அப்துல்-பஹாவின் நினைவாலயம்: அக்காநகர் வருகையாளர் மையத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கின்றன


15 டிசம்பர் 2022

பஹாய் உலக மையம், 15 டிசம்பர் 2022, (BWNS) — அப்துல்-பஹா மற்றும் ரித்வான் தோட்டத்திற்கு யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்கும் ‘அக்காநகர் வருகையாளர் மையத்தின்’ பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.

நினைவாலயம் நிறைவடைந்ததும், பார்வையாளர்கள், அவர்களில் பலர் தங்கள் அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்த வெகுதூரம் பயணித்து, ‘அப்து’ல்-பாஹாவின் இறுதி இளைப்பாறல் தளத்தில் பிரார்த்தனை செய்வதற்காகவும் தியானம் செய்வதற்காகவும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள ‘அக்காநகர் பார்வையாளர்கள்’ மையத்திற்கு வருவார்கள்.

இந்த ஆலயத்திற்கான தளம் ரித்வான் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ளது. இது ‘அப்துல்-பஹாவினால் நிர்மாணிக்கப்பட்டது. பஹாவுல்லா தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை நாடுகடத்தப்பட்டும், சிறைவாசத்திலும் கழித்திருந்தார். இவ்விடம் பஹாவுல்லா தமது வாழ்வின் இறுதி வருடங்களை ஓய்வாகக் கழிப்பதற்கான இடமாக இருந்தது.

பார்வையாளர்கள் மையம் தளத்தின் வடகிழக்கு மூலையில், ரித்வான் தோட்டத்திற்கு நேரடியாக வடக்கே மற்றும் ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்திற்குக் கிழக்கே அமைந்திருக்கும். இந்த வளாகம் மூன்று கட்டிடங்களைக் கொண்டிருக்கும்: ஒரு யாத்ரீகர் வரவேற்பு மையம்: இது கட்டிடங்களில் மிகப்பெரியதாக இருக்கும். ஒரு பொது பார்வையாளர்கள் மையம்: தளத்தின் வடக்கு வாயிலுக்கு அருகில் அமைந்திருக்கும். மற்றும், கிழக்கு வேலி ஓரமாக அமையவிருக்கும் ஒரு பயன்பாட்டுக் கட்டிடம்.

மின்சாரம், நீர் மற்றும் வடிகால் வசதிக்கான அடித்தளம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியன ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், கட்டிட அஸ்திவாரங்களுக்கான அடித்தூண்களின் கட்டுமானம் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் தொடங்கியது.

(வடிவமைப்பு படம்) இந்த வரைபடம், மேற்கு நோக்கி, ரித்வான் தோட்டம் மற்றும் ‘அப்துல்-பஹா’ நினைவாலயம் தொடர்பாக புதிய கட்டிடங்களின் இருப்பிடத்தைக் காட்டுகிறது. திட்டம் நிறைவடைந்ததும், யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் கிழக்கு வாயில் வழியாக தளத்திற்குள் நுழைவார்கள், அங்கு அவர்கள் தியானமிக்க பயணத்தின் போது ஆலயத்தை நோக்கிச் செல்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்ட பாதையில் தொடரும் முன் ‘அக்காநகர் பார்வையாளர் மையத்தைப் பார்வையிடலாம்.
மேலே உள்ள படம், பார்வையாளர்கள் மையக் கட்டிடங்களுக்குத் தயாராக்கப்படும் அடித்தள வேலையைக் காட்டுகிறது.
(வடிவமைப்பு வரைபடம்) யாத்ரீகர்களும் வருகையாளர்களும் வருகையாளர் மையத்திலிருந்து வரலாற்றுப்பூர்வ பாதையில் (நடுவில் வலதுபுறம்) செல்வார்கள், இது குறைந்த பட்சம் ‘அப்துல்-பஹாவின் காலத்திலிருந்தே உள்ளது.
பார்வையாளர்கள் மையத்திற்கான அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கும் போது, நினைவாலயத்தின் கட்டுமானப் பணிகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. வலதுபுறத்தில் பின்னணியில் பழைய அக்காநகர் காணப்படுகிறது.
(வடிவமைப்பு வரைபடம்) இந்தப் படம் வடக்கு வாசலில் இருந்து ஒரு காட்சியைக் காட்டுகிறது. வரலாறு சார்ந்த பாதையை மையமாகக் கொண்டு, வலதுபுறத்தில் நினைவாலயத்தின் கிழக்குப் பகுதி மற்றும் இடதுபுறத்தில் அக்காநகர் பார்வையாளர்கள் மையம்.
(வடிவமைப்பு வரைபடம்) இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள் மையம் வடக்கு வாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. வழிகாட்டுனர்கள் இங்கு பார்வையாளர்களுக்கு விளக்கமளித்து, தளத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை விளக்குவார்கள்.
(வடிவமைப்பு வரைபடம்) பொதுப் பார்வையாளர்களின் கட்டிடத்திலிருந்து மேற்கு நோக்கிப் பார்த்தால், ஆலயத்தின் கிழக்குப் பகுதியைக் காண முடியும்.
ரித்வான் தோட்டத்திற்குச் செல்லும் வரலாற்றுச் சிறப்புடைய பாதை மற்றும் ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்திற்கான வாயில்
1875-இல் பஹாவுல்லா அக்காநகர் சிறைக்குள் அடைக்கப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அப்துல்-பஹா தமது தந்தைக்காக இந்த அழகிய தோட்டத்தை உருவாக்கினார். பஹாவுல்லா தோட்டத்தை “ரித்வான்” என அழைத்தார், அதாவது “சொர்க்கம்”.
பஹாவுல்லா இத்தோட்டத்தைப் “பசுமை தீவு” என பெயரிட்டார்
பஹாவுல்லா ரித்வான் தோட்டத்திற்கு வரும்போதெல்லாம் இக்கட்டிடத்தின் மேற்புற அறைகளில் தங்குவார்
இதற்கிடையில், நினைவாலயத்தின் வேலைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன, மத்திய பிளாசாவை விரிவுபடுத்தும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி வேலைகளை எளிதாக்க சாரக்கட்டு தயாராக உள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1632/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: