பஹாய் உலக வெளியீடு: புதிய கட்டுரைகள் நல்லிணக்கம், அடையாளம், நவீனத்துவம் ஆகியவற்றை ஆராய்கின்றன


19 ஜனவரி 2023

பஹாய் உலக மையம் — இணைய வெளியீடான ‘பஹாய் உலகம்’ மூன்று புதிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

“அடையாளம் குறித்த நெருக்கடி” மனிதகுலத்தின் ஒருமைப்பாடு பற்றிய பஹாய் கொள்கை எவ்வாறு ஒற்றுமைக்கும் பன்முகத்தன்மைக்கும் இடையிலுள்ள தீர்க்க முடியாத பதற்றத்தை தீர்க்க முடியும் என்பதை ஆராய்கிறது. “முரண்பாடாக, மனித ஒருமை குறித்த ஆழமான உணர்வின் தேவை மிகவும் வெளிப்படையாக அதிகரித்திருந்தாலும், ‘நாம்’ மற்றும் ‘அவர்கள்’ என்னும் பிரிவுகள் பெருகி, உலகம் முழுவதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன” என ஆசிரியர் எழுதுகிறார்.

“நல்லிணக்கத்தின் சவாலுக்கு முன்னெழுதல்” என்னும் தலைப்பிலான மற்றொரு கட்டுரை, கனடாவில் காலனித்துவம், இனவெறி ஆகியவற்றின் பாரம்பரியத்தை பகுப்பாய்வு செய்வதுடன், உண்மையான நல்லிணக்கம் உட்குறிக்கின்ற சமூக தன்மைமாற்றத்தின் ஆழமான, பன்முக செயல்முறையை ஆராய்கிறது.

“தன்மைமாற்ற காலமாக நவீனத்துவம்” என்னும் கட்டுரை பின்வரும் கேள்வியைக் கேட்கிறது: “நவீனத்துவம்” மனிதகுலத்தின் கூட்டு வளரிளம் பருவத்தின் ஒரு காலமாக மறுபரிசீலனை செய்யப்பட்டால் என்னவாகும்? அத்தகைய முன்னோக்கு, மனிதகுலத்தின் கூட்டு முதிர்ச்சிக்கு ஏற்ற நாகரிகத்தின் அடித்தளத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்கும் அறிவாற்றல் செயல்பாடுகளின் புதிய மற்றும் நீண்டகால வடிவங்களுக்கான வழியைத் திறக்கிறது என ஆசிரியர் முன்மொழிகிறார்.

பஹாய் உலக இணையதளம், மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்குத் தொடர்புடைய கருப்பொருள்களை ஆராயும் கட்டுரைகள் மற்றும் நீண்ட வடிவக் கட்டுரைகளின் தொகுப்பை வழங்குகிறது, உலகளாவிய பஹாய் சமூகத்தில் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுவதுடன், பஹாய் சமயத்தின் ஆற்றல்மிக்க வரலாற்றின் மீது பிரதிபலிக்கின்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1639/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: