கலைகள்: வான்கூவர் இளைஞர்கள் உயர்ந்த அபிலாசைகளைத் தூண்டிவிட இசையின் சக்தியைப் பயன்படுத்துகின்றனர்.


26 டிசம்பர் 2022

வான்கூவர், கனடா – வான்கூவரில் அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கை, இசை எவ்வாறு உன்னத உணர்வுகளைத் தூண்டிவிடுவதுடன் தங்கள் சகாக்களுக்கு ஆறுதலையும் உத்வேகத்தையும் அளித்திடக்கூடும் என்பதை ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் உருவாக்கும் பாடல்கள், தங்கள் சொந்த அனுபவங்களையும் அவர்கள் நண்பர்களின் அனுபவங்களையும் கொண்டு, வளர் இளம் பருவ இளைஞர்கள் தங்கள் ஆன்மீக அடையாளம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கும் திறனைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால், அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்திக்கும் கதைகளை ஆராய்கின்றனர்.

சமூகத்திற்குச் சேவை செய்யும் இளைஞர்களின் திறனை வளர்ப்பதற்கும் அவர்களின் கலை வெளிப்பாட்டை வளர்ப்பதற்கும் பஹாய் கல்வித் திட்டங்களில் உள்ள கருத்துகளை ஆராயும் இந்த இளைஞர்களின் முன்முனைவில் இருந்து இந்த முயற்சி எழுகிறது.

பஹாய் சமூகத்தின் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான உயர் அபிலாசைகளையும் செயல்களையும் இசை எவ்வாறு ஊக்குவிக்கும் என்பதை ஆராய்கின்றனர்.

பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான உயர் அபிலாசைகளையும் செயல்களையும் இசை எவ்வாறு ஊக்குவிக்கும் என்பதை ஆராய்கின்றனர்.

உலகத்தைப் பற்றிய ஒருவரின் புரிதலை வடிவமைக்கும் மொழியின் ஆற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம், இளைய பங்கேற்பாளர்கள் தங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தவும், நுகர்வியல் (consumerism) சார்ந்த எதிர்மறை தாக்கங்களை எதிர்க்கும் திறனை வலுப்படுத்தவும் இந்தத் திட்டங்கள் உதவுகின்றன என்பதை இந்தத் திட்டங்களின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள் கவனித்துள்ளனர்.

இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களில் ஒன்று, லௌகீகவாதத்தின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் யோசனையை ஆராய்கிறது: அதை கவனமாகக் கேட்கவும்:

(பாடலின் மொழிபெயர்ப்பு)

இன்பத்துக்காக வாழச் சொல்லும் குரல்
பொழுபோக்கை நாடுதல், அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுத்தல்
இவற்றைக் கணித்திட நமக்கு அர்த்தமுள்ள ஏதேனும் அவசியம்
உண்மையைச் செவிமடுக்கும்போது, அதுவே உண்மையான பொக்கிஷம்

தனது அண்டைப்புறத்தில் உள்ள இளைஞர் குழுக்களை வழிநடத்தும் தினுக் கூறுவதாவது: “இளைஞர்கள் எதிர்கொள்ளும் போப் (pop) கலாச்சார இசையிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. அங்கு ஆத்திரமூட்டும் கூற்றுகளை வெளியிடுவது அதிகம். அதற்கு நேர்மாறாக, இளைஞர்கள் தங்களை முன்னணியாளர்களாகக் காண உதவும் இசையை உருவாக்க விரும்பினோம்.

“ஓர் இளைஞன் யாரோ ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதைக் கவனித்து, அந்தச் சூழ்நிலையில் அவர்கள் என்ன தேர்வுகள் செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்கும் பாடல்களில் ஒன்று இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.”

மதிய உணவுக்கான நேரம் மணி அடிக்கிறது
நான் என் நண்பர்கள் ஒன்றுகூடுவதைப் பார்க்கிறேன்
அப்போது ஒருவர், தனியாக நிற்பதைப் பார்க்கின்றேன்
அவரிடம் நான் இதுவரை பேசியதில்லை
சென்று அவரிடம் வணக்கம் சொல்லவா
நான் அவரிடம் அக்கறை காட்ட விரும்புகிறேன்
நான் என்ன செய்ய போகின்றேன் என
என் நண்பர்கள் என்னைப் பார்க்கின்றனர் என்பது எனக்குத் தெரியும்

இம்முயற்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஷாடி, கேட்பவர் மீது செல்வாக்கு செலுத்தும் இசையின் ஆற்றலைப் பற்றிப் பேசுகிறார், “பல மாதங்களினூடே நீங்கள் யாரிடமாவது எதிர்மறையான மொழியைக் கொண்ட இசையை வாசித்தால், அவர்களும் அப்படியே பேசத் தொடங்குவார்கள்.”

ஒரு பங்கேற்பாளரான ஜேசன், பிரபலமான இசையில் உள்ள எதிர்மறையான செய்திகளால் அவரது சகாக்கள் சிலர் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரிக்கின்றன என கூறுகிறார். “பின்னர், நீங்கள் எதிர்மறை இசையின் மேலேமொரு அடுக்கைச் சேர்க்கிறீர்கள், அவர்கள் அவ்வார்த்தைகளை உச்சரிக்கும்போது, ​​அது அவர்களுக்கு உதவாது, அதைப் பார்ப்பதற்கும் உண்மையில் வருத்தமாக இருக்கிறது.”

அவர்கள் உருவாக்கும் பாடல்கள் அவர்களின் சொந்த அனுபவங்களையும் அவர்கள் நண்பர்களின் அனுபவங்களையும் பயன்படுத்துகின்றன. வளரிளம் பருவ இளைஞர்கள், தங்களின் சொந்த ஆன்மீக அடையாளம் மற்றும் சமுதாயத்திற்குப் பங்களிப்பதற்கான அவர்களின் சொந்த ஆற்றல் குறித்து மேன்மேலும் அதிக விழிப்புணர்வுகொள்ள ஆரம்பிக்கும் போது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்த கதைகளை அப்பாடல்கள் ஆராய்கின்றன.

நேர்மறையான, உற்சாகமளிக்கும் இசையைக் கேட்பது ஒருவர் மீதும் அவரது நடத்தையிலும் மிகவும் மாறுபட்ட விளைவைக் கொண்டிருக்கிறது, இது மனித ஆவியின் மீது இசை செலுத்தும் தனித்துவமான சக்தியை எடுத்துக்காட்டுகிறது என ஷாடி குறிப்பிடுகிறார்.

இளைஞர் குழுக்களின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான ஆலியா, இந்த முயற்சியின் வாயிலாக வெளிவரும் பாடல்களை, “நேர்மறையான மதிப்புகளை நிலைநிறுத்தும் பாடல் வரிகளைக் கொண்ட… இசை குறித்த பயன்படுத்தப்படாத ஓர் பகுதி… கேட்பதற்கு குளிர்ச்சியாக இருப்பதுடன், நாம் அடையாளம் காணக்கூடிய விஷயங்களையும் கொண்டுள்ளது” என வர்ணிக்கின்றார்.

இந்த முயற்சி ஒரு கூட்டுப் பாடல் எழுதும் அணுகுமுறையைக் கொண்டது. “பாடல்கள் எந்த ஒரு நபருக்கும் சொந்தமில்லை” என்கிறார் ஷாடி.

பல்வேறு வகையான இசை அனுபவங்களைக் கொண்ட பங்கேற்பாளர்கள், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரண்டு தொடர்ச்சியான வார இறுதிகளில் ஒன்றுகூடி வெவ்வேறு ஆன்மீகக் கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் பாடல்களை உருவாக்குகிறார்கள்.

அனைவரும் வெவ்வேறு அளவிலான இசை அனுபவங்களைக் கொண்டுள்ள பங்கேற்பாளர்கள், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரண்டு தொடர்ச்சியான வார இறுதிகளில் கூடுகின்றனர். இந்த அமர்வுகளில், அவர்கள் கலந்தாலோசனை, சேவையின் முக்கியத்துவம் மற்றும் உண்மையான நட்பின் தன்மை போன்ற ஆன்மீகக் கருத்துக்கள் மீது பிரதிபலிக்கின்றனர். அவர்கள் தங்கள் அண்டைப்புறங்களின் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்தும் விவாதிக்கின்றனர். இந்தச் சந்திப்புகள் இளைஞர்கள் உருவாக்கும் பாடல்களுக்கு உத்வேகம் ஊட்டுகின்றன.

வான்கூவரில் உள்ள முன்முயற்சி உலகெங்கிலும் உள்ள பலவற்றில் ஒன்றாகும், அங்கு பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்குபெறும் மக்கள், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையையும் செயலையும் ஊக்குவிக்கும் இசையின் ஆற்றலைப் பற்றி கற்றுக்கொள்கிறார்கள்.

பஹாய் பயிற்சிக்கழகங்களுடன் நெருக்கமாகச் செயல்படும் இதேபோன்ற முன்முயற்சிகளைப் பற்றி செய்திச் சேவை முன்பு அறிவித்துள்ளது. ஈக்வடோரில், தொடர் கருத்தரங்குகள் சமூக மாற்றத்தைப் பற்றிய பாடல்களைத் தூண்டின. இதற்கிடையில், நியூசீலாந்தில் உள்ள இளைஞர்கள் குழு, தார்மீகக் கருத்துகளைப் பற்றிய அவர்களின் புரிதலை இசை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து வருகிறது. மேலும், ஸாம்பியாவில், லுண்டா மக்களின் மேம்பாட்டு முயற்சிகளில் இசை இன்றியமையாத அங்கமாக உள்ளது.

உலகத்தைப் பற்றிய ஒருவரின் புரிதலை வடிவமைக்கும் மொழியின் ஆற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம், இளைய பங்கேற்பாளர்கள் தங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தவும், நுகர்வியல் சார்ந்த எதிர்மறை தாக்கங்களை எதிர்க்கும் திறனை வலுப்படுத்தவும் இந்தத் திட்டங்கள் உதவுகின்றன என்பதை இந்தத் திட்டங்களின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள் அவதானித்துள்ளனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1635/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: