உரையாடல் மற்றும் அமைதியை மேம்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு 30 ஆண்டு நிறைவு


பார்க் கல்லூரி, மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா – 1980 களில் லெபனானில் நடந்த பேரழிவை ஏற்படுத்திய மோதல்களுக்கு மத்தியில், மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வளர்ச்சி மற்றும் முரண் மேலாண்மை மையத்தின் (CIDCM) இயக்குநருமான எட்வர்ட் அசார் போருக்கான தீர்வாக, யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தார். 

பேராசிரியர் அசார் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தபோது, உலக அமைதிக்கான உறுதிமொழி என்ற தலைப்பிலான உலக நீதிமன்றத்தின் கூற்றுரை (statement) அவர் கண்ணில்பட்டது—அது அமைதிக்கான முன்நிபந்தனைகள் மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான சவால்கள் பற்றிய மிக முக்கிய ஆய்வாக்கும்.

மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் இருக்கையின் (Bahá’í Chair ) தோற்றம் பற்றிய இந்த விபரம், அதன் உரிமையாளரான ஹோடா மஹ்மூதி அவர்களால் அந்த 30ம் ஆண்டு நிறைவு விழாவில் வருகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் மஹ்மூதி, “அதன் உள்ளடக்கங்களால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார்,” என்றார். அவர் பஹாய் இருக்கை ஒன்றை நிறுவ வேண்டுமென முன்மொழிந்து, உலக நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதினார்.

பேராசிரியர் அசாருடைய கடிதத்தின் ஒரு பகுதி.

நானும் எனது சகாக்களும்… “உலக அமைதிக்கான வாக்குறுதி” எனும் அறிக்கையைப்பற்றிப் படித்து சிந்தித்தோம். இந்தக் கடிதத்தின் மூலம், CIDCM மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் சார்பாக நான் பதிலளிக்கிறேன்: “மனித இனத்தின் ஒற்றுமையில் நம்பிக்கையை வலுப்படுத்த பஹாய் அனுபவம், எந்த அளவிலும் பங்களிக்க முடியும் என்பதால், ஆய்வுக்காக அதை ஒரு முன்மாதிரியாக வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

எங்கள் மையத்தின் நோக்கம், உலக அமைதி பற்றிய உங்கள் யோசனைகள் மற்றும் பஹாய்களின் பார்வையை அறிவார்ந்த மற்றும் புறநிலை முறையில் ஆராய்ந்து விவாதிக்க பஹாய்களைப் பெருமையுடன் அழைக்கும் பல்கலைக்கழகத்தினுடைய விருப்பத்தின் அடிப்படையில்… நான் ஒரு தலைவரை நிறுவ முன்மொழிகிறேன். 

இந்த மையத்தில் பஹாய் ஆய்வுகள் பற்றிய ஒரு திட்டம்.

மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மூத்த துணைத் தலைவரும் பேராசிரியருமான ஜெனிஃபர் கிங் ரைஸ், ஆண்டுவிழா கூட்டத்தில் அந்த அடிப்படை நிகழ்வுகளை சுருக்கமாக விவரித்தார்: “முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, மேரிலாந்து பல்கலைக்கழகம்,  ‘அக்கறை மற்றும் தீர்வுகள் தேவைப்படும் உலகின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஈடுபடுவதற்கு அத்தியாவசியமான மனிதக் கொள்கைகளைப் பயன்படுத்துவதில் நாம் ஒன்றாக இணைந்தால் என்ன?” என்ற ஒரு யோசனையுடன் பஹாய் சமூகத்தை அணுகியது.

ஆண்டுவிழாவை நினைவுகூரும் நிகழ்வில் பேசியவர்களில் சிலர் (இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக): ஆஷ்லி டெய்லர், மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் வெர்மான்ட் சட்டப் பள்ளியின் பட்டதாரி; Sein M. Chew, Unity Asset Management இன் தலைவர் மற்றும் CEO; சூசன் ரிவேரா, மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் நடத்தை மற்றும் சமூக அறிவியல் கல்லூரியின் டீன்; ஜெனிபர் கிங் ரைஸ், மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் பேராசிரியர்; ரஷான் ரே, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்; மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் தலைவரான பேராசிரியர் மற்றும் ஹோடா மஹ்மூதி.

“மனிதகுலத்தின் நலன்கள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் அறிவின் பரந்த அளவில் விளைந்த ஒரு குறிப்பிடத்தக்க கூட்டாண்மையின் தொடக்கமாக அந்த எளிய ஆய்வு இருந்தது,” என்று ப்ரோவோஸ்ட் ரைஸ் மேலும் கூறினார்.

1993ல் பஹாய் இருக்கை நிறுவப்பட்ட பெய்ரூட் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற அறிஞர் சுஹெய்ல் புஷ்ரூய் அதன் முதல் பொறுப்பாளரானார், 2005 இல் ஓய்வு பெறும்வரை அதன் பணியை அதாவது, அமைதி மற்றும் கல்வியை மேம்படுத்தும் பணியைத் தொடர்ந்தார். 2006ல் அதன் இரண்டாம் பொறுப்பாளரான ஜோன் கிரேஜெல், அமைதியை நிர்மாணித்தல் மற்றும் மேம்படுத்துதல் பற்றிய திட்டங்களுடன் இருக்கையின் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

அது நிறுவப்பட்டதிலிருந்து, அறிவியல் மற்றும் மதத்திலிருந்து நுண்ணறிவுகளை(insights) ஈர்க்கும் ஒரு பலதுறை ஒருங்கிணைவு சூழலில், ஆராய்ச்சி நடத்துதல் மற்றும் வெளியிடுதல், பயிற்சிகளை வடிவமைத்தல் மற்றும் உலக அமைதி குறித்த கருத்தரங்குகளை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் இருக்கை ஈடுபட்டுள்ளது.

உரையாடல் மற்றும் புரிதலை மேம்படுத்த பலதுறை ஒருங்கிணைவு 

உரையாடல் மற்றும் புரிதலை ஊக்குவிப்பதற்கு இருக்கை,  பலதுறை ஒருங்கிணைவு அணுகுமுறையை மேற்கொள்கிறது. இது அமைதியைப் பற்றிய சிந்தனையை மீம்படுத்துவதற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. பேராசிரியர் மஹ்மூதி கூறுகையில், “நவீன வாழ்க்கையைப் பல கோணங்களில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதால், நாம் பலதரப்பட்டவர்களாக இருக்கிறோம்.”

எவ்வாறாயினும், இந்த அணுகுமுறை மட்டும்தான் என்பதல்ல, மாறாக “மனித அறிவு… மற்றும் சாத்தியக்கூறுகளின் களஞ்சியத்தை” உருவாக்குவதற்கான வழிமுறையாகுமென்று ஜெனிஃபர் கிங் ரைஸ் குறிப்பிட்டார். இதற்கு உண்மையைத் தேடும் தோரணை மற்றும் ஆர்வமின்மையைத் தவிர்க்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறதென கூறும் பேராசிரியர் மஹ்மூதி, “அவற்றின் தோற்றுவாய் எதுவாக இருப்பினும், ஒரு பெரிய காரியத்தைத் தொடர முயல்வதால், தனிப்பட்ட மனப்பற்றுகளையும் பாரபட்சத்தினையும் புறந்தள்ளிட வேண்டும்,” என்று வரையறுக்கின்றார்..

கடந்த முப்பது ஆண்டுகளாக, அமைதி தொடர்பான பிரச்னைகளைச் சமாளிக்க பலதரப்பட்ட அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஒத்துழைத்து 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் இருக்கை வெளியிட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், இருக்கை 80 க்கும் மேற்பட்ட மாநாடுகள், ஆய்வரங்குகள் மற்றும் விரிவுரைகளை நடத்தியுள்ளார், மேலும் 250 க்கும் மேற்பட்ட பேச்சாளர்களை உரையாற்ற அழைத்துள்ளது.

“இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அறிவு மற்றும் அமைதியை நாடுவதற்கும், மனிதகுலத்திற்கான சிறந்த உலகத்தைத் தேடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டவை,” என்று ஃப்ரோவோஸ்ட் ரைஸ் கூறினார்.

30வது ஆண்டு விழா விருந்தினர்களுக்கு அதன் மையக் கருப்பொருள்களை ஆராய்வதற்கான பஹாய் இருக்கையின் முயற்சிகளைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்கியது: கட்டமைப்பு-இனவெறி மற்றும் தப்பெண்ணத்தின் மூல காரணங்கள்; மனித இயல்பு; பெண்கள் அதிகாரம் மற்றும் அமைதி; உலகளாவிய நிர்வாகம் மற்றும் தலைமை; மற்றும் சுற்றுச்சூழலின் உலகமயமாக்கலில் உள்ள சவால்களை சமாளித்தல்.

“பஹாய் இருக்கை இதைப் பல வழிகளில் மேற்கோள்கிறது,” என்று அவர் கூறினார், அதன் பணியின் மையமாக இருக்கும் ஐந்து கருப்பொருள்களை சுட்டிக்காட்டினார்: “இனவெறியின் வேர்கள் மற்றும் நாமும் அடிக்கடி நம் வாழ்வில் எதிர்கொள்ளும் தப்பெண்ணத்தின் காரணங்களைக் கடுமையான ஆய்வு; பெண்களின் சமத்துவமின்மையை உருவாக்கும் கட்டமைப்புகள் பற்றிய விசாரணை; உண்மையான உலகளாவிய ஆட்சிமுறை மற்றும் தலைமைத்துவ அமைப்பைக் கொண்டிருப்பதிலிருந்து நம்மைத் தடுக்கும் தடைகள்; காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அநீதிக்கான காரணங்கள் மற்றும் மனித இயல்பின் சவால்கள்.”

“அமைதிக்கான தடைகளை அகற்றுவதில் சமூக முதன்மையாளர்களோடு கட்டமைப்புகளின் பங்கை ஆராயும் அறிவு மற்றும் உத்திகளுக்கு இது ஒரு சிறந்த அறிவியல் அடிப்படையை உருவாக்கியுள்ளது” என்று கூறிய ப்ரோவோஸ்ட் ரைஸ், பஹாய் இருக்கையின் முயற்சிகளிலிருந்து வெளிப்பட்டுவரும் நுண்ணறிவுகளுக்காக (insights) தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அமைதிக்கான தடைகளின் மூல காரணங்களை நிவர்த்தி செய்தல்

அமைதி தொடர்பில் மையமாக ஐந்து கருப்பொருள்களைத் தலைமைக் கருதுகிறது: கட்டமைக்கப்பட்ட இனவெறி மற்றும் தப்பெண்ணத்தின் மூல காரணங்கள்; மனித இயல்பு; பெண்களுக்கு அதிகாரம் மற்றும் அமைதி; உலகளாவிய நிர்வாகம் மற்றும் தலைமைதத்துவம் மற்றும் சுற்றுச்சூழலின் உலகமயமாக்கலில் உள்ள சவால்களை வெல்லுதல்.

இந்த கருப்பொருள்களுடன் தொடர்புடைய சவால்களைச் சமாளிப்பதற்கான அடிப்படையில் வித்தியாசமான அணுகுமுறை இல்லாமல் நீடித்த அமைதியை அடைய முடியாது என்று பேராசிரியர் மஹ்மூதி விளக்கினார். அவை சமூகத்தில் ஏற்படுத்தும் “கட்டுமானஞ்சார்ந்த சிதைவுகள்” என்பது குறிப்பிடத்தக்கது. புதுமையான அணுகுமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு, அமைதியை நோக்கிப் பயணிப்பதைத் தடுக்கின்ற, தற்கால உரையாடலில் ஆழமாக வேரூன்றிய மனித இயல்பைப் பற்றிய ஒரு பரவலான அனுமானத்திற்கு—அதாவது மனிதகுலம் இயல்பாகவே சரிசெய்ய முடியா சுயநலமிக்கது என்பதற்கு சவால்விட  பஹாய் இருக்கை முயற்சி செய்கிறது., 

அமைதியை அடையும் திறன் கொண்ட மனிதகுலத்தின் பார்வை

உலகின் சவால்கள் மற்றும்  பலக்கிய தன்மையை(complexities) அடையாளங்கண்டதில் சமூகத்தில் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தைக்கான சோகமான உதாரணங்கள் உள்ளன என்பதை பஹாய் இருக்கை(Bahá’í Chair) ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், பொது நலனுக்காக மக்கள் தன்னலமின்றி செயல்பட்டதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இருப்பதையும் இருக்கை பார்க்கிறது.

ஆண்டு விழாவில் தனது கருத்துகள் முழுவதும், பேராசிரியர் மஹ்மூதி, அமைதியான உலகத்தை நோக்கிச் செயல்படுவதற்கு மனிதகுலத்தை அடிப்படைத் திறன் கொண்டதாக, இருக்கை கருதுகிறதென்று வலியுறுத்தினார். மனித ஆவியின் உன்னதத்தை அங்கீகரிப்பதோடு, அந்த உன்னதத்திற்கு தகுதியான ஒரு சமூகத்தை கற்பனை செய்யும் இந்தக் கண்ணோட்டம் பஹாய் போதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

அனைத்து மக்களும் ஒரே மனித குடும்ப உறுப்பினர்களெனும் அடையாளத்தை அங்கீகரிப்பதன் மூலமும், சமூகத்திற்கு நீதி மற்றும் தன்னலமற்ற சேவை போன்ற மதிப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும், அமைதியை நோக்கி முன்னேறுவதைத் தடுக்கும் சில அடிப்படையான மானுட நம்பிக்கைகளுக்கு பஹாய் இருக்கை சவால் விடுகிறது. பேராசிரியர் மஹ்மூதி கூறியுள்ளது போல், “ஒரு சிறந்த உலகத்தை உருவாக்கவே முடியாதென்ற கருத்தை நாங்கள் கருத்திற்கொள்ள மறுக்கிறோம்.”

பல்கலைக்கழகத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி கலாச்சாரத்தை வளர்ப்பது

பஹாய் இருக்கையின் வளர்ச்சியில் ஒரு நம்பிக்கைக்குரிய பகுதி, வகுப்பறையில் அதன் பணியாகும். அங்குப் பேராசிரியர் மஹ்மூதி ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஒரு தனித்துவமான பாடத்தை வழங்குகிறார், இது ஆன்மீகக் கொள்கைகளின் வெளிச்சத்தில் மாணவர்களுக்கு சமூக சவால்களின் மூல காரணங்களைக் கண்டறிய உதவுகிறது. அமைதியின் கேள்விக்கு மையமாக ஐந்து கருப்பொருள்களை இருக்கை கருதுகிறது: கட்டமைக்கப்பட்ட இனவெறி மற்றும் தப்பெண்ணத்தின் மூல காரணங்கள்; மனித இயல்பு; பெண்கள் அதிகாரம் மற்றும் அமைதி; உலகளாவிய நிர்வாகம் மற்றும் தலைமை; மற்றும் சுற்றுச்சூழலின் உலகமயமாக்கலில் உள்ள சவால்களை சமாளித்தல்.

பேராசிரியர் மஹ்மூதி, இந்தக் கருப்பொருள்களுடன் தொடர்புடைய சவால்களைச் சமாளிப்பதற்கான அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறை இல்லாமல் நீடித்த அமைதியை உணர முடியாது என்று விளக்கினார், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் “டெக்டோனிக் சிதைவுகள்”. புதுமையான அணுகுமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு, தற்கால உரையாடலில் ஆழமாக வேரூன்றிய மனித இயல்பைப் பற்றிய ஒரு பரவலான அனுமானத்தை சவால் செய்ய இருக்கை முயற்சி செய்கிறது, அதாவது, மனிதகுலம் இயல்பாகவே சரிசெய்ய முடியா சுயநலம்கொண்டது என்ற எண்ணம், அமைதியை நோக்கி முன்னேறுவதைத் தடுக்கிறது- 

“பேராசிரியர் மஹ்மூதியின்… தாக்கத்தை ஏற்படுத்தும் பணி, ‘உலக அமைதியை எவ்வாறு உருவாக்குவது?’ போன்ற பெரிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முயல்கிறது. நாம் எப்படிப்பட்ட உலகத்தைப் பெற விரும்புகிறோம் என்பது பற்றி மேலும் சிந்திக்கவும் யோசிக்கவும் அவர் மக்களை ஊக்குவிக்கிறார்,” என ஃப்ரோவோஸ்ட் ரைஸ் கூறினார்.

பேராசிரியர் மஹ்மூதியின் இரண்டு முன்னாள் மாணவர்கள் இருக்கையுடனான அவர்களின் அனுபவங்கள் மற்றும் அது அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் பயணங்களில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி பேசினர்.

சமீபத்தில் வெர்மான்ட் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவரான அஷ்லி டெய்லர்,  இப்போது ஐக்கிய அமெரிக்க விமானப்படையின் நீதிபதி அட்வகேட் ஜெனரல் படைப்பிரிவின் உறுப்பினராக உள்ளார். பஹாய் இருக்கையின் தான் பயணித்ததைப் பற்றி உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார். கல்லூரியில் தாம் முதலாம் ஆண்டு மாணவராக இருந்தபோது, பஹாய் இருக்கையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஈரானிய பெண் எழுத்தாளர்கள் பற்றிய விரிவுரையில் கலந்து கொண்டதன் அனுபவத்தைப் பற்றி அவர் பேசினார்.

திருமதி டெய்லர், உலக அமைதிப் பிரச்னையில் பஹாய் இருக்கையின் தனித்துவமான அணுகுமுறைக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார், “…நமக்குள்ளாக இருந்தாலும், நமது சமூகங்கள், நமது கல்வி முறை, நமது சூழல் மற்றும் பல [வழிகளில்] இருந்தாலும் சரி உலகம் முழுவதிலும் உள்ள அறிஞர்களை ஒன்றிணைத்து, நாம் எவ்வாறு அமைதியை அடையலாம் என்பது குறித்த அவர்களின் உறுதியான கருத்துக்களை விவாதிக்கலாம்.”

பேராசிரியர் மஹ்மூதியால் கற்பிக்கப்படும் வகுப்பில் உதவி ஆசிரியராக இருந்த அனுபவத்தைப் பற்றியும் திருமதி டெய்லர் பேசினார், இதில் பங்கேற்பாளர்கள் தப்பெண்ணம் மற்றும் அதன் வேர்களைப் பற்றி விவாதித்தனர்: “இந்தக் குறிப்பிட்ட கருத்தரங்கில், மாணவர்கள் உண்மையிலேயே வளர்ந்து சுயபரிசோதனை செய்துகொள்வதை நான் கண்டேன்… பல ஆண்டுகளுக்குப் பிறகு, வகுப்பு எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது, அவர்கள் இன்னும் இந்த உரையாடலைத் தொடங்கி, கடினமான உரையாடல்களைத் தொடர்கிறார்கள் என்று மாணவர்கள் என்னிடம் கூறினர்.

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியும் இப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு படைப்பாற்றல் நிறுவனத்தின் மூலோபாய நிபுணருமான எமிலி கோரே, பஹாய் இருக்கை தனது வாழ்க்கையில் மாற்றியமைக்கும் தாக்கம் மற்றும் அது தனது எதிர்கால அபிலாஷைகளை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதைப் பற்றி பேசினார். படிப்பில் சேரும் போது, சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அநீதிகளுக்கு அவர் எவ்வாறு ஒத்திசைந்தார் (attuned) என்பதை விளக்கினார்; அங்குதான் அவர் பஹாய் இருக்கையின் கருப்பொருள்கள் மற்றும் மிகவும் சமத்துவமான உலகத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாக இரக்கம் மற்றும் புரிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

“கல்லூரி காலம் முழுவதும், நான் 35 வகுப்புகளை எடுத்தேன். ஆனால், நான் உலகைப் பார்த்த விதத்தை அடிப்படையாக மாற்றியது ஒன்றுதான்” என்கிறார் திருமதி. கோரே. “இது மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் எனது முதல் வாரத்தில் பேராசிரியர் மஹ்மூதியின் சிறப்பு கருத்தரங்கு. மேரிலாந்தின் ஹோவர்ட் மாவட்டத்திற்கு வெளியே உலகம் எவ்வளவு வித்தியாசமாக உள்ளது என்பதையும், சுயநினைவற்ற சார்புகள், பாரபட்சத்தின் அறிவியல் மற்றும் பிரதிநிதித்துவத்தின் சக்தி,” பற்றி நான் அங்குதான் கற்றுக்கொண்டேன்.

பஹாய் இருக்கையுடன் திருமதி. கோரேய் செலவழித்த நேரம், மக்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பது பற்றியும், மிகவும் சமத்துவமான உலகத்தை உருவாக்குவதில் பட்சாதாபமும் புரிதலும் வகிக்கும் பங்கையும் அறிந்துகொள்ள அனுமதித்தது. வகுப்பிற்கு உதவி ஆசிரியராக, இந்தப் பாடங்கள் தன் சக மாணவர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை நேரடியாகக் கண்டார். மேலும், தனது கல்வியையும் தொழிலையும் மற்றவர்களுக்கு உதவுவதற்குப் பயன்படுத்த ஊக்கமளித்தார்.  பஹாய் இருக்கையின் படிப்புகள் வழியாக சென்ற பல மாணவர்கள், “நாங்கள் சிறந்த கேட்போராக மாறினோம்,”  என்ற அவர்களின் உணர்வுகளை திருமதி. கோரேய் எதிரொலித்தார்.

தற்போதைய மாணவியான ஸ்டெல்லா ஹட்சன் விளக்குகையில், பஹாய் இருக்கை “சிக்கலான கேள்விகளை நுண்ணறிவு மற்றும் முக்கியமான மனித கண்ணோட்டத்துடன் அணுகுகிறது, பிரச்சனையின் வேரில் மூழ்குகிறது,” என்பதால், உலகத்தைப் பற்றிய மாணவர்களின் பார்வை பரிணமிக்கிறது என்று மேலும் விளக்கினார்.

விருந்தினர் பேச்சாளர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர் மஹ்மூதி ஆகியோரால் பகிரப்பட்ட பல கருத்துக்களுக்கு மேலதிகமாக, நினைவேந்தலில் தலைமையின் சில வெளியீடுகளின் காட்சியும் இடம்பெற்றது.

இந்த ஆண்டு விழா, பஹாய் இருக்கை மற்றும் அதன் பரந்த அளவிலான ஒத்துழைப்பாளருக்கு சமாதானம் பற்றிய சொற்பொழிவை முன்னெடுத்துச் செல்வதற்கும், எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கும் இருக்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

“அமைதியின் வெற்றிகள் நம் அனைவரிடமிருந்தும் வரும்” என்று பேராசிரியர் மஹ்மூதி தனது இறுதி குறிப்புகளில் கூறினார், “ ‘நாம்’ என்பதில் விருப்பமுள்ளோரின் கூட்டுறவை உள்ளடக்கியது. கடந்த காலத்தைப் பொருட்படுத்தாமல், நிகழ்காலத்தில் முழுமையாகவும் எதிர்காலத்தை மனதில் கொண்டும் ஒற்றுமையாக உழைக்க அர்ப்பணிப்புடன் இருப்போரின் ஒத்துழைப்பால் அமைதிக்கான வேலை வரும். அத்தகைய ஒரு புதிய அமைதி உலகத்தைக் கற்பனை செய்து பார்க்க எங்களுக்கு உதவ உங்களை அழைக்கிறோம்.

கூட்டத்தில் அவரது கருத்துகளில், அமெரிக்க பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினரான கென்னத் போவர்ஸ் விரிவாகக் கூறினார்: “அனைத்து மனிதகுலத்தையும் அதன் எல்லையற்ற பன்முகத்தன்மை மற்றும் செழுமையுடன் பார்ப்பதே பஹாய் இருக்கையின் இன்றியமையா அடிப்படையாகும். ஒட்டுமொத்த கூட்டிணைப்பியல் (an organic) உலகிற்கு மிகவும் அவசியமான கொள்கைகளை முறையாகவும் அறிவியல் ரீதியாகவும் பயன்படுத்துவதாகும். இந்தக் கண்ணோட்டத்துடன், உலக அமைதிக்கான பாதையைப் பற்றிய சொற்பொழிவு மற்றும் கற்றலை முன்னெடுத்துச் செல்வதே அதன் பணியாகும், ”

30வது ஆண்டு கூட்டத்தின் பதிவை இங்கே பார்க்கலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1647/