கிரீன் ஏக்கரில் விவேகானந்தர்


விவேகானந்தர், சாரா ஃபார்மர் (அவரது இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார்), சார்லஸ் மல்லாய் (நின்று), வெள்ளை தொப்பி மற்றும் கைத்தடியுடன். இது மற்றொரு, இதுவரை அறியப்படாத, விவேகானந்தர் அவரது வகுப்பில் ஒருவருடன் அமர்ந்திருக்கும் படம்…
கிரீன் ஏக்கர் – தங்கும் விடுதி

விவேகானந்தர் 12 ஜனவரி 1863-இல் இந்தியா, வங்காளத்தில் பிறந்தார். இவர் இராமகிருஷ்னரின் பிரதான சீடராவார். 1893-இல் சிக்காகோவில் நடைபெற்ற மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்துகொண்ட பிறகு அமெரிக்கர்களிடையே விவேகானந்தர் மிகவும் பிரபலம் பெற்றிருந்தார். அவரது அமெரிக்க விஜயத்தின் போது, இவர் பஹாய் பள்ளியான கிரீன் ஏக்கரின் நிறுவனரான சாரா ஃபார்மரின் அழைப்பின் பேரில் பல வாரங்கள் கிரீன் ஏக்கள் பள்ளியில் தங்கியிருந்தார்.

இந்தப் பாராளுமன்றத்தில்தான் பஹாய் சமயம் பற்றிய முதல் அறிமுக உரை வழங்கப்பட்டது. இந்தக் கூட்டம் பஹாவுல்லா மறைந்த ஒரு வருடத்திற்குள், அதுவும் சிக்காகோ நகரில் ஏன் நடைபெற்றது என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்க ஒன்றாகும்.

“உலகின் கொலம்பிய கண்காட்சி தொடர்பாக சிக்காகோவில் நடைபெற்ற உலக மதங்கள் பாராளுமன்றத்தில், மேற்கில் முதன் முறையாக பஹாய் சமயம் குறிப்பிடப்பட்டது. சிரியா நாட்டில் பணியாற்றிய ரெவரெண்ட் ஹென்றி ஹெச். ஜெஸ்ஸப் எழுதிய ஒரு கட்டுரையில், 1890-இல் பஹாவுல்லா ஓரியண்டலிஸ்ட் எட்வர்ட் கிரான்வில் பிரவுனிடம் பேசிய வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். “மிகவும் உன்னதமான, கிறிஸ்துவைப் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அச்சொற்களை எங்கள் முடிவுரையாக நாங்கள் மீண்டும் கூறுகிறோம்.”:

“எல்லா தேசங்களும் சமயரீதியில் ஒன்றாகவும், எல்லா மனிதர்களும் சகோதரர்களாகவும் ஆகிட வேண்டும்; மனித புத்திரர்களுக்கிடையே பாசம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும்; மதங்களின் பன்முகத்தன்மை நிறுத்தப்பட வேண்டும் மற்றும் இன வேறுபாடுகள் நீக்கப்பட வேண்டும். இதில் என்ன தீங்கு இருக்கிறது? இருப்பினும் இது அவ்வாறே ஆகிடும். இந்த பலனற்ற சண்டைகள், இந்த அழிவுகரமான போர்கள் கடந்து போகும்; ‘அதிமகா சமாதானம்’ வரும். ஐரோப்பாவில் உள்ள உங்களுக்கும் இது தேவைப்படவில்லையா? ஒரு மனிதன் தன் நாட்டை நேசிக்கிறான் என்பதில் பெருமை கொள்ள வேண்டாம்; அவன் தனது இனத்தை நேசிக்கின்றான் என்பதில் அவன் பெருமைகொள்ளட்டும்.”

பஹாய் உலகம், தொகுதி 2, பக். 169.
1893-இல் நடைபெற்ற முதல் மதங்களின் பாராளுமன்றம்

1893-இல் நடந்த முதல் உலக மதங்களின் பாராளுமன்றத்தில், பஹாவுல்லா மறைந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, நன்கு பிரபலமான கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர் டாக்டர் ஹென்றி எச். ஜெஸ்ஸப், உலக மதங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படலாம் என்பது குறித்த கட்டுரையை எழுதினார். பாராளுமன்றத்தில் நடந்த பிரதான அமர்வின் போது மற்றொரு கிறிஸ்தவ மதகுருவால் வாசிக்கப்பட்ட கட்டுரை, பஹாவுல்லாவின் இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டியது. இது முதன் முதலில் அவரைச் சந்தித்த ஒரே மேற்கத்தியரான பிரிட்டிஷ் ஓரியண்டலிஸ்டும் அறிஞருமான எட்வர்ட் கிரான்வில் பிரவுனினால் பதிவு செய்யப்பட்டது”ஜூலை 28 அன்று, பாஸ்டனின் பிராஹ்மணீய மற்றும் உலகப் புகழ்பெற்ற ஈவினிங் டிரான்ஸ்கிரிப்ட்டில் கிரீன் ஏக்கரில் விவேகானந்தர் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இது நிச்சயமாக ரால்ப் வால்டோ டிரைனினால் எழுதப்பட்டது, அவர் பின்னர் மனோதத்துவ பாடங்களில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக ஆனார். (அந்த நேரத்தில், அவர் க்ரீனேக்கரில் டிரான்ஸ்கிரிப்ட் என்னும் பத்திரிக்கையின் சிறப்பு நிருபராக இருந்தார், அங்கு அவர் தனக்காக ஒரு பைன்மர குழுமத்தின் விளிம்பில் ஒரு சிறிய அறையை கட்டினார்.) கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு வாசிக்கப்பட்டது: வெள்ளிக் கிழமை க்ரீனேக்கரில் சில வாரங்களைக் கழிக்கும் இந்தியாவின் விவேகானந்தரால் கூடுதல் விரிவுரை வழங்கப்படும். தொடங்கப்பட்ட இந்த ஐக்கியத்துவ பணியில் அவர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர், மேலும் ஒவ்வொரு காலையிலும் அவர் அலைபாயும் சிவப்பு நிற ஆடைகள் மற்றும் மஞ்சள் தலைப்பாகை அணிந்து, பரந்த பைன்மரங்களின் அருகே தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து, ஆண்களும் பெண்களுமான, ஆர்வத்துடன் செவிமடுக்கும் குழு ஒன்றினால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம், அவர் அறிவு மற்றும் அனுபவம் என்னும் பொக்கிஷங்களைத் தாராளமாகப் பொழிகின்றார். அதை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற நமக்கு இது ஒரு வளமான வாய்ப்பாகும், மேலும் பல பசித்திருக்கும் உள்ளங்கள் அதைப் பெறவில்லை என்பதுதான் எங்களின் ஒரே வருத்தம். கிரீன்ஏக்கர் மிகவும் நிரம்பியுள்ளது, அருகிலுள்ள அரை டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட குடிசைகள் உள்ளன: இன்னும் இடம் உள்ளது. அனைவருக்கும் இலவசமான விரிவுரைகளில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு இடமளிக்க நகரவாசிகள் தங்கள் அறைகளைத் திறக்கிறார்கள்.”

கிரீன் ஏக்கர் பள்ளி

ஜூலை 31 அன்று விவேகானந்தர் கிரீன் ஏக்கர் விடுதியில் இருந்து ஹேல்ஸின் மகள்கள் மற்றும் உடன்பிறப்புகளின் மகள்கள் ஆனோருக்கு எழுதினார்: “சத்திரத்தின் மக்கள் ஏறத்தாழ வசதி படைத்தவர்கள், மேலும் முகாம் மக்கள் ஆரோக்கியமானவர்கள், இளைஞர்கள், நேர்மையானவர்கள் மற்றும் புனிதமான ஆண்கள் மற்றும் பெண்கள். நான் அவர்கள் அனைவருக்கும் ஷிவோஹம், ஷிவோஹம் என்னும் (மந்திரத்தைக்) கற்பிக்கிறேன், அவர்கள் அனைவரும் களங்கமில்லாதவர்கள், தூய்மையானவர்கள் மற்றும் எல்லா கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட துணிச்சலுடன் அதை மீண்டும் உச்சரிக்கிறார்கள். பின்னர், 1894-ஆம் ஆண்டு செப்டம்பரில், 1893-ஆம் ஆண்டு சென்னையில் தமது விருந்தோம்பலராக இருந்த திரு. மன்மத நாத் பட்டாச்சார்யாவுக்கு விவேகானந்தர் ஒரு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் அவர்: “சிறிது நேரத்திற்கு முன்பு கிரீன்ஏக்கர் என்னும் இடத்தில் பல நூறு அறிவார்ந்த ஆண்களும் பெண்களும் கூடியிருந்தனர், நான் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அங்கு இருந்தேன். ஒவ்வொரு நாளும் நான் ஒரு மரத்தடியில் நமது இந்து பாணியில் அமர்ந்திருப்பேன், என்னைச் சுற்றியிருந்த புல்லில் என்னைப் பின்பற்றுபவர்களும் சீடர்களும் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு காலையிலும் நான் அவர்களுக்குப் போதிப்பேன், அவர்கள்தான் எவ்வளவு ஆர்வமாக இருந்தனர்.”

விவேகானந்தர் 4 ஜூலை 1902-இல் தமது 39-வது வயதில் காலமானார். இவர் நினைவாக இந்திய அரசாங்கம் 12 ஜனவரியில் அவரது பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக அறிவித்துள்ளது.

இக்கட்டுரை ஒரு சுருக்க விவரமே அன்றி முழுமையானதல்ல. இடம் மற்றும் நேரம் போதாமையின் காரணமாகப் பல விஷயங்கள் இதில் விடுபட்டிருக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: