பாப்புவா நியூ கினி: எழுகின்ற கோவில் பின்னல் திட்டத்தில் பொது பங்கேற்பை ஊக்குவிக்கின்றது


28 su

போர்ட் மோரஸ்பி, பாப்புவா நியூ கினி – பாப்புவா நியூ கினியின் (பி.என்.ஜி) தலைநகரான போர்ட் மோரஸ்பியில் ஒரு மலை உச்சியில், வளர்ந்து வரும் பஹாய் வழிபாட்டு இல்லம் உள்ளது — இது சமூகத்திற்குப் பக்தி மற்றும் சேவையின் ஐக்கியத்தைப் பிரதிநிதிக்கும் ஒரு புனிதமான கட்டமைப்பாகும். அனைத்து பஹாய் வழிபாட்டு இல்லங்களின் நோக்கத்திற்கு அடித்தளமாக இருக்கும் இந்த மைய கருப்பொருள், மிக சமீபத்தில் ஒரு நெசவுத் திட்டத்தின் அடிப்படையில் அந்த நாட்டில் உள்ள கோயிலின் வளர்ச்சிக்கு உதவ இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு உத்வேகமூட்டுகின்றது.

கடந்த வாரம், அருகிலுள்ள சுற்றுப்புறங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் அறிவையும் திறமைகளையும் பயன்படுத்தி, அலுமினிய கீற்றுகளை ஒரு பாரம்பரிய வடிவத்தில் நெசவு செய்ய கோயில் தளத்தில் கூடினர். இது மைய கட்டிடத்தின் உட்புற சுவர்களை அலங்கரிப்பதற்காகும். நெசவு என்பது பி.என்.ஜி.யில் ஒரு பாரம்பரிய கலை வடிவமாகும்; இது மக்கள் அன்றாடம் தொடர்பு கொள்ளும் ஒரு கலை வடிவமாகும்; சிறப்பு நிகழ்வுகளுக்காக உருவாக்கப்பட்ட கூடைகள், குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நெய்யப்பட்ட பாய்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பிற பொருட்கள் போன்றவற்றின் மூலம் மக்கள் ஒருவர் மற்றவருடன் தொடர்புகொள்கின்றனர்.

கோவில் குவிமாடத்தின் வடிவமைப்பும் உட்புற நெசவு வடிவமும் ஒற்றுமை மற்றும் பல்வேறு பின்னணியில் இருந்து மக்கள் ஒன்றாக வருவதை அடையாளமாகக் கொண்டுள்ளன. ஹோஹோலா புறநகரைச் சேர்ந்த ஒரு தன்னார்வலரான யோரி மொய்காமு பின்வருமாறு கூறுகிறார்: “இந்த வழிபாட்டுக்கான ஆலயம் நம் அனைவருக்கும் சொந்தமானது. இதுதான் இங்குள்ள அனைவரையும் ஒன்றாக வேலை செய்ய ஊக்குவிக்கிறது.”

பி.என்.ஜி.யின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் கன்பூசியஸ் இகோய்ரே, இந்த உணர்வுகள் பிரார்த்தனை செய்வதற்கும் சேவை செய்வதற்கும் கோயில் தளத்திற்கு வருகை தரும் அனைத்து மக்களாலும் வெளிப்படுத்தப்படுகிறது என விளக்குகிறார். “கட்டி முடிக்கப்பட்டவுடன், சாந்தி மற்றும் அமைதியைத் தேடும் எவருக்கும் வழிபாட்டு இல்லம் திறந்திருக்கும். அனைத்து மக்களும் தங்கள் வாழ்க்கை பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், சவால்களை எவ்வாறு சமாளிக்க முடியும், தங்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்கவும் இது ஓர் இடமாக இருக்கும்.”

கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் கீழே உள்ள படத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

அலுமினிய நீர்ப்புகா பேனல்கள் நிறுப்படுதலுக்கு முன் குவிமாடத்தின் அமைப்பு குறித்த ஒரு பார்வை.
ஒர் அடுக்கு நீர்ப்புகா பாதுகாப்பு வழங்கிடும் முழுமையாக நிறுவப்பட்ட அலுமினிய உறைப்பூச்சு காண்பிக்கும் மத்திய கட்டிடம் (கீழே) ஒரு சமீபத்திய பார்வை. கோயிலின் ஒன்பது நுழைவாயில்களில் உள்ள கூறைகளும் ஒவ்வொரு அலுமினிய தாள்களும் குவிமாடத்தின் குறிப்பிட்ட பரிமாணங்களைப் பூர்த்தி செய்ய குறுகி வளைந்துள்ளன. இந்த ஆண்டு பிற்பகுதியில் நிறுவப்படவிருக்கும் இறுதி முகப்பு கல்-இழையமைப்புப் பொருளால் செய்யப்பட்ட ஒரு சிக்கலான வடிவமைப்பைச் சித்தரிக்கும்.
கடந்த மாதங்களில் சுமார் 270 சாளர ஆதரவு பிரேம்கள் தளத்தில் ஜோடிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. இந்த ஜன்னல்கள் வழிபாட்டு இல்லத்தின் உட்புறத்தை நிரப்ப இயற்கை ஒளியை அனுமதிக்கும்.
இடதுபுறத்தில் உள்ள படம் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் குவிமாடத்தின் உட்புறத்தை அலங்கரிக்கும் அலுமினிய கீற்றுகளின் நெசவுக்கு உதவுவதைக் காட்டுகிறது. வலதுபுறத்தில் உள்ள படம் கோயிலின் உட்புறத்தின் வடிவமைப்பு சித்தரிப்பு ஆகும், இது பி.என்.ஜி.யின் பல மாறுபட்ட மக்கள் ஒன்றாக வருவதைப் பிரதிபலிக்கும் ஒரு வடிவத்தைக் கொண்டுள்ளது.
நெசவுத் திட்டத்திற்கு உதவிய உள்ளூர்வாசியான ஆல்பர்ட் லாவ், “இது மிகவும் தனித்துவமான அனுபவமாக இருந்தது. இந்த நடவடிக்கை நமது கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையின் அடித்தளமாகும். எல்லாமே நெசவுத் தொழிலைச் சுற்றியே சுழல்கிறது,” என்றார்.
ஒவ்வொரு நுழைவு விதானத்தின் அடிப்பகுதியையும் வரிசைப்படுத்தும் மறுசுழற்சி செய்யப்பட்ட மரத்தில் வேலை நடந்து வருகிறது. சிறிய மர பேனல்கள் பசை-லேமினேஷன் மூலம் பெரிய பேனல்களில் இணைக்கப்படுவதற்கு முன்பு முதல் சீரமைக்கப்பட்டு சமன்படுத்தப்படுகின்றன (இடது).
கோவில் தளத்திலேயே உள்ள நாற்றங்கால் தாவரங்களைக் கொண்டுள்ளது, அவை இறுதியில் கோயில் மைதானங்களில் நடப்படும்.
கட்டுமானக் குழுவின் சில உறுப்பினர்களின் ஒரு காட்சி.
போர்ட் மோரஸ்பியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் மாலை காட்சி.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1617/

இரானில் அடக்குமுறையின் பயனின்மை


இரான் நாட்டில் ஒரு பெண்கள் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. அந்நாட்டு பெண் ஒருவர் (மாஹ்ஸா அமீனி) தமது தலையை ஒழுங்காக மறைக்காத காரணத்தினால் கைது செய்யப்பட்டு, பின் இறந்து போனார். இதற்கு சில வாரங்களுக்கு முன் அந்நாட்டு பஹாய்கள் ஒரு புதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகினர். இவர்களுக்கான உலக நீதிமன்றத்தின் செய்தியிலிருந்து ஒரு மேற்கோள்:

பேரன்புக்குரியவரின் நண்பர்களே! சமீபமான நிகழ்வுகளைப் பரிசீலியுங்கள். எவ்வாறு, ஆத்திரம், கலகம் ஆகியவற்றை உண்டாக்கும் இந்த வெளிப்படையான அநீதிக்கு விடையிறுக்கும் விதமாக, அத்தகைய துன்பச் சமுத்திரத்தில் என்றுமே மூழ்கடிக்கப்பட்டு வந்துள்ள அந்த ஆன்மாக்களின் தூய உள்ளங்களில் வஞ்சம் தீர்த்தலின் சிறிதளவு தடயம் கூட காணப்படவில்லை என்பதை கவனியுங்கள். மாறாக, நியாயம் தேடும் அவர்களின் முயல்வுகள் சட்டத்தைப் பின்பற்றியும் அவர்களின் மேல்முறையீடுகள் அதிகாரத்தில் இருப்போரிடமும் செய்யப்படுகின்றன. பஹாய்கள் நீதியை நாடுகின்றனர், நியாயத்திற்காகவும் நீதிக்காகவும் ஏங்குகின்றனர், ஆனால் ஒருபோதும் பதிலடியையும் பழிவாங்கலையும் பின்தொடரமாட்டார்கள். அவர்களின் உள்ளங்கள் வேதனையால் நிறைந்துள்ளன, ஆனால் வெறுப்பிலிருந்தும் குரோதத்திலிருந்தும் முற்றாக விடுபட்டுள்ளன. அவர்கள் ஆகுலத்துடன் (anxious) இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் கருணையும் அன்பும் எல்லையற்றவை. அவர்களுக்குக் குறுகிய வழிமுறைகளே உள்ளன, ஆனால் பெருந்தன்மையான குணாதிசயங்களும் உயர்ந்த குறிக்கோள்களும் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களின் குடியிருப்புகளிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர், ஆனால் பிறருக்கு அவர்கள் புகலிடமும் தஞ்சமுமாக இருக்கின்றனர். அவர்கள் கெடுமதியினரின் பொறிகளில் சிக்கிக்கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் ஆன்மாக்கள் உயர்ந்து நிற்கின்றன. அவர்கள் தவறிழைக்கப்பட்டோர், ஆனால் அப்படி தவறிழைத்தோருக்கும் அவர்களின் நலன்விரும்பிகளாக அவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகளை வன்முறை, மோதல் ஆகியவற்றில் ஈடுபடாமல், பரிவிரக்கத்தையும் மன்னிப்பையும் காட்டுவதற்காகவே வளர்க்கிறார்கள். அதன்மூலம், அப்பிள்ளைகள் ஒரு எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காமல் வளரும்போது, அக்குழந்தைகள் எங்ஙனம் ஒரு மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பது. அத்தவறிழைக்கப்பட்டவர்கள் புராதன அழகருக்கான விசுவாசத்தின் மூலமும், எவரது சொந்த சக்தி என்னும் கரத்தினால் அந்தப் பிரதேசங்களில் அவர்களின் ஆன்மீக முன்னோர்களை வளர்த்தும் பேணியும் வந்துள்ளாரோ, அவரது ஆலோசனைகளின் மூலமும் தங்கள் பற்றி எரியும் இதயங்களைத் தேற்றிக்கொள்கின்றனர். அவர் மோதலையும் சச்சரவையும் தடைசெய்து, பின்வருவன போன்ற சொற்களைக் கொண்டு அவர்களுக்குக் கற்பித்தார்: “இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் உயிரூட்டும் அடிப்படை நோக்கம்: மனித இனத்தின் நன்மையைப் பாதுகாத்து, அதன் ஒற்றுமையை வளர்ச்சியடையச் செய்து, மனிதரிடையே அன்புணர்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பேணுவதேயாகும். அதனை வேற்றுமை, முரண்பாடு, வெறுப்பு, பகைமை ஆகியவற்றிற்குத் தோற்றிடமாக்கிடாதீர்.”

கீழ்க்காணும் செய்தி தற்போது இரான் நாட்டில் நடக்கும் போராட்டம் குறித்த செய்தி:
https://www.thedailystar.net/opinion/views/news/the-futility-oppression-iran-3126376

ஒரு எதிர்ப்பாளர் மஹ்சா அமினியின் உருவப்படத்தை ஈரானின் அறநெறிப் பொலிசாரின் கைகளில் இறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தின் போது வைத்திருந்தார். புகைப்படம்: AFP

1848-ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள படாஷ்ட் நகரில் நடந்த ஒரு மாநாட்டில், பாப்’யி கவிஞரும் புரட்சியாளருமான ஃபாத்திமா பராகானி தாஹிரி 80 பேர் முன்னிலையில் வெளிவரத் துணிந்தார். கஜார் அரச வம்ச ஆட்சியின் போது தாஹிரிஹ் வாழ்ந்தார்; பெண்கள் அறியாமை, கல்வியறிவு இல்லாமல் பொது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டனர் — சர்வாதிகாரம், மதப்பிடிவாதம் மற்றும் கேள்விக்கு இடமில்லாத ஆணாதிக்கம் அதன் மிகக் கடுமையான வடிவங்களில் குறிக்கப்பட்ட ஒரு சூழல் அது. தாஹிரியின் அறிவார்ந்த திறன்கள், பேச்சுத்திறன், கவிதைத் திறமைகள், தீராத ஆர்வம் மற்றும் அசைக்க முடியாத தைரியம் ஆகியவை அவரை அவர் காலத்தின் அரிதான பெண்களில் ஒருவராக ஆக்கியது — இது தனது அன்பு மகளுக்கு தமது நூலகத்தின் எல்லைக்குள் கல்வி கற்பிக்க வேண்டும் என்னும் அவருடைய தந்தையின் (கஸ்வின் இஸ்லாமிய அறிஞர்)விருப்பத்தின் விளைவாகும்.

நினைத்துக்கூட பார்க்க முடியாததைச் செய்யத் தஹிரியின் துணிவு — முக்காடு இல்லாமல் தன் ஆண் தோழர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அவரது அச்சமற்ற செயல் — தங்களின் பெண் சகாக்களைத் தங்களுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள விரும்பாத பலருக்கு இது ஒரு முரட்டுத்தனமான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம்.

முகத்திரையை அவிழ்த்துவிடுதல் என்னும் தாஹிரியின் செயல் எந்த மதக் கொள்கையையும் அவமதிப்பதற்கோ அல்லது எதிராகச் செல்வதற்கோ அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும், இது பாலின சமத்துவத்தை குறிக்கிறது மற்றும் பெண்கள் சுதந்திரமாக செயல்படலாம் மற்றும் தங்கள் சொந்த விருப்பங்களை மேற்கொள்ளலாம் என்னும் ஓர் அறிக்கையை வெளியிட இச்செயல் பயன்படுத்தப்பட்டது. பாரசீகத்தின் முதல் பெண் உரிமை ஆர்வலர், தஹிரி தமது தீவிர நம்பிக்கைகள் மற்றும் உறுதியான நம்பிக்கைகளுக்காக கழுத்தை நெரித்துத் கொல்லப்பட்டார். அவருடைய தீர்க்கதரிசனமான இறுதி வார்த்தைகள், “நீங்கள் விரும்பியவுடன் என்னைக் கொல்லலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் ஒருபோதும் தடுக்க முடியாது.”

விசித்திரமாக, பெடாஷ்ட்டில் தஹிரிஹ் துணிச்சலாக வெளியிடப்பட்டு சரியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை 1948-இல் பாரிஸில் கூடி, மனித உரிமைகளுக்கான புதிய உலகளாவிய பிரகடனத்தை இயற்றியது, அதில் கூறப்படுவதாவது: “எல்லா மனிதர்களும் சுதந்திரமாகவும், கண்ணியத்திலும் உரிமைகளிலும் சமமாகப் பிறக்கிறார்கள்.”

செப்டம்பர் 21, 2022 அன்று லெபனானின் பெய்ரூட்டில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புகைப்படம்: REUTERS

174 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022 இல், பல அடக்குமுறைச் சட்டங்களைத் திணித்த ஈரானின் இஸ்லாமிய ஆட்சியின் கீழ், ஒரு சிங்கத்தின் இதயத்தைக் கொண்ட தாஹிரியைப் பெற்றெடுத்த தேசத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் தெருக்களில் இறங்கியுள்ளனர். அடக்குமுறைக்கு உள்ளான ஈரானியப் பெண்களின் இதயங்களில் இன்று தாஹிரியின் நெருப்பு ஆவி மீண்டும் துளிர்விட்டதைப் போன்றே இருக்கிறது. ஹிஜாப்பை “முறையற்ற முறையில்” அணிந்ததற்காக செப்டம்பர் 16 அன்று 22 வயதான மஹ்சா அமினி மோசமான ஒழுக்கக் காவல்துறையின் கைகளில் கொல்லப்பட்டதைப் போல அவர்கள் கைது செய்யப்படவோ, அடிக்கப்படவோ அல்லது கொல்லப்படவோ கூடும் என்பதை அறிந்திருந்தும், அவர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்.

அவர்கள் சக்திவாய்ந்த முழக்கங்களை உச்சரிக்கிறார்கள், அதன் தாளம் உங்கள் ஆன்மாவை மின்மயமாக்கும், குறிப்பாக நீங்கள் ஃபார்ஸியில் நான் பேசுவது போல் பேசினால், “நதர்சின், நாதர்சின்! மா ஹாமே பஹாம் ஹஸ்திம்! (பயப்படாதே, பயப்படாதே! நாங்கள் இதில் ஒன்றாக இருக்கிறோம்!), ” அல்லது “ஜான், ஜென்டேகி, அசாதி! (பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்!).” சிலர், “மிகோஷம், மிகோஷம், ஹர் ஆங்கே கஹரம் கோஷ்ட்! (நான் கொல்வேன், கொல்வேன், என் சகோதரியைக் கொன்றவனை!)” என்ற போர் முழக்கங்கள் போலவும் ஒலிக்கின்றன.

பல ஈரானிய பெண்கள் சமூக ஊடகங்களிலும் பொது இடங்களிலும் தங்கள் தலைமுடியை வெட்டுகிறார்கள், அவ்வாறு செய்யும்போது, அவர்கள் “பராயே ஆசாதி! (சுதந்திரத்திற்காக!)” என்று கூறுகிறார்கள். மஹ்சா அமினியின் கொலையால் தூண்டப்பட்ட நாடு தழுவிய வன்முறை போராட்டங்களின் வீடியோக்கள், பெண்கள் தங்கள் ஹிஜாப்களை தெருக்களில் எரிப்பதைக் காட்டுகின்றன — இது ஈரானில் பெண்களுக்குக் கட்டாய ஆடை. இந்த ஆர்ப்பாட்டங்களைப் பார்ப்பதில் அதன் சிறந்த அம்சம் என்னவென்றால், பெண்களுடன் சமமான எண்ணிக்கையிலான ஆண்களும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்.

ஈரானிய-பிரிட்டிஷ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான ஓமிட் ஜலிலி, வரலாற்றில் இந்த தருணத்தை “ஜார்ஜ் ஃபிலாய்ட் தருணம்” என அழைத்தார், இந்த எதிர்ப்புகள் பாலின-இன நிறவெறி நிலையில் மாற்றத்தை கொண்டு வர, ஒரு பெரிய விஷயத்திற்கு வழிவகுக்கும் என நம்புகிறார். ஈரானிய-அமெரிக்க பத்திரிகையாளரான மாசிஹ் அலினெஜாத், மஹ்சாவைப் பற்றியும் அவரது கொலையின் விளைவுகள் குறித்தும் தொடர்ந்து ட்வீட்களை பதிவிட்டு வருகிறார், அதில் ஒன்று, “இது [ஐ.நா.] ஐ.நா.வில் இடம் பெற்றுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் கொடூரம். உலக அளவில் பெண்களின் உரிமைகளை கண்காணிக்கப்பட வேண்டும்.”

(மொழிபெயர்ப்பு)
காவலரின் கைகளில் கொடும் தாக்குதலுக்கு வழிவகுத்துள்ள அச்சமில்லா போராட்டங்களும் இதுவையிலான எட்டு மரணங்களும் ஒரு புரட்சியின் ஆரம்பமாக இருக்கலாம், ஆனால் இவை இத்தகையவற்றில் முதலானவை அல்ல

ஈரானின் உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிடி மஹ்சாவுக்கு ஏற்கனவே மருத்துவ பிரச்சினைகள் இருப்பதாக வெட்கமின்றி கூறினார், அதை மாஹ்சாவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர், மேலும் மருத்துவ பரிசோதனைகள் மண்டை எலும்பு முறிவு மற்றும் மூளையில் உள் இரத்தப்போக்கு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. பொய்கள் வெள்ளம்பபோல் கொட்டுவது தெரிகிறது. ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிந்திருப்பது ஒரு தன்னார்வச் செயலாகவும், அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை எனவும் கூறினார்; மாறாக, அவர்கள் ஹிஜாப் அனிவதை தன்னார்வமாக செய்கின்றனர் எனக் கூறுகிறார். எதிர்ப்புகள் பெரிதாகி காட்டுத்தீ போல் பரவுகின்றதால், மக்கள் மற்றும் அவர்களின் குரல்களை முடக்குவதற்காக, ஈரான் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான அணுகலை தடை செய்துள்ளது.

அச்சமற்ற ஆர்ப்பாட்டங்கள், காவல்துறையின் கைகளில் வன்முறைத் தடியடிகள் மற்றும் இதுவரை எட்டு இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளன. இது ஒரு புரட்சியின் தொடக்கமாக இருக்கலாம், ஆனால் இது அத்தகைய ஒரு முதல் நிகழ்வு அல்ல. “தி கேர்ள்ஸ் ஆஃப் எங்கெலாப் ஸ்ட்ரீட்” என்பது ஈரானில் கட்டாய ஹிஜாபிற்கு எதிராக 2017 -ஆம் ஆண்டு விடா மோவாஹெட்டினால் தொடங்கப்பட்டது. அவர் ஒரு குச்சியின் நுனியில் அமைதியைக் குறிக்கும் தனது வெள்ளை ஹிஜாபைக் கட்டி, நெரிசலான தெருவில் ஒரு பயன்பாட்டு பெட்டியில் நின்றுகொண்டு அதை அசைத்தது ஒரு தொடர் போராட்டமாக உருவெடுத்துள்ளது. .

இந்த சர்வாதிகார, கொடுங்கோல் ஆட்சியின் மனிதாபிமானமற்ற முறைகள், தேர்வு சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் போராட்டங்களை நசுக்க கையாண்டது, இனி வேலை செய்யாது என்று தெரிகிறது. ஈரானிய பெண்கள் சுதந்திரமாக இருக்க இறப்பதற்கும் தயாராக உள்ளனர் — ஹிஜாப் அணிவதைத் தேர்வு செய்யவோ தேர்வு செய்ய வேண்டாம் என்பதற்கான சுதந்திரம்.

இனத்தால் ஈரானியரான ஒரு வங்காளதேச பெண் குடிமகளாக, மதத்தின் பெயரால் பெண்களைத் துன்புறுத்துபவர்களை நான் கண்டிக்கிறேன், மேலும் #MahsaAmini கொலைக்கு எதிராகப் போராடுபவர்களுடன் நான் ஒற்றுமையாக இருப்பேன்.

கட்டுரையின் ஆக்குனரான நூரா ஷம்சி பஹர் ஓர் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் மற்றும் வடக்கு தெற்கு பல்கலைக்கழகத்தில் (NSU) ஆங்கிலம் மற்றும் நவீன மொழிகள் துறையில் மூத்த விரிவுரையாளர் ஆவார்.

பஹாய் ஆய்வுகள்: “வாசிப்பு குழுக்கள்” வருடாந்திர ஏபிஎஸ் (ABS) மாநாட்டை வளப்படுத்துகின்றன


18 செப்டம்பர் 2022

ஒட்டாவா, கெனடா, 18 செப்டம்பர் 2022, (BWNS) – பஹாய் ஆய்வுகளுக்கான சங்கம் (ABS) சமீபத்தில் அதன் 46-வது வருடாந்திர மாநாட்டை நடத்தியது. அதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மக்களை ஒன்றிணைத்தது. இந்த ஆண்டு மீண்டும் இணையத்தில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத சிந்தனை மற்றும் சொல்லாடல்களின் பல்வேறு பகுதிகளுக்கு பஹாய் போதனைகளிலிருந்து நுண்ணறிவுகளைப் பங்களிப்பதற்கான அவர்களின் முயற்சிகள் குறித்து பிரதிபலிப்பதற்குப் பங்கேற்பாளர்களுக்கு உதவியது.

இந்த ஆண்டின் மூன்று நாள் கூட்டத்தின் போது விளக்கக்காட்சிகள் மற்றும் ஊடாடும் அமர்வுகள் குறிப்பாக ஆண்டு முழுவதும் சந்திக்கின்ற “வாசிப்புக் குழுக்கள்” உட்பட வளர்ந்து வரும் எண்ணிக்கையிலான கூட்டு முன்முயற்சிகள் நடைபெற்ற விவாதங்களினால் செறிவூட்டப்பட்டன. இந்த வாசிப்புக் குழுக்கள் ஒவ்வொன்றும் கல்வி, பொருளாதாரம், பருவநிலை மாற்றம், சமுதாய மாற்றத்தின் இயக்கவியல், அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம், நீதி மற்றும் சமரசம், சட்டம் ஊடகம், பொது சுகாதாரம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் போன்ற ஒரு தலைப்பில் கவனம் செலுத்துகின்றன.

ABS நிர்வாகக் குழுவின் செயலாளரான டொட் ஸ்மித் கூறுவதாவது: “இந்தக் குழுக்கள்—சில ஒழுக்கம் சார்ந்தவை மற்றும் சில பல்துறை சார்ந்தவை—ஆன்மீகக் கொள்கைகளின் வெளிச்சத்தில் தங்கள் துறைகளில் உள்ள ஆழமான கேள்விகளையும் கவலைகளையும் ஆராய்வதற்கும், இந்த நேரத்தில் மனிதகுலத்தின் தேவைகள் குறித்த புதிய நுண்ணறிவுகளைத் தேடுவதற்கும் மக்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன.” அறிவு உருவாக்கத்தை எளிதாக்குவதற்குப் பல்வேறு சூழல்களில் கலந்தாலோசனை கோட்பாட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி ABS எதிர்கொண்ட ஒரு கேள்வியிலிருந்து வாசிப்புக் குழுக்கள் பிறந்தன. ABS-க்கான கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவும் செல்வி அடைக்கலம் ஜபிஹி கூறுவதாவது: “‘புரிதல் என்னும் பரிசின் முதிர்ச்சி கலந்தாலோசனையின் மூலம் வெளிப்படுகிறது’ என்னும் பஹாவுல்லாவின் கூற்றைப் பற்றி சங்கம் நடைமுறையில் கற்றுக்கொள்கிறது.”

மிஸ் அடைக்கலம் ஜபிஹி மக்கள் தங்கள் துறை தொடர்பான ஒரு சொல்லாடலின் ஒருமுகப்படுத்தப்பட்ட ஆய்வை மேற்கொள்ள உத்வேகம் பெறும் போது புதிய வாசிப்புக் குழுக்கள் உருவாகின்றன என விளக்குகிறார்.

கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கு உதவுகின்ற எரிக் ஃபார், “குழுக்கள் பொதுவாக தொடர்புடைய இலக்கியத்தின் ஆரம்ப வாசிப்பு பட்டியலை அடையாளம் காண்கின்றன மற்றும் அவை காலப்போக்கில் விரிவுபடுத்தப்பட்டு சுத்திகரிக்கப்படலாம். ஒரு குழுவின் பங்கேற்பாளர்கள் இந்த விஷயங்களை ஒன்றாக மதிப்பாய்வு செய்யும்போது, அவர்கள் தங்கள் துறைகளில் சிந்தனையையும் நடைமுறையையும் வடிவமைத்த ஒரு சொல்லாடலில் அடிப்படை அனுமானங்கள், மையக் கருத்துக்கள் மற்றும் உயர்ந்த அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள முயன்று, அவற்றை பஹாய் போதனைகளுடன் தொடர்புபடுத்துகின்றனர்.”

மிஸ் அடைக்கலம் ஸபிஹி மேலும் கூறுவதாவது: “பஹாய் சமூக நிர்மாணிப்பு முன்முயற்சிகள் மற்றும் சமுதாய நடவடிக்கைகளில் வளர்ந்து வரும் அனுபவம், அத்துடன் அத்தியாவசிய பஹாய் போதனைகள் மற்றும் கொள்கைகளும், இந்தக் கேள்விகளுக்குத் தெளிவூட்டுகின்றன.”

மாநாட்டிற்கும் இந்த சிறிய குழு அமைப்புகளுக்கும் இடையிலான உறவு ஒரு மதிப்புமிக்க  வட்டத்தை உருவாக்குகிறது என்பதை சங்கம் கற்றுக்கொள்கிறது: வருடாந்திர மாநாட்டில் விவாதங்கள் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வாசிப்புக் குழுக்கள் செழுமைப்படுத்தப்படுவதுடன், புதிய குழுக்களும் உருவாக்கப்படுகின்றன–எதிர்கால மாநாடுகளில் விளக்கக்காட்சிகள் மற்றும் மன்றங்களுக்கு அறிவளிப்பதற்கு அதிக நுண்ணறிவுகள் உள்ளன.

டாக்டர் ஸ்மித் கூறுவதாவது: “இந்த ஆண்டு திட்டத்தில் உள்ள பல விளக்கக்காட்சிகள் 2021 மற்றும் 2022 மாநாடுகளுக்கு இடையிலான மாதங்களில் நடந்த வாசிப்புக் குழுக்கள் அல்லது கருப்பொருள் கருத்தரங்குகள் போன்ற கூட்டு கற்றல் முன்முயற்சிகளின் பலனாக இருந்தன. மற்ற கல்வி மற்றும் தொழில்முறை முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொகுப்பாளர்களின் பங்களிப்புகளால் இந்தத் திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது.” இந்த ஆண்டு மாநாட்டு நிரலின் விளக்கக்காட்சிகள் மற்றும் துணை பொருட்கள், முந்தைய ஆண்டுகளில் இருந்து விளக்கக்காட்சிகளின் காப்பகத்துடன் இப்போது பஹாய் ஆய்வுகளுக்கான சங்கத்தின் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1616/

முடியாட்சியும் குடியாட்சியும்


பஹாய் சமயத்தில் முடியாட்சி குறித்து என்ன கூறப்படுகின்றது என்பதை இக்குறுங் கட்டுரை ஆராய்கிறது.

கடந்த சில நாள்களாக, 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் ஒரு பெரும் பகுதிக்கு அரசியாக விளங்கிய 2-ஆம் எலிஸபெத் இராணியின் மரணம் ஒரு முக்கிய செய்தியாக இருக்கின்றது. சமோவா தீவின் மறைந்த மன்னராகிய மலியதோவா தனுமாஃபிலி ஒரு பஹாய் ஆவார். அதே போன்று ருமேனியாவின் கடைசியான அரசியாக இருந்த மரீ இராணியும் சமயத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். மரீ இராணி பாலஸ்தீன விஜயத்தின் போது ஷோகி எஃபெண்டியை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன, ஆனால் இறுதியில் அரசியல்வாதிகளின் தலையீட்டினால் அச்சந்திப்பு நடைபெறாமலேயே போயிற்று. அரசியார் அதனால் மிகவும் மனமுடைந்து போனார்.

மரீ இராணியார் விக்டோரியா மகாராணியின் மகன் ஒருவர் ரஷ்யாவின் 2-ஆம் அலெக்ஸாந்தரின் மகளைத் திருமணம் செய்தார். இவ்விருவருக்கும் பிறந்தவரே மரீ இராணி. பஹாவுல்லா பாரசீகத்திலிருந்து நாடுகடத்தப்பட்ட போது, அவருக்கு அப்போதிருந்த ரஷ்ய அரசாங்கம் அடைக்கலம் வழங்க முன்வந்தது நமக்கு ஞாபகம் இருக்கும். பஹாவுல்லாவின் நிருபத்தைப் பெற்ற அதற்கு மதிப்பளித்த விக்டோரியா மகாராணியின் செயலும், ரஷ்ய நாடு பஹாவுல்லாவுக்கு அடைக்கலம் வழங்க முன்வந்த செயலும் ஒன்று சேர்ந்து மரீ இராணியின் உருவத்தில் இணைந்தது.

இனி முடியாட்சி குறித்து பஹாய் சமயத்தில் என்ன கூறப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்

முடியாட்சியும் குடியாட்சியும்

கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக முடியாட்சி முறையில் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். பல நாடுகளில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியாட்சி முறை அமுலுக்கு வந்துள்ளது. ஒரு பேரரசாக விளங்கிய ஆங்கிலேயரின் ஐக்கிய பேரரசின் முடியாட்சியும் அரசியலமைப்பு முடியாட்சியாக மாறிவிட்டிருந்தது. அந்த நாட்டில் தற்போது குடியாட்சியே அதிகாரத்தில் இருக்கின்றது. முடியாட்சி  சம்பிரதாயமான ஒன்று மட்டுமே.

இப்போது முடியாட்சி குறித்து பஹாவுல்லா என்ன கூறுகின்றார் என்பதைப் பார்ப்போம்.

அரச பரம்பரையினர் அதிகாரத்தின் சரிவு

அரசவர்க்கத்தில் ஏற்பட்ட சரிவை பஹாவுல்லாவின் அரசகர்களுக்கான நிருபத்தில் வரும் பின்வரும் கூற்றின் அடிப்படையில் நாம் தொடர்புபடுத்திடக்கூடும்.

மன்னர் கூடத்தினரே, கடவுளுக்கு அஞ்சுங்கள்; இந்த அதி உன்னத அருளைப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்திடாதீர்… உங்கள் உள்ளங்களை கடவுளின் திருமுகத்தின்பால் திருப்புங்கள்; உங்கள் ஆசைகள் பின்பற்றத் தூண்டியவற்றை கைவிடுங்கள்; அழிந்துபோவோர்களாக ஆகிடாதீர்… அவரது (பாப் பெருமானார்) சமயத்தை நீங்கள் ஆராயவில்லை, நீங்கள் அதனை உணர கூடியவராயின், அவ்வாறு செய்திருந்தீரானால் சூரியனின் ஒளிவீசப்படும் அனைத்தையும் விட அது உங்களுக்கு மேலானதாக இருந்திருக்கும்… முன்பு நீங்கள் கவனக்குறைவாக இருந்ததைப் போன்று இனிமேலும் கவனக்குறைவின்றி இருப்பதில் எச்சரிக்கையுடன் இருங்கள். எமது வதனம் திரைகளுக்குப் பின்னாலிருந்து வெளித்தோன்றி, அதன் பிரகாசத்தை விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தின் மீதும் பொழிந்துள்ளது; இருப்பினும் அவர்பால் நீங்கள் திரும்பிடவில்லை. ஆதலால், முன்னெழுந்து… உங்கள் சிந்தனையை விட்டகன்றவற்றிற்காக திருத்தங்கள் செய்வீராக… இந்த நிருபத்தில், ஒப்பற்றதும் ஐயத்திற்கிடமில்லா மொழியில் யாம் வெளிப்படுத்தியுள்ள அறிவுரைகளின்பால் கவனம் செலுத்தாவிட்டால், தெய்வீகத் தண்டனை எல்லா திசையிலிருந்தும் உங்களைத் தாக்கும், மற்றும் அவரது நீதியின் தீர்ப்பு உங்களுக்கு எதிராக வழங்கப்படும்… மன்னர்களே, இருபது ஆண்டுகள் கடந்து விட்டன; அந்த நேரத்தில் யாம், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய துன்பத்தின் வேதனையை அனுபவித்தோம்… பெரும்பாலான எமது துன்பங்களை அறிந்திருந்தும், நீங்கள், அவ்வெதிரிகளின் செயல்களைத் தடுக்கத் தவறியுள்ளீர். உங்களின் உயரிய நீதியுணர்வு மனித இனம் முழுவதற்கும் வெளிப்படுத்தப்பட கொடியோனின் அக்கிரமங்களைத் தடுக்க வேண்டியதும், உங்கள் பிரஜைகளை நியாயமாக நடத்துவதும், உங்களின் தெளிவான கடமையல்லவா?

மன்னர்கள் தம்மை நடத்திய விதம் கண்டு பஹாவுல்லா பின்வருமாறு எழுதினார்:

“மனிதர்களுள் இரண்டு நிலைகளிலிருந்து அதிகாரம் கைப்பற்றப்பட்டுள்ளது: அரசர்களும் மதத்துறையினரும்.”

ஷேய்க் சால்மானுக்கு எழுதிய ஒரு நிருபத்தில் பஹாவுல்லா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“உலகத்தின் முதிர்ச்சியின் அறிகுறிகளில் ஒன்று, முடியாட்சியின் சுமையை ஏற்க எவருமே முன்வரமாட்டார்கள். முடியாட்சி, அதன் சுமையை தனியாக சுமக்க எவருமே இல்லாத நிலையில் இருக்கும். அந்த நாளே மனுக்குலத்தினரிடையே விவேகம் வெளிப்படுத்தப்படும் நாளாகும். கடவுளின் சமயத்தைப் பிரகடனம் செய்வதற்கும், அவரது சமயத்தை எல்லா திசைகளிலும் பரப்புவதற்காக மட்டுமே இந்தக் கடுமையான சுமையை ஏற்க எவரும் முன்வருவர். கடவுளுக்கும் அவரது சமயத்தின் மீதான அன்புக்காகவும் கடவுளுக்காகவும் அவரது சமயத்தை பிரகடனம் செய்வதற்காகவும் இப்பெரும் அபாயத்தின்பால் தம்மை வெளிப்படுத்திக்கொண்டு, இக்கடுமையான முயற்சியையும் துன்பத்தையும் ஏற்கும் எவரும் நலம் பெறுவர்.

முடியாச்சியின் அங்கீகரிப்பு

இருப்பினும் பஹாவுல்லாவின் நோக்கத்தை எவருமே தப்பாகப் புரிந்துகொள்ள அல்லது, தவறாக அர்த்தப்படுத்திக்கொள்ளாது இருப்பார்களாக. அவரைத் துன்புறுத்திய மன்னர்களின்பால் அவரது கண்டனம் கடுமையாக இருந்தாலும், அவரது சமயத்தின் உண்மையை ஆராய்ந்து அநியாயக்காரர்களின் கரங்களைத் தடுத்து நிறுத்தும் தங்கள் தெளிவான கடமையில் வெளிப்படையாகத் தவறியவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தப்பட்ட கண்டனங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும், அது முடியாட்சி என்னும் ஸ்தாபனத்தை மறைமுகமாவேனும் மறுதலிப்பதாகவோ அவமதிப்பதாகவோ கருதப்படக்கூடாது.

முடியாட்சி மீதான பஹாவுல்லாவின் கண்டனங்கள் அந்த ஸ்தாபனத்தின் எதிர்கால நிலையை குழப்பத்திற்குள்ளாக்கிடக் கூடாது.

பஹாவுல்லாவின் எண்ணிலடங்கா உரைப்பகுதிகளில் முடியாட்சி என்னும் கோட்பாடு புகழப்பட்டும் நியாயமான மற்றும் நியாயமான எண்ணம் கொண்ட அரசர்களின் அந்தஸ்தும் நடத்தையும் போற்றப்படுகிறது, நீதியுடன் ஆட்சி செய்து, அவரது சமயத்தை ஏற்றுக்கொண்ட அரசர்களின் எழுச்சி கற்பனை செய்யப்படுகின்றது, மற்றும் முன்னெழுந்து பஹாய் அரசர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான புனிதமான கடமையும் வலியுறுத்தப்படுகின்றது.

பஹாவுல்லாவின் பிஷாராட் (நற்செய்தி) நிருபத்தில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:

மன்னர்களில் யாராவது—இறைவன் அவர்களுக்கு உதவிடுவாராக—எழுந்து, அழுத்தப்பட்ட இம்மக்களைப் பாதுகாக்க உதவுவாராயின், அவர்பால் அன்பு செலுத்துவதிலும் அவருக்குச் சேவை புரிவதிலும் அனைவரும் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக்கொள்ள வேண்டும். இச்செயல் ஒவ்வொருக்கும் கடமையாகின்றது. இதற்கேற்பச் செயலாற்றுவோருக்கு அது நன்று.

ஜனநாயக அரசியல் முறை உலக மக்களுக்கு நன்மை பயக்கவல்லதாயினும் மன்னராட்சியின் மாட்சிமை ஆண்டவனின் அடையாளங்களுள் ஒன்றாகும். உலக நாடுகள் அதன் பயனை இழப்பதை யாம் விரும்புவதில்லை. கூர்மதி வாய்ந்தோர் இவ்விரண்டு முறைகளையும் இணைத்திடுவராயின், இறைவனின் முன்னிலையில் அவர்கள் பெறும் கைம்மாறு அதிகம்.

தமது கித்தாப்-இ-அக்டாஸ் திருநூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

இறைவனின் நேர்மையின் சாட்சியாக! உங்களது இராஜ்யங்களின் மீது கை வைப்பது எமது நோக்கமன்று. எம் தூதுப்பணி மனிதர்களின் உள்ளங்களைக் கைப்பற்றி அவற்றை ஆட்கொள்வதேயாகும். அவற்றின் மீதே பஹாவின் பார்வை பொருந்தியுள்ளது. இதனை நீங்கள் உணர முடியுமாயின், அதற்கு நாமங்களின் இராஜ்யமே சாட்சியம் பகர்கின்றது. தனது தேவரைப் பின்பற்றும் ஒருவன் இவ்வுலகையும் அதிலுள்ள அனைத்தையும் துறப்பான்; அவ்வாறாயின், அத்துணை உயர்வான ஸ்தானத்தைக் கொண்டுள்ள அவரது பற்றின்மை எத்துணை உயரியதாக இருக்கக் கூடும்! உங்களது அரண்மனைகளைத் துறந்து அவரது இராஜ்யத்தினுள் நுழைய விரையுங்கள். மெய்யாகவே, இதுவே, உங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மை பயப்பதாகும். இதனை நீங்கள் அறிவீராயின் மேல் உலக இராஜ்யத்தின் அதிபதியானவரே இதற்குச் சாட்சியமளிப்பார்.

எமது இராஜ்யத்தில் எமது சமயத்திற்கு உதவிட எந்த மன்னர் எழுகின்றாரோ, எந்த மன்னர் எம்மைத் தவிர மற்ற அனைத்தின்பாலும் பற்றைத் துறக்கின்றாரோ, அந்த மன்னருக்குக் காத்திருக்கும் அருட்பேறுதான் என்னே! அப்படிப்பட்ட மன்னர் பஹாவின் மக்களுக்காக இறைவன் தயாரித்துள்ள கலமான – செங்கலத்தின் அன்பர்களின் எண்ணிக் கையில் சேர்க்கப்படுகின்றார். அனைவரும் அவரது பெயரை மகிமைப்படுத்த வேண்டும். அவரது ஸ்தானத்திற்குப் பக்தி மரியாதை அளிக்க வேண்டும். கண்களுக்குப் புலனாகும், புலனாகா இராஜ்யங்களில் வசிப்போர் அனைவரின் சர்வ சக்தி வாய்ந்த பாதுகாப்பாளர் எனும் எமது நாமங்கள் என்னும் திறவுகோல்களைக் கொண்டு நகரங்களைத் திறப்பதற்கு அவருக்கு உதவுங்கள். அத்தகைய மன்னர் மனித இனத்தின் கண்ணாவார், படைப்பின் புருவத்தில் பிரகாசிக்கும் ஆபரண மாவார், உலகம் முழுவதின் அருட்பேறுகளுக்கு மூலத் தோற்றுவாய் ஆவார். பஹாவின் மக்களே, அவருக்கு உதவிட உங்கள் பொருள்களை மட்டும் அல்லாது, உங்கள் உயிர்களையே அர்ப்பணித்திட முன்வாருங்கள்.

வாக்களிக்கப்பட்ட நாள் வந்துவிட்டது நூலில் ஷோகி எஃபென்டி குறிப்பிடுகின்றார்: “உலகத்தின் தாய்” மற்றும் “ஒளியின் ஊற்றுக்கண்” என்னும் தமது சொந்த நகரத்தின் அரியணைக்கு, நீதி மற்றும் தமது சமயத்தின்பால் பக்தி என்னும் இரட்டை அனிகலன்களினால் அலங்கரிக்கப்பட்ட ஓர் அரசன் உயர்வதை அவர் கற்பனை செய்கின்றார். “தா என்னும் நிலமே, உன்னை எதுவுமே கலங்கச் செய்திட அனுமதியாவே, ஏனெனில் கடவுள் உன்னை மனுக்குலம் அனைத்திற்கும் மகிழ்ச்சியின் மூலாதாரமாகத் தேர்வு செய்துள்ளார்.”   அவர், அது அவரது சித்தமாயிருந்தால், ஓநாய்கள் சிதறடித்த தேவனுடைய மந்தையை ஒன்றுதிரட்டி, நீதியோடு ஆளப்போகின்ற ஒருவரால் உனது சிங்காசனத்தை ஆசீர்வதிப்பார்.  அப்படிப்பட்ட ஆரசன், மகிழ்ச்சியுடனும் களிப்புடனும் பஹாவின் மக்களின்பால் தன் முகத்தைத் திருப்பி அவர்களுக்குத் தனது தயவுகளை நீட்டுவார்  உண்மையில், கடவுளின் பார்வையில் அவர் மனிதர் மத்தியில் ஒரு ஆபரணம் போன்ற ஒருவராகக் கணக்கிடப்படுகிறது.  தேவனுடைய மகிமையும், அவருடைய திருவெளிப்பாடு என்னும் ராஜ்யத்தில் வசிக்கின்ற அனைவருடைய மகிமையும் அவர்மீது என்றென்றைக்கும் இலயித்திருக்கும்.”

ஆதலால், கடந்த சுமார் இருநூறு ஆண்டுகளாக, அரசபரம்பரையினரைத் தாக்கிய துன்பகரமான பேரிடர்கள், அவர்கள் மீதான பஹாவுல்லாவின் கண்டனம் ஆகியவற்றை மனதில் கொண்டு அரசபரம்பரையினர் உறுதியாக நசித்துப் போவர் என முடிவு செய்வது அவரது போதனைகளின் சிதைவுக்குச் சமமாகும்.

ஒரு தடையற்ற சீரான அனுபவம்: ஸாம்பியாவில் கல்விப் பயணத்தின் எதிர்காலத்தைத் திட்டமிடுதல்


கூடுதல் படங்களைக் காண https://news.bahai.org/story/1615/ செல்லவும்

லுசாக்கா, ஸாம்பியா, 9 செப்டம்பர் 2022, (BWNS) — கடந்த ஒரு மாதமாக, ஸாம்பியா நாட்டு பஹாய்கள், ஒரு நடுமையமான கேள்வி˙யைப் பற்றி சிந்தித்து வருகின்றனர்: அந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பஹாய் கல்வியல் முன்முயற்சிகளின் நெடுக்கம், எவ்வாறு ஒரு சீரான, ஒத்திசைவான அனுபவத்தை குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்ச்சி வரை வழங்கிட இயலும்?

சமீபத்தில், ஸாம்பியாவிலுள்ள பஹாய் ஸ்தாபனங்களும் பஹாய் உத்வேக அமைப்பாண்மைகளும் (organizations) பல தசாப்தங்களாக அந்த  நாட்டில் மடிப்பவிழ்ந்துவரும் பல்வேறு கல்வியல் நடவடிக்கைகள் குறித்து ஒரு விரிவான கண்ணோட்டமிட ஐந்து நாள்களுக்கு ஒன்றுகூடின.

ஆப்பிரிக்காவிலுள்ள கண்ட ஆலோசகர் வாரியத்தின் ஓர் உறுப்பினரான முசுன்டா கப்புஸா-லின்செல், அவ்வொன்றுகூடலின் முக்கியத்துவத்தை விவரிக்கின்றார்: இந்தக் கருத்தரங்கு, ஸாம்பியாவில் ஆன்மீக மற்றும் லௌகீக கல்வியை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ள முகவாண்மைகள், முதன் முறையாக, நாட்டின் முன்முயற்சிகளின் ஒரு முழு வர்ணாவளி (spectrum) குறித்த ஓர் ஆழமான மதிப்புணர்வைப் பெற்று தங்கள் முயற்சிகளில் மேலும் நெருக்கமான உடனுழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் ஒன்றுகூடின.

திருமதி கபுசா-லின்செல், இந்த ஆற்றல்மிக்க விவாதங்கள் பரபரப்பான புதிய வாய்ப்புக்களைத் திறந்தன எனவும், பங்கேற்பாளர்கள் தங்கள் முயற்சிகளை ஒரே குறிக்கோளுக்கு — அவர்களின் அண்டைப்புறங்கள், கிராமங்கள் மற்றும் இறுதியில் அவர்களின் சமூகத்தின் மேம்பாட்டை நோக்கி அவர்களைத் திசைதிருப்பவும் உதவுகின்ற மனித ஆன்மாவில் மறைந்திருக்கும் ஆற்றல்களை விழிப்படையச் செய்யும் – ஒரே இலக்கிற்குப் பங்களிப்பதைக் காண உதவியுள்ளன என விளக்குகிறார்.

நிலையாகத் துல்லியமாகும் ஒரு கல்வியல் முறைமை

ஸாம்பியாவின் மற்றொரு ஆலோசகரான ஹாமெட் ஜவாஹெரி, எதிர்காலத்திற்கான ஒரு பாதையை வரைவதில், இதுவரையில் மலர்ச்சியுற்று வந்துள்ள கல்வியல் முறைமையின் பயணம் குறித்த ஒரு பகிரப்பட்ட புரிதலை உரைப்பது முக்கியம் என பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொண்டனர் என விளக்கினார்.

இதைச் செய்வதற்கு, சமுதாய பொருளாதார அபிவிருத்தியுடன் தொடர்புகொண்ட ஆன்மீக மற்றும் தார்மீக சக்தியளிப்பு, கல்வியல் கல்வி, கல்வியல் முன்முயற்சிகள் சார்ந்த அனுபவங்களைப் பரிசீலித்தனர். ஸாம்பிய பஹாய் தேசிய ஆன்மீக சபையினால் தயாரிக்கப்பட்ட ஓர் ஆவணம், இந்த முனைவுகள் அனைத்தையும் ஒரே அடிப்படையில் பார்ப்பதற்கு, கடந்த இருபது ஆண்டு முயற்சியிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகள் மற்றும் அனுபவங்களிலிருந்து பயனடைவதற்கு வாய்ப்பளித்தது. இவற்றிலிருந்து சதா துல்லியமாகும் ஒரு கல்வியல் முறைமை வெளிப்பட்டது.

இக்கதை, முதலில் தார்மீக கல்வி குறித்த ஒரு பயிற்சிக்கழகம் 1983-இல் ஸ்தாபிக்கப்பட்ட போது ஆரம்பித்தது.

சமுதாய சேவைக்கான திறனாற்றல் உருவாக்கத்தில் கவனம் செலுத்தப்பட்ட, இந்த ஆரம்ப பயிற்சிக்கழகம், சமூக நிர்மாணிப்பு முனைவுகளுடன் அதற்கடுத்த எல்லா கல்வியல் முன்முயற்சிகளுக்கான அடித்தலத்தை இது வழங்கியது.

பின்னர், ஸாம்பியாவின் பல மண்டலங்களில் பணிபுரியும் நான்கு பயிற்சிக்கழகங்களாக பன்முகப்படுத்தப்பட்ட இது எவ்வாறு, மனிதகுல ஒருமை, பெண் ஆண் சமத்துவம், சமுதாயத்திற்கான வாழ்க்கை முழுவதுமான சேவையின் முக்கியத்துவம், கலந்தாலோசனை போன்ற பஹாய் கோட்பாடுகளை ஆராய்வதற்கும் இக்கோட்பாடுகளை அண்டைப்புறங்கள் மற்றும் கிராம வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதற்கு நடைமுறையான அனுபவத்தைப் பெறுவதற்கும் மக்களைச் சிறு குழுக்களாக ஒன்றுதிரட்டியது.

வருடப்போக்கில் பயிற்சிக்கழகத்தின் தார்மீக ஆற்றலளிப்பில் பங்கேற்பு அதிகரித்த போது, தங்கள் சமூகங்களுக்கு மேன்மேலும் அதிக பலக்கிய சேவைகளை வழங்குவதற்கான ஆவலும் திறனாற்றலும் அதிகரித்தது. இந்த அதிகரித்து வரும் திறனாற்றல், கூடுதல் கல்வியல் முக்கியத்துவங்களுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, கல்வியல் கல்வி, மற்றும் சமுதாய பொருளாதார அபிவிருத்தியுன் தொடர்புகொண்ட முன்முயற்சிகளுக்கு வழிவகுத்தது.

பல கல்வியல் முன்முயற்சிகள், ஒரே ஒட்டுமொத்த இலக்கு

 லுசாகாவில் நடந்த கலந்துரையாடல்கள், ஜாம்பியாவில் பல பஹாய் கல்வி முன்முயற்சிகள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரு பரந்த இலக்கைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதைக் காண அவை பங்கேற்பாளர்களுக்கு உதவின. ஒரு பஹாய் உத்வேக அமைப்பான்மையான இன்ஷிண்டோ அறக்கட்டளையின் மொஹம்மத் அப்து-சலாமி, , பின்வருமாறு கூறுகிறார்: “பெறுநர்கள் அல்லது வெறுமனே பங்கேற்பாளர்கள் மட்டுமல்ல, அதன் சொந்த லௌகீக, ஆன்மீக மற்றும் அறிவார்ந்த முன்னேற்றத்தின் முன்னணியாளராக இருக்கும் ஒரு மக்கள்தொகையின் திறனில் நம்பிக்கை வைப்பதே இந்த முன்முயற்சிகள் அனைத்தின் இயக்கக் கோட்பாடாகும்””

பயிற்சிக்கழகத்தின் மூலம் அடையப்பட்ட திறன்களும் திறமைகளும் மற்றொரு கல்வியல் முன்முயற்சியில் பங்கேற்றுள்ள இளைஞர்களின் அனுபவங்களை மேம்படுத்தியது:  இஷின்டோ அறக்கட்டளையினால் பயிற்றுவிக்கப்பட்டோரினால் ஸ்தாபிக்கப்பட்ட பஹாய் உத்வேக ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகள். இந்த சமூகப் பள்ளிகள் மாணவர்களிடையே கல்வியில் சிறந்து விளங்குவதற்கான தாகத்தை வளர்த்து, சக குடிமக்களுக்கு சேவை செய்ய அவர்களை வழிநடத்துகின்றன. 2000-ங்களின் நடுப்பகுதியில் இருந்து, அந்த நாட்டில், குறிப்பாக, இளைஞர்களுக்கான கல்வி வாய்ப்புகள் வரலாற்று ரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட கிராமப்புற மற்றும் பெரிய-நகர்ப்புற பகுதிகளில், 63 பள்ளிகளின் வலையமைப்பு உருவாகியுள்ளது,

இந்த சமூகப் பள்ளிகள் பொதுவாக அதிக எண்ணிக்கையிலான பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளைத் தக்கவைக்கும் திறன் கொண்ட இடங்களில் உருவாக்கப்படுகின்றன என திரு. ஜாவேரி குறிப்பிடுகிறார். இத்தகைய சமூகங்கள் பெற்றோர்கள், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், பஹாய் உள்ளூர் ஆன்மீக சபைகள் ஆகியவற்றின் ஆதரவுடன், சமூகத் தலைவர்களுடன் இணைந்தும், சில சந்தர்ப்பங்களில் அரசாங்க முகவாண்மைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்தும், உறுதியான அடித்தளங்களில் பள்ளிகளை நிறுவ உதவுகின்றன.

1992-இல் ஸ்தாபிக்கப்பட்ட பனானி சர்வதேச பள்ளி மற்றொரு கல்வி முன்முயற்சி ஆகும். அது தார்மீக மற்றும் அறிவார்ந்த சிறப்பு கவனம் சாம்பியா பெண்கள் தரமான இரண்டாம் நிலை கல்வி வழங்குகிறது.  பள்ளி பஹாய் கல்வி பொருட்கள் மீது ஈர்க்கிறது என்று ஒரு பண்பு அபிவிருத்தி திட்டம் ஒரு சர்வதேச பாடத்திட்டம் இணைக்க கற்று வருகிறது.

இளைஞர்கள் தங்கள் இரண்டாம் நிலை கலவிகளில் நுழைந்து சமூகப் பிரச்சினைகள் பற்றிய ஓர் உயர்த்தப்பட்ட விழிப்புணர்வை உருவாக்கிக்கொள்ளும்போது, அவர்கள் இன்ஷின்டோ அறக்கட்டளையால் செயல்படுத்தப்படும் சமூக நடவடிக்கைக்கான ஆயத்தம் (PSA) திட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

திரு அப்டூ-சலாமி, இந்த PSA திட்டம் கல்வி, விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் தங்கள் சமூகங்களின் வளர்ச்சிக்காக அறிவியல் மற்றும் மதம் இரண்டிலிருந்தும் பெறப்பட்ட அறிவைப் பயன்படுத்துவதற்கான திறனை இளைஞர்களிடையே உருவாக்குகிறது என விளக்குகிறார்.

“PSA திட்டத்தின் பங்கேற்பாளர்கள் தங்கள் சமூகத்தின் அபிவிருத்தியைத் தங்கள் தோளில் சுமக்கக்கூடிய ஒன்றாகக் காண வருகிறார்கள். அவர்கள் வெளியில் உள்ளோரின் உதவிக்காக காத்திருக்கவில்லை. அவர்கள் தேவைகளை அடையாளம் கண்டு, அந்தத் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறார்கள், “என அவர் கூறுகிறார்.

விவசாயத் திட்டங்களைத் தொடங்கவும், பாலர் பள்ளிகளை நிறுவவும், சுற்றுச்சூழல் சுகாதார பரப்பியக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளை வடிவமைக்கவும், சிறு வணிகங்களைத் தொடங்கவும் பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்கின்றனர் என அவர் மேலும் கூறுகிறார்.

இந்த இளைஞர்கள் மூன்றாம் நிலைக் கல்வியை அணுகுகையில், சிலர் தங்கள் பல்கலைக்கழகப் படிப்புகளில் சிறந்து விளங்குவதற்கு கூடுதல் கல்வி உதவி தேவைப்படுகிறது. புதிதாக நிறுவப்பட்ட லோம்துன்ஸி அறக்கட்டளை இந்தத் தேவையை ஒரு டுடோரியல் திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்ய முற்படுகிறது; இது மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பு வகுப்புகளை வழங்குகிறது.

லோம்துன்ஸியைச் சேர்ந்த சுங்கு கபுசா கூறுகிறார்: “லோம்துன்ஸி அறக்கட்டளை மாணவர்களுக்குத் தொழில் ஆலோசனைகளை வழங்குகிறது, தொழிற்பயிற்சி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் அவர்களோடு உடன்செல்கிறது, மேலும் மாணவர்கள் தங்கள் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க அனுமதிக்கும் தொழில்களைத் தொடர உதவுகிறது.”

மூன்றாம் நிலைக் கல்வியில் நுழைந்தவுடன், இந்தக் கல்வி முன்முயற்சிகளின் ஊடாகச் சென்ற இளைஞர்கள், பஹாய் கொள்கைகளின் அடிப்படையில் சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கு நிலையாக ஆழமடைந்துவரும் ஆவலை உணர்கிறார்கள். உலகளாவிய செழுமைக்கான ஆய்வுக்கழகம் இளங்கலை கருத்தரங்குகளை வழங்குகிறது; இது பல்கலைக்கழக மாணவர்களுக்கு சமூக மேம்பாட்டுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் ஒரு பஹாய் கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தக் கருத்தரங்குகளின் நோக்கங்களுள் ஒன்று, பங்கேற்பாளர்கள் தங்கள் பல்கலைக்கழகக் கல்வியை சமூகத்தின் தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகளுடன் ஒருங்கிணைந்த ஒன்றாகக் காண உதவுவதாகும்.

கலாச்சாரத்தில் மேம்பாடு

லுசாகாவில் நடந்த தேசிய கூட்டத்தில் பெறப்பட்ட நுண்ணறிவுகளில் சில, கிராமப்புறங்களின் கலாச்சாரத்தின் மீது பஹாய் கல்வி முன்முயற்சிகளின் தாக்கத்தின் ஆரம்ப அறிகுறிகள் இருந்தன, குறிப்பாக சமூக அல்லது கலாச்சார தடைகள் இளைஞர்களின் கல்வி அனுபவத்தைத் தடுக்கும் இடங்களில் இவை காணப்பட்டன.

சமூகப் பள்ளித் திட்டத்தைச் சேர்ந்த க்ளைவ் லெங்வே கூறுவதாவது: “பெற்றோர்களும் பரந்த சமூகமும் ஸாம்பியா நாட்டு பஹாய்களின் வெவ்வேறு கல்வித் திட்டங்களுடன் தொடர்பு கொள்ளும்போது, அறிவார்ந்த மற்றும் ஆன்மீகக் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் வளர்கிறது.”

வடமேற்கு மாகாணத்தில் உள்ள பயிற்சிக்கழகத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளரான போலீன் கௌம்பா பின்வருமாறு விவரிக்கிறார்: “சில கிராமங்களில், பெண்களுக்கு அவர்கள் கல்விக்கான ஆதரவு இருப்பதில்லை. இளவயதிலேயே திருமணத்தைப் பற்றிய பாரம்பரிய பழக்கவழக்கங்களின் அழுத்தத்தை அவர்கள் அனுபவிக்கின்றனர்.

“ஆனால் இந்தப் பெண்கள் பஹாய் சமூகத்தின் கல்வித் திட்டங்களில் பங்கேற்று, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அவர்களுள் பெற்றோரும் குடும்பங்களும் ஒரு வித்தியாசத்தைக் காண்கின்றனர்; இளம்வயது திருமணத்தைப் பற்றிய அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது.

திருமதி கௌம்பா மேலும் கூறுவதாவது: “இந்த இளம் பெண்கள் தங்கள் கல்வியைத் தொடர்கின்றனர், மேலும் தங்களை மாற்றத்தின் முகவர்களாக, தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு உண்மையிலேயே பங்களிக்கக்கூடிய மக்களாகக் காண வருகின்றனர்.”

லோம்துன்ஸி அறக்கட்டளையைச் சேர்ந்த மிஸ் கபுசா, இந்த ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் கல்வி கட்டாயங்கள் அனைத்தும்—ஆன்மீக மற்றும் தார்மீக திறன்களை வளர்த்தல், கல்வியில் அதிசிறப்பை ஊக்குவித்தல், மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான திறனை உயர்த்துதல்— இளைஞர்கள் தங்கள் சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்த தங்கள் படைப்பு மற்றும் அறிவார்ந்த திறன்களை திசைதிருப்ப உதவுகின்றன என விளக்குகிறார்.

அவர் சொல்வதாவது: “இந்த இளைஞர்கள் தங்கள் சக பிரஜைகளுக்குச் சேவை செய்யும்போது கல்விபயில்வது சாத்தியமே என்னும் ஒத்திசைவான வாழ்க்கை வாழ்வதைப் பற்றி கற்றுக்கொள்கின்றனர். மூன்றாம் நிலைக் கல்வியை முடித்தவுடன், அவர்கள் தங்கள் தொழிலின் மூலம் தங்கள் சமூகங்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்கத் திரும்பி வருகின்றனர்.”

உரையாடலை அடித்தட்டிற்கு விரிவுபடுத்துதல்

லூசாகாவில் நடைபெற்ற தேசிய நிலையிலான கலந்துரையாடல் உள்ளூர் மட்டத்தில், குறிப்பாக அண்டைப்புறங்களிலும் கிராமங்களிலும் இப்போது தொடர்கின்ற பலவற்றில் முதலாவதாக இருந்தது என திருமதி கபுசா-லின்செல் விளக்குகிறார்.

வடமேற்கு மாகாணத்தின் கட்டுயோலா கிராமத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள இந்தக் கலந்துரையாடல்களில் முதலாவது கலந்துரையாடல், ஆரம்பக் கல்வி முதல் மூன்றாம் நிலைக் கல்வி வரையான தமது சமூகங்களின் அறிவாற்றல், தார்மீக மற்றும் ஆன்மீக அபிலாஷைகளை நிவர்த்தி செய்து, தற்போதுள்ள முன்முயற்சிகளின் அஸ்திவாரங்களை எவ்வாறு பலப்படுத்துவது என்பதை ஆராய்வதற்காக முழுக் குடும்பங்கள், ஆசிரியர்கள், பாரம்பரியத் தலைவர்கள் மற்றும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1615/

உலகின் இராணி


இங்கிலாந்தின் எலிஸபெத் ராணியார் 8 செப்டம்பர் 2022-இல் மரணமடைந்தார். ஊடகங்கள் அவரது பெருமையைப் புகழ்பாடுகின்றன. இவர் எழுபது ஆண்டுகள் இங்கிலாத்திற்கும் வேறு பல நாடுகளுக்கும் தேசத் தலைவராக இருந்துள்ளார். காமல்வெல்த் நாடுகளின் உருவாக்கத்திற்கு இவர் தூண்டுகோலாக இருந்துள்ளார். இந்த எலிசபெத் ராணிக்கும் நமது பஹாய் சமயத்திற்கு ஒரு தொலைதூர தொடர்பு உள்ளது. இந்தத் தொடர்பு சுமார் 150 வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. பஹாவுல்லா 1868 முதல் 1870 வரை உலகத் தலைவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நிருபங்கள் வரைந்தார். அவற்றில் அவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்கள் அனைவரையும் அமைதியின்பால் திரும்பும்படியும் போர்களை நிராகரிக்கும்படியும் வலியுறுத்தினார். அவ்வாறு நிருபங்கள் பெற்றவர்களுள் இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியும் ஒருவராவார்.

விக்டோரியா இராணியின் பொன்விழா – 1897

பஹாவுல்லாவிடமிருந்து நிருபத்தைப் பெற்ற விக்டோரியா மகாராணி அந்த நிருபத்தைப் படித்துவிட்டு, “இது கடவுளிடமிருந்து வந்ததென்றால் அது நிலைக்கும், இல்லையெனில் அதனால் எந்தப் பாதகமும் விளையாது,” என்றாராம். இவரது மகன் 7-வது எட்வர்ட், இவரது மகன் 5-வது ஜோர்ஜ், இவரது மகன் ஆறாவது ஜோர்ஜ். இந்த ஆறாவது ஜோர்ஜுக்குப் பிறந்தவர்தான் எலிஸபெத் ராணி. அதாவது எலிசபெத் இராணியின் தாத்தாவான 5-வது ஜோர்ஜின் பாட்டிதான் விக்டோரியா மகாராணி. விக்டோரியா ராணியின் அந்தப் பதிலின், விடையிறுப்பின் விளைவாக, கடவுளின் அருட்கொடையாக பிற்காலத்தில் அவருடைய பேத்தியான ருமேனியாவின் மரீ இராணியார் பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்டார். மேலும் ஒரு விளைவாக அன்றைய பாலஸ்தீனத்தில் அப்துல்-பஹாவின் மனிதநேய சேவைகளுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு ‘சர்’ பட்டம் (Abdu’l-Baha Abbas, KBE) வழங்கி கௌரவித்தது. அந்தப் புகழ் அப்துல் பஹாவுக்கு அல்ல, மாறாக அப்துல் பஹாவுக்கு அந்தப் பட்டத்தை வழங்கும் அருட்கொடையினால் பிரி்ட்டிஷ் அரசாங்கமே கௌரவம் பெற்றது. பட்டத்தைப் பெற்ற அப்துல்-பஹா அதைக் கடைசி வரை பயன்படுத்தவே இல்லை. பல சாம்ராஜ்யங்கள் வீழ்ந்தபோதும் பிரிட்டிஷ் பேரரசு உலகின் பல பாகங்களில் நீண்டகாலம் நிலைத்திருந்தது. இது அன்று விக்டோரியா இராணி பஹாவுல்லாவின் நிருபத்திற்கான விடையிறுப்பின் விளைவான கடவுளின் அருளன்றி வேறில்லை.

ஜனவரி 19, 2000-த்தில் பஹாய் உலகிற்கும் இராணியை போன்றிருந்த, ஓர் இராணியைவிட உயர்ந்த ஸ்தானம் கொண்ட ஒருவர் விண்ணேற்றம் அடைந்தார். அவரைச் சுற்றியிருந்த கடவுள் சமய திருக்கரங்கள் அவரை ‘உலகின் இராணி’ என அழைத்தனர். அவருடைய பண்புகளும் குணங்களும் அத்தகையதாக இருந்தது. அவர் தாம் வாழ்ந்திருந்த, அப்துல்-பஹாவின் இல்லத்திற்கு எதிரே இருந்த ஒரு சிறு தோட்டத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். புனித நிலத்திற்குச் செல்லும் பஹாய் புனித யாத்ரீகர்கள், அவரது கல்லறைக்குச் சென்று பிரார்த்தனைகள் கூறத் தவறுவதே இல்லை.

ராணிகளும் பொறாமை கொள்ளும் கம்பீரத் தோற்றம்

அவர் (அமாத்துல் பஹா) பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு (1924) ஓர் இளம் பஹாய் ஆக இருந்தபோது, வட அமெரிக்காவை விட்டு வெளியேறியிருந்தார்; அப்போது, அவர் மே மேக்ஸ்வெல்லின் மகள் என அறியப்பட்டிருந்தார். இப்போது, அவர் அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனும் என்னும் பெயருடன் (இப்பெயர் அப்துல்-பஹாவினால் வழங்கப்பட்டது), அன்பார்ந்த பாதுகாவலர் ஷோகி எஃபெண்டியின் மனைவியாக, கடவுள் சமயத்தின் ஒரு திருக்கரமாக, (அமெரிக்கா) திரும்பிக் கொண்டிருந்தார். வில்மெட்டில், ஓர் இராணியைப் போன்று அவர் உரையாற்ற எழுந்தார். அவருடைய மென்மையான மேலாடை அவரது அழகான இளம் முகத்திற்கு வடிவம் தந்தது. மேலும், புகைப்படங்களிலிருந்தும் கூட அவர் பஹாய்கள் மீதும், பஹாய் அல்லாத சமய ஆர்வலர்கள் மற்றும் புகழ்பெற்ற பேச்சாளர்கள் மீதும் அவர் எவ்வாறு ஒரு மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பதை எளிதில் காணலாம். – https://www.bahai.org/documents/essays/nakhjavani-bahiyyih/tribute-amatulbaha-ruhiyyih-khanum

உதாரணமாக, பஹாய் சமயத்தின் அம்பாஸடர் (தூதர்) என்னும் முறையில் அவரது (ரூஹிய்யா காஃணும்) பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும், தேசிய, உள்ளூர் அல்லது கிராம மட்டங்களில் உள்ள அரசாங்கத் தலைவர்களையும் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்தார், சமூகத்தின் ஒரு வகுப்பினரிலிருந்து மற்றொரு வகுப்பினருக்கு வெகு எளிதாக விஜயம் செய்தார். அவர் எல்லா விதத்திலும் ஓர் இராணியாக, கௌரவத்திற்கும் மரியாதைக்கும் தகுதியுடையவராக இருந்தபோதிலும், அவர் எப்பொழுதும் சட்டரீதியான அதிகாரம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் இந்த சின்னங்களை மரியாதையுடனும் இயல்பான பணிவுடனேயே அணுகினார். -https://www.bahai.org/documents/essays/nakhjavani-bahiyyih/tribute-amatulbaha-ruhiyyih-khanum

இந்த இராணியின் (அமாத்துல் பஹா) புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அது காலத்தால் அழியாது, நூற்றாண்டுகளின் நகர்ச்சி அவரது உண்மையான நிலையை உலகத்திற்கு மேன்மேலும் வெளிப்படுத்தும்.

BIC அடிஸ் அபாபா: பெண்கள் மீதான காலநிலை நெருக்கடியின் சமமற்ற தாக்கத்தை நிவர்த்தி செய்தல் 


இணையத்தில் கதையைப் படிக்க அல்லது கூடுதல் புகைப்படங்களைப் பார்க்க, news.bahai.org -ஐப் பார்வையிடவும்.

BIC அடிஸ் அபாபா, 31 ஆகஸ்ட் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) அடிஸ் அபாபா அலுவலகம் சமீபத்தில் நடத்திய கருத்தரங்கம், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் என்னும் கோட்பாடு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு இன்றியமையாதது என வலியுறுத்தி, பெண்கள் மீதான காலநிலை நெருக்கடியின் சமத்துவமற்ற பாதிப்பை ஆராய்ந்தது.

” காலநிலை மாற்றமானது, பாலின ஏற்றத்தாழ்வுகள் உட்பட தற்போதுள்ள சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் பெருக்கி என பெருமளவில் ஒப்புக் கொள்ளப்படுகிறது” என எமோரி பல்கலைக்கழகத்தின் அனைத்துலக சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் பாலினத்தின் பேராசிரியரும் பஹாய் சமூகத்தின் உறுப்பினருமான அட்டியெனோ இம்போயா கூறினார்.

“பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் சட்டமியற்றல் மற்றும் சட்டவியல் செயல்முறைகள் முக்கியமானவை என்றாலும், பெரிய பிரச்சினை இங்கு மெய்யியல் (ontology) குறித்தது, மற்றும் மனிதர்கள் என்னும் முறையில் நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம்” என்பதாகும் என டாக்டர் எம்போயா கூறினார். சுற்றுச்சூழல் சீரழிவு என்பது சமூக, தார்மீக மற்றும் ஆன்மீக தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாத வாழ்க்கை குறித்த முற்றிலும் லௌகீகவாத அணுகுமுறையின் விளைவு என அவர் விளக்கினார்.

“நம்மை நாம் மனிதர்கள் என்னும் முறையில் எப்படிப் பார்க்கின்றோம்? நமது யதார்த்தம் என்ன? நாம் வெறும் லௌகீக, சுயநலம் மிக்க உயிரினங்களா?” என டாக்டர் எம்போயா கேள்வி எழுப்புகிறார்.

நாகரிகத்தின் முன்னேற்றம் பற்றிய பஹாய் போதனைகளை குறிப்பிட்டு, “நமக்கு ஓர் ஆன்மீக யாதார்த்தம் உள்ளது. அது பாலினம் இல்லாத ஒரு ஆன்மா உள்ளது என்னும் யாதார்த்தம். இந்த நிலைப்பாட்டில் இருந்து உலகில் செயல்படுவதால், புதிய மதிப்புகள், புதிய சமூக விதிமுறைகள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் இயற்கையுடன் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் புதிய ஸ்தாபன ஏற்பாடுகளை நாம் பின்பற்ற முடியும்,” என அவர் கூறினார்.

இதன் ஒளியில், பருவநிலை தொடர்பான பிரச்சினைகள், மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படும் இடம்பெயர்வு போன்றவற்றினால் உண்டாகும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படும் இடையூறுகள் ஆண்களை விட பெண்களை எவ்வாறு அதிகம் பாதிக்கின்றன என்பதைப் பங்கேற்பாளர்கள் ஆய்வு செய்தனர்.

உதாரணமாக, கிராமப்புறங்களில் இருந்து தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக ஆண்கள் இடம்பெயர்வது பெண்கள் மேலும் அதிகமாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை டாக்டர் எம்போயா விளக்கினார்.

“இது பெண்களுக்குக் கிடைக்கும் நேரத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது என்பது அர்த்தமாகும்,” என அவர் கூறினார். “குழந்தை பராமரிப்பு மற்றும் உணவு தயாரிப்பதற்கான நேரம் குறைக்கப்படுகின்றது.. பெண் பிள்ளைகள் தங்கள் தாய்மார்களுக்கு உதவும்போது அவர்களின் பள்ளிப் படிப்பும் தடைபடும்.

இடம்பெயர்வு ஒரு காரணியாக இல்லாவிட்டாலும் கூட, காலநிலை மாற்றம் பாலின ஏற்றத்தாழ்வுகள், பெண்களின் பொருளாதார நிலை மற்றும் சமூக விதிமுறைகளால் வரையறுக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் குறைதல் போன்றவற்றினால் ஆண்களை விட பெண்களின் மீதே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இந்தப் போராட்டங்கள் இருந்தபோதிலும், ஆப்பிரிக்காவில் காலநிலை நடவடிக்கைகளில் முன்னணியில் பெண்களே உள்ளனர், என்பதை பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.

“நாங்கள் பெருமளவு செய்கிறோம். யாராவது வந்து எங்களைக் காப்பாற்றுவார்கள் என நாங்கள் காத்திருக்கவில்லை,” என ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கான ரோம் மையத்தின் இயக்குனர் முசோண்டா மும்பா கூறினார்.

டாக்டர். மும்பா, சஹேல் மண்டலம், மாலி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் புதிய வலையமைப்பைப் பற்றி பேசினார், இது இந்த மண்டலங்களில் அடித்தட்டு காலநிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கின்றது. இந்த முயற்சி, சுற்றுச்சூழல் சவால்களைத் தணிப்பதற்கு ஆப்பிரிக்காவில் பெண்கள் மேற்கொண்ட எண்ணற்ற நடவடிக்கைகளுக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

மேற்கொண்டு கருத்துகளில், “சமூக மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக மனித திறனாற்றலைத் திறக்கும் செயல்திறன் கொண்ட” சமூக வாழ்க்கையின் புதிய அணுகுமுறைகள் மற்றும் வடிவங்கள் மூலம் காலநிலை மாற்றப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என டாக்டர் எம்போயா வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தணிக்க வேண்டுமானால், இயற்கையோடு நாம் பழகும் போது, ​​மனிதர்கள் என்னும் முறையில் நமது பங்கிற்குப் பணிவு தேவை என அவர் மேலும் கூறினார். COP27 என அழைக்கப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டிற்கு முன்னதாக அடிஸ் அபாபா அலுவலகம் நடத்தும் தொடர் விவாதங்களின் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கம் நடைபெற்றது, மேலும் இது காலநிலை மாற்றம் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த சொல்லாடல்களில் BIC பங்களிப்பின் ஒரு பகுதியாகும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1614/