நாடுகடத்தலுக்கு அப்பால் – புனித நிலத்திற்கு பஹாவுல்லா வருகையின் 150’வது நினைவாண்டு.


27 ஆகஸ்ட் 2018

பஹாய் உலக செய்தி சேவை புனிதநிலத்திற்கு பஹாவுல்லாவின் வருகை குறித்த 150’வது நினைவாண்டைப் பற்றிய ஒரு வலையொளி (பொட்காஸ்ட்) வரிசையைப் பிரசுரிக்கவிருக்கின்றது. இந்த சுருக்கமான கட்டுரை, அந்த வரிசையில் வரும் முதல் வலையொளிக்கான அறிமுகமாகும்.

புனிதநிலத்திற்கான பஹாவுல்லாவின் வருகை: பாகம் 1

பஹாய் உலக செய்தி சேவையின் இந்த முதல் கதை, அக்காநகருக்கு பஹாவுல்லா நாடுகடத்தப்பட்டதன் சூழல், எடிர்னே நகரிலிருந்து அவரது புறப்பாடு, அக்காநகர் மற்றும் ஹைஃபா’வின் ஆர்வமூட்டும் வரலாறு ஆகியவற்றை ஆராய்கின்றது.

பஹாய் உலக மையம் – இந்த வாரம் இரண்டு ஆட்சியாளர்களினால் ஆணையிடப்பட்ட நாடுகடத்தல் வரிசையில் இறுதியான, புனித நிலத்திற்கான பஹாவுல்லா வருகையில் 150’வது நினைவாண்டைக் குறிக்கின்றது. இப்பொழுது, பஹாய் சமூகத்தின் அதிப்புனிதத்தளங்களின் இருப்பிடமாக விளங்கும் அக்கா/ஹைஃபா வட்டாரம் பஹாய் உலகின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையமாகியுள்ளது

 “இந்த நாடுகடத்தல் அடக்குமுறை, அநீதி, துன்புறுத்தல் ஆகியவை குறித்த ஒரு செயலாகும்; ஆனால், அடக்குமுறை குறித்த இச்செயலை ஆன்மீக மற்றும் சுதந்திரத்திற்கான மானிடத்தின் ஒரு பயணமாக பஹாவுல்லா மாற்றினார்,” என லோஸ் ஏஞ்சல்ஸ், கலிப்போர்னியா பல்கலைக்கழகத்தின் இரானிய ஆய்வுகள் பேராசிரியரான நாடெர் சையீடி விளக்கினார். பஹாவுல்லா 1853’இல் தமது தாய்நாடான பாரசீகத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார்; அது நாடுகடத்தல்கள் வரிசை ஒன்றின் ஆரம்பமாகியது. பஹாவுல்லாவை வெகுதூரத்திலிருந்த சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர் சமயத்தின் ஒளியை அணைத்தட முடியுமென பாரசீக மற்றும் ஒட்டமான் அரசாங்கங்கள் நினைத்தன.

12 ஆகஸ்ட் 1868’இல், அக்காலத்தில் ஏட்ரியாநோப்பள் என அறியப்பட்ட எடிர்னே’யில் உள்ள பஹாவுல்லாவின் இல்லத்தை ஒட்டமான் படைவீரர்கள் சூழ்ந்தனர், அதிகாரிகள் அவர் மீண்டும் நாடுகடத்தப்படுகின்றார் என அறிவித்தனர். எங்கு செல்கிறார் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை. பஹாவுல்லவும் அவருடன் இருந்தவர்களும் அவர்களின் பயணத்தை ஆரம்பித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகே, அவர்கள் செல்லுமிடத்தை அறிந்தனர்: ஒட்டமான் பாலஸ்தீனத்தின் பழங்கால சிறைநகரான ஆக்கோ எனவும் அழைக்கப்படும் அக்கா நகர்.

பிரதானமாக, ஒட்டமானியர்களுக்கு, ஆக்கோ நகர் குற்றவாளிகளுக்கான ஒரு சிறைச்சாலையாகவும், பிறகு கண்காணிக்கப்பட வேண்டியோர் என அவர்கள் எண்ணிய பலவிதமான மக்கள் நாடுகடத்தப்படுவதற்கான ஓரிடமாகவும் ஆகியது. பஹாய்களும் அந்த வகையான மக்களாக இருந்தனர்,” என ஒட்டமான் சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று ஆசிரியரான டேவிட் குஷ்னர் விளக்கனார். பல நாகரிகங்களைக் கடந்து வந்துள்ள அக்காநகர் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரும், ஒருகாலத்தில் ஒட்டமான் பாலஸ்தீனத்தில் ஒரு முக்கிய மையமாகவும் இருந்துள்ளது. இருப்பினும் 1868’ற்குள், மறக்கப்படுவதற்கு ஏதுவான இடமாக பாழடைந்த நகராக  ஒட்டமானியர்கள் அதை ஒரு சிறைநகராகப் பயன்படுத்தினர்.

இப்பொழுது, பஹாவுல்லாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின்பால் பக்கிசார்ந்த ஒரு செயலாக, புனிதப்பயணத்திற்காக அக்கா/ஹைஃபா வட்டாரத்திற்கு ஆயிரக்கணக்கான பஹாய்கள் வருகையளிக்கின்றனர்.

புனிதநிலத்திற்கு பஹாவுல்லாவின் வருகை: பாகம் 2

பஹாய் உலக நிலையம் – கோடை வெய்யிலில் விரிகுடா வழியே அப் பாய்மரக் கப்பல் மெதுவாக நகர்ந்து வந்து, பஹவுல்லாவையும் அவருடன் இருந்த சக கைதிகளையும் அக்கா’விற்கு கொண்டுவந்து சேர்த்தது. அது வெள்ளிக்கிழமை 150 ஆண்டுகளுக்கு முன் 31 ஆகஸ்ட் 1868 ஆகும்.

அக்காநகர் துறைமுகம் பயணிகள் இறங்குவதற்கு முறையான வசதிகளைக் கொண்டிருக்கவில்லை, ஆதலால் கப்பல் நகருக்கு வெளியே நீரில் ஆழமில்லா ஓரிடத்தில் நின்றது. கைதிகள் கடல்வாயிலை நோக்கி நீரில் நடந்து சென்றபோது, அங்கு எதிர்ப்புணர்வோடு கேலிக்கூச்சலிட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தை எதிர்நோக்கினர்.

நகரின் குறுகிய மற்றும் வளைந்து செல்லும் சந்துகளின் வழி, கடல்வாயிலிலிருந்து அப்பொழுது ஒரு சிறையாகப் பயன்படுத்தப்பட்ட பாசறையை நோக்கி பஹாவுல்லா கொண்டுசெல்லப்பட்டார்.

பஹாய் சமயத்தின் முதல் நூற்றாண்டின் வரலாறாகிய, ஷோகி எஃபெண்டி எழுதிய கடவுள் கடந்து செல்கின்றார் எனும் நூலில்: “அக்காநகரில் பஹாவுல்லாவின் வருகையானது, இறுதிக் கட்டமாகிய, உண்மையில் அவரது சமய ஆட்சிக்காலம் முழுவதும் அவர் அனுபவித்த நாடுகடத்தலின் உச்சகட்டமாகிய அவரது நாற்பது வருட சமய ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தின் ஆரம்பத்தை, குறிக்கின்றது. அக்காநகரில் அவரது சிறைவாச காலம், மெதுவாக முதிர்ச்சியுறும் ஒரு செயல்முறையின் கனிவுறுதலை அதனுடன் கொண்டுவந்ததோடு, அந்த சமயப்பணியின் சிறந்த கனிகள் இறுதியில் சேகரிக்கப்பட்ட ஒரு காலகட்டமாகவும் விளங்கியது.”

நகரின் மோசமான நிலைமையும், அவர்கள் வருகையின் போது பஹாவுல்லாவுக்கும் அவரது சகாக்களும் அச்சமூட்டும் வகையில் நடத்தப்பட்டதும் அவர்களின் உடனடி அழிவு, பஹாவுல்லாவின் சமயத்தின் முடிவு ஆகியவற்றைக் சமிக்ஞையிடும் நோக்கங் கொண்டவையாகும். இருப்பினும், அந்த காட்சி குறித்த பஹாவுல்லாவின் வர்ணனை முற்றிலும் வேறு விதமாக இருந்தது: “எமது வருகையைப் பொறுத்தவரை, ஒளியின் பதாகைகளுடன் நாங்கள் வரவேற்கப் பட்டோம்; அப்பொழுது ஆவியின் குரல்,” ‘விரைவில் பூமியில் வாழ்கிற அனைவருமே இந்த பதாகையின் கீழ் பட்டியலிடப்படுவார்கள்’”என்று கூக்குரலிட்டது.” பஹாய் வரலாற்றில் சில அசாதாரன மேம்பாடுகளுக்கான தளமாக அக்காநகர் விளங்கவிருந்தது.

அக்காநகரிலிருந்த தமது சிறையிலிருந்தவாறே பஹாவுல்லா தமது மிகவும் உறுதியான சில படைப்புகளை வெளிப்படுத்தினார். அவற்றுள் தமது காலத்தில் வாழ்ந்த பல அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு தனித்தனியே எழுதப்பட்ட கடிதங்கள் அடங்கும்: போப்பாண்டவர் 9’வது பியுஸ், 3’வது நெப்போலியன், ஸ்சார் 2’வது அலெக்ஸான்டர், விக்டோரியா மகாராணி, மற்றும் நாசிரிட்டீன் ஷா. இதே அக்காநகரில்தான் அவர் தமது அதிப்புனித நூலாகிய கித்தாப்-இ-அக்டாஸ் திருநூலையும் வெளிப்படுத்தினார்.

பஹாவுல்லா, தமது வாழ்நாளில் எஞ்சியிருந்த வாழ்நாள்களை அந்த சிறை நகரிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கழித்தார். பழைய அக்காநகருக்கு அருகில் வெளியே உள்ள அவரது இறுதி நல்லடக்கத்தலம், இன்று உலக பஹாய்களுக்கு அதிப்புனிதத்தளமாக இருக்கின்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1282/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: