

19 டிசம்பர் 2022
மனாமா, பாஹ்ரேன், 19 டிசம்பர் 2022, (BWNS) — சமீப வாரங்களில் பாஹ்ரேனில் “The Bahrain Forum for Dialogue: East and West for Human Coexistence,” என்னும் தலைப்பிலான தேசிய ஒன்றுகூடல்களைத் தொடர்ந்து சகவாழ்வு குறித்த சொல்லாடலானது சமீபத்திய வாரங்களில் புதுப்பிக்கப்பட்ட கவனத்தைப் பெற்றுள்ளது. இது, மன்னர் ஹமாட் பின் இசா அல் கலீஃபாவால் ஊக்குவிக்கப்பட்டது.
இந்த சொல்லாடல்களில் சில போப்பாண்டவர் பிரான்சிஸ், அல்-அஸ்ஹாரின் மூத்த இமாம் ஆகியோரின் பங்கேற்பையும் உள்ளடக்கியுள்ளது. இந்த மன்றங்கள் மற்ற மதத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள், பாஹ்ரேனின் பஹாய் வெளிவிவகார அலுவலக உறுப்பினர்கள் மற்றும் பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதியான பானி டுகால் ஆகியோரை சமூக நல்லிணக்கம் தொடர்பான கேள்விகளை ஆராயவும் ஒன்றிணைத்துள்ளன. .
சமூக முன்னேற்றத்தில் மதம் வகிக்கக்கூடிய முக்கிய பங்கை மையமாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடல்களுக்கு பஹாய் சமூகத்தின் பங்களிப்பு, பரந்த அளவிலான தேசிய ஊடகங்களில் இருந்து பிரசித்தம் வழங்கப்பட்டது.
நாடு தழுவிய வானொலி நிகழ்ச்சியில், (பஹாய்) வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரான ஜலால் கலீல், பாஹ்ரேன் பஹாய்களால் மாதந்தோறும் தேசிய அளவில் சமூக ஆர்வலர்களை ஒன்றுகூட்டி நடத்தப்படும் ஒரு வழிபாட்டுக் கூட்டம் பற்றி பேசினார்.
“இந்தக் கூட்டங்கள் மனிதகுலத்தின் உள்ளார்ந்த ஒற்றுமையை ஊக்குவிக்கின்றன; அக்கூட்டங்கள் தனிநபர்களின் நல்வாழ்வு அவர்களுடைய சமூகத்தின் நல்வாழ்வுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை பங்கேற்பாளர்கள் மதித்துணர உதவுகின்றன” என திரு. கலீல் கூறினார்.
லௌகீக மற்றும் ஆன்மீக ரீதியில் வளமான உலகிற்கான ஒரு பொது தொலைநோக்கை உருவாக்கிக்கொள்ள பலவித பின்னணிகளைக் கொண்ட மக்களுக்கு உதவும் கருத்தரங்குகளின் மகத்தான மதிப்பை பாஹ்ரேன் பஹாய்கள் உணர்கின்றனர் என அவர் விளக்கினார். “சகிப்புத்தன்மை மற்றும் மனிதகுலத்திற்குச் சேவை செய்வது குறித்த மதங்களுக்கிடையிலான உரையாடல் மிகவும் முக்கியமானது” என அவர் கூறினார். அதன் சாரத்தில், மதமானது மக்களிடையே அன்புக்கும் ஐக்கியத்திற்குமான வழியாகத் திகழ முடியும் என்னும் ஒரு பொதுப் புரிதலை மக்கள் அடைந்திட அது உதவுகின்றது.

வெளிவிவகார அலுவலகம் நடத்திய நிகழ்வில் பிரார்த்தனைக்கும் சேவைக்கும் இடையிலான உறவு அதிகாரிகள் மற்றும் சமயம் சார்ந்த சமூகங்களின் பிரதிநிதிகளால் மேலும் ஆராயப்பட்டது. இதில் திருமதி டுகாலின் கருத்துக்களும் இடம்பெற்றன.
“வழிபாடும் மனிதகுலத்திற்கான சேவையும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன,” என அவர் கூறினார்.
“பிரார்த்தனை இறுதியில் நோக்கம் நிறைந்த வாழ்வில் வாழப்பட வேண்டும்,” என திருமதி டுகால் தொடர்ந்து கூறினார். “இது உலகெங்கிலும் உள்ள தேசிய மற்றும் உள்ளூர் பஹாய் சமூகங்களில் பேணப்படும் வழிபாட்டுத் தலங்களில் பொதிந்துள்ள கொள்கையாகும். அத்தகைய இடங்கள்… விதிவிலக்கு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் திறந்திருக்கும்… மேலும் மதரீதியாகப் பலதரப்பட்ட சமூகங்கள் உண்மையில் அமைதிக்கான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு அவை சான்றாக நிற்கின்றன.
பரவலாகப் பார்க்கப்படும் தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், நேர்காணலின் போது, திரு. கலீல், வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கொள்கையை வலியுறுத்தினார். அதற்கு அவர் மானிடமானது இடைசார்ந்திருப்பதை எடுத்துக்காட்டுவதற்காக மனித உடலின் உவமானத்தை வரைந்து காட்டினார்.
“மனித உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் உயிரணுவும் அதன் குறிப்பிட்ட செயல்பாடு மற்றும் கலவையைக் கொண்டுள்ளது. இந்த உறுப்புகளுக்கும் உயிரணுக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புதான் மனித உடலை முழுமைப்படுத்துகிறது. அதே வழியில்… மானிடமும் இணைந்து செயல்பட முடியும். இந்தப் பன்முகத்தன்மை அழகு மற்றும் செழுமைக்கான மூலாதாரமாக இருக்க வேண்டும்.
திரு. கஹ்லில் மேலும் கூறுகையில், சகவாழ்வு ஓர் உயர்ந்த இலக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றாலும், இந்த உருவகம் பெரிய ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது. பஹாய் போதனைகளில் விவரிக்கப்பட்டுள்ள ஒற்றுமை என்னும் கருத்து, வேறுபாடுகளைத் தாண்டிச் செல்வது மட்டுமின்றி, அனைவரின் நலனுக்காகச் செயல்படவும் அது மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது என அவர் கூறினார்.
இந்தக் கருப்பொருள் பாஹ்ரேன் பஹாய்களால் தயாரிக்கப்பட்ட ஒரு புதிய காணொளிக்கான அகத்தூண்டலாகும். இது பல்வேறு பின்னணியைச் சார்ந்த இளைஞர்கள் உள்ளடக்கம், ஒருமைப்பாடு மற்றும் சக மனிதர்களுக்கான சேவை பற்றி பாடுவதைச் சித்தரிக்கின்றது. தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காணொளி, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைவாக ஒளிபரப்பப்பட்டது. இது சமூக நல்லிணக்கம் குறித்த சொல்லாடலுக்கான வெளியுறவு அலுவலக பங்களிப்புகளின் ஒரு பகுதியாகும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1633/