

3 ஜனவரி 2023
பஹாய் உலக மையம் – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) ஜாக்கார்த்தா அலுவலகம், சமுதாய மேம்பாட்டிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறது. மிக சமீபத்தில் இந்தோனேசியா, பாலியில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசியாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் (SEAFORB) குறித்த மாநாட்டிலும் இது நடைபெற்றது.
வருடாந்திர சர்வமத மன்றம் பொது அக்கறை சார்ந்த பிரச்சினைகளை ஆராய்ந்திட, அரசாங்க அதிகாரிகள், மத சமூகங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் குடிமை சமூக நடவடிக்கையாளர்களை ஒன்றுகூட்டியது. இந்த ஆண்டு, பங்கேற்பாளர்கள் மத சுதந்திரம் குறித்த இணையவழி தகவல் தொடர்பு மற்றும் சமுதாய ஊடக உலகில் விரைவான மாற்றங்களின் தாக்கத்தை ஆராய்ந்தனர்.
ஒரு குழு கலந்துரையாடலில், BIC ஜகார்த்தா அலுவலகத்தின் பிரதிநிதியான டெஸ்டியா நவ்ரிஸ், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் நெறிமுறைகளைக் கருத்தில் கொள்வதை மதத்தின் அத்தியாவசிய நோக்கங்கள் எவ்வாறு வளப்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்தார்.
“[மதத்தின்] நோக்கம் மனித இனத்தின் நலன்களைப் பாதுகாப்பதும், ஒற்றுமையை மேம்படுத்துவதும், அன்பு மற்றும் கூட்டுறவு உணர்வை வளர்ப்பதும் ஆகும். …மதத்தின் வழி வெளிப்படுத்தப்படுபவை தனிப்பட்ட மத நடைமுறைகளுக்கும் மேலானைவயும், மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக நாம் சேவைச் செயல்களை வழங்கும் வழிகளைப் பற்றியதும் ஆகும்.

மிஸ். நவ்ரிஸ், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பல முன்னேற்றங்களுக்கு மூலாதாரமாக இருந்தாலும், தொழில்நுட்ப தயாரிப்புகளில் பொதிந்துள்ள சில மதிப்புகள் மற்றும் அனுமானங்கள், ஒரு தொழில்நுட்ப அமைப்பு அல்லது தீர்வு எவ்வளவு நல்ல நோக்கம் கொண்டதாக இருந்தாலும், அவை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். “எனவே இந்த அனுமானங்கள் மற்றும் நெறிமுறைகளை நேர்மையாக ஆராய்தல் முக்கியமாகும், அவை பெரும்பாலும் சமூக, தார்மீக அல்லது ஆன்மீக தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல் அடிப்படையில் லௌகீகவாதத்தில் மட்டுமே ஆழமான கருத்தூண்றியவையாக இருக்கின்றன.”
அவர் மேலும் கூறியதாவது: “சந்தேகத்திற்கு இடமின்றி, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு பல முன்னேற்றங்களுக்கு ஆதாரமாக உள்ளது, இது மனித நோக்கத்தையும் திறன்களையும் பெருக்க உதவுகிறது. ஆயினும்கூட, எந்தவொரு கருவியையும் போலவே, அதன் வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டிற்கு அடிப்படையான நெறிமுறைக் கருத்தாக்கங்களைப் பொறுத்து, அது உற்பத்தி அல்லது அழிவுகரமான முறையில் பயன்படுத்தப்படலாம்…தொழில்நுட்பம் முன்னேற்றத்திற்கான வழிமுறையாக இருக்க வேண்டும் என்றால், அது ஒற்றுமை, நீதி போன்ற உன்னத அபிலாஷைகளையும் கொள்கைகளையும் வலுப்படுத்த வேண்டும்.”
சமூக மேம்பாட்டுக்கான ஐநா ஆணையத்தின் 59-வது அமர்வில் வழங்கப்பட்ட நமது விழுமியங்கள் மீதான பிரதிபலிப்புகள்: டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் ஒரு நியாயமான மாற்றம் என்னும் தலைப்பில் BIC-யின் அறிக்கையில் இந்த எண்ணங்கள் மேலும் ஆராயப்பட்டுள்ளன. இந்த அறிக்கை டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் “மனிதகுலத்தின் மிக உயர்ந்த லட்சியங்களைப் பிரதிபலிப்பதான ஓர் உலகிற்கு நீதியுடன் மாற்றப்படுதல்” குறித்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றிய கேள்விகளையும் ஆராய்கிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1637/