

பஹாய் அனைத்துலக சமூகம்
பிரஸ்சல்ஸ் அலுவலகம்
7 அக்டோபர் 2022
BIC பிரஸ்ஸல்ஸ், 7 அக்டோபர் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்சல்ஸ் அலுவலகம் (BIC) ஒரு நிலையான உணவு முறைமையை நோக்கி என்னும் தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது, இது உலகளாவிய உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான மனிதகுல ஒருமை குறித்த கோட்பாட்டின் தாக்கங்களை ஆராய்கிறது.
உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான கொள்கைகளைப் பற்றி விவாதிப்பதற்காக செக் குடியரசில் கூடியிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) விவசாய அமைச்சர்களிடம் BIC தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கை, அந்த கூட்டத்தில் நடந்த விவாதங்கள், .. ஒட்டுமொத்த சவால்களை எதிர்கொள்ள, “சொல்லாடல்களுக்குச் சரியான நேரத்தில் வாய்ப்பை வழங்குகி,” ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாயக் கொள்கைகளின் பரந்த தாக்கத்தை ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

பி.ஐ.சி. அதன் அறிக்கையில், முடிவெடுக்கும் செயல்முறைகளில் பரந்த பங்கேற்பு “ஒரு சகிக்கத்தக்க ஒருமித்த கருத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தையாக மட்டும் புரிந்து கொள்ளப்படக்கூடாது. மாறாக, அனைவரும் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடும் மற்றும் பங்கேற்கும் நிலையான உணவு முறைகள் எவை என்பது பற்றிய ஒரு கூட்டு விசாரணையாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும், என முன்மொழிகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்ற, அடிஸ் அபாபா, பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஜெனீவாவில் உள்ள மூன்று பி.ஐ.சி அலுவலகங்கள் அவ்வப்போது ஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் உள்ள அதிகாரிகள், பலதரப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமை சமூக அமைப்புக்களை அவசியமிக்க பிரச்சினைகள் பற்றிய ஒரு கூட்டு ஆய்வுக்காக ஒன்றிணைக்கும் போது, உணவுப் பாதுகாப்பு பற்றிய விவாதத்திற்கு பி.ஐ.சி.யின் சொந்த பங்களிப்புக்கான அடிப்படையை இந்த அணுகுமுறை அமைத்துள்ளது.
பி.ஐ.சி நடத்திய சமீபத்திய கலந்துரையாடல்கள் விவசாயக் கொள்கைகளுக்கு இடையிலான உறவு, கிராமப்புற நிலைத்தன்மை மற்றும் புலம்பெயர்வுக்கான காரணங்கள் போன்ற தலைப்புகளை ஆராய்ந்துள்ளன. இந்த உரையாடல்கள், ஒருமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் பிரச்சினைகள் ஆராயப்படும்போது, பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த சூழலில் மட்டுமல்ல, மனிதகுலம் முழுவதிலும் தங்கள் முடிவுகள் மற்றும் செயல்களின் தாக்கத்தை சிறப்பாகக் கருத்தில் கொள்ள முடியும் என்பதைக் காட்டுகின்றன.

இந்தத் துறையில் பி.ஐ.சி.யின் பிற முயற்சிகளில் மனித சமூகத்தில் முதல் ஆக்கமிக்க முகவர் என தலைப்பிடப்பட்ட அறிக்கையும் அடங்கும்: உணவுப் பாதுகாப்புக் கொள்கையின் மையத்தில் விவசாயிகளை வைப்பது, உள்ளூர் மட்டத்தில் விவசாயிகள் மற்றும் சமூகங்களால் உணவு உற்பத்தி குறித்து உருவாக்கப்படும் அறிவு உணவு மற்றும் விவசாயம் குறித்த சர்வதேச கொள்கைகளுக்கு எவ்வாறு அறிவூட்ட முடியும் என்பதை ஆராய்தல் ஆகியவை அடங்கும்.
பிரஸ்சல்ஸ் அலுவலகத்தைச் சேர்ந்த ரேச்சல் பயானி பின்வருமாறு கூறுகிறார்: “உலகிற்கு நிலையான, சுரண்டப்படாத, மற்றும் மனிதகுலம் முழுவதற்கும் வழங்குகின்ற ஒரு உணவு முறை தேவைப்படுகிறது. எந்த ஒரு நடவடிக்கையாளரோ எந்த ஒரு கண்டமோ தற்போது ஓர் உணவு அமைப்பை ஒரு திடமான அடித்தளத்தின் மீது வைக்க அனுமதிக்கும் அனைத்து நுண்ணறிவுகளையும் கொண்டிருக்கவில்லை.
“ஆராய்ச்சியாளர்கள் முதல் விவசாயிகள் வரை உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்த சவாலைப் பற்றி ஒன்றாகச் சிந்திக்கும் மற்றும் உணவு முறைகள் குறித்து அர்த்தமுள்ள முடிவுகள் எடுக்கப்படும் விவாதங்களுடன் இணைக்கப்பட்டுள்ள, ஒரு கூட்டு விசாரணை மற்றும் கற்றல் செயல்முறை நமக்குத் தேவைப்படுகிறது.”
இப்புதிய அறிக்கையை சமூக நடவடிக்கையாளர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு பற்றிய பிரச்சினையில் அக்கறை கொண்ட அதிகாரிகளுடன் மேலும் ஆராய்வதற்குப் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் வரவிருக்கும் மாதங்களில் பல நிகழ்வுகளை நடத்தவிருக்கிறது. மூலாதாரம்:
