BIC நியூ யார்க்: பவளப்பாறை மறுமீட்பு பற்றிய ஒரு குறும்படம் COP27-இல் திரையிடப்பட்டது


BIC நியூயார்க், 18 நவம்பர் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) தயாரித்த ஒரு குறும்படம், தனிநபர்கள், சமூகம் மற்றும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான ஆக்கபூர்வமான உறவுகள் வானுவாத்து, தன்னா கடற்கரையில் உள்ள ஒரு பவளப்பாறை (coral reef) சுற்றுச்சூழல் அமைப்பிற்குப் புத்துயிர் அளித்து பாதுகாக்க இளைஞர்கள் தலைமையிலான சமூக நடவடிக்கை முயற்சிக்கு எவ்வாறு வழி வகுத்தது என்பதை ஆராய்கிறது..

அந்த 13 நிமிடத் திரைப்படம், “தன்னா: தலைமைத்துவம் மற்றும் செயல்பாடு குறித்த ஒரு ஆய்வு” என்ற தலைப்பில், பருவநிலை மாற்றம் குறித்த சொற்பொழிவுக்கான BIC பங்களிப்பின் ஒரு பகுதியாகும். இது COP27 எனப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில் நேற்று திரையிடப்பட்டது. திரையிடலில் கலந்து கொண்டவர்களில் வானுவாத்துவைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளும் இருந்தனர்.

BIC குறும்படம் “தன்னா: தலைமைத்துவம் மற்றும் செயலில் ஒரு ஆய்வு” பஹாய் தார்மீகக் கல்வித் திட்டங்களால் உத்வேகம் பெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியை ஆராய்கிறது.

பஹாய் சமூகத்தின் உறுப்பினரும், வானுவாத்து பருவநிலை நடவடிக்கை வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான வில்லி மிசாக், திரையிடலின் போது தமது கருத்துக்களில், “பஹாய் தார்மீகக் கல்வித் திட்டங்களில் பங்கேற்ற இளைஞர்களின் முயற்சியில் இருந்து பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டம் உருவானது.

BIC-யின் பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர் மேலும் கூறுகையில், இந்தக் கல்வித் திட்டங்கள் இளைஞர்கள் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் மனிதகுல ஒருமைப்பாடு போன்ற ஆன்மீகக் கொள்கைகளைப் பயன்படுத்துவதை ஆராய உதவுகின்றன.

“இந்தத் திரைப்படம், சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் வகையில் அவர்கள் இணைந்து செயல்படும் போது பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகள் எவ்வாறு தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கின்றன என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு” என அவர் கூறினார். கடந்த இரண்டு வாரங்களாக, BIC-யின் பிரதிநிதிகள் COP27-இல் முறையான மற்றும் முறைசாரா அமைப்புகளில் பல விவாதங்களில் பங்கேற்று, சமூகத்திற்கும் இயற்கை உலகத்திற்கும் இடையிலான உறவை மறுபரிசீலனை செய்வதற்கான முக்கியமான அவசரத் தேவையை எடுத்துரைத்தனர்.

COP27 எனப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில் அந்த BIC குறும்படம் நேற்று திரையிடப்பட்டது. ரால்ப் ரெகன்வானு (மேல் வலது புகைப்படம்: இடது), வனுவாட்டுவின் காலநிலை மாற்றத் தழுவல் அமைச்சர், திரையிடலின் தொடக்கத்தில் கலந்து கொண்டார்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1626/

அப்துல்-பஹாவின் நினைவாலயம்: மேற்குக் கரைவிளிம்பின் (berm) அடித்தல படுகை நிறைவை அணுகிக்கொண்டிருக்கின்றது


15 நவம்பர் 2022

பஹாய் உலக மையம் – ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்கின்றன, மேற்குப் பகுதியின் கான்கிரீட் அடித்தள அடுக்கு ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டது. முடிந்ததும், பேர்ம்கள் (கரைவிளிம்புகள்) குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியுடன் இணைக்கப்படும், இது ‘அப்துல்-பஹாவின் புனித பூதவுடல் நிரந்தரமாக வைக்கப்படும் மத்திய கட்டிடத்தில் பரந்திருக்கும்.

நினைவாலய தளத்தின் முன்னேற்றம் பின்வரும் படங்களில் இடம்பெற்றுள்ளது.

பெர்ம்களைத் தயாரிப்பதில், விரிவாக்கப்பட்ட பாலிஸ்டைரீன் (EPS) தொகுதிகள் முதலில் ஒன்றுகூட்டப்பட்டு, சரிவின் வடிவத்தை உருவாக்க அடுக்கி வைக்கப்படுகின்றன. அடுத்து, மென்மையான மற்றும் தொடர்ச்சியான மேற்பரப்பை உருவாக்க, ஒரு சிறப்பு சரளை பம்பைப் (pump) பயன்படுத்தி, கட்டமைப்பிற்குள் சரளை ஊற்றப்படுகிறது. பின்னர், சரளையிலிருந்து கான்கிரீட்டை பிரிக்கும் ஓர் உரை (liner) போடப்படுகிறது. கான்கிரீட்டை வலுப்படுத்த உரையின் மேல் ரீபார் (இரும்புக் கம்பி) வலைப்பின்னல் வைக்கப்படுகிறது. கான்கிரீட் இறுதியாக மேலே ஊற்றப்படுகிறது. சிறிய சேவை வாகனங்கள் பெர்மில் சேதமடையாமல் பாதுகாப்பாக ஓட்டப்படுவதற்குக் கான்கிரீட் மேற்பரப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. முடிந்ததும், பெர்ம் மண்ணினால் மூடப்பட்டிருக்கும், பின்னர் புல், புதர்கள் மற்றும் பிற செடிகளல் நிலப்பரப்பு செய்யப்படும்.
நினைவாலயத்திற்கான கருத்துரு வடிவத்தின் படம். இது மேற்கு பேர்மை எடுத்துக்காட்டுகின்றது.
EPS கட்டமைப்பு அதன் இடத்திற்கு ஓங்கியைப் பயன்படுத்தி கீழிறக்கப்படுகின்றது. இது பேர்மின் ஆரம்ப வடிவத்தை வழங்குகிறது.
கட்டமைப்பிற்குள் கான்கிரீட் ஊற்றப்படுகின்றது
EPS கட்டமைப்பிற்குள் ஊழியர்கள் சரளையை கொட்டுகின்றனர். கான்கிரீட் ஊற்றப்படுவதற்குச் சரிவைச் சமப்படுத்துகின்றனர்.
மேற்கு பேர்ம் அடித்தலம் உறைகள் மற்றும் இரும்புக் கம்பிகளால் மூடப்படுகின்றது
மேற்கு பெர்மின் மடிப்புச் சுவர் பிளாசா மட்டத்தில் தண்ணீர் நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்த கூடுதல் நீர்ப்புக் காப்பைப் பெறுகிறது.
பேர்மின் சரிவுக்குள் கான்கிரீட் ஊற்றப்படுகின்றது
சூரியன் அடிவானத்தில் அஸ்தமிக்கும் போது மேற்குப் பகுதியின் காட்சி. வளைகுடாவின் குறுக்கே இடதுபுறம் தூரத்தில் ஹைஃபா நகரைக் காணலாம்.
கூடுதல் கான்கிரீட்டை–சுவர்களை மூடுவதற்கு பதிலாக ஸ்ப்ரே செய்யப்பட்ட கான்கிரீட்– வலுப்படுத்த கிழக்கு பெர்மில் உள்ள சுவரில் இரும்புக்கம்பிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட பின்னல்தட்டிக்கான கட்டமைப்பு தளத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த டிரெல்லிஸுக்குத் தேவைப்படும் துல்லியமான பரிமாணங்களுக்கு EPS தொகுதிகள் வெட்டப்படுகின்றன. தொகுதிகள் பின்னர் கண்ணாடியிழை மூலம் வலுவூட்டப்பட்டு, கம்பிப் பின்னல் நிறுவும் போது தொழிலாளர்கள் படிவங்களில் நடக்க அனுமதிக்கிறது, கான்கிரீட் ஊற்றப்படுவதை ஏதுவாக்குகிறது.
டிரெல்லிஸிற்கான EPS கட்டமைப்பைத் தயாரிக்க, கிழக்குப் பெர்ம் தற்போது தயாரிப்புத்தளமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மத்திய தூண்களைச் சுற்றியுள்ள சாரக்கட்டு, இறுதியில் டிரெல்லிஸைத் தாங்கும்.
வடக்கு பிளாசாவில் நடவு செய்யும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அவை கறுப்பு நீர்ப்புகா பொருளால் பூசப்பட்டு, சூரிய ஒளியில் இருந்து நீர்ப்புகாக்கப்படுவதைப் பாதுகாக்க தற்போது மூடப்பட்டிருக்கும்.
மத்தியதரை கடலில் அஸ்தமிக்கும் சூரியன் மேற்கு பேர்மிக்கு ஒளியூட்டுகிறது
சூரிய அஸ்தமனத்தின் போது மேற்கு பேர்மினுடைய மற்றொரு காட்சி

மூலாதாரம்: https://news.bahai.org/story/1625/

உணவுப் பாதுகாப்பு: விவசாய மீள்திறம் இளம் விவசாயிகளின் கல்வியைப் பொறுத்துள்ளது என BIC கூறுகிறது


ரோம், 11 நவம்பர் 2022, (BWNS) – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) ஜெனீவா அலுவலகம் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைமையகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியை ஆராய்வதற்காக ஒரு குழு (panel) விவாதத்தை நடத்தியது. கல்வி முறைகள் கிராமப்புறங்களில் உள்ள இளம் சிறு குழு விவசாயிகளின் சவால்கள் மற்றும் யதார்த்தங்களை எதிர்கொள்ள முடியும்.

உணவுப் பாதுகாப்பு பற்றிய சொற்பொழிவுக்குப் பங்களிக்கும் BIC இன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நிலையான விவசாய அமைப்புகளை உருவாக்க மனிதகுலத்தின் ஒருமைப்பாடு, அறிவியல் & மதத்தின் நல்லிணக்கம், மற்றும் நீதி போன்ற ஆன்மீகக் கோட்பாடுகளின் பயன்பாட்டை ஆராய்வதன் ஒரு பகுதியாக இந்த விவாதம் நடைபெற்றது. BIC நிகழ்வு இந்த ஆண்டு உலக உணவு கருத்தரங்குடன் சம நேரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது மற்றும் FAO-இன் பிரதிநிதிகள், இளம் விவசாயிகளின் ஐரோப்பிய கவுன்சில் (CEJA) மற்றும் பஹாய் உத்வேகம் பெற்ற அமைப்புகளுடன் பணிபுரியும் ஓர் ஆராய்ச்சியாளர் ஆகியோரை ஒன்றிணைத்தது.

BIC-யின் ஜெனீவா அலுவலகத்தின் சிமின் ஃபஹண்டேஜ் தமது தொடக்கக் கருத்துக்களில் பின்வருமாறு கூறினார்: “உலகின் பல பகுதிகளில், இளைஞர்கள் சமநிலையற்ற சவால்கள் மற்றும் பாதிப்புகளை எதிர்கொள்வதால், ஆபத்தான விகிதத்தில் விவசாயத் துறையை விட்டு வெளியேறுகின்றனர்.”

BIC பேனல் பங்கேற்பாளர்கள் (இடமிருந்து): சனெம் கவ்ருல், துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் பஹாய்-உத்வேக அமைப்புகளுடன் பணிபுரியும் ஆராய்ச்சி; டயானா லென்சி, இளம் விவசாயி மற்றும் இளம் விவசாயிகளின் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் (CEJA); பிஐசி ஜெனீவா அலுவலகத்தின் சிமின் ஃபஹண்டேஜ்; ஜென்னா டெஸ்டால், விவசாய மேம்பாட்டுக்கான இளம் தொழில் வல்லுநர்களின் இயக்குனர் (YPARD); மற்றும் கிறிஸ்டினா பெட்ராச்சி, FAO இ-கற்றல் பிரிவின் தலைவர்.

இந்தச் சவால்களில் சிலவற்றில், அறிவுக்கான அணுகல் இல்லாமையும் அடங்கும்; விவசாயத்திற்குத் திறமை மற்றும் முறையான கல்வி தேவையில்லை என்னும் கருத்து; மற்றும் விவசாய அறிவியல் குறித்த சில பல்கலைக்கழக திட்டங்கள் கோட்பாட்டில் (theory) கவனம் செலுத்துகின்றன, ஆனால் இளைஞர்கள் தங்கள் கிராமங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகளுக்கு அந்தக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

ஓர் ஆராய்ச்சியாளரான சனெம் கவ்ருல், உப-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள, விவசாய நடவடிக்கை-ஆராய்ச்சி திட்டங்கள் மூலம் இந்த சவால்களில் சிலவற்றை எதிர்கொள்ளும் நோக்கத்தை கொண்டுள்ள பஹாய்-உத்வேக அமைப்புகளின் வலையமைப்பிலிருந்து வெளிவரும் நுண்ணறிவுகளை ஆராய்ந்தார்.

“வேளாண் அறிவியல் மற்றும் விவசாயத்தின் மீதான அன்பை வளர்ப்பதற்கும்… இளைஞர்களின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தார்மீகத் திறன்களை உருவாக்குவதற்கும், அவர்களின் யதார்த்தங்களுக்குப் பொருந்தக்கூடிய விவசாய அறிவின் உருவாக்கம், பயன்பாடு மற்றும் பரப்புதல் ஆகியவற்றிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் இந்த அமைப்புகள் முயல்கின்றன” என திருமதி கவ்ருல் கூறினார். .

சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான இந்த பஹாய் முயற்சிகள் அனைத்தும், வெறும் உதவி பெறுபவர்களாக மட்டுமின்றி, அவர்களின் சொந்த லௌகீக, ஆன்மீக மற்றும் அறிவுசார் முன்னேற்றத்தின் முன்னணியாளராக மக்கள் இருக்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதாக அவர் மேலும் கூறினார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவு பகுதியில் பஹாய்-உத்வேக அமைப்புகளின் விவசாய முன்முயற்சிகள்.

இந்த அடிப்படைக் கொள்கையானது, பஹாய்-உத்வேக நிறுவனங்களால் வழங்கப்படும் திட்டங்களில் பங்கேற்பவர்கள் தங்கள் சமூகங்களில் தங்கி, அவர்களின் சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார யதார்த்தத்திற்கு ஏற்ற விவசாய அமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு விருப்பத்தை எழுப்புகிறது.

அறிவியல் மற்றும் மதம் இரண்டிலிருந்தும் அறிவு பெறுவதற்கான திறனை இளைஞர்களிடம் வளர்ப்பதற்கான அமைப்பின் முயற்சிகளின் விளைவு இது என திருமதி கவ்ருல் விளக்கினார்.

நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்களுள் வலுவான நோக்கத்தைப் பேணுகின்றன, அவர்களின் சாத்தியதிறன்களை வளர்த்துக் கொள்ளவும், சமூகத்தின் தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கவும் அவை உதவுகின்றன. “பொருளாதார உறுதியற்ற காலங்கள் உட்பட உற்பத்தி செயல்பாட்டில் இயற்கையாக எழும் எந்தவொரு சிரமத்தையும் இளைஞர்கள் தாங்கிக்கொள்ள இது உதவுகிறது” என திருமதி கவ்ருல் கூறினார்.

கல்வி முறைகளை வடிவமைப்பதில் பங்கேற்பு அணுகுமுறையின் முக்கியத்துவத்தை உள்ளடக்கிய மற்ற கருத்துகள் கூட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்டன. FAO மின்கற்றல் அகாடமியின் தலைவரான கிறிஸ்டினா பெட்ராச்சி, இது போன்ற அமைப்புகள் “உள்ளூர் நடைமுறைகள் மற்றும் மரபுகளை ஒருங்கிணைக்கவும்” இளம் கிராமப்புற விவசாயிகளின் தேவைகள் மற்றும் உண்மைகளுக்குப் பதிலளிக்கவும் முயலும் என கூறினார். தற்போது எகிப்தில் நடைபெற்று வரும் COP27 எனப்படும் 2022 ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டில், மற்ற கருப்பொருள்களுடன், நிலையான உணவு முறைகளை உருவாக்குவதற்கான அதன் ஆய்வை BIC தொடரும்.

BIC குழு விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கருப்பொருள்கள், கூட்டத்தின் பங்கேற்பாளர்களிடையிலான சிறு குழுக்கள் நிலையில் மேலும் ஆராயப்பட்டன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1624/

ஆஸ்த்திரியா: பெண்கள் இயக்கத்திற்கான முன்னோடி என்னும் முறையில் தாஹிரியின் தொடர்பை நாடகம் ஆராய்கிறது


6 நவம்பர் 2022

வியன்னா – பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் விடுதலைக்கான பஹாய் நாயகியான தாஹிரிக்கும் — ஆஸ்திரியாவின் பெண்கள் இயக்கத்தின் ஸ்தாபகர் மரியென் ஹைனிஷ்சுக்கும் என்ன தொடர்பு?

“Der Siegelring!” என்னும் தலைப்பில் ஒரு நாடகத்தில் இது ஆய்வுக்கு உட்பட்டதாக இருந்தது. கலை மற்றும் கலாச்சார அமைச்சின் நாடு தழுவிய திறந்த இல்ல முன்முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் பல தேசியப் பிரச்சனைகள் பற்றிய பொது விவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரியாவின் பஹாய் தேசிய நிலையத்தில் அரங்கேற்றப்பட்டது.

ஆஸ்திரியா நாட்டின் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்ட ஹைனிஷ், உயர் கல்விக்குச் சமமான அணுகலுக்காக வாதிட்டதுடன் அந்த நாட்டில் பெண்களுக்கான முதல் உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவினார்.

ஆஸ்திரிய பஹாய் தேசிய நிலையத்தின் காட்சிகள். இங்கு கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் நாடு தழுவிய திறந்த இல்ல முன்முயற்சியின் ஒரு பகுதியாக தாஹிரி பற்றிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.

மார்த்தா ரூட்டுடனான ஒரு நேர்காணலில்-குறிப்பிடத்தக்க ஆரம்பகால பஹாய் ஆன-ஹைனிஷ் கூறியதாவது: “நான் ஓர் இளம் பெண், தாஹிரியின் தியாகத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது பதினேழு வயதுதான். அப்போது நான் சொன்னதாவது, ‘தாஹிரி தமது உயிரைக் கொடுத்து பெண்களுக்காக என்ன செய்ய முயன்றாரோ ஆஸ்திரியாவின் பெண்களுக்காக அதை நானும் செய்ய முயல்வேன். …'”

பாப் பெருமானார் பிறந்த இருநூறாவது ஆண்டு நினைவாக 2019-இல் இஸ்மா ஃபோர்கானி இந்த நாடகத்தை எழுதினார். “பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்திற்கான வாகையராக தாஹிரியின் வாழ்க்கையில் உத்வேகம் பெற்ற பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளின் முக்கிய ஐரோப்பியர்களுக்கு இடையிலான உரையாடலை இந்த நாடகம் பின்தொடர்கிறது” என திருமதி ஃபோர்கானி கூறுகிறார்.

ஆஸ்திரியாவின் பஹாய்கள் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் பற்றிய சொற்பொழிவுக்கு பங்களிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பஹாய் தேசிய நிலையத்தில் இந்த நாடகம் நடத்தப்பட்டது.

நிக்கோல் ஃபெண்டெசாக் இந்த நாடகத்தின் சமீபத்திய தயாரிப்பை இயக்கியுள்ளார், இது கடந்த மூன்று ஆண்டுகளாக பல சந்தர்ப்பங்களில் நிகழ்த்தப்பட்டது. “நாடகத்தின் மூலம், கடந்த காலம் நிகழ்காலம் இரண்டிலும் தங்கள் வாழ்க்கை மற்றும் செயல்கள் மூலம் செல்வாக்கு செலுத்திய விதிவிலக்கான வரலாறு சார்ந்த பெண்களை நாங்கள் சந்திக்கின்றோம், ஆனால், எதிர்கால சந்ததியினருக்கும் இவர்கள் சொல்வதற்கு நிறையவே இருக்கின்றது.”

ஆஸ்திரியாவின் பஹாய் தேசிய சபை உறுப்பினரான கோரின் ஃபரிட், இந்த நாடகம் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் பற்றிய சொற்பொழிவுக்குப் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என விளக்குகிறார்.

“இந்த நாடகம், அதன் சாராம்சத்தில், மனிதகுலத்தின் ஒருமைப்பாடு மற்றும் அனைத்து வகையான தப்பெண்ணங்களையும் நீக்குதல் பற்றிய பஹாய் கொள்கையின் ஆய்வு ஆகும்,” என அவர் கூறுகிறார்.

சமூக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட ஆஸ்திரிய பஹாய்களின் முயற்சிகள் பற்றிய கண்காட்சியில் வருகையாளர்கள் இந்தக் கருப்பொருள்களின் ஆராய்வைத் தொடர்ந்து மேற்கொண்டனர், இது அந்த நாடு முழுவதிலும் உள்ள பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் முயற்சிகளின் நுண்ணறிவுகளை எடுத்துக்காட்டுகிறது.

பஹாய் தேசிய நிலையத்தில் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகள் பற்றிய ஒரு கண்காட்சி திறந்த இல்ல நிகழ்வின் போது நடத்தப்பட்டது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1623/

ஸ்பெய்னிய சங்கத்தின் 2022 விருது ஈரானிய உயர்கல்வி பஹாய் பயிற்சிக்கழகத்திற்குச் சென்றது


மூலாதாரம்: https://www.radiofarda.com/a/liberpress-bahai–2022-award/32102037.html

பஹாய் கல்விக்கான வசதிகளை வழங்குவதற்காக உயர் கல்விக்கான பஹாய் பயிற்சிக்கழகம் 1987-இல் நிறுவப்பட்டது

ஸ்பானிஷ் “லிபர்பிரஸ்” சங்கத்தின் 2022 பரிசு ஈரானிய பஹாய் உயர் கல்வி நிறுவனத்திற்கு சென்றதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

“தங்கள் தாயகத்தில் கல்வியை இழந்த ஆயிரக்கணக்கான பஹாய் இளைஞர்களுக்கு உயர் கல்வியை வழங்குவதற்கான பாராட்டத்தக்க முயற்சிகளுக்காக உயர்கல்விக்கான பஹாய் பயிற்சிக்கழகம் (BIHE) 2022 விருதுக்கு தகுதி பெற்றுள்ளது” என லிபர்பிரஸ் சங்கம் கூறியது.

2022 லிபர்பிரஸ் பரிசு உயர் கல்விக்கான பஹாய் பயிற்சிக்கழகம் மற்றும் மனித உரிமைகள் கார்ட்டூனிஸ்ட் கியானூஷ் ரமேசானி ஆகியோருக்குக் கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.

BIHE இணையதளம்

1999 முதல், இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமை, பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் மனித விழுமியங்களின் கலாச்சாரத்தை ஆழப்படுத்த உழைத்த கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது.

பஹாய் உயர் கல்விக்கான பயிற்சிக்கழகம் ஈரானில் உள்ள ஒரு முறைசாரா கல்வி நிறுவனமாகும், இது 1987-இல் பஹாய்களால் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான வசதிகளை வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்பித்ததற்காகவும் படித்ததற்காகவும் பல பஹாய்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர், இதன் காரணமாக இந்தப் பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வ வகுப்புகள் நடைபெறுவதில்லை.

இந்தப் பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் சுயமாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏதேனும் கேள்விகளுக்குத் தீர்வு காண, தன்னார்வலர்களின் வீடுகளில் அலுவலக நேரம் மட்டுமே நடத்தப்படுகிறது.

இஸ்லாமிய குடியரசு பஹாய் சமயத்தை ஒரு “தெய்வீக மதம்” என்பதை அங்கீகரிக்கவில்லை, மேலும் அதன் நம்பிக்கையாளர்கள், பல்கலைக்கழகங்களில் படிப்பது மற்றும் அரசாங்க வேலைகளை வைத்திருப்பது போன்ற உரிமைகள் பறிக்கப்படுவதோடு, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் எப்போதும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும்.

சமீபத்திய ஆண்டுகளில், பஹாய்களின் கல்வி விலக்கு வேறு சில பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பரில், செம்னானில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி ஒரு மாணவரை “பஹாய்” என்பதால் சேர்க்க மறுத்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஈரானின் கல்வி அமைச்சர் கூறினார்: “நாட்டின் மதங்கள் தவிர அதிகாரமற்ற பிற மதங்களைப் பின்பற்றுவதாக எந்த மாணவரும் கூறினால் , மற்றும் அக்கூற்று ஒரு பிரச்சாரத்தின் வடிவமாக கருதப்பட்டு, பள்ளிகளில் அவர்களுக்குக் கல்வி அனுமதிக்கப்படாது.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பின் 30-வது பிரிவின்படி, “நாடு முழுமைக்கும் இடைநிலைப் பள்ளி முடியும் வரை இலவச கல்வி மற்றும் மேம்பாட்டு வசதிகளை வழங்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது” என கூறப்படும் அதே வேளை இத்தகைய கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.