
கூடுதல் படங்களைக் காண https://news.bahai.org/story/1618/ செல்லவும்
அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 3 அக்டோபர் 2022, (BWNS) – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பஹாய்கள் (UAE) சமகால சமூகத்தில் மதத்தின் ஆக்கப்பூர்வமான பங்கு பற்றிய ஒரு புதிய சிந்தனை வெளிப்பட ஒரு புதிய வகையான உரையாடலைத் தேடுகின்றனர்.
“மக்களின் மேன்மையை ஊக்குவிப்பதிலும், வளமான மற்றும் அமைதியான நாகரிகத்தை உருவாக்க மனிதகுலத்தை ஊக்குவிப்பதிலும் மதம் ஒரு தனித்துவமான பங்கைக் கொண்டுள்ளது” என ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பஹாய் அலுவலகத்தின் உறுப்பினரான ரோயா ஸபெட் கூறுகிறார்.
செய்திச் சேவைக்கு அளித்த ஒரு நேர்காணலில், டாக்டர் ஸபெட் இந்த கருப்பொருளில் தேசிய உரையாடலுக்கு பங்களிக்கும் முயற்சிகளில் அலுவலகத்தின் நுண்ணறிவுகளையும் அனுபவங்களையும் ஆராய்கிறார்.
ஒரு பகிரப்பட்ட அடையாளத்தை ஊக்குவித்தல்
மற்ற சமூக நடவடிக்கையாளர்களுடனான கலந்துரையாடல்களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பஹாய்கள் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதும் சகவாழ்வை ஆதரிப்பதும் முக்கியம் என்றாலும், மனிதகுல ஒருமைப்பாடு என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பகிரப்பட்ட அடையாளம் நீடித்த முன்னேற்றத்திற்கு அவசியம் என்னும் கருத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
“மனிதகுலம் ஒரு வேரூன்றிவிட்ட முரண்பாட்டின் வடிவத்தை எதிர்கொண்டு, நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட ஓர் உலகத்தை நோக்கி நகர வேண்டுமானால், இந்தக் கோட்பாடு குறித்த நனவுணர்வும் ஏற்பும் தேவை” என டாக்டர் ஸபெட் கூறுகிறார்.
தேசிய மட்டத்தில் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட கலந்தாலோசனை தளங்கள், பல்வேறுபட்ட முன்னோக்குகளை ஒத்திசைக்கவும், ஒற்றுமைக்கான தளங்களை விரிவுபடுத்தவும் அனுமதிக்கும் உள்ளடங்கிய சூழல்களில் மத சமூகங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமை சமூக அமைப்புகளின் தலைவர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைத்துள்ளன.
“அமைதியை நிலைநாட்டுவது மனிதகுலம் முழுவதின் பொறுப்பாகும். இதை அடைவதற்கு மக்கள் தங்களை (மற்றவர்களைவிட) உயர்ந்தவர்களாகக் கருத அனுமதிக்கும் அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் கைவிடுவது அவசியம்” என அவர் தொடர்கிறார். “வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைத்து பின்னணி மக்களும் நடவடிக்கை எடுத்து விஷயங்களை ஒன்றாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை இந்த கருத்தரங்குகள் ஊக்குவிக்கின்றன.”
நம்பிக்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் ஒரு நிலைத்தன்மையை அடைதல்
பங்கேற்பாளர்கள் நம்பிக்கைக்கும் நடைமுறைக்கும் இடையிலான ஒத்திசைவு குறித்த கருத்தைப் பிரதிபலிக்கும் போது மத சமூகங்களுக்கிடையில் கலந்துரையாடல்கள் அதிக பயனுள்ளதாக இருக்கும் என வெளியுறவு அலுவலகம் கண்டறிந்துள்ளது.
இந்த யோசனையை 2022 அபுதாபி சர்வதேச புத்தகக் கண்காட்சியில் டாக்டர் சபெட் குறித்துரைத்தார், “உலக அமைதியை மேம்படுத்துவதில் மதத்தின் பங்கு” என்னும் தலைப்பில் ஒரு கருத்தரங்கில், “மனிதகுலத்தின் நலனுக்காகச் செயல்படுவதற்கான வலுவான விருப்பத்தை மதம் மக்களிடையே பேண வேண்டும்” என அவர் கூறினார். மதத்தின் பலன்களை, உயர்ந்த அளவிலான ஒற்றுமை மற்றும் அமைதியை உருவாக்குவதில் அதன் பங்களிப்பின் அளவைக் கொண்டு அளவிட முடியும்.”
பல்வேறு சமூக நடவடிக்கையாளர்களிடையே அதிக ஒத்துழைப்பைப் பேணுதல் மற்றும் நட்புறவை வலுப்படுத்துதல் பற்றிய அதன் பல நுண்ணறிவுகள் பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் இருந்து பெறப்பட்டவை என வெளியுறவு அலுவலகம் குறிப்பிடுகிறது.
டாக்டர் ஸபெட் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “இந்த முயற்சிகள் அனைவருக்கும் திறந்திருக்கும் மற்றும் எந்த விதமான தப்பெண்ணமும் இல்லாத கலந்தாலோசனைச் சூழல்களில் தங்கள் சக குடிமக்களுக்குச் சேவை செய்வதற்கான மக்களின் திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.”
இந்த நடவடிக்கைகளின் மூலம், பங்கேற்பாளர்கள் நீதி, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம், அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கம் போன்ற ஆன்மீக கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் அண்டைப்புறங்கள் எதிர்கொள்ளும் சமூக சவால்களின் மூல காரணங்களை அடையாளம் காணும் திறனை மேம்படுத்துகிறார்கள்.
“அந்தச் சூழலில், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்க்கை குறித்த தங்களின் நோக்கம் பற்றிய தெளிவைப் பெறுகிறார்கள், தங்கள் சக குடிமக்களின் நல்வாழ்வு குறித்த விருப்பத்தை வளர்த்துக்கொள்கிறார்கள், மேலும் நடைமுறை மற்றும் ஆணித்தரமான சொற்களில் தங்கள் சுற்றுப்புறங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒன்றிணைந்து பணியாற்றுவதன் மூலம் அவர்களின் வேறுபாடுகளைக் கடக்கிறார்கள்” என டாக்டர் சபெட் கூறுகிறார்.
வரவிருக்கும் மாதங்களில் நடைபெறும் தொடர்ச்சியான கருத்தரங்குகளில் மதம் எவ்வாறு சமூக மாற்றத்திற்குப் பங்களிக்க முடியும் என்பது குறித்த தனது ஆய்வைத் தொடர வெளியுறவு அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1618/