

16 ஆகஸ்ட் 2022
பஹாய் உலக மையம், 16 ஆகஸ்ட் 2022, (BWNS) – ஏப்ரல் தொடக்கத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் உண்டாகிய தீ விபத்தைத் தொடர்ந்து, ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேம்பாடு கண்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்றுவதில் திட்டக்குழு முன்னேறியுள்ளது. விரிவான சோதனையைத் தொடர்ந்து, உலக நீதிமன்றம் சன்னதியைப் பற்றிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, கடந்த மாதம், திட்டக் குழு பாதிக்கப்பட்ட பரப்புகளில் மேலும் மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையில், தீயினால் பாதிக்கப்படாத திட்டத்தின் பிற அம்சங்களில், வடக்கு பிளாசாவில் உள்ள பூந்தொட்டிகள், இத்தாலியில் ட்ரெல்லிஸிற்கான பளிங்கு உறைகளை வெட்டுதல் மற்றும் வடிவமைத்தல் மற்றும் போர்ச்சுகல் நாட்டில் மெருகூட்டல் உற்பத்தி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. பார்வையாளர்கள் மையம் மற்றும் இதர வசதிகளின் கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.




மூலாதாரம்: https://news.bahai.org/story/1611/