உள்ளது. உள்ளூர்களில் இல்லங்கள் அல்லது வாடகை மண்டபங்களை பஹாய்கள் தங்கள் கூட்டங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். பஹாய் சமூகத்திற்கு  சமயகுருக்களோ சடங்குகளோ கிடையாது. பஹாய்கள் தங்கள் போதனைகளையே செயலாற்றத்திற்கான அழைப்பாகக் கொள்கின்றனர். பிரச்சனைகளால் சூழ்ந்துள்ள உலகத்திற்கு அவை நம்பிக்கையூட்டுவனவாகவும், மனவுறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை அளிப்பனவாகவும் காண்கின்றனர்.

பஹாய் நிர்வாக முறை

பஹாய் நிர்வாக முறைக்கு கலந்தாலோசனையே அடித்தலமாகும்.

 சமயகுருக்களோ சடங்குகளோ கிடையாது.

புனித வசனங்கள் பாதுகாப்பாகவும் அதிகாரபூர்வமாகவும் எழுத்துவடிவத்தில் உள்ளன. நிர்வாக ஸ்தாபனங்கள் ஆன்மீக சபைகள் என அழைக்கப்படுகின்றன; அவை உள்ளூர், தேசிய, அனைத்துலக ரீதியிலானவையாகும். எல்லா ஆன்மீகச் சபைகளும் பிரார்த்தனை உணர்வுடனேயே ஒன்றுகூடுகின்றன.

இந்தச் சபைகள் பஹாய்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவற்றின் உறுப்பினர்கள் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு அவர்மீதான நம்பிக்கையை அவர்களின் கடமையாகக் கொள்கின்றனர்.

ஓட்டு வேட்டை கிடையாது, வேட்பாளர் கிடையாது. தேர்தல் வாக்குறுதிகள் கிடையாது, கட்சிகளும் கிடையாது. பிரார்த்தனைகள் கூறவும், உள்ளூர் ஆன்மீகச் சபையுடன் பல்வேறு பிரச்சனைகளை விவாதிக்கவும் ஒன்றாக விருந்துண்ணவும் பத்தொன்பதாம் நாள் பண்டிகை ஒரு சமூக (,நிர்வாக மற்றும் கலை) நிகழ்ச்சியாக விளங்குகின்றது.

தேர்ந்தெடுக்கப்படுவதும், பஹாவுல்லாவினால் பஹாய் சமயத்திற்கான சட்டம் இயற்றவும் ஆட்சி மன்றமாகவும் உருவாக்கப்பட்டுள்ளதுமான ‘உலக நீதிமன்றம்’ பஹாய் உலக மையமாக இஸ்ரேலின் ஹைஃபா நகரிலிருந்து செயல்படுகின்றது.

பஹாய் நிதிகளுக்கு பஹாய்கள் மட்டுமே நிதியளித்திட முடியும்.

கலந்தாலோசனைக்கான கேள்விகள்:

1.           பஹாய்கள் சமூகக் கோட்பாடுகள், உலக சமூகத்தின்பால், தெளிவான அழுத்தம் கொடுக்கின்றனர். கிருஸ்துவர்களாகிய நாம் நமது சபையின் சமூகக் கோடுபாடுகளுக்கு எவ்விதம் செவிசாய்க்கின்றோம்?

2.          பஹாய் சமூகத்திற்கும் நமது சபைக்கும் இடையில் எந்தெந்த ரீதியில் பலனளிக்கக்கூடிய ஒத்துழைப்பு ஏற்பட வாய்ப்புண்டு?

மேற்கொண்டு படிக்கப்படக் கூடிய நூல்கள்:

  • “The Bahá’í Faith” Leaflet published by the Bahá’í Publishing Trust, 6 Mount Pleasant, Oakham, Leicestershire.
  • “The Bahá’í Faith” Booklet Ibid
  • “Gleanings from the Writings of Bahá’u’lláh” by Bahá’u’lláh
  • “Paris Talks” by Adbdu’l-Bahá
  • “Guidellines for Today and Tomorrow” by Shoghi Effendi.
  • “Bahá’u’lláh and the New Era” by Dr. J.E. Esselmont. A complete catalogue of Bahá’í literature can be obtaned by writing to: The Bahá’í Publishing Trust, 6 Mount Pleasant, Oakham, Leicestershire LE156Y.

இது கத்தோலிக்கச் சமூகத்திற்குப் பிற சமயங்கள் சம்பந்தமான செயற்குழுவினால் தயாரிக்கப்பட்ட பல கையேடுகளில் ஒன்றாகும். இறை நம்பிக்கை, தங்கள் வாழ்க்கையை சமய கோட்பாடு, நோக்கங்கள் ஆகியவற்றுக்கு இணங்க வாழ்ந்து, சமூகத்தின் இணக்கத்திற்குச் சேவையாற்றி, எல்லோருடைய சந்தோஷத்திற்கும் செயலாற்றுவோருடன் புரிந்துணர்வும் சினேகமும், அறியாமையினால் எழும் இடயூறுகளை வெற்றிகொள்ளவும், “எல்லா மக்களுக்குமான மரியாதையும் அன்பும்” எனும் கத்தோலிக்கச் சபையின் போதனையை ஆலோசனை, பிரார்த்தனை, செயல்பாடு ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றவும் இந்தக் கையேடுகள் தேவையான தகவல்களை வழங்குகின்றன.

செயற்குழு தன்னுடைய அங்கத்தினர்களுள் ஒருவரான Sr. எலிசபெத் வெஸ்ட் rscj அவர்களுக்கு இந்தச் சேவைக்காக நன்றி நவில்கின்றது.

+சார்ல்ஸ் ஹென்டர்ஸன்

தலைவர்

__பிற சமயங்களுக்கான செயற்குழு__

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பிஷப்புகள் மாநாடு

http://bahai-library.com/newspapers/2002/021124-3.html©Copyright 2002, Bishops’ Conference of England and WalesThe original document can be found at: http://217.19.224.165/resource/interfaith/interfaith08.pdf

BIC நியு யார்க்: இயற்கை உலகுடனான மானிடத்தின் உறவுகளை மறுவார்ப்புச் செய்தல்


16 ஜூன் 2022

(கூடுதல் படங்களுக்கு https://news.bahai.org/story/1599/ செல்லவும்)

BIC நியூயார்க், 16 ஜூன் 2022, (BWNS) – “மனிதகுலத்தின் சொந்த விதியும் கிரகத்தின் விதியும் பிரிக்கமுடியாமல் பின்னிப்பிணைந்துள்ளன என்னும் உண்மையின் அடிப்படையில் மானிடம் செயல்படுமா? அல்லது அதைச் செயல்பட தூண்டுவதற்கு இன்னும் பெரிய பேரழிவுகள் தேவைப்படுமா? என பஹாய் சர்வதேச சமூகம் (BIC) ஸ்டாக்ஹோம்+50 நிகழ்வில் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்புகிறது.

“பருவநிலை மாற்றம் மற்றும் உலகின் பிற முக்கிய நெருக்கடிகள் மனிதகுலத்தை ஓரே இனமெனும் அதன் தனித்தன்மையை அங்கீகரிக்க நிர்பந்திக்கின்றன. ஆதலால், இன்றைய தேவைகளுக்கு ஏற்ப புதிய அமைப்புகள் தேவையாகின்றன” என BIC’இன் பிரதிநிதி டேனியல் பெரல் கூறினார். ஸ்வீடன் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் இரண்டு ஸ்வீடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொதுமை சமூக அமைப்புகளுடன் BIC’யினால் இணைந்து நடத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் சீர்குலைவு அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் வாசிப்பை இந்த அறிக்கை முன்வைத்தது. பல தசாப்தங்களாகக் குவிந்த அனுபவத்தின் மூலம் “சர்வதேச சமூகம் ஒரு சிறந்த உலகத்தை கற்பனை செய்தது மட்டுமல்லாமல், முன்னர் பயணிக்காத பாதைகளில் செயல்படவும் முயன்றது.”

அதன் மையத்தில், இந்த அறிக்கை மனிதகுலம் எதிர்கொள்ளும் மைய சவால்களில் ஒன்றாக எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் இந்த இலக்கை நோக்கித் தங்கள் பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளின் முயற்சிகளால் இந்த இடைவெளியைக் குறைக்க முடியும் என BIC கூறுகிறது. இருப்பினும், மாற்றத்தின் வேகம் இந்தத் தருணத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப உயரவில்லை.

“தேவையான அளவுகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு, மனிதகுல வளர்ச்சியின் தற்போதைய கட்டத்தால் கோரப்படும் விழுமியங்களைச் சுற்றி நாடுகளிடையே மிகவும் வலுவான ஒருமித்த கருத்து மற்றும் கூட்டு விருப்பம் தேவை” என அறிக்கை கூறுகிறது.

‘ஒரே கிரகம், ஒரே வாழ்விடம்’ ஆகியவற்றில் BIC ஆல் ஆராயப்பட்ட சில கருப்பொருள்கள் பின்வருமாறு: நிலையான சமூகங்களை நிர்மாணிக்கக்கூடிய ஒரே அடித்தளமாக மனிதகுலத்தின் ஒருமைப்பாடு என்னும் அடிப்படைக் கொள்கை; நீதியே செயல்முறையாகவும் விளைவுகளாகவும் இருத்தல்; கலந்தாலோசனை மற்றும் செயல்பாட்டில் ஒருமித்த கருத்தை வளர்த்தல்; மேம்பாடு மற்றும் அபிவிருத்தி பற்றிய கருத்துக்களை மறுவரையறை செய்தல்.

அறிக்கையில் வழங்கப்படும் பரிந்துரைகளில், மிகவும் நிலையான உலகை நிர்மாணிப்பதில் அரசாங்கத்தின் முக்கிய பங்கு பற்றிய சில பரிந்துரைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, உலகளாவிய வரி ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான ஒரு பொறிமுறை மற்றும் சட்டவிரோத நிதி ஓட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு கட்டமைப்பானது நாடுகளுக்கு இடையிலான செல்வத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கலாம், மேலும், அவை உடனடியான மற்றும் எதிர்காலத் தேவைகளை நிவர்த்தி செய்ய வளங்களைச் சேகரிக்க அனுமதிக்கின்றன.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் முன்னாள் தலைவரான மரியா பெர்னாண்டா எஸ்பினோசா, “எதிர்காலத்திற்கான ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு விழுமியங்கள் அடிப்படையிலான பலதரப்பு அமைப்பு தேவை” என குறிப்பிட்டு, இந்த யோசனைகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: “இது ஒரு சுருக்கமான அறிக்கை அல்ல. செல்வம் மற்றும் அதிகாரத்தின் மறுபகிர்வு மற்றும் பேராசையிலிருந்து ஒற்றுமைக்கு, தப்பெண்ணத்திலிருந்து பச்சாதாபம் மற்றும் இரக்கம், அலட்சியம் மற்றும் வெறுப்பிலிருந்து மனிதகுலம் மற்றும் இயற்கையின் மீதான தீவிர அன்புக்கு மாறுதல் தேவைப்படுகிறது.

ஒரே கிரகம், ஒரே வாழ்விடம் என்பது சுற்றுச்சூழலைப் பற்றிய உரையாடலில் BIC’இன் பங்களிப்பில் இது சமீபத்திய ஒன்றாகும். 2015’இல் பாரிஸில் நடைபெற்ற UNFCCC மாநாட்டின் 21’வது கூட்டம், 1992 ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு அல்லது “பூமி உச்சமாநாடு, 1972 ஆம் ஆண்டு மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அசல் மாநாடு ஆகியவற்றுக்கு மற்ற குறிப்பிடத்தக்க அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1599/

ஓர் அண்டா நிறை நீர்!


படிமம்:Mušov Cauldron.jpg

(விவேகானந்தர் கூறிய கதை)

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் தயாராக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசவைக்குத் துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது பணியாளர்களின் நேர்மை குறித்துப் பெருமையாகக் கூறினான் அரசன்.

ஆனால் அந்தத் துறவியோ அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். அதன்படி ஒரு சிறிய சோதனை வைத்தார் துறவி. அவர், அரசனின் ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க தாம் ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பசும்பால் தேவைப்படுகிறது எனவும், அரசனது பணியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் பெரிய அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Health Benefits of Milk

அரசன் புன்னகையுடன், இதுதானா உங்கள் சோதனை என சந்தேகத்துடன் கேட்டான். பின்னர், அரசன் தனது பணியாளர்கள் அனைவரையும் அழைத்து, துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூறினான். அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்குத் தங்களின் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். அன்று இரவு அவர்கள் அனைவரும் அரசன் கூறியவாறு ஒவ்வொருவரும் பால் சேமிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் தங்கள் பங்கு பாலை ஊற்றிச் சென்றனர்.

மறுநாள் காலையில், அண்டாவில் எவ்வளவு பால் சேர்ந்துள்ளது என்பதை அரசன் வந்து பார்த்தபோது அந்த அண்டா நிறைய வெறும் தண்ணீர் இருப்பதைக் கண்டு அரசன் அதிர்ச்சியடைந்தான். அரசன் பணியாளர்கள் அனைவரையும் அழைத்து என்ன நடந்தது என விசாரித்தான். திருதிருவென விழித்த சேவகர்கள் ஒவ்வொருவரும் பால் ஊற்றும் போது, தான் ஒருவன் மட்டும் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது என நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றிச் சென்றனர் என்பது விசாரிப்பின் போது தெரியவந்தது.

இந்த உதாரணக் கதையைக் கூறி உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டினார் சுவாமி விவேகானந்தர். அது போலவே நாமும் நமது பங்கு வேலையை சுயநலத்துடன் செய்யால் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குத் தெரியாது என நினைத்து எல்லாருமே அதே தவறை செய்திடக் கூடாது.

துனீசியா: தொலைக்காட்சி நேர்காணல் சமுதாயத்தில் சமயத்தின் ஆக்ககரமான பங்கை ஆராய்கிறது


(இச்செய்தியின் கூடுதல் படங்களை (https://news.bahai.org/story/1598/)’இல் காணலாம்

துனிஸ், துனீசியா, 10 ஜூன் 2022, (BWNS) – துனீசியாவில் ஒரு தேசிய தொலைக்காட்சி நிகழ்வின் சமீபத்திய தொடரில், அந்த நாட்டு பஹாய்களின் பிரதிநிதி ஒருவர் சமூகத்தில் மதத்தின் பங்கு பற்றிய கலந்துரையாடலில் கலந்துகொண்டார். பொது நனவில் வளரும் ஆர்வம். “பதிவுக்காக” என பெயரிடப்பட்ட இந்த வாராந்திர நிகழ்ச்சி, உள்ளடக்கிய தேசிய அடையாளத்தை வடிவமைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிகழ்ச்சியின் தொகுப்பாளரான புர்ஹான் பிஸயீஸ், காலநிலை மாற்றம் மற்றும் பல வகையான சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்ற சமகால சவால்களை எதிர்கொள்ளும் மதத்தின் திறனைப் பற்றிய கேள்விகளைக் கேட்டுத் ஆரம்பித்தார். துனீசியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தைச் சேர்ந்த மொஹமட் பென் மௌஸா, “இந்தச் சவால்களின் மையத்தில் விழுமியங்களின் நெருக்கடியும், சமூகத்தை நம்பிக்கையாளர் மற்றும் நம்பிக்கையற்றோர், பெண்கள் மற்றும் ஆண்கள், பணக்காரர் மற்றும் வறியோர், அறிஞர்கள் மற்றும் படிக்காதோர் என கூறுபோடுவதும் வீற்றிருக்கின்றன.

“இது சமூகத்தின் பல பிரிவுகள் பொது வாழ்வில் முழுமையாகப் பங்கேற்பதையோ அல்லது தீர்வுகளுக்குப் பங்களிப்பதையோ தடுத்திடக்கூடும். இத்தகைய பிளவுகள் மனிதகுலத்தை முழு முதிர்ச்சியை அடைவதிலிருந்தும் அதன் சவால்களை எதிர்கொள்வதிலிருந்தும் தடுக்கின்றன.

ஒரு மணி நேரம் இருபது நிமிட உரையாடலின் போது, ​​திரு. பிஸயீஸும், திரு. பென் மௌசாவும், துனீசிய பஹாய் சமூகத்தின் வரலாறு சார்ந்த மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளின் நுண்ணறிவுகளை ஆராய்ந்தனர், இது மக்களை ஒன்றிணைக்கவும் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை உருவாக்கவும் உதவியது.

உரையாடலில் குறிப்பிடப்பட்ட எடுத்துக்காட்டுகளில் ஒன்று, சகவாழ்வு மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் பற்றிய சொற்பொழிவுகளில் பங்கேற்பதன் மூலம், துனீசிய பஹாய்கள் நீதி மற்றும் மனிதகுலத்தின் அத்தியாவசிய ஒருமைப்பாட்டின் அடிப்படையில் குடியுரிமை பற்றிய புதிய கருத்துக்களை வளர்த்துள்ளனர் என்பதாகும்.

கலந்தாலோசனை மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களை முழுமையாக பங்கேற்க அனுமதிக்கும் கலந்துரையாடலுக்கான தளங்கள் போன்ற அடித்தட்டில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளையும் நேர்காணல் எடுத்துக்காட்டுகிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டில் நிறுவப்பட்ட துனீசிய பஹாய் சமூகத்தின் முயற்சிகள் அனைத்து மக்களுக்கும் திறந்திருந்ததுடன் மனிதகுலத்தின் ஒருமைப்பாடு என்னும் ஆன்மீகக் கொள்கையைப் பயன்படுத்துவதைச் சுற்றிவந்துள்ளன என திரு. பென் மௌசா விளக்கினார். “இந்தக் கொள்கைக்குப் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் நீக்குதல், அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம், ஒற்றுமைக்கு ஒரு முன்நிபந்தனையாக நீதியை அங்கீகரித்தல் மற்றும் ஒருவருடைய சக குடிமக்களுக்கு தன்னலமற்ற சேவை ஆகியவை தேவை.”

அரபு மொழியில் முழுமையான நேர்காணலை இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம், பகுதி 1 மற்றும் பகுதி 2, இதில் திரு. பென் மௌசா நாகரிகத்தின் பொருள் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மதத்தின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறார்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1598/

“குடும்பம் மாற்றத்திற்கான விதைப்பாத்தி”: இந்தியாவில் ஒரு புதிய சமத்துவ கலாச்சாரத்தைப் பேணுதல்


1 ஜூன் 2022

புது டில்லி, 1 ஜூன் 2022, (BWNS) – ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும் என்பது நீதியின் தேவையாகும். எவ்வாறாயினும், உண்மையான சமத்துவத்தை அடைவது கடினம், மற்றும் மனித முயற்சியின் அனைத்து பகுதிகளிலும் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களின் பங்கேற்பைத் தடுக்கும் தடைகள் அகற்றப்பட வேண்டும். பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் என்னும் உலகளாவிய கொள்கையை அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய ஓர் அமைப்பு குடும்பம் என இந்தியாவின் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகம் கூறுகிறது.

“சமூகத்தின் முன்னேற்றத்திற்குக் குடும்ப வாழ்க்கையை வலுப்படுத்துவது அவசியம்,” என பொது விவகார அலுவலகத்தின் நிலாக்ஷி ராஜ்கோவா பஹாய் செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த சொல்லாடலுக்கு பொருத்தமானவை என அலுவலகம் பார்க்கும் நுண்ணறிவு மற்றும் அனுபவங்கள் பற்றி கூறுகிறார். .

பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் என்ற ஆன்மீகக் கோட்பாட்டின் அடிப்படையில் குடும்பம் எவ்வாறு மறுபரிசீலனை செய்ய முடியும் என்பதை ஆராய்வதற்காக சமீபத்தில் இந்தியாவில் பஹாய் பொது விவகார அலுவலகம் நடத்திய ஆய்வரங்கில் குழு உறுப்பினர்களை இங்கே காணலாம்.

சமத்துவத்தை வளர்ப்பதற்கான ஒரு சமூகத் தளமாக குடும்பத்தை மறுபரிசீலனை செய்தல்

திருமதி. ராஜ்கோவா, இந்தச் சொற்பொழிவில் சமீப வருடங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள உரையாடல்களுள் சில, பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பவர்கள் எனும் முறையில் ஆண்களின் பங்கு குறித்தது என விளக்குகிறார்.

“இந்த உரையாடல்கள் ஓர் அடிப்படை சமூக ஸ்தாபனமாக அடிக்கடி குடும்பத்தையே சுற்றிவருகின்றன. அங்கு பெண்கள் மற்றும் ஆண்களின் பங்கு பற்றிய கருத்துகள் கற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன,” என அவர் கூறுகிறார்.

செய்திச் சேவையுடன் பேசிய பொது விவகார அலுவலகத்தின் மற்றொரு உறுப்பினரான கார்மல் திரிப்பதி, உலகில் உள்ள பல ஸ்தாபனங்களைப் போலவே குடும்பம் என்னும் ஸ்தாபனமும் நெருக்கடி நிலையில் உள்ளது என கூறுகிறார். “ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய மரபுவழி கருத்துக்கள் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார மாற்றத்தின் சக்திகளால் அதிகரித்த முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வழக்கற்றுப் போகின்றன,” என அவர் கூறுகிறார்.

திருமதி. ராஜ்கோவா மேலும் கூறுகையில், நீடித்த மாற்றத்திற்கு குடும்பத்திற்குள் ஊக்குவிக்கப்படும் கண்ணோட்டங்கள் மற்றும் நடத்தைகளில் மாற்றங்கள் மட்டும் தேவைப்படாது, பொது வாழ்வில் பெண்களின் முழுமையான மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பைத் தடுக்கும் சமூகத்தின் கட்டமைப்பை மாற்றுவதற்கான முறையான மற்றும் நீடித்த முயற்சிகளும் தேவைப்படும்.

பெருந்தொற்றின் போது, இந்தியா முழுவதும் பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பல குடும்பங்கள் கலந்தாலோசனை, பிரார்த்தனை மற்றும் அண்டை குடும்பங்களுடன் ஆழ்ந்த விவாதம் செய்வதற்கான வழிகளைக் கண்டறிந்து, தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பார்த்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

“பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் என்பது வெறுமனே அடையப்பட வேண்டிய ஒரு குறிக்கோள் அல்ல, மாறாக மனித இயல்பைப் பற்றிய உண்மையை ஒப்புக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்னும் திடநம்பிக்கையில் குடும்பத்திலும் வாழ்க்கையின் பிற துறைகளிலும் ஏற்படும் மாற்றங்கள் அடித்தளமாக இருக்க வேண்டும்.

“ஆன்மாவுக்கு பாலினம் இல்லை. நம்மை மனிதர்களாக்குவதன் சாராம்சம் ‘ஆண்’ அல்லது ‘பெண்’ அல்ல,” என அவர் கூறுகிறார்.

கல்வி மூலம் குழந்தைகளின் தார்மீக அடித்தளத்தை வலுப்படுத்தல்

இந்தியாவில் பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் பெறப்பட்ட அனுபவங்களிலின் நுண்ணறிவுகள், குழந்தைகளின் தார்மீக அடித்தளங்களை வலுப்படுத்துவதற்குக் குடும்பச் சூழல் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது என கூறுகின்றன.

“வாய்மை, கருணை, தயை, தன்னலமின்மை மற்றும் நீதி போன்ற ஆன்மீக குணங்களைக் குழந்தைகள் வளர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக குடும்பம் உள்ளது” என்கிறார் திருமதி ராஜ்கோவா. “ஆனால் அதே நேரத்தில், பிற்காலத்தில் இளைஞர்களாகவும் பெரியவர்களாகவும் அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களின் சமூக பரஸ்பர தொடர்புகள் மீது செல்வாக்குச் செலுத்தும் தீங்கு விளைவிக்கும் அணுகுமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் குடும்பத்திலேயே அவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்.”

திருமதி. ராஜ்கோவா, குழந்தைகளில்தான் எதிர்காலத்திற்கான உறுதிமொழி இருப்பதாகவும், அதனால்தான் குழந்தைகளுக்கான பஹாய் கல்வித் திட்டங்கள் அத்தகைய ஆன்மீகப் பண்புகளைப் பெறுவதை வலியுறுத்துகின்றன எனவும் விளக்குகிறார்.

மானிடத்தின் இன்றியமையாத ஒருமைப்பாடு, சமூகத்திற்கான சேவை, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் அவர்களின் உடனடி மற்றும் விரிவான குடும்ப உறுப்பினர்களுடனும் தங்கள் சுற்றுப்புறங்களிலும் பள்ளிகளிலும் பழகக்கூடிய பிற நபர்களுடனான அவர்களின் அனைத்து தொடர்புகளிலும் கலந்தாலோசனை போன்ற கொள்கைகளைப் பயன்படுத்துவதற்கான திறனையும் இந்தக் கல்வித் திட்டங்கள் பேணுகின்றன என அவர் கூறுகிறார். .

திருமதி ராஜ்கோவா தமது கருத்துக்களில், சமத்துவ கலாச்சாரத்தை வளர்ப்பதில், குழந்தைகளுக்கு மட்டுமல்ல, முழு குடும்பத்திற்கும் தார்மீக கல்வியின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறார். சமீபத்தில் பொது விவகார அலுவலகம் நடத்திய ஆய்வரங்கில் ஒரு பங்கேற்பாளர் தெரிவித்த கருத்துக்களை அவர் குறிப்பிடுகிறார். சமூக நீதியை ஊக்குவிக்கும் ஒரு பொது சமூக அமைப்பான ‘யூத் கி ஆவாஸின்’ (Youth ki Awaaz) நிறுவனரான அன்ஷுல் திவாரி, பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலங்களில் வகுப்புகள் இணையத்திற்கு நகர்ந்தபோது வெளிச்சத்திற்கு வந்த பெண்கள் கல்வியின் டிஜிட்டல் (கணிணி) இடைவெளி பற்றி விவரித்தார்.

பஹாய் கல்வித் திட்டங்களின் பங்கேற்பாளர்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மானிடத்தின் இன்றியமையாத ஒருமைப்பாடு, சமூக சேவை, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் போன்ற கொள்கைகளை, அத்துடன் அவர்கள் தங்கள் அண்டைப்புறங்களிலும் பள்ளிகளிலும் பழகக்கூடிய பிற நபர்கள், நீட்டிக்கப்பட்ட குடும்பங்கள், பிற சமூக உறுப்பினர்கள் ஆகியோருடனான அவர்களின் அனைத்து தொடர்புகளிலும் கலந்தாலோசனையை பயன்படுத்துவதற்கான திறனை வளர்க்கிறார்கள்.

ஒரே ஒரு டிஜிட்டல் சாதனம் மட்டுமே இருக்கும் பல வீடுகளில், பெண்கள் அச்சாதனத்தைப் பயன்படுத்துவது ரேஷன் செய்யப்பட்டது. அதே சமயம் உடன்பிறந்த ஆண்கள் அவற்றை அணுகுவதற்குத் தடை இல்லை என திரு. திவாரி விளக்கினார். “நாங்கள் நாடு முழுவதும் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட 10,000 இளைஞர்களிடம் ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டோம்,” என அவர் கூறினார். பலதரப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்களிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுக்கெடுப்பின் முழு முடிவுகளும் ஒத்த சீருடன் இருந்தன: 70% இளம் பெண்கள் தங்கள் சகோதரர்கள் தொடர்பாக தொலைபேசிகள் மற்றும் கணினிகளில் சமமற்ற அணுகல் குறித்து அறிவித்தனர்.

கலந்தாலோசனை மூலம் நியாயமான உறவுகளை ஏற்படுத்துதல்

சமூக முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான அடித்தட்டில் உள்ள இந்திய பஹாய்களின் முயற்சிகளிலிருந்து பெறப்பட்ட மற்றொரு நுண்ணறிவு, ஒரு குடும்பம் எந்த அளவுக்கு கலந்தாலோசனைக் கொள்கையைப் பயன்படுத்துகிறதோ, அவ்வளவு அதிகமாக உள்ள உறவுகள் குடும்பம் சமமாக மாறும், என பஹாய் பொது விவகார அலுவலகத்தின் உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

திருமதி ராஜ்கோவா கூறுகிறார்: “குடும்பத்தில் முடிவெடுப்பது தன்னிச்சையான மற்றும் சர்வாதிகார அதிகாரத்தின் விளைவாக இருக்கக்கூடாது எனும் போது, கூட்டு முடிவுகளை எடுப்பதற்குக் குடும்ப உறுப்பினர்கள் அன்பாகவும், அக்கறையுடனும், வெளிப்படையாகவும் கலந்தாலோசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.”

திருமதி திரிபாதி, பொது விவகார அலுவலகம் நடத்திய கருத்தரங்கை நினைவுகூர்ந்தார். அதில் கலந்தாலோசனைக்கு மிகப்பெரிய தடையாக ஆண் ஆதிக்கத்தின் கலாச்சார விதிமுறைகள் அடையாளம் காணப்பட்டன.

பஹாய் பொது விவகார அலுவலகம் சமீபத்தில் நடத்திய ஆய்வரங்கில் ஆராயப்பட்ட சில கருப்பொருள்கள் பின்வருமாறு: பேணி வளர்த்தல் மற்றும் கவனிப்பு வழங்குதல் மற்றும் கலந்தாலோசனையின் செயல்பாடுகளை முடிவெடுப்பதற்கான அடிப்படையாகப் பகிர்ந்துகொள்வது. மேல் வலது: பொது விவகார அலுவலகத்தின் கார்மல் திரிபாதி. கீழே: யூத் கி ஆவாஸின் நிறுவனர் அன்ஷுல் திவாரி.

திருமதி திரிபாதி மேலும் கூறுகையில், குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் திறந்த மனதுடனும் தொடர்பு கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும், கலந்தாலோசனைக்குத் தேவையான அன்பு மற்றும் நல்லிணக்கம், பணிவு, மரியாதை, பொறுமை, நிதானம் மற்றும் உண்மையைத் தேடுவதற்கான ஆவல் போன்ற ஆன்மீக குணங்களின் முழு அளவின் பயனைப் பெற வேண்டும்.

சமாதானம் சமத்துவத்தைச் சார்ந்துள்ளது

இந்தியாவில் உள்ள பஹாய் பொது விவகார அலுவலகத்தின் உறுப்பினர்கள் கூறுவதாவது: சமத்துவத்தால் வகைப்படுத்தப்படும் ஒரு குடும்பம் ஆதிக்கம் மற்றும் சமத்துவமின்மையை வலுப்படுத்தும் பழங்கால மாதிரிகளைக் கடன் வாங்குவதால் உருவாகாது என்பது தெள்ளத்தெளிவாகும்.

திருமதி. ராஜ்கோவா கூறுகையில், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளில் உலகில் அமைதி என்பது பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தின் ஆன்மீகக் கொள்கையை உணர்ந்துகொள்வதைச் சார்ந்துள்ளது என்பது ஒரு முக்கிய கருத்தாகும். இந்தக் கட்டத்தில், 1919-ஆம் ஆண்டு ‘த ஹேக்கில்’ உள்ள நீடித்த அமைதிக்கான மத்திய அமைப்பிற்கு ‘அப்துல்-பஹா எழுதிய செய்தியிலிருந்து அவர் மேற்கோள் காட்டுகிறார். இது ஆண்களையும் பெண்களையும் ஒரு பறவையின் இரண்டு இறக்கைகளுக்கு ஒப்பிடுகிறது: “இரண்டு இறக்கைகளும் சமமாக இருக்கும் வரைதான் பறவை பறக்க முடியும்,” என அப்துல் பஹா எழுதுகிறார். “ஓர் இறக்கை பலவீனமாக இருந்தால், பறத்தல் சாத்தியமற்றது. நற்பண்புகள் மற்றும் பரிபூரணங்களைப் பெறுவதில் பெண்களின் உலகம் ஆண்களின் உலகத்திற்கு சமமாக மாறும் வரை, எவ்வாறு இருக்க வேண்டுமோ அத்தகைய வெற்றியையும் செழிப்பும் அடையப்பட முடியாது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1597/