

https://news.bahai.org/story/1622/
25 அக்டோபர் 2022
அஸ்தானா, கஸாக்ஸ்தான் – போப்பாண்டவர் பிரான்சிஸ் மற்றும் அல்-அஸ்ஹாரின் மூத்த இமாம் உட்பட உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்கள், கஸாக்ஸ்தான், அஸ்தானாவில் உள்ள உலக மற்றும் பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் 7-வது மாநாட்டில், தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் மதத்தின் பங்கை ஆராய சமீபத்தில் கூடினர். .
நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரும் அவ்வொன்றுகூடலில் பஹாய் சமூக பிரதிநிதிகளில் ஒருவருமான லியாசத் யங்கலியேவா கூறுகையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மன்றம், மதச் சமூகங்கள் அதிக புரிதலையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது.
“அமைதியை நிலைநாட்டுவதே மதத்தின் பங்கு” என அவர் கூறுகிறார். “ஆயினும், நீண்டகால தப்பெண்ணங்கள், சமூகத்தின் பிரிவுகளுக்கு எதிரான வன்முறைகளை அங்கீகரிக்கும் மாறாமல் தொடர்ந்துவரும் மற்றும் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு மாற்றப்பட்ட தீங்கு விளைவிக்கும் மரபுகள் உலகம் முழுவதும் உள்ள மக்களைத் தொடர்ந்து பிரிக்கின்றன.”

இந்த சவால்கள் இருந்தபோதிலும், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை உருவாக்குவதில் மதம் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்பதற்கான தெளிவான அறிகுறிகளும் உள்ளன என திருமதி. யங்கலியேவா விளக்கினார். பெருந்தொற்று மற்றும் சமீபத்திய சுற்றுச்சூழல் நெருக்கடிகளை சமாளிப்பதில் சமய சமூகங்கள் பேரழிவுகளுக்கு விடையிறுப்பதில் தங்கள் வேறுபாடுகளை வென்றுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அம்மன்றத்தின் பிரதான அமர்வில், பஹாய் சர்வதேச சமூகத்தின் பொதுச்செயலாளர் டேவிட் ரட்ஸ்டைன் தமது கருத்துக்களில், இதே உணர்வுகளை எதிரொலித்து, நம்பகத்தன்மையானது “மற்றவர்களுக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சேவை செய்வதில் அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் காண்கிறது” என கூறினார்.
நம்பகமான தலைவர்களை விவரிப்பதில், “அவர்கள் கூட்டு முடிவெடுப்பையும் கூட்டு நடவடிக்கையையும் வரவேற்கிறார்கள் மற்றும் நீதி மற்றும் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கான அர்ப்பணத்தினால் தூண்டப்படுகிறார்கள்,” என கூறினார்:
சமூக முன்னேற்றம் ஆன்மீகக் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட எதிர்காலத்தைப் பற்றிய பகிரப்பட்ட பார்வையைப் பொறுத்துள்ளது என டாக்டர் ரட்ஸ்டேய்ன் மேலும் கூறினார்.
“மனித இனத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதே வேளையில், அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் பிரத்தியேகங்களையும் ஒழிப்பதில் நாம் வெற்றிபெற வேண்டும். பெண் மற்றும் ஆணின் சமத்துவத்தை நாம் நமது சொற்களிலும் செயலிலும் நிலைநிறுத்த வேண்டும். அறிவியல் மற்றும் மதத்தின் நல்லிணக்கத்திற்காக நாம் சந்தேகத்திற்கு இடமின்றி வாதிட வேண்டும்.
டாக்டர். ருட்ஸ்டீன் பஹாவுல்லாவின் எழுத்துக்களில் இருந்து மேற்கோள் காட்டி, மேலும் தொடர்ந்தார்: “எல்லா மக்களும் எப்போதும் முன்னேறி வரும் நாகரீகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்னும் கூற்று, முழு மனித குடும்பத்தின் அமைதி, செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கு பங்களிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை உணர்த்துகிறது. .”
மன்றத்தைப் பற்றிப் பிரதிபலிக்கும் வகையில், திருமதி யங்கலியேவா, கஸாக்ஸ்தானில் உள்ள மதத் தலைவர்களிடையே ஒத்துழைப்பின் உணர்வு இந்த நிகழ்விலிருந்து அதிகரித்துள்ளதாக கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: “மன்றம் முடிந்த சிறிது நேரத்திலேயே அஸ்தானாவில் உள்ள பஹாய் தேசிய அலுவலகத்தில் நாட்டின் மத விவகார அமைச்சகம் கூட்டிய கூட்டத்தில் இது தெளிவாக உணரப்பட்டது; அங்கு பல்வேறு சமய சமூகங்களின் பிரதிநிதிகள் அந்த மன்றத்தின் எதிர்காலம் குறித்து இணக்கமாக முறையில் ஆலோசனை நடத்தினர்.”
கஸாக்ஸ்தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜனாதிபதி காஸிம்-ஜொமார் தொகாயெவ் அவர்கள் புரவலராக செயல்பட்ட கருத்தரங்கில், இந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், பல்வேறு வகையான மதங்கள் மற்றும் தேசியங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1622/