2022 ஆண்டு, ஒரு விமர்சனம்: ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம்


30 டிசம்பர் 2022

பஹாய் உலக மையம் – பஹாய் உலக செய்தி சேவை கடந்த ஆண்டில் பல கதைகளை வெளியிட்டிருந்தது. ஒரு சிறந்த உலகத்தை நோக்கி நகர மனிதகுலத்தின் முயற்சிகளுக்கு பங்களிக்க உலகளாவிய பஹாய் சமூகம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்கும் அக்கதைகளை செய்தி சேவை மறுகண்ணோட்டம் இடுகிறது.

உலகளாவிய மாநாடுகள்

2022-ஆம் ஆண்டின் முதல் தருணங்கள் வந்தபோது, உலகளாவிய பஹாய் சமூகம் அதன் பயணத்தில் ஒரு புதிய கட்டத்திற்கு அதை அறிமுகப்படுத்தும் வரிசையான உலகளாவிய மாநாடுகளுக்காக ஆவலுடன் காத்திருந்தது. வரவிருக்கும் தசாப்தத்தில் சமூக மாற்றத்தைப் பேணுவதற்கான பஹாய் முயற்சிகள் எவ்வாறு மேலும் தீவிரமடையக்கூடும் என்பது குறித்துத் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் கலந்தாலோசிக்க இந்த மகத்துவம்மிக்க கூட்டங்கள் ஒரு வாய்ப்பை வழங்கிடும்.

இந்த மாநாடுகளுக்கான அவசரத் தேவையை ஆண்டின் ஆரம்ப நாட்களில் உலக நீதி மன்றம் ஒருமைக் கோட்பாட்டை முன்னிலைப்படுத்தும் ஒரு செய்தியில் வலுப்படுத்தியது, அதில் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது: “மனிதகுலம் இப்போது எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் குறுகிய கால சுயநலனை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த அப்பட்டமான ஆன்மீக மற்றும் தார்மீக யதார்த்தத்துடன் இணக்கம் காண்பதற்கான அதன் விருப்பத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான சோதனையாகும்:  ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரே ஒரு மனித குடும்பம் மட்டுமே உள்ளது, மற்றும் அது ஒரு விலைமதிப்பற்ற தாயகத்தைப் பகிர்ந்து கொள்கிறது.”

தொடர்ச்சியான சமூக அழுத்தங்கள் மற்றும் மோதல்களின் பின்னணியில், வரவிருக்கும் மாதங்களில் மாநாடுகள் உலகெங்கிலும் பரவின, இது எண்ணற்ற மக்கள் உலகளாவிய சவால்கள் குறித்த தங்கள் அதிகரித்து வரும் அவசர உணர்வை தங்கள் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த உதவியது.

உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நடைபெற்ற மாநாடுகள், பஹாய்களுக்கும் அவர்களின் நண்பர்கள் மற்றும் அண்டையருக்கும் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் பரவலான சொல்லாடல்களுக்கு பங்களிக்கும் முயற்சிகள் ஆகியவற்றின் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளை இந்த செயல்முறைக்குப் பங்களிக்க விரும்பும் பல நண்பர்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் வழங்கின. பல இடங்களில், சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு மற்றும் அமைதியான சமூகங்களைப் பேணுவது போன்ற ஒரு முக்கிய கருப்பொருளின் மீதான விவாதத்தை மாநாடுகள் தூண்டின. இந்த விவாதங்களின் மூலம், சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய முயற்சியில் அன்பின் பிணைப்புகள் மற்றும் மற்றவர்களுடனான ஐக்கியத்தின் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளோம் என உணர்தல் ஆகியவற்றின் மூலம் மனிதகுலத்தின் பரோபகார திறனில் பங்கேற்பாளர்கள் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைப் பெற்றனர்.

ஆப்பிரிக்கா முழுவதும் மாநாடுகளின் அலை பரவியது, இது தங்கள் சமூகங்களின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து ஆலோசிக்க அனைத்து பின்னணிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டியது. சில இடங்களில், கூட்டங்கள் குறிப்பிட்ட கருப்பொருள்களில் கவனம் செலுத்தின. எடுத்துக்காட்டாக, மத்திய ஆபிரிக்க குடியரசில், சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் பெண்களின் பங்கை ஆராய பாங்கூய்யில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் சுமார் 500 பெண்கள் கலந்து கொண்டனர். சாட்டில் நடந்த ஒரு மாநாடு தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களை ஒன்றிணைத்து, கூட்டு சமாதானத்தை அடைவதற்கு ஒவ்வொரு நபரும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து விவாதித்தது.

உலகின் பிற பகுதிகளைப் போலவே, அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற மாநாடுகளில் இளைஞர்கள் முக்கிய பங்கு பெற்றனர். அவர்களின் கலந்துரையாடல்கள் மற்றும் கலை நடவடிக்கைகள் அமைதியை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட துடிப்பான சமூகங்களை நிர்மாணிப்பதை மையமாகக் கொண்டிருந்தன.

ஆசியா முழுவதும் மாநாடுகளில் பங்கேற்றவர்கள் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவசியமான தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான உறவின் பண்புகள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டங்களின் ஊற்சாகமூட்டும் சூழல் மாநாடுகளைத் தொடர்ந்து உடனடியாக பல நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் ஒரு கூட்டம் மது அருந்துவதால் குடும்பங்களில் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்ட சுகாதார மேம்பாட்டு பிரச்சாரத்தை ஊக்குவித்தது.

ஆஸ்திரலேசியா முழுவதும், மாநாடுகள் கதைசொல்லல், இசை நாடகங்கள் மற்றும் பாரம்பரிய நடனம் போன்ற கலாச்சார அம்சங்களால் வளப்படுத்தப்பட்டன, அவை இணக்கமான சமூகங்களை மேம்படுத்தத் தேவையான ஆன்மீக கொள்கைகளை எடுத்துக்காட்டின.

ஐரோப்பாவில், இந்தத் துடிப்பான கூட்டங்களில் ஆலோசனைகள் தங்கள் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு ஆன்மீகக் கொள்கைகளைப் பயன்படுத்தும் திட்டங்களைப் பின்தொடர்வதில் வெவ்வேறு கண்ணோட்டங்களை இணக்கப்படுத்தின என்பதை வாழ்க்கையின் அனைத்து தரப்பு மக்களும் கண்டறிந்தனர்.

ருமேனியாவின் புக்காரெஸ்டில், ஒரு மாநாடு ஒரு சமூக விழாவி உள்ளூர் அதிகாரிகளை வரவேற்பதற்காக நகர வீதியை மூடும்படி செய்தது. கூட்டத்தில் பேசிய மேயர் க்ளோடில்டே அர்மாண்ட், “ஒரு மேயருக்கு, நீங்கள் இங்கே செய்வது தேன் கலந்த உணவின் சுவை போன்றது. ஒரு சமூக நிகழ்வை உருவாக்க இந்தத் திறந்த வெளியை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதில் நான் மகிழ்ச்சியே அடைகின்றேன்.

சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளைப் பின்தொடர்தல்

கடந்த ஆண்டு, செய்தி சேவை பஹாய் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் குறித்து பல்வேறு கதைகளை வெளியிட்டது.

கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து, பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றவர்கள் உடனடியாக நிவாரண முயற்சிகளை நோக்கித் தங்கள் கவனத்தை திருப்பினர்.

ஸாம்பியாவில், பஹாய் கல்வித் திட்டங்கள் குறித்த கலந்தாலோசனைகள் இளைஞர்களின் கல்வியுடன் தொடர்புடைய பலக்கிய சவால்களை எதிர்கொள்ள கட்டுயோலா கிராமங்களில் வளர்ந்து வரும் திறனை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

ஆஸ்திரிய பஹாய்களின் ஒரு முன்முயற்சி, புதிதாக வந்த குடும்பங்களுக்கு ஜெர்மன் மொழி வகுப்புகளை வழங்கியது, இது பல்வேறு மக்கள் தப்பெண்ணங்களை சமாளிக்க உதவியது.

கனடாவில், பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள், சமூகத்தின் மேம்பாட்டில் இசை எவ்வாறு உயர் அபிலாஷைகளையும் நடவடிக்கைகளையும் தூண்ட முடியும் என்பதை ஆராய்ந்தனர்.

சமூகத்தின் சொல்லாடல்களில் பங்கேற்றல்

பஹாய் சர்வதேச சமூகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள தேசிய பஹாய் சமூகங்கள் அவசர முக்கியத்துவம்மிக்க பல பிரச்சினைகள் குறித்த சிந்தனையில் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க முயல்வதையும் செய்தி சேவை அறிவித்தது.

உலகளாவிய உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த நுண்ணறிவுகளை மனிதகுல ஒற்றுமை என்னும் கொள்கை எவ்வாறு வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து பிஐசி (BIC) ஓர் அறிக்கையை வெளியிட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் பெண்கள் மீதான அதன் சமமற்ற தாக்கம் குறித்த பல விவாதங்களில் பி.ஐ.சி பங்கேற்றது. பருவநிலை மீள்திறத்தைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக செயல்முறைகளுக்கு பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் அவசியம் என்னும் கொள்கையை ஒரு பிஐசி அறிக்கை எடுத்துக்காட்டியது.

இணையவழி வெறுப்புப் பேச்சைக் கையாள்வதற்காக தொழில்நுட்பத் துறை, அரசாங்கம் மற்றும் குடிமை சமூக அமைப்புகளிடையே பகிரப்பட்ட பார்வையின் அவசியத்தை வலியுறுத்தி, பி.ஐ.சியின் ஜெனீவா அலுவலகம் RightsCon உச்சிமாநாட்டில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

ஸ்டாக்ஹோம் +50-ஐ முன்னிட்டு பி.ஐ.சி ஓர் அறிக்கையை வெளியிட்டது, இது சுற்றுச்சூழல் முறிவின் மூல காரணங்கள் மீது கவனம் செலுத்தியதுடன் நடவடிக்கைக்கான கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்னிலைப்படுத்தியது.

BIC-யின் பிரஸ்ஸல்ஸ் மற்றும் அடிஸ் அபாபா அலுவலகங்கள் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, ஆபிரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய பங்காண்மைகளில் ஒற்றுமை குறித்த கொள்கையை அங்கீகரிக்க அழைப்பு விடுத்தன.

பி.ஐ.சி ஒரு கலந்துரையாடல் கருத்தரங்கை நடத்தியது, இது ஒற்றுமை, நீதி, ஒத்துழைப்பு, தன்னலமின்மை மற்றும் கலந்தாலோசனை போன்ற வேலையின் எதிர்காலத்தை மீண்டும் கற்பனை செய்வது தொடர்பான சில கொள்கைகளை ஆராய்ந்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77-வது அமர்வின் உயர் மட்ட வாரத்தில், பிஐசி நியூயார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகள் மனிதகுல ஒற்றுமைக் கோட்பாட்டின் அடிப்படையில் பகிரப்பட்ட அடையாளத்தின் அவசியத்தை வலியுறுத்தினர்.

கஸாக்ஸ்தானின் அஸ்தானாவில் உலக மதங்கள் மற்றும் பாரம்பரிய மதத் தலைவர்களின் 7-வது மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து மதத் தலைவர்கள் கூடி, பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகில் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் மதத்தின் பங்கு குறித்து விவாதித்தனர்.

கிராமப்புறங்களில் இளம் சிறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் கல்வியின் பங்கை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில் பி.ஐ.சி ஒரு குழு கலந்துரையாடலை நடத்தியது.

வனுவாத்துவின் தன்னாவில் இளைஞர்கள் தலைமையிலான பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றிய குறும்படத்தை பிஐசி தயாரித்தது. “Tanna: A Study in Leadership and Action,” என தலைப்பிடப்பட்ட இந்த 13 நிமிட படம் COP27-இல் (இது பருவநிலை மாற்றம் குறித்த ஒரு குழு) திரையிடப்பட்டது.

எகிப்தில் நடைபெற்ற COP27 பருவநிலை உச்சி மாநாட்டில் பல BIC அலுவலகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

யுனைடெட் கிங்டமில் உள்ள பஹாய் பொது விவகாரங்களுக்கான அலுவலகம் “In Good Faith” என்னும் புதிய போட்காஸ்ட் (podcast) தொடரை அறிமுகப்படுத்தியது, இது மதத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையிலான உறவை ஆராய்கிறது.

எகிப்தைத் தளமாகக் கொண்ட ஒர் இணைய செய்தி சேவையான ‘எல்சாஹா’ தயாரித்த ஒரு குறும்படம், 19-ஆம் நூற்றாண்டில் அதன் தொடக்கத்திலிருந்து இன்று வரை அந்நாட்டில் உள்ள பஹாய் சமூகத்தின் அனுபவம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கியது.

அஸர்பைஜானில் சகவாழ்வைப் பேணுவதற்கான முதல் தேசிய மாநாடு அதிகாரிகள், பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்னும் கொள்கையைப் பற்றி விவாதிக்க பல்வேறு மத சமூகங்களின் பிரதிநிதிகள், குடிமை சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஒன்றுகூட்டியது.

துனிசியாவில், பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் பிரதிநிதி ஒரு தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமூகத்தில் மதத்தின் பங்கை ஆராய்ந்தார். இந்த ஆண்டு அந்த நாட்டின் பல்வேறு மத சமூகங்கள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மிகவும் அமைதியான சமூகத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.

இந்தியாவின் பஹாய் பொது விவகார அலுவலகம் பல்வேறு சமூக உரையாடல்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் என்னும் கோட்பாட்டின் பயன்பாட்டை ஆராயும்  பல மன்றங்களை நடத்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பஹாய்கள் சமகால சமூகத்தில் மதத்தின் ஆக்கபூர்வமான பங்கு குறித்த உரையாடலை ஊக்குவிப்பதில் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளை ஆராய்ந்தனர்.

டச்சு பஹாய் வெளியுறவு அலுவலகம் இன ஒற்றுமை குறித்த உரையாடலுக்கான அதன் பங்களிப்புகளில் ஒரு பகுதியாக பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் அது பெற்றிருந்த அனுபவங்களைப் பயன்படுத்தியது.

பல தசாப்த கால முயற்சிக்குப் பிறகு, ஸாம்பியாவில் உள்ள பஹாய் ஸ்தாபனங்கள் அந்த நாட்டில் பஹாய் கல்வி முன்முயற்சிகளின் நெடுக்கத்தைக் குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவம் வரை தடையற்ற, ஒத்திசைவான அனுபவத்தை வழங்க எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை ஆராய ஒன்று கூடின.

ஆஸ்திரியாவின் பஹாய்களால் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம், பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் குறித்த சொல்லாடலுக்குப் பங்களிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பஹாய் வீராங்கனையான தாஹிரி மற்றும் ஆஸ்திரியாவின் பெண்கள் இயக்கத்தின் ஸ்தாபனர் மரியன் ஹைனிஷ் ஆகியோருக்கு இடையிலான தொடர்பை ஆராய்ந்தது.

சிலி நாட்டு பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் அனைவரின் நல்வாழ்விற்காக நகரங்களின் அபிவிருத்திக்கு வழிகாட்டக்கூடிய ஆன்மீகக் கொள்கைகளை ஆராய்ந்திட சான்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் ஒன்றுகூடினர்.

பஹாய் படிப்பாய்வுகளுக்கான சங்கம் ஏபிஎஸ் (ABS) அதன் 46-வது வருடாந்திர மாநாட்டை நடத்தியது, இது பஹாய் போதனைகள் சிந்தனை மற்றும் சொல்லாடலின் பல்வேறு பகுதிகளுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றிப் பிரதிபலித்திட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமான மக்களை ஒன்றிணைத்தது.

இந்தூரில் உள்ள தேவி அகல்யா பல்கலைக்கழகத்தில்  அபிவிருத்தி படிய்வுகளுக்கான பஹாய் இருக்கை, இயற்கை உலகத்துடன் மனிதகுலத்தை அதிக சமநிலைக்கு கொண்டுவர தேவையான கொள்கைகள் குறித்த ஒரு மன்றத்தை நடத்தியது.

ஈரானில் பஹாய்கள் மீதான அடக்குமுறை

கடந்த ஆண்டு முழுவதும், ஈரான் பஹாய்கள் மீதான துன்புறுத்தல் தீவிரமடைந்துள்ளது, இது கோடைகாலத்தில் கைதுகளின் அலை மற்றும் ரோஷன்கௌ கிராமத்தில் பஹாய் வீடுகள் வன்முறையில் அழிக்கப்பட்டதன் மூலம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்து உடனடியாக அரசாங்க அதிகாரிகளிடமிருந்து இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியஏராளமான அறிக்கைகளும் சர்வதேச ஊடகங்களால் செய்தி ஒளிபரப்பும் செய்யப்பட்ட து.

இந்த சம்பவங்களுக்குச் சில வாரங்களுக்குப் பிறகு, ஈரானிய அதிகாரிகள் தங்கள் சொந்த குடிமக்களுக்கு எதிராக அதிகரித்த வன்முறை மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு மத்தியில், 10 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் ஈரானில் மீள்ச்சித்திறத்தின் சின்னங்களாகக் கருதப்படும் இரண்டு பஹாய் பெண்களுக்கு இரண்டாம் முறை கொடூரமான 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த இரு பெண்களின் ஆதரவாளர்களும் அவர்களை மீள்ச்சித்திறத்தின் சின்னங்கள் எனவும், ஒடுக்கப்பட்ட மற்றும் சிறைப்படுத்தப்பட்ட நபர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் எனவும், அனைத்து ஈரானியப் பெண்களுக்கும் தாய்மார்கள் எனவும் அழைத்துள்ளனர்.

வெளியீடுகள்

சென்ற ஆண்டு பல இணைய வெளியீடுகளைக் கண்டது.

உலக நீதி மன்றத்தினால் நியமக்கப்பட்ட ஒரு திரைப்படம், மிகவும் அமைதியான உலகத்தைப் பேணுவதற்குப் பங்களிக்க கடந்த நூற்றாண்டில் பஹாய் சமூகத்தின் முயற்சிகளைப் பற்றிய கண்ணோட்டத்தை வழங்கியது.

பஹாய் உலகம் வலைத்தளத்தில் புதிய கட்டுரைகள் சமூக நீதி பின்தொடரப்படுவதை ஆராய்ந்தன.

பஹாய் உலக செய்தி சேவை ரஷ்ய மொழியிலும் கிடைப்பதற்கு வழிசெய்யப்பட்டது, இம் மொழி ஆங்கிலம் மற்றும் தளத்தின் பிற மூன்று மொழி பதிப்புகளுடன் இணைந்தது.

ஒரு சிறிய ஆவணப்படம் அஃப்னான் நூலகத்தையும், பஹாய் நம்பிக்கை மற்றும் பிற பரவலாக இணைக்கப்பட்ட தலைப்புகள் தொடர்பான 12,000-க்கும் மேற்பட்ட கருபொருள்களின் சிறந்த தொகுப்பையும் கண்ணோட்டமிட்டது.

பஹாய் வழிபாட்டுத் தலங்கள்

கடந்த ஆண்டில், பஹாய் கோயில்கள் அவற்றுக்கு அருகிலுள்ள சமூகங்களின் பக்தித் தன்மைக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பது குறித்த கதைகளை செய்தி சேவை வெளியிட்டது. இந்தக் கோயில்கள் தங்கள் சக குடிமக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க மக்களை ஊக்குவித்து வருகின்றன. வழிபாட்டுத் தலங்களின் செய்திகளில் காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் பப்புவா நியூ கினியில் கோயில்கள் கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்த கதைகளும், பனாமாவில் பஹாய் கோயில் அர்ப்பணத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவும் அடங்கும்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில், குவிமாடத்திற்கான எஃகு மேல்கட்டுமானத்தின் நிறைவு உட்பட, பஹாய் வழிபாட்டு இல்லத்தின் கட்டுமானம் தொடர்ந்து முன்னேறி வந்தது.

பப்புவா நியூ கினியில் வளர்ந்து வரும் பஹாய் வழிபாட்டுத் தலம் — வழிபாடு மற்றும் சேவை ஆகியவற்றின் ஒன்றியத்தைப் பிரதிநிதிக்கின்றது — அந்தக் கோவில் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக ஒரு நெசவு திட்டத்திற்கு உதவ அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு உத்வேகமூட்டியது.

பனாமாவில் உள்ள பஹாய் வழிபாட்டுத் தலம் திறக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அப்துல்-பஹா நினைவாலய கட்டுமானம்

அந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பின்னடைவு ஏற்பட்ட போதிலும், அதன் கட்டுமானத்தில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டது. ‘அக்கா பார்வையாளர்கள்’ மைய பணிகளின் ஆரம்பம் இந்த ஆண்டின் மற்றொரு மேம்பாடாகும்.

தொடர்புள்ள கதைகள்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1636/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: