ஐக்கிய இராஜ்யம்: எவ்வாறு மெய்நிலை குறித்த கண்பார்வையை பரபரப்பான இதழியல் மறைக்கின்றது


இணையத்தில் கதையைப் படிக்க அல்லது கூடுதல் புகைப்படங்களைக் காண, news.bahai.org ஐப் பார்வையிடவும்.

இலண்டன், 29 ஜூலை 2022, (BWNS) – குறிப்பாக அடிக்கடி பரபரப்பான ஒரு ஊடக சூழலில் புரிதல் மற்றும் உரையாடலை ஊக்குவிப்பதில் பத்திரிகையாளர்களின் பங்கு என்ன?

முன்னாள் பிபிசி நிருபரும் தி கார்டியன் செய்தித்தாளின் எழுத்தாளருமான ஐக்கிய இராஜ்யத்தின் இரண்டு அனுபவமிக்க பத்திரிகையாளர்களும், அந்த நாட்டின் பஹாய் பொது விவகாரங்களுக்கான அலுவலகத்தின் உறுப்பினர்களும், அந்த அலுவலகத்தால் தயாரிக்கப்பட்ட சமீபத்திய வலையொலியில் (podcast)நல்நோக்குடன்: உண்மையும் ஊடகத்தில் தரநிலைகளும்’ என்னும் தலைப்பில் ஆராய்ந்த கேள்விகளில் இதுவும் ஒன்றாகும்.

“எழுத்தாளர்கள் தப்பெண்ணத்திலிருந்து விடுபட்டவர்களாகவும், நியாயமான மனப்பான்மை கொண்டவர்களாகவும், பிரச்சினைகளை நீதி உணர்வுடன் பார்க்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்” என பொது விவகார அலுவலகத்தின் கார்மல் கலானி கூறினார்.

மிஸ். கலானி, பொது நனவை உயர்த்துவதில் செய்தி ஊடகத்தின் ஆற்றலை விவரிக்க பஹாய் போதனைகளில் இருந்து ஓர் ஒப்புமையைக் குறிப்பிட்டு பின்வருமாறு கூறினார்: “செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற வடிவிலான ஊடகங்கள் “உலகின் கண்ணாடி” போன்றவை. அவை ‘செவிப்புலன், பார்வை, பேச்சு ஆகியன உள்ளன’.

இதன் உள்குறிப்புகளில் ஒன்று, பத்திரிகையாளர்களின் கட்டுரைகள் மற்றும் அவர்களின் பிற வெளிப்பாடு வடிவங்கள் நம் அனைவரிலும் நமது சக மனிதர்களுடன் ஒருமை உணர்வைத் தூண்டும் திறனைக் கொண்டுள்ளன என அவர் கூறினார்.

“பத்திரிகையாளர்கள் ஒரு கதையைச் சொல்லும் போது, அவர்கள் நாம் வாழும் உலகத்தை வடிவமைக்கிறார்கள், நாம் பார்ப்பதைச் சாத்தியம் உடையவையாக வடிவமைக்கிறார்கள்” என திருமதி கலானி கூறினார், ஊடகங்கள் “ஒற்றுமையையும் அமைதியையும் கொண்டு வருவதற்கான மக்களின் மகத்தான திறனை” விடுவிக்க முடியும் என விளக்கினார்.

இந்த மகத்தான ஆற்றல் இருந்தபோதிலும், சில நடைமுறைகள் பத்திரிகையாளர்கள் மீது துன்பத்தில் ஆழ்ந்துள்ளோரை ஒரு நேர்காணலுக்கு எதிர்பாராமல் அழைத்தல் போன்ற பரபரப்பான அறிக்கைகளை தயாரிக்க அழுத்தம் கொடுக்கின்றன.

“இதழியலில் ‘கதவைத் தட்டுதல்’ என அழைக்கப்படும் ஒன்று உள்ளது. இதன் மூலம் நீங்கள் சென்று ஒரு கதையின் மத்தியில் இருக்கும் ஒருவருடைய கதவைத் தட்ட வேண்டும்; இது பொதுவாக ஒருவரின் சொந்தத் தவறாக இல்லாமல் செய்தல்… மற்றும் அவர்களின் வீட்டு வாசலில் நின்று அவர்களின் கருத்தைக் கேட்பது” என முன்னாள் பிபிசி நிருபரும் பிரிட்டனில் உள்ள இயேசு சபைக்கான தகவல்தொடர்புத் தலைவருமான ஜான் மெக்மானஸ் கூறினார்.

“இது முற்றிலும் நேரத்தையும் ஒரு செய்திக் கதையையும் நிரப்புவதற்காகத்தான்,” என திரு. மெக்மானஸ் தொடர்ந்தார், இந்த அணுகுமுறை பொதுவாக எந்தப் புதிய பொருண்மைகளையும் தராது என அவர் விளக்கினார். அதற்கு பதிலாக, இது பார்வையாளர்களுக்கு அவர்களின் வியப்பூட்டும் பசியைப் பூர்த்தி செய்கின்றது, மற்றும் இது உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பக் கூடியது.

பல பத்திரிகையாளர்கள் தங்கள் துறையில் பரபரப்பான செய்தி அளிப்பிற்கு வழிவகுக்கும் நடைமுறைகளினால் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர் என திரு. மெக்மானஸ் மேலும் கூறினார். அறிக்கையிடும் போது பச்சாத்தாபம் மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். “இந்த எல்லா கதைகளின் இதயத்திலும் உணர்வுகளுடைய மனிதர்கள் உள்ளனர். … அவர்கள் அனைவருக்கும் குடும்பம் உள்ளது. எனவே நான் எப்போதும் அதை நினைவில் கொள்ள முயல்கிறேன், இது என் சிந்தனையையும் செயல்களையும் மிதப்படுத்துகிறது.”

‘தி கார்டியனின்’ நிருபரான ரெமோனா அலி பின்வருமாறு கூறினார்: “நீங்கள் யாரை நேர்காணல் செய்தாலும், அவர்களின்பால் உங்களுக்கு இந்த பொறுப்புணர்ச்சி உள்ளது. … நான் உண்மையில் அந்த பாதுகாப்பை பராமரிக்க கடினமாக முயல்கிறேன். நான் [நேர்காணல் செய்பவரிடம்] ‘நீங்கள் பின்னர் கட்டுரையைப் பார்க்க முடியும், இதனால் நீங்கள் அக்கட்டுரை உங்களுக்கு ஏற்புடையதாக இருந்திடக் காணலாம்’ என கூறுவேன்.

சமூக, அரசியல், பொருளாதார, மற்றும் மத பிளவுகளை வலுப்படுத்தி, பரபரப்பான செய்தி கவரேஜிற்கு வழிவகுக்கும் பாரபட்சங்கள் மற்றும் தவறான இருமைகள் எவ்வாறு பன்முகப் பிரச்சினைகளை  எளிமையான பிரதிநிதித்துவங்களாக தரங்குறைக்க முடியும் என்பதையும் விவாதங்கள் ஆராய்ந்தன.

நோக்க இலக்கை பராமரிப்பதற்கான பத்திரிகையாளர்களின் பொறுப்பு பற்றி பேசிய திரு. மெக்மானஸ் பின்வருமாறு கூறினார்: “விஷயங்கள் கருப்பும் வெள்ளையுமாக இல்லை. உங்கள் மனதில் இரண்டு வெவ்வேறு கண்ணோட்டங்களை நீங்கள் வைத்திருக்கலாம், அவை இரண்டுமே சரியானவை. ஏனெனில், மனித வாழ்க்கை எல்லையற்ற மாறுபாடு உடையது மற்றும் பலக்கியம் (complex) உடையது என்பதை நாம் அறிவோம்.”

இந்த விவாதத்தின் மீது பிரதிபலித்து, பஹாய் பொது விவகாரங்களுக்கான அலுவலகத்தின் நேன்சி வாரன், இந்த ‘போட்காஸ்ட்’ தொடர் சமூகத்தில் ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான பங்கு குறித்த விவாதத்திற்குப் பங்களிப்பதற்கான அலுவலகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என விளக்கினார்.

“மக்கள் மிக உயர்ந்த இலட்சியங்களுடன் தங்கள் பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். ஆனால், இறுதியில் அவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ற ஒரு வழியில் எழுதுவது கடினமாகின்றது” என அவர் கூறுகிறார்.

“அலுவலகத்தால் வழங்கப்படும் மன்றங்கள்—அவை பாட்காஸ்ட்கள், இணைய விவாதங்கள், அல்லது தனிப்பட்ட கூட்டங்களாக இருப்பினும்—பத்திரிகையாளர்கள், தங்கள் தார்மீக நம்பிக்கைகளுடன் எதிரொலிக்கும் ஆன்மீக கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் துறையில் நிலவும் பிரச்சினைகளை ஆராய ஓர் இடத்தை வழங்குகின்றன.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1605/

எகிப்து: பஹாய் சமூகம் குறித்த குறும்படம் சகவாழ்வுக்கான முயல்வுகளை வலியுறுத்துகின்றது


19 ஜூலை 2022

கெய்ரோ, 19 ஜூலை 2022, (BWNS) – எகிப்தைத் தளமாகக் கொண்ட இணையதள செய்தி சேவையான எல்சாஹா தயாரித்த “எகிப்தில் ஒரு பஹாய்: மூன்று தலைமுறைகளின் கதை” என்னும் குறும்படம், அந்த நாட்டில் பஹாய்களின் அனுபவம் பற்றிய, அந்த நாட்டின் சமூகம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதன் தொடக்கம் முதல் இன்று வரை, மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கான அதன் முயற்சிகள் ஆகியன குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது.

சமூக ஊடகங்களில் ஏறக்குறைய 2 மில்லியன் முறை பார்க்கப்பட்ட ஆறு நிமிடத் திரைப்படம், சில சிவில் உரிமைகளைப் பெறுவதில் எகிப்தின் பஹாய்கள் தங்கள் பயணத்தில் எதிர்கொள்ளும் வரலாற்றுச் சவால்கள் சிலவற்றையும் ஆராய்கிறது.

எகிப்தின் பஹாய் தேசிய ஆன்மீகச் சபையின் உறுப்பினரான பஹா எஷாக் தவ்ஃபீக் கதையை விவரிப்பதுடன், அதிக அமைதியான சமுதாயத்தைப் பேணுவதற்கான அனைத்து எகிப்திய பஹாய்களின் விருப்பத்தையும் எடுத்துக்காட்டுகிறார்.

“நமது சமூகம் சகவாழ்வைப் பற்றிய ஒரு சிறந்த புரிதலையும், அன்பைப் பற்றிய சிறந்த புரிதலையும், மக்கள் ஒருவர் மற்றவருடன் அமைதியான நல்லிணக்கத்துடன் வாழ முடியும் என்னும் சிறந்த புரிதலையும் அடையும் என்பதே எனது உணர்வு” என்கிறார் திரு.தௌஃபீக்.

எகிப்தின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ஹாடெம் எல்-ஹேடி, எகிப்து பஹாய்களின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய பல ஆக்கபூர்வமான உரையாடல்களை இந்த ஆவணப்படம் ஊக்குவித்துள்ளது, இதன் மையத்தில் அவர்களின் சமூகத்திற்கான் அவர்களின் தன்னலமற்ற சேவை உள்ளது, என கூறுகிறார்.

எகிப்தின் பஹாய்கள் தங்கள் சக குடிமக்களுக்கு 2011 ஆம் ஆண்டு வழங்கிய திறந்த கடிதத்தின் (அரபு மொழியில்) பல உணர்வுகளை, மனிதகுலத்தின் ஒருமைப்பாடு உட்பட அத்தியாவசிய ஆன்மீகக் கொள்கைகளை இந்த ஆவணப்படம் எதிரொலிக்கிறது என திரு. எல்-ஹேடி விளக்குகிறார். .

“மானிடத்தின் ஒருமைப்பாட்டை அங்கீகரிப்பது முதிர்ச்சியடைந்த சமூகத்தின் அடையாளம் என்பதை அந்த திறந்த கடிதம் விளக்குகிறது. இந்தக் கொள்கையே எகிப்து நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத பல முக்கியக் கொள்கைகளின் அடித்தளமாகும், அதாவது ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவம், கலந்தாலோசனை, சர்வலோகக் கல்வி மற்றும் அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம், ”என அவர் கூறுகிறார்.

இந்த கொள்கைகள் எகிப்து நாட்டு பஹாய்களின் முன்முயற்சிகளுக்கு அடிப்படையாக அமைகின்றன என திரு. எல்-ஹேடி விளக்குகிறார், அவை அடித்தட்டில் சமூக நிர்மாணிப்பு முயற்சிகள் அல்லது தேசிய மன்றங்களில் பல்வேறு சhttps://news.bahai.org/story/1604/மூகப் பிரச்சினைகளை யோசிப்பதற்குப் பங்களிக்கும் முயற்சிகள்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1604/

BIC நியூ யார்க்: 44 இரானிய பஹாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்: மனித உரிமைகளின் முன்னணிப் பிரமுகர் கூறுகிறார், நிலைமை “மோசமாகி வருகிறது.


BIC நியூயார்க், 11 ஜூலை 2022, (BWNS) – சிறுபான்மை பஹாய் சமயத்தினரைத் துன்புறுத்துவதற்கான ஈரானிய அரசாங்கத்தின் திட்டமிட்ட பிரச்சாரம் கடந்த வாரம் நாடு முழுவதும் குறைந்தது 18 பஹாய் குடிமக்களைக் கைது செய்தல், நீதிமன்ற விசாரணை அல்லது சிறையில் அடைத்தல் ஆகியவற்றின் மூலம் மீண்டும் முடுக்கிவிடப்பட்டது. இது ஜூன் மாதத்திலிருந்து மொத்தம் 44 பேரை உள்ளடக்கியுள்ளது. இதற்கிடையில், நூற்றுக்கணக்கானவர்கள் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட அல்லது சிறை செல்வதற்குக் காத்திருக்கின்றனர்.

பஹாய் சர்வதேச சமூகம், சமீபத்திய வாரங்களில் அதிகரித்து வரும் கைதுகள் மற்றும் சிறைப்படுத்துதல்களில் ஒரு கவலையளிக்கும் புதிய வளர்ச்சி காணப்படுவதாக நம்புகிறது மற்றும் பஹாய் சமூகத்தை சிறையில் அடைக்கும் அல்லது துன்புறுத்துவதற்கான தங்கள் திட்டங்களை அதிகாரிகள் அதிகரிக்கும் முறையில் செயல்படுத்துகின்றனர் என்பதையும் இது காட்டுகிறது.

கடந்த வாரம் ஷிராஸ் நகரில் மூன்று பெண்கள் புதிதாக கைது செய்யப்பட்டனர். இதில் இருபது வயதுகளின் ஆரம்பத்தில் இருவர், மற்றும் 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயும் அடங்குவர். இவர்கள் அனைவரும் ஷிராஸ் புலனாய்வு அலுவலகத்தின் தடுப்பு மையத்தில் எந்தக் குற்றச்சாட்டும் இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஈரானின் பல்கலைக்கழக தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 2019-இல் இளம் பெண்களில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் நுழைய முயன்றார். அப்போது அவரிடம் ஒரு “முழுமையற்ற கோப்பு” இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்–விண்ணப்பித்து பல்கலைக்கழகத்தில் நுழைய மறுக்கப்பட்ட பஹாய்கள் மத்தியில் இது ஒரு பொதுவான அனுபவமாகும். 1983 கலாச்சாரப் புரட்சிக்குப் பின்னர் ஈரானில் பஹாய்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்துள்ளது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிற ஏழு பஹாய்கள் அனைவரும், கடந்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்பட்டு, முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

தெற்கு ஈரானில் உள்ள பன்டார்-இ-லெங்கேவில், அதிகாரிகள் பஹாய்களுக்குச் சொந்தமான பட்டறையை மூடுமாறு கட்டாயப்படுத்தினர் மற்றும் வேறு இரண்டு மூக்குக்கண்ணாடி வணிகங்களுக்கு வணிக உரிமங்களை மறுத்தனர். இந்தக் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் மற்றும் சமூக உறுப்பினர்களின் பொருளாதார வாய்ப்பு மேலும் நெருக்கதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஈரான் பகுதிகளில் உள்ள சனந்தாஜ் மற்றும் பல சிறிய நகரங்களில், பஹாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் அவர்களின் சமயம் காரணமாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.

“ஈரானில் உள்ள பஹாய்களுக்குப் புதிய கைதுகள், சிறைக்கான அழைப்பாணைகள் மற்றும் ஈரானிய அரசாங்கத்தின் பிற துன்புறுத்தல்கள் இல்லாத ஒரு வாரம் கிடையாது” என ஐக்கிய நாடுகள் சபைக்கான பஹாய் சர்வதேச சமூகத்தின் முதன்மைப் பிரதிநிதி பானி டுகல் கூறினார். “ஈரானில் உள்ள பஹாய்கள் பல வருடங்களில் காணப்படாத மிக மோசமான ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். நாங்கள் எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றோம்.”

“முஸ்லிம் சமூகத்தில் அறிவுசார் மற்றும் கருத்தியல் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக” ஒன்றுகூடுதல் மற்றும் கூட்டுச்சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் ஷிராஸில் 26 பஹாய்களுக்கு எதிராக சிறை மற்றும் நாடுகடத்தல் தண்டனைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சமீபத்திய நடவடிக்கைகள் வந்துள்ளன. உண்மையில், உள்ளூர் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் அம்மண்டலத்தின் தண்ணீர் நெருக்கடியின் தீவிரத்தை மதிப்பிடுவதற்கும் பஹாய்கள் ஷிராஸ் நகரில் அங்காங்கே கூடிவருகின்றனர். இந்தத் தண்டனைகளின் விளைவாக பல இளம் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஷிராஸில், வேறு 40 பஹாய்கள் ஒரு புரட்சி நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டனர், அங்கு ஓர் அதிகாரி அந்தச் சமூகத்தை நகரத்திலிருந்து ‘வேருடன் பிடுங்குவோம்’ என அச்சுறுத்தினார்.

பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான மாஸியார் பஹாரி, 2020 எல்லி வீசல் விருது மற்றும் 2009 Oxfam Novib/PEN விருதின் கருத்துச் சுதந்திரத்துக்கான விருது மற்றும் ஈரானில் பஹாய்களைப் பற்றி பல திரைப்படங்களைத் தயாரித்தவர். இவர் நடந்து வரும் கைதுகள் ஈரானிய அரசாங்கம் அந்நாட்டில் பஹாய் சமூகத்தை “புதைக்க” முயல்வதை காட்டுகின்றது என கூறினார்.

“உலகம் உங்களை மறந்துவிட வேண்டும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை இழக்கச் செய்யவதும் ஈரானிய அதிகாரிகளின் விருப்பம். அதனால்தான் உங்களை சிறையில் அடைக்கிறார்கள்” என பஹாரி கூறினார். “கடந்த 40 ஆண்டுகளாக ஈரானில் உள்ள ஆயிரக்கணக்கான பஹாய்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது பஹாய்களை புதைகுழியில் தள்ளுவதற்கான ஈரான் நாட்டின் திட்டத்திற்குச் சாட்சியமளிக்கிறது. தற்போது இந்த நிலைமை தீவிரத்துடன் மோசமாகி வருவதாகத் தெரிகிறது. சர்வதேச சமூகம் ஈரானிய அரசாங்கத்திற்கு இதுகுறித்து அழுத்தம் கொடுக்கும் என நான் நம்புகிறேன்.

இந்த மாதம் பஹாய்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

28 ஜூன் 2022 அன்று, ஷிராஸில் வசிக்கும் பஹாய் திருமதி ஜிலா ஷரஃபி நஸ்ரபாடி, பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார், அவர்கள் அவரது வீட்டைச் சோதனை செய்து ஏராளமான பொருட்களைப் பறிமுதல் செய்தனர், மேலும் ஷிராஸ் புலனாய்வு அலுவலகத்தின் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். திருமதி நஸ்ரபாடிக்கு வயது 41, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி, 20 வயதிற்குட்பட்ட திருமதி ஷகாயேக் கானேஜாரின் மற்றும் திருமதி நெகர் இகானி இருவரும் ஷிராஸில் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தெரியவில்லை மற்றும் அவர்கள் ஷிராஸ் புலனாய்வு அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

20 ஜூன் 2022 அன்று, திரு. மொயின் மிசாகி, திரு. மெஹ்ரான் மொசல்லா நெஜாத், மற்றும் திருமதி. நெகரே காதேரி மற்றும் திருமதி. ஹயீதே ஃபூரூட்டன் ஆகியோர் ஷிராஸில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டனர்.

ஜூன் 19, 2022 அன்று, திரு. சைத் அபேடி, திரு. வஹித் டானா, மற்றும் முதல் பெயர் தெரியாத திரு. சலேஹி ஆகியோர் ஷிராஸில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டனர்.

18 ஜூன் 2022 அன்று, தெஹ்ரானைச் சேர்ந்த திரு. ஃபார்டின் நடாபியன், அவரது தண்டனையை அனுபவிக்க எவின் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

17 ஜூன் 2022 அன்று, திருமதி ஹைதே ராம் தனது தண்டனையை அனுபவிக்க ஷிராஸில் உள்ள அடிலாபாத் சிறைக்கு மாற்றப்பட்டார். மற்ற ஐந்து பஹாய்கள், திரு. போர்ஹான் எஸ்மாயிலி, திருமதி. மரியம் பஷீர், திருமதி. ஃபரானாக் ஷேக்கி, திருமதி. மினு பஷீர் மற்றும் திருமதி. டோர்னா இஸ்மாயிலி ஆகியோர் திருமதி ராம் மீதான வழக்குடன் சேர்த்து இதற்கு முன்னர் மொத்தம் 64 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர்களின் தண்டனையை அனுபவிக்க அழைக்கப்பட்டனர். இந்த வழக்குகள் தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கின்றன.

15 ஜூன் 2022 அன்று, குழந்தைக் கல்வியில் நிபுணரான மிஸ் சமின் எஹ்சானி கைது செய்யப்பட்டு, அவரது தண்டனையை அனுபவிக்க எவின் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஈரானின் மிகப்பெரிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரான பஹாய்கள், 1979 இஸ்லாமியப் புரட்சியிலிருந்து ஈரானில் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளனர். 1991 இல் ஈரானின் மூத்த தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் இரகசிய குறிப்பேடு, பஹாய் சமூகத்தின் “முன்னேற்றம் மற்றும் மேம்பாடு” அவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து தடைசெய்து, வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான அவர்களின் திறனை சீர்குலைப்பதன் மூலம் மற்றும் பிற பாரபட்சமான வழிமுறைகள் மூலம் தடுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1603/

BIC ஜெனீவா: தொழில்நுட்பம், அரசாங்கம் மற்றும் பொதுமை சமூகத்தின் இணைவுடன் வெறுப்பூட்டும் பேச்சைக் கையாள்வது 


7 ஜூலை 2022

BIC ஜெனீவா, 7 ஜூலை 2022, (BWNS) – இணையத்தில் அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சுகள் அதிகரிப்பின் சவாலை எதிர்கொள்ள, தொழில்நுட்பத் துறை, அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு இடையே மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பஹாய் சர்வதேச சமூகம் (BIC) கூறுகிறது. . டிஜிட்டல் யுகத்தில் மனித உரிமைகள் பற்றிய வருடாந்திர சர்வதேச மன்றமான RightsCon உச்சமாநாட்டின் ஒரு பகுதியாக BIC-யின் ஜெனீவா அலுவலகம் நடத்திய சமீபத்திய குழு விவாதத்தின் கருப்பொருள் இதுவாகும்.

BIC மன்றமானது, மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், அஹ்மத் ஷஹீத், மெட்டா’வின் மேற்பார்வை வாரியத்தின் அறங்காவலர், கிறிஸ்டினா அரியாகா மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பாளரான தாரா செபெஹ்ரி ஃபார் ஆகியோரை ஈரானின் பஹாய்களுக்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரத்தின் பின்னணியில் இணையத்தில் வெறுப்பைக் கையாள்வதில் உள்ள சவால்களை ஆராய்வதற்காக ஒன்றிணைத்தது.

“வெறுப்பை உருவாக்கும் பேச்சு இறுதியில் வெறுப்புக் கலாச்சாரத்தை உருவாக்குகிறது, அங்கு குறிப்பிட்ட குழுக்கள் சமூகத்தின் முழு உறுப்பினர்களாக கருதப்படுவதில்லை, சமுதாய ஒற்றுமை அரிக்கப்பட்டு, பிளவு வேரூன்ற அனுமதிக்கப்படுகிறது, தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஆளும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான உறவுகளின் ஒவ்வோர் அம்சத்தையும் பாதிக்கிறது. ” என ஜெனிவா அலுவலகத்தின் பிரதிநிதி சிமின் ஃபஹடேஜ் கூறினார்.

முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை இயக்கும் தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா’வின் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் திருமதி. அர்ரியாகா, மனித உரிமைப் பணியாளர்களுக்குச் சமூக ஊடகம் ஒரு முக்கிய கருவியாக இருந்தாலும், ஈரான் பஹாய்கள் பிரச்சினையின் தொடர்பில் வெறுப்புப் பிரச்சாரத்தைப் பரப்பவும் அது பயன்படுத்தப்படலாம் என விளக்கினார்.

மெட்டா’வின் பதிலிறுப்பாக, உள்ளடக்கத்தை கண்காணிக்கும் ஒரு மேற்பார்வை வாரியத்தை நிறுவுவது மற்றும் உபகரணங்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பதற்கான கொள்கைகளை அமைப்பதாகும் என திருமதி அரியாகா கூறினார். இந்த வாரியம் இலக்குக் குழுக்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளது, இதனால் வெறுப்பூட்டும் பேச்சுகள் அடையாளப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், பங்கேற்பாளர்கள் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்துவது- நேரடி அல்லது அல்காரிதமாக இருப்பினும்-மிகவும் கடினம் என குறிப்பிட்டனர். “வெறுப்புறுத்தும் பேச்சுக்கு எங்கே வரம்பிடுவது என்பதை அறிவது எளிதல்ல” என திருமதி செபெஹ்ரி ஃபார் கூறினார்.

அவர் மேலும்: “(ஆங்கிலம் அல்லாத) மொழி உள்ளடக்கத்தை மட்டுமல்லாமல், சமூக சூழலையும் புரிந்துகொள்ள இணையதளங்கள் வள ஆதாரங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும்,” என்றார்.

ஒப்புக்கொண்ட திருமதி. அரியாகா, “பிரச்சினையின் அளவு… மனித உரிமைகள் சமூகம் தொழில்நுட்ப சமூகத்தில் [நேரம்] முதலீடு செய்வது எப்படி… வழிமுறைகள் மற்றும் அல்கோரிதங்களுடன் வேலை செய்து மனித உரிமைகள் பற்றிய அறிவை எவ்வாறு தொழில்நுட்பத் துறையில் புகுத்துவது என்பதைக் கற்றுக்கொள்வது அவசியம்,” என்றார்.

வெறுப்பூட்டும் பேச்சு மக்களிடையே பிளவை உருவாக்க முற்படுகிறது என்றாலும், BIC-யால் உருவாக்கப்பட்ட கருத்துக்களம் போன்ற விவாதங்களை கொள்கையின் நிலைக்கு உயர்த்துவதுடன், பிரச்சனைகளைச் சமாளிக்க பல்வேறு துறைகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்த இயலும் என குழுவாளர்கள் குறிப்பிட்டனர்.

வெறுப்பை உருவாக்கும் பேச்சுகளைத் தீர்ப்பதில் இணைய தளங்களும் ஊடக நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டியிருந்தாலும், தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் மட்டுமே சிக்கலை தீர்க்க முடியாது என்னும் கருத்தையும் விவாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

“பரஸ்பர மரியாதை உட்பட [ஒரு] முழு அளவிலான விதிமுறைகள், நடத்தை முறைகள், ஈடுபாட்டிற்கான வழிமுறைகள் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவை மக்கள் செழித்து வளரக்கூடிய சூழலை உருவாக்குகின்றன” என டாக்டர் ஷஹீத் கூறினார்.

மேலும் திருமதி அரியாகா: “நம்மிடம் அனைத்து சரியான வழிமுறைகள் மற்றும் சரியான சட்டங்கள் இருக்கலாம்… ஆனால் இறுதியில், நாம் எப்படி மனிதர்களாக நடந்து கொள்கிறோம் என்பது நமது கலாச்சாரத்தின் வாழ்கின்ற யதார்த்தத்துடன் தொடர்புடையது,” என்றார்.

மேலும் அவர்: “அதனால்தான் [உரையாடல்களை] உயர்வுறச் செய்யவும் மற்றவர்களை ஈடுபடுத்தவும் பஹாய்கள் என்ன செய்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. இறுதியில், இணையத்தில் நடப்பது நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பிரதிபலிக்கின்றது. நாம் நமது கலாச்சாரத்தை மாற்றினால் மட்டுமே அதைச் சரிசெய்ய முடியும்,” என்றார்.

நிகழ்வைப் பற்றிப் பிரதிபலிக்கும் வகையில், திருமதி. ஃபஹண்டேஜ்: “தொழில்நுட்பம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையுள்ள சமூக நடவடிக்கையாளரிடையே பகிரப்பட்ட பார்வையை வளர்ப்பதில் மன்றம் ஒரு முக்கியமான தருணத்தை பிரதிநிதிக்கின்கிறது. பல துறை உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் இதே கருப்பொருளில் எதிர்கால நிகழ்வுகளை நடத்த BIC திட்டமிட்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1602/

உலகளாவிய மாநாடுகள்: உலகளாவிய மாநாடுகள் நம்பிக்கையை உருவாக்கியுள்ளன என சமுதாயத் தலைவர்கள் கூறுகின்றனர்


1 ஜூலை 2022

பஹாய் உலக மையம், 1 ஜூலை 2022, (BWNS) —

உலகைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான மாநாடுகள் ஒரு முடிவுக்கு வரும் நிலையில், சமுகங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்களுக்கு ஆன்மீக கோட்பாடுகளைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களைப் பின்தொடர்வதில் எவ்வாறு இந்தத் துடிப்பான ஒன்றுகூடல்களில் நடைபெற்ற கலந்தாலோசனைகள் வெவ்வேறு கருத்துகளை இணக்கப்படுத்தின என்பதை எல்லா மக்கள் தரப்பினரும் காண்கின்றனர்.

அதிகாரிகள், பாரம்பரியத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் பங்கேற்பு இந்தக் கூட்டங்களின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும், இந்தக் கலந்துரையாடல்கள் அண்றடைப்புறங்களையும் கிராமங்களையும் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை உணர்வு, மனிதகுலத்தின் ஒருமைப்பாட்டைப் பற்றிய உயர்ந்த நனவுணர்வு் ஆகியவற்றை எவ்வாறு உட்செலுத்துகின்றன என்பது குறித்து தங்கள் மதிப்புணர்வை  வெளிப்படுத்தினர். 

அதிகாரிகள் மற்றும் தலைவர்கள்–இவர்களில் பலர் மாநாடுகளில் கலந்து கொண்டனர்–குரல் கொடுத்த சில நுண்ணறிவுகள் மற்றும் முன்னோக்குகளின் மாதிரிகள், செய்தி சேவையின் கடைசி அறிக்கைக்குப் பிறகு நடந்த பல மாநாடுகளின் ஒரு சிறிய பகுதியின் படங்கள் மற்றும் வீடியோக்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

கலந்தாலோசனை, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றின் ஆன்மீகக் கோட்பாடுகளின் மீது தலைவர்களின் பிரதிபலிப்பு

ருமேனியா

புக்கரெஸ்ட்டின் மேயர் நிக்குஸோர் டான் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றினார்: “ஒன்றாக விவாதிப்பதன் மூலமும் ஒழுங்கமைப்பதன் மூலமும் மட்டுமே நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகளையும் நமது வாழ்க்கையை எளிதாகவும் இனிமையாகவும் ஆக்கக்கூடிய தீர்வுகளையும் நாம் காண முடியும்” என கூறினார்.

ஜெர்மனி

மேய்ன்-கின்ஸிக்-கிரேய்ஸ் -இன் மாவட்ட ஆணையர், தோர்ஸ்டன் ஸ்டோல்ஸ் மாநாடுகள் “அமைதியான ஒத்துழைப்பை” ஊக்குவிப்பதாகக் கூறி, ஒரு வீடியோ செய்தியை அனுப்பினார். தொடர்ந்து அவர், “இந்த அடிப்படை யோசனை முன்னெப்போதையும் விட இப்போது முக்கியம் மிக்கது என நான் நம்புகிறேன், குறிப்பாக இன்று. இந்த மாநாடுகளின் போது நாம் ஒருவரையொருவர் அணுகும் விதம், நீங்கள் பேசுவது போல் ஒருவரிடம் ஒருவர் பேசும் விதம், தப்பெண்ணத்தை நீக்கி, ஒருவருக்கொருவர் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளும் விதம், ஆகியவற்றினால் ஒற்றுமை அடையப்படும். உங்கள் மாநாடுகளின் யோசனைக்கு ஏற்ப நாம் அனைவரும் குறிப்பாக ஒரு காரியத்தைச் செய்வோமாக: ஒவ்வொரு நாளும் உலகை இன்னும் கொஞ்சம் மேம்படுத்துவோம்.

மேயர் டோபியாஸ் வில்பிரான்ட், ஜெர்மனியின் எகல்ஸ்பாக் நகரில் நடந்த மாநாட்டில், “உலகின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுதல்” என்னும் மாநாட்டின் தலைப்பைக் குறிப்பிட்டு, “ஒருவருக்கொருவர் எதிராகவோ அல்லது குழப்பத்திலோ அல்ல, மாறாக ஒருவர் மற்றவருடன்” என்றார். அதுதான் இந்த மாநாட்டின் பொன்மொழி, மேலும்… இதுவே நமது காலத்திற்குச் சரியான பொன்மொழியாகவும் தெரிகிறது.

சாட்

மோயன்-சாரி மண்டலத்தின் தனமட்ஜி-இன் ஒரு மாநாட்டில் பாரம்பரிய தலைவர்களுள் ஒருவர், தனது சக தலைவர்கள் சார்பாக பேசுகையில், “இந்தக் கூட்டம் எங்கள் கண்களைத் திறந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் நாம் எப்படி ஆட்சி செய்தோம் என்பதைப் பற்றி சிந்தித்தோம், இப்போது, புதிய நுண்ணறிவுகளுடன், அடுத்த 100 ஆண்டுகளைப் பார்க்கிறோம். நமது பிரதேசங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிரச்சினைகளை ஒன்றாகச் சிந்திப்பதும், ஒன்றாகத் தீர்வு காண்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, இளைஞர்களுக்கான பஹாய் கல்வித் திட்டங்கள் எவ்வாறு அவர்களின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க அவர்களை ஊக்குவிக்கின்றன என்பதை நாங்கள் காண்கிறோம்.

சாட் நாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களுள் ஒருவரான மஹாமத் ஹசானே இவ்வாறு கூறினார்: “பல நெருக்கடிகள், வன்முறை இடையூறுகள் மற்றும் அநீதிகள் அனைத்தையும் நன்கு அறிந்த நாட்டில் அமைதியை நிர்மாணிப்பதில் இந்த மாநாடுகள் முக்கியப் பங்கு வகிக்கும்.”

இந்தியா

ஓர் உள்ளூர் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாட்டின் கிராமத் தலைவர் ஒருவர் கூறியதாவது: “பஹாய் கொள்கைகளான நல்லிணக்கம், அமைதி, ஒத்துழைப்பு, ஒற்றுமை ஆகியன கல்வியின் மூலமாக மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். … தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் தன்மைமாற்றத்திற்கு கல்வி எவ்வாறு பங்களிக்கிறது என்பதைக் காண பஹாய் கல்வித் திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. இந்த முயற்சிகள் எங்கள் கிராமத்தில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹிங்கன்வெதே என்னும் இடத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ராஜு அர்ஜுன் தத்ரக், குடும்பங்களில் மது அருந்துவதால் ஏற்படும் பேரழிவு விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தார். “இந்த மாநாடுகளை நாங்கள் தவறாமல் நடத்துவது மிகவும் முக்கியம், ஏனென்றால், நாங்கள் ஆராய்ந்து வரும் பஹாய் கொள்கைகள் எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய புதிய கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகின்றன.”

பிரேசில்

பஹியா மாநிலத்தில் உள்ள கிரிரி மக்களின் முன்னாள் தலைவரான செலியோ டி ஜீசஸ் டா சில்வா பின்வருமாறு குறிப்பிட்டார்: “பஹாய் கொள்கைகள் ஒற்றுமையை உருவாக்கி நமது பாரம்பரிய கலாச்சாரத்தை வலுப்படுத்துகின்றன. கிரிரி மக்கள் ஏற்கனவே ஒத்துழைப்பையும் ஒன்றாக வேலை செய்வதையும் திக்கிறார்கள் என்றாலும், பஹாய் போதனைகள் நமது கலாச்சாரத்தை இன்னும் மேலும் வலுப்படுத்த முடியும்.

காங்கோ ஜனநாயக குடியரசு

கசாய் மண்டலத்தில் உள்ள பாகுவா கெங்கே என்னும் இடத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், சுமார் 500 பெண் தலைவர்கள் ஒன்றிணைந்தனர். மாநாட்டைப் பற்றிய ஒரு கட்டுரையில், கனங்கா நகரத்தைச் சேர்ந்த ஒரு தூதுக்குழுவின் உறுப்பினரான க்ளெமெண்டைன் பியோங்கோ பின்வருமாறு கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது: “இந்த மாநாடு இந்த எல்லை நகரத்தில் இந்த மண்டலத்தில் அமைதியான சமூகங்கள்பாதுகாப்பிற்கான அணுகுமுறைகளில் பெண் தலைவர்களின் திறனை வலுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைதியை நிர்மாணிப்பதில் பெண்கள் மிக முக்கியப் பங்காற்றுகிறார்கள்—அவர்களின் பங்கேற்பு இன்றி மிகக் குறைவான விளைவுகளே இருக்கும்.”

அமெரிக்கா

வெர்ஜீனியாவின் பிரின்ஸ் எட்வர்ட் மாவட்டத்தின் மேற்பார்வையாளர் குழுவின் உறுப்பினர் பட்டி கூப்பர்-ஜோன்ஸ், உள்ளூர் ஒன்றுகூடல்களின் தாக்கத்தை “நாம் வாழும் இந்த இருண்ட உலகில் ஓர் ஒளி” என வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது: “[அமைதி] தொலைநோக்குப் பார்வைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்”

மலேசியா

மலேசியாவின் சுபாங் ஜெயாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் கூறியதாவது: சமத்துவமின்மை போன்ற பல சமூகப் பிரச்சனைகள் நம்மிடையே உள்ளன. இந்த விவாதங்களில் நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், இந்த பிரச்சினைகளின் மையத்தில் ஒரு ஆன்மீக பிரச்சனை உள்ளது என்பதே.

யாப்

பசிபிக் தீவான யாப்பில் நடந்த உள்ளூர் மாநாட்டில் தனது தொடக்க உரையில், சதாவால் தீவுத் தலைவர்களில் ஒருவரான இக்னாதியோ எமைப்பி, மாநாட்டில் வெளிப்பட்ட திட்டங்களின் மூலம் சமூகத்தில் ஒற்றுமை, ஒத்துழைப்பு, தாராள மனப்பான்மை மற்றும் தன்னலமின்மை பலப்படுத்தப்படும் என கூறினார். “இவை சமூகம் செய்ய முயற்சிக்கும் நல்ல விஷயங்கள் ஆனால் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை,” என அவர் கூறினார்.

பாஹ்ரேய்ன்

பஹ்ரைனில் பல சமீபத்திய கூட்டங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் பின்வருமாற எழுதியது: “இரண்டு நாள் மாநாடு… பஹ்ரைன் சமுதாயத்தின் அனைத்து கூறுகளையும் ஒன்றிணைத்து, பங்கேற்பாளர்கள் பலதரப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த பஹ்ரைன் சமூகத்திற்குச் சேவை செய்வதற்கு பங்களிக்கும் வாய்ப்பை வழங்கும்.”

கட்டுரை தொடர்ந்தது: “பொது செழிப்புக்குப் பங்களிப்பதன் மூலமும், சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதன் மூலமும், மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திட தங்களால் இயன்றதைச் செய்வதன் மூலமும், தங்கள் சமூகத்தை வடிவமைக்கும் செயலில் பங்கேற்பவர்களாக இருக்க அனுமதிக்கும் தனிநபர்களின் பொறுப்பு உணர்வின் வெளிப்பாடாக சமூக சேவையின் முக்கியத்துவத்தை இந்த மாநாடு எடுத்துக்காட்டுகிறது” என்றது.

மார்ஷல் தீவுகள்

மாநாட்டிற்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், கல்வி அமைச்சர் கிட்லாங் கபுவா தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்: “ஒற்றுமை, மனித நலன் மற்றும் உலக ஒற்றுமை ஆகியவை இந்த சமயத்தின் தூண்கள். கல்வி அமைச்சராகவும், இறுதியில், எங்கள் சமூகத்தின் உறுப்பினர் என்னும் முறையிலும், நான் இந்தத் தூண்களுக்கு ஆதரவாக நிற்கிறேன், மேலும் வலுவான கலாச்சார மற்றும் ஆன்மீக அடித்தளத்துடன் திறமையான மற்றும் இரக்கமுள்ள உலகளாவிய குடிமக்களாக எங்கள் மக்கள் பேணப்பட வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.”

தாய்லாந்து

உள்ளூர் கூட்டத்தில் கலந்து கொண்ட யாங் கேவ் கிராமத் தலைவர் கூறியதாவது: “இந்த மாநாடு எங்கள் கிராமத்தை சிறந்த இடமாக மாற்ற உதவியது. சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், எங்களின் எதிர்காலமாக இருக்கும் குழந்தைகள் அன்பையும் ஒற்றுமையையும் கற்றுக்கொள்வதற்கு நாங்கள் ஒன்றாக இணைந்துள்ளோம். எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் இதுபோன்ற கூட்டங்களை மேலும் அதிகமாக நான் காண விரும்புகிறேன்.”

சமீபத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற மாநாடுகளின் ஒரு பார்வை:

ருமேனியாவின் புக்கரெஸ்டின் பிரிவு 1ல் நடந்த இந்தக் கூட்டத்தில், மாநாடுகளின் தொடர் மூலம் ஈர்க்கப்பட்ட மூன்று நாள் சமூக விழாவிற்காக ஒரு முழு தெருவையும் மூடுவதற்கு நகரம் அனுமதித்தது.

மேற்கொண்டு பல அற்புதமான மாநாடுகளின் காட்சிகளைக் காண இங்கு செல்லவும்:

https://news.bahai.org/story/1601/