மார்த்தா ரூட்


கீழ்ப்படிதலும், அளப்பரிய உழைப்பும் – மார்த்தா ரூட்

அப்துல்-பஹா மார்த்தா ரூட் பற்றி கூறுகின்றார்:

உண்மையில் நீரே இராஜ்யத்தின் முன்னோடியும், திருவொப்பந்தத்தின் முன்னறிவிப்பாளரும் ஆவீர். நீர் உண்மையிலேயே சுய அர்ப்பணம் மிக்கவராவீர். நீர் எல்லா தேசங்களுக்கும் அன்பை வெளிப்படுத்துகின்றீர். வருங்காலத்தில், ஆயிரக்கணக்கில் அறுவடையளித்திடும் ஒரு விதையை இப்பொழுது விதைக்கின்றீர். நித்திய காலமும் இலை விடும், பூக்கள் பூக்கும், கனிகள் கொடுக்கும் ஒரு மரத்தை நடுகின்றீர்; பருமனளவில் அதன் நிழல் நாளுக்கு நாள் அதிகரித்திடும்.

marthroot
மார்த்தா ரூட்

ஷோகி எஃபெண்டி, மார்த்தா ரூட்டை “பஹாவுல்லாவின் சமயத்தின் அருஞ்சேவகர் எனவும், “ஒப்பிடப்பட முடியாதவர்” எனவும் கருதியுள்ளார். 1939-இல் அவரது மரணத்தின் போது, “முதல் பஹாய் நூற்றாண்டில் அப்துல்-பஹாவின் கரங்கள் உருவாக்கியுள்ள பிரதான திருக்கரம்” என அவரது ஸ்தானத்தை விவரித்துள்ளார். ஒரு (சமய)போதகர் எனும் முறையில் அவரைக் குறிப்பிடும் போது:

…அனைத்துலக போதனைக்களத்தில் அவரது மகத்தானதும், தனித்துவமிக்கதுமான உழைப்பினால், உலகம் முழுவதுமுள்ள அவரது சக சமய போதகர்களின் சாதனைகளை பெரும் மகிமையோடு அவர் மங்கச்செய்தது மட்டுமின்றி, ஒரு முழு நூற்றாண்டினூடே சமயத்தை விருத்திசெய்தோரின் சாதனைகளையும் விஞ்சிய ஒரு மகிமை அவருடையதாகும். ஆங்காங்கு பயணம் செய்திடும் பஹாய் போதகர்களின் முன்மாதிரியும், அப்துல்-பஹாவின் மறைவிலிருந்து பஹாவுல்லாவின் கரங்கள் உருவாக்கியுள்ள முன்னணி (சமயத்)திருக்கரமுமான மார்த்தா ரூட்-இன் பன்மடங்கான சேவைகளும், அவரது விழுமிய வாழ்க்கையும் சரியாக மதிப்பிடப்பட வேண்டுமானால், அவரது சமயத்தின் முன்னணி அரசதூதர், மற்றும் ஆண் அல்லது பெண் ஆனாலும், கிழக்கில் அல்லது மேற்கிலுள்ளவரானாலும், பஹாய் போதகர்களின் ‘பெருமிதம்’ எனும் பட்டம் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

விஞ்சிட முடியாத இந்த ஆன்மா, தனது உழைப்பின் தன்மைகளாலும், வென்ற வெற்றிகளின் தரத்தினாலும், அப்துல்-பஹா மேற்கு முழுவதுமான தமது பயணங்களின் போது தமது சீடர்களுக்குத் தாமே எடுத்துக்காட்டிய ஓர் உதாரணத்திற்கு அடுத்த நிலையை உள்ளடக்கியதோ எனும் ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

martharoot-grave
ஹவாயி தீவிலுள்ள மார்த்த ரூட்டின் கல்லறை

பஹாவுல்லாவின் சமயத்தின் அருஞ்சேவகரான இவர் அவரது சமயத்திற்கு ஆற்றிய எல்லா சேவைகளிலும், ருமேனியா நாட்டின் அரசியாரின் வாழ்வின் இருள்சூழ்ந்த தருணம் ஒன்றான, கசப்பும், குழப்பமும், துன்பமும் ஒரு நேரத்தில் அந்தப் பேரார்வமும், துணிகரமும் மிக்க முன்னோடி அவ்வரசியாரின் மனதில் ஏற்படுத்திய உடனடி மறுவினையே அதி அற்புதமானதும், முக்கியத்துவமும் மிக்கதும் ஆகும். “பெருந் துக்கமும், உள்ளார்ந்த குழப்பம், துன்பம் ஆகியவை சூழ்ந்திருந்த ஒரு நேரத்தில், எல்லா மகத்துவம் மிக்க செய்திகளைப் போன்றே இதுவும் வந்தடைந்தது; ஆதலால், விதை ஆழமாகப் பதிந்தது,” என அரசியார் தமது கைப்பட எழுதிய ஒரு கடிதத்தில் சான்றளித்துள்ளார்.

மார்த்தா ரூட்டின் வாழ்க்கை, மற்றும் அவர் சமயத்திற்கு எவ்வாறு சேவையாற்றினார் என்பதைப் பற்றி ஆய்வு செய்வது, ஒருமுகமான அர்ப்பணம், தூய்மை மற்றும் தியாகத்துடன் சமயத்தைப் போதிப்பது என்றால் என்பது குறித்து மதிப்புமிகு நுண்ணறிவுகளை அடைவதாகும். பாதுகாவலர், போதகர்களுக்கான ” கட்டுக்கடங்காத காற்றைப்போல் போன்று இருங்கள்” எனும் பஹாவுல்லாவின் அழைப்பை, மார்த்தா ரூட்டில் கண்டும், பல தலைமுறைகள் பின்பற்ற முயலவேண்டிய, கீழ்ப்படிதலுக்கான ஒரு முன்மாதிரியின் உயர்வான நிலையில் அவரை மதித்தார்:

அப்துல்-பஹா தமது உயிலில் வெளிப்படுத்திய இயேசு சீடர்களின் காலடிகளைப் பின்பற்றவேண்டுமெனும் உத்தரவைப் பொறுத்தவரை:”எல்லா பிரதேசங்களிலும் பயணித்திடவும்”, “ஒவ்வொரு நாட்டிலும், யா பஹாவுல்-அப்ஹா எனும் கூக்குரலை” “ஒரு கணங் கூட ஓய்வில்லாமல்” எழுப்பிடவும், இக்காலத்தினரும், வருங்காலத்தலைமுறையினரும் பெருமைப்படுவம், பின்பற்றவும்கூடிய ஒரு கீழ்ப்படிதலை சிரஞ்சீவியான இந்த வீராங்கனை வெளிப்படுத்தினார்.

” கட்டுக்கடங்காத காற்றைப் போன்று”, தமது பயணத்திற்கான “அதி சிறந்த முன்னேற்பாடாக” தமது “முழு நம்பிக்கையையும்” கடவுளில் வைத்து, அதன் ஆணைகளை அத்தருணமே செயல்படுத்திட அவர் முன்னெழுந்திட்ட, அப்துல்-பஹாவின் நிருபங்களில் கிளர்வூட்டும் வகையில் வெளிப்படுத்தப்பட்ட விருப்பத்தை ஏறத்தாழ கடைசி வார்த்தை வரை அவர் செயல்படுத்தினார்: “மிகுந்த வறிய நிலையிலும் கால்நடையாக நடந்தும்கூட இப்பகுதிகளுக்கு நான் பயணம் செய்து, நகரங்களிலும், கிராமங்களிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், சமுத்திரங்களிலும், “யா பஹாவுல்-அப்ஹா” என்ற அழைப்பினை எழுப்பி, தெய்வீகப் போதனைகளை விருத்தி செய்ய என்னால் முடியுமாயின்! அந்தோ, இதை என்னால் செய்ய முடியவில்லை. அதற்கு நான் எத்துணைக் கடுமையாக வருந்துகிறேன்! நீங்கள் அதனை நிறைவேற்ற இறைவன் விரும்பிடுவாராக.”

வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான மேபல் காரிஸை பொறுத்த வரை, அப்துல் பஹாவின் அவ்வார்த்தைகள், மார்த்தா ரூட்டின் உள்ளத்தைச் சூழ்ந்தும், “அவருக்குள் தங்களை உட்புகுத்திக்கொள்ளவும் செய்தன. அவரது சக்திகளுக்கான தூண்டுகோலாகவும், அவரது இல்லத்தை விடுத்து தூர தேசங்களில் இருக்கும் போது அவருக்கு ஆறுதலாகவும் அவை இருந்தன. அப்துல்-பஹா சாதிப்பதற்குத் தடுக்கப்பட்டவற்றை, பஹாய் சமயத்திற்காக மார்த்தா ரூட் செய்தார்.”

போதிப்பதற்கான மார்த்தா ரூட்டின் முயற்சிகளுக்கு பிரார்த்தனையும், தெய்வீக வழிகாட்டுதலுமே நடுமையமாக இருந்தன. “ஒரு நகரத்தில் நான் செயல்பட ஆரம்பித்துவிட்டால், என் உறவினர்களுக்காக ஒரு தபால் கார்டை எழுதுவதற்காகக் கூட நிறுத்தமாட்டேன்,” என அவரே கூறியுள்ளார். எல்லாமே, புனித ஆவி வேகமாக வீசுவதைப் போலாகின்றன. அதனால், லௌகீகங்கள் எதுவுமே முக்கியமற்றதாகிவிடும். அப்துல்-பஹா! பஹாவுல்லா! எனக்கு உதவுங்கள்… நகரத்தின் மக்களும் உதவிடுவார்களாக; அவர்களே எல்லாவற்றையும் சாதிக்கின்றனர்; நான் பிரார்த்தனை மட்டும செய்கின்றேன், வழிகாட்டலைச் செவிமடுத்து, செயல்படுகின்றேன். ஆனால், அது சந்தோஷமான நேரமாகும்.” “எப்போதெல்லாம், போதிப்பதற்காக நான் ஒரு நகரத்திற்குள் நழைந்தாலும், முதலில் நான் அஹமதுவின் நிருபத்தை பத்து முறை கூறுவேன்.” கணக்கிலடங்கா பொது சொற்பொழிவுகள், வானொலி மற்றும் பத்திரிக்கை பேட்டிகள், உலகம் முழுவதுமுள்ள நாழிதள்களில் எழுதப்பட்ட கட்டுரைகள், சுயபோதனை ஆகிவற்றின் மூலம், மில்லியன் கணக்கிலான ஆன்மாக்களுடன் சமயத்தைப் பகிர்ந்துகொண்டார்!

அவர் போதித்த விதமானது மக்களை அவர்பாலும், அவர் பகிர்ந்துகொண்ட செய்தியின்பாலும் வசீகரித்தது; அவர்கள் பஹாய்கள் ஆகாவிட்டாலும், மக்கள் அவரது முயற்சிகளுக்கு ஏதாவது வகையில் உதவிட முன்வந்தனர்.

மார்த்தாவின் உரைகள் ஒரு கல்விமானின் உரைகளல்ல; அவை எளிமையானவை, நேரடியானவை, சொல் அலங்காரமில்லாத, பஹாய் சமயத்தின் ஒன்று அல்லது இரண்டு அம்சங்களிலும், அதன் மையநாயகர்களின் வாழ்க்கைகள் மீதும் கவனம் செலுத்திடும் உரைகளாக இருந்தன. ஆனால், மார்த்தா உரையாற்றும் போது, அவரது எளிமை தன்மைமாற்றமடைந்தது. அவர் ஓர் ஆன்மீக ஒளியுடன் பிரகாசித்தார்; அவரது செய்தி மற்றும் நோக்கத்தின் தூய்மை அவரை ஓர் ஈர்ப்புமிக்கவராக ஆக்கின. அங்கு அகந்தை இல்லை; மனிதகுல ஒருமை, அதை அடைவதற்கான வழி ஆகியவை குறித்த ஒரு தேவையே இருந்தது. அங்கு வாக்குவாதம் இல்லை, உரத்த குரலொலி கிடையாது; அவர் எங்கு சென்ற போதிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஓர் ஆழ்ந்த, ஊடுருவும் அன்பே இருந்தது.

மார்த்தா தமது முயற்சிகளை வெளிப்படையான விதை விதைக்கும் நடவடிக்கைளோடு மட்டுமே கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை.

[சீன நாட்டில்] முன்னாடியாகப் பணிபுரிந்த போது, அவர் சீன சமூகத்தின் ஒரு பகுதியாகி, (மக்களின்) வாழ்க்கைகளை வளப்படுத்திட வேறு வழிகளிலும் முயன்றார்.

தமது பத்திரிகை சாமர்த்தியத்தை வெளிப்படுத்தும் ( ) கிளப் ஒன்றை ஆரம்பித்தார்; பிறகு, அனேகமாக மேற்கத்திய இசைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இசை சார்ந்த கிளப்பையும் ஆரம்பித்தார். இதிலெல்லாம் ஈடுபடுவதற்கு அவருக்கு எங்கிருந்து சக்தியும் நேரமும் கிடைத்தது என்பது ஒரு மர்மமே.

ஒரு புதிய திருவெளிப்பாட்டின் ஒளி தோன்றும் போதெல்லாம், அதை எதிர்ப்பவர்களும் தோன்றுவர். இவ்விதமான எதிர்ப்பு குறித்த இரண்டு வெவ்வேறு தருணங்களைக் காண்பது ஒரு போதனையாக இருக்கும்.

உரைகள் வழங்கப்பட்ட மாநகரங்களிலும், நகரங்களிலும், அரங்குகளிலும், பல்கலைக்கழகங்களிலும், பள்ளிகளிலும், அரங்கங்களிலும் பார்வையாளர்கள் பொதுவாகவே ஏற்பிசைவும், உற்சாகமும் உடையவர்களாக இருந்தனர், ஆனால எப்போதுமல்ல. ஒரு நகரத்தில், சமயத்திற்கு எதிர்ப்பாக இருந்த ஒரு பெண்மணி, மார்த்தாவின் உரை, விளம்பரப்படுத்தப்பட்டது போன்று இல்லை எனவும், மேலும் உரையும் கூட பொருத்தமற்றதாக இருக்கின்றது என ஆர்ப்பாட்டம் செய்தார். அதற்குப் பிரதியாக, மார்த்தா மேடையைவிட்டு இறங்கி, அப்பெண்ணிடம் சென்று, அவரை அன்போடு அரவணைத்துவிட்டு, தம்மிடத்திற்குத் திரும்பிவந்தார். ஆர்ப்பாட்டம் செய்தவர் குழப்பமடைந்தார்; தமது வாதத்திற்கு அது எதிர்ப்பார்க்கப்பட்ட பதிலாக இல்லை. மார்த்தா அந்த ஆர்ப்பாட்டத்தினால் சற்றும் தொல்லையின்றி தமது உரையைத் தொடர்ந்தார்.

ஒரு முறை, ஒரு பிட்ஸ்பர்க் தங்கும் விடுதியில் ரோய் வில்ஹெல்ம் உரையாற்ற வேண்டியிருந்தது; அவ்வேளை இரான் நாட்டிலிருந்து திரும்பியிருந்த ஒரு மதபோதகர், அங்கு வந்து மார்த்தா ரூட்டிடம் பேசவேண்டுமென்றார். மார்த்தா அவரைப் பக்கத்திலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றும், அவர் வெளிப்படுத்திய எதிர்ப்பைக் கண்டுகொண்டும், அவர் கூட்டத்தை களைத்திடும் நோக்கத்துடனேயே அங்கு வந்திருந்தார் என்பதையும் அறிந்தார். மார்த்தா அவரை அங்கிருந்து வெளியேறும்படி கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார். கூட்டம் எவ்வித இடையூறுமின்றி, திட்டமிடப்பட்டது போன்று தொடர்ந்தது.

போதித்தலின்பால் அவர் கொண்டிருந்த முழுமையான அர்ப்பணமும், சமயத் தலைமைத்துவத்தின் மீது சார்ந்திருந்த்தல், மற்றும் அதன் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிதலே மார்த்தா ரூட்டின் தொடர்ச்சியான, ஏறத்தாழ அதிசயமான முறையில் நடந்த வெற்றிகளுக்கான காரணமாகும். அவர் சமயத்திற்காக சேவையாற்ற முனைந்த போது, அவர் தமக்குள் தன்னல எண்ணங்கள், பொருளாதார பிரச்சனைகள், அல்லது பிறரிடமிருந்து உதவி ஏதும் இல்லாமை ஆகியவை, பஹாவுல்லாவிற்காக, என்ன செய்யப்பட வேண்டும், மற்றும் என்ன செய்யப்படக்கூடும் என்பதற்குத் தடங்கல்களாக விளங்கிட அனுமதிக்கவில்லை. “உருவாக்கக் காலத்தால் வழங்கப்பட்ட அதிசிறந்த கனிகள்” என அவரது வாழ்க்கையை விவரிக்கும் போது, பாதுகாவலர் பின்வருமாறு கூறுகின்றார்:

வயது அல்லது உடல்நோய், அவரது ஆரம்ப முயற்சிகளுக்கு இடயூறாக விளங்கிய இலக்கியங்கள் இல்லாமை, அல்லது தமது ஊழியத்தின் மீது மேலும் சுமைகளை ஏற்படுத்திய குறைந்த அளவிலான பொருள்வளங்கள், அல்லது அவர் அனுபவிக்க வேண்டியிருந்த கடுமையான சீதோஷ்ன நிலைகள், அல்லது தமது பயணங்களின்போது அவர் எதிர்நோக்கிய அரசியல் இடையூறுகள், எதுவுமே ஆன்மீக ரீதியில் ஆற்றலுமிக்க, பரிசுத்தமான அப்பெண்மணியின் உற்சாகத்தை குறைக்கவோ, கவனத்தைத் திருப்பவோ முடியவில்லை. ஒரு கொடிய, வேதனைமிகுந்த, வீரமிகு மனோபலத்துடன் அவர் சகித்துக்கொண்ட ஒரு நோய் அவரைத் தாக்கி வீழ்த்தியது வரை, தனியாகவும், பலமுறை மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், எக்காளக் குரலில், பஹவுல்வாவின் நற்செய்தியின்பால் பல்வேறு நம்பிக்கைகளையும், நிறங்கள், வகுப்புகள் சார்ந்த மக்களை, அவர் அழைத்தே அழைத்தார்.

“மார்த்தா உலகை வலம் வந்தபோது, அவரது பிரசன்னம் பணிவு மிகவும், தன்னினைவின்றியும், உணரக்கூடிய ஓர் அன்புணர்வை வெளிப்படுத்துவது போன்றுமிருந்தது. அவர்களைச் சென்றடைந்திட அவர் எடுத்த முயற்சிகளின் பயனாகவே, பன்மடங்கான, வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கைகளை அவர் மாற்றியமைத்தார்.” “ஐக்கிய அமெரிக்காவில் தெய்வீகத் திட்டத்திற்கான நிருபங்கள் வெளியிடப்பட்ட அதே வருடத்தில், தெய்வீகத் திட்டத்திற்கான நிருபங்களின் அப்துல்-பஹாவினால் உரைக்கப்பட்ட சகாப்த முக்கியத்துவமிக்க ஆணைகளுக்கு மறுவிணையாக, முன்னெழுந்த முதலாமவர்; தமது உள்ளமும், பார்வையும் பஹாவுல்லாவின் சக்தி மற்றும் பேரொளியின் மீது நிலைப்படுத்தப்பட்ட மார்த்தா ரூட், வழுவாத தீர்மானத்துடனும், விழுமிய பற்றின்மையோடும், நான்கு முறை உலகையே வலம் வரச்செய்த, தமது இடைவிடாத இருபது வருடகால உலகப் பயணங்களில் ஈடுபட்டார்”; தமது ஆரம்பப் பயணங்களின்போது அப்துல் பஹாவுக்கு மார்த்த அனுப்பிய ஓர் அறிக்கையில் அப்துல் பஹா வெளிப்படுத்திய பின்வரும் எதிர்ப்பார்ப்புகளை அவர் பொருத்தமுறவே நிறைவேற்றினார்.

புனிதமிகு பஹாவுல்லாவின் ஆசிகளிலிருந்து, நீர் அவரது பாதையில் சுயத்தியாகம் செய்பவராகவும், நீர் ஓய்வு, அமைதி ஆகியவற்றை மறந்தும், விரைவாகப் பறக்கும் ஒரு பறவையைப் போன்று, நீண்ட தூரங்களை நீர் கடந்தும், எந்தெந்த நாட்டில் நீர் தங்கியபோதும், அங்கு நீர் இராஜ்யத்தின் கீதத்தை இசைத்தும், அதிசிறந்த தாளத்துடன் பாடல்களிலும், இசையிலும் ஈடுபடக்கூடும் என்பதே என் எதிர்ப்பார்ப்பாகும்.

நீர் புனித நிலத்திற்கு வருகையளித்திட வேண்டும், அதன் மூலமாக நான் உம்மைச் சந்தித்திட வேண்டுமென்பதே எனது பெரும் ஆவலாகும்; ஆனால், ஆனால் போதிக்கும் செயலே யாவற்றுக்கும் மேலாக முன் நிற்கின்றது, மற்றும் நீர் விரும்பினால், உலக மண்டலங்கள் அனைத்திலும் அதைப் பரப்புவதில் ஈடுபடுவீராக.

அவளுக்குஅவன் (HeForShe)


அவளுக்குஅவன் (HeForShe) – 20 செப்டம்பர் 2014ல் எம்மா வாட்ஸன் (Emma Watson)  ஐநா-வில் ஆற்றிய ஓர் உரை

<http://www.heforshe.org/&gt;

(இது ஒரு தற்காலிக மொழிபெயர்ப்பு)

இன்று, HeForShe எனப்படும் ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கின்றோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுவதால் உங்களை அணுகுகின்றோம். மாற்றத்திற்கான பேச்சாளர்களாக முடிந்த அளவு அதிகமான முதிய மற்றும் இளம் ஆண்களைத் திரட்ட வேண்டும். அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மட்டும் முடியாது. அதை நடைமுறையான ஒன்றாக ஆக்கிட நாங்கள் முயலுகின்றோம். ஐநா-வின் நல்லெண்ணத் தூதுவராக நான் ஆறு மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டேன்

பெண்ணியம் (feminism) குறித்து நான் அதிகமாகப் பேசப் பேச, பெண்கள் உரிமைக்காகப் போராடுவது பெரும்பாலும் ஆண்களை-வெறுத்தல் என்பதன் இணைபொருளான ஒன்றாக ஆகிவிட்டது. ஒன்று மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிகிறது, இந்த நிலைமை ஒரு முடிவிற்கு வரவேண்டும். பெண்ணியம் என்பது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமையும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இதுவே அரிசியல், பொருளாதார மற்றும் சமூக நிலையிலான பாலின சமத்துவம் குறித்த கோட்பாடாகும்.

எங்களின் பெற்றோருக்காக ஒரு நாடகத்தை நானே இயக்க விரும்பியதால் எனது 8 வயதில், நான் போஸ்ஸியாக (bossy) இருக்கின்றேன் என்றனர். எனக்கு 14 வயதானவுடன், ஊடகத்தின் சில பகுதியினர் என்னை பாலியல் பகுப்பிற்கு உட்படுத்தப்படுத்திட ஆரம்பித்தனர். எனது 15 வயதில் என் தோழிகள், ஆண்மைத்தனத்தோடு தங்களைக் காண்பித்துக்கொள்ள விரும்பாமல் விளையாட்டுக் குழுக்களிலிருந்து விலக ஆரம்பித்தனர். என் 18 வயதில் என் ஆண் தோழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திட முடியாமல் தவித்தனர்.

harry-reliquias-806

ஆகவே, நான் ஒரு பெண்ணியல்வாதி என நான் முடிவு செய்தேன். அது சிக்கலான ஒன்றென எனக்குப் படவில்லை. ஆனால் நான் சமீபமாக மேற்கொண்ட ஆய்வின்படி பெண்ணியம் என்பது ஒரு வேண்டத்தகாத வார்த்தையாக ஆகியுள்ளது தெரியவருகின்றது. பெண்கள் தங்களை பெண்ணியல்வாதிகளாகக் காண்பித்துக்கொண்டிட விரும்புவதில்லை. உண்மையில் பெண்ணிய வெளிப்பாடு வன்மைமிக்க, அடாவடியான, தனிமைப்படுத்துகின்ற மற்றும் ஆண்-எதிர்ப்பாகவும் கவர்ச்சியற்ற ஒன்றாகவும் கருதப்படுகின்றது.

இந்த வார்த்தை ஏன் மனதில் ஓர் அசௌகர்ய உணர்வைத் தோற்றுவிக்கவேண்டும்? என் ஆண் சகப்பணியாளர்களுக்குச் சமமாக எனக்கு ஊதியம் வழங்கப்படுவது நியாயமே என நான் நினைக்கின்றேன். என் உடல் குறித்த சொந்த முடிவுகளைச் செய்திடும் உரிமை எனக்கு வேண்டு. என் வாழ்வைப் பாதிக்கக்கூடிய தீர்மாணங்களிலும் முடிவுகளிலும் பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பது சரியே. சமூக ரீதியில் ஆண்களைப் போன்றே எனக்கும் சம மரியாதை வழங்கப்படுவது சரியே.

ஆனால் துரதிர்ஷடவசமாக, பெண்கள் இவ்வுரிமைகள் அனைத்தையும் அனுபவிக்கக்கூடிய ஒரு நாடு கூட இவ்வுலகில் இல்லை என்றே நான் கூறுவேன். பாலின சமத்துவத்தை அடைந்துவிட்டதாக எந்த ஒரு நாடும் இன்று கூறிக்கொள்ள முடியாது. இவ்வுரிமைகள் மனிதவுரிமைகளைச் சார்ந்தவை, ஆனால் நான் மட்டும் அதிர்ஷ்டம் செய்தவளாக இருக்கின்றேன்.

நான் ஒரு பெண்ணாகப் பிறந்ததினால் என் பெற்றோரின் அன்பு எனக்கு எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை. அவ்விதத்தில் நான் கொடுத்து வைத்தவள். நான் பெண் என்பதால் என் பள்ளி வாழ்க்கையும் ஓர் எல்லைக்குட்படவில்லை. எனது அறிவுறையாளர்கள் வருங்காலத்தில் நான் ஒரு தாயாகும் சாத்தியத்தினால் வாழ்க்கையில் நான் பெரும் சாதனைகள் புரிந்திட முடியாது என்று நினைக்கவில்லை. இச்சூழல்களே இப்போது நான் அடைந்துள்ள மேம்பாட்டிற்கான பால்மை சமத்துவத்திற்கான பாலங்கள். அவர்களுக்கு அது தெரியாதிருக்கலாம், ஆனால் அவர்களே இன்று உலகிற்குத் தேவைப்படும் மற்றும் தெரியாமலேயே செயல்படும் பெண்ணியர்களாவர். இவர்கள் மேலும் அதிகமாத் தேவைப்படுகின்றனர்.

பெண்ணியம் எனும் வார்த்தை இன்னமும் உங்கள் மனதில் ஓர் அசௌகர்யத்தை ஏற்படுத்தினாலும் அவ்வார்த்தையானது முக்கியமன்று. அதன் கருத்தும் அதன் பின்னணியில் வீற்றிருக்கும் பேரார்வமுமே முக்கியமாகும், ஏனெனில் நான் பெற்றிட்ட அதே உரிமைகளை எல்லா பெண்களுமே பெற்றிடவில்லை. வெகு சிலரே அந்நிலையை அடைந்துள்ளனர்.

1997ல் பெய்ஜிங் நகரில் பெண்கள் உரிமை குறித்து ஹில்லரி கிலின்டன் ஒரு பிரபலமான உரையாற்றினார். துரதிர்ஷ்ட வசமாக, அவர் அன்று கோரியிருந்த மாற்றங்கள் இன்றும் தேவைப்படுகின்றன. அக்கூட்டத்தில் ஆண்களின் பங்கேற்பு 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது. ஆகவே, உலகின் பாதி மட்டுமே அவ்வுரையாடலில் பங்கேற்றிட அழைக்கப்படுகையில் அல்லது வரவேற்கப்படுவதாக உணரும் நிலையில் உலகில் மாற்றங்களைக் கொண்டுவருவது எவ்வாறு?

ஆண்களே, இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களுக்கு முறைப்படியான அழைப்பு ஒன்றை விடுக்கின்றேன். பால்மை சமத்துவம் உங்களையும் சார்ந்த ஒரு பிரச்சினையாகும். ஏனெனில், பெற்றவர் எனும் முறையில் என் தந்தையின் பங்கு சமுதாயத்தால் சற்று குறைவாகவே மதிப்பிடப்படுவதை நான் காண்கின்றேன். மனநோய்க்கு ஆளான ஆண்களைக் கண்டிருக்கின்றேன். அவர்கள் தங்களின் ஆண்மைக்குப் பங்கம் விளைந்துவிடுமோ எனும் உணர்வில் உதவி கேட்க முடியாமல் தவிக்கின்றனர். பொருண்மையாக, ஐக்கிய அரசில் (UK) 20லிருந்து 49 வயதுக்கு உட்பட்டோரின் மரணத்திற்குச் சாலைவிபத்துகள், புற்றுநோய், இருதயநோய் ஆகியவற்றிற்கும் மேற்பட்டு தற்கொலையே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆண்மையின் வெற்றி என்கையில்,  நலிந்துபோன மற்றும் மனவுறுதியற்ற ஆண்களை நான் கண்டிருக்கின்றேன். ஆண்களுக்கும் சமத்துவத்தின் பலன்கள் கிடையாது.

ஆண்களும் ஆண் பால்மைத்தன்மைக்கு அடிமைப்பட்டுள்ளதாக நாம் பெரும்பாலும் கூறுவதில்லை, ஆனால் அவர்கள் அவ்வாறு அடிமைப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. அவர்கள் அதிலிருந்து விடுபடும்போது, அதன்விளைவாகப் பெண்கள் நிலையும் இயல்பாகவே மாற்றம் காணும். ஆண்கள் தங்கள் நிலையை நிலைநாட்டிக்கொள்ளக் கடுமையாக நடந்துகொள்ளவிட்டால் பெண்களும் கீழ்ப்படிந்திட வற்புறுத்தலுக்கு உட்பட வேண்டியதில்லை. ஆண்கள் கட்டுப்படுத்த வேண்டியதில்லை எனும்போது, பெண்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை.

ஆண் பெண் இருவருமே உணர்திறத்தில் தயக்கம் காண்பிக்கக்கூடாது. இருவரும் உறுதிப்பாடு உடையவர்களாக இருக்கவேண்டும். பால்மையை நேரெதிரான இரண்டு இலட்சியத் தொகுப்புகளாகக் காண்பதினின்று அதை ஒரு நிறமாலையாகக் (spectrum) காணவேண்டிய காலம் கனிந்துவிட்டது. நாம் யாராக இல்லையோ அதை விடுத்து நாம் யார் என்பதைக் கொண்டே நம்மை நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் மேலும் சுதந்திரமாக இருக்கலாம், இதுவே “அவளுக்குஅவன்” என்பதின் கருப்பொருளாகும். அது சுதந்திரம் பற்றியது. ஆண்கள் இந்நிலையை அடைந்திட வேண்டும். அதன் மூலம் அவர்களின் மகள்களும் சகோதரிகளும் தாய்மார்களும் தப்பெண்ணங்களிலிருந்து விடுபடுவதோடு அவர்களின் மகன்களும் இழகியமனம் பெறவும் மனிதர்களாகச் செயல்படவும் வாய்ப்புகள் பெற்றும் தாங்கள் இயல்பாகப் பெற்றிரிருந்தும் கைவிட்டுமிருந்தவற்றை மீண்டும் பெற்றும் அதன்மூலம் தங்களின் உண்மையான மற்றும் பூரணமான நிலையை அடையலாம்.

இந்த ஹேரி பொட்டர் பெண் யார் என நீங்கள் நினைக்கலாம். இவளுக்கு ஐ;நாவில் என்ன வேலை? நானும் எனக்கு நானே அதே கேள்வியைத்தான் கேட்டு வந்துள்ளேன். எனக்குத் தெரிந்ததெல்லாம், இப்பிரச்சினை குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன் மற்றும் அதை சரிபடுத்திடவும் விரும்புகின்றேன். வாழ்க்கையில் நான் கண்டுள்ளவற்றின் அடிப்படையில், வாய்ப்பளிக்கப்படுமானால், என் பங்கிற்கு நானும் எனக்குத் தெரிந்ததைக் கூறு விரும்புகின்றேன். நல்ல ஆண்கள், பெண்கள் ஆகியோரின் செயல்படாமையே தீய சக்திகள் வெற்றிபெறுவதற்குத் தேவையான சூழலாகும் என அரசியல் மூதறிஞரான எட்மன்ட் பர்க் கூறியுள்ளார்.

இவ்வுரைக்காக நான் நடுங்கியும் நம்பிக்கையிழந்திருந்தபோது, நானின்றி வேறு யார் என எனக்கு நானே கூறிக்கொண்டேன். இப்பொழுதில்லாவிட்டால் எப்பொழுது? வாய்ப்புகள் ஏற்படும்போது சந்தேகங்கள் எழுகையில் அவ்வார்த்தைகள் உபயோகமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். நாம் ஒன்றும் செய்யாது இருந்தால் ஒரே விதமான பணிக்கு, பெண்கள் ஆண்களுக்குச் சமமான ஊதியம் பெறுவதற்கு இன்னும் 75 அல்லது 100 ஆண்டுகள் கடந்திடலாம் என்பதே உண்மை. அடுத்த 16 வருடங்களுக்குள் 15.5 மில்லியன் பெண் பிள்ளைகள் பால்ய விவாகத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். இப்போதுள்ள நிலையில், ஆப்பிரிக்கப் பெண்கள் அனைவரும் உயர்நிலை கல்வி பெறுவதற்கு வருடம் 2086 ஆகிவிடும்.

நீங்கள் பால்மை சமத்துவத்தை விரும்புகிறவர் என்றால் நான் ஏற்கனவே கூறிய, அதிர்ஷ்டவசமாக உதித்த பெண்ணியவாதிகளுள் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். அதற்காக நான் உங்களை வாழ்த்துகின்றேன். நாம் ஓர் ஒற்றுமையான உலகிற்காகப் பாடுபட வேண்டும். இதில் ஒரு நற்செய்தி என்னவென்றால் நமக்கு அதற்கான ஒரு தளம் அமைத்துள்ளது. <http://www.heforshe.org/>அதுதான் “HeForShe” என அழைக்கப்படுகின்றது. முன்னெழுந்து, முன்வந்து, நான் இல்லையெனில் வேறு யார்? இப்பொழுது இல்லையெனில் வேறு எப்பொழுது? என உங்களை நான் கேட்கின்றேன்.

இதுபோன்ற கருத்தில் ஓர் உரை: http://goo.gl/D8Scpd

பதினாறு வயதினிலே


வீடியோ

“பதினாறு வயதினிலே” எனும்போது இயக்குனர் பாதிராஜாவின், நடிகை ஸ்ரீதேவி நடித்த பதினாறு வயதினிலே 1977 திரைப்படமே ஞாபகத்திற்கு வரும். ஓர் இளம்பெண் எவ்வாறு பருவத்தின் கோளாரினால் காதல் வயப்படுகிறாள் மற்றும் அதனால் பெரும் சோதனைகளையும் சந்திக்கின்றாள் என்பதே கதை. அந்த இளம் பெண்ணின் உலகமே அவள் வாழ்ந்த கிராமந்தான். அவள் உட்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையில் அவளுக்குத் தெரிந்த வாழ்க்கையை அவள் வாழ்ந்தாள். இறுதியில், அவள் சந்தித்த சோதனைகளின் வாயிலாகத் தான் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அந்தப் பதினாறு வயதையும் தாண்டிய மனமுதிர்ச்சியோடு தன் வாழ்க்கைக்கு ஏற்ற முடிவைத் தேர்ந்தெடுக்கின்றாள்.  இது “பதினாறு வயதினிலே” திரைக்கதை. ஆனால், 1982ல் வேறொரு பதினாறு வயதினிலே கதை நடந்தது. அக்கதையின் முடிவும் சோகம் நிறைந்தது ஆனால், நிறைவான ஒரு வாழ்க்கையை உள்ளடக்கியது.


மோனா மஹ்முட்நிஸாட்

அந்தப் பெண்ணுக்கும் பதினாறு வயது, அவளும் காதல் வயப்பட்டிருந்தாள், இறுதியில் அவளுடைய வாழ்க்கைப் பாடத்தின் அடிப்படையில் தன் முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். ஆனால், இந்தப் பெண் கொண்ட காதல் இறைவன் மீது கொண்ட தெய்வீகமான காதலாகும். இந்தக் காதலின் பயனாக அவள் தன் உயிரைத் துச்சமாக மதித்துத் தன் காதலுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்தாள். அவள் பெயர் மோனா மஹ்முட்நிஸாட். இன்று உலகம் முழுவதும் இந்தப் பெண்ணின் பெயரால் பல அறநிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, அவள் பெயரால் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன, அவள் பெயரால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆன்மீகப் பார்வைப் பெற்றுள்ளனர். மோனா தான் வாழ்க்கையின் பயனாக “இரான் நாட்டின் தேவதை” எனும் பெயரையும் அடைந்தாள்.

இரான் நாட்டின் ஷிராஸ் நகரில் பத்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்…

கைது செய்யப்பட்ட பெண்களுள் தனது பதினாறாவது வயதை அடைந்திருந்த மோனாவும் இருந்தாள். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் எனும் பேரார்வம் ததும்பும் குழந்தை முகம். அவளை எதற்காக கைதுசெய்திருந்தார்கள்? அவள் செய்த தவறுதான் என்ன? திருடினாளா? கொலை செய்தாளா? இல்லையில்லை, அதைவிட மிகவும் ‘மோசமான’ ஒரு காரியத்தைச் செய்துவிட்டிருந்தாள். ஆம், ‘செய்யக்கூடாத’ ஒரு காரியத்தை அவள் செய்துவிட்டாள். அவள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டாள். குழந்தைகளுக்குக் கடவுள் அன்பையும் ஒழுக்கத்தையும் போதித்துவிட்டாள். உலகில் இதைவிட மோசமான ஒரு குற்றத்தை யாருமே செய்ததில்லை. கொலை கொள்ளை போன்ற சாதாரண குற்றங்களைச் செய்திருந்தாலும் பரவாயில்லை. குழந்தைகளுக்கு நன்னெறி பாடம் நடத்துவதா? அது ஒரு மாபெரும் குற்றம் அல்லவா.

சிறுவயதில் தாய்ப்பாலுடன் கடவுள்மீது அன்பையும் சேர்த்து அவளின் தாயார் ஊட்டியிருந்தார். மோனாவுக்கு வயதாக ஆக, இந்த அன்பு சற்றும் குறையாமல் மேலும் மேலும் அதிகரிக்கவே செய்தது. அவள் தன் குடும்பத்தாரின் மீது மட்டும் அவள் பாசம் கொள்ளவில்லை. உலகையே நேசித்தாள். தன் வழியில் குறுக்கிட்டோர் அனைவர் மீதும் அன்பு செலுத்தினாள். நன்கு பழக்கமானோரைத் திடீரெனக் கண்டால் கண்களில் நீர் வழிய அவர்களை ஓடிச்சென்று கட்டிக்கொள்வாள்.  பள்ளியில் அவள் அருகே இருந்தாலே போதும் என நினைக்கும் ஒரு சிநேகிதிகள் கூட்டம் அவளை எந்நேரமும் சுற்றியிருக்கும். இத்தகைய நற்பண்புகளால் “ஷிராஸ் நகரத்தின் தேவதை” எனும் பெயரும் அவள் பெற்றிருந்தாள். கல்விகேள்விகளில் தனிச்சிறப்பு, கலைத்திறன்கள், இனிமை நிறைந்த குரல்வளம் ஆகியவற்றை அவள் இயல்பாகவே பெற்றிருந்தாள். வயதுக்கு மீறிய விவேகமும் கடவுள் பக்தியும் அவளிடம் பரிபூரணமாகக் குடிகொண்டிருந்தன. மானிடத்திற்கு சேவை செய்யவேண்டும் எனும் அவளின் அவாவிற்கு எல்லையே இல்லை.

மோனா உலகையே நேசித்தாலும், எல்லோரையும் விட அவள் அதிகம் நேசித்த ஒருவர் இவ்வுலகில் இருந்தார். அது அவளுடைய தந்தை. தந்தை, மகள் இருவருக்குமிடையில் இருந்த உறவு ஒரு மிகவும் விசேஷமான உறவு. தன் தந்தையின் கண்களை ஆழ்ந்து உற்று நோக்கி காதுகளால் கேட்க முடியாத, வார்த்தைகளுக்கு இடமில்லாத ஓர் உரையாடலில் மோனா ஈடுபடுவாள். மோனாவின் தந்தையும் மக்களின் சேவையில் சற்றும் சளைத்தவர் அல்ல. பலவிதமான சேவைகளில் அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தவராவார். ஒரு காலத்தில் தமது பிறந்தகத்தை விடுத்து வேறொரு நாட்டிற்குச் சேவைச் செய்திட சென்றார். அங்குதான் அவரின் இரு பெண்களும் பிறந்தனர். அரசியல் நிலைமை சரியில்லாத நிலையில் அவர் தமது குடும்பத்தினரோடு மீண்டும் தமது தாயகத்திற்குத் திரும்பினார்.

மோனாவின் கடவுள் பக்தி அவள் குடும்பத்தினரின் சமய நம்பிக்கையின் பலனாக ஏற்பட்டதாகும். அவர்கள் தங்களின் தேசத்தின் அதிகாரபூர்வச் சமயத்தைச் சார்திருக்கவில்லை. கடவுள் அவதாரங்களின் வரிசையில் ஆகக் கடைசியாகவும், கோடிசூர்யப் பிரகாசராய் உலகில் தோன்றிய கடவுளின் அவதாரமான பஹாவுல்லாவின் நிழலை அவர்கள் சரனடைந்திருந்தனர். பாரம்பரியத்தைச் சாராத நம்பிக்கைகள் எப்போதுமே பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் பரவாயில்லை, மாறாக, அத்தகைய சிறுபான்மை நம்பிக்கையினர் தங்களுக்கென சொந்த நம்பிக்கைகளைப் பெற்றிருக்கும் உரிமையை இழந்து பெரும்பான்மைச் சமூகத்தினரின் நம்பிக்கையினை அவர்களும் பற்றிக்கொள்ளவேண்டுமென நெருக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தவறினால் கொடுங்கோண்மைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது சமயங்களின் வரலாற்றில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் விஷயமாகும்.

இரான் நாட்டின் சிறுபான்மை பஹாய் சமூகத்தினர் தங்கள் சமயத்தின் தோற்றத்திலிருந்து இத்தகைய கொடுங்கோண்மைகளுக்கு ஆளாகியே வந்துள்ளனர். இருபதிலிருந்து முப்பதாயிரம் விசுவாசிகள் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்காகத் தங்களின் உயிரைக் கடவுளின் பாதங்களில் மனமுவந்து அர்ப்பணித்துள்ளனர். மோனாவின் குடும்பத்தினரும் இதற்கு விதிவிலக்கல்ல.

பஹாய்களின் புனிதஸ்தலங்களுள் ஒன்றான பாப் அவர்களின் இல்லம் 1980களின் ஆரம்பத்தில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. சிறுபான்மையினரான பஹாய்களைத் தங்கள் வழிக்குக் கொண்டுவந்திடும் சமயவாத அரசாங்கத்தின் முயற்சிகளுள் இதுவும் ஒன்றாக இருந்தது. நல்ல வேளையாக மோனாவின் குடும்பத்தினர் அதற்கு முன்பாகவே அத்தலத்திற்கு விஜயம் செய்து தங்கள் புனிதயாத்திரையை நிறைவு செய்திருந்தனர். ஒரு நாள் தன் தந்தையாரோடு பாப் அவர்களின் இல்லத்தின் இடிபாடுகளைக் காணச் சென்றிருந்த மோனா, தன் இல்லம் திரும்பியதும் தன் தாயை விளித்து, “அம்மா, நான் என் காலனிகளோடு வீட்டிற்குள் வரலாமா,” எனக் கேட்டாள். அதற்கு மோனாவின் தாயார், “இதென்ன திடீர் ஆசை,” எனக் கூறினார். அதற்கு மோனா, “அம்மா இன்று பாப் அவர்களின் இல்லத்தின் இடிபாடுகளிடையே நடந்து வந்துள்ளேன். என் காலனிகளில் அந்த இல்லத்தின் புனித மண் பதிந்துள்ளது. அதனால்தான் என் காலனிகளோடு வீட்டிற்குள் வரலாமாவென கேட்டேன்,” என்றாள். பிறகு கண்களின் நீர் வழிய தன் அறைக்குள் சென்று அன்றைய அனுபவத்தை ஒரு கவிதையாக எழுதினாள்.

பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அதிகரித்த போது, தனக்கும் தன் தந்தைக்கும் கடவுளின் விதி என்னவாக இருக்கும் என்பது குறித்து மோனாவுக்கு பலவிதமான எண்ணங்கள் தோன்றின. ஒருநாள் தானும் தன் தந்தையும் தங்களின் நம்பிக்கைக்காக கொல்லப்படப்போகின்றார்கள் என ஒரு கனவு கண்டாள். அதன் பிறகு மோனாவிடமிருந்த நற்பண்புகளோடு வேறொரு நற்பண்பும் சேர்ந்துகொண்டது, அது ‘பயமின்மையாகும்’.

இரான் நாட்டின் பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடுங்கோண்மைகள் சிறிது சிறிதாக அந்நாட்டு பாடசாலைகளையும் சென்றடைந்தது. குழந்தைகள்கூட தங்கள் நம்பிக்கைக்காக துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். ஒரு முறை சமய நம்பிக்கைக் குறித்து மோனாவின் வகுப்பினர் கட்டுரை எழுதிட பணிக்கப்பட்டனர். சமய நம்பிக்கைச் சுதந்திரம் பறிக்கப்படுவதை மனதில் வைத்து மோனா ஒரு கட்டுரை எழுதினாள்.

“உலகிலுள்ள ஒளிமிகு வார்த்தைகளுள் “சுதந்திரம்” எனும் வார்த்தையே பேரொளி மிக்க வார்த்தையாகும். மனிதன் என்றும், இன்றும், இனி என்றென்றும் சுதந்திரத்தையே விரும்புவான்.  ஆனால், அவனிடமிருந்து சுதந்திரம் பறிக்கப்படுவது ஏன்? மனிதனின் பிறப்பிலிருந்து அவனுக்குச் சுதந்திரம் இல்லாமல் போவது ஏன்? ஆரம்பத்திலிருந்தே வலிமைமிக்க ஆனால் அநீதியான மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக பலவிதமான அடக்குமுறைகளையும் கொடுங்கோண்மைகளையும்  பயன்படுத்திவந்துள்ளனர்…”

“இச்சமூகத்திற்கான எங்கள் குறிக்கோள்களை வெளிப்படுத்திடவும்; நான் யார் என்பதையும் எனக்கு என்ன வேண்டும் என்பதையும், என் சமய நம்பிக்கையை பிறருக்கு தெரிவிப்பதற்கும் எங்களுக்குச் சுதந்திரமளிக்க ஏன் மறுக்கின்றீர்கள்; என் கருத்துக்களை பத்திரிக்கைகளுக்கு எழுதவோ வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அதுபற்றி பேசுவதற்கோ எனக்கு சுதந்திரம் கொடுப்பீர்களா? ஆம், தன்னிச்சையென்பது ஒரு தெய்வீகக் கொடையாகும், அது எங்களுக்கம் உரியாதாகும், ஆனால் அதை எமக்கு மறுக்கின்றீர்கள். ஒரு தனிநபர் பஹாய் எனும் முறையில் என்னை சுதந்திரமாகப் பேச விடுவீர்களா? ஒரு புதிய வெளிப்பாடு தோன்றியுள்ளது, ஒரு பிரகாசமிகு புதிய நட்சத்திரம் உதித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள ஏன் மறுக்கின்றீர்கள். உங்கள் கண்களை மறைக்கும் தடித்தத் திரைகளை அகற்றுவீர்களா?”

“ஒரு வேளை எனக்கு சுதந்திரம் இருக்கவே கூடாது என நீங்கள் நினைக்கின்றீர்கள் போலும். கடவுள் மனிதனுக்கு இந்தச் சுதந்திரத்தை வழங்கியுள்ளார். அவர்தம் சேவகராகிய நீங்கள் அதை என்னிடமிருந்து பறிக்க முடியாது. கடவுள் எனக்கு பேச்சு சுதந்திரத்தை வழங்கியுள்ளார். ஆகவே, “புனிதராகிய பஹாவுல்லாவே மெய்யராவார்”. கடவுள் எனக்குப் சொல் சுதந்திரம் வழங்கியுள்ளார். ஆகவே, “கடவுள் வெளிப்படுத்தியுள்ள அந்த ஒருவர் பஹாவுல்லாவே ஆவார்! அவரே பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் அவரது திருநூலே நூல்களுக்கெல்லாம் தாய் நூலும் ஆகும்.”

வெளிப்படையான இக்கட்டுரையின் விளைவாக மோனா அதுவரை பள்ளியில் பெற்றிருந்த சிறிதளவு பேச்சு சுதந்திரத்தையும் இழந்தாள்.

சாதாரணமாக நம் ஒவ்வொருவருக்கும் நமது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது தெரியாது. அனுமானிக்கலாம் ஆனால், நிச்சயமாக எதையும் கூற முடியாது. மோனாவுக்கோ தன் எதிர்காலம் என்னவாகும் என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. அவள் கண்ட ஒரு கணவின் வாயிலாக தன் எதிர்காலம் என்னவாகும் என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. இரான் நாட்டின் பஹாய்கள் பலரைக் கொள்ளைக்கொண்ட கொடுங்கோண்மைகள் ஒரு நாள் மோனாவின் இல்லத்திற்கும் வந்துக் கதவைத் தட்டின……

தொடர்ந்து கதையை வீடியோவில் காணவும்…

தொடர்பு கொண்ட பிற பதிவுகள்

பாப் அவர்கள்
பஹாவுல்லா
வெண்பட்டாடை (தாஹிரியின் மரணம்)
பாஹிய்யா காஃனும்
ஸைனாப்

பெண்கள் உரிமைக்காக போராடிய தாஹிரி


தாஹிரி அல்லது குர்ராத்து’ல்-அய்ன் பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களுள் முன்னோடி அவதாரமான பாப் அவர்களின் பதினெட்டு சீடர்களில் ஒருவராவார். உலகில் பெண்களின் உரிமைக்காக போராடியோர் பட்டியலில் முதன்மையாக இருப்போரில் இவரும் ஒருவர். பாப் அவர்களின் சிஷ்யை எனும் முறையில் பாரசீக அரசினால் இவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இறந்தவுடன் அவருடைய பிறப்பு விவரங்கள் அழிக்கப்பட்டன.இவர் 1817 – 1820க்குள் பிறந்தவராக இருக்கக்கூடும்.

தம்மை திருமணம் செய்துகொண்டால் தாஹிரியை விடுதலை செய்வதாகக் கூறும் நாஸிரிட்டின் ஷா – நாடகத்தின் ஒரு காட்சி

பாரசீக நாட்டு பெண்களுக்கு அக்காலத்தில் எவ்வித சுதந்திரமும் கிடையாது. சிறுவயதிலேயே திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டு பிள்ளைகள் பெறுவது கனவனுக்கு சேவை செய்வது தவிர வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. முதலில் அவர்களைப் பெற்ற தந்தைகளுக்குக் கீழ்ப்படிந்தும் பிறகு அவர்களின் கனவர்களுக்குக் கீழ்ப்படிந்தும் வாழ்வது அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது. சதா கருப்பு நிற சடோர் அல்லது முகம் உட்பட உடல் முழுவதையும் மூடியிருக்கும் ஒரு வித ஆடையை அவர்கள் அனிந்திருப்பார்கள். அவர்களின் முகங்களை அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களைத் தவிர வேறு ஆண்கள் யாரும் பார்க்கமுடியாது. கல்வியறிவுக்குக் கூட அவர்களுக்கு வழியில்லை.

இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த தாஹிரி சிறுவயது முதற்கொண்டே தனிசிறந்து விளங்கினார். அவருடைய அறிவாற்றலைக் கண்ட அவருடைய தந்தை “இவள் மட்டும் ஆணாகப் பிறந்திருந்தாள், அவன் என் குடும்பத்தின் மீது ஒளிவீசச் செய்து, எனக்குப் பிறகு என் வாரிசாகி இருப்பான்”, என்றார்.

அக்காலத்தில் பாஹ்ரேய்ன் தீவுகளில் ஒன்றில் வாழ்ந்த ஷேய்க் அஹ்மத் என்பார் புது அவதாரம் ஒன்று விரைவில் தோன்றவிருப்பதை தமது ஆன்மீக அறிவினால் உணர்ந்து அதை தம்மைச் சுற்றியுள்ளோருக்கு போதித்தும் வந்தார். தமக்குப் பிறகு தமது போதனைகளை தொடர்ந்து உலக மக்களுக்கு அறிவுறுத்திட சையிட் காஸிம் என்பாரை தமது வாரிசாக நியமித்தார். அவ்வேளையில்தான் தாஹிரி சையிட் காஸிம் பற்றி கேள்விப்பட்டு அவர் வாழ்ந்த கர்பலா நகருக்கு தமது கனவர் மற்றும் தகப்பனாரின் விருப்பத்திற்கு எதிராக சையிட் காஸிமோடு தொடர்பு கொண்டு அவரை சந்திக்கவும் சென்றார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக தாஹிரி அங்கு சென்றடைவதற்கு முன்பாக சையிட் காஸிம் மரணமுற்றிருந்தார். அங்கு சென்ற பிறகு பாப் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அவருடைய படைப்புகளையும் தாஹிரி படித்துணர்ந்தார். அதன் பிறகு பாப் அவர்களின் போதனைகளை மிகவும் வன்மையுடன் தாம் சென்றவிடங்களில் எல்லாம் போதித்தார்.

1848ம் ஆண்டிற்கு முன்பே பாப் அவர்கள் தமது போதனைகளுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். அவ்வேளையில் படாஷ்ட் எனும் இடத்தில் பாப் அவர்களின் முக்கிய சீடர்கள் பலர் அவ்வருட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அம்மாநாடு பாப் அவர்களின் சமயம் ஒரு சுதந்திரமான சமயம் மற்றும் சிறைவாசம் அனுபவித்த பாப் அவர்களை எவ்வாறு விடுவிப்பது என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்மாநாட்டின்போதுதான் தாஹிரி எனும் பெயர் அவருக்கு பஹாவுல்லா அவர்களால் வழங்கப்பட்டது. மாநாட்டின் ஒரு நாளின்போது தாஹிரி பாப் அவர்களின் சமயத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த சம உரிமையை அங்கு கூடியிருந்தோருக்கு திடுக்கிம் வகையில் வெளிப்படுத்தினார். அவர் அங்கு கூடியிருந்த ஆண்களின் முன்னிலையில் தமது முகத்திரையை திடீரென அகற்றினார். இன்னமும் பழைய சம்பிரதாயங்களில் மூழ்கியிருந்த பல பாப்யிக்கள் மரண தண்டனைக்கு வழி வகுக்கும் அச்செய்கையை கண்டு பொறுக்க முடியாமல் பாப் அவர்களின் சமயத்திலிருந்தே விலகினர். அதில் பெரிதும் திடுக்கிட்டிருந்த ஒருவர் தமது கழுத்தை சொந்தமாகவே அறுத்துக் கொண்டார். உலகிலேயே பெண்கள் உரிமையை முதன் முறையாக பரைசாற்றியவர் தாஹிரியே ஆவார். இச்சம்பவம் நடக்கும் வேளையில் எலிஸபெத் கேடி ஸ்டேன்டன் எனும் பெண்மனி செனெக்கா போல்ஸ் மாநாட்டிற்கு பெண்களின் உரிமை குறித்த பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தும் “Declaration of Sentiments” எனும் அறிக்கையை எழுதிக்கொண்டிருந்தார்.

தாஹிரி அம்மையார் சிறிது காலத்திற்குள் தமது நம்பிக்கைக்காக மரணதண்டனை வழங்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன் ,”நீங்கள் என்னை கொல்வதற்கு விரும்பலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்க முடியாது.” என கூறியவாறே கொல்லப்பட்டார். தாஹிரியின் வாழ்க்கை மற்றும் அவருடைய வைரியம் இன்றும் பல கவிதைகளுக்கும், நாடகங்களுக்கும் மற்றும் உலகளாவிய கருத்துக்களுக்கும் உற்சாக உணர்வை அளிக்கின்றது. அவர் பாரசீக நாட்டில் மட்டும் பிரபலமாக இருக்கவில்லை. மாறாக, அவர் பாக்கிஸ்தான், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக இருந்தார். பெண்கள் உரிமைக்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்தவரான தாஹிரி பற்றி கேள்விப்பட்ட ஆஸ்த்திரியா நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் தாயார், “பாரசீக நாட்டின் பெண்களுக்காக தாஹிரி தமது உயிரை எதற்காக தியாகம் செய்தாரோ அதே காரியங்களை நான் ஆஸ்த்ரிய நாட்டின் பெண்களுக்கு செய்வேன்,” என்றாராம்.

பிரான்ஸ் நாட்டின் ‘Journal Asiatique’ எனும் 1866ம் ஆண்டு பிரசுரத்தில் தாஹிரி குறித்து பின்வருமாறு கூறப்படுகிறது: “பாரசீக நாட்டில் அதிகாரமே இல்லாத அபலைகளாக அந்த நாட்டு பெண்கள் அனைவரும் இருக்கையில், ஒரு பெண் அதுவும் அரசாங்கத்தையும் மக்களையும் தங்கள் ஆற்றலின் கீழ் அவர்கள் எண்ணிக்கையினாலும் முக்கியத்துவத்தினாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மதகுருக்கள் வாழும் காஸ்வின் போன்ற ஒரு நகரில், எவ்வாறு ஒரு பெண் இத்தகைய சக்தி வாய்ந்த ஒரு சமயப்பிரிவை உருவாக்கியிருக்க முடியும்? பலரை வியக்கச் செய்துள்ள ஒரு முக்கிய கேள்வி இதுவே ஆகும்…” இந்திய நாட்டின் தலை சிறந்த பெண்மனிகளுள் ஒருவரான சரோஜினி நாயுடு அவர்கள், தாஹிரி பற்றி நன்கு அறிந்திருந்து அவருடைய கவிதைகளையும் ஒரு இரான் நாட்டு நண்பரின் வாயிலாக பெற்றிருந்தார்.

தாஹிரி கொல்லப்படுவதற்கு முன், அதற்கு முதல் நாள் அவர் பாரசீக அரசனான நாஸ்ரிட்டின் ஷா-வின் முன்னிலைக்கு விசாரனைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அதற்கு முன்பாகவே ஷா மன்னன் தாஹிரி பற்றி கேள்விப்பட்டிருந்தான். அவருடைய ஆற்றலை பற்றி அறிந்திருந்த மன்னன் தாஹிரி பாப் அவர்களின சமயத்தை விடுத்து மறுபடியும் ஷீயா மார்க்கத்தை தழுவினால் அவரை தமது அரண்மனையில் பெண்கள் பகுதியில் ஒரு முக்கிய அதிகாரியாக நியமிப்பதாகவும், ஏன், அவரை தமது மனைவியாகவும் ஆக்கிக்கொள்வதாக கூறினான். ஆனால் அதற்கு தாஹிரி:

அரசு, செல்வம் ஆட்சி உமக்கே உரியதாகட்டும்
தேசாந்திரமும், ஏழை ‘தர்வேஷ்’ ஆவதும் பேரபாயமும் எனதாகட்டும்
அந்த நிலை நல்லதென்றால், அது உமக்காகட்டும்
இந்த நிலை தீயதென்றால், நான் அதற்காக ஏங்குகின்றேன்; அது எனதாகட்டுமாக!

அதைப் படித்த ஷா மன்னன் இத்தகைய ஒரு பெண்ணை வரலாறு இது வரை நமக்கு வெளிப்படுத்தியதில்லை என்றானாம்.

ஷா மன்னன் தாஹிரியை நேரில் கண்டபோது, “நீ ஏன் பாப் அவர்களில் விசுவாசியாக இருக்கவேண்டும்?” என கேட்டானாம். அதற்கு தாஹிரி ஏறக்குறைய பின்வருமாறு பதிலளித்தாராம்:

நீர் வழிபடுவதை நான் வழிபடவில்லை
நான் வழிபடுவதை நீர் வழிபடவில்லை
நீர் வழிபடுவதை நான் வழிபடப்போவதில்லை
நான் வழிபடுவதை நீரும் வழிபடப்போவதில்லை
உமக்கு உமது சமயம், எனக்கு எனது சமயம்.

தாஹிரி கொல்லப்பட்டாலும் அவர் ஆரம்பித்து வைத்து பெண்கள் உரிமை போராட்டம் தொடர்ந்து மேலும் வலுவடைந்தே வந்துள்ளது, மேலும் பெண்கள் முழு சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து வலுவடையும்.

ஆசிய்யி காஃனும்


ஆசிய்யி காஃனும்
(பாஹிய்யா காஃனும் வாய்மொழிந்தவை)

திருமணம்

பஹாவுல்லாவுக்கு ஏறத்தாழ பதினைந்து வயதாகிய போது, அவரது மூத்த தமக்கையாகிய  சாரிஃ காஃனுமுக்கும், யால்ரூட் நகரை சார்ந்த மிர்ஸா இஸ்மாயில்-இ-வஸீரின் மகனாகிய மிர்ஸா மஹ்மூட்டுக்கும் திருமணம் நடந்தது. புதிய சமயத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த மிர்ஸா மஹ்மூட்டுக்கு ஓர் இளைய தங்கை இருந்தார். அவருடைய பெயர், ஆசிய்யி காஃனும் என்பதாகும். இவர் கவர்ச்சிமிக்கவர், துடிப்புமிக்கவர், மற்றும் பெரும் அழுகுடையவர். இவர் பருவமடைந்ததும், சாரிஃ ஃகானும் தமது தந்தையை அனுகி ஆசிய்யி காஃனுமைத் தமது தம்பியாராகிய பஹாவுல்லாக்குப் பெண் கேட்கும்படி வேண்டினார். அப்போது பஹாவுல்லா பதினெட்டு வயதை அனுகிக்கொண்டிருந்தார். இவர்களுடைய திருமணம் 1835ம் வருடம் அக்டோபர் மாதம் நடந்தது. இந்த ஆசிய்யி ஃகானுமே மாஸ்டராகிய அப்துல் பஹாவின் தாயார் ஆவார்.

பாஹிய்யா காஃனும் கூறியவை

அவர் மிர்ஸா இஸ்மாயிக்  எனும் ஒரு உயர்நிலை பாரசீக வஸீரின் ஒரே மகளாவார். இந்த வஸீரும் மிர்ஸா அப்பாஸ் புஸூர்க்காகிய என் பாட்டனாரும் பெரும் செல்வம் படைத்தவர்கள். என் தாயாரின் சகோதரர் என் தந்தையாரின் சகோதரியை மணந்தபோது, அந்த இரண்டு மேல்மட்ட குடும்பங்களின்  இரட்டை உறவு மாநிலம் முழுவதும் பெரும் ஆர்வத்தை உண்டாக்கியது. “செல்வத்தோடு செல்வம் சேர்ப்பது இதுவென” மக்கள் பேசிக்கொண்டனர். ஆசிய்யி காஃணும் அவர்களின் சீர்வரிசைகள் அவருடைய குடும்பத் தகுதிக்கு ஏற்றவாறு மிக அதிகமாகவே இருந்தன. அவர் தமது கனவரின் வீட்டுக்கு வந்த போது நாற்பது கோவேறு கழுதைகளில் அவருடைய பொருள்கள் சுமந்துவரப்பட்டன.

ஆசிய்யி காஃனும் மிர்ஸா மிஹ்டி ஆகியோரின் கல்லரைகள்

திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே ஒரு பொற்கொல்லர் அவருடைய வீட்டிற்கு வந்து நகைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடைய உடைகளின் பொத்தான்கள் கூட தங்கத்தினாலும் வைரங்களாலும் ஆனவை. (இந்தப் பொத்தான்கள் பஹாவுல்லா நாடுகடுத்தப்பட்டு திஹரான் நகரிலிருந்து பாக்தாத் செல்லும் மிகக்கடுமையான பயணத்தின் போது ரொட்டிக்காக பண்டமாற்று செய்யப்பட்டன) நான் அவரை முதன் முதலில் கண்டது போல் நீங்கள் காண முடிந்தால்! அவர் உயரமாகவும், மெல்லிய தேகம் கொண்டவராகவும், மென்நயம்மிக்கவராகவும்,  கருநீலக் கண்களுடையவராகவும், பெண்டிரிடையே ஒரு முத்தாகவும், ஒரு மலராகவும் விளங்கினார்.

சிறுவயது முதற்கொண்டே அவருடைய விவேகமும் நுண்ணறிவும் தனிச்சிறப்பு மிக்கவையாக விளங்கியதாக நான் அறிந்துள்ளேன். என் சிறு வயது முதலான அவரைப் பற்றிய என் ஞாபகத்தில், அவர் தமது குணபாவத்திலும் வனப்பிலும் ஒரு ராணியைப் போல் விளங்கியே வந்துள்ளார். அனைவரைப் பற்றியும் அக்கறை கொண்டவராகவும், மென்மைமிக்கவராகவும், வியக்கவைக்கும் தன்னலமற்றவராகவும், இருந்தார். அவருடைய எந்த ஒரு செயலும் அவருடைய தூய்மையான இதயத்தை வெளிப்படுத்தத் தவறியது கிடையாது. எங்கெங்கு அவர் சென்ற போதும் நான்கு திசைகளையும் மென்மையான பணிவெனும் நறுமணத்தால் அரவணைக்கும், அன்பும் மகிழ்ச்சியும் மிக்க ஒரு சூழ்நிலையை அவருடயை பிரசன்னம் உருவாக்கியது.

என் பெற்றோர்கள், அவர்களுடைய திருமணத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே, அரசாங்க அலுவல்கள், சமூக சடங்குகள், பாரசீகத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும், பொருள்வளம் மிகுந்தவர்களும் கடைப்பிடித்து வந்த ஆடம்பர வாழ்வுமுறைகள் ஆகியவற்றில்  குறைந்த அளவே கலந்துகொண்டனர்; என் தாயாரும் அவருடைய மேன்மைமிகு கனவரும், இத்தகைய லௌகீக மகிழ்ச்சிகளை அர்த்தமற்றவை என கணக்கிட்டு, ஏழைகள், வாட்டமுற்றோர், துன்பமுற்றோர் ஆகியோருக்கு உதவுவதில் தங்கள் நேரத்தை செலவிடுவதையே விரும்பினார்கள்.
எங்கள் வீட்டு வாசலிலிருந்து எவருமே திருப்பியனுப்பப்பட்டதில்லை; வருகையளித்த எல்லாருக்குமே எங்கள் விருந்து மேஜை தயாராக இருந்தது. ஏழைப் பெண்கள் என் அம்மாவைக் காண அடிக்கடி வருவார்கள்; அவரிடம் தங்கள் சோகக் கதைகளைக் கூறுவார்கள்; அவருடைய அன்பான உதவியின் மூலமாக ஆறுதலும், தேறுதலும் பெற்றுச் செல்வார்கள்.

என் தந்தையை எல்லாருமே “ஏழைகளின் தந்தை” என அழைத்த அதே வேளை என் தாயை “ஆறுதலின் அன்னை,” என அழைத்தார்கள். அதிலும், என் தாயின் முகத்தைப் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே ஏறெடுத்துப் பார்த்ததுண்டு.

இவ்வாராக எங்களுடைய அமைதியான நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. சில வேளைகளில் நாட்டுப்புறத்தில் உள்ள எங்களுடைய வீட்டுக்கு நாங்கள் செல்வதுண்டு; அங்கு என் அண்ணன் அப்பாஸும் நானும் அற்புதமான பூக்கள் மலர்ந்தும் பழுத்த பழங்களுமுடைய அழகான தோட்டங்களில் விளையாட மிகவும் விரும்புவோம்; ஆனால் என் இளவயதில் நடந்த இந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் எனக்கு மங்கலாகவே இருக்கின்றன.

ஒரு நாள், எனக்கு அப்போது ஆறு வயதுதான் இருக்கும், நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது, ஒரு சில மூளை குழம்பிய பாப்‘இக்களால் ஷா மன்னர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது நியாவரானில் உள்ள தமது நாட்டுப்புற வீட்டிற்கு என் தந்தை சென்றிருந்தார். அஃது அவர் வசமிருந்த சொத்தாகும். அங்கு வசித்த கிராமவாசிகள் அனைவரும் என் தந்தையால் பராமரிக்கப்பட்டு வந்தவர்களாவர்.

திடீரென ஒரு சேவகன் என் அம்மாவைக் காண திகிலுடன் ஓடி வந்தார். “நமது யஜமானர், நமது யஜமானரைக் கைது செய்துவிட்டார்கள், நான் என் கண்ணால் கண்டேன்,“ என கூக்குரலிட்டான்.

அவர் பல மைல்கள் நடத்திவரப்பட்டுள்ளார்! ஐயோ, அவரை அவர்கள் அடித்துவிட்டிருக்கின்றார்கள்! அவர் பாஸ்டினாடோ சித்திரவதையை அனுபவித்துள்ளார் எனவும் கூறுகின்றார்கள்”. அவருடைய கால்களில் இரத்தம் வடிந்துகொண்டிருக்கின்றது. அவருடைய கால்களில் காலணிகள் இல்லை. அவருடைய தலைப்பாகையையும் காணவில்லை! அவருடைய மேலாடைகள் கிழிந்திருக்கின்றன! அவருடைய கழுத்தைச் சங்கிலிகளால் பிணைத்திருக்கின்றார்கள்!

பாவம், என் தாயாரின் முகம் சிறிது சிறிதாக வெழுத்து வந்தது. சிறார்களாகிய நாங்கள் பெரிதும் பயப்பட்டிருந்தோம்; எங்களால் உரக்க அழவே முடிந்தது. உடனடியாக எல்லாரும், எங்கள் உறவினர்கள், நண்பர்கள், சேவகர்கள் உள்பட அனைவரும் எங்கள் வீட்டிலிருந்து ஓடிவிட்டார்கள். இஸ்ஃபாண்டியார் எனப்படும் ஒரே ஒரு சேவகரும் ஒரு பெண்ணும் மட்டும் ஓடிப்போகவில்லை.

எங்கள் மாளிகை, மற்றும் அதனைச் சுற்றிய சிறிய வீடுகள் அனைத்தும் சூரையாடப்பட்டன. அவற்றில் இருந்த மரச்சாமான்கள், பொக்கிஷங்கள், யாவுமே மக்களால் திருடப்பட்டன. எங்கள்பால் எப்போதுமே அன்பாக இருந்த எங்கள் தந்தையின் தம்பியாகிய மிர்ஸா மூசா, என் தாயாரும் அவருடைய மூன்று குழந்தைகளும் தப்பிச் சென்று மறைந்துகொள்ள உதவினார். என் தாயார் தமது திருமண சீர்வரிசைகளிலிருந்து ஒரு சிலவற்றை பாதுகாப்பாக மறைத்துவிட்டிருந்தார். எங்களுடைய பரந்த சொத்துக்களில் மீதமிருந்தவை இவை மட்டுமே.

இவை விற்கப்பட்டன; அந்தப் பணத்தைக்கொண்டு சிறையில் இருந்த என் தந்தைக்கு என் தாயார் சிறைக்காவலர்களின் மூலம் உணவு கொண்டுசெல்லப்பட வழி செய்தார்; மற்ற செலவுகளை ஈடு செய்யவும் வழி வகுத்தார். இப்போது நாங்கள் சிறைக்கு அருகாமையிலிருந்த ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தோம். மிர்ஸா யாஹ்யா (ஸூப்-இ-அஸால்) பேரச்சத்துடன் மாஸிந்தரான் ஓடிச் சென்றார்; அங்கேயே அவர் மறைந்தும் இருந்தார்.

ஆகா, அந்த நேரத்தில் என் தாயார் அனுபவித்த பெரும் துயரத்தை என்னவென்றுதான் சொல்வது! குழந்தைப் பேற்றை எதிர்நோக்கிய (இதை நான் இதற்குப் பிறகே அறிய வந்தேன்) எந்த ஒரு பெண்ணும் எதிர்நோக்கக்கூடியதற்கும் அதிகமானதுதான் அந்தத் துயரம். என் தந்தை அடைக்கப்பட்டிருந்து சிறை மிகவும் பயங்கரமானது; பூமிக்குக் கீழே ஏழு தளங்கள் இரங்கவேண்டும்; கனுக்கால் அளவு கஸ்மலம் நிறைந்தும், புழுப்பூச்சிகள் பரவியும், விவரிக்கமுடியாத துர்நாற்றமுமாக அந்த இடம் இருந்தது.

இவற்றோடு சேர்ந்து அந்தக் கொடுமையான இடத்தில் சிறிது கூட ஒளி கிடையாது. அதனுள் நாற்பது பாப்‘இக்கள் அடைக்கப்பட்டிருந்தனர்; கொலைகாரர்களும் வழிப்பறிக்கொள்ளையர்களும் அங்கு நிறைந்திருந்தனர். என் மேன்மைமிக்க தந்தை இந்தத் கரிய அறைக்குள் தள்ளப்பட்டிருந்தார்; கனமான சக்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார்; அவரோடு வேறு ஐந்து பாப்‘இக்களும் சங்கிலிகளால் இணைக்கப்பட்டிருந்தனர்; இங்கு அவர் நான்கு மாதங்கள் இருந்தார். இப்பயங்கரத்தை நீங்களே கற்பனை பன்னிப்பாருங்கள்.

சிறிது நகர்ந்தாலும் சங்கிலிகள் சதையை மேலும் ஆழமாக வெட்டின. ஒருவரை மட்டும் அல்ல, மற்ற ஐவருக்கும் இவ்வாரே நடந்தது. சிறிதும் தூங்கமுடியாது; உணவு கொடுக்கப்படவில்லை. மிகுந்த சிரமங்களிடையேதான் அந்த பயங்கர சிறைக்குள் என் தாயார் என் தந்தைக்கு உணவும் நீரும் அனுப்பி வைக்க முடிந்தது. அதே நேரத்தில், இந்த நிலையிலும், பாப்‘இக்களின் உற்சாகம் சிறிதும் குறையவில்லை.

உயிர்த்தியாகிகளின் ஜீவமகுடமாகிய துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உயிர்த்துறப்பதென்பதே, அவர்களுடைய நோக்கமும் தீவிர ஆவலுமாக இருந்தது. அவர்கள் இரவும் பகலும் பிரார்த்தனைகளைப் பாடிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு காலை வேளைகளிலும் இந்த மனோதைரியமும் அர்ப்பண உணர்வும் மிக்க நண்பர்களில் ஒருவரோ பலரோ பல வழிகளில் சித்திரவதை செய்யப்படவும் பிறகு கொல்லப்படவும் வெளியே கொண்டு செல்லப்படுவர்.

இந்த பாப்‘இக்களுக்கு நடந்தது போல நாஸ்திகர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் அல்லது பலரின் மீது சமய தீவிரவாதம் தூண்டிவிடப்படும்போது, அவர்கள் வெறுமனே அரசாங்கக் கொலைஞரால் கொல்லப்படுவதில்லை, மாறாக, மக்களில் பல்வேறு பகுதியினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவர். கசாப்புக் கடைக்காரர்கள் சித்திரவதை செய்வதற்கு தங்களுக்கென பிரத்தியேக முறைகளை வைத்திருந்தனர்; ரொட்டி செய்பவர்களும் அவ்வாரே தனி முறைகளைக் கையாண்டனர்; காலனி தைப்பவர்களுக்கும், கொல்லர்களுக்கும் அவ்வாறே வெவ்வேறு சித்திரவதை முறைகள் இருந்தன. பாப்‘இக்கள் மீது இவர்கள் அனைவரும் தங்களுடைய பட்சாதாபமற்ற சத்திரவதைகளை செயல்படுத்த வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கொடும்பாவிகள் பாப்’இக்களின் தணிக்கவியலா ஆன்மவுணர்வைக் கண்டு மேலும் அதிக கோரத்தனமாக நடந்துகொண்டனர். பாப்‘இக்களும் அதற்குத் தகுந்தாற்போல், தங்களுடைய இறுதி மூச்சு வரை சிறிதும் அசராமலும், பிரார்த்தனைகளைப் பாடியும், தங்களைச் சித்திரவதை செய்வோருக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டியும், இறைவனை வாழ்த்திக்கொண்டும் இருந்தனர். இத்தகைய பயங்கர காட்சிகளைக் காண கூட்டங்கள் கூடியும், சபித்துக்கொண்டும் இருந்தனர். இவையெல்லாம் நடக்கும் போது மேளம் ஒன்று சப்தமாக தட்டப்படும். இந்தக் கொடூர சப்தங்கள் எனக்கு நன்கு ஞாபம் இருக்கின்றது. நாங்கள் மூவரும் என் தாயாரை இருகக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்போம். அவரோ, அங்கு பலியாகிக்கொண்டிருப்பது, தமது அன்புக் கணவரா அல்லவா என்பது தெரியாமல் கலங்கிக்கொண்டிருப்பார்.

என் தகப்பனார் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதை என் தாயார் அன்று நல்லிரவு வரை தெரிந்துகொள்ள முடியாமல் இருந்தார். அதுவும், தமது உயிரைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் வெளியே சென்று விசாரித்த பிறகே அவர் தெரிந்துகொண்டார். அக்கொடூரங்கள், பெண்கள் அல்லது குழந்தைகள் என பாகுபாடு பார்க்கவில்லை. என் தம்பி மிர்ஸா மிஹிடிக்கு அப்போது இரண்டே வயதுதான் இருக்கும். நான் என் தம்பியை என் மடியில் உட்கார வைத்துக்கொண்டு என் பலமே இல்லாத என் கைகளால் அவனை இருகப் பிடித்துக்கொண்டு கும்மிருட்டில் பேரச்சத்தால் நடுநடுங்கிய வண்ணம் உட்கார்ந்திருப்பேன். அப்போது நடந்த கொடுமையான செயல்கள் அனைத்தும் எனக்குத் தெரிந்திருந்தன. என் தாயாரும் அக்கொடும்ைக்காரர்களின் கைகளில் சிக்கியிருப்பார்கள் என்பதையும் நான் உணர்ந்திருந்தேன். ஒன்றும் செய்ய இயலாத நிலையில் என் தாயாரின் வருகைக்காக நான் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தேன்.

அப்போது ஒளிந்த வண்ணம் இருந்த என சிற்றப்பாவாகிய மிர்ஸா மூசா, என் தாயார் என்ன செய்தி கொண்டுவந்துள்ளார் என்பதை அறிய வருவார். இந்த துயர்மிகு காரியங்களின் போது என் அண்ணன் அப்பாஸும் என் தாயாரோடு செல்ல நேர்ந்தது. என் சிற்றாப்பாவிடம் என் தாயார் தெரிவித்த விஷயங்களை நாங்களும் ஆர்வத்தோடு செவிமடுப்போம். இச்செய்திகள் யாவும் என் தாத்தாவின் சகோதரி ஒருவரின் வாயிலாகவே கிடைத்தது. அவர் மிர்ஸா யூசிஃப் எனும் ஒரு ருஷ்ய பிரஜையை மணந்திருந்தார். மிர்ஸா யூசிஃப் தெஹரானில் உள்ள ருஷ்ய தூதரின் நண்பராக இருந்தார்.

என் தாத்தாவின் மைத்துனரான இவர், விசாரனைகள் நடக்கும் போதெல்லாம் சென்று என் தகப்பனார் பற்றிய செய்திகளை அறிந்து வருவார். யார் யார் அன்று கொல்லப்படப்போகிறார்கள் என்பதை அறிந்து அக்கொடுமையான நாட்கள் கடந்துசெல்லும் வரை என் தாயாரின் துயரத்தைக் கலைவதற்கு வழி செய்தார். மிர்ஸா யூசிஃப் அவர்களே என் தகப்பனாருக்கு உணவு கொண்டுசெல்லப்பட என் தாயாருக்குப் பெரிதும் உதவினார். அவர்தான் எங்களையெல்லாம் சிறைச் சாலைக்கு அருகே இருந்து இரண்டு சிறிய அறைகளுக்கு இடம் பெயர உதவிசெய்தார். அங்குதான் நாங்கள் மறைவாக தங்கியிருந்தோம்.

இக்காரியங்களைச் செய்வதில் அவர் பெரும் அபாயங்களுக்கும் தம்மை உட்படுததிக்கொண்டார். அவர் ருஷ்ய பிரஜை எனும் முறையில் ருஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பைப் பெற்றிருந்ததால் இந்த அபாயங்களின் கடுமைகள் சிறிது தனிவாக இருந்தன. அந்த நாட்களின் போது என் தாயாரை வந்து சந்திக்க எங்கள் நண்பர்கள், உறவினர்கள் எவருக்குமே, தைரியமில்லை. ஆனால், என் தகப்பானாரின் அத்தையாகிய மிர்ஸா யூசிஃபின் மனைவி மட்டுமே எங்களை வந்து கண்டு சென்றார்.

ஒரு நாள் மிர்ஸா யூசிஃப் என் தகப்பனாரின் எதிரிகளான கொலைகார முல்லாக்கள் அவரைக் கொல்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பதை அறிந்தார். மிர்ஸா யூசிஃப் ருஷ்ய தூதரைச் சந்தித்தார்; பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அந்த நண்பரும் இத்திட்டம் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டுமென தீர்மானித்தார். மரண தண்டனைகள் விதிக்கப்படும் நீதிமன்றத்தில் மிகவும் பிரமிக்க வைக்கும் ஒரு நிகழ்சி நடந்தது. ருஷ்ய தூதர் நீதிமன்றத்தில் அச்சமின்றி எழுந்து நின்று: “நான் கூறக்கூடியவற்றின்பால் செவிசாயுங்கள்! நான் மிகவும் முக்கியமான விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்கப்போகின்றேன்” (அவரடைய குரல் சப்தமாக ஒலித்தது. நீதி மன்றத் தலைவரும், அதிகாரிகளும் பதலிளிப்பதற்குக்கூட முடியாமல் பிரமித்து நின்றனர்.) “நீங்கள் இதுவரை பலிவாங்கியதெல்லாம் போதாதா? அடிப்படையற்ற பொய்க்குற்றச்சாட்டுகளென நீங்களே நன்கு அறிந்துள்ள இக்குற்றச்சாட்டுகளின் விளைவாக, ஒன்றுமறியா மக்கள் பலரை நீங்கள் இதுவரை கொலைசெய்துள்ளீர்கள். உங்களையெல்லாம் திருப்திப்படுத்த இதுவரை நீங்கள் இயற்றிய இக்கொலைகாரக் கொடுமைகள் போதாதா? ஷா மன்னரை சுடுவதற்கு இம்மேன்மைமிகு கைதி தான் அந்த முட்டாள்தனமான திட்டத்தைத் தீட்டினார் என உங்களால் எப்படித்தான் சிந்திக்க முடிகின்றதென என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.

“அந்த இளைஞர்களால் பயன்படுத்தப்பட்ட அந்த வெற்றுத் துப்பாக்கி ஒரு குருவியைக் கூட கொன்றிருக்க முடியாதென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. மேலும், அவ்விளைஞன் வெளிப்படையாகவே மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதும் தெரிந்ததே. இக்குற்றச்சாட்டு பொய்யானதுமட்டுமல்ல, அது ஐயத்திற்கிடமில்லாமல் முட்டாள்தனமானதும் கூட. இதற்கெல்லாம் ஒரு முடிவேற்பட வேண்டும்.

இக்குற்றமற்ற மேன்மகனுக்கு ருஷ்ய நாட்டின் பாதுகாப்பை வழங்குவதற்கு நான் முடிவெடுத்துள்ளேன்; இது உங்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை! இக்கணத்திலிருந்து அவரது சிரசிலிருந்து ஒரு முடி பாதிப்படைந்தாலும், உங்கள் நகரத்தில் குருதி வெள்ளமாகப் பாயும்.

“இவ்விஷயத்தில் என் எச்சரிக்கையை நீங்கள் செவிமடுப்பது உங்களுக்கு நல்லதென்றே நினைக்கின்றேன். இவ்விஷயத்தில் என் நாடு எனக்கு முழு பக்கபலமாக இருக்கின்றது.” இவ்விஷயம் மிர்ஸா மூசா அவர்களால் என் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டது.

என் தம்பியும் நானும் அங்கு நடந்ததை எவ்வளவு ஆர்வத்துடன் செவிமடுத்தோம் எனவோ, நாங்கள் எல்லாரும் வடித்த ஆனந்தக் கண்ணீரையோ இங்கு நான் அறிவிக்க வேண்டியதில்லை.

அந்த எச்சரிக்கையின் விளைவாக என் தந்தை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால், அவரும் அவரது குடும்பமும் பாரசீகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனும் விதியின் பேரிலேயே அவர் விடுவிக்கப்ட்டார்.

நாங்கள் அனைவரும் பத்தே நாட்களில் தெஹரானைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. என் தந்தை அப்போது மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் எங்கள் இரு சிறிய அறைகளுக்கு வந்தார். அவரது வருகையால் நாங்கள் அடைந்த இன்பத்திற்கு அளவேயில்லை!

ஜமால்-இ-முபாரக் (என் தந்தைக்கு வழங்கப்பட்ட ஒரு பெயர்) தாம் அந்த பாதாளச் சிறறையிலல் அனுபவித்த அந்த நான்கு மாத கொடுமையான சிறைவாசத்தைப் பற்றி வெகு குறைவாகவே பேசினார். அவர் அனுபவித்த கொடுமைகளின் சின்னங்களை நாங்கள் பார்த்தோம்; அவருடைய மென்மையான தோலை, குறிப்பாக அவரது கழுத்தில், சங்கிலிகள் வெட்டிய இடத்தைப் பார்த்தோம், பாஸ்டினாடோ சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும் நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த அவருடைய கால்களை நாங்கள் கண்டோம். எங்கள் தாயாரோடு சேர்ந்து நாங்கள் வடித்த கண்ணீரை என்னவென்று சொல்வது.

நாங்கள் பத்து நாட்களில் மேற்கொள்ளவேண்டிய பயணத்திற்கு வேண்டிய வலுவை என் தகப்பானார் பெற வேண்டும் என்பதற்காக என் தாயார் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஆனால், காலமோ மிகவும் கடியதாக இருந்தது. என்தாயார் எவ்வாறுதான் ஏற்பாடுகளைச் செய்ய போகின்றார்?

பரிதாபத்திற்குரிய அப்பெண்மனி தமக்கு சீர்வரிசைகளாக வழங்கப்பட்ட, கிட்டத்தட்ட, எல்லா பொக்கிஷங்களையும் விற்றார். அவற்றுள், ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட துனிகள், நகைகள், மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் விற்றார். அவை அனைத்திற்கும் அவருக்குக் கிடைத்தது 400 டூமான்களே. இப்பணத்தைக் கொண்டு அக்கொடுமையான பயணத்தின் வழிசெலவுகளை அவர் சரி செய்ய முடிந்தது. (அவர்கள் நாடுகடத்திய எவருக்கும் அரசாங்கள் உதவி எதையுமே வழங்கவில்லை.)

பயணம் விவரிக்க முடியாத கொடுமைகள் நிறைந்ததாக இருந்தது. என் தாயாருக்கு எந்த அனுபவமும் கிடையாது, வேலைக்காரர்கள் இல்லை, உணவுப் பொருட்கள் கிடையாது, செலவுக்கு பணமும் மிகவும் குறைவாகவே இருந்தது. என் தந்தையார் சிறைவாசத்தின் கொடுமைகளிலிருந்து இன்னமும் மீளாது கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். நாங்கள் பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது விடைகூறுவதற்கு, எங்கள் உறவினர்களும், நண்பர்களும்  பயந்துகொண்டு வரவில்லை. என் தாயாரின் வயதான பாட்டி ஒருவர் மட்டுமே வந்நார்.

எங்களோடு இருப்பதற்கு சிறிதும் பயப்படாத இஸ்ஃபாண்டியாரும், நீக்ரோ பெண்மனி ஒருவரும் மட்டுமே எங்களுக்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். ஆனால், குழந்தைகளாகிய நாங்கள் மூவரும் மிகவும் சிறிய வயதினராக இருந்தோம், என்ன அண்ணனுக்கு எட்டு வயதும், எனக்கு ஆறு வயதும்  ஆகியிருந்தன. மிகவும் பலவீனமாகவும், குழந்தையாகவும் இருந்த மிர்ஸா மிஹ்டியை தெஹரானிலேயே, என் தாயாரின் பாட்டியோடு விட்டுச் செல்ல என் தாயார் சம்மதித்தார். ஆனால், அவனை விட்டு பிரிவது தாங்க முடியாததாக இருந்தது.

இறுதியில், நான்கு வாரங்கள் பிடித்த அந்த பிராயாணத்தை நாங்கள் ஆரம்பித்தோம்; அது கொடிய குளிர்காலம், தரையெங்கும் வெண்பனி விழுந்து கிடந்தது. பாக்தாத் செல்லும் வழியில் நாங்கள் ஒரு சில வேளைகளில் மக்கள் நடமாட்டமே இல்லாத பிரதேசங்களில் நாங்கள் தங்கவேண்டியிருந்தது. ஆனால், அந்த டிசம்பர் மாதத்தில் குளிர் மிகவும் பயங்கரமாக இருந்தது; நாங்கள் அக்குளிருக்குத் தயாராகவும் இல்லை. பாவம் என் தாயார்; பயணம் முழுவதும் அவர் பெரும் இம்சைக்குள்ளானார். அவர் கோவேறு கழுதைமேல் ஏற்றப்பட்ட ஒரு பல்லக்கில் பிரயானம் செய்தார்! அதுவும், அவர் மகப்பெற்றை எதிர்நோக்கியிருந்த ஆறு வாரங்களுக்கு முன்பாக இத்துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது!

ஆனாலும், அவர் ஒரு வார்த்தைகூட இதைப்பற்றி முறையிடவில்லை. அவர் எல்லா வேளைகளிலும் மற்றவர்களுக்கான உதவிகளைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். அவர் எல்லாருடைய இன்னல்களின்போதும் தமது எல்லையற்ற கருணையை வழங்கத் தயங்கியது கிடையாது.

அவர் கூறிய கதையைக் கேட்ட என் கண்களில் வழிந்ததது: “அது மிகவும் சோகமான காலம். அதைப் பற்றி நான் கூறினால் நான் உன்னை மேலும் சோகத்திற்குள்ளாக்க நேரிடும்.” “ஆனால், அன்பிற்கினிய ஃகானும், உங்கள் சோகம் அனைத்திலும் நானும் மானசீகமாகப் பங்குகொள்ள விரும்புகின்றேன்,” என நான் கூறினேன். “என் சோகம் மிகுந்த நாட்களில் நான் என் சிந்தனைகளில் வாழ்ந்ததைத் தவிர என் வாழ்வில் வேறு எதுவும் கிடையாது. சோகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை; ஆனால், இறைவனின் பாதையில் சோகத்தை அனுபவிக்கும் போது, அதுவே உண்மையான ஆனந்தமாகும்!”

பிரயாணத்தின்போது நாங்கள் ஏதாவது ஒரு பட்டனத்திற்கு வந்தோமானால், என் தாயார் துணிகளையெல்லாம் எடுத்துச் சென்று பொது குளியலறைகளில் துவைத்து வருவார்; நாங்கள் அங்கு குளிப்போம். அவர் சில்லிட்ட ஈரமான துணிகளை தமது கைகளில் ஏந்தி வருவார் — அவற்றைக் காய வைப்பது பெரும்பாலும் முடியாத காரியமாகவே இருக்கும்; அத்தகைய காரியங்களில் சிறிதும் அனுபவமற்ற அவருடைய கைகள் வலியெடுத்துப்போகும்.

ஒரு சில வேளைகளில் நாங்கள் ஏதாவது சத்திரத்தில் தங்க நேரிடுவதுண்டு. அவ்விடங்களில் ஒரு குடும்பத்திற்கு ஓர் அறைதான் வழங்கப்படும், அதுவும் ஒர் இரவுக்கு மட்டுமே. இரவில் ஒளி கிடையாது, படுக்கைகளும் கிடையாது. சில நேரங்களில் எங்களுக்குத் தேநீர் கிடைக்கும், அல்லது முட்டைகள், சிறிது உறை பாலேடு, கரடுமுரடான ரொட்டி போன்றவையும் கிடைக்கும். என் தந்தையார் இருந்த நிலையில் அவரால் அத்தகைய கரடுமுரடான உணவை உட்கொள்ள முடியவில்லை. மிகவும் விசனமுற்ற என் தாயார் வேறு ஏதாவது உணவு கிட்டுமாவென சிந்தனை செய்தார். என் தந்தை நல்ல உணவு கிடைக்காமல் அதிகரிக்கும் பலவீனத்திற்குள்ளானார்.

இவ்வாறு இருக்கையில், ஒரு நாள் என் தாயாருக்கு சிறிது கோதுமை மாவு கிடைத்தது. ஒரு சத்திரத்தை நாங்கள் அடைந்தபோது, அவர் என் தகப்பனாருக்கு இனிப்பான கேக் ஒன்று செய்ய நினைத்தார். ஆனால், அந்தோ! – துரதரிஷ்டவசமாக, இருளில் சீனிக்குப் பதிலாக, அவர் உப்பைக் கொட்விட்டார். அந்த கேக் உண்ணமுடியாமல் போயிற்று!

தெஹரானின் கவர்னர், நாட்டின் எல்லை வரை எங்களோடு சில இராணுவ வீரர்களை அனுப்பி வைத்திருந்தார். எல்லையில் எங்களை துருக்கிய வீரர்கள் சந்தித்து பாக்தாத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்களுக்கு முதலில் ஒரு சிறிய வீடே கிடைத்தது; என் தந்தைக்கு ஒரு சிறிய அறையும், என் தாயாருக்கு ஒரு சிறிய அறையுமாக அமைந்திருந்த சிறிய வீடது. நானும், என் அண்ணனும் குழந்தையும் என் தாயாருடன் அந்த சிறிய அறையிலேயே தங்க வேண்டியிருந்தது. எங்களைக்காண அராபிய பெண்மனிகள் வந்த போது இந்த சிறிய அறையே வரவேற்பறையாக செயல்பட்டது. இந்த அராபிய பெண்கள் எங்களைக் காண வந்ததற்குக் காரணம், தாஹிரிஃ பாக்தாத்திற்கு வருகையளித்த போது அவர் அப்பெண்மனிகளுக்குச் சமயத்தைப் போதித்திருந்ததே ஆகும்.

ஒரு நாள் ஒரு வயதான பெண்மனி வருகை தந்திருந்த போது, சமோவாரைத் தயார் செய்யும்படி நான் பணிக்கப்பட்டேன். அது மிகவும் கனமான சமோவாராக இருந்தது. என் கைகளிலும் அவ்வளவாக பலமில்லை. மேல்மாடிக்கு அதை நான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. என்னைப் பார்த்து அந்த மூதாட்டி: “பாப்’இ போதனைகள் மிகவும் அற்புதமானவை என்பதற்கு ஆதாராமாக, ஒரு சிறிய வயது பெண் சமோவார் சேவை செய்கிறாள் என்பதே உள்ளது,” என்றாள். என் தந்தை அதை வேடிக்கையாக எண்ணினார். அவர் பிறகு, “உண்ணுடைய சமோவார் சேவையில் வாயிலாக சமயத்தை ஏற்றுக்கொண்ட பெண்மனி இதோ,” என கூறுவார்.

மிர்ஸா மூசாவுக்கும் அவரது மனைவிக்கும் பஹவுல்லாவின்பால் எப்போதுமே பக்தி அதிகம். என் சிற்றப்பாவாகிய மிர்ஸா மூசா அவர்கள், எங்களுடைய தேசப்பிரஷ்டத்தில் தானும் பங்குகொண்டார். அவர் எல்லா விஷயங்களிலும் மிகவும் உதவி செய்வார். ஒரு முறை முழு சமையலையும் அவரே கவனித்துக் கொண்டார். அவர் சமயல் கலை நன்கு அறிந்தவர் ஆவார்; அவர் துணிகளை அவ்வப்போது துவைக்கவும் உதவினார்.

என் தாயார் மிகவும் பலவீனமானவர். அவருடைய பலமெல்லாம் அவர் அனுபவித்த கொடுமைகளால் பெரிதும் நலிவுற்றிருந்தன. ஆனால், அவர் தமது ஆற்றலுக்கும் மீறிய நிலையிலேயே செயல்பட்டார்.

என் தாயாருக்கு உதவியாக, அந்த மேல்வர்க்கத்துப் பெண்மனிக்கு அவ்வித வேளைகள் பழக்கமில்லாதவையாகவும், சிறமமானதாகவும் இருந்ததனால், ஒரு சில வேளைகளில் என் தந்தையாரே சமையல் வேலையில் உதவிகள் புரிவார். அவர் அனுபவித்த சிரமங்களைக் கண்டு அவருடைய தெய்வீகக் கணவரும், அவருடைய பிரபுவுமாகியவரின் மனம் பெரிதும் சோகமடைந்திருந்தது. இத்தகைய உதவிகளை அவர் சுலைமானிய்யா வாசத்திற்கு முன்பாகவும் அதற்குப் பின்பாகவும் புரிந்தார்.

பஹாவுல்லா சுலைமானிய்யாவை நாடிச் செல்வதற்கு சுப்-இ-அஸால் எனப்படும் பஹாவுல்லாவின் ஒன்றுவிட்ட தம்பியின் நடத்தையே காரணமாக இருந்தது. அவருடைய நடத்தையினால் பாக்தாத் பாப்’இக்களுள் பெரும் பிளவு ஏற்பட்டிருந்தது. நம்பிக்கையாளர்கள் தமக்கும் தமது தம்பிக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும், பிளவுக்குக் காரணமாக தாம் இருக்கக்கூடாது என்பதற்காக அவர் தமது குடும்பத்தையும் சமூகத்தையும் விட்டு யாருக்கும் தெரியாமல் சுலைமானிய்யாவுக்கு சென்றுவிட்டார். அவ்வாறு அவர் சுலைமானிய்யா செல்வதற்கு முன்பாக பாப்’இக்கள் அனைவரும் மிர்ஸா யாஹ்யாவை நல்லவிதமாக நடத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். மிர்ஸா யாஹ்யாவுக்குத் தமது இல்லத்திலேயே குடியிருக்கவும் ஏற்பாடுகள் செய்திருந்தார். திடீரென்று ஒரு நாள் பஹாவுல்லா எங்களையெல்லாம் விட்டுச் சுலைமானிய்யா சென்றுவிட்டார். ஆனால் அப்போது அவர் எங்கு சென்றார் என்பது எங்களுக்குத் தெரியாது. இதனால் பெரிதும் ஆனந்தமடைந்தது மிர்ஸா யாஹ்யாவே.

அதற்குப் பிறகு மிர்ஸா யாஹ்யா எங்கள் வீட்டு நிலையான விருந்தினராகிவிட்டார். சாப்பாடு சரியில்லையென அவர் எங்களுக்குப் பெரும் துன்பங்கள் கொடுத்தார். அதுவும், எங்கள் வீட்டின் மிகச் சிறந்தவை யாவும் அவருக்கே கொடுக்கப்பட்டன.

அதே வேளை தாம் கைது செய்யப்பட நேரலாம் எனும் பயம் அவரை இப்போது வாட்ட ஆரம்பித்தது. அவர் வீட்டினுள் மறைந்துகொண்டு, எந்நேரமும் கதவை பூட்டியே வைத்திருந்தார். யாராவது கதவைத் திறந்தால் போதும், உடனடியாக அவ்வாறு செய்தவர் மேல் சீறிப் பாய்வார்.

என்னைப் பொறுத்த வரையில் நான் தனிமைமிக்க ஒரு வாழ்வே வாழ்ந்தேன் எனச் சொல்லவேண்டும். மற்ற பிள்ளைகளோடு நட்புகொள்ளவேண்டுமெனும் ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், சுப்-இ-அஸால் அதற்கு அனுமதிக்கமாட்டார். என் வயதுடைய குழந்தைகளை அவர் வீட்டினுள் அனுமதிப்பதில்லை, அதே வேளை என்னையும் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்!

என் பக்கத்து வீட்டில் என் வயதுடைய இரு பெண்கள் வசித்தனர். நான் அவ்வப்போது அவர்களைப் பார்ப்பேன்; ஆனால் எங்கள் வீட்டு விருந்தாளி கதவைத் திறந்ததற்காக என்னைப் பார்துக் கத்துவார்; உடனடியாக கதவையும் மூடிவிடுவார். கைது பயம் அவரை எப்போதும் வாட்டியது, அவர் தமது பாதுகாப்புத் தவிற வேறு எதைப் பற்றியும் அக்கறை கொண்டவர் இல்லை.

இந்த காலகட்டத்தில் எங்கள் வாழ்வு மிகுந்த சிறமத்திலும், அதே வேளை தனிமையிலுமாக கழிந்தது. நாங்கள் ஹம்மாம் சென்று குளிப்பதற்கும் அவர் அனுமதிக்கவில்லை. எங்கள் வீட்டிற்குள் வந்து உதவி செய்யவும் அவர் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டு வேலை பெரும் சிறமம் மிக்கதாக இருந்தது. தினசரி வீட்டினுள்ளே இருந்த ஒரு ஆழமான கிணற்றிலிருந்து, நின்றுகொண்டு, மணிக்கணக்காக நான் நீர் இரைத்துக்கொண்டிருப்பேன்; கயிறு மிகவும் கடினமானது, நீர் இரைக்கும் வாளியோ மிகவும் கனமாக இருந்தது. என் தாயார் எனக்கு அவ்வப்போது உதவி செய்வார், ஆனால் அவரும் பலவீனமானவர், என் கைகளும் வலுவற்றவைகளாக இருந்தன. எங்கள் வீட்டு விருந்தினர்கள் உதவியதே இல்லை.

இக்கொடிய மனிதனுக்கு உதவி செய்ய வேண்டுமென என் தகப்பனார் கூறிச் சென்றுவிட்டார். நாங்களும் எங்களால் இயன்றவரை முயன்றோம், ஆனால், அது சுலபமாக இல்லை, அம்மனிதர் எங்கள் வாழ்க்கைகளை பெரும் சோகமிக்கவைகளாகச் செய்தார். இவ்வேளையில்தான் என் அருமைக் குட்டித் தம்பிக்கு மோசமான நோய் கண்டது. எங்கள் விருந்தினர் ஒரு டாக்டரோ, எங்கள் அண்டைவீட்டாரோ வந்து எங்களுக்கு உதவிபுரியக்கூட அனுமதிக்கவில்லை.

என் குட்டித் தம்பி இறந்த போது என் தாயார் மனமுடைந்து போனார்; என் தம்பியின் பூவுடல் யாரோ ஒரு மனிதனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவன் என் தம்பியை எங்கு கொண்டு சென்றான் எங்கு புதைத்தான் என்றே எங்களுக்குக் கடைசி வரை தெரியாது போயிற்று. அந்த நாட்களின் சோகம் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கின்றது.

சில காலத்திற்குப் பிறகு நாங்கள் ஒரு பெரிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தோம். நல்ல வேளையாக தன்னை யாரும் பார்த்துவிடுவார்களோ எனப் பயந்த மிர்ஸா யாஹயா எங்களோடு வரவில்லை. எங்க் வீட்டிற்குப் பின்புரம் இருந்த ஒரு சிறிய வீட்டில் அவர் மறைந்துகொண்டார். அவருக்கும், வரிவடைந்திருந்து அவருடைய குடும்பத்தினருக்கும் இப்போதும் நாங்கள் தினமும் உணவு அனுப்பி வந்தோம். அவர் எங்கள் வாழ்க்கையில் இப்போது நேரடியாக குறுக்கிடாததால் எங்கள் வாழ்க்கை இப்போது சிறிது மகிழ்ச்சியாக இருந்தது.

இப்போது எங்கள் கவலையெல்லாம் ஜமால்-இ-முபாரக் எங்குள்ளார் என்பதைப் பற்றியே இருந்தது. அதுவரை என் தாயாரும், மிர்ஸா மூசாவும் தங்களால் இயன்றவரை விசாரித்தே வந்தனர். தன் தந்தையின் பிரிவினால் என் அண்ணனின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குறியதாக இருந்தது. ஒரு நாள் இரவு என் அண்ணன் ஒரே பிரார்த்தனையை, ஒரே நோக்கோடு, எங்கள் தகப்பானார் எங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டுமென நினைத்து, பிரார்த்தித்தார்.

சின்னாட்களுக்குப் பிறகு எங்கள் தந்தையாரைப் பற்றி எங்களுக்கு செய்தி கிடைத்தது. அவரை அழைத்து வர எங்களுடைய விசுவாசமிக்க நண்பர் ஒருவரும், மற்றொரு நம்பிக்கையாளரும் சென்றனர். எங்கள் உள்ளங்கள் அவர்களோடு சென்றன என்பதைக் கூறவேண்டியதில்லை. அவர்கள் வெற்றி பெற வேண்டும் எனும் எங்களுடைய பிரார்த்தனைக்கு முடிவே இல்லை. எங்கள் எதிர்ப்பார்ப்பு இருண்ட எங்களுடைய வாழ்வின் இருண்ட பகுதிகளுள் ஒளியை வீசியது.

எதிர்ப்பார்ப்புமிக்க அந்த நாட்கள் கடந்து செல்லச் செல்ல, எங்கள் நம்பிக்கையும், எதிர்ப்பார்பும் அதிகரிக்கவும் வளரவும் செய்தன. வரப்போகும் நாட்களில், மிக அருகாமையில் உள்ள நாட்களில், வழிப்போக்கரான எங்கள் தந்தை, எங்களோடு மீண்டும் ஒன்று சேரப்போகிறார். “திர்மி” எனப்படும் ஒரு வகை சிகப்புத் துணியினால் என் தாயார் என் தந்தைக்கு ஒரு வித மேற்சட்டை தைத்தார். இத்துணியை இதற்கென்றே தமது திருமண பொக்கிஷங்களிலிருந்து பாதுகாத்து வைத்திருந்தார். என் தந்தையார் அனிந்துகொள்வதற்கு அஃது இப்போது தயாராக இருந்தது. இறுதியில், இறுதியில், என் தாயாரும், அணணனும் நானும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் அமர்ந்திருந்த வேளையில், காலடியோசை கேடடது. ஒரு துறவி. ஆனால், அந்த உருவத்தின் பின்னனியில் எங்கள் நேசத்திற்குறியவரின் ஒளியைக் கண்டோம். நாங்கள் அனைவரும் அவரைக் கட்டிக் கொண்ட போது எங்கள் ஆனந்திற்கு அளவே கிடையாது.

என் தாயார் இப்போது மிகவும் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கக் கண்டேன், என் அண்ணன் என் தந்தையாரின் கைகளை, இனி என்றுமே தன் பார்வைக்கு அப்பால் விடப்போவதில்லை என்பது போல் இறுகப்பிடித்துக்கொண்டிருந்தான். அவன் அந்த துறவியின் அருவருப்பான மாறுவேட உடையில் கிட்டத்தட்ட மறைந்தே விட்டிருந்தான். மனதைத் தொட்டதும், மகிழ்ச்சிமிக்கதுமான அக்காட்சியை என்னால் மறக்கவே முடியாது;

பாஹிய்யா ஃகானும் கூறியபடி லேடி ப்லொம்ஃபீல்ட் உரைத்தது

பாக்தாத் வாசகாலத்தின் போது, அதிப்புனித இலையாகிய பாஹிய்யா ஃகானுமே தமது தாயாரின் அன்பான உதவியாளராக இருந்தார். பல்வேறு வீட்டு வேலைகளை பொருத்த வரையில் அவர் தமது சக்திக்கும் மீறிய அளவிலேயே செயல்பட்டுவந்தார். குழந்தைத்தனமான பொழுபோக்குகளோ, சினேகிதர்களோ அவருக்குக் கிடையாது. எப்போதும் தமது தாயாரின் மீதே அவர் கண்ணாக இருந்தார், தன் தாயாருக்குக் களைப்பேற்படுத்தும் எதையும் அவர் விட்டுவைத்ததில்லை, தமது தாயாருக்கோ, தந்தைக்கோ அவர் ஏதாவது செய்ய இயன்ற போது அவர் அளவுக்கு மீறிய மகிழ்ச்சியடைவார்.
“என் தாயார் சில வேளைகளில் என் அண்ணன் அப்பாஸுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பார்; மற்ற வேளைகளில் மிர்ஸா மூசா சொல்லிக் கொடுப்பார், பிற நேரங்களில் அப்பாஸுக்கு என் தந்தையாரே பாடம் சொல்லிக் கொடுப்பார்.”

டூபா ஃகானும் வாய்மொழிந்தது

என் அன்பான பாட்டி ஆசிய்யா ஃகானுமை எனக்கு நன்றாகவே ஞாபகம் உள்ளது. அவர் மறைந்தபோது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும். பஹாவுல்லா அவரை “நவ்வாப்” என்றுதான் அழைப்பார். பாரசீக பிரபுக்கள் தங்கள் மனைவிமார்களை இவ்விதமாகத்தான் அழைப்பார்கள். அது மிகவும் மரியாதையும் பனிவும் மிக்க ஒரு பெயராகும். அவர் மிகுந்த அழகுடையவர், அன்பானவர், மென்மை குணம் படைத்தவர். பிரச்சனையுள்ள எவருமே அவரைத்தான் நாடிச் செல்வார்கள். ஒருவருக்கு நோய் கண்டிருந்தால் அவர்தான் அவர்களைப் பேணுவார், ஆறுதலளிப்பார், பார்த்தும் கொள்வார்.

ஆக்கா சிறைச்சாலையில் நாங்கள் இருந்தபோது சலவைத் தொழிலாளிகள் யாருமே அங்கு உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. ஃகாணும் அவர்கள்தான் பெரும்பாலான சலவைக் காரியங்களைக் கவனித்துக்கொள்வார். சமயல் வேலைகளையும் அவர்தான் கவனித்துக்கொள்வார். அவருக்கு என் அத்தையார்தான் (பஹிய்யா ஃகானும்) உதவி செய்வார்.

அங்கிருந்த ஒரேயொரு ஊழியரான ஒரு கருப்பினப் பெண்மனியினால் எல்லா வேலைகளையும் செய்ய இயலவில்லை. அச்சேவகி கலைப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக என் பாட்டியும், இளம் வயதினராகவிருந்த ஃகானுமும்தான் பெரும்பாலான கடின வேலைகளைச் செய்வார்கள்.

குடும்பத்தினரின் துணிகளை அவர்கள்தான் தைத்தும், ஒட்டுப்போடவும் செய்வார்கள். அவ்வேலை மிகவும் கடினமான வேலையாகும். பஹாவுல்லா சுலைமானிய்யாவிலிருந்து திரும்பியவுடன் அவருக்காக அவர்கள் இருவரும் அற்புதமான மேலுடுப்பு ஒன்றை எவ்வாறு தைத்தார்கள் என்பதை எனக்குக் கூறியிருக்கின்றனர். அன்புகலந்த அக்காரியத்திற்காக அவர்கள் சிறு சிறு துண்டுகளாலான சிகப்பு திர்மி துணியைப் பயன்படுத்தினர். பாட்டியின் திருமண பொக்கிஷங்களில் காணாமல் போன அனைத்திலும் அது மட்டும் எப்படியோ பாதுகாக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் சுமார் ஆறு மாத காலமாக அதை வெட்டி தைத்தார்கள். அதன் பயனாக மிகவும் அழகிய மேற்சட்டை ஒன்று உருவாகியது. மிகவும் தேவையான ஒரு மேலாடையாகவே அது விளங்கியது. அக்காலத்தில் பாக்தாத்தில் புதிய மேலுடுப்பு வாங்குமளவுக்கு அவர்களிடம் பணம் கிடையாது. ஆசிய்யா ஃகானும் அவர்கள் ஆக்கா சிறைச்சாலையிலிருந்து அருகிலிருந்து வாடகை வீட்டுக்குச் செல்லும் வரை உயிர்வாழ்ந்திருந்தார். அவரது சிறிய அறை வெற்று அறையாகவே காட்சியளித்தது. மிகவும் குறுகலான வெள்ளைப் படுக்கை, அது பகல்வேளைகளில் திவானாகவும் பயன்படுத்தப்பட்டது.

அறையிலிருந்த ஒரு சிறு மேஜையில் அவரது பிரார்த்தனை புஸ்தகமும் பிற நூல்களும், அவரது “ஃகலாஐ-தான்” எனப்படும் எழுதுகோல் வைக்கும் பெட்டியும், எழுதவதற்கான தாள்களும் இருந்தன; அவரது ஜெபமணிமாலையும் அதன் மேல்தான் இருந்தது; சில வேளைகளில் ஒரு ஜாடியில் மலர் இருக்கும், மற்றும் ஒரு பழைய வர்ணம் பூசப்பட்ட பெட்டி ஒன்று, அதனுள் அவருடைய உடைகள் இருந்தன.

பஹாவுல்லாவுக்கு இரண்டே மேலுடுப்புகள்தான் (கோட்) இருந்தன. அவை பாராக் எனப்படும் பாரசீக கம்பளியினால் நெய்யப்பட்டவை. அந்த இரண்டு மேலுடுப்புகளும் அடிக்கடி கிழிந்து போகச் செய்தன. அவற்றை ஒட்டுப்போடுவதிலும், தைப்பதிலும் அவருடைய பெரும்பாலான நேரங்கள் செலவழிந்தன. பஹாவுல்லாவின் காலுறைகளையும் அவர்தான் ஒட்டுப்போடுவார்.

என் கண்களுக்கு, நீல வர்ண மேலுடையிலும், அவருடைய தலையில் வெள்ளை “நிஃகாப்புமாகவும்,” அவரது சிறிய பாதங்களில் கரு நிறத்திலான மெல்லிய செருப்புமாகவும், மெய்மறந்த நிலையைக் குறிக்கும் முகபாவத்தோடு, அவர் தமது இனிய குரலில் பிரார்த்தனைகளைப் பாடுவதுமாகவுமே அவர் தெரிகின்றார். ஒரு நாள் என் பாடங்கள் முடிந்து நான் வீடு திரும்பிய போது அனைவரும் பெரிதும் சலனத்தோடு ஒன்றுகூடி நிற்பதைக் கண்டேன். “என்ன விஷயம்?” என வினவினேன்.

“உன் பாட்டி மிகவும் நோய்வாய்ப்ட்டுள்ளார்கள்,” என பதில் வந்தது. அவருடைய அறைக்குள் பஹாவுல்லா சென்றார்; சில நேரங்களுக்குப் பிறகு அவர் வெளியே வந்தார்; என் பாட்டி இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார்; இவ்வுலகையும் தமது சோகமும் துயரமும் நிறைந்த நாட்களை விட்டு அவர் மறைந்துவிட்டார். நாங்கள் அழுத அழுகையை என்னவென்றுதான் விவரிப்பது! அவர் இல்லாமல் அனைத்துமே வெறிச்சோடிப் போனது; மாறாத அவருடைய அன்புக்கருணையை இழந்து நின்றோம்; அவருடைய பூரண தன்னலமின்மை எங்களையெல்லாம் ஆட்கொண்டு விட்டிருந்தது. வசீகரமும் பாசமும் மிகுந்தவர், நற்பண்பும் நேர்த்தியும் மிக்கவர், கூறிய அறவுத்திறமும், உடல்பலத்தைவிட பண்புநலன்களின் பலம் பெற்றவர் அவர். நிறைந்த நகைச்சுவைப்பண்புடையவர். அவர் பட்ட சிரமங்களும், வாழ்வின் துயர்களும் அவருடைய உடல்நலத்தை பெரிதும் பாதித்திருந்தன; அவர் என்னதான் இயலாதபோதும், தமது முழு பலத்தையும் அவர் பிரயோகிக்கத் தவறியவே இல்லை.

ஆக்கா சிறைச்சாலைவாசத்தின் போது பட்ட துன்பங்களும் கொடுமைகளும் போதாதென மனதையே சுக்கு நூறாக்கிய சம்பவம் ஒன்று நடந்தது. ஆம், “அதி தூய்மையான கிளை” என பஹாவுல்லாவால் அழைக்கப்பட்ட மிர்ஸா மிஹ்டி ஒரு நாள் சிறைச்சாலையில் கூறையின் மீது தமது பிரார்த்தனைகளைக் கூறிக்கொண்டிருக்கும் போது தவறுதலாக காற்றோட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்து ஓர் இடைவெளியின் வழியாக கிழே விழுந்துவிட்டார். அவருடைய வயிற்றில் பயங்கரமான அடி பட்டிருந்தது; தொடை நைந்துபோய்விட்டது; வாயிலிருந்து இரத்தம் பெருகியது. இதன் விளைவாக மிர்ஸா மிஹ்டி மரணமடைந்தார். சிறைவாசத்தின் கடுமையின் காரணமாக இரகசியமாகவும், ஏழ்மையிலும், அவசரமாகவும் அதி தூய்மையான கிளை அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய தாயாராகிய ஆசிய்யி ஃகானும் இதனால் பெரும் விசனமுற்று நிற்காது அழுதுகொண்டே இருந்தார். இதையறிந்த பஹாவுல்லா, அவரிடம் வந்து அவர் அழத்தேவையில்லை எனவும், நம்பிக்கையாளர்கள் தம்மை வந்து காண்பதற்கான வழிகள் திறக்கப்படுவதற்கு மட்டுமின்றி மனிதனின் புத்திரர்கள் அனைவரும் ஒன்றுபடுத்தப்படுவதற்கும் அவர் தம் மகனை பிணையாக ஏற்றுக்கொண்டுவிட்டார் எனவும் ஆறுதல் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அப்புனித ஆன்மா பெரிதும் ஆறுதலுற்று தமது பேரிழப்பின் துக்கத்தை மறந்தார்.

ஷோகி எஃபெண்டியின் 21 டிசம்பர் 1939 எனும் கடிதத்திலிருந்து.

இத்தகைய ஒரு தாயார் யார்? அவர், கடவுளின் பாதையில் யாவற்றையும் துறக்க மனமுவந்த தெய்வீகமும், விசுவாசமும் வாய்ந்த ஒரு பெண் மட்டுமல்ல. ஆனால், புனித பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள ஐசையாவின் 54வது பகுதி அவரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

“ஏனெனில் உம்மை உருவாக்கியவர் உமது கணவரே ஆவார்; தேவகணங்களின் பிரபு என்பது அவரது பெயர்; உம்மை விடுவிப்பவர் இஸ்ரேலின் தெய்வீக புருஷராவார்ஆ; அவர் உலகம் முழுவதின் இறைவன் என அவர் அழைக்கப்படுவார்…”

அவருக்கு பஹாவுல்லா பின்வருவனவற்றையும் வெளிப்படுத்தியுள்ளார்:

“எம்மை மீண்டும் செவிமடுப்பாயாக, இறைவன் உன்மீது பெரிதும் திருப்பதிகொண்டுள்ளார்… அவருடைய உலகங்கள் ஒவ்வொன்றிலும் நீயே அவரது துணையாக இருக்கச் செய்தும், அவரது நாமமும், அவரது நினைவும், அவரது அரசும், அவரது சாம்ராஜ்யமும் நிலைத்திருக்கும் வரை அவரது அருகாமை, முன்னிலை ஆகியவற்றைக்கொண்டு உணக்கு ஊட்டமளித்துள்ளார்.”

அவர் மேலும் ஒரு நிருபத்தில் கூறுவது:

“ஓ நவ்வாப்! எமது விருட்சத்திலிருந்து உதித்தும், எமது துணையாகவும் இருந்துவந்துள்ள இலையே! எமது மகிமையும், எமது அன்புக் கருணையும், எல்லா ஜீவன்களையும் விஞ்சியுள்ள எமது இரக்கமும் உன்னைச் சாரட்டுமாக. உனது கண்களை இன்புறச் செய்யக்கூடியதையும், உனது ஆன்மாவிற்கு உறுதியளிப்பதையும், உனது உள்ளத்தை மகிழ்சியுறச் செய்யக்கூடியதையும் யான் உனக்கு அறிவிக்கின்றேன். மெய்யாகவே, உனது பிரபு கருணைமிக்கவர், சர்வ-கொடைாளி. இறைவன் உன் மீது திருப்திகொண்டுள்ளார், திருப்தி கொள்ளவும் போகின்றார்; அவருக்குச் சேவை செய்திட, அவர் உன்னை அவருக்கென தேர்தெடுத்தும், பகல் வேளையிலும், இரவு நேரத்திலும், அவருக்குத் துணையாக நியமித்துள்ளார்.”

தாஹிரி ஜம்ஷிட்


தாஹிரி ஜம்ஷிட்

ஓல்யாவின் கதை எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

இரான் நாட்டில் இன்று பல பஹாய்கள் சிறைகளில் வாடுகின்றனர். இவர்களின் ஒரே குற்றம் உலகசீர்த்திருத்தம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபட்டதே ஆகும். ஆம், இவர்கள் பஹாய்கள் ஆவர். அதுதான் அவர்கள் இழைத்த குற்றம்.
தாஹிரி சீயாவுஷீயை ஷிராஸில் வஹ்டாட்களின் இல்லத்தில் 1977-இல்தான் முதல் முதலில் சந்தித்தேன். அடுத்து நாங்கள் இருவரும் சந்தித்தது, ஐந்து வருடங்களுக்குப் பிறகு சேப்பா சிறைச்சாலையின் இருண்ட சில்லிட்ட அறை ஒன்றில் தாஹிரி என்னை அன்புடன் கட்டித் தழுவிய போதே. தாஹிரியும் அவளது கனவரான ஜம்ஷிட் இருவரும் ஒன்றாகவே கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக அனுபவித்த கொடுமைகளைப் பின்வருமாறு தாஹிரி விவரித்தாள்:

1977-இல், ஜம்ஷிட்டும் நானும் யசூஜிற்கு நகர முடிவெடுத்தோம். 1978 இரானிய புரட்சியின் ஆரம்பத்தில் நாங்கள் தாக்கப்பட்டோம். எங்கள் வீடு, உடமைகள் மற்றும் ஜம்ஷிட்டின் புதியக் கடை அனைத்தும் அபகரிக்கப்பட்டன. நான் தாதி வேலை செய்து வந்த மருத்துவ மையத்திலிருந்தும் வேலை நீக்கம் செய்யப்பட்டேன்.

அதன் பிறகு கையில் ஒரு காசு கூட இல்லாத நிலையில் ஷிராஸ் திரும்பினோம். கையில் ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையை மறுபடியும் அமைக்க ஆரம்பித்தோம். சிறிது காலத்திற்கு நிலைமை மிகவும் மோசமாகவே இருந்தது. ஆனாலும் இருந்ததைக் கொண்டு மனநிறைவு அடைந்தோம். நான் பல மருத்துவ நிலையங்களில் வேலைத் தேடினேன். என் சேவைத் தேவைப்பட்டபோதும், நான் பஹாய் எனும் காரணத்தினால் அங்கு என்னை வேலைக்கு அமர்த்திக் கொள்ள மறுத்துவிட்டனர்.
பல மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் ஒரு தனியார் மருத்துவ மையத்தில் எனக்கு வேலை கிடைத்திருந்தது. ஜம்ஷிட்டும் துனிக் கடை ஒன்றை ஆரம்பித்திருந்தார். ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டு, நான்கு வருடங்களாகச் சொந்த வீடு இல்லாத நிலைக்குப் பிறகு சொந்தமாக ஒரு இடத்தைப் பெறும் நிலையில் இருந்தோம். போன வாரம்தான் ஒரு குளிர்சாதனப் பெட்டி, படுக்கை, மற்றும் சிறு சிறு பொருட்கள் என சிலவற்றை வாங்கினோம். ஆனால் இந்த சிலவற்றைக் கூட நாங்கள் பெற்றிருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். இப்போது நாங்கள் இருவரும் இங்கு சிறையில் இருக்கின்றோம். அக்டோபர் மாத இருதியில், இரவு நேரத்தில், வீதியில் ஜம்ஷிட் கைது செய்யப்பட்டு நேராக சேப்பா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இரவு சுமார் 10 மணியளவில் அவர் எங்கள் வீட்டிற்குக் கொண்டுவரப்பாட்டார். அவரைப் பார்த்துத் திடுக்கிட்டேன். அவர் வெடவெடவென்று நடுங்கி, நிற்கக்கூட முடியாமல் இருந்தார். அவரை அவர்கள் என்ன செய்துவிட்டனர் என்பதை அறிய அவர் அருகே விரைந்தேன், ஆனால் அவர்கள் எங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனராகையால் நான் அவரிடம் அதிகமாக எதையும் கேட்கவில்லை. அவர்கள் பஹாய் பதிவேட்டிற்கும், பஹாய் நிதிகளைப் பறிமுதல் செய்வதற்காகவும் வந்திருக்க வேண்டும் என யூகித்தேன். ஜம்ஷிட் பதிவேடு மற்றும் நிதி இரண்டையும் தமது கையில் வைத்திருந்தார் ஆனால் புரட்சிக் காவலர்களிடன் அவற்றை ஒப்படைக்க மறுத்துவிட்டார். மற்ற பஹாய்களின் பெயரைப் பெற அவரை அவர்கள் நிச்சயமாகச் சித்திரவதை செய்திருக்கவேண்டும். எங்கள் இருவரையும் பயமுறுத்த எங்கள் இருவரையும் பிரித்து என்னை ஒர் அறையில் அடைத்து வைத்தனர். அவர்கள் ஜம்ஷிட்டிடம், “பதிவேட்டையும் பணத்தையும் கொடுக்கப்போகிறாயா அல்லது இங்கேயே உன்னைக் கொல்ல வேண்டுமா?” என பயமுறுத்துவது எனக்குக் கேட்டது. நான் பெரும் பீதிக்குள்ளானேன்; அவர்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்திருந்தனர். நான் அலறியவாறு கதைவைக் கைகளால் பலமாகத் தட்டினேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்காதிருக்கும் பொருட்டு அவர்கள் கதவைத் திறந்து என்னை வேளியே விட்டனர்.

அவர்களின் தாக்குதலை எதிர்க்கவேண்டும் எனும் தீர்மானம் ஜம்ஷிட்டின் முகத்தில் நன்குத் தெரிந்தது. ‘அதாஹிரி, நான் அஹமதுவிடம் அந்த பதிவேட்டைக் கொடுத்தேன் ஆனால் அவர் எங்கு வைத்துவிட்டாரோ தெரியவில்லை,’ என்றார்
உண்மையில் அந்த புத்தகத்தை ஜம்ஷிட் பாதுகாப்பாக வைத்திருந்தார். தம் உடன்பிறந்தவரிடம் அதை ஒப்படைத்தும், அப்படித் தாம் கைது செய்யப்ப்டடால் அதை எடுத்து நம்பிக்கையான ஒருவரிடம் அதை ஒப்படைக்கும்படியும் கூறியிருந்தார். இதன் மூலம் பஹாய்களின் பெயர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். நான் அமைதியாக இருந்தேன். அவர் மிகுந்த வேதனையோடு பெருமூச்சு ஒன்றை விட்டார். அவர் தமக்குள் நடத்திய போராட்டத்தினால் அவரது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. ஒரு புரம் உள்ளூர்ப் பஹாய்களைப் பாதுகாத்திடும் பொருட்டு அவர் சிறையில் சித்திரவதை அனுபவிக்க வேண்டும், மறுபுறம் அவர் நேர்மையாக இருக்கவேண்டும் எனும் நம்பிக்கையினால் பொய் சொல்ல அஞ்சினார். காவலர்கள் முன்னிலையில் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காவலர்களின் முன்பாகவே ஜம்ஷிட்டை நோக்கிச் சென்றேன். அவரது கையைப் பற்றி அவர் நடப்பதற்கு உதவி செய்தேன். ஒரு பார்வையிலேயே பதிவேடு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதையும் அஹமது நகரத்தை விட்டு வெளியேறிவிட்டதையும் தெரிவித்தேன்.

பதிவேட்டை காண முடியாத காவலர்கள் ஜம்ஷிட்டை மறுபடியும் சிறைக்கே கொண்டு சென்றனர். ஒரு மாதம் கழித்து, அவர்கள் திரும்பி வந்து என்னையும் கைது செய்தனர். என் மேல் சாற்றப்பட்ட குற்றச் சாட்டு நான் பஹாய்ப் பதிப்பகக் குழுவில் அங்கம் வகித்தேன் என்பது.

தாஹிரிக்கும் அவளது கனவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகியிருந்தன. அவ்விருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தனர். தாஹிரிக்கு முப்பது வயதும் ஜம்ஷிட்டுக்கு முப்பத்தி நான்கு வயதும் ஆகியிருந்தது. அவர்களுக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை. சிறையில் தாஹிரி சதா ஜம்ஷிட்டின் பெயரை உச்சரித்து அவருக்காக ஏங்கி அழுது கொண்டிருப்பாள். பல மணி நேரங்கள் அவ்விருவருடைய உறவைப் பற்றியும் ஜம்ஷிட்டின் பழக்க வழக்கங்கள் பற்றியும் கதை சொல்லிக் கொண்டிருப்பாள். ‘ஓல்யா,’ என என்னை அழைத்து, ஜம்ஷிட்டை கொலை செய்து விடுவார்கள் என எனக்குப் பயமாக இருக்கின்றது, அவர் இல்லாமல் என்னால் வாழ இயலாது,’ என்றாள்.

அவள் தன் உயிரைத் தன் கணவனுக்காகத் தியாகம் செய்ய விரும்புவதாக எப்போதும் கூறிக்கொண்டிருப்பாள். தாஹிரியின் தியாக உணர்வும் அன்பும் பிரமிக்கச் செய்வதாக இருந்தது. அந்த மோசமான நிலையிலும் அவள் எல்லோரையும் கவனித்தும் எல்லோருக்கும் தன்னாலான உதவிகளையும் செய்து வந்தாள்.

சிறையில் பலர் அடிக்கடி நோய் வாய்ப் பட நேர்ந்தது. ஆனால் அங்கிருந்த வசதிக் குறைவுகளினால் ஒரே தட்டிலிருந்து கைகளாலேயே உண்ண வேண்டியிருந்தது. ஒரு நோயாளியோடு ஒரே தட்டிலிருந்து உண்ணுவது எனக்குக் குமட்டலை ஏற்படுத்தும் என்பதை தாஹிரி உணர்ந்திருந்தாள். அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், அவள் என்னைப் பார்த்து, ‘ஓல்யா, நாம் இருவரும் இடம் மாற்றிக் கொள்ளலாமே?’ என்பாள்

நாங்கள் குளிக்கும் போது அவள் எங்கள் துணிகளைத் துவைப்பதற்கு முன்வருவாள். முதல் சில வாரங்களில் எங்களுக்குப் போட்டுக் கொள்வதற்கு ஒரே ஒரு உடை மட்டுமே இருந்தது. பல நாட்ளுக்குப் பிறகே எங்கள் குடும்பத்தினர் எங்களுக்கு மாற்று உடை கொண்டு வர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தாஹிரி தான் கைது செய்யப்பட்ட போது மிகவும் சமயோசிதமாக ஒரு மாற்று உடையைத் தன்னோடு கொண்டு வந்திருந்தாள். அன்றிரவு காவலர்கள் அவளுடைய வீட்டிற்கு வந்த போது மாற்று உடைகளும் குளியல்பொருட்கள் சிலவற்றையும் அவள் முன்யோசனையுடன் ஒரு பையில் எடுத்து வைத்திருந்தாள்.
ஆனால் என் (ஓல்யா) நிலையோ, நான் கைது செய்யப்பட்ட நாளன்று சிறைக்குள் எனக்குத் தேவையான பொருட்களை என்னுடன் கூட எடுத்த வருவதற்கு அனுமதி கேட்ட போது காவலர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகே, அதுவும் பல முறை கெஞ்சிக் கேட்ட பிறகே, என் கனவர் எனக்குத் தேவையான சில பொருட்களைக் கொண்டு வர அனுமதிக்கப்பட்டார். அந்த வேளைகளில் நான் குளித்து என் உடையைத் துவைக்கும் போது தாஹியிரியின் உடையையே உபயோகப் படுத்த வேண்டியிருந்தது. எங்கள் விசாரணைகளின் போது நாங்கள் மொத்தமான காலுறைகளும், காற்சட்டைகளும், நீண்ட தளர் மெய்யங்கிகளும், முக்காடும், சடுர் எனப்படும் கறுப்பு உடையும் தரித்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், நாங்கள் கைது செய்யப்பட்டபோது சாதரண உடைகளே போட்டிருந்ததால் காலில் சாதரண மெல்லிய காலுறைகளே அனிந்திருந்தோம். தாஹிரி இரண்டு ஜோடிக் காலுறைகள் வைத்திருந்தாள். முதல் வாரத்தில் நாங்கள் அவளுடைய காலுறைகளேயே அனிந்து செல்வோம். ஒரு முறை நான் திடீரென விசாரனைக்காக அழைக்கப்பட்டேன். அப்போது தாஹிரி தான் அனிந்திருந்த காலுறைகளைக் கலற்றி என்னிடம் கொடுத்தாள். அப்போது நான், “ஒரு வேலை உன்னை அவர்கள் திடீரென அழைத்தாள் நீ என்ன செய்வாய். காலுறைகள் இல்லாமல் நீ அவதிப்படுவாய்,” என்றேன்.
‘பரவாயில்லை, நீ இதை இப்போது அனிந்த செல்,’ எனத் தாஹிரி கூறினாள்.’

விசாரனை முடிந்து திரும்பியவுடன் நான் தாஹிரியின் காலுறைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு எங்கள் விசாரனைக் குறித்தும் நாங்கள் படும் அவஸ்தைக் குறித்தும் பேசினோம். அப்போது தாஹிரி திடீரென என்னிடம் ‘ஓல்யா, இந்த காலுறைகளை நான் உன்னிடமே கொடுக்கப்போகின்றேன் எனக் கூறினாள்.’

‘தாஹிரி, எப்போதாவது ஒரு நாள் நான் இங்கிருந்து வெளியேறினால், நீ கொடுக்கும் இவற்றை உன் ஞாபகார்த்தமாக நான் என்றென்றும் என்னுடன் வைத்திருப்பேன் என்றேன். நமது துன்பம் நிறைந்த இந்த நாட்களையும், உன்னுடையத் தியாங்கள் அனைத்தையும் அவை எனக்கு ஞாபகப்படுத்தும். அந்த நேரத்தில் நான் விடுதலையாவேனா இல்லையா என்றே தெரியவில்லை. ஆனால், இப்போது தாஹிரி கொடுத்த அந்த காலுறைகளை நான் பொக்கிஷங்களாக மதிக்கின்றேன்.
தாஹிரியின் விசாரனை எங்களுடன் சேர்த்துச் செய்யப்படவில்லை. ஒரு நாள், அவள் விசாரனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள், ஆனால், மீண்டும் அறைக்குக் கொண்டுவரப்படவில்லை. அவளுக்கு என்னவாயிற்றோ என நாங்கள் கதிகலங்கிப்போனோம். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அரசியல் கைதி ஒருவர் எங்கள் அறைக்குக் கொண்டு வரப்பாட்டார். அவர், தாஹிரி தனியறைச் சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். எங்களைப் பயப்படுத்துவதற்குச், சிறைக் காவலர்கள் எங்களில் யாரையாவது எங்கள் பொது சிறையறையிலிருந்து கொண்டு போய் தனியறைச் சிறையில் அடைப்பதுண்டு. பத்துத் பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு தாஹிரியை மறுபடியும் எங்கள் அறையிலேயே கொண்டு வந்த அடைத்தனர். அந்ந நாட்களில் தான் மிகவும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தாஹிரி தெரிவித்தாள். ஆனாலும், ஜம்ஷிட்டைப்பற்றியும் தன்னைப்பற்றியும் தவிர வேறு எவரைப்பற்றியும் தான் எவ்விதத் தகவலையும் அவர்களுக்கு வெளியிடவில்லையென தாஹிரி தெரிவித்தாள்.

முடிந்தபோதெல்லாம், எங்கள் அறைக்குள் நாங்கள் ஒன்றுகூடி, மனவேதனைகளை மறந்திருக்க வேடிக்கையாக எதையாவது பேசியும், சிரித்துக்கொண்டும், இருப்போம். கூறுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஏதாவது இருக்கும். குறிப்பாக, தாங்கள் கொலையுறப்போவது குறித்து அனைவருமே எதையாவது சொல்வார்கள். தாஹிரி அதைப்பற்றி வேடிக்கையாக எதையாவது கூறுவாள். “யா பஹாவுல்லா, தயவு செய்து என்னை மட்டும் இதற்குத் தேர்ந்தெடுக்காதீர்கள். நான் உயிர்த்தியாகியாக விரும்பவில்லை. நான் ஒரு பஹாயாக இருந்து உயிர் வாழவே விரும்புகிறேன்.” அவ்வாறு கூறிவிட்டு மெல்லச் சிரித்து, “யா அப்துல் பஹா, நான் உயிர்த்தியாகியாக விரும்பவில்லை. அது வலுக்கட்டாயமானது இல்லை தானே?  ஜம்ஷிட்டின் கரத்தை என் கரத்தில் வைத்து எங்கள் இருவரையும் ஒன்றாக வாழ விடுவீர்கள் என்பதே என் ஆசை. நாங்கள் இருவரும் ஒன்றாகவும் பஹாய்களாகவும் இருக்கும் வரை, தெருவோரத்தில் குடிசையில் வாழ்வதானாலும் பரவாயில்லை.” என வேண்டிக்கொள்வாள்.
எங்கள் மரணச் செய்தி கேட்டு நண்பர்களும் உறவினர்களும் எவ்வாறு பதபதைப்பார்கள் என்பதை ஒரு சில அன்பர்கள், நடித்துக்காட்டி எங்கள் எல்லோரையும் சிரிக்க வைப்பார்கள். ஆனால் தாஹிரி மட்டும் சிரிக்க மாட்டாள். “இந்த வெறி பிடித்த மனிதர்கள் நம்மேல் வைத்துள்ள தப்பபிப்ராயத்தால் நம் எல்லோரையுமே கண்டிப்பாக கொல்லப்போகின்றனர்.” தாஹிரிக்குத் தான் கொல்லப்படப்போவது ஆரம்பித்திலிருந்தே தெரிந்திருந்தது போலும். ஆனால், அவள் சிரித்துக்கொண்டே, “கேளுங்கள், அவர்கள் நம்மை தூக்கிலிடும்போது நமது நாக்குகள் தொங்கிப்போகாமல் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லையெனில் பார்ப்பதற்கு மிகவும் கோரமாக இருக்கும். ஆகவே, வாயை நன்கு மூடிக்கொண்டு புன்னகைத்த வண்ணமாக இருங்கள்.” என்றால்.

பல நேரங்களில் நான் சிறிது மறந்திருந்தாலும் அவள் எனது தற்போதைய ஆசீர்வாதங்களை ஞாபகப்படுத்துவாள். ‘நாம் இனி கவலைப்படத் தேவையில்லை. முன்பெல்லாம் இந்த புரட்சிப் படையினர் எப்போது நமது வீட்டுக் கதவைத் தட்டி நம்மை கைது செய்வார்களோ எனும் பதபதைப்பு இருந்துக் கொண்டே இருக்கும். ஆனால் இப்போது நமக்கு அந்த பயம் இல்லையல்லவா.’ என்பாள்.

வருகையாளர்கள் தினங்கள் தாஹிரிக்கு மிகவும் சிறமமிக்க நாட்களாக விளங்கின. ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விடுவாள். அவளது கனவனின் சகோதரராகிய அகமது, கர்ப்பமான தனது மனைவியையும் குழந்தைகளையும் விட்டு ஷிராஸ் நகரைவிட்டுத் தப்பியோட வேண்டியதாயிற்று. ஆனால் அந்தப் பெண்மனி தனது இரு குழந்தைகளோடும் கையில் பழங்கள் நிறைந்த பைகளுடனும், துணிகளுடனும், பணத்துடனும், தாஹிரியையும் அவளது கனவரையும் சந்திக்க வருவாள். அங்கு சிறை வாசலில் 7 அல்லது 8 மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். காவலாளிகளின் ஏச்சையும் பேச்சையும் திட்டல்களையும் கொச்சை வார்த்தைகளையும் செவிமடுக்க வேண்டும். அதுவும், கண்ணாடித் தடுப்பின் வழி அந்த 10 நிமிடங்களுக்கும் குறைவான நேர சந்திப்பிற்காகவே. இது ஒவ்வொரு முறையும் தாஹிரியின் இதையத்தைக் கசக்கிப் பிழிந்துவிடும். ‘அந்தப் பெண்ணின் தியாகமும் தன்னலமின்மையும் என்னை நானிக் குறுகச் செய்கின்றன’ என அவள் கூறுவாள்.

ஜம்ஷிட் ‘சமாரிட்டான்’ குழுவின் அங்கத்தினர் எனவும், அவர் ஜோர்தானில் பிறந்தவர் எனவும் காவலர்கள் அறிந்த போது, அவரைப் பிறரைக்காட்டிலும் அதிகமாக துன்புறுத்தவாரம்பித்தனர். அவரை எழுபது நாட்கள் சேப்பாவில் தனிச்சிறை வைத்தனர். தாஹிரியும் ஜம்ஷிட்டும் ஒருவர் மேல் ஒருவர் தங்கள் உயிரையே வைத்திருந்து காவலர்களுக்குத் தெரியும். இதை அவர்கள் உபயோகப்படுத்தி ஒருவரிடம் மற்றவர் சமயத்தைத் துறந்துவிட்டதாகப் பொய் சொல்வார்கள். ஆனால், அது எப்போதுமே வேலை செய்ததில்லை. தாஹிரியிடம் இந்தக் கதையைச் சொல்லும் ஒவ்வொரு தடவையும் அவள், ‘நான் பஹாய்’ என்பாள்.

நீ அவரது மனைவி அல்லவா?’ என அவர்கள் வினவுவார்கள்.

‘நம்பிக்கை என வரும்போது ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மாவுக்கு அவர்களே பொறுப்பாளிகள்’ என தாஹிரி கூறிவிடுவாள்.
விசாரனை செய்பவர், தாஹிரியின் மனோ தைரியத்தினால் மிகவும் சினமுற்று விசாரனை அரைக்கு அவளைக் கொண்டு சென்று, ‘நீ உன் சமயத்தைத் துறக்காவிடில் ஜம்ஷிட்டைச் சாகும் வரை துன்புறுத்த ஆனையிடுவேன்’ எனக் கூறுவார்.
‘நான் பஹாய். சாகும் வரை நான் அவ்வாறே இருப்பேன்,’ என அவள் தைரியமாக பதிலளிப்பாள். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் என் சமயத்தைத் துறக்கப்போவதில்லை.’

‘உன் ஜம்ஷிட்டை நாங்கள் என்ன செய்துவிட்டிருக்கிறோம் என்பதை மட்டும் நீ அறிந்தால். அவரை நீ இப்போது பார்த்தால் அடையாளமே தெரியாது. உனக்கு உன் ஜம்ஷிட் சிறிது கூட மீதமில்லாமல் செய்துவிட்டோம்’ என விசாரனை செய்யும் காவலர் கூறினார்.
ஜம்ஷிட் மீது உயிரையே வைத்திருந்த தாஹிரி, அது கேட்டு ஜம்ஷிட்டின் நிலை குறித்து தனக்குத் தெரிவிக்குமாறு காவலாளியைக் கெஞ்சினாள். அப்போது அவர்கள் ஜம்ஷிட்டை அந்த அரைக்குள் கொண்டுவந்து அவர்கள் இருவரையும் 15 நிமிடங்கள் சந்திக்க விட்டனர். அதன் பின் அவள் சிறைக்குத் திரும்பி வந்தாள். வரும்போது மேனியெல்லாம் நடுங்க அழுதுகொண்டே வந்தாள்.

அவர்கள் ஜம்ஷிட்டைத் கைத்தாங்கலாக அறைக்குள் கொண்டுவந்தனர். அவரைப் பார்த்தவுடன் நான் அலறிவிட்டேன். அவர் வெறும் எலும்பும் தோலுமாகப் பேயைப் போல் நின்றார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. அவரது கால் நகங்களிலிருந்து இரத்தமும் சீழும் வடிந்துகொண்டிருந்தது. ஆனால் அவர் ஆன்மா திடமாகவே இருந்தது. அவர் என்னைத் தேற்றியவாறு, ‘தாஹிரி, என்னைப்பற்றி கவலைப்படாதே. நான் உயிர்வாழ்வேன்,’ என்றார்.

நான் அதற்கு, ‘ஜம்ஷிட் உம்மை அவர்கள் கொன்றுவிட்டால் நாம் அடுத்த உலகில் சந்திப்போம். அங்கு நாம் ஒன்றாக இருக்கலாம்.’ அப்போது, ஜம்ஷிட் ஏதோ என்னிடம் சொல்ல விரும்புவதாக உணர்ந்தேன். ஒருவேலை நான் விடுதலையாகி வெளியே சென்றால், அவர் கூறக்கூடிய விஷயங்களைத் தேசிய ஆன்மீக சபையிடம் தெரிவிக்கவேண்டும் என விரும்பியிருக்கலாம். அவர் தமது சட்டையின் பின்புறத்தைத் தூக்கித் தமது முதுகைக் காண்பித்தார். அவர் வாங்கியச் சாட்டை அடிகள் அவரது முதுகெலும்பைப் புறையோடச் செய்திருந்தன. விசாரனைச் செய்பவர் முன்னிலையிலேயே, ‘தாஹிரி, நான் எழுபது நாட்கள் சித்திரவதைகளும் எழுபது நாட்கள் தூக்கமின்மையையுைம் அனுபவித்துவிட்டேன். இதற்கு மேலும் இச்சகோதரர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்றே தெரியவில்லை. பகலில் என்னைச் சித்திரவதை செய்கிறார்கள். இரவில் என்னைத் தூங்கவிடுவதில்லை. ஷிராஸ் நகரப் பஹாய்களின் பெயயர்ப் பதிவேடும் அவர்கள் விலாசங்களும் வேண்டுமெனக் கேட்கின்றார்கள், முக்கியமாக உள்ளூர் ஆன்மீகச் சபை அங்கத்தினர்களின் பெயர்களையும் விலாசங்களையும் கேட்கின்றார்கள். என்னைத் தவிர சபை அங்கத்தினராக இருந்த வேறு எவரையும் எனக்குத் தெரியாது எனக் கூறினாலும் நம்ப மறுக்கின்றனர். வறிய நிலையில் இருந்த பஹாய்களுக்கு நான் உதவி செய்ததாகவும், அப்படி நான் செய்யாதிருந்திருந்தால் அவர்கள் இந்நேரம் இந்த நாட்டின் சமயத்தைத் தழுவியிருப்பார்கள் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். சண்டையிலும் நிலநடுக்கத்திலும் பாதிக்கப்பட்ட எல்லா சமய சகோதரர்களுக்கும் பஹாய்கள் வழங்கிய நான்கு லாரி உதவிப் பொருட்களுக்கான ரசீதை இவர்களிடம் கொடுத்துவிட்டேன். இதிலிருந்தே நாம் தேவைப்படுவோர் யாருக்கும் பேதமில்லாமல் உதவுகின்றோம் என்பது தெரிந்திருக்கும். நிற, சமய வேறுபாடில்லாமல் எல்லோருக்கும் உதவவேண்டும் என்பது நமது நம்பிக்கையல்லவா. இவர்களிடம் ஒரு துளி நீதி இருந்திருந்தாலும் அது நாம் குற்றமற்றவர்கள் என்பதை அவர்களுக்கு நிரூபித்திருக்கும்.

அப்போது ஒரு காவலாளி, ‘நீர் பொய் கூறவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். இப்போது உம்மைச் சிறிது நேரம் வெளியே தூய்மையான காற்று படும்படி கொண்டுசெல்கிறோம்,’ என்றார்.

தனி அறைச் சிறைக் கைதிகள் காற்றுப் புகாத அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு, தூய்மையான காற்றுக்கு ஏங்கிய போதிலும், சிரமமில்லாவிடில், ஜம்ஷிட், தாம் பொதுச் சிறை அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமது தோழர்களைச் சந்திக்கவே விரும்புவதாகக் கூறினார். அதுவே தமக்குப் பெரும் சந்தோஷமளிக்கக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
அப்போது நான், ஜம்ஷிட்டின் கைகளிலும் கழுத்திலும் ஆழமானக் காயங்கள் இருப்பதைக் கண்ணுற்றேன். அவை என்னவென நான் வினவினேன். அதற்கு காவலாளி ஒருவர், ‘ஜம்ஷிட் கெட்ட பையன், அவன் இருமுறை தற்கொலை முயற்சியில் இறங்கினான்,’ எனக் கூறினார்.

‘தாஹிரி,’ என என்னை ஜம்ஷிட் விளித்தார், ‘என்னை மன்னித்துவிடு, ஆனால், தனிச் சிறையடைப்பில் இவ்வளவுச் சித்திரவதைகளையும், உடல் மற்றும் மனோ ரீதியில் நான் பட்ட கொடுமைகளையும் என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. சில நேரங்களில் இவ்வளவு காலம் சென்றும் நமக்குக் குழுந்தைகள் இல்லையென்பது குறித்து என்னை மிகவும் கீழ்த்தரமாகக் கிண்டல் செய்தனர். ‘இந்த நிலைக்குக் காரணம் நீயா அல்லது நானா எனவும் கேட்கின்றனர்.’ அல்லது நடு இரவில் என்னை எழுப்பி அவர்களோடு சென்று பஹாய்களின் இல்லங்களைச் சுட்டிக் காட்ட வெண்டும் எனவும் கூறுகின்றனர்.’

அடுத்த நாள் அவர்கள் ஜம்ஷிட்டை அழைத்துக்கொண்டு தாஹிரியைக் காண வந்தனர். இம்முறை அச்சந்திப்பிற்குப் பிறகு தாஹிரி புன்னகைத்தவாறு வந்தாள். ‘இங்கிருந்து ஜம்ஷிட்டுக்கு நான் ஏதாகிலும் கொண்டு செல்ல முடியுமா?’ எனக் களிப்புடன் விசாரித்தாள். நேற்று நடந்ததில் காவலாளிகளுக்கு ஜம்ஷிட் மேல் சிறிது கருணை பிறந்துள்ளது என நான் நினைக்கின்றேன். அவரைத் தனி அறையிலிருந்து பொது அறைக்குக் கொண்டுவந்துவிட்டனர். தனிச் சிறையில் இருந்தவரை அவர் பழங்கள் எதையுமே காணததால் நான் அவருக்குப் பழங்கள் ஏதும் கொண்டுச் செல்லலாம் எனவும் கூறினர்’ என்றாள்
நல்ல வேளை, அன்று எங்களிடம் பழங்கள் கொஞ்சம் இருந்தன. அவற்றில் சிலவற்றை எடுத்துக்கொண்டு ஜம்ஷிட்டைக் காண தாஹிரி சென்றாள். சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், பழங்களோடு திரும்பி வந்தாள். ‘இக்காவலாளிகள் நம்மோடு விளையாடுகிறார்கள். நாம் இவர்களின் கைப்பொம்மைகள். நம்மைச் சித்திரவதைப்படுத்தி அவர்கள் மகிழ்கின்றார்கள். அவர்களின் தயவின் கீழ்தான் நாம் இருக்கின்றோம்,’ என மனம் வெதும்பிக் கூறினாள்.

அதற்குப் பிறகு, அடிலபாட் சிறைக்குத் தாஹிரி மாற்றலாகி சென்று இரண்டு வாரங்கள் கழித்து, அவள் தனது இறுதிச் சுற்று விசாரணைக்குச் சென்ற நாள் எனக்கு நன்கு நினைவில் இருக்கின்றது. அன்று மாலை அவள் சிறைக்குத் திரும்பியபோது, அறைக்குள் அவள் மிகுந்தச் சாந்தத்துடனும் கம்பீரமாகவும்  நடந்து வந்தாள். களிப்பு நிறைந்த முகத்தில் புன்னகை தவழ்ந்தது. முகம் பிரகாசித்தது. ‘தாஹிரி, என்ன நடந்தது? ஏன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றாய்?’ என நான் வினவினேன்.
அவள் மிகவும் சாந்தத்துடன், ‘இவ்வளவு நாட்கள் அவர்கள் ஜம்ஷிட்டை மட்டுமே கொல்லப்போகின்றார்கள் என நான் நினைத்துவந்தேன். ஆனால், இன்று நீதிபதி என்னையும் சேர்துக் கொல்ல ஆணை பிறப்பித்துவிட்டார். எனது இப்பயணத்தில் நான் என் கணவருடன் சேர்ந்தே செல்லப்போகின்றேன்.’ என்றாள் தாஹிரி.

அந்த நாளுக்குப் பிறகு அவள் அழுதோ கவலைப்பட்டோ நான் பார்க்கவில்லை.
அவளது இறுதி ஆசையும் சிறிது நாட்களில் நிறைவேறியது. அப்ஹா இராஜ்ஜியத்தில் அவளும் அவளது கனவனும் ஒன்றிணைந்தனர்.

அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனும்


அமாத்துல் பஹா ரூஹிய்யா கானும் (1910-2000)

ruhiyyih-khanum

கடந்த 19-1-2000ல் நமது இதயமெல்லாம் கொள்ளை கொண்ட அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனும் அவர்கள் காலமானார். இதனைத் தொட்டு மதிப்புக்குரிய உலக நீதி மன்றம் அன்னவருக்கான நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்தும்படி உலக பஹாய்களைக் கேட்டுக் கொண்டது. உலக அளவில் பல நினைவாஞ்சாலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வேளையில் அமாத்துல் பஹா அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்களில் இருந்து சிலவற்றைக் காண்பது பொருத்தமாக இருக்கும்.

கடவுள் சமயத் திருக்கரம்

அமாத்துல் பஹா அவர்கள் நமது மதிப்புக்கும் பேரன்புக்கும் உரிய பாதுகாவலரின் துணைவியார் மாத்திரமல்லர். அவர் புனிதக் குடும்பத்தின் கடைசியானவரும் கூட. அதோடு அவர் கடவுள் சமயத் திருக்கரமும் கூட. இந்தக் கடவுள் சமயத் திருக்கரங்களைப் பற்றி பஹாவுல்லா இவ்வாறு கூறுகிறார்.

“எவரின் வாயிலாக ஆழ்ந்த துன்பம் எனும் ஒளி ஜொலித்ததோ, சக்தியுடையோனும், வல்லமையுடையோனும், சுதந்திரமுடையோனுமாகிய இறைவனால் அதிகாரம் என்னும் பிரகடனம் நிரூபிக்கபட்டதோ; மற்றும் எவரின் வாயிலாக வழங்குதல் என்னும் கடல் அசைந்து, மனித குலத்தின் பிரபுவாகிய கடவுளின் சகாயம் என்னும் தென்றல் வீசப்பட்டதோ, அந்தத் தம்முடைய சமயத்தின் திருக்கரங்களின்மீது ஒளியும், மகிமையும், வாழ்த்தும் போற்றுதலும் குடிகொள்ளட்டுமாக.”

பஹாவுல்லாதான் கடவுள் சமய திரக்கரங்கள் என்னும் ஸ்தாபனத்தை உருவாக்கினார். அவர் பாரசீக நம்பிக்கையாளர்களின் மத்தியில் இருந்து நால்வரை கடவுள் சமயத் திருக்கரங்களாக நியமித்தார். அப்துல் பஹா நேரடியாக தெய்வச் சமயத் திருக்கரங்களை நியமிக்காவிட்டாலும் கூட, அவர் பஹாவுல்லாவின் மற்ற நான்கு நம்பிக்கையாளர்களையும் கடவுள் சமயத் திரக்கரங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இருந்தும் அப்துல் பஹாவின் உயிலும் மரண சாசணமும் என்னும் ஏட்டின்படி, கடவுள் சமயத் திருக்கரங்களை நியமிக்கின்ற அதிகாரம் பாதுகாவலருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தின்படி, பாதுகாவலர் மொத்தம் 42 கடவுள் சமயத் திருக்கரங்களை நியமித்தார். அதன்படி, பஹாய் சமயத்தில் மொத்தம் 50 கடவுள் சமயத் திருக்கரங்கள் நியமிக்கப்பட்டனர். அமாத்துல் பஹாவின் நியமனம் 1952-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி செய்யப்பட்டது. (அமாத்துல் பஹா அந்த நியமனத்தை எவ்வளவோ மறுத்தும் கூட பாதுகாவலர் அந்த மறுப்பை ஏற்பதாக இல்லை)

பாதுகாவலர் இந்த கடவுள் சமயத் திரக்கரங்களை “பஹாவுல்லாவின் கரு வடிவிலான உலகப் பொதுநல அரசின் பிரதான பராமரிப்பாளர்கள்” எனவும் “அதன் உயர் ஸ்தானம் கொண்ட அலுவலர்கள்” எனவும் வருணிக்கிறார். அவர்களின் பொதுவான பணிகள் இரண்டு. முதலாவதாக சமயத்தைப் போதித்தல், அடுத்தது சமயத்தைப் பாதுகாத்தல் ஆகும். பாதுகாவலர் கடவுள் சமயத் திருக்கரங்களை 1951-ஆம் ஆண்டு முதல் 1957-ஆம் ஆண்டு வரைக்கும் அவர்களுக்கு நேரடியான வாழிகாட்டுதலுக்கான சில அளவு கோல்களை வைத்திருந்தார். சமயத்திற்குச் சேவை செய்வதில் அவர்கள் காண்பித்த அர்ப்பணம் மற்றும் திறனாற்றலைக் கொண்டு அவர்களைப் பாதுகாவலர் நியமித்தார். அந்த வகையில், அமாத்துல் பஹா ரூஹிய்யா காஃனுமை கடவுள் சமயத் திருக்கரமாக நியமித்த போதும்கூட, அன்னவரிடம் இருந்த அர்ப்பணம் மற்றும் திறனாற்றலைப் பாதுகாவலர் உணராமல் இல்லை. அமாத்துல் பஹா வாழ்ந்த வாழ்க்கையையும், அவர் ஆற்றிய சேவைகளையும் காணும் போது பஹாய் உலகமே வியப்பில் மூழ்கும். அமாத்துல் பஹாவின் சேவைகளைக் காலக் கறையான்கள் அரித்திடப் போவதில்லை, அவற்றை பஹாய் உலகமும் மறதிக்கடலில் கறைக்கப்போவதில்லை. அவரின் நினைவு நித்தியமாக நிலைத்திருக்கும்.

பிறப்புப் வளர்ப்பும்

மே எல்லிஸ் போல்ஸ் என்பவர்தான் ரூஹிய்யா கானுமின் தாயார். அவர் சமயத்தின் தொடக்ககாலத்து சேவகிகளில் ஒருவரான லுவா கெட்சிங்கரின் வழியாக சமயத்தை ஏற்றுக்கொண்டார். 1898-ஆம் ஆண்டில் சில பஹாய்கள் ஒன்று கூடி அக்கா நகருக்குப் புனித யாத்திரை மேற்கொண்டனர். அவர்களுள் மே எல்லிஸ் போல்ஸ் அவர்களும் அடங்கினார். அவர்கள் யாவரும் 1898-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் அக்காநகர் வந்து சேர்ந்தனர். புனித யாத்திரை முடிந்தபின்னர் அந்த அம்மையார் பிரெஞ்சு நாட்டின் தலைநகரில் தங்கினார். 1902-ஆம் ஆண்டில் கேனடா நாட்டின் வில்லியம் சதர்லாண்ட் மேக்ஸ்வெல் என்னும் கட்டிடக் கலைஞரை மணந்தார். திரு வில்லியம் அவர்கள் கிஹிஸ்த்துவ சமயத்தின் கத்தோலிக்கப் பிரிவின் பாதிரியார் ஆவார். திருமணம் புரிந்த போதெல்லாம் மே எல்லிஸ் போல்ஸ் அவர்கள் சமயத்தை ஏற்றுக்கொண்டவராக இருந்தாலும்கூட திரு வில்லியம் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தத் தம்பதிகளுக்குக் குழந்தைச் செல்வமே இல்லை. 1909-ஆம் ஆண்டில் அந்த அம்மையார் இரண்டாவது முறையாக அக்காநகருக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார். இந்த முறை தம் கணவரும் உடன் வந்தார். அப்போது அவர்கள் பாதுகாவலரைக் குழந்தையாகக் கண்டனர். அப்போது எல்லிஸ் போல்ஸ், அப்துல்-பஹாவிடம் தமக்குக் குழந்தைச் செல்வம் கிடையாது என முறையிட்டார். அப்துல்-பஹாவும் அவருக்காக பஹாவுல்லாவின் புனித கல்லறையில் பிரார்த்தித்தார். அதன் பிறகு திருமதி மே மேக்ஸ்வெல் அமெரிக்கா திரும்பினார். அங்கு நியூ யார்க் நகரில் 1910-ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தப் பெண் குழந்தைதான் மேரி மேக்ஸ்வெல் ஆவார். அதாவது, நமது அன்பிற்குரிய ரூஹிய்யா காஃனும் அவர்கள்.

1912-ஆம் ஆண்டில் அப்துல் பஹா அமெரிக்கா சென்றபோது கெனடா நாட்டின் மொண்ட்ரீல் மாநகரில் ரூஹிய்யா காஃனும் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது ரூஹிய்யா கானும் அவர்களுக்கு வயது இரண்டு. அவ்வேளையில் திருமதி மே மேக்ஸ்வெல் அப்துல்-பஹா தமக்காக பஹாவுல்லாவின் புனிதக் கல்லறையில் பிரார்த்தனை கூறி, அதன் வழியாகத் தமக்குப் பிள்ளைச் செல்வம் கிடைத்ததை நன்றிப்பெருக்கோடு அப்துல்-பஹாவுக்கு நினைவுபடுத்தினார். பிள்ளைச் செல்வமே கிடைக்க வழி இல்லை என மருத்துவர்களே கைவிரித்த பின்னர் பஹாவுல்லாவின் திருவருளால் பிறந்தவர் ரூஹிய்யா காஃனும் அவர்கள். அத்துடன் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களுக்கு வயது 40 இருக்கும் போது அவரது உடல் நிலை நிரந்தரமாக நோய்வாய்ப்பட்டிருந்த போது ரூஹிய்யா காஃனும் பிறந்தார்.

1921-ஆம் ஆண்டில் அப்துல்-பஹா காலமானபோது, அதனைக் கேள்விப்பட்ட திருமதி மே மேக்ஸ்வெல் மிகுந்த வேதனைக்குள்ளார், அதனால் அந்த அம்மையாரின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாகியது. அந்த அம்மையார் தொடர்ந்து உயிர் வாழ்வாரோ மாட்டாரோ என்னும் ஐயம் அவரது கணவர் வில்லியம் மேக்ஸ்வெல்லுக்கு ஏற்பட்டது. ஒரு வேளை புனித நிலத்திற்கு மீண்டும் யாத்திரை மேற்கொண்டு, அப்துல் பஹாவின் வாரிசான ஷோகி எஃபெண்டியைக் கண்டால் மனதுக்கும் உடலுக்கும் ஒரு வேளை ஆறுதல் கிடைக்கலாம் என திரு வில்லியம் மேக்ஸ்வெல் கருதினார். அதன்படி 1923-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களும் 13 வயது நிரம்பிய ரூஹிய்யா காஃனுமும் புனித நிலத்திற்கு வருகை தந்தனர். அப்பொழுது திருமதி மே மேக்ஸ்வெல் சக்கர வண்டியில் தான் நடமாடினார். அந்த அம்மையாருக்கு நிறைய ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தேற்றியவர் ஷோகி எபெண்டி. பாதுகாவலரின் அன்பு கனிந்த வார்த்தைகளினாலும் பரிவான கவனத்தினாலும் அந்த அம்மையாரின் உடல் நிலை பெரிதும் தேறியது.

அந்த ஆண்டில் பாதுகாவலர் ஷோகி எஃபென்டி, பாப் அவர்களின் புனிதக் கல்லறையைச் சுற் றி பூங்காக்களை அழகிய முறையில் எழுப்பிக்கொண்டிருந்தார். மே மாதம் 28-இல் பஹாவுல்லாவின் மறைவு தினத்தை அனுசரிப்பதற்காக திருமதி மே மேக்ஸ்வெல்லும் ருஹியா கானுமும் அக்காநகரில் உள்ள பஹாவுல்லாவின் புனிதக் கல்லறைக்குச் சென்றனர். திரும்பும் போது அவர்கள் இருவரும் பாதுகாவலரோடு அவரின் காரிலேயே வந்தனர். அந்தக் காரின் கூறை திறந்து மடிக்கப்பட்டிருந்தது. இருக்கையின் மீது அமராமல் அந்த மடிக்கப்பட்ட கூறையின் மீது அமர்வதாக ரூஹிய்யா காஃனும் பிடிவாதம் பிடித்தார். அவ்வாறு அமர்ந்தால் விழுந்திடும் வாய்ப்பு உண்டு எனபு பாதுகாவலர் ரூஹிய்யா காஃனுமை எச்சரித்தார். ஆனால் தாம் விழாமல் பார்த்துக் கொள்வதாக ரூஹிய்யா கானும் நம்பிக்கையோடு சொன்னார். அந்தப் பயணத்தின் போதுதான் பாதுகாவலர் கெனடா நாட்டின் மலைப் பிறதேசங்களை காணத் துடிப்பதையும் மலை ஏறுவதை விரும்புவதாகவும், அவர்கள் இருவரிடமும் தெரியப்படுத்தினார். இந்த முதல் சந்திப்பின் போது இந்த இருவரும் அவ்வளவாகப் பேசக்கிடையாது. இந்தப் பயணத்தின்போது திருமதி மே மெக்ஸ்வெல் பாதுகாவலரைக் கண்டது முதற்கொண்டு அவர் தமது சேவைகளைப் பாதுகாவலருக்கே அர்ப்பணம் செய்தார்.

1926-ஆம் ஆண்டில் திருமதி மே மேக்ஸ்வெல்லின் தோழிகளுடன் ரூஹிய்யா காஃனும் தமது இரண்டவது யாத்திரையைப் புனித நிலத்திற்கு மேற் கொண்டார். அடுத்தப்படியாக ரூஹிய்யா காஃனும் அவர்களும் அவரது தாயாரும் ஐரோப்பாவில் இண்டு ஆண்டு காலம் அயராது சேவை செய்தனர். அதன் பிறகுதான் 1937-ஆம் ஆண்டில் ரூஹிய்யா கானுமும், அவரது பெற்றோர்களும் புனித நிலத்திற்கு வருகைப் புரிந்தனர். இந்தப் பயணத்தின் போதுதான் பாதுகாவலருக்கும் ருஹியா கானுமுக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம்

மதிப்புக்குரிய பாதுகாவலரை மணக்க வேண்டும் என ஏங்கியோர் பலர். ஆனால் அவர் ரூஹிய்யா காஃனும் அவர்களைத் திருமணம் புரிவார் என எவருமே எதிர்பார்க்கவில்லை. அமாத்துல் பஹாவை மணக்க வேண்டும் என்னும் முடிவைப் பாதுகாவலர் எடுத்திருந்தாலும் கூட, அது பற்றி அவர் எவரிடத்திலும் கூறவில்லை. பாதுகாவலர் சதா திருவொப்பந்தத்தை மீறியவர்களினால் சூழப்பட்டிருந்ததனால், இந்த ரகசியம் வெளியே வந்தால் அவரது திருமணத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடும் என அவர் அஞ்சினார். அதனால் அது பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. அதிபெரும் புனித இலையாகிய பாஹிய்யா காஃனும் அவர்கள் ஷோகி எபெண்டி அவர்களுக்கு ஒரு மோதிரத்தைக் கொடுத்திருந்தார். பாதுகாவலர் ரூஹிய்யா காஃனுமைத் திருமணம் செய்வதாக முடிவெடுத்த அன்று, அவர் அந்த மோதிரத்தை ரூஹிய்யா கானுமிடம் கொடுத்து, அதனைத் தமது கழுத்தின் சங்கிலியில் கோர்த்து மறைத்துவைக்கும்படி கூறினார். ரூஹிய்யா காஃனுமும் அவ்வாறே செய்தார். இந்த விஷயத்தை இருவரும் வேறு எவரிடமும் சொல்லவில்லை.

1937-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ருஹியா கானும் அவர்கள் மூன்றாவது முறையாக புனித நிலத்திற்கு யாத்திரை மேற்கொண்டார். இப்பயணத்தின்போதுதான் இந்த வலராற்றுபூர்வத் திருமணம் நடைபெற்றது. அப்துல் பஹாவுக்கும் முனிஃரி கானுமுக்கும் இடையிலான திருமணம் எவ்வளவு எளிமையாக நடைபெற்றதோ, அதுபோன்றே பாதுகாவலருக்கும் ரூஹிய்யா காஃனுமுக்கும் இடையிலான திருமணமும் அவ்வளவு எளிமையாக நபைெற்றது. 1937-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் நாள் பிற்பகலில் பாதுகாவலரும் அமாத்துல் பஹாவும் காரில் அமர்ந்திருக்க காரோட்டி அவர்களை ஹைஃபாவில் இருந்து அக்காநகருக்கு ஓட்டிச் சென்றார். அங்கே பஹாவுல்லாவின் புனிதக் கல்லறைக்கு – அதாவது பூமியில் உள்ள அதி புனிதமான ஸ்தலத்திற்கு அவர்கள் சென்றார்கள். அந்த ஊரின் கலாச்சாரத்தின் படி பெண்கள் வெளியே புறப்படுவதாக இருந்தால் கறுப்பு உடையில்தான் புறப்படுவார்கள். அமாத்துல் பஹாவும் கறுப்பு உடையும் வெள்ளை ரவிக்கையும் அணிந்து உள்ளுர் பெண்ணைப் போல உடன் சென்றார். இது பாதுகாவலரின் விருப்பமாகவும் இருந்தது.

பாஹ்ஜி சென்றவுடன் இருவரும் பஹாவுல்லாவின் புனித கல்லறைக்குள் புகுந்தனர். உடனே பாதுகாவலர் முன்பு ரூஹிய்யா கானும் அவர்களிடம் கொடுத்துவைத்திருந்த மோதிரத்தைக் கேட்டார். தமது கழுத்துச் சங்கிலியில் இருந்து ரூஹிய்யா காஃனும் அவர்கள் அதனைக் கழற்றி பாதுகாவலரிடம் கொடுத்தார். அதனைப் பாதுகாவலர் ரூஹிய்யா காஃனும் அவர்களின் வலது கரத்தின் மோதிர விரவில் அணிவித்தார். அதன் பிறகு பாதுகாவலர் அந்தப் புனிதகல்லறையின் உள் அறைக்குள் புகுந்தார். அங்கு காய்ந்து உதிர்ந்திருந்த பூவிதழ்களை பாதுகாவலர் சேகரித்து தன் கைக் குட்டையில் வைத்துக் கொண்டார். பின்னர் அவர் நேர்வு விருபத்தை ஓதினார். அதன் பிறகு இருவரும் புறப்பட்டு ஹைபா நகருக்கே திரும்பினார்கள். ஹைபா நகரில் உள்ள அதிபெரிய புனித இலையாகிய பஹியா கானும் அவர்களின் அறையில்தான் அவர்களின் எளிமையான திருமணம் நடைபெற்றது, அங்கு திருமண விழா இல்லை, பூவலங்கரிப்பு இல்லை, விசேஷமான சடங்கு சம்பிரதாயமில்லை, திருமண உடையுமில்லை, விருந்துபசரிப்பும் இல்லை. இந்த திருமணம் பற்றி உற்றார் உறவினருக்கும் கூட அதிகமாகத் தெரியாது. இந்த திருமணம் நடைபெறப்போவதை பாதுகாவலரின் பெற்றோர்களும், ஹைபாவில் தங்கியிருந்த அவர்தம் சகோதர் ஒருவரு இரண்டு சகோதரிகளும், அமாத்துல் பஹாவின் பெற்றோர்களும் மட்டுமே அறிந்திருந்தனர். பஹியா கானும் அவர்களின் அறையில், திருமணத்திற்கான சான்றிதழில் பாதுகாவலரின் பெற்றோர்கள் கையொப்பம் இட்டனர். அப்பொழுது ருஹியா கானும் அவர்களின் பெற்றொர்கள் மேற்கத்திய யாத்திகர் இல்லத்தில் இருந்தனர். அந்த திருமண சான்றிதழில் கையொப்பம் இடப்பட்டதும் ருஹியா கானும் அவர்கள் சாலைக்கு அப்பால் உள்ள மேற்கத்திய யாத்திகர் இல்லத்துக்குச் சென்று தன் பெற்றோர்களிடம் சேர்ந்து கொண்டார். ஷோகி எபெண்டி அவர்கள் தம் வழக்கமான பஹாய்ப் பணிகளை கவனிப்பதற்காகப் போய்விட்டார்.

இரவு விருந்து வேளையில் பாதுகாவலர் அந்த மேற்கத்திய யாத்திரிகர் இல்லத்திற்கு வந்தார். அங்கு வந்தவுடன் பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களுக்கு தம் அன்பையும், நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் புலப்படுத்தினர் எவருக்கும் கிடைக்காத பேறு ருஹியா கானும் அவர்களின் குடும்பத்திற்குக் கிடைத்தல்லவா, அதற்காக! முன்பு பஹாவுல்லாவின் புனித கல்லறையின் உள் அறையில் சேகரித்து தம் கைக்குட்டையில் வைத்திருந்த பூவிதழ்களை பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் அன்னையின் கரங்களில் ஒப்படைத்தார். பிறகு ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களும் திருமணப் பத்திரத்தில் கையொப்பம் இட்டனர். இரவு விருந்து நடைபெற்ற வேளையில், புஜித்தா ( ஜப்பானில் இருந்து புனித நிலத்திற்கு வந்து தோட்டக்காரராகப் பணியாற்றியவர்) அமர்த்துல் பஹாவின் பெட்டிகளை பாதுகவலரின் இல்லத்திற்குத் தூக்கிச்சென்றார். இரவு விருந்துக்குப் பிறகு பாதுகாவலரும் அமாத்துல் பஹாவும் தங்கள் இல்லத்திற்குப் புறப்பட்டனர். பாதுகாவலரின் குடும்ப அங்கத்தினர்களுடன் சற்று நேரம் உறையாடி விட்டு, பிறகு எற்கனவே மாபெறும் புனித இலையாகிய பஹியா கானும் அவ்கள் பாதுகாவலருக்காக மாடியில் கட்டியிருந்த இரண்டு குடியேறினர் அறையில். இதுவரைக்கும் மேரி போல்லீஸ் சுதர்லாந்து மேக்ஸ்வெல் என அறியப்பட்டுவந்த அவர், திருமணத்திற்குப் பின் ருஹியா ரப்பானி என வழங்கப்பட்டார். பிற்காலத்தில் அன்னவருக்கு பாதுகாவலர் “அமாத்துல் பஹா ருஹியா கானும்” என பட்டப் பெயர் கொடுத்தாதர்.

பாதுகாவலரின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றாலும், அது முக்கியத்துவம் அற்றது என எண்ணிடப்படக் கூடாது. அத்திருமணம் பற்றி பாதுகாவலர் வரைந்து, தம் தாயாரின் பெயரில் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட தந்தி ஒன்றே அதன் முக்கியத்துவத்தைப் பற்றி காட்டுகிறது. அந்த தந்தி இப்படி வாசிக்கிறது : “அன்புக்குரிய பாதுகாவலரின் திருமணக் கொண்டாட்டம் பற்றி சபைகளுக்கு அறிவிக்கிறேன். பஹாவுல்லாவின் பணிப்பெண்ணாகிய ருஹியா கானும் என்ற குமாரி மேரி மேக்ஸ்வெல் அவர்களின்மீது அளவிட முடியாத கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. பஹாவுல்லாவினால் பிரகடனப் படுத்தப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கின் இணைப்பு பினைக்கப்பட்டுள்ளது. இப்படிக்கு பாதுகாவலரின் தாயாராகிய சியாபா.”

இது போன்றதோர் இன்னொரு தந்தி பாரசீகத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டது. பாதுகாவலரின் திருமணம் என்பது நீண்ட காலமாக பஹாய்களினால் எதிர்பார்க்கப்பட்டது. திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானதும் பாதுகாவலர் உலகம் முழுதும் இருந்து ஏராளமான வாழ்த்துக்களைப் பெறத்தொடங்கினார். அமெரிக்கா மற்றும் கேனடாவின் தேசிய சபையிடம் இருந்து கிடைத்த வாழ்த்துக்களுக்கு ஷோகி எபெண்டி இவ்வாறு பதில் எழுதினார்:

“உங்கள் செய்தியினால் ஆழமாக உள்ளம் நெகிழ்ந்துள்ளேன். பஹாய் சமயத்தின் இரட்டை ஸ்தாபகரானவர்களோடு கொண்ட அங்கபந்த தொடர்பின் வழியாக மேன்மைப்படுத்தப்பட்டுவிட்ட பஹாவுல்லாவின் சமயத்தின் நிர்வாக முறையின் பிரயதான அடிக்கல்லாகிய பாதுகாவலர் எனும் ஸ்தானம் மேற்கோரு, குறிப்பாக பஹாவுல்லாவின் உலக அமைப்பு முறையைக் கொண்டுருவதை தங்கள் ஆன்மீக விதியாகக் கொண்டுள்ள அமெரிக்க நம்பிக்கையாளர்களுடன் கொண்ட நேரடியான தொடர்பின் வழியாக இப்பொழுது மேலும் மறுஉறுதிசெய்யப்பட்டுள்ளது. என் பங்காக, தங்கள் சமயத்தின் இவ்வளவு வளமான ஓர் அங்கத்தோடு அவர்களை வலுவாகப் பினைத்துள்ள ஓர் பந்தத்தைப் பெற்றமைக்காக அமெரிக்க நம்பிக்கையாளர்களின் சமூகத்தைப் பாராட்டுவதற்கு ஆவலுறுகிறேன்.” இப்படியாக பாதுகாவலர் ஏராளமான வாழ்த்துக்களுக்கு பதில அனுப்பிக்கொண்டிருந்தார். பாதுகாவலிரின் திரமணத்தின் சாரமே, அது கிழக்கையும் மேற்கையும் ஒன்றுபடுத்தியது என்பதாகும். இந்த திருமணத்தின் வழியாக கிழக்கும் மேற்கும் இனைந்தன, பாரசீகமும் (பாதுகாவலர்) அமெரிக்காவும் (ருஹியா கானும்) இணைந்தன எனவும், பிரிட்டிஷ் மக்களுக்கும் அது கொளரவாமாகும் ( ருஹியா கானும் அவர்களின் தந்தை ஸ்காட்லாந்தைச் சார்ந்தவர்) என்ற பொருளில் பாதுகாவலர் அமெரிக்கா சபைக்கு ஒரு தந்தி அனுப்பினார். இந்த திருமணம் அமெரிக்காவில் ஆழ்ந்த ஆன்மீக அலைகளை எழுப்பிற்று. அப்பொழுது அங்கே 71 உள்ளுர் ஆன்மீக சபைகள் இருந்தன. சபை தோறும் தலா 19 அமெரிக்க டாலரை அந்த தேசிய சபை பாதுகாவலருக்கு திருமாண பரிசாக அனுப்பியது. ” அமெரிக்க பஹாய்களை பாதுகாவலர் எனும் ஸ்தானத் தோடு பினைத்துள்ள புதிய பந்தத்தை உடனடியாக வலுபடுத்துவதற்காக “என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின்மீது பாதுகாவரின் திருமணம் இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கியது. அமெரிக்காவின் விதி பஹாவுல்லாவின் நிர்வாக அமைப்பு முறையை உருவாக்குவது என்பது முன்பே எழுதப்பட்ட தீர்பமாகும். அதற்கு இந்திருமணம் மேலும் அடித்தளத்தை அமைத்தது!

ருஹியா கானும் அவர்கள் மட்டும் திருமதி மே மேக்ஸ்வெல் அவர்களின் புதல்வியாக இல்லாது போயிருந்தால் பதுகாவலர் அவரை மணந்திருக்கப் போவதில்லை என பாதுகாவவரே ருஹியா கானும் அவர்களின் கூறினார். அதுபோல் “மே மேக்ஸ்வெல் அவர்களின் தோழமை ஒருவருடைய அன்மாவை எழுச்சியூட்டி வளர்க்கிறது ” என அப்துல் பஹாவும் எழுதியுள்ளார். அப்படியானால், ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்கள் ஆற்றிய பணியை நாம் காண வேண்டும்.

பெற்றோர்களின் பெரும் பணி

ருஹியா கானும் அவர்களின் தாயாராகிய மே எல்லிஸ் போல்லிஸ் அவர்கள் இளைய பருவத்திலேயே லுவா கேட்சிங்கரின் வழியாக பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டவர் ஆவார். சமயத்தை ஏற்றுக்கொண்ட நாள் தொடங்கி அவர் தம்முடைய வாழ்வை சமயத்திக்காக அர்ப்பணம் செய்தார். நிறைய விவேகம் உள்ளவராகவும் சமயத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவராகவும் அவர் திகழ்ந்துவந்தார். 1898ம் ஆண்டில்தான் முதன் முதலாக மேற்கத்திய நாடுகளில் இருந்து அக்கா நகருக்கு புனித யாத்திரை மேற் கொள்ளப்பட்டது. அந்த முதல் குழுவில் மே எல்லிஸ் போல்லிஸ் இடம் பெற்றார். அங்கே அப்துல் பஹா அந்த அம்மையாருக்கு என ஒரு விசேஷமான பணியைக் கொடுத்தார். பிரான்ஸ் நாட்டின் தலைநகராகிய பாரிஸ் மாநகரில் தங்கி சேவை செய்யுமாறு அப்துல் பஹா மே எல்லிஸ் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அதன்படியே அந்த அம்மையார் பாரிசுக்குப் போனார். ஒரு சில மாதங்களுக்குள் அந்த அம்மையார் பாரிஸ் மநகரில் முதல் பஹாய் நிலையத்தை நிறுவினார். அதுவே ஐரோப்பிய கண்டத்திற்கான முதல் பஹாய் நிலையமாகும். “ஐரோப்பிய மண்ணின் முதல் பஹாய்” என்ற பெருமையும்கூட இவரையே சாரும். அப்துல் பஹாவின் முதல் சில சீடர்களில் இவரும் ஒருவராவார். பாரிஸ் மாநகரில் ஓர் ஆங்கிலேயரை சமயத்தில் உறுதிபடுத்திய முதல் பஹாயும் இந்த அம்மையார்தான். முதல் பிரந்சு பஹாய் அன்பரான ஹிப் போலிட் என்பவரை உருவாக்கியவரும் கூட இந்த அம்மையார்தான். இந்த அம்மையார் வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் என்ற கேனடா நாட்டு கட்டிடக் கலைஞரை 1902ம் ஆண்டில் மணந்து, இருவரும் அந்த நாட்டின் மொண்ட்ரீல் நகரில் குடியேறினார்கள்.

1912ம் ஆண்டில் அப்துல் பஹா அமெரிக்கா சென்ற போது அவர்கள் இல்லத்திற்கு பல முறை சென்றுள்ளார். சமயத்தை ஏற்ற காலம் தொட்டு அந்த அம்மையார் அயராது சமயத்திற்காக பாடுபட்டுள்ளார். குறிப்பாக போதிப்பதிலும் சமய விவாகரங்களை நிர்வகிப்பதிலும் அவர் திறம்டச் செயல்பட்டார். அமெரிக்க கண்டத்தில் பலருக்கும் பஹாவுல்லாவின் செய்தியைக் கொடுத்தார். பஹாய் சமயத்திற்காக இவ்வளவு உதாரணத்துவ சேவைகளை வழங்கிவந்த போதிலு,ம் கூட, தாம் இன்னும் உயர்வுமிக்கச் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை அவர்தம் உள்ளத்தில் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. 1940ம் ஆண்டில் பாதுகாவலர் முன்னோடிகளுக்கான அழைப்பை விடுத்த போது திருமதி மே மேக்ஸ்வெல் அவர்கள் முன்னெழுந்தார். அப்பொழுது அவருக்கு வயது எழுபது! அவர்தம் உடல் நிலையும் மிகவும் மோசமாகியது. தென் அமெரிக்காவின் அர்ஜெண்டினா நகரில் அப்பொழுதுதான் பஹாய் சமயம் உதயமாகிவந்தது. அங்கு முன்ணோடியாகச் செல்வதற்கு அவர் முன்னே முந்தார். அதனைப் பாராட்டி பாதுகாவலர் தந்தி அனுப்பினார். அர்ஜெண்டினா நாட்டு தலைநகராகிய புவெனோஸ் ஏரிஸ் நகரை அடைந்ததும் (1940ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி) அந்த அம்மையார் மாரடைப்பால் காலமானார். அவர் ஓர் உயிர்த்தியாகியின் மரணத்தை அடைந்ததாக பாதுகாவலர் குறிப்பிட்டார். அதோடு அந்த அம்மையாரின் மரணம் பற்றி பாதுகாவலர் ஈரான் நாட்டின் தேசிய சபைக்குத் தெரிவித்தபோது, “விண்னுலகின் தெய்விக ஆன்மாக்களை கூட அந்த அம்மையாரிடம் இருந்து நல்லாசிகளை நாடுகின்றன” எனக் குறிப்பிட்டார். ஆகவே திருமதி மே மேகஸ்வெல் அவர்களின் வாழ்வு அளமானது, பஹாய் சமய வரலாற்றில் பொன்னேட்டில் பொறிக்கப்படக் கூடியது.

திருமதி மே மேக்ஸ்வெல் காலமானபோது, பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களின் தந்தை திரு வில்லியம் சதார்லாந்து மேக்ஸ்வெல் அவர்கட்கு தந்தி அனுப்பி அவரை ஹைபா நகரில் வந்து குடியேறும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்களும் ஹைபா நகரில் வந்து குடியேறினார். அப்போதெல்லாம் பாதுகாவலரின் உறவினர்கள் பாதுகாவலருக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தனர். திரு வில்லியம் மேக்ஸ்வெல் அவர்கள் அங்கு வந்து சேர்ந்தது பாதுகாவலருக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அவர் கட்டிடக் கலைஞாராக இருந்தது மிகவும் வசதியாயிற்று. அப்துல் பஹா அவர்கள் புனித பாப் அவர்களின் கல்லறையைக் கட்டி முடிந்தார். அதற்கு அழகிய கோபுரத்தை எழுப்பும் பணி பாதுகாவலரின் மீது வீழ்ந்தது. திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்கள் ஒரு கட்டிடக் கலைஞராக இருந்ததால், அவர் பாதுகாவலருடன் கலத்துகொண்டு பல கட்டிட வரைபடங்களை உருவாக்கினார். இறுதியில் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் படி உருவாக்கப்பட்டதுதான் இன்று நாம் காண்கின்ற பாப் அவர்களின் புனித கல்லறையின் கோபுரம்.

திரு வில்லியம் அவர்களின் உடல் நலம் திடிறென்று பாதிப்புற்றபோது அவர் இறந்துவிடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. 1951ம் ஆண்டில் அவரை பாதுகாவலர் சுவிட்சர்லாந்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் ன்ெறார். அவர் உடல் நலம் தேறினார். ஆண்டில் அவரை மீண்டும் அங்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கிருந்து அவரை பாதுகாவலர் கேனடா நாட்டுக்கு அனுப்பிவைத்தார். உறவினர்களைக் கண்டு ஆறுதல் அடைவதற்காக. அப்போது அவர்தம் உடல் நிலை இன்னும் மோசமாகியது. அப்பொழுதுதான் பாதுகாவலர் திரு வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்களை தெய்வச்சமயத் திருக்கரமாக நியமிதார். 1915ம் ஆண்டில் மார்ச் மாதம் 25ம் நாளில் அவர் காலமானார்.

1953ம் ஆண்டில் ருஹியா கானும் சிக்காகோ நகருக்கு சென்று கண்டங்களுக்கு இடையில்லான மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு, கேனடா நாட்டில் மொண்ட்ரீல் புறப்பட்டார். ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்கள் தங்கள் இல்லத்தை கேனடா நாட்டு தேசிய சபையின் சொத்தாக எழுதிவைக்க முன்பே ஆசைப்பட்டனர். அதற்கான ஏற்பாடுகளை ருஹியா கானும் செய்தார். கேனடவுக்கு அப்துல் பஹா சென்ற போது அவர் சென்று விஜயம் செய்த ஒரே இல்லம் அவர்களின் இல்லம் தான்! தன் தந்தையின் கல்லறைக்கு ருஹியா கானும் சென்றார். அப்போது பாதுகாவலர் ருஹியாா கானும் அவர்கட்கு தந்தி அனுப்பி, திரு வில்லியம் அவர்களின் கல்லறையில் பஹாய்கள் ஒன்றுகூடி நினைவாஞ்சாலி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புனித கல்லறையில் இருந்து கொண்டுபோன பூக்களையும் அங்கு வைக்கச் சொன்னார். தம் சார்பாக நீல நிற பூக்களில் தலை சிறந்தவற்றை நூறு டாலருக்கு வாங்கி கல்லறையின் மீது வைக்கப்படிச் சொன்னார். (நீல நிறம் திரு வில்லியம் சதர்லாந்து அவர்கட்கு பிடித்த கலர் என பாதுகாவலருக்கத் தெரியும்) கல்லறையில் அவறைப் பாராட்டும் வார்த்தைகளைச் ஒதுக்குபடி கூறி, அந்த வார்த்தைகளையும் பாதுகாவலர் தெரிவித்தார். அங்கு பஹாய்கள் கட்டுகின்ற தேதியையும் நேரத்தையும் தந்தியில் தெரிவித்தால், அப்பொழுது தாமும் புனித கல்லறையில் அவருக்காக பிரார்த்தனை கூறுவதாகவும் பாதுகாவலர் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆகையினால், ருஹியா கானும் அவர்களின் பெற்றோர்களும் சமயத்தில் சாதாரண மக்கள் அல்லர்! ருஹியா கானும் அவர்களும் அவர்தம் பெற்றோர்களும் சமயத்தில் பஹாய் சமய வரலாறு வாழும் காலம் வளர வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். இப்படியான உயர்வுமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர்தான் நம் மதிப்புக்குரிய பாதுகாவலருக்குத் துணைவி ஆனார்கள்.

இங்கு நாம் இன்னும் சில ஒற்றுமைகளைக் காணலாம். பாதுகாவலர் பிறந்த நாள் மார்ச் மாதம் 1ம் நாள். ருஹியா கானும் அவர்களின் தாயார் காலமானதும் மார்ச் மாதம் 1ம் நாள்தான். பாதுகாவலர் திருமணம் செய்த நாள் மார்ச் மாதம் 25ம் நாள். ருஹியா கானும் அவர்களின் தந்தை காலமனதும் மார்ச் மாதம் 25ம் நாள்தான். இவ்வாறான ஒற்றுமைகள் வேறெங்கும் கண்டதுண்டா?

பாதுகாவலருக்கு உதவியாக

அமாத்துல் பஹா அவர்கள் பாதுகாவலருக்கு துணைவி மட்டுமல்ல. அவர் பாதுகாவலருக்கு செயலாளராகவும் 20 ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டினார். 1951ம் ஆண்டில் பாதுகாவலர் அனைத்துலக பஹாய் பேராவையை நியமித்தார். இந்தப் பேரவைதான் வருங்கால (1963) உலக நீதி மன்றத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தது.1952ம் ஆண்டில் இந்தப் பேரவையின் அங்கத்துவத்தை அவர் விரிவுபடுத்தினர். அதன் படி அவர் அமாத்துல் பஹா அவர்களையும் ஓர் அங்கத்தினராகவும், தமக்கும் அந்த அனைத்துலக பஹாய்ப் பேரவைக்கும் இடையில் ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்தார். 1952ம் ஆண்டில் தெய்வச் சமயத் திருக்கரமாகிய வில்லியம் சதர்லாந்து மேக்ஸ்வெல் அவர்கள் (அமர்த்துல் பஹாவின் தந்தை) காலமானர். அவருக்கு பதிலாக பாதுகாவலர் அமாத்துல் பஹா அவர்களை சமயத் திருக்கரமாக நியமித்தார்.

அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் உள்ள பஹாய் கோவிலுக்கு அடிக்கல்லை நாட்டியவர் அப்துல் பஹா. இது நடந்தது 1912ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி. 1933 ஆண்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற வேளையில் அந்தக் கோயிலருகே வந்து பிரார்த்தனைகள் கூறியவர் ருஹியா கானும் அவர்கள். 1953 ஆண்டு மே மாதம் 2ம் தேதி முழுமைப் பெற்ற அந்தக் கோவில் பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டது. அந்த திறப்பு விழாவுக்கு பாதுகாவலர் அவர்களே நேரில் வர நினைத்ததுண்டு. ஆனால் ஏராளமான வேலையின் பளுவின் காரணமாக அவரால் வர இயலவில்லை. அதனால் தம்மைப் பிரதிநிதிக்குமாறு பாதுகாவலர் தம் அன்பிற்குரிய துணைவியார் அமாத்துல் பஹா அவர்களை அனுப்பிவைத்தார். அப்துல் பஹா அடிக்கல் நாட்டிய கோவிலை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தவர் அமாத்துல் பஹா அவர்கள்.

பாதுகாலரின் மறைவுக்கும் பின்

1957ம் ஆண்டில் மதிப்புக்குரிய பாதுகாவலர் திடீரெனக் காலமானார். அப்பொழுது உலக நீதி மன்றம் இன்னும் அமைக்கப்படவில்லை. 1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்படும் நாள் வரைக்கும் சமயம் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படவேண்டும். அப்பொழுது 26 தெய்வச் சமயத் திருக்கரங்கள் கையொப்பமிட, 9 தெய்வ சமயத் திருக்கரங்கள் “பஹாய் உலக சமயத்தின் காப்பாளர்கள்” என நியமிக்கப்பட்டனர். உலக நீதி மன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் இந்த 9 தெய்வ சமயத் திருக்கரங்களும் புனித நிலையத்தில் தங்கி சமயத்தைப் பாதுகாத்து, பணியாற்றிவருவதே அவர்களின் பணியாகும். அந்த ஒன்பது பேர்களில் அமர்த்துல் பஹா அவர்களும் அடங்கினார். அதோடு பாதுகாவலர் 1953ம் ஆண்டில் பத்தாண்டு உலக அறப்போரை (உலகப் போதனைத் திட்டம்) தொடக்கிவைத்தார். அது 1963ம் ஆண்டில் முடிவுற வேண்டும். ஆனால் அவர் பாதிக் காலக்கட்டத்தில், அதாவது 1957ல் காலமாகிவிட்டார். அந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்கின்ற பெரும் பொறுப்பும் இந்தக் காப்பாளர்களின் தோள்மீது வீழ்ந்தது.

1960ம் ஆண்டில் அமாத்துல் பஹா அவர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கும் கேனடா நாட்டுக்கும் ஒரு விரிவான பாயணத்தை மேற்கொண்டு அந்த சமூகத்தினருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டினார்.

1958ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் உகாண்டா நாட்டில் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் அவர் கலந்து கொண்டபோது, அங்கு எழுப்பப்படவிருந்த வழி பாட்டு இல்லத்திற்கு அடிக்கல்லை நாட்டினார். 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆப்பிரிக்க கண்டத்தின் அன்னைக் கோவில் உகான்டாவில் திறக்கப்பட்டது. அதனை அதிகாரபுர்வமாகத் திறந்துவைப்பதற்காக அமர்த்துல் பஹா மீண்டும் ஆப்பிரிக்கா சென்றார். அதன் பின்னர் அவர் ஆப்பிரிக்காவில் மக்கள் அணிஅணியாக சமயத்தை ஏற்றுக்கொண்ட பகுதிகளுக்கும் சென்றார்.

1961 ஆண்டு ஆகஸ்டு – செப்டப்பர் மாதங்களில் அமாத்துல் பஹா தென்கிழக்காசிய பயணத்தை மேற்கொண்டு சிங்கை, மலாயா வந்துள்ளார். 1961 ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா கண்டத்தின் அன்னைக் கோவில் சிட்நியில் திறக்கப்பட்டது. அதனை அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பதற்காகவும் அமர்த்துல் பஹா அங்கு சென்றார். பின்னர் ஆஸ்திரேலியா, மற்றும் நியூ சீலாந்து நாடுகளின் பஹாய் சமூகங்களைக் கண்டு வந்தார்.

பாதுகாவலர் செய்த பெரும் பணிகளில் ஒன்று புனித நிலத்தில் பழம் பொருள் காப்பகத்தை ஏற்படுத்துவதாகும். அதனைப் பூர்த்தி செய்வதற்குள்ளாக அவர் மறைந்துவிட்டார். அந்த மாபெறும் பணியை நிறைவு செய்வதில் அமாத்துல் பஹா அயராது உழைத்தார். 1962ம் ஆண்டுக்குள்ளாக அது பூர்த்தி செய்யப்பட்டால், புனித யாத்திரைக்கு வருவோருக்கு பலனாக இருக்கும் என்று கருதி அதனை நிறைவு செய்வதில் மும்முரமாகச் செயல்பட்டார்.

1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டது. பாதுகாவலர் உயிரோடு இருந்த காலத்தில் அவர் 5 தெய்வச் சமயத் திருக்கரங்களை புனித நிலத்தில் தங்கி சமயத்திற்கு உதவியாக இருக்கும்படிச் செய்தார். அதுபோலவே, உலக நீதி மன்றத்திற்கு ஆலோசனைகளைக் கூறி உதவுவதற்காக, உலக நீதி மன்றம் 5 தெய்வச் சமயத் திருக்கரங்களை நியமித்து அவர்களை புனித நிலத்தில் தங்க வைத்தது. இம்முறையும் அந்த ஐவரில் அமாத்துல் பஹா அவர்களும் அடங்கினார்.

உலக உலா

1992ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் நடைபெற்ற இரண்டாவது உலக மாநாட்டில் அமாத்துல் பஹா அவர்கள் ஒரு தகவலைத் தெரிவித்தார். பாதுகாவலர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் ருஹியா கானும் அவர்களிடம் திடீரென இவ்வாறு கேட்டாராம் “நான் இறந்துவிட்டால் நீ என்ன செய்வாய்?” அதற்கு ருஹியா கானும் அவர்கள் அழுதவாறு “அதன் பின் நானும் மூச்சு விட விரும்பவில்லை” என்றராம். அப்போழுது தம் மரணத்திற்குப் பின்னால் ருஹியா கானும் உலகம் முழுதும் சென்று பஹாய்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும் என பாதுகாவலர் கேட்டுக்கொணடார். 1957ம் ஆண்டில் பாதுகாவலர் மரணமடைந்து, பிறகு 1963ம் ஆண்டில் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டது முதற்கொண்டு தம் கடைசி காலம் வரைக்கும் அமாத்துல் பஹா அவர்கள் உலகை வலம் வந்தார். 1957ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும் கூட அமாத்துல் பஹா உலகில் சில பாகங்களுக்குச் சென்றுவந்ததுண்டு. ஆனாலும் அவர் புனித நிலத்தில் தங்கி சமயப் பணிகளை கவனிக்கவேண்டிய சுமைகளைத் தாங்கியதன் காரணமாக அவர் சுதந்திரமாக உலகம் பயணங்களை மேற்கொள்ள இயலவில்லை. உலக நீதி மன்றம் அமைக்கப்பட்ட பின்புதான் அவர் ஏராளமான உலகப் பயணங்களை மேற்கொண்டு பஹாய்களைக் கண்டு உற்சாகம் வழங்கியதோடு, பஹாய் அல்லாதவர்களுக்கும் சமயத்தைக் கொடுத்தார். கடைசி 35 ஆண்டுகளில் அவர் 185 நாடுகளுக்குச் சென்று சாதனைப் புரிந்தார். Ñற்ற உலகர் தகைவர்கள்கூட. இத்தனை நாடுகளைச் சென்றடைந்திருப்பாரா என்பது சந்தேகமே.

அமாத்துல் பஹாவின் பயணங்களில் முக்கியமான ஒன்று இந்திய துணை கண்டத்திற்கு அவர் விஜயம் செய்ததாகும். 1964ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமார்த்துல் பஹா அவர்கள் இந்தியாவுக்கு வந்து ஒன்பது மாதகாலமாக இந்தியா முழுதும் பயணத்தை மேற்கொண்டார். மொத்தம் 55,000 மைல்கள் பயணம் செய்து 70க்கும் கூடுதலான கிராமங்களுக்கு விஜயம் செய்தார். விமானம், கார், ஜீப், படகு மற்றும் கால் நடையாகவும் அவர் பயணத்தை மேற்கொண்டு பழங்குடு மக்களில் இருந்த மேட்டுக்குடி மக்கள் வரைக்கும் சென்று சமயத்தைப் சோதித்தார். இந்தியாவில் பிறந்து வளர்ந்து எவரும் கூட இதுநாள் வரைக்கும் இப்படி யொரு சூறாவளிப் பயணத்தை இந்தியாவில் மேற்கொண்டதில்லை எனலாம்.

1964ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி அமாத்துல் பஹா இலங்கைக்குச் சென்றார். அங்கு தேசிய பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டார். ஏப்ரல் 23 முதல் 28 வரைக்கும் அமாத்துல் பஹா மலேசியாவில் இருந்தார். மலேசியாவின் தேசிய ஆன்மீக சபையைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் பேராளர் மாநாட்டில் அவர் உலக நீதி மன்றத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் தாய்லாந்தின் தேசிய பேராளர் மாநாட்டில் உலக நீதி மன்றத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வதற்காகச் பாங்காக் சென்றார். அங்கிருந்து மீண்டும் மே மாதம் 7ம் நாள் இந்தியாவுக்குத் திரும்பி தம் சுறவளிப் பயணத்தை தொடர்ந்தார். 1964ம் ஆண்டு ஜீலை மாதம் 4ம் நாள் ஐரோப்பிய மண்ணின் முதல் பஹாய் தொழுகை இல்லத்தை ஜெர்மனி நாட்டின் பிரங்க் பர்ட் நகரில் அதிகாரபூவமாகத் திறந்துவைத்தார்.

உலகம் முழுதும் உள்ள 6 மில்லியன் பஹாய்கள் வாழ்கின்ற சமூகங்களை அவர் இயன்றவரைக்கும் சென்று கண்டுவந்தார். குறிப்பாக பழங்குடி மக்களை பஹாய் சமூகத்திற்கு ஈர்ப்பதிலும், அவர்கட்கு உற்சாகம் வழங்கவதிலும் அமாத்துல் பஹா வசேஷமான கவனம் செலுத்தினார். அவர் தென் அமெரிக்காவின் நாடுகளான பேரு, பொலிவியா, சுரிநாம், குயானா மற்றும் பிரேசில் நாட்டின் அமேசன் காடுகளில் பயணம் செய்து அங்குள்ள பழங்குடி மக்களுக்கு சமயத்தைப் போதித்தார். அதனை ஒரு செய்திப்படமாகத் தயாரித்து அதற்கு “தி கிரீன்லைட் எக்ஸ் பெடிஷன்” என்று பெயர் சூட்டினர். அவர் சென்ற மேற்குறிப்பிட்ட நாடுகள் முன்னேடியாகச் செல்வதற்கு மிகவும் சிரமமான இடங்களாகும். இருந்தும் வயதான காலத்தில், உடல் வலு குறைந்த வேளையிலும் அவர் அப்பயணத்தை மேற் கொண்டார். தம்மால் அப்பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றால் வாலிபர்களாலும் இயலும் என்பதுவும் அப்பயணத்தின் செய்தியாகும். ஆறுமாத காலத்திற்கு நீடித்த இக்கடும் பயணத்தை ஒரு திரைப்படமாக அவர் தயாரித்துள்ளார். இதன் வழியாக தாம் ஒரு தலைசிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் எனவும் நிரூபித்தார். இத்திரைப்படம் பிகவும் பிரமாதமாக அமையவே, அது உலகின் பல நாட்டு தொலைக்காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது. குறிப்பாக 1990ம் ஆண்டில் அது சீனர்களின் கேண்டனீஸ் பாஷையில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவின் தொலைகாட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதனை குறைந்தது 5 மில்லியன் சீனர்கள் கண்டுள்ளனர்.

1986ம் ஆண்டில் இந்திய நாட்டின் புது டில்லியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தை அவர் அதிகாரபூர்வமாக திறந்துவைத்தார். 1992ம் ஆண்டிலே நியூ யார்க் நகரில் நடைபெற்ற இரண்டாவது பஹாய் உலக மாநாட்டில் உலக நீதி மன்றத்தின் பிரநிதியாகக் கலந்துகொண்டுள்ளார்.

உலகத் தலைவர்களைச் சந்த்தார்
வேறு எந்த பஹாய் அன்பரும் செய்திடாத அளவுக்கு பஹாய் சமயத்தை அவர் உயர்மட்ட மக்களுக்குக் கொண்டு சென்றார். சீன நாட்டு பேராசிக்கு அவர் சமயத்தைக் கொண்டுச் சன்றுள்ளார். சீனாவுக்கு அவர் நான்கு முறை சென்றுள்ளார். 1985ம் ஆண்டில் உலக அமைதிக்கான வாக்குறுதி, எனும் அறிக்கை உலக நீதி மன்றத்தினால் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் அமர்த்துல் பஹா அவர்கள் அதனை ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளருக்கு வழங்கினார். இந்திய பிதமர் இந்திரா காந்தி, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டின் பேரரசர் ஹெய்ல் செலாஸ்சீ, அர்ஜெண்டினா நாட்டு ஜனதிபதி கார்லோஸ் மெனம், ஜெமாய்க்கா நாட்டின் பிரதமர் எட்வார்ட் சீகா, ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளர் ஜாவியர் பெரேஃஜ் டெ செல்லர், ரோமானியா நாட்டின் இளவரசி ஹெலினா முதலியோரை அமாத்துல் பஹா கண்டு சமயத்தை வழங்கியுள்ளார். சோவியட் யூனியன் நாடுகளுக்கு 1993ம் ஆண்டு நீண்ட காலம் பயணம் மேற் கொண்டு சேவை செய்துள்ளார்.

பிற சேவைகள்
இன்னும் பல சர்வ தேசக் கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இளவரசர் பிலிப் அவர்களோடு ஓரே மேடையில் தோன்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக சுற்றுப்புறச் சூழ்நிலைகளைப் பாதுகாப்பதில் அமாத்துல் பஹா தம்மை ஈடுபடுத்திக் கொன்டார். அதனால் உலகலாவில் இயற்கைப் பாதுகாப்பு நிதி நிறவனத்தின் செயல் திட்டங்களுக்கும் பணிகளுக்கும் அவர் தமது ஆதரவை வழங்கியுள்ளார். 1988ம் ஆண்டில் லண்டன் மாநகரின் “சயோன் ஹவுஸ் ” என்ற இடத்தில் அந்த நிறுவனத்திற்கான நிதி திரட்டும் விழாவில் சொற்பொழிவாற்றினார். அதோடு “ரிலிஜின் அண்டு கன்சர் வேஷன் ” என்ற பெரும் பணியைத் தொடங்கிவைத்தார். தமது தந்தை ஒரு கட்டிடக் கலைஞர். அந்த தாக்கம் அமாத்துல் பஹா மீதும் இருந்தது. அவருக்கு கலைகளின் மீது இயற்கையான ஆர்வம் இருந்தது. இதனால் பஹாய் சமயத்துடன் தொடர்புடைய பல பழைய கட்டிடங்களை புதுப்பித்து அழகுபடுத்துவதில் தம் உழைப்பைக் கொடுத்தார்.

எழுதிய நூல்கள்

அமாத்துல் பஹா அவர்கள் பல துறைகளில் துலங்கியவர், சிறந்த புலமைப்பெற்றவர். மெக்கில் பல்கலைக்கழகப் பட்டதாரியும் கூட. அவர் பன்மொழிப் புலமைப் பெற்றவரும் கூட,ஆங்கிலம், பாரசீகம், பிரஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசி எழுதும் வல்லமைப் பெற்றவர் அவர். சிறந்த எழுத்தாளர் என்பதோடு பேச்சாளரும் கூட. அவர் நான்கு முக்கியமான நூல்களை இயற்றியுள்ளார்.

1. “பிரிஸ்கிருப்ஷன் ஃபார் லிவிங்” (வாழ்வதற்கான அறிவுரைகள்) என்ற நூல், இது ஆன்மீகக் கொள்கைகளைக் கொண்டு எவ்வாறு வாழ்வது என்பதற்கு வழிகாட்டுகின்ற நூலாகும். நல்ல பஹாய் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகின்ற ஒருவருக்கு இந்த நூல் உதவியாக இருக்கும்.

2. பாதுகாவலர் 1957ம் ஆண்டில் காலமான பின்னர் சோகத்தில் மூழ்கியிருந்த அமாத்துல் பஹா தம் கைப்பட எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பு இது.

3. “தி பிரைஸ்லஸ் பேர்ல்” ( விலைமதிப்பில்லா முத்து) – ( 1969 ) என்ற நூலில் ஷோகி எபெண்டி பற்றிய ஒரு முழுமையான வடிவத்தை அவர் நமக்குத் தருகிறார். பாதுகாவலர் எக்காலத்திலும் தம்மைப் பற்றி வெளிச்சம் போட்டுக்கொண்டதில்லை. மற்றவர்களின் சாதனைகளை அவர் நமக்குக் காட்டுவார், தம் சொந்த சாதனைகளை அவர் மறைத்துவிடுவார். இன்று உலக பஹாய்களுக்கு பாதுகாவலரின் பிறப்பு, வளர்ப்பு, உழைப்பு, மகிழ்வு, சாதனை, வேதனை போன்ற எண்ணற்ற அம்சங்கள் தெரியவந்ததற்குக் காரணம் அமதுல் பஹா இயற்றிய “தி பிரைஸ்லஸ் பேர்ல்” என்ற நூல்தான். 20 ஆண்டு காலத்திற்கு அவரோடு வாழ்ந்த அமாத்துல் பஹா தான் அவரைப் பற்றி எழுதுவதற்கு மிகவும் பொருத்தமானவர். இந்த நூல் பஹாய்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ” பஹாய் சமயத்தின் பாதுகாவலர் 1988 ” என்ற இன்னொரு நூலையும் தொடர்ச்சி நூலாக அவர் எழுதியுள்ளார்.

4. தி டிசையர் ஆஃப் தி வொர்ல்டு ( உலகின் ஆவாலுக்குரியவர்) -( 1982 ) என்ற பொருளில் ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்த நூல் பஹாவுல்லாவின் பண்புகள், தன்மைகள்,குணங்கள், மற்றும் நாமங்களை எடுத்து விளக்குகின்ற நூலாகும். இந்த நூலை வாசிப்பதன் வழியாக நாம் பஹாவுல்லாவைப் புரிந்துகொள்ளவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த நூல் ஒரு வகையில், தியானம் செய்வதற்காக எழுதப்பட்டுள்ளது.

5. “மினிஸ்ட்ரி ஆப் தி கஸ்டோடியன்ஸ்” ( காப்பாளர்களின் பதவிக்காலம்) – (1992) என்ற நூல் முக்கியமான நூலாகும். இந்த நூலுக்கு அமாத்துல் பஹா அவர்கள் ஒரு முன்னுரை வாழங்கியுள்ளார். இது பாதுகாவலர் காலமாகிய 1957ம் ஆண்டு முதல் உலக நீதி மன்றம் அமைக்கப்பட்ட 1963ம் ஆண்டு வரைக்குமான காலகட்டத்தில் புனித நிலத்தில் உள்ள தெய்வ சமயத் திருக்கரங்கள் உலகுக்கு அனுப்பிய செய்திகளின் தொகுப்பாகும்.

அவரின் எண்ண அலைகள்

அமாத்துல் பஹா அவர்கள் ஆற்றிய உரைகளிலும். எழுதிய நூல்களிலும் நமக்காக அவர் நிறைய அறிவுரைகளைக் கூறியுள்ளார், பல அருமையான கதைகளையும் உவமைகளையும் விட்டுச் சென்றுள்ளார். அவை யாவுமே அவரின் தெளிவான, வளமான சிந்தனைக்கு, அவை எடுத்துக்காட்டாகின்றன. எதனையும் சிக்கலின்றி தெளிவாகச் சிந்தித்து, அதனைச் சித்தரிக்கும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். அவரின் எண்ண அலைகளில் சில வருமாறு:
இந்திய கிராமவாசிகள் :

கிராமவாசிகள் யாவரும் இந்தியாவில் உள்ள சமயம் எனும் மாபெறும் மரத்தின் ஊட்டமளிக்கப்படவேண்டிய வேர்களுக்குச் சமமானவர்கள். நாம் அவர்கள் மீது கவனம் காண்பித்து அவர்கட்கு தெய்வீகப் போதனைகளைக் கொடுக்கவேண்டும்.

பஹாய் போதனைகள் :

பஹாய் போதகர்களாக எவருமே உருவாக்கப்பட்டவரல்லர். நாம் பாட்டுக்கு வெளியே சென்று போதிக்க வேண்டும். மற்றவை யாவும் பின் தொடர்ந்து, அதன் பிறகு ஒரு போதகர் தோன்றுகிறார். அவர் பிரார்த்தனை கூறிவிட்டு முன்னே அடி எடுத்து வைக்கவேண்டும்.

காலம் :

நமக்குப் போதுமான நேரம் இருக்கிறது என நாம் எண்ணவே கூடாது. நேரம் இருந்தாலும் வாய்ப்பு நிரந்தரமாக நழுவிவிடக்கூடும். போதிப்பதற்கு அங்கே போதிய காலம் இல்லை. நேரம் இருக்கும் போதே சந்தர்ப்பத்தை அதிசிறப்புடன் பயிர் செய்ய வேண்டும்.

கல்வயறிவற்றவர்கள் :

அறியாமையில் உள்ளவர்கள் எனவும், எழுத்தறிவற்றவர்கள் எனவும் அழைக்கப்படுபவர்கள் எதோ புதிதான ஒன்றுக்காக பசியோடு காத்திருக்கின்றனர். அவர்கள் தங்களின் வளர்ச்சிக்காக பசியோடு உள்ளனர். அவர்கட்டு நாம் தெய்வீகத் தீணியைக் கொடுக்காவிட்டால் அவர்கள் லௌகீக இயக்கங்களோடு ஒட்டிக்கொள்வார்கள்.

கிராமிய மனிதர்களின் மனங்கள் :

பெரும்பாலான மனிதர்களின் மனங்கள் சுத்தப்படுத்தப்பட்டு தெய்வீகப் பொழிவுகளைப் பெறுவதற்காக தயார்படுத்தப்பட வேண்டும். ஆனால் கிராமிய மனிதர்களின் மனங்கள் பற்றுகளில் இருந்து விடுபட்டுள்ளதோடு, போதனைகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயராக உள்ளன.

சேவையில் போட்டிகள் :

கடவுளின் சமயம் என்ற சேவையில் நாம் ஒருவருக்கொருவர் போட்டி இடுவோம். நீங்கள் எழுந்தால், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என நான் திண்ணமாக நம்புகிறேன்.

பாதுகாவலரின் மகிழ்ச்சி :

அவருக்கு 20 ஆண்டுகள் சேவை செய்யும் பாக்கியம் பெற்ற காலத்தில், அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது கடவுளின் சமயத்தின் வளர்ச்சி பற்றிய செய்தி ஒன்று தான். அவருடைய கடைசி அண்டுகளில் பாதுகாவலருக்கு உயிர் மூச்சாக இருந்தது, அவரைத் தொடர்ந்து இயங்கும்படிச் செய்தது எல்லாம் பத்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி, கடவுளின் சமயத்தின் விஸ்தரிப்பு; ஆகியவைதாம். அடிப்படையில் போதனைத் துறையில் பெற்ற வெற்றிகளே அவருக்கு மகிழ்ச்சியூட்டின.

இரண்டு தரப்பினரின் கடமைகள் :

உலகில் இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் சரிசமமாக இயங்கவேண்டும். கடவுளின் தீர்க்கதரிசி தோன்றும் போது, அவருடைய நாமத்தை பற்றி கேள்விப்பபடுவதும் அவரை ஏற்றுக் கொள்வதும் ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும். மக்கள் தீர்க்கதரிசியின் நாமத்தைக் கேள்விப்படவில்லையானால் அது பஹாய்களின் தவறாகும். அதுபோல் கேள்விப்பட்ட பின்பு அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அது தனிப்பட்ட மனிதர்களின் தவறாகும்.

அறிவும் நம்பிக்கையும் :

சமயம் பற்றிய அறி நம்பிக்கை ஆகிய இரண்டு வெவ்வேறு விஷயங்களாகும். நாம் அவற்றை ஒன்றுகலக்கக் கூடாது. நம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் இருக்கவேண்டும். அதோடு நாம் படிப்படியாக சேகரிப்பதுதான் அறிவு

ஆன்மீகப் பயிற்சி :

உடல் நலத்தில் குறை இருக்கும் போது நாம் அதனை நிவர்த்தி செய்வதற்காக தேகப் பயிற்சி செய்கிறோம். அது போல் நம்மிடம் இல்லாத பண்புகளை நாம் பயிற்சி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும். நாம் செய்து முடிப்பதற்கான பலத்தை இறைவன் நமக்குக் கொடுக்காமல் ஒரு காரியத்தை அவர் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டார். உலக மக்கள் தங்களின் நடத்தைகள், தங்களின் சிந்தனைகளை, தங்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைக்கும்படி கடவுள் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு மாற்றியமைப்பதற்கான பலத்தை அவர்கட்டு அவர் வழங்குவார்.

மற்றவர்களுக்கு உதவுவதானால் :

மற்றவர்களின் துன்பங்கள், அவர்களின் குறிக்கோள்கள், அவர்களின் சிரமங்கள் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வதுதான் அவர்களுக்கு உதவுவதற்கான முதல் படியாகும். சகிப்பின்மை எந்த பிரச்சினைகளையும் தீர்காது : நாம் விவேகமுள்ள மருத்துவரைப்போல், நோயைக் கண்டுபிடிப்பதற்காக, அறிகுறிகள் என்னவேன்று செவிமடுக்கவேண்டும்.

தாராளகுணம் படைத்ாேதர்

தாராள குணம் என்பது அனைவரும் நாடுகின்ற இன்னொரு மனிதப் பண்பாகும். ஆச்சரியம் என்னவென்றால், பொதுவாகக் கூரின், பணக்காரர்கள் அல்லது வசதியுடையோரைக் காட்டிலும் ஏழைகளே அதிக தாராள குணம் படைத்தவர்களாக உள்ளனர்.

முகபாவனை :

கடுகடுப்பான பகைமைக் கொண்ட கோபம் கொண்ட முகங்களைக் கொண்ட மனிதர்களை நீங்கள் விரும்முவதுண்டா? அநேகமாக விரும்பமாட்டீர்கள். ஆகையினால் உங்கள் சொந்த முகங்களை அப்படியெல்லாம் வைத்துக் கொண்டுஉங்கள் சக மனிதர்களைத் துன்புறுத்தாதீர்கள்.

நாவின் வன்மை :

மனிதப் பிறவிகளின் நாக்குகள் மிகவும் பலமான ஆயுதங்களாகும். நாக்குகளினால் தேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, தேசங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன, ஏனெனில் பேச்சு என்பது மனிதனின் மாபெறும் சாதனைகளில் ஒன்றாகும் ; அப்படி இருந்தும் கூட, இரண்டு முனையுள்ள வாளைப்போல் அது இரண்டு பக்கமும் வெட்ட முடியும். இவ்வளவு பலம் கொண்ட ஆயுதத்தை நன்மைக்கோ அல்லது திமைக்கோ பயன்படுத்துவதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மரணமும் அடக்கமும்

யார் எப்பொழுது, எங்கே தம் உயிரைத் துறப்பார் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அமர்த்துல் பஹா அவர்கள் உலகில் 185 நாடுகளுக்கு மேல் சென்று சமயத்திற்காக சேவை செய்துள்ளளார். வெளிநாட்டுக்குப் போகும் போதெல்லாம் தாம் அங்கேயே உயிரைத் துறந்து அந்த நிலைத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என அமாத்துல் பஹாவின் உள் மனது ஏங்கியதுண்டு. ஆனால் இறைவனின் விருப்பம் வேறு விதமாக இருந்துவிட்டது. கடைசி ஒரு வருடமாக (1999) ருஹியா கானும் அவர்களின் உடல் நலம் சரியில்லாததால் அவர் புனித நிலத்தை விட்டு வெளியேறவே முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டார். முன்பெல்லாம் புனித நிலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட பஹாய்களையும் மற்ற வருகையாளர்களையும் அமாத்துல் பஹா வரவேற்றுப் பேசி உபசரித்ததுண்டு. ஆனால் கடைசிக் காலத்தில் இவ்வாறு மற்றவர்களைப் பார்ப்பதையும் அவர் குறைத்துக்கொண்டார். 1998ம் ஆண்டில் தடைபெற்ற அனைத்துலகப் பேராளர் மாநாட்டில் மேடையில் தோன்றினார், ஆனால் அதுவும் கூட மற்றவர்கள் அவரை மேடைக்கு கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது அபூர்வம், அல்லது கிடையாது என்றகுவிட்டது.

கடைசி ஒரு வருடமாக அமாத்துல் பஹா நடமாட முடியாமல் போய்விட்டது. அவர் கீழே விழுந்திடவே, அவரின் முதுகில் காயம் ஏற்பட்டு கொஞ்ச காலம் படுத்த படுக்கையாகக் காலத்தை ஓட்டினார். அவரை கவனிப்பதற்கு என உலக நீதி மன்றம் ஒரு தாதியை ஏற்பாடு செய்துதிருந்து. அவருக்குப் பக்கத் துணையாக இருந்ததவர் அவருடைய நீண்ட காலத்து தோழியாகிய திருமதி வைலட் நக்ஜவனி. இந்த அம்மையார் உலக நீதி மன்ற அங்கத்தினர் திரு அலி நக்ஜாவானி அவர்கிளின் துணைவியார். 1964ம் ஆண்டிலே அமாத்துல் பஹா இந்திய நாட்டுக்கு நீண்ட காலம் விஜயம் செய்தபோது அவரோடு உடன் பயணம் செய்தவர் திருமதி அலி நக்ஜவனி, “அமாத்துல் பஹாவின் இந்திய விஜயம்” என்ற பெயரில் ஒரு நாலை எழுதி அந்தப் பயண அணுபவங்களை விவரித்தவர் இந்த திருமதி அலி நக்ஜவனி.

ஆகையினால், தாம் வெளிநாட்டில் அடக்கம் செய்யப்படவேண்டும் என அமாத்துல் பஹா விரும்பினாலும்கூட, அது சாத்தியமாகாதபடி, கடைசிக் காலத்தில் அவர் நாட்டை விட்டே வெளியேறமுடியாதபடியான சூழ்நிலை உண்டாகிவிட்டது. அவர் புனித நிலத்தில்தான் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது இறைவனின் விருப்பமாயிற்றே! அது பேரன்புக்குரிய பாதுகவலரின் விருப்பமும் கூட என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நமது பாதுகாவலர் “பூமியில் ஆண்டவனின் அடையாளம்” என்றிருக்கும் போது அவருக்குத் வருங்காலத்தைக் கூறக்கூடிய வல்லமை இல்லாமலா போய்விடும்.?

காலமானார்
ஜனவரி மாதம் 18ம் நாள் நள்ளிரவைத் தாண்டிய அதிகாலை நேரத்தில் (19ல்) அமர்த்துல் பஹா அவர்கள் கடைசி மூச்சை விட்டார். இந்த துக்கச் செய்தி உலக நீதி மண்றத்தின் அங்கத்தினகட்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அதிகாலை மூன்று மணிக்கு உலக நீதி மன்றத்தின் கூட்டச் சபையில் ஒன்றுகூடினார். அவர்கள் கலந்தாலோசித்த முதல் விஷயம் அமாத்துல் பஹாவை எங்கு அடக்கம் செய்வது என்பதாகும். கார்மல் மலைமீதுள்ள அந்த ஞாபகார்த்த பூங்காக்களில் புனித பாப், அப்துல் பஹா, பஹாவுல்லாவின் துனைவியார் நவ்வாப், பஹாவூல்லாவின் புதல்வி பஹியா கானும் பஹாவுல்லாவின் புதல்வர் மிர்சா மிஹிடி, மற்றும் அப்துல் பஹாவின் துனைவியார் முனிரி கானும் ஆகியோரின் நல்லுடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த பூங்காக்களில் அடக்கம் செய்யப்பட்ட மேற்கூறப்பட்ட அவர்கள் பாவரும் வேறு ஸ்தானங்களைக் கொண்டவர்கள் என்பதனால் அமாத்துல் பஹாவை அங்கு அடக்கம் செய்ய இயலாது. அதே வேளையில் ஹைபா நகரில் உள்ள பொது மயானத்திலும் அடக்கம் செய்யும் அளவுக்கு அமாத்துல் பஹா சாதாரண மனிதரல்லர். இந்த நேரத்தில்தான் பாதுகாவலர் உயிரோடு இருந்தபோது அவர் சொன்ன குறிப்பு உலக நீதி மன்றத்தின் கவனத்திற்கு வந்தது.

அப்துல் பஹா காலமானது முதற்கொண்டு பாதுகாவலரும் பஹியா கானும் அவர்களும் அப்துல் பஹாவின் இல்லத்தில் தங்கிவந்தனர். பஹியா கானும் காலமாகியபின்னர் பாதுகாவலர் ருஹியா கானும் அவர்களை மணந்தார். அவர்கள் இருவரும் அப்துல் பஹாவின் இல்லதில்தான் வாழ்ந்தனர். அப்பொழுது அப்துல் பஹாவின் இல்லத்திற்கு எதிர்புறத்தில் உள்ள ஒரு காலி நிலத்தை பாதுகாவலர் விலைக்கு வாங்கினார். ஒரு நாள் பாதுகாவலர் அந்த நிலத்தை அமாத்துல் பஹாவிடம் காண்பித்து, “அதோ,அதுதான் உன்னுடைய பூங்கா” என்று கோடி காட்டினார். அதன் உள் அர்த்தம் அப்பொழுது அமாத்துல் பஹாவுக்குத் தெரியவில்லை. அதுபோல் பாதுகாவலர் பல விஷயங்களை அமாத்துல் பஹாவிடம் கோடிக்காட்டியுள்ளார். அவை யாவும் பிற்காலத்தில் நடந்தேறியுள்ளன. அத்தகைய கூற்றுகளையும் குறிப்புகளையும் நாம் அமாத்துல் பஹா எழுதிய பிரைஸ்லஸ் பேர்ல் ( விலைமதிப்பில்லா முத்து ) என்ற நூலில் காணலாம்.

ஆகவே பாதுகாவலர் சொன்ன அந்தக் கருத்து உலக நீதி மன்றத்தின் கவனத்திற்கு வந்ததும் பாதுகாவலர் வாங்கிய அந்தக் காலி நிலத்தில் அமாத்துல் பஹாவை அடக்கம் செய்திட உலக நீதி மன்றம் முடிவெடுத்தது, அந்த நிலம் பாதுகாவலர் காலாமாகிப் பனனெடுங்காலமாகவே அப்படியே இருந்து விட்டது. அங்கு மரங்கள் அடர்த்தியா வளர்ந்திடவே பலரின் பாார்வை அந்த நிலத்தின்மீது பாயக்கிடையாது. ஆனால் அமாத்துல் பஹா காலமானபோதுதான் அந்த நிலத்தின் முக்கியத்துவமே புரியவந்தது. ஆகையினால் பாதுகாவலர் அமர்த்துல் பஹா அவர்களை விட்டுப் பிரிவதற்கு முன்னபே அமாத்துல் பஹாவுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுத்தான், அவர் உயிர் துறந்துள்ளார்.

19ம் தேதி அதிகாலையின் கிழக்கு வெளுத்து கதிரவன் உதிர்பதற்கு முன்பே அமாத்துல் பஹாவின் அடக்கத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உலக நீதி மன்றம் செய்துமுடித்துவிட்டது. வேலைகள் மள மளவென்று ஆரம்பிக்கப்பட்டன. 23ம் நாள் பிற்பகல் 2.00 மணிக்கு அன்னவரின் நல்லுடல் அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. அதனால் உலக நீதி மன்றம் சில கட்டளைகளைப் பிறப்பித்தது. முதலாவதாக அமாத்துல் பஹா மறைந்த இல்லத்திற்கு பஹாய்கள் யாரும் போகக்கூடாது என்பதாகும். குறிப்பாக புனித யாத்திரைக்கு வந்துள்ளவர்கள் அங்கு போக அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் புனித நிலத்தில் கூடுதல் காலத்திற்கு தங்கி அமாத்துல் பஹாவின் சவ அடக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்கும் அனுமதிக்கப்படவில்லை. புனித யாத்திரைக்கு வந்தவர்கள் யாத்திரையொடு திரும்பியாக வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் அமாத்துல் பஹாவின் நல்லுடலுக்காக ஒரு பஹாய் அன்பர் ஒரு விசேஷமான சவப்பெட்டியை உருவாக்கினார். அது தரமான தேவதாரு மரத்தல் இருந்து உருவாக்கப்பட்ட சவப்பெட்டியாகும். அமாத்துல் பஹாவின் நல்லுடல் அனுள்ளே கிடத்தப்பட்டு காற்று போகாதபடி முத்றை இடப்பட்டது. அதனால் அவரின் முகத்தைக் காண்பதற்கான வாய்ப்பில்லாமல் மூடப்பட்டிருந்தது. மறுபக்கம் மயானத்தில் புதை குழிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

உலகில் உள்ள தேசிய ஆன்மீக சபைகளை உலக நீதி மன்றம் தொடர்பு கொண்டு அவை தலா இரண்டு பிரதிநிதிகளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டது. பல தேசிய சபைகளும் அவ்வாறு பிரதிநிதிகளை அனுப்பின. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து அப்போது தேசிய அங்கத்துவம் வகிக்காத இருவர் புனித நிலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். அந்த இருவரும் தேசியா சபையின் பிரநிதிகளாக இறுதி மரியாதை நிகழ்வில் கலந்துகொள்ள முடியுமா என அந்த சபை கேட்டதற்கு உலக நீதி மன்றம் மறுத்துவிட்டது.

அடுத்தடுத்த நாட்களில் உள்ளநாட்டு பத்திரிகைகளிலும் பொது தொடர்புச் சாதானங்களிலும் அமாத்துல் பஹாவின் மறைவு பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. உலகம் முழுதும் இருந்து பல பஹாய் அன்பர்களும் விமான நிலையத்தில் வந்திறங்கிய வண்ணம் இருந்தனர்.

பிப்ரவரி மாதம் 23ம் நாளன்று அமாத்துல் பஹாவின் நல்லுடலை அடக்கம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன்பு புனித நிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அமாத்துல் பஹா காலமானது பிப்ரவரி மாதம் 19ம் நாளன்று. அதற்கு சில நாட்கள் முன்பு வரைக்கும் புனித நிலத்தில் உஷ்ணம் அதிகமாக இருந்தது, ஊரே காய்ந்து கொண்டிருந்தது, மழை வர வேண்டும், வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தும் வேண்டியும் கொண்டிருந்தனர். அமாத்துல் பஹா காலமாகிய 19ம் நாளன்று மக்கள் எதிர்பார்த்த அந்த மழை பெய்தது. ஊரும் குளிர்ந்தது, மக்களின் உள்ளமும் குளிர்ந்தது. அந்த வகையில் அமாத்துல் பஹாவின் மறைவு நாளில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

பிப்ரவரி 23ம் நாள் பிற்பகள் 2.00 மணிக்கு அமாத்துல் பஹாவுக்கான இறுதி மரியாதைச் செலுத்தும் நிகழ்ச்சி சம்பவம் நடைபெறுவதாக இருந்தது. அன்றும் கூட மழை லேசாகத் தூறிக்கொண்டுதான் இருந்தது. அப்துல் பஹாவின் இல்லத்திற்கு முன்னால் உள்ள சாலையில் நண்பர்கள் கூடத்தொடங்கினார்கள். பலரும் குடைகளைப் பிடித்தவாறு வந்து கொண்டிருந்தனர். கார்மல் மலைக்கு மேலே கார்மேகங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன. அப்துல் பஹாவின் இல்லத்தின் முன்னே ஒரே அமைதியாக இருந்தது. புனித நிலத்தில் பணிபுரிகின்ற பஹாய்கள் வருகைத் தந்தவர்களை வரவேற்று தக்க இடங்களுக்கு அழைத்துச்சென்றனர்.

மணி இரண்டை நெருங்கும் போது சில கார்கள் அப்துல் பஹாவின் இல்லத்தின் முன்னே வந்து நின்றன. அவற்றில் இருந்து தெய்வச் சமயத் திருக்கரங்களாகிய திரு புருட்டான் மற்றும் டாக்டர் அலி வர்கா ஆகியயோர் இறங்கினார். அமாத்துல் பஹா ருஹியா கானும் காலமானதோடு இப்பொழுது இவர்கள் இருவர் மட்டுமே வாழும் தெய்வ சமயத் திருக்கரங்களாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் அப்துல் பஹாவின் வீட்டின் முன்னே உள்ள பாதையில் நடந்து படிக்கட்டிகளில் ஏறி முன் கதவு வழியாக உள்ளே நுழைந்தனர். அந்தப் பாதையின் இரண்டு ஓரங்களிலும் பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த இருவறையும் தொடந்து உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர்கள், கண்ட ஆலோசகர்கள் இன்னும் அழைக்கப்பட்ட விசேஷமான பிரமுகர்களும் அப்துல் பஹாவின் இல்லத்தினுல் நுழைந்தனர். அந்த வீட்டில்தான் ருஹியா கானும் அவர்களின் நல்லுடல் மூடப்பட்ட சவப்பெட்டியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களும் அழைக்கப்பட்டவர்களும் பஹாய் உலக மையத்தின் ஊழியர்களும் அக்கம் பக்கத்தில் உள்ள பூங்காக்களில் குழுமி இருந்தனர்.

சரியாக மணி இரண்டுக்கு நிகழ்ச்சி ஆரம்பமாக வேண்டும். தீடிரென்டு தூறல் நின்றது, மேகம் கலைந்தது, வானம் தெளிந்தது, சூரிய ஒளி படர்ந்து. நிகழ்ச்சி ஆரம்பமானது.. உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர் திரு யான் சேம்பல் அவர்கள், அமாத்துல் பஹாவின் மறைவைப் பற்றி உலக பஹாய்களுகு உலக நீதி மன்றம் அனுப்பிய செய்தியை வாசித்தார். கடந்த சில தினங்களாக அடாத மழையின் காரணமாக பறவைகளும் பாடுவதை நிறுத்துக் கொண்டன. எண்ணே ஆச்சரியம்! உலக நீதி மன்றத்தின் கடிதம் வாசிக்கப்பட்ட வேளையில் பக்கத்து பூங்காக்களின் மரங்களில் இருந்து பறவைகளும் பாடத் தொடங்கின! அந்த கடிதம் வாசிக்கப்பட்டு முடிந்ததும், ஆறு பிரார்த்தனைகளிள் ஓதப்பட்டு புனித வாசகங்கள் வாசிக்கப்பட்டன. ஒளி பெருக்கிக் கருவிகள் அந்தப் புனித வாசங்களை அப்துல் பஹாவின் இல்லத்திலும் பக்கத்துப் பூங்காக்களிலும் கொண்டு சேர்த்தன. உயிர் துறந்தவர்களுக்கான பிரார்த்தனை கூறி முடிக்கப்பட்டதும், உலக நீதி மன்றத்தின் அங்கத்தினர்கள் அந்த சவப்பெட்டியை சுமந்து கொண்டு அப்துல் பஹாவின் இல்லத்தின் வெளி வாசலில் கொண்டு போய் வைத்தனர். அங்கிருந்து வேறு அறுவர் அந்த சவப் பெட்டியை சுமந்து கொண்டு, சாலைக்கு மறு பக்கம் இருந்த புதைகுழியின் அருகே வைத்தனர். அந்த ஆறுவரும் உலகின் பல்வேறு நிறங்களைப் பிறநிதித்த பஹாய்கள்.

கடந்த நான்கு நாட்களாக அமாத்துல் பஹாவுக்கான சவக்குழியை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. புனித நிலத்தில் ஒரு பழக்கம் உண்டு.சவக்குழியைத் தோண்டி, குழியின் அடியிலும் நான்கு ஓரங்களிலும் சிமென்டு பூசுவார்கள். சவப்பெட்டி உள்ளே இறக்கப்பட்டவுடன் சிமெண்டினால் செய்யப்பட்ட தட்டையான மூடியினால் சவக்குழியை மூடி விடுவார்கள். அமாத்துல் பஹாவுக்கும் அவ்வாறான புதை குழிதான் உருவாக்கப்பட்டிருந்தது. அன்னவரின் சவக் குழியின் ஓரங்களில் ரோஜா மலர்கள் பொறுத்தப்பட்டன. உலகின் மூலை முடுக்குகளில் இருந்து வந்த நுாற்றுக்கணக்கான பூக்கூடைகள் அருகில் அழகுற அடுக்குவைக்கப்பட்டிருந்தன. அதனால் அந்த இடமே இடுகாடு போல காட்சித் தராமல் நந்தவனம் போல கோலம் கொண்டது.. சவப் பெட்டியின் மீதும் ஏராளமான ரோஜாப் பூக்கள் அடுக்கிவைக்கப்பட்டன. சவக் குழியின் அருகே மூன்று பிரார்த்தனைகள் கூறப்பட்டன. இத்துடன் மொத்தம் ஒன்பது பிரார்த்தனைகள் கூறப்பட்டுள்ளன. அதன் பின்பு அமாத்துல் பஹாவின் நல்லுடலைத் தாங்கிய சவப் பெட்டி புதை குழியினுள் இறக்கப்பட்டது. உலக நீதி மன்றத்தின் மதிப்புமிகு அங்கத்தினர்களும் இன்னும் உயிர் வாழும் இரண்டு தெய்வச் சமயத் திருக்கரங்களும் இன்னும் பலரும் கண்ணீர் பெருக்கெடுக்க சோர்ந்த முகத்தோடு இருந்தனர். சவப் பெட்டி இறக்கப்படும் வரைக்கும் தூறாமல் இருந்த வானம், சவப் பெட்டி இறக்கபடும் வேளையில் மீண்டும் தூறி, தன் கண்ணீர்த் துளிகளையும் காணிக்கையாகச் செலுத்தியது. இந்த முறை பலமாகவே மழை பெய்தது. சவப் பெட்டி இறக்கப்பட்டதும், அக்குழியின் மேலே தட்டையான சிமென்டு மூடிகள் போட்டு மூடப்பட்டது. அங்கு வந்திருதவர்கள் தங்கள் கடைசி மரியாதையைச் செலுத்தினார். வருகைத் தந்தவர்கள் மழையைப் பொருட்படுத்தாமல், பூக்கூடையில் இருந்து ஒவ்வொரு பூவாக எடுத்து சவக்குழியின் மீது வைத்தனர். அங்கு ஒரு மலர் மலையே உருவாகியது. ஒரு மணி நேரத்திற்குள் அந்த இடமே காலியாகியது.. அங்கிருந்து பார்த்தால் ஹைபா வளைகுடாவுக்கு மேலே வானவில் தன் வண்ணக் கோலத்தைக் காட்டியது. லண்டனில் பாதுகாவலர் அடக்கம் செய்யப்பட்ட போதும் இது போலத்தான் மழை பெய்துள்ளது. அப்படி ஒரு பொருத்தம்.

மறுநாள் புனித நிலத்தில் இன்னெரு அதிசயம். வானம் தெளிவாகியது. சூரியன் சுத்தமான ஒளி வீசியது. ஓரு புது பொலிவும் உற்சாகமும் புனித நிலத்தில் குடிகொண்டது! ‘என் உதவியாளர் “என் கேடயம்,” “நான் சுமந்துள்ள கடினமான பணிகளை நான் மேற்கொண்டபோது என் அயாரத ஒத்துழைப்பாளர்.” என்றெல்லாம் பாதுகாவலரினால் அழைக்கப்பட்டவர் இந்த அமாத்துல் பஹா. 1952ம் ஆண்டில் தெய்வச் சமயத் திருக்கரம் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்ட அவரின் நல்லுடல் இன்று புனித நிலத்தில் பாதுகாவலரினால் தேர்தெடுக்கப்பட்ட தனி நிலத்தில் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்துள்ளது.

முடிவாக
அமாத்துல் பஹா ருஹியா கானும் அவர்களின் வழ்க்கை மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையாகும். பாதுகாவலரினால் மிகவும் போற்றப்பட்டவர்கள் அமாத்துல் பஹாவின் பெற்றோர்கள். அப்துல் பஹா பிரார்த்தனை கூறி, அதன் வழி பிறந்தவர் தான் ருஹியா கானும். அமாத்துல் பஹா அவர்கள் பாதுகாவலரின் துணைவி என்ற முறையிலும், தெய்வ சமயத் திருக்கரம் என்ற முறையிலும், பேச்சாளர் என்ற முறையிலும், நாடாகமாந்தர் என்ற முறையிலும் எழுத்ாளர் என்ற முறையிலும், போதகர் என்ற முறையிலும்,படத்தயாரிப்பாளர் என்ற முறையிலும், இன்னும் ஒரு பஹாய் சேவகி என்ற முறையிலும், உலகுக்கே உதாரணமாகத் திகழ்ந்தார். தாம் தொட்ட துறைகள் யாவுமே துலங்கிடும் வண்ணம் அவர் சேவை செய்தார். சென்ற நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டு வரைக்கும், 90 வயது வரை வாழ்ந்து மூன்ற தலைமுறையினரும் முக்காலமும் நினைவில் வைக்கவல்ல வாழ்க்கையை வாங்கினார். பாதுகாவலர் லண்டனில் 1957ல் காலமான பின்பு 1958ம் ஆண்டில் அவருக்கான கல்லறையை அமாத்துல் பஹா எழுப்பினார். அமாத்துல் பஹா காலமான போதும் பாதுகாவலர் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த நிலத்தில் தான் அமாத்துல் பஹா அடக்கம் செய்யப்பட்டார். அப்படி ஓர் ஆன்மீக பந்தம் அவர்களுக்கு இடையில்! அமாத்துல் பஹா அடக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சம்பிரதாயத்திற்குச் சொன்னாலும் கூட, அவர் விட்டுச் சென்ற சேவைகளின் வழியாக, அவர் வாழ்ந்துக் காட்டிய உதாரணங்களின் வழியாக அவர் என்னெற்றும் நம் இதயத்தில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

மோனா மஹ்முட்நிஸாட்


மோனா

பெண்கள் தங்கள் ஆன்மீக சுய உரிமைகளின்பால் விழிப்புணர்வு பெறுவதற்காகப் போராடி இறுதியில் தமது சமய நம்பிக்கைக்காக உயிரையே தியாகம் செய்தவராக தாஹிரி அம்மையார் விளங்குகிறார். இவரது வழியில் மேலும் பல பெண்கள் தங்களது சமய நம்பிக்கைக்காக உயிர்த்தியாகம் செய்தும் சமய சேவையில் மின்னும் நட்சத்திரங்களாக இருந்தும் உள்ளதை பஹாய் சமய சரித்திரம் விவரிக்கின்றது. ஆணைப்போல் வேடமிட்டு ஆண்களுக்கு நிகராக நைரிஸ் கொந்தளிப்பின் போது போராடிய ஸைனாப், அப்துல் பஹா காலமான பிறகு அச்செய்தி கேட்டு தாங்கொன்னா துயரில் துவண்டு போன பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி சுமார் இரண்டு வருட காலம் ஓய்வெடுக்க சுவிட்சர்லாந்து சென்ற போது பஹாய் உலக சமயத்தை வழிநடத்திய அதிப் புனித இலையான பாஹிய்யா காஃனும், முன்னனி போதகர் என பாதுகாவலரால் பெயரிடப்பட்ட மார்த்தா ரூட் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களுக்கு நிகராக பெண்குலத்தின் மணிகள் போன்று பலர் தோன்றி மறைந்துள்ளனர். இவர்களில் ஒருவராக பதினாறே வயதில் தமது சமய நம்பிக்கைக்காக சிறை சென்று தமது உயிரையும் தியாகம் செய்த மோனா திகழ்கின்றார். அவரது கதையே இது.

மோனாவின் தந்தையான யாடுல்லா மஹ்மூட்நிஸாட் ஈரான் நாட்டில் பிறந்து ஏமன் நாட்டிற்கு பஹாய் போதகராக சென்றவர். அங்குதான் மோனாவும் அவரது சகோதரியான தராணிஃயும் பிறந்தார்கள். அரசியல் காரணங்களினால் மஹ்மூட்நிஸாட் குடும்பத்தினர் ஈரான் நாட்டிற்கே மீண்டும் திரும்ப நேர்ந்தது. ஷிராஸ் நகரில் அவர்கள் வாழத்தொடங்கினர். அந்நகரின் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபை அங்கத்தினராக மட்டுமின்றி அதன் செயலாளராகவும் மஹ்மூட்நிஸாட் இருந்தார். அதோடு துனைவாரிய உறுப்பினரின் உதவியாளராகவும் அவர் சேவையாற்றினார். சிறு வயதிலிருந்தே மோனா தன் தந்தையோடு பல சமயப் பணிகளில் ஈடுபட்டார். 1980-களில் சமயத்திற்கு எதிர்ப்பு வந்த போதும் இச்சேவை தளரவில்லை. அப்போதேல்லாம் மோனா மேலும் உறுதியுடன் சேவை செய்யவேண்டும் எனும் நோக்கத்துடன் இளம் மோனா ஒரு பஹாய் ஆக இருப்பதன் பொறுப்புகளை உணரவேண்டும் என மோனாவின் தந்தை கூறுவார்.

மோனாவின் தந்தை செல்வம் படைத்தவர் அல்ல. ஷிராஸ் நகரில் ஒரு சிறிய வீட்டிலேயே இவர்கள் வாழ்ந்து வந்தனர். சிறு வயதிலேயே மோனா கல்வியில் மிகுந்த நாட்டமுடையவளாக இருந்தாள். சமயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வமும், சித்திரம் வரைதல், கைவேளைப்பாடு , தையல், பூவேளைப்பாடு போன்றவற்றில் ஈடுபாடு கொண்டும் இருந்தாள். வயதுக்கு மீறிய சமய நம்பிக்கையும் மனமுதிர்ச்சி கொண்டவளாகவும் இருந்தாள். 15 வயதில் மோனாவின் வீட்டில் முதியோருக்கென நடத்தப்பட்ட சமய வகுப்புகளில் பதின்ம வயதினளான மோனாவே அதிக நாட்டம் காட்டினாள். அங்கு படிக்கப்பட்ட புனித வாசகங்கள் அனைத்தையும் மனனம் செய்ததோடு அந்த வகுப்புகளில் ஒவ்வொரு வாரமும் தவறாமல் கலந்துகொள்ள சிறு வயதினளான மோனா கெஞ்சி அனுமதியும் வாங்கினாள். 1980-களில் நடந்த கலவரங்களில் பஹாய்கள் அனுபவித்த கொடுமைகளும், புனித பாப் அவர்களின் இல்லம் இடிக்கப்பட்டதும் மோனாவின் சமயநம்பிக்கையை தகர்க்காமல் பலப்படுத்தவே செய்தன.

குழந்தைகளின் ஆசிரியராக பாலர் வகுப்புகளை நடத்தவாரம்பித்த மோனா அவ்வகுப்புகளில் மனனம் செய்யப்பட வேண்டிய புனிதவாசகங்களையும் பிரார்த்தனைகளையும் தானாகவே தேர்ந்தெடுத்து தொகுத்து குழந்தைகளை மனனம் செய்யச் செய்தாள். பஹாய் புத்தகங்கள் ஒரு காலத்தில் கைக்கு எட்டாமல் போகும், அப்போது படிக்கவேண்டிய அனைத்தும் குழந்தைகளின் மனதிலேயே இருக்குமல்லவா!

1980 கலவரங்களின் உச்சகட்டத்தில் பாப் அவர்களின் புனித இல்லம் இடிக்கப்பட்ட அன்று அந்த இல்லம் இருந்த இடத்திற்கு மோனா ஒரு புனித யாத்திரை மேற்கொண்டாள். வீடு திரும்பிய போது உள்ளே நுழையாமல் வாசலிலேயே நின்று அவள் தன் தாயை கூவி அழைத்து, “அம்மா இன்று நான் என் காலனிகளோடு வீட்டிற்குள் நுழையலாமா?” என வினவினாள். ” ஏன் இன்று மட்டும் புதுமையாக காலனிகளோடு வீட்டிற்குள் வரவேண்டும்?” என தன் தாய் கேட்டபோது, “அவை புனித பாப் அவர்களின் இல்ல இடிபாடுகளிற்கிடையே நடந்து வந்துள்ளன.” “அந்த புனிதத் தூசு என் காலனிகளில் ஒட்டியுள்ளன,” என்றாள். அவளைப் பார்க்கையில் ஒரு வயது முதிர்ந்த மனோபாவமும் மனப்பக்குவமும் கொண்டவளாகவே விளங்கினாள். கவர்ச்சியும், மரியாதையும், அதே வேளையில் ஒரு குழந்தையின் இனிய சுபாவம், வெகுளித்தன்மை மற்றும் தூய்மையும் அவளுடையதாக இருந்தன. உயர்ந்த மெலிந்த தேகமும், நீண்ட செம்மையான கூந்தலும், பசுமை நிறக் கண்களும் கொண்டவள் மோனா. எப்போதும் முகத்தில் ஒரு அழகான புன்னகை மிதந்து கொண்டே இருக்கும். பள்ளியில் மிகவும் பிரபலமானவளாகவே இருந்தாள்.

பஹாய்கள் பரவலாக சிறை செய்யப்பட்ட நாட்களில் தானும் சிறை செய்யப்பட்டதை மோனா தன் வாயாலேயே விவரிக்கின்றாள்:

1982 அக்டோபர் 23 அன்று சாயங்காலம் 7.30-க்கு நான் என் பள்ளிப்பாடங்களை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது வாயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. என் தந்தை கதவைத் திறந்தார். அப்போது ஆயுதம் ஏந்திய 4 காவலர்கள் கதவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களை என் தந்தை தாம் யாரென அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டினார். அதற்கு அவர்கள் “நாங்கள் ஷிராஸ் நகர புரட்சி நீதிமன்றத்தின் காவலர். உங்கள் வீட்டை சோதனையிட வேண்டும், அதற்கு எங்களுக்கு அனுமதியும் உண்டு,” என்றனர். அவ்வனுமதியைப் பார்க்கவேண்டும் என என் தந்தை அமைதியாகக் கேண்டுக் கொண்டார். ஒரு காகிதத்தைக் கொடுத்தனர். அதைப் பார்த்துவிட்டு என் தந்தை அவர்களை வீட்டிற்குள் வர அனுமதித்தார். பல மணி நேரங்கள் வீட்டைச் சொதனையிட்ட பின் சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டனர். அப்படங்கள் உயிரோடும், மரணம் அடைந்தும் இருந்த சில பஹாய் அன்பர்களுடையது. அந்தப்படங்கள் யாருடையது என கேட்டபின், “உங்கள் சமயம் எது,” என என்னை கேட்டனர். “பஹாய் சமயம்,” என நானும் பதிலுரைத்தேன். என் தந்தையின் பஹாய் கடிதப்போக்குவரத்துகள் சிலவற்றையும், படங்கள் மற்றும் நூல்கள் சிலவற்றையும் கையில் எடுத்துக் கொண்டு, என் தந்தையும் நானும் அவர்களோடு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என அறிவித்தனர். அதற்கு என் தாய், என் கனவரை அழைத்துச் செல்லுங்கள் ஆனால் இந்த இருட்டு வேளையில் இச்சிறுமியை ஏன் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கொந்தளிப்புடன் கேட்டார். அதற்கு அவர்கள், “சிறுமி அல்ல, பஹாய் ஆசிரியை,” என்றனர். “இவள் எழுதியவற்றைப் பார்க்கும் போது இவள் வருங்காலத்தில் மிகவும் ஆக்கம் நிறைந்த ஒரு பஹாய் போதகியாக விளங்குவாள்,” எனக் கூறினர். என் தந்தை என் தாயாரைப் பார்த்து, பயப்படவேண்டாம் என ஆறுதல் கூறி, இது நிச்சயமாக இறைவனின் விதி, இச்சகோதரர்கள் மோனாவை தம் சகோதரியைப் போல் நிச்சயமாக நடத்துவர் என்றார்.

வேறு வழியின்றி நான் என் தாயாரிடம் விடைபெற்றுக் கொண்டு என் தந்தையோடு காவலர்களின் பின் சென்றேன். சிறையை அடைந்தவுடன் அதன் வாசலில் எங்கள் கண்கள் கட்டப்பட்டன. பிறகு சிறையின் ஓர் அரைக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு சில காவலர்கள் உறக்கக் கத்தி என் சமயத்தை இழிவுபடுத்தியதோடு மேலும் வேறு எதற்கோ என்னை நோக்கி கத்தினார்கள். என் தந்தையிடமிருந்து நான் பிரிக்கப்பட்டு ஒரு பெண் காவலரால் உடற் சோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். மறுபடியும் என் கண்கள் கட்டப்பட்டு கைதிகளுக்கான ஒரு பொது அறையில் கண்கட்டு அவிழ்க்கப்பட்டு விடப்பட்டேன்.

சிறிது நேரம் என்னால் எதையும் அந்த இருட்டில் பார்க்கமுடியவில்லை. ஒரு கைதி அப்போது என்னை நோக்கி வந்து நான் படுப்பதற்கு ஓர் இடத்தை சுட்டிக் காட்டி, நீ ஏன் இங்கு வந்தாய் என வினவினார். அதற்கு நானும், நான் ஒரு பஹாய், நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்றேன். அக்கைதி பிறகு இரு அழுக்கான போர்வைகளைக் கொடுத்தார். சிறிது நேரம் சென்ற பின் என்னால் அந்த இடத்தை நன்கு பார்க்க முடிந்தது. அது ஒரு பெரிய அறை. வயதான பெண்களும் இளம் வயதினருமாக பலர் அங்கு படுத்திருந்தனர். அங்கு வந்த முதல் பஹாய் நானாகையால் வேறு யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. என் தந்தை எங்கு இருக்கின்றார் எனவும் தெரியவில்லை. அமைதியாக அந்தப் பென்மனி சுட்டிக்காட்டிய மூலையில் படுத்துக்கொண்டு, இறைவனுக்கு நன்றி நவிழும் பிரார்த்தனை ஒன்றை கூறினேன். அப்பொழுது, நான் ஒரு பலகனியில் நின்று கொண்டு நிலவை நோக்கிச் செல்வதைப் போல் உணர்ந்தேன். ஆனால் என் தாயாரின் கவலை தோய்ந்த முகமே அப்போது என் கண்முன் தோன்றியது. என் தாய் தந்தையர் இருவரும் உறுதியுடன் இருக்க பிரார்த்தனை ஒன்றைக் கூறிவிட்டு நாளை என்ன காத்திருக்கிறதோ என நினைத்து படுக்கச் சென்றேன்.

படுக்கையில் தூங்காமல் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டிருந்த போது கதவு திறக்கப்பட்டு ஒரு பெண்மனி உள்ளே நுழைந்தார். அவர் ஒரு பஹாய் என்பதை அப்போது நான் உணரவில்லை. அவர் திருமதி ஈரான் அவாரிகான் என பிறகு அறிந்தேன் சிறிது நேரம் கழித்து சிறைக் கதவு மீண்டும் திறந்து மேலும் ஒரு பெண்மனி நுழைந்தார். “அவர் என் ஒற்றைத்தலைவலி மாத்திரைகளைக் கொடுங்கள். அவை இல்லாமல் என்னால் இருக்க முடியாது”, என்று கதறினார். ஆனால் காவலர் யாரும் அவரை சட்டை செய்யவில்லை. அவர் பெயர் திருமதி ஸாயர்ப்பூர். அவர் நாங்கள் படுத்திருந்த மூலைக்கு வந்தார். அங்கு படுத்திருந்து திருமதி ஈரானைப் பார்த்தவுடன் அவர் திருமதி ஈரானை கண்டுகொண்டு உணர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார். குரல்கள் பழக்கமானவையாக இருக்கின்றனவே என நான் அவர்கள் அருகில் சென்றேன். அவர்கள் இருவரும், “மோனா, நீயா? நீ ஏன் இங்கு வந்தாய் உன்னையுமா இவர்கள் கைது செய்துவிட்டனர்?” என அதிர்ச்சியுடன் கேட்டனர்.

அவ்வேளை என்னுள் ஒரு சாந்த உணர்வு உண்டாகக் கண்டேன். என் தாயாரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டாலும் சிறையில் எனக்கு பல தாய்மார்களும் சகோதரிகளும் இருப்பதைக் கண்டேன்.

அன்று இரவு சுமார் 40 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு, அதில் பெண்கள் அனைவரும் மோனா இருந்த அறைக்கு கொண்டு வரப்படுவர் என அறிந்தவுடன் மோனா வருவோர் அனைவருக்கும் ஒரு சுகமான சூழ்நிலையை உருவாக்க முடிவெடுத்தாள். அங்கிருந்த அனைவரிலும் மோனாவே மிகவும் வயது குறைந்தவள். அந்த அறையில் பிற மதத்தைச்சார்ந்தவர்கள், போதை பித்தர்கள் கொலைகாரர்கள் உட்பட அனைவருக்கும் மோனா செல்லமானவளாக விளங்கினாள். அவர்கள் மோனாவை “குட்டிக் கைதி” என அழைத்தனர்.

“சேப்பா” எனப்படும் வேறொரு சிறைச்சாலைக்கே நாங்கள் விசாரனைக்காக பெரும்பாலும் கொண்டுசெல்லப்படுவோம். அப்போது என்னை விராரணை செய்த அரசாங்க வழங்கறிஞர் என்னை இழிவாகப் பேசி, “உன் தாய் தந்தையர் உன்னை வழி தவரச் செய்து உன்னை பஹாய் சமயத்தில் இனைத்துவிட்டனர்,” என்று கூறினார். அதற்கு நான், “என் பெற்றோர் என்னை வழி தவரச் செய்யவில்லை. நான் ஒரு பஹாய் குடும்பத்தில் பிறந்தது உண்மைதான் ஆனால் நான் என் சுய விருப்பத்தின் பேரிலேயே இச்சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன். பிறரைப் பற்றி ஒருவர் பஹாய் ஆவதில்லை ஆனால், சுயமாக உண்மையை ஆராய்ந்த பிறகே பஹாய் ஆகிறார். உங்களிடம் பல பஹாய் புத்தகங்கள் உள்ளன. அவற்றைப் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாமே,” என பதிலளித்தேன். “என் பெற்றோர் என்னை பஹாய் ஆகச்சொல்லி எப்போதுமே வற்புறுத்தியதில்லை,” என்றேன். குறுக்குவிசாரனை செய்தவர் பிரமித்துப்போனவராய், “இளம் பெண்ணே, உன் சமயத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்,” என வினவினார். நான், “இந்த சிறையில் இருப்பதே என் சமயம் எனக்குத் தந்துள்ள உறுதியை புலப்படுத்துகிறதல்லாவா,” என்றேன். “பள்ளிச் செல்லும் நான் இந்த பயங்கர சிறையில் அடைக்கப்பட்டு, இப்போது உங்கள் முன் நிறுத்தப்பட்டும் உள்ளேன். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் சக்தியும் மனவுறுதியும் எங்கிருந்து வந்ததென்று நினைக்கிறீர்?” பிறகு அவர் என்னை ஒரு பிரார்த்தனை செய்யுமாறு பணித்தார்.

நான் “இறைவா என் ஆன்மாவைப் புத்துணர்வுபெறச் செய்து …” எனும் பிரார்த்தனையை அமைதியாகவும் மரியாதையுடனும் கூறினேன். இடையிலேயே என்னை நிறுத்தச்சொல்லி அவர் சிறிது நேரம் மௌனமாக நின்றார். அவர் அப்பிரார்த்தனையால் பாதிக்கப்பட்டாலும் தவறான அவரது முன்னபிப்பிராயங்கள் அவர் கண்களை மறைத்துவிட்டிருந்தது. பிறகு அவர், “நீ ஏன் பிரார்த்தனையை ஓதவில்லை?” என்றார். “உன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பல ஒலிநாடாக்களில் உன் அழகான குரல்வளம் காணக்கிடக்கிறது. ஒலி நாடாக்கள் வழி உன் அழகான குரல் வளத்தினால் நீ பல இளைஞர்களை வழி தவரச்செய்திருக்கின்றாய். இதிலிருந்தே உன் குற்றம் புலப்படுகிறது.” அதற்கு நான், “பிரார்த்னை ஓதுவது ஒரு குற்றமா,” எனக் கேட்டேன். அதற்கு அவர், “தற்போதைய சமயத்தில் நீ என்ன குறை கண்டாய்,” என்றார். அதற்கு நான், “நான் எல்லா சமயங்களையும் ஏற்றுக் கொண்டுள்ளேன். ஆனால் காலத்துக்குக் காலம் அவை வேறுபடுகின்றன. இக்காலத்திற்கென்று பஹாவுல்லா வந்துள்ளார்,” என்றேன். அதற்கு அவர் “நீ இந்நாட்டு சமயத்தை பின்பற்றவேண்டும் அல்லது மரணத்தைத் தழுவேண்டும்,” என்றார். அதற்கு நான், “மரண தண்டனை கட்டளையை முத்தமிட்டு வரவேற்கிறேன்,” என்றேன்.

கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் தன் கணவனும் மகளும் என்னவானார்கள் எனத் தெரியாமல் மோனாவின் தாய் தவித்துக்கொண்டிருந்தார். எத்தனை முறை அவர்களைக் காண சேப்பா சிறைக்குச் சென்று அவர்களைக் காணமுடியாமல் வீடு திரும்பினார்! அவர் கூறியது: “அன்று ஒரு நாள் நவம்பர் 19, 1982, வெள்ளிக்கிழமை, வீட்டின் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துகொண்டு, வருவோர் போவோரையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். தங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியாத நிலையில் அவர்கள் தங்கள் காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணம் தோன்றிய மறு கனமே என் நெஞ்சம் விம்மத் தொடங்கியது. விம்மலில் ஆரம்பித்து காட்டாற்று வெள்ளமோ என எண்ணும் அளவிற்கு கண்ணீர் பெருகியோடிற்று. இறைவனை உறக்கக் கூவி அழைத்தேன். இறைவா! என் குழந்தை எங்கே? அவளை என்னிடம் சேர்ப்பித்துவிடு. அவளிடம் இருந்து ஒரு செய்தி கூட இல்லையே!” எனக் கதறினேன். வானத்தைப் பார்த்து, “அந்தப் பறவைகள் எல்லாம் சுதந்திரமாக இருக்கின்றனவே, என் சின்னப் பறவை கூண்டில் அடைபட்டுக் கிடக்கின்றதே!” என விம்மினேன்.

அதற்கு மறுநாள், சனிக்கிழமை, மோனாவின் தாயார் சேப்பா சிறைக்குச் சென்றார். அன்றுதான் முதன் முறையாகத் தன் மகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார். இருந்தும் ஒருவரோடு ஒருவர் பேச அனுமதி கிடையாது. ஒரு மொத்தமான கண்ணாடி கைதிகளையும் என்னையும் பிரித்துவிட்டிருந்தது. பஹாய் பெண் கைதிகள் வரிசையாக நின்றனர். மோனாவைப் பார்த்தவுடன் என் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அப்போது மோனா என்னை அழவேண்டாம் என சைகை மூலம் கூறினாள். அன்று அவர்கள் அனைவரும் பிற்பகல் மணி ஒன்று முதல் அடுத்த நாள் காலை மணி மூன்று வரை விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தனர் என்பது எனக்குப் பிறகு தெரிய வந்தது. பிறகு அதே வருடம் டிசம்பர் மாதம் அவளைக் காண நான் சேப்பா சென்றிருந்தபோது, அவள் அங்கு இல்லையென்றும், அடிலபாட் சிறைக்கு மாற்றப் பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது. உடனடியாக நானும் என்னுடன் வந்திருந்தோரும் அடிலபாட் சிறைக்குச் சென்றோம். அன்று மோனாவுக்கு உடல் நிலை சரியில்லாம்ல் இருந்தது. குளிர் காலமாகையால் அவளுக்கு ஜுரம் கண்டிருந்தது. ஒரே ஒரு பழைய போர்வை மட்டும் கொடுத்திருந்தார்கள். அது பனிக்காலத்தின் கடுங் குளிரிலிருந்து மோனாவை பாதுகாக்கமுடியவில்லை. அந்த நிலையில் மோனாவைக் கண்ட நான் என் வசமிழந்து கதறினேன். தொடர்புக்காக வழங்கப்பட்டிருந்த இருவழி தொலைபேசியில் என் கண்ணீருக்காக நான் மோனாவிடம் மண்ணிப்புக் கோரினேன். “என் நிலையை என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை. உன் பிரிவால் ஏங்கித் தவிக்கின்றேன் கண்ணே,” எனக் கூறினேன். அப்போது மோனாவின் கண்களிலும் கண்ணீர் பெருகத் தொடங்கியது. ஆனால் அவள் தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு, “அம்மா நாங்கள் இங்கு வசதியாகத்தான் இருக்கின்றோம். யாதொரு குறையுமில்லை. முன்னைய சிறையைக் காட்டிலும், இந்த சிறை ஒரு மாளிகை. எங்களுக்குக் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வரை வழங்குகிறார்கள். மிகவும் வசதி அம்மா,” என்றாள்.

மோனா என்னையும் என்னுடன் கூட வந்திருந்தோரையும் தேற்றினாள். அவளுக்கு எப்போதும் பிறரைப் பற்றிய அக்கரை அதிகம். எல்லோர் மேலும் தன் அன்பையும் களிப்புணர்வையும் பொழிவாள். “அப்பாவை இங்கு கொண்டுவந்துவிட்டார்கள் என்று தெரிந்தால் அவருக்கு உடனடியாக போர்வைகள் கொண்டுவாருங்கள், இல்லை என்றால் அவருக்கும் ஜுரம் வந்துவிடும்,” என்றாள். பிரியும் நேரம் வரும்போது, நாங்கள் ஒருவரை ஒருவர் தொடமுடியாததால், எங்கள் ஆள்காட்டி விரலை வாய்மேல் வைத்துப் பிறகு எங்களைப் பிரிக்கும் கண்ணாடி மேல் வைத்துப் பிரியாவிடை பெறுவோம். அப்போதெல்லாம் மோனாவின் கண்களில் பற்றின்மையும் ஓர் ஆழ்ந்த விவரிக்க முடியா களிப்பும் தெரிந்தது.

மோனாவிற்கு ஓரிரண்டு தடவைகள் சிறையிலிருந்து தற்காலிக விடுதலை கொடுக்கப்பட்டது. அதற்காக 5 லட்சம் டூமான்கள் கேட்கப்பட்டன. அதை எப்படியோ மோனாவின் தாயார் கொண்டுவந்தார். ஆனால் மோனாவின் தாயாரைக் கண்ட புரட்சி நீதிமன்ற காவலர், “நீ 9 வருடங்களுக்கு முன்பு சமூக வளக் குழுவில் இடம் பெற்றிருந்தாய். ஆகவே இந்த வைப்புத் தொகையை உனக்காக வைத்துவிட்டு 24 மணி நேரத்தில் சிறையில் சரணடைய வேண்டும்,” என்றார். மோனாவின் தாயார் அடுத்த நாளே சரணடைந்தார்.

மோனாவின் தாயாரும் சிறை செய்யப்பட்டபின், அவர், மோனாவும் தாஹிரி எனும் மற்றொரு பஹாய் பெண்மணியும் தங்கியிருந்து அறையில் அடைக்கப்பட்டார். ஒவ்வொரு அறைக்கும் ஒரு படுக்கைதான் இருந்தது. நாங்களோ மூன்று பேர். மோனா என் அருகே தரையிலும், தாஹிரி கதவருகேயும் படுத்துக்கொண்டனர்.

மோனா, சிறை வாழ்க்கைக்கும் வெளி வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாட்டை விவரித்து, “சிறையில் ஒருவர் நிறைய நேரம் பிரார்த்தனை செய்து, அழாமல், கொடுமைகளை வெளியில் தெரியாமல் சகித்துக் கொள்ளவேண்டும்,” என்றாள். “நான் உங்கள் மகள்தான், ஆனால் நாம் இங்கு அந்த பந்தம் பற்றிய எண்ணம் இல்லாமல் நடந்துகொள்ளவேண்டும்,” என்றாள். “இங்கு பலர் தங்கள் தாய்களையும் பிள்ளைகளையும் பிரிந்து இருக்கின்றார்கள், ஆகவே நீங்கள் மற்றவர்களைப்போலவே என்னையும் நடத்த வேண்டும்,” என்றாள். ஒவ்வொருவரும் தாங்கள் கைது செய்யப்ட்ட காரணத்தை ஒட்டி முடிவெடுக்கும் நேரம் வரும்போது, அவள் என்னைப்பார்த்து, “அம்மா, நீங்கள் நீங்களாக உங்கள் சொந்த முடிவை எடுங்கள். பிறரைப் பார்த்து முடிவு செய்யாதீர்கள்,” என்றாள். “சிறைவாசம் எதை பிடுங்கிக் கொண்டாலும், நம் ஒவ்வொருவருடைய மனசுதந்திரத்தை அது ஒன்றும் செய்ய முடியாது,“ என்றாள்.

மோனா எப்போதும் தனியாக இருக்கவே விரும்புவாள். ஒரு சிறை அறை காலியாக இருந்தால் அங்கு அவள் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பாள். நீண்ட நேரம் பிரார்த்தனை செய்வாள். இறைவனுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள விரும்பினாள். அவள் மிகவும் கலைத் திறமை வாய்ந்த பெண். சித்திரம் மற்றும் கைவேலைப்பாடு செய்வதில் மிகுந்தப் பிரியம் கொண்டவள். சிறையில் இதையெல்லாம் செய்யமுடியாமல் போனது அவளுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. பெரும்பாலும் பிரார்த்தனை நிலையில் இருந்தாலும், நேரம் கிடைத்தபோதெல்லாம், சிறையில் இருந்த மற்ற பஹாய் அல்லாத கைதிகளுடன் நிறைய நேரம் செலவளிப்பாள். அவர்களுக்குப் பாடல் கற்றுக் கொடுப்பதுடன் நிறைய நேரம் பேசிக்கொண்டும் இருப்பாள். இந்தக் கைதிகள், மோனாவை எப்போது இழுத்துச் சென்று அவளுடன் நேரத்தைக் களிக்கலாம் என்று காத்திருப்பார்கள். சிறையிலும் கைதிகளின் மத்தியில் அவள் மிகவும் பிரபலமாக இருந்தாள்.

ஒரு நாள் பஹாய் அல்லாத சிறைக் கைதி ஒருவர், பதப்படுத்தப்பட்ட பழம் ஒன்றை தம்மை சிறையில் காணவந்தோரிடமிருந்து பெற்று வந்தார். அந்தப் பழமோ மிகவும் சிறியது. ஒருவருக்கே பற்றாது. யாரிடம் கொடுப்பது என்ற கேள்வி. அப்போது அவ்வழியாக வந்த மோனா, அந்தப் பழத்தை வாங்கிச் சென்று, சிறிது நேரத்தில் ஒரு தட்டுடன் திரும்பி வந்தாள். அந்தத் தட்டில், அச்சிறிய பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, எல்லோரையும் கூப்பிட்டுப் பகிர்ந்தளித்தாள். விளையாட்டாக அந்த செயல் இருந்த போதிலும் மோனாவின் பகிர்ந்துகொள்ளும் சுவபாவத்தையே அது வெளிப்படுத்தியது.

சில காலம் சென்று, பஹாய் கைதிகளின் குடும்பத்தினர், கைதிகளை நேரடியாகக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அன்று மோனாவும் அவள் தாய் மற்றும் தந்தோயோடு ஒன்று கூடும் வாய்ப்பு கிட்டியது. மோனாவின் தந்தை நிச்சயமாக கொல்லப்படுவார் என்று மோனாவிற்கும் அவள் தாய்க்கும் தெளிவாகத் தெரிந்துவிட்டது. “இந்தப் பிரிவு நிரந்தரமானதல்ல,” என்றார் மஹ்மூட்நிஸாட்., “கூடிய விரைவில் நாம் எல்லோரும் ஒன்று கூடுவோம். நாம் ஏமன் நாட்டுக்குச் சென்றது ஞாபகம் இருக்கின்றதா? நான் முதலில் சென்று அங்கு நாம் எல்லோரும் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடுசெய்யவில்லையா? அது போல்தான் இதுவும்,” என்றார். பிறகு அவர் மோனாவைப் பார்த்து, “சுவர்க்கத்தில் இருக்கின்றாயா, இவ்வுலகில் இருக்கின்றாயா?” என வினவினார். அதற்கு மோனா, “நான் சுவர்க்கத்தில் இருக்கின்றேன்,” என்றாள். பிறகு மோனா தன் தந்தையை முத்தமிட்டு வேறு ஒன்றும் சொல்லவில்லை. அதன் பிறகு இருவருமே ஒன்றும் பேசவில்லை. ஒரு பார்வையிலேயே அவர்கள் இருவரும் ஒருவர் மனதை ஒருவர் புறிந்துகொள்ளக்கூடியவர்கள்.

இதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, மோனாவின் தந்தை தூக்கிலிடப்பட்டார். இந்தச் செய்தி சிறையில் இருந்த மோனாவிற்கோ அவள் தாயாருக்கோ தெரியாது. தரானிஃ, மோனாவின் அக்கா, இதை அறியாது இருந்தார். அவர் இறந்த அடுத்த நாள் மார்ச் 13 அன்று காலை மணி பத்திற்கு, தரானிஃயின் கனவரே இந்த செய்தியை தெரிவித்தார். வீட்டிற்குள் நுழையும்போதே அவர் கதறிக்கொண்டு நுழைந்தார். என் தந்தையின் முடிவு எனக்குத் தெரிந்திருந்த போதிலும், அந்த செய்தியைக் கேட்ட என் உடல் அந்த அதிர்ச்சியினால் அதிர்ந்து போனது. தாங்க முடியாமல் நானும் கதறினேன். தூங்கிக் கொண்டிருந்த தரானிஃயின் மகள் நோராவும் அந்த சத்தத்தில் எழுந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

யாடுல்லாவின் உடலைக் கான தரானிஃ மட்டும் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் உடல் அருகே செல்லவோ அல்லது தொடவோ முடியவில்லை. இந்தச் செய்தியை மோனாவிற்கும் தன் தாய்க்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தரானிஃயின் மேல்தான் விழுந்துது.

சிறைக்குச் சென்ற தரானிஃ, தன் தந்தையார் இறந்த செய்தி அதுவரை மோனாவிற்கோ தன் தாய்க்கோ தெரியவில்லை என அறிந்தாள். மூன்று பேர் இறந்தது தெரியும் ஆனால் யார் என்று தெரியாது. தரானிஃ முதலில் தன் தாய் தங்கை இருவருக்கும் வாழ்த்துக் கூறினாள். அவர்கள் இருவரும் அவ்வாரே செய்தனர். பிறகு தரானிஃ, “அப்பா மறுமை எய்திவிட்டார்,” எனக் கூறினாள். அதற்கு மோனா, “தெரியும், நல்லது, கொடுத்து வைத்தவர்,” என்றாள். எல்லோரும் மோனாவிற்கு ஆறுதல் கூற விழைந்தனர். மோனா எல்லோரையும் சமாதானப்படுத்திவிட்டு, “நாம் இறந்தோருக்காக வருந்தி பிரயோஜனமில்லை, இங்கு நாம் நம்முடைய சோதனகளை இன்னமும் கடக்கவில்லை. இறந்தோரை நோக்கிப் பிரார்த்தித்து, அவர்கள் நமக்காக ஆண்டவனிடம் பரிந்துரைக்க வேண்டுவோம். அதன் வாயிலாக நாம் நம்முடைய சோதனைகளை கடக்க முயற்சி செய்வோம்,” என்றாள். பிறகு தன் இனிமையான குரலால் ஒரு பிரார்த்தனையை பாடினாள். அடுத்த சில நாட்கள் துயரத்திலும் இன்பத்திலும் கழிந்தன.

இதற்குப் பிறகு ஒரு நாள், பாப் அவர்களின் மறைவு தினத்திற்கு சிறிது முன்பதாக, காலையில் விழித்தெழும்போதே மோனா, “இனி நான் எந்த உணவையும் தொடப்போவதில்லை,” எனக் கூறிக்கொண்டே எழுந்தாள். சுமார் 30 மணி நேரம் இவ்விதமாக பிரார்த்தனையும் நோன்பும் நோற்றவாறு இருந்தாள். அதன் பிறகு ரொட்டியும் பழமும் சாப்பிட்டாள். சாப்பிட்டுவிட்டு, நான் ‘இனைக்கப்பட்டிருந்தேன்’ என தன் தாயாரிடம் கூறினாள். பாப் அவர்களின் மறைவு தினத்தன்று, மோனா தான் தனியாக இருக்க விரும்புவதாகத் தன் தாயாரிடம் கூறினாள். ஆனால் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பிரார்த்திப்போம் என்று அவள் தாயார் கூறினார். காலியாக இருந்த ஒரு சிறை அறையில் அவர்கள் அத்தினத்தை அனுசரித்தனர். மோனா பிறகு தன் தாயாரை அனுகி, “அம்மா நான் உண்மையில் தனியாக இருந்து பாப் அவர்களின் இந்த இறுதி மறைவு தினத்தை அனுசரிக்கவே விரும்பினேன்,” என்றாள். மோனாவின் தாய்க்கு, அவள் ஏன் இறுதி மறைவு தினம் எனக் கூறுகிறாள் என்று புறியவில்லை. “நீ அதை முன்பே சொல்லியிருக்கலாமே, நான் வற்புறுத்தியிருக்க மாட்டேனே,” என்றார்.

அதன் பிறகு மோனா சிறிது நடந்தாள். பிறகு தன் தாயாரிடமே வந்து, வாருங்கள் நாம் சிறிது நடந்து வருவோம் எனக் கூறினாள். சிறையின் நடைபாதை மிகவும் குறுகலாகனது. இருவரும் ஒன்றாகக் கூட நடக்க முடியவில்லை. அப்போது மோனா தன் தாயாரை நோக்கி, “அம்மா என்னைக் கொல்லப் போகிறார்கள் தெரியுமா,” என்றாள். அதைக் கேட்ட மோனாவின் தாய், தன் உடலெல்லாம் ஏதோ தீப் பிடித்து எரிவது போல் ஆகி, அதை நம்பாமல், “என்ன கூறுகிறாய், நீ திருமணம் ஆகி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கப்போகின்றாய். உன் குழந்தைகளைக் காண நான் மிகவும் ஆவலாக இருக்கின்றேன்,” எனக் கூறினார். அதற்கு மோனா, “அம்மா, எனக்கு அவ்வித ஆசைகள் எதுவும் கிடையாது, நீயும் இந்த ஆசையை விட்டுவிடு. இப்போது நீ என்னைப் பேச விடவில்லையானால், பிறகு நான் சொல்ல நினைக்கும் இந்த விஷயங்களை சொல்லாமலேயே நான் இறக்க நேரிடும்,” என்றாள்.

பிறகு மோனா தன் தாயாரின் கையைப் பிடித்தவாறு நடந்து, “அம்மா, என்னைத் தூக்கிலிடப் போகும் இடம் சிறிது உயரமாகவே இருக்கும். அப்பொழுதுதான் கழுத்தில் கயிற்றைப் போட வசதியாக இருக்கும். என் கழுத்தில் கயிற்றைப் போடப் போகும் அந்த கையை, அது யாருடையதாக இருந்தாலும், அதை முத்தமிட அனுமதி கேட்பேன். நிச்சயமாக அதற்கு அனுமதி தருவார்கள் என நான் நினைக்கின்றேன். பிறகு அவரிடம், பஹாய்கள் தன்னைக் கொல்லப் போகிறவரின் கரத்தைத் தவிர வேறு யாருடைய கையையும் முத்தமிடுவது அனுமதிக்கப்படவில்லை என்று கூறுவேன். அந்தக் கையை நிச்சயமாக முத்தமிடவேண்டும், ஏனென்றால் அந்தக் கை என்னை என் பஹாவுல்லாவிடம் விரைந்து அனுப்பவிருக்கும் கை. பிறகு என் கழுத்தில் மாட்டப்பட விருக்கும் அந்த கயிற்றை முத்தமிடுவேன். அதற்கு நிச்சயமாக அனுமதி கிடைக்கும் அம்மா. பிறகு இந்த பிரார்த்தனையைக் கூற நான் அனுமதி கேட்பேன்,” எனக் கூறிவிட்டுத் தன் நெஞ்சின் மேல் இரு கைகளையும் கட்டிக் கொண்டு இனிமையான குரலில், தன் அன்புக்கினியவருக்குக் கூறுவதுபோல ஒரு பிரார்த்தனையைக் கூறினாள். பிறகு மனித குலத்தின் உண்மையான மகிழ்ச்சிக்கு ஒரு பிரார்த்தனையைக் கூறிவிட்டு இந்த உலகத்திடமிருந்து நான் விடைபெற்றுக் கொண்டு, என் அன்புக்கினியவரை அடைவேன் அம்மா, என்றாள்.

மோனாவின் தாயார், “நான் அவளைப் பார்த்தேன் ஆனால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. அவள் சொல்வதைக் கேட்டேன், ஆனால் புறிந்துகொள்ளமுடியவில்லை. ஒருபுறம் அவள் மேல் நான் வைத்திருந்து பாசம் என்னை பீதியடையச் செய்தது, ஆனால் மறுபுறம் அவள் என்னை ஒரு ரம்மியமான ஆன்மீக உலகத்திற்கு அழைத்துச் சென்றாள். இருந்த போதும் அதை நம்பமுடியாமல், “நல்ல சுவாரஸ்யமான கதை,” என்றார்.

மோனா, கண்ணில் நீர் ததும்ப, மெதுவாக, அது கதையல்ல, அம்மா. இதை ஏன் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிறகு என்னை விட்டு நீண்ட நேரம் அந்த நடைபாதையில் நடந்த வண்ணம் இருந்தாள். என் பஞ்சவர்ணக்கிளி பறந்து செல்ல போகிறது. அது எப்படிப் பறக்கப் போகிறது என்பதையும் தெரிந்து வைத்திருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.

சிறையில் பஹாய் கைதிகளுக்கு நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அதற்குள் அவர்கள் தாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறிவிட்டால் விடுதலை செய்யப்படுவார்கள். இல்லையென்றால் அவர்கள் தூக்கிலிடப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டனர். அந்த நேரம் மோனா ஒரு கனவு கண்டாள். அதில் மோனா சிறையில் தன் கட்டாயப் பிரார்த்தனையைக் கூறிக் கொண்டிருந்தபோது, அப்துல் பஹா அந்த அறைக்குள் வந்து மோனாவின் தாயார் படுத்திருந்த படுக்கையில் உட்கார்ந்து, அவர் தலையில் கையை வைத்தார். அப்போது அவர் மோனாவின் பக்கம் தம்முடைய மறு கையை உயர்த்தினார். மோனா, தான் மேற்கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் போய்விடுவார் என்று நினைத்து, ஓடிவந்து அவர் முன் மண்டியிட்டு உட்கார்ந்து அவர் கையை தன் கையால் பிடித்துக் கொண்டாள். அப்துல் பஹா, “மோனா உனக்கு என்ன வேண்டும்,” என கேட்டார். அதற்கு மோனா, “விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி வேண்டும்,” என்றாள். மறுபடியும் அவர், “என்னிடம் இருந்து உனக்கு என்ன வேண்டும் என்றார்.” அதற்கு மோனா, “எல்லா பஹாய்களுக்கும் விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி தரப்பட வேண்டும்,” என்றாள். மீண்டும் அப்துல் பஹா, “மோனா, என்னிடம் இருந்து உனக்காகவென்று என்ன வேண்டும்,” என்றார். அதற்கு மோனா, “விடா முயற்சியுடன் கூடிய மன உறுதி வேண்டும்,” என்றாள். அப்துல் பஹா, “அளிக்கப்பட்டது, அளிக்கப்பட்டது,” என்றார்.

அடுத்த நாள் மோனா தான் கண்ட கனவை சிறையில் இருந்த எல்லோரிடமும் கூறினாள். அதற்கு பிற கைதிகள், “உனக்கும் உன் தாயாருக்கும் விடுதலை கேட்டிருக்கலாம், ஆனால் எல்லோருக்கும் எவ்வளவு பிரமாதமான வரத்தைக் கேட்டிருக்கின்றாய்,” என்றனர்.

மோனாவின் தாயார் தாம் விடுதலையான அன்று, சிறையில் இருந்த அனைவரும் தமக்காக அவர் வெளியே சென்று என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மோனா, “அம்மா, இங்கு நீங்கள் எங்கள் எல்லோருக்கும் எவ்வளவு பக்கபலமாக இருந்தீர்கள், அதே போல் வெளியே உள்ளோர்களும் மன உறுதியோடு இருக்க உதவுங்கள், அவர்கள் உறுதியாகவும் தைரியத்துடனும் இருக்க ஊக்குவியுங்கள்,” என கேட்டுக் கொண்டாள்.

மோனாவின் தாயார், “நான் அவள் முகத்தை முத்தமிட்டேன், ஆனால் முத்தமிட்டது அதுவே கடைசி முறை அல்ல, மீண்டும் ஒரு முறை அவளை முத்தமிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவள் சில்லிட்ட உடலை பிணக்கிடங்கில் முத்தமிட்டு, அந்த பொக்கிஷத்தை அதன் ‘சொந்தக்காரரிடமே’ திருப்பி அனுப்பிவைத்தேன்.” மோனாவை கடைசியாக சிறையில் நான் சென்று கண்டபோது, அவள், “அம்மா நாளை நாங்கள் பஹாவுல்லாவின் விருந்தினர்களாக இருப்போம் என்றாள்.” ஆம், அடுத்த நாள் அவள் தூக்கிலிடப்பட்டாள்.

மோனாவின் தமக்கை தரானிஃ, “வாரம் ஒரு முறைதான் மோனாவைக் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுதான் மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்தது. அவளைப் பார்க்கத் துடித்தேன். அன்று அவளை இறுதியாகக் காண்கின்றேன் என எனக்குத் தெரியாது. கைதிகளைக் காண நாங்கள் அனுமதிக்கப் பட்டபோது, தடுப்பிற்குப் பின்னால் மோனா முகத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். முதலில் அம்மாவே இருவழி தொலைபேசியை எடுத்துப் பேசினார். அவள் எப்போதும் போல் மனமகிழ்ச்சியோடு பிறர் நலத்தை விசாரித்து, என்னை நோக்கி“, ‘உன்னைக் கட்டிப் பிடித்து நசுக்க ஆசையாக இருக்கின்றது,’ என்றாள். சிரித்துக்கொண்டே அவள், மீண்டும், ‘அம்மா இப்போது உன்னுடன் இருக்கின்றாள், சந்தோஷமாக இரு’,“ என்றாள். நானும் சிறிது நேரம் பேசிவிட்டு, மோனா, நேற்று ஆறு பஹாய்கள் தூக்கிலிடம்பட்டனர்,” என்றேன். ஆம் ஆறு பேர் பஹாய்கள் என்ற காரணத்திற்காக நேற்று தூக்கிலிடப் பட்டிருந்தனர். அவள் அழகிய பசுமை நிறக் கண்கள் நீரால் நிரம்பின. தன் கையை தன் இதயத்தின் மேல் வைத்து, யார் அவர்கள், என்று வினவினாள். நான் ஒவ்வொருவராகப் பெயரிட்டுக் கூற, அவள் தன் கையை மேலும் அழுத்தமாகத் தன் இதயத்தின் மேல் வைத்து, ‘அவர்கள் நன்மையடைந்தனர், அவர்கள் நன்மையடைந்தனர்,’ என கூறிக் கொண்டே வந்தாள். கண்களில் நீர் வழிய, ஓ தரானிஃ, இவை சோகக் கண்ணீரோ, துயரக் கண்ணீரோ அல்ல,’ என்றாள். ‘இவை ஆனந்தக் கண்ணீர்,’ என்றாள். நான், ‘மோனா, நீயும் கூடிய சீக்கிரம் எங்களை பிரியப் போகின்றாய்,’ என்றேன். ‘தெரியும், தெரியும்,’ என்றாள். ‘நாங்கள் கொலைக்களத்திற்கு களிப்புடன் பாடிச் செல்ல பிரார்த்தனை செய்,’ என்றாள். நிச்சயம் பிரார்த்திப்பேன்,’ என்றேன். ‘இறைவன் நியமித்தது நிச்சயம் நடந்தேறும்,’ என்றேன்.

‘நீ எனக்கு வேறொறு உதவி செய்ய வேண்டும்,’ என மோனா என்னைக் கேட்டுக் கொண்டாள். ‘நான் தூக்கிலிடப்படுவதற்கு முன் என் பாவங்கள் மன்னிக்கப்பட நீ இறைவனை பிரார்த்திக்க வேண்டும்,’ என்றாள். நான் அவளைப் பார்த்து, ‘இறைவன் உன்னை மன்னிக்குமளவுக்கு நீ என்ன பாவமடி செய்தாய்,’ எனக் கூறினேன்.

நான் அழாமல் இருக்கப் பெரும் முயற்சி செய்து, அவள் அழகிய குரலைக் கேட்பதில் கவனமாக இருந்தேன். அப்போது என் அம்மாவும் அவளுடன் பேசட்டுமே என்று அவரிடமும் தொலைபேசியைக் கொடுத்தேன். சிறிது நேரத்தில் பொறுமை இழந்து, ‘நீங்கள் இருவரும்தான் சிறையில் மாதக் கணக்கில் ஒன்றாய் இருந்தீர்களே, இப்பொழுது நான் பேசவேண்டும்,’ என்று போனைப் பிடுங்கி மோனாவிடம் மறுபடியும் பேச ஆரம்பித்தேன்.

அதைக் கண்டு மோனா சிரித்தாள். ‘ஓ தரானிஃ, எனக்கு எது சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?’ என்றாள். ‘நாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் பட்டியலில் இருக்கின்றோம் எனும் ஞானம்,’ என்றாள்.

நான் ஒன்றும் கூறவில்லை. என்ன கூறுவது! அப்போது மோனா, ‘தரானிஃ நம் உறவினர்கள், நன்பர்கள் அனைவரையும் நான் விசாரித்ததாகக் கூறு. எல்லோரையும் என் சார்பில் முத்தமிடு.’ என் குழந்தை பக்கம் திரும்பி, ‘இவளை நீ நம் அப்பாவைப்போலவே வளர்க்க வேண்டும்,’ என்றாள். நானோ, என் இதயத்தில், ‘இவளை உன்னைப் போலவே வளர்க்கப்போகின்றேன்,’ எனக் கூற நினைத்தும், என் பேச்சு அவள் பேசுவதை நிறுத்திவிடக் கூடாது என்பதால் ஒன்றும் கூறவில்லை.

திடீரென்று தொலைபேசி வெட்டப்பட்டு நாங்கள் எல்லோரும் பிரியும் நேரம் வந்தது. இறுதி முறையாக எங்கள் விரல்களால் உதடுகளைத் தொட்டு, கண்ணாடியின் மேல் வைத்து எங்கள் முத்தங்களைப் பரிமாரிக்கொண்டோம். ”

ஜூன் 18 அன்று, சாயங்காலப்பொழுது, நாங்கள் சிறைச்சாலையை விட்டு வந்தவுடன், பத்துப் பெண்கள் அடிலபாட் சிறையில் இருந்து கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள், மோனா, ரோயா, ரோயாவின் தாயாரும், இஸ்ஸாட், ஷிரின், ஸார்ரின், மஹ்ஷீட், சீமீன், அஃக்தார், தாஹிரி மற்றும் நுஸ்ராட்.

கொலைக்களம்

அவர்களை அடிலாபாட்டிலிருந்து ஏற்றிச் சென்ற பஸ் ஓட்டுனர், அவர்களின் மனோபலத்தையும் தைரியத்தையும் கண்டு மிகவும் வியந்து போனார். “முதலில் அவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்படப் போகிறார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். கொலைக்களம் வந்தபோதுதான் தெரியும் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படப் போகிறார்கள் என்று,” என்றார். “வழிமுழுவதும் அவர்கள் பாடியும் மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் இருந்தனர்.” மற்றொருவரான, அந்தப் பென்களின் கழுத்தில் கயிரை மாட்டிய கொலையாளி, ஒரு பெண்ணின் தாயாரிடம், “நாங்கள் இறுதி வரை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தோம். நாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறுங்கள் விட்டுவிடுகிறோம், என்று. ஆனால் அவர்கள் யாருமே அசையவில்லை. முதலில் வயதான பெண்களைத் தூக்கிலிட்டோம். பிறகு வயதுப் பெண்களை ஒருவர் ஒருவராகத் தூக்கிலிட்டோம். ஆக வயதுக் குறைந்தவரே இறுதியாக இறந்தார். நாங்கள் எல்லோருமே, தூக்கைக் கண்டதும் பயந்து நடுங்கி, சமயத்தை துறந்துவிடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால் யாருமே அசையவில்லை. ஒரே ஒரு முறை நாங்கள் பஹாய்கள் அல்ல என்று கூறுங்கள் விட்டுவிடுகிறோம் என்று கெஞ்சினோம், ஆனால் யாருமே வாயைத் திறக்கவில்லை. அவர்கள் அனைவரும் அவ்வாறு கூறுவதைவிட இறப்பதே மேல் என்று நினைத்தனர்.”

மோனாவோடு சேர்ந்து உயிர்த்தியாகம் செய்த மற்ற பெண்கள்

அடுத்த நாள் காலை பத்து மணிக்கு உடல்கள் பிணக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அன்று, முதல் நாள் தூக்கிலிடப்பட்ட ஆறு ஆண் பஹாய்களின் உடல்களைப் பெறச் சென்ற பஹாய் உறவினர்கள், அன்று புதிதாகப் பத்து பெண்களின் உடல்களைக் கண்டனர். ஷிராஸ் முழுவதும் அந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியது.

தரானி

தரானிஃ அந்த செய்தியை பெற்றபோது, தன் தந்தையின் இறப்பைக் கேட்டு அடைந்த அதே கடும் வேதனையை அடைந்தாள். மோனாவை நான் அறிந்தவரை, அவள் நிச்சயமாக தன் நம்பிக்கையை கடைசி வரை இழக்கப் போவதில்லை என்பதை நான் உணர்ந்தேன். நான் பஹாவுல்லாவிடம் அவளை சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள் என்று பிரார்த்திக்கவில்லை. அவளுக்காக விதிக்கப்பட்டது எதுவோ அது நிறைவேறட்டும் என கேட்டுக் கொண்டேன்.

ஆனால் பலமுறை, அப்படியே அவள் கொல்லப்பட்டால் நான் அதை எப்படி தாங்கிக் கொள்வேன், அவள் உயிரற்ற உடலை எப்படி என் கண்களால் பார்க்கப்போகின்றேன்? அதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியுமா, என்றெல்லாம் மனதில் கேள்விகள். பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அந்த பயங்கரத்தை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. மாறாக அவள் வீட்டுக்கு வரும் வேளையை எதிர்பார்த்திருந்தேன். அவள் சிரிப்பொலி, அவள் நடை ஒலி, அவள் இனிய குரல், என் அழகு தங்கையை அனைத்து முத்தமிடும் காட்சி என் மனதில் தோன்றியது. தந்தை மறைந்த துக்கத்தை அவளுடன் பகிர்ந்து, அவர்கள் எல்லோரும சிறையில் இருந்தபோது நான் பட்ட வேதனைகளை அவளிடம் சொல்லி என் மனோபாரத்தை இறக்கி வைக்கவேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்து, எங்கள் தாயாரை கவனித்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் அப்போது திட்டமிட்டேன்.

ஆனால் தெய்வீக திட்டம் வேறாக இருந்தது. அவள் இறந்த செய்தி கேட்டு பலவித எண்ணங்கள் என் மனதை அலைக்களித்தன. யாராவது வந்து அந்த பயங்கரம் உண்மை அல்ல என்று கூற மாட்டார்களா என்று என் மனம் அப்போது ஏங்கியது. இந்த ஏக்கம் பிணக்கிடங்கை அடைந்து அங்கிருந்தோரைக் கண்டபோது மறைந்துவிட்டது. கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது.

தரானிஃ மேலும் கூறுவது, “மோனாவின் அருகில் மண்டியிட்டிருந்தேன், எங்களுக்கு இடையில் கண்ணாடி தடுப்பு இல்லாமல் அவளைக் கண்டது மிகவும் துயரமாக இருந்தது. என் மனப்பூர்வமாக, அவள் தன் கண்களைத் திறந்து, ஒரே ஒரு தடவை, அவள் புன்னகையை நான் காண்பதை பார்க்கமாட்டாளா என்று என் மனம் ஏங்கியது. ஆனால் அவள் மேலே இருந்து நிறந்தர புன்னகையுடன் எங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரிந்தது. என் கண்களில் இருந்து ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தால் கூட அது அவள் மனதை உடைத்துவிடும்.”

“ஆகவே, என் இனிய மோனா, நீ பஹாவுல்லாவுக்காவும் மனிதகுலத்திற்காகவும் கொண்டிருந்த அன்பிற்காக நான் முகம் மலர்கின்றேன். உன் இன்னுயிரை எதற்காகத் தியாகம் செய்தாய் என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ளட்டும்.

ஸைனாப்


ஸஞ்ஜான் கொந்தளிப்பு

கடந்த நூற்றாண்டில், பாப்’இ சமயத்தின் ஆரம்பகாலங்களில், பாரசீகத்தின் பல இடங்களில், பாப்’இகள் எதிர்ப்புகளுக்கு உள்ளானார்கள். அந்நேரங்களில் அவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் ஒன்றுதிரண்டு எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளில் மட்டுமே ஈடுபட்டனர். அதில் முதலாவதாக டபார்ஸியிலும், அதன் பின்னர் நேய்ரீஸிலும், மூன்றவதாக ஸஞ்ஜான் என்னும் இடத்திலும் பாப்’யிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ஞ்ஜானில் எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஆண்களுக்கு அங்கிருந்த பெண்களும் வெவ்வேறு வழிகளில் உதவினர். அவர்கள் எப்படிப்பட்ட பெண்கள்?

முதலாவதாக, தாய்மார்கள் எனும் முறையில், பாப் பெருமானாரின் அறிவுரைகளை மிகவும் கவனமாகப்  பின்பற்றுமாறு தங்களின் பிள்ளைகளுக்குப் போதித்தனர், “நமது அன்பார்ந்த மாஸ்டரே அவற்றைப் பின்பற்றுவதில் முதலாவதாக இருக்கின்றார். அவரது தயவைப் பெற்ற சீடர்களான நாம் மட்டும் அவற்றை நமது வாழ்வின் மேலாண்மை செய்யும் கொள்கைகளாகக் கொள்வதற்கு ஏன் தயங்க வேண்டும்” (உதயத்தை வென்ற வீரர்கள்) என அவர்களின் பிள்ளைகளுக்குப் போதித்தனர். மிகவும் சிரமமான சூழ்நிலைகளிலும் அவர்களின் பிரபுவிற்கு துனிச்சலுடன் பணிபுரியவும் பெண் ஆண் சமத்துவம், சர்வலோக கல்வியின் முக்கியத்துவம், ஏழைகளுக்கும் வறியோருக்கும் கைகொடுத்தல் போன்ற போதனைகளைப் பின்பற்றுமாறும் தங்களின்  பிள்ளகளை வளர்த்தனர்.

அவ்விதமான பெண்களுள் ஒருவளாக, ஸைநாப் என்னும் பெயர்கொண்ட இளம்பெண்ணும் இருந்தாள். போரிடும் பாப்’யி ஆண்கள் படும் இன்னல்களைக் கண்டு மனம் பொருக்காத ஸைநாப், யாரும் அறியா வண்ணம், ஆண் வேடமிட்டு, ரஸ்டம் அலி எனும் பெயர் பூன்டு, ஆண்களோடு ஆணாக போர் செய்தாள். அவளுடைய வீர தீரச் செயலின் வரலாறே பின்வரும் கதை.

அந்த வீரம் நிறைந்த தோழர்களுக்கு உயிரூட்டும் திவ்ய பற்றின்மையெனும் ஆவி குறித்த மேல் ஆதாரங்கள், ஒரு கிராமத்துக் கண்ணியின் நடத்தையின் வாயிலாக வழங்கப்பட்டது. அவள், தன்னிச்சையாக, கோட்டைப் பாதுகாவலர்களோடு ஒன்றுசேர்ந்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டத்தோடு தானும் இணைந்துகொண்டாள். அவளுடைய பெயர் ஸைநாப் என்பதாகும். அவளுடைய சொந்த ஊர் ஸஞ்சானுக்கு அருகேயுள்ள ஒரு குக்கிராமம். அவள் அழகுமிகுந்தவள், சிவந்த வதனமுடையவள்; மேன்மைமிக்க நம்பிக்கையினால் தூண்டப்பட்டவள்; அஞ்சாத வீரத்தைப் பெற்றிருந்தவள் தன்னுடைய ஆண் தோழர்கள் அடைந்த சோதனைகளும், கஷ்டங்களும், ஆணுடையில் மாறுவேடமிட்டும், எதிரிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை முறியடிப்பதில் பங்குபெற வேண்டுமெனவும் அவளுள் ஓர் அடக்கமுடியாத ஆவலை உண்டாக்கின. நீண்ட உடையனிந்து, தன்னுடைய ஆன் துணைவர்கள் அனிந்துள்ளதைப் போல் தலைப்பாகை அனிந்து, தன்னுடைய சுருளான கூந்தலை வெட்டிக்கொண்டும், போர்வாள் தரித்தும், பிறகு, ஒரு துப்பாக்கியையும், கேடயத்தையும் பற்றிக்கொண்டு, அவர்களிடையே தன்னையும் சேர்ந்துக்கொண்டாள். தடையரணுக்குப் பின்னால் அவள் தன்னுடைய இடத்தைப் பிடித்திட பாய்ந்து முன்சென்றபோது அவள் ஒரு கன்னி என யாருமே சந்தேகிக்கவில்லை. எதிரிகள் தாக்கிய உடனே, அவள் வாளை உருவிக்கொண்டும், “யா ஷாஹிபு‘ஸ்-ஸமான்!” எனக் தனது கிரீச்சு குரலை எழுப்பியவாறு தனக்கெதிரே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சக்திகளின் மீது வியக்கத்தக்க துணிவுடன் பாய்ந்தாள். நண்பர்களும் பகைவர்களுமாக, தங்கள் கண்கள் அதற்குச் சமமாக அதுவரைக் கண்டிராத ஒரு துணிச்சலையும், செயல்வளத்தையும் கண்டு அதிசயித்தனர். அவளுடைய எதிரிகள், சினங்கொண்ட கடவுள் தங்களுக்கு இட்ட ஒரு சாபமென அவளைப் பிரகடணப்படுத்தினர். மனத்தளர்வினால் பாதிக்கப்பட்டும், தங்களுடைய தடையரண்களைக் கைவிட்டும், வெட்கக்கேடான நிலையில் அவர்கள் சிதறியோடினர்.

பாதுகாப்பு மேடையிலிருந்து எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்கானித்துக்கொண்டிருந்த ஹுஜ்ஜாட்*, ஸைனாபைக் கண்டுகொண்டும், அக்கன்னிப்பெண் அவ்வேளையில் வெளிப்படுத்திக்கொண்டிருந்த ஆற்றலைக் கண்டு அதிசயிக்கவும் செய்தார். தன்னைத் தாக்கியவர்களை அவள் விரட்டி சென்றுகொண்டிருந்தாள். அப்போது, ஹுஜ்ஜாட் தமது ஆட்களிடம் அவள் மேற்கொண்டு எதிரிகளை தொடர்ந்து பின்செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு அரணுக்கு திரும்புமாறும் கூறச்சொன்னார். அவளுடைய எதிரிகள் அவள் மீது தொடுத்த தாக்குதல்களை எதிர்கொண்டு அவள் பாய்ந்து சென்றபோது, “இவ்வித ஊக்கத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்திடும் ஆற்றலை எந்த ஓர் ஆணும் காட்டியதில்லை“, என அவர் கூற செவிமடுக்கப்பட்டது. அவளுடைய அத்தகைய நடத்தையின் குறிக்கோள் குறித்து அவளிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அவள் கண்களில் குபுக்கென கண்ணீர் பெருகிட, பின்வருமாறு கூறினாள்: “என்னுடைய சக சிஷ்யர்களின் அவதியையும், சிரமங்களையும் நான் கண்ணுற்ற போது என் உள்ளம் பரிதாபத்தினாலும், சோகத்தினாலும் இரணமானது. என்னால் தடுக்கப்பட முடியாத ஓர் உட்தூண்டலினால் நான் முன்சென்றேன். என்னுடைய ஆண் தோழர்களோடு என் அனைத்தையும் அர்ப்பணம் செய்திடும் சலுகையை நீர் எனக்கு அளிக்க மறுத்து விடுவீர் என நான் பயந்தேன்.” “நீ நிச்சயமாகவே அரணில் குடிகொண்டுள்ள மற்றவர்களோடு சேர்ந்துகொள்ள முன்வந்த அதே ஸைனாப்தானே?” என ஹஜ்ஜாட் விளித்தார். “ஆமாம்” என அவள் பதிலளித்தாள். “நான் பெண் என்பதை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதை உங்களுக்கு உறுதிகூற விரும்புகிறேன். நீங்கள் ஒருவரே என்னைக் கண்டுகொண்டுள்ளீர். பாப் பெருமானாரின் பெயரால், மதிப்பிட முடியாத அந்த சலுகையும், உயிர்த்தியாகமெனும் கிரீடமுமான, என் வாழ்வின் ஒரே ஆவலை நான் அடைவதைத் தடுத்துவிடாதீர்கள்.”

  • உதயத்தை வென்ற வீரர், அத்தியாயம் 24, ஸஞ்ஜான் எழுச்சி

அவளுடைய வேண்டுகோளின் தொனி மற்றும் சாயலினால் ஹுஜ்ஜாட் மிகவும் ஆழமாக கவரப்பட்டார். அவளுடைய ஆன்மாவின் கொந்தளிப்பை ஆசுவாசப்படுத்த முயன்றார், அவள் சார்பான தமது பிரார்த்தனைகளை அவளுக்கு உறுதிபடுத்தினார், மற்றும் அவளுடைய மேன்மைமிக்க மன உரத்தின் அறிகுறியாக, ரஸ்டம்-அலி எனும் நாமத்தை அவளுக்கு வழங்கினார். “இதுவே எல்லா இரகசியங்களும் கண்டறியப்படும் ஒரு நாளான மறு உயிர்ப்புறும் நாளாகும். அவர்களுடைய புறத்தோற்றத்தினால் அல்லாது, அவர்களுடைய நம்பிக்கையின் குணவியல்பு மற்றும் வாழ்க்கையின் விதத்தினாலும், ஆண் பெண் என்னும் பேதமில்லாமல் இறைவன் தமது படைப்பினங்களை மதிப்பிடுகிறார். இழம் வயதுடையவளும், முதிர்ந்த அனுபவம் இல்லாதவளுமான ஒரு கன்னிப்பெண்ணாக இருந்தபோதும், வெகு சில ஆண்களே விஞ்சக்கூடிய மனோ உறத்தையும், வளத்தையும் நீ வெளிப்படுத்தியுள்ளாய்.” அத்தோடு, அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, அவளுடைய சமயம் அவளக்கு வழங்கியுள்ள கட்டுப்பாடுகளை மீறாது இருக்குமாறு அவளை எச்சரிக்கவும் செய்தார். “வஞ்சக எதிரிகளிடமிருந்து நம்முடைய உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளவே நாம் கேட்டுக்கொள்ளப்படடுள்ளோமே அன்றி, அவர்கள் மீது புனித யுத்தம் மேற்கொள்வதற்காக அல்ல.,” என அவளுக்கு ஞாபகமூட்டினார்.

சுமார் ஐந்து மாதங்களுக்கும் குறையாத காலத்திற்கு, எதிரிகளின் சக்திகளை இணையற்ற வீரத்துடன் தொடர்ந்தாற்போல் எதிர்த்து நின்றாள் அக்கன்னி. உணவையும் தூக்கத்தையும் மறந்து, தான் மிகவும் நேசித்த சமயத்திற்காக ஆர்வம் மிகுந்த அக்கறையுடன் உழைத்தாள். தனது குறிப்பிடத்தக்க துணிவின் உதாரணத்தினால், தடுமாற்றம் அடைந்த சிலருடைய மன உறுதியை மறுபலப்படுத்தி, அவர்கள் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டினாள். அந்தக் காலத்தில் அவள் தரித்திருந்த வாள் அவளுடைய இடுப்பிலேயே இருந்துவந்தது. நித்திரை என அவள் கொள்ள முடிந்த அந்த குறுகிய சில நேரங்களில் தன்னுடைய வாளின் மீதே அவளுடைய தலை சாய்ந்தும், அவளுடைய கேடயமே அவளுடைய உடலின் போர்வையாகவும் இருந்தது. அவளுடைய ஒவ்வொரு துணைவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலை ஒதுக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் பாதுகாத்தும், தற்காத்தும் வரவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வீரமங்கை எங்கு வேண்டுமானாலும் போய்வர சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. தன்னைச் சுற்றிலும் ஏற்பட்ட கொந்தளிப்புகளின் நடு மையத்திலேயே அவள் இருந்தாள். எதிரி தாக்க முயன்ற எந்த நிலையானாலும் அங்கு விரைந்தோடி காப்பற்றிடவும், தன்னுடைய ஊக்குவிப்போ, ஆதரவோ தேவைப்படும் எவருக்கும் அதை வழங்கிடவும் ஸைனாப் தயாராகவே இருந்தாள். அவளுடைய வாழ்வின் இறுதி நெருங்கிக்கொண்டிருந்த வேளை, அவளுடைய இரகசியத்தை அவளுடைய எதிரிகள் கண்டுகொண்டனர். அவள் ஒரு பெண் என்பதை உணர்ந்தும், தொடர்ந்து அவளுடைய ஆதிக்கத்தினால் மருளவே செய்தும், அவளுடைய வருகை கண்டு நடுநடுங்கவும் செய்தனர். அவளுடைய கிறீச்சுக் குரல் அந்த எதிரிகளின் உள்ளங்களில் பெரும் பீதியைக் கிளரி, அவர்களுள் மனத்தளர்வையும் ஏற்படுத்த போதுமானதாகவே இருந்தது.

ஒரு நாள், திடீரென எதிரி படைகளினால் அவளுடைய துணைவர்கள் சூழ்ந்துகொள்ளப்படும் நிலையைக் கண்டு, ஹுஜ்ஜாட்டிடம் அவள் சஞ்சலத்தோடு விரைந்தோடி, அவரது கால்களில் வீழ்ந்து, கண்ணீர் மல்கிய கண்களுடன் அவரைக் கெஞ்சி, அவர்களுடயை உதவிக்கு தான் விரைந்துபோக மன்றாடினாள். “என் வாழ்வு, அதன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பது என் உணர்வு,” ”எதிரிகளின் வாளுக்கு நானே இறையாவேன். என் எல்லைமீறலை மன்னித்து, எவருக்காக நான் என் உயிரை அர்ப்பணம் செய்ய ஏங்குகின்றேனோ அந்த என் தலைவரிடம் எனக்காக பரிந்து பேசிட உங்களை மன்றாடி கேண்டுக்கொள்கின்றேன்.”

ஹுஜ்ஜாட் பெரிதும் உணர்ச்சி வசப்பட்டிருந்த நிலையில் பேச முடியாமல் இருந்தார். அவருடைய மௌனத்தினால் உற்சாகம் அடைந்தும், அது சம்மததிற்கு அறிகுறி என்னும் முடிவிற்கும் வந்த ஸைநாப், வாசலுக்கு வெளியே பாய்ந்தும், ஏழு முறை “யா ஷாஹிபு‘ஸ் ஸமான்!” என குரலெழுப்பியும், தன்னுடைய சகாக்கள் பலரை சாய்த்துவிட்ட கரங்களை வீழ்த்திட பாய்ந்து சென்றாள். “உங்களுடைய துர்செயல்களால் உங்கள் சமயத்தின் நற்பெயரை ஏன் மாசுபடுத்துகிறீர்கள்?” என உரக்க குரலெழுப்பியாவாறு அவர்கள் மீது பாய்ந்தாள். “நீங்கள் உண்மை பேசுகிறவர்களாக இருந்தால், ஏன் இழிவோடு எனக்குப் புறமுதுகிட்டு ஓடுகிறீர்கள்?” என உரக்கக் கேட்டாள். எதிரிகள் எழுப்பியிருந்து தடுப்பு அரண்களை நோக்கி ஓடி, முதன் மூன்று அரண்களின் காவலர்களை விரட்டியடித்து, நான்காவதையும் வென்றிடுவதற்கு போராடிக்கொண்டிருந்தபோது, தோட்டக்கள் மாரியில் அவள் தரையில் சாய்ந்தாள். அவளுடைய எதிரிகளிடையே அவளுடைய கற்பு குறித்து எவருமே எந்தக் கேள்வியும் எழுப்பவோ, அவளுடைய நம்பிக்கையின் மேன்மையையும், அவளுடைய நடத்தையின் நித்தியத்தன்மையும் புறக்கனிக்க தைரியமற்றிருந்தனர். அவளுடைய பக்திவிசுவாசத்தின் மேன்மையினால், அவளுடைய இறப்புக்குப் பிறகு சுமார் இருபதுக்கும் குறையாத பெண்கள் பாப் அவர்களுடைய சமயத்தை ஏற்றனர். தங்களுக்கு பரிச்சயமான கிராமத்துப் பெண்னாக அவளை அவர்கள் காணவில்லை. மனித நடத்தைக்கான அதிமேன்மைமிக்க கோட்பாடுகளின் மறுஅவதாரமாகவே அவள் இருந்தாள், அவள் கொண்டிருந்த நம்பிக்கை ஒன்று மட்டுமே வெளிப்படுத்தியிருக்கக்கூடிய அதி ஆன்மீகத்தின் ஜீவ உருவாகத் திகழ்ந்தாள்.

இன்று நாம் நமது சமயத்திற்காக உயிரைத் தியாகம் செய்யவேண்டியதில்லை. ஆனால் இன்று பயனேதும் இல்லை. ஆனால் உயிர்த்தியாகத்திறுகு இணையான நமது சமயத்திற்கான சேவைகளில் ஈடுபடலாம். அமைதியான நமது பிரார்தனைகளின் போது, ஸைநாப் போன்ற உயிர்த்தியாகிகளின் செயல்களை தியானிப்போமாக.

வெண்பட்டாடை


தாஹிஃரி அம்மையார்

தாஹிரியின் மரணம்

தெஹரானுக்கு நடுவில் ஒரிடத்தில், ஒரு தோட்டத்தின் கிணற்றுக்குள், கற்களுக்கும் பாறைகளுக்கும் கீழ் அந்த உடல் சிதைந்து கிடக்கின்றது. அந்தக் கிணற்றைச் சுற்றி உயர்ந்த கட்டிடங்கள் வானளாவுகின்றன. அந்தத் தோட்டம் இருந்த இடத்திற்கு அருகே உள்ள சாலையில் நிறைய வாகனங்கள் வந்தும் போய்கொண்டும் இருக்கின்றன, பொதி சுமக்கும் கழுதைகளை பேருந்துகள் ஓரமாக ஒதுக்கித் தள்ள, ஒட்டகங்கள் சுமக்கும் சுமைகளை உலகின் பல பாகங்களையும் சார்ந்த வாகனங்கள் உரசிச் செல்கின்றன, வண்டிகள் ஆடியவாறு நகர்ந்து கொண்டிருக்கின்றன. சூரிய அஸ்தமனத்தின் போது, அருகில் உள்ள ஓர் ஓடையில் இருந்து சிலர் நீரை வாரி சாலையின் மீது இரைத்து தூசுப்படலம் எழுவதை தடுக்க முயல்கின்றனர். அந்த உடல், மண்ணோடு மண்ணாக சிதைக்கப்பட்டு அங்குதான் கிடக்கின்றது. அது மறைக்கப்பட்டுவிட்டது, மறக்கப்பட்டு விட்டது என நினைத்து மனிதர்கள் வரவும் போகவும் செய்கின்றனர்.

தோழிகளுடன் தாஹிஃரி


பெண்களின் அழகு என்பது காலம் சூல்நிலை ஆகியவற்றை சார்ந்த ஒன்றாகும். உதாரணமாக, லைலியை எடுத்துக்கொள்வோம். அவள் அவளது காதலன் மஜ்னூனை விட்டு பிரிந்த போது அவளது பிரிவை தாளமாட்டாமல் மஜ்னூன் பாலைவனத்தைத் நாடிச் சென்றான், ஏனென்றால் லைலியின் முகத்தை தவிர பிற மனிதர்களின் முகங்களை அவனால் பார்க்கமுடியவில்லை. பாலவன த்தின் மிருகங்களே அவனைச் சுற்றி உட்கார்ந்து அவனுடைய துக்கத்தில் பங்கு கொண்டன. ஆனால், இத்தனைக்கும் லைலி அழகானவளே அல்ல. எத்துனை கவிஞர்கள் அல்லது சித்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இதற்கு சாட்சியம் கூறுவர். அராபிய நாடுகளைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மஜ்னூனின் காதலில் தலையிட்டு அவனது மனதை மாற்றிட வீன் முயற்சிகள் எவ்வளவோ செய்து பார்த்தான். அந்த காதல் விவகாரத்தால் ஏற்பட்ட அத்தனை அழிவுகளுக்கும் மூல காரணமாக விளங்கிய அந்த லைலியின் முகம்தான் எத்தகையது என்பதைக் காண வேண்டுமென அந்த மன்னனின் உள்ளத்தில் ஓர் எண்ணமும் உதிக்கச் செய்தது. காவலர்கள் அராபிய இனங்கள் ஒவ்வொன்றிலும் அவளை தேடி, கண்டுபிடித்து, அரண்மனை முற்றத்தில் அந்த மன்னனின் முன்னிலையில் அவளை கொண்டு வந்து நிறுத்தினர். அரசன் அவளை பார்த்தான்; மெலிந்த தேகமுடைய கரு நிறத்தாள் ஒருத்தியையே அவன் கண்டான். அவனது அந்தப்புரத்தில் சேவையாற்றிடும் மிகத்தாழ்ந்த பணிப்பெண்கள் கூட நிறத்தில் அவளை மிஞ்சியிருந்த நிலையில், அவளைப் பற்றி மனதில் பெரிதாக நினைத்திட எதுவுமில்லாமல் இருந்தான் அந்த மன்னன். மஜ்னூன் மன்னன் மனதில் தோன்றிய சிந்தனையை புறிந்து கொண்டு, ‘அரசே, நீர் மஜ்னூனின் கண்களைக் கொண்டு லைலியின் உள் அழகு வெளிப்படுத்தப்படும் வகையில் அவளை பார்த்திட வேண்டும்,’ என கூறினான். ஆக, அழகென்பது பார்ப்பவரது கண்களைப் பொருத்த விஷயம். எல்லா வகையிலும், தாஹிரிஃ அவரது காலத்தின் சிந்தனைகளுக்கு ஒப்ப மிகவும் அழகானவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.தாஹிரிஃயின் அழகைப் பொருத்த மட்டில் பின்வருமாறு ஏதாவது நடந்திருக்கலாம். ஏதோ ஒரு நாளன்று, எட்டு கோணம் கொண்டதும், அரக்கில் வடித்த இராப்பாடி ஒன்று அதன் மூடியை அலங்கரித்தும், அதே அரக்கால் ஆன ரோஜா ஒன்றைப் பார்த்து அந்த இராப்பாடி கீதம் இசைப்பதாக வடிவமைப்பும் கொண்ட தமது கண்ணாடிக் கைப்பேழையை திறந்திட்ட தாகிரிஃ, அதன் உட்பாகத்தில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியில் தெரிந்த தமது உருவத்தைப் பார்த்து, வருங்காலத்திற்கு அளித்திடவென்று தமது உருவ வர்ணனையின் குறிப்புகள் எதும் இல்லை என்பதை பற்றி சிந்தித்திருக்கலாம். தாம் இள வயதிலேயே மறையப்போவது அவருக்கு தெரிந்திருந்து, முதிய பருவம் தனது கோடுகளை அவரது முகத்தில் வரைந்து அதன் அழகை அழிக்கப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தும் இருக்கலாம். அல்லது ஒரு வேளை, நீண்ட ஜன்னலின் கீழ் தரையில் மண்டியிட்ட நிலையில், அவரது புத்தகம் ஒரு பக்கம் கிடக்க, அவருடைய முகம் பார்க்கும் கண்ணாடியில் அவர் தமது முகத்தை பார்த்து, லைலி, ஷிரீன், மற்றும் அவர்களைப்போன்ற பலரின் முகங்கள் போல் தமது முகமும் மறைந்திடும் நாள் வரும் என்பதைப் பற்றி அவர் சிந்தித்திருக்கலாம். அதனால், தமது எழுத்தாணிப் பேழையைத் திறந்து, நாணல் எழுதுகோலை வெளியே எடுத்து, காகிதத்தை தமது கையில் வைத்துக் கொண்டு, அவரிடமிருந்து நமக்கு கிடைத்துள்ள, சுருக்கமான அவரது முக லட்சன வர்ணனையை, அவர் வரைந்திருக்காலாம்:

தோழிகளுடன் தாஹிஃரி


‘உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய கருப்பு மச்சம் கண்ணங்கள் இரண்டிலும் ஒவ்வொன்றாக கரு நிற கேசச் சுருள்’ என அவர் எழுதிய போது; காகிதத்தின் மீது நாணல் எழுத்தானி கிரீச்சிட்டிருக்கலாம்.தாஹிரிஃ அழகான உடைகளையும் வாசனை திரவியங்களையும் மிகவும் விரும்புவார். நன்கு சாப்பிடவும் விரும்புவார். நாள் முழுவதும் இனிப்புப் பண்டங்கள் உண்ணக்கூடியவர். ஒரு முறை, தாஹிரிஃ மறைந்து பல வருடங்கள் ஆன பிறகு, அக்காநகருக்கு வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண்மனி ஒருவர், அப்துல் பஹாவின் விருந்துபசரிப்பு மேஜையில் உட்கார்ந்திருந்தார்; உணவு மிகவும்

நன்றாக இருந்தது, அவரும் நிறையவே விரும்பிச் சாப்பிட்டார். ஆனால், பிறகு அவ்வாறு நிறைய உண்டதற்காக அப்துல் பஹாவிடம் மன்னிப்பு கேட்டார். ‘நற்பண்புகளும் மேன்மையும் இறைவன்பால் உண்மையான நம்பிக்கை கொள்வதில் அடங்கி உள்ளனவே அன்றி, கொண்டிருக்கும் பசி பெரிதோ அல்லது சிறிதோ என்பதில் அல்ல…,’ என அவர் அதற்கு மறுமொழி பகன்றார்.

தோழிகளுடன் தாஹிஃரி


மேன்மைமிகு தாஹிரிஃ அவர்களுக்கு பசி நன்கு எடுக்கும். அதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘பாரம்பரியமாக வந்துள்ள புனிதமுறைகளில் விண்ணுலக மக்களின் ஒரு பண்பாக, தொடந்தாற் போல் உணவு உட்கொள்வது இருக்கும்,’ என அவர் பதிலளித்தாராம்.

அவர் சிறிய வயதினராக இருந்த போது, விளையாடுவதற்கு பதிலாக, காஃஸ்வின் நகரத்திலேயே பெரும் மத ஆச்சார்யர்களாக இருந்த அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோரின் சமய விவாதங்களையே செவிமடுத்துக் கொண்டிருப்பார். விரைவில், அதன் பயனாக, கடைசி ஹாடிஸ் வரை இஸ்லாத்தை பற்றி போதிக்க அவரால் முடிந்தது. அவரது சகோதரர் கூறுவது: “அவரது அறிவாற்றலுக்கு பயந்து, அவரது தமையனார்கள் மற்றும் மைத்துனர்கள் அனைவரும் அவரது முன்னிலையில் பேசவே பயப்படுவோம்,” என்பதாகும். இது, எதிலும் முதன்மை வகிக்கும், தமது சகோதரிகள் அனைவரும் அவருக்காக பனிவிடை புரிய காத்திருக்கவும் கூடிய, ஒரு பாரசீக சகோதரரின் வாயிலிருந்து வருவதாகும்.

தோழிகளுடன் தாஹிஃரி


தாஹிரிஃ வளர வளர, தமது தந்தையும் மாமாவும் வழங்கிய பாடபயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார்; இருநூறோ முன்னூறோ ஆண்கள் நிறைந்திருந்த ஒரே கூடத்தில், ஆனால் ஒரு திரைக்குப் பின்னால் அவர் உட்கார்ந்து, ஒரு முறைக்கு மேல் பலமுறை அந்த இருவரின் விளக்கங்களை அவர் மறுக்கவும் செய்துள்ளார். கூடிய விரைவில் கர்வம் பிடித்த உலாமாக்கள் கூட அவரது கருத்துக்கள் சிலவற்றை ஏற்க வேண்டிய நிலைக்கு வந்தனர். தாஹிரிஃ தமது மைத்துனர் ஒருவரையே மணந்து குழுந்தைகளும் ஈன்றார். இத்திருமணம், திருமண வைபவத்திற்கு முன்பாக மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காத, மணமகன் முகத்திரையற்ற மணமகளை கண நேரமே பார்க்க அனுமதிக்கப்பட்ட, சாதாரண பாரசீக திருமணமாகவே இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் காதல் திருமணங்கள் அவமானத்திற்கு உரியவைகளாக கொள்ளப்பட்டிருந்தன. ஆகவே, இத்திருமணம் நடப்பு முறைகளுக்கு ஏற்பவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லை, இல்லை, யார் மீதாவது மனித அன்பென ஒன்றை அவர் கொண்டிருந்தால், பிற்காலத்தில் அவர் சந்திக்க நேர்ந்த; இறைத்தூதர் முகம்மது அவர்களின் பேரரான இமாம் ஹாசானின் குலத்துதித்த, குஃடுஸாகவே அது இருக்கும் எனவே நாம் நினைக்க விரும்புவோம். மக்கள் குஃடுஸை எளிதில் நேசிப்பர். பார்வையை அவரிடமிருந்து அவர்களால் அகற்றவே முடியாது. ஷிராஸில் அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வீதிகளின் வழியாக மூக்கில் தாம்புக் கயிற்றோடு வழிநடத்திச் செல்லப்பட்டபோது, தமது யஜமானரின் சமயத்திற்காக பாரசீக மண்ணில் முதன் முதலில் சித்திரவதைக்குள்ளானவர்களில் இவரும் ஒருவர். பின்னாளில் தபார்ஸி கோட்டையில் அகப்பட்டிருந்தோரை வழிநடத்தியவரும் இவரே, மற்றும் அக்கோட்டை, எதிரிகளின் நம்பிக்கை துரோகத்தினால் வீழ்ந்து, அழிக்கப்பட்டபோது, அவரது சொந்த ஊரான பார்புஃருஷில் அவர் ஜனக்கும்பலின் கைகளில் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலிகளால் பினைக்கப்படடு, கூட்டங்கள் அவரைத் தாக்க, அவர் சந்தை சதுக்கத்தின் வழியாக இழுத்துச் செல்லப்பட்டார். அவர்கள் அவரது உடையை நாசப்படுத்தி அவரை கத்திகளால் கீறிடவும் செய்து, இறுதியில் அவரது உடலை இரண்டாகப் பிழந்து மீதமிருந்ததை நெருப்பிலும் இட்டனர். குஃடுஸ் திருமணமே செய்துகொள்ளவில்லை. அவரது தாயாரும் பல வருடங்களாக அந்த பொண்னாளினைக் காணும் ஆசையில் வாழ்ந்திருந்தார்; குஃடுஸ் தமது மரணத்தை நோக்கி நடந்து செல்கையில், அவர் தமது தாயாரை நினைத்து, “இப்போது என் அன்னை என்னுடன் இருந்து, தமது கண்களாலேயே என் திருமண வைபவ கொண்டாட்டங்களை கண்ணுற முடிந்தால்!” என உறக்கக் கூவினார்.

தோழிகளுடன் தாஹிஃரி


ஆக, தாஹிரிஃ, காற்றில் அசையும் போது கிண்கிணியென ஒலி தரும் மெலிந்த போப்லார் மரங்கள் சூழ்ந்ததும், சாலைகளின் காவி நிற மண்ணின் ஓரமாக தெளிந்த நீரோடைகள் ஓடுவதுமான, வெய்யிலில் சுட்ட செங்கற்களை கொண்ட பொன்னிற காஃஸ்வின் நகரிலேயே வாழ்ந்தார். ஒரு பரந்த முற்றத்தில் அமைந்த, மண் ஜாடியின் நீரின் குளுகுளுப்பை கொண்டதும், தமது விளக்கையும், கைவேளைப்பாடு கொண்ட பருத்தித் துணியில் சுற்றப்பட்ட புஸ்தகங்களையும் வைக்கக்கூடிய மாடங்களும் கொண்ட, பொண் நிற வீட்டிலேயே அவர் வாழ்ந்தார். அவர் பெற்றிருந்த அனைத்தையும் பார்க்கையில் பிற பெண்களாக இருந்திருந் தால் நிச்சயமாக மனதிருப்தி அடைந்திருப்பர், ஆனால் தாஹிரிஃயோ அவற்றினால் அமைதி அடையவில்லை; அவரது மனம் அவரை அலைக்கழித்தது; இறுதியில் அவர் அனைத்தையும் துறக்க வாய்பு ஏற்பட்டு, மலைகளைக் கடந்து பாரசீகத்தை விட்டு வெளியேறி, குவிந்த கோபுரங்கள் சூழ்ந்த கர்பிலா நகரருக்கு உண்மையைத் தேடி சென்றார்.

ஓரு நாள் இரவு அவர் கனவொன்று கண்டார். இளைஞர் ஒருவர் ஆகாயத்தில் வீற்றிருந்தார்; அவர் கையில் நூல் ஒன்று இருந்தது, அதிலிருந்து அவர் செய்யுட்களை வாசித்துக் கொண்டிருந்தார். தாஹிரிஃ விழித்தெழுந்து தாம் கண்ட அந்த கனவில் கேட்டவை அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தார், பிறகு, பாப் அவர்கள் எழுதிய ஒரு விளக்கவுரையில் அதே வரிகளைக் காண, கனவில் தாம் கண்ட அந்த இளைஞர் பாப் அவர்களே அன்றி வேறு யாரும் இலர் என அறிந்து அவரை ஏற்கவும் செய்தார். அவர் உடனடியாக அதைப் பற்றி பொதுவில் பேசிடவும் செய்தார். அவர் தாம் பாப் அவர்களின் சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளதை பகிரங்கப்படுத்தினார். அதன் விளைவு பெரும் வசைமாரியே. அவரது கனவர், தந்தை மற்றும் சகோதரர்கள் அனைவரும் அவர் தமது பைத்தியக்கார செய்கையை கைவிடுமாறு கெஞ்சினார்; அதற்கு மறுமொழியாக, அவர் தமது நம்பிக்கையை பிரகடணப்படுத்தினார். தமது தலைமுறை, தமது மக்களின் வாழ்க்கை முறை, பலதாரங்கள் கொள்ளும் முறை, பெண்கள் முகத்திரை அனிவது, உயர் மட்டங்களில் ஊழல், சமயகுருக்கள் இழைக்கும் தீங்கு ஆகியவற்றின்பால் அவர் வசை மாரிகள் பொழிந்தார். தாஹிரிஃ உசிதப் போக்குடையவரோ, மெதுவாக செயல்படுபவரோ அல்லர். அவர் வெளிப்படையாகப் பேசினார்; எல்லா மட்டங்களிலும் மனித வாழ்வில் புரட்சியை வேண்டினார்; இறுதியில் அவர் மரண வாசலில் நின்ற போது தமது வாயிலிருந்து புறப்பட்ட சொற்களாலேயே அது நேர்ந்தது என்பதையும் அவர் உணர்திருந்தார்.

தோழிகளுடன் தாஹிஃரி


“ஊக்கம் நிறைந்த சுபாவம், தெளிவு மிகுந்த நியாயமான பகுத்தறிவு, குறிப்பிடத்தக்க சமநிலை, வசப்படுத்த முடியாத மனவுறுதி கொண்டவர் தாஹிரிஃ”, என நிக்கோலாஸ் நமக்கு கூறுகின்றார். கோபினோவ் கூறுவது, “அவரது உரையின் குறிப்படத்தகும் தன்மை யாதெனில், அதன் கிட்டத்தட்ட திடுக்கிட வைக்கும் எளிமையே ஆகும், இருந்தும் அவர் உரை நிகழ்த்தும் போது.நாம் நமது ஆன்மாவின் ஆழம் வரை நெகிழ்வுற்றும், வியப்பால் நிரைந்தும், கண்களில் நீர் மழ்கிடவும் செய்வோம்.” எவருமே அவரது வசீகர சக்தியிலிருந்து தப்பிக்க முடியாதென நபில் கூறுகிறார்; ஒரு சிலரே தொற்றிக்கொள்ளும் அவரது சமய நம்பிக்கையிலிருந்து தப்பிக்க முடியும். அனைவருமே அவரது சீலத்தின் அசாதாரண தன்மைகளுக்கு சாட்சியம் கூறி, அவரது வியப்பூட்டும் இயல்பால் ஆச்சர்யமடைந்து, அவரது தூய்மையான சமயநம்பிக்கைக்கு சாட்சியமும் பகர்வர்.

மிகவும் குறிப்பிடத்தக்கவையாக தாஹிரியைப் பற்றிய அப்துல் பஹாவின் நினைவுகள் உள்ளன. அவர் சிறுவராக இருந்த போது ஒரு நாள், தாஹிரிஃ அவரை தமது மடியில் உட்கார்த்தி வைத்து, கதவிற்கு வெளியே உட்கார்ந்திருந்த உயர்திரு சைய்யிட் யாஹ்யா-இ-டாராபியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சைய்யிட் அவர்கள் பெரும் கல்விமான். உதாரணமாக முப்பதாயிரம் இஸ்லாமிய மரபுக் கூற்றுகளை மனனம் செய்து வைத்திருந்தார்; திருக்குரானின் மையக் கூற்றுகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்ததோடு, பாப் அவர்களின் உண்மையை உணர வைக்க அப்புனித நூலில் இருந்து தகுந்த மேற்கோள்களை எடுத்துக்காட்டும் திறமை பெற்றவர். தாஹிரிஃ அவரைக் கூவி அழைத்து, “ஓ யாஹ்யா! நீர் ஒரு உண்மையான கல்விமானாக இருந்தால், உமது நம்பிக்கையை மெய்ப்பிப்பவைகள் சொற்கள் அன்றி அவை செயல்களாக இருக்கட்டும்,” எனக் கூறினார். சைய்யிட் அதை செவிமடுத்தார், வாழ்க்கையில் முதன் முதலாக அதை புறிந்துகொள்ளவும் செய்தார்; பாப் அவர்களின் சுயஉரிமை கோன்ரிக்கைகளாக இருப்பனவற்றை நிரூபிப்பது மட்டும் அன்றி, தாம் தம்மையே தியாகம் செய்து சமயத்தை பரவச் செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்தார். அவர் எழுந்து வெளியே சென்றார், பல இடங்களுக்கு பிராயணம் செய்து சமயத்தை போதித்தார், இறுதியில் நய்ரீஸ் நகரின் செஞ்சாலைகளில் தமது உயிரையும் தியாகம் செய்தார். அவர்கள் அவரது சிரசை துண்டித்து, அதற்குள் வைக்கோலை தினித்து, நகருக்கு நகர் அதை ஊர்வலமாக கொண்டு சென்றனர். தாஹிரி பாப் அவர்களைக் கண்டதே இல்லை. அவர் பாப் அவர்களுக்கு தமது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செய்தியை அனுப்பினார்: “பிரகாசிக்கும் உமது வதனத்தின் ஒளி பளிச்சிட, உமது திருமுகத்தின் ஓளிக் கதிர்கள் உயரே பாய்ந்தன; நான் உங்கள் பிரபு அல்லவா எனும் வார்த்தையை கூறுங்கள், அது நீரே, நீரே” என நாங்களும் மறுமொழி பகர்வோம். நான் அல்லவா எனும் தாரையின் வரவேற்பொலியால், துன்ப முரசுகள்தான் சப்தமாக முழங்கிட என் இதய வாசலருகே, காலடி பதித்து அழிவுப் படைகளும் கூடாரம் கொண்டன…“

அவர் பாப் அவர்களின் ஜோசப்பின் சூரா பற்றிய விளக்கவுரையை பாரசீக மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டார். பாப் அவர்களும் தாஹிரியை, அந்த அமரத் திருக்கூட்டத்தினரில் ஒருவராக, உயிர் அட்சரங்களில் ஒருவராக, நியமிக்கவும் செய்தார். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, இறை தூதர் முகம்மது அவர்களின் பேரர் இமாம் ஹுசேய்ன் தாகத்தாலும் காயங்களாலும் வீழ்ந்துபட்ட, கர்பிலாவில் அவரை இப்போது கண்ணுறுகின்றோம். அவரது (இமாம் ஹுசேய்னின்) வருடாந்திர விண்ணேற்ற நாளன்று, நகரமே அவரது நினைவால் கருப்பு உடையனிந்து அவருக்காக கதறியழும்போது, இவர் பாப் அவர்களின் பிறந்த நாளை கொண்டாட விழாக்கால உடையனிந்து நிற்கின்றார். இது ஒரு புதிய நாளென அவர்களிடம் கூறுகின்றார்; பழைய வேதனைகள் மறந்துவிட்டன. பிறகு ஹௌடா எனப்படும் குதிரை மேல் பூட்டிய திரைகளிடப்பட்ட ஒரு வித பல்லக்கில் பாக்தாத் சென்று தமது போதனையை தொடர்ந்தார். இங்கு, ஷியா, சுன்ன, கிருஸ்தவ மற்றும் யூத சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் அவர் செல்லும் தவறான வழியை அவருக்கு விளக்க முற்பட்டனர்; ஆனால் அவரோ பதிலுக்கு அவர்களை பிரமிக்கச் செய்தார், நிலை குலைந்து ஓட வை த்தார், பிறகு அதன் பயனாக துருக்கிய பிரதேசங்களிலிருந்து வெளியேறும்படி ஆணையும் இடப்பட்டார். பின் பாரசீகம் நோக்கி பிரயாணம் செய்தார், வழி நெடுக பாப் அவர்களுக்கு விசுவாசிகளை திரட்டிடவும் செய்தார். எங்கெங்கும், அரசபுத்திரர்களும், உ லாமாக்களும், அரசாங்க அதிகாரிகளுமென அவரைப் பார்க்க திரண்டனர்; பல பள்ளிவாசல்களின் பீடங்களிலிருந்து அவருக்கு வாழ்த்துரைகள் எழுந்தன; அதில் ஒன்று, “அதி உயர்ந்தவை என நாம் அடைந்துள்ள அனைத்தும் அவரது பரந்த அறிவிற்கு முன் னால் ஒரு துளிக்குச் சமமே” என்பதாகும். இது, ஊமைகளாகவும், வெறும் நிழல்களாகவும், தங்கள் வாழ்க்கைச் சக்கரத்தை முகத்திரைக்குப் பின்னால்: திருமணமும், நோயும், குழந்தைப் பேறும், சாதம் கிண்டுவதும், ரொட்டிகள் சுடுவதும், வெல்வெட் துனியில் இலைகள் தைப்பதும், பிறகு ஊர் பேர் தெரியாமல் இறந்து போவதும் என இருக்கும் பெண்கள் நிறைந்த ஒரு நாட்டில் பிறந்த ஒரு பெண்ணைப் பற்றி கூறப்பட்டதாகும்.

கர்பிலா, பாக்தாத், கிர்மான்ஷா, பிறகு ஹமடான் நகர்களுக்கு அவர் விஜயம் செய்தார். முடிவில் அவரது தந்தை அவரை காஃஸ்வின் திரும்பும்படி ஆணையிட்டார். அவர் காஃஸ்வின் திரும்பியவுடன், அவரது கனவனான முஜ்டாஹிட், அவரை தமது வீட்டிற்கு வந்து தம்மோடு வாழ உத்தரவிட்டான். அதற்கு அவரது மறுமொழியாக: “அகம்பாவமும் கர்வமும் மிக்க எனது உறவினனிடம் கூறுங்கள்… ” “என் விசுவாசமான துணைவனாகவும் சகாவாகவும் இருப்பதே உமது ஆவலாக இருந்திருந்தால் நீர் என்னை கர்பிலாவில் சந்திக்க விரைந்து வந்து, காலால் நடந்து என் பல்லக்கை காஃஸ்வின் வரை வழி நடத்தி வந்திருப்பீர். நானும் அக்கரையின்மை எனும் உமது துயிலிலிருந்து உம்மை எழுப்பி உண்மைக்கான வழியையும் உமக்கு.காண்பித்திருப்பேன். ஆனால் இது நடக்கப்போவதில்லை… இம்மையிலும் சரி மறுமையிலும் சரி நான் உம்முடன் இனைந்திருப்பதென்பது ஆகாது. என் வாழ்விலிருந்து உம்மை நிரந்தரமாக வீசி எறிந்துவிட்டேன்.”

அதன் பிறகு அவரது மாமாவும் கனவனும் அவரை சமயத் துரோகி என பிரகடனம் செய்து, அவருக்கெதிராக இரவும் பகலுமாக சதி செய்தனர். ஒரு நாள் காஃஸ்வின் வழியாக ஒரு முல்லா போய்க்கொண்டிருந்தார், அப்போது முரடர்கள் சிலர் ஒரு மனிதனை தெரு வழியாக இழுத்துச் செல்வதைக் கண்டார்; அவர்கள் அந்த மனிதனின் தலைப்பாகையை தாம்புக்கயிறு போல் அவரது கழுத்தில் கட்டி அவரை இம்சித்துக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோர், அந்த மனிதன், பாப் அவர்களின் சீடர்கள் இரு வரைப் பற்றி புகழ்ந்து பேசி விட்டதாக தெரிவித்தனர்; அதற்காக தாஹிரிஃயின் மாமா அவரை ஊரைவிட்டு வெளியேற்றுகிறார் எனவும் தெரிவித்தனர். அந்த முல்லா மனக் கிலேசமுற்றார். அவர் ஒரு பாப்’இ அல்ல, ஆனால் இம்சிக்கப்பட்ட அந்த இருவரையும் அவர் நேசித்தார். அவர் கத்திகள் செய்யப்படும் சந்தையடிக்குச் சென்று குத்துவாள் ஒன்றையும் மிகக் கூர்மையான ஈட்டி முனை ஒன்றையும் வாங்கிக்கொண்டு, அவற்றை உபயோகிக்க உசிதமான நேரத்திற்காக காத்திருந்தார். ஒரு நாள் காலைப்பொழுதில், மூதாட்டி ஒருவர் நொண்டிக் கொண்டு பள்ளிவாசலில் நுழைந்து, ஒரு கம்பளத்தை விரித்தார். அதன் பிறகு தாஹிரிஃயின் மாமா அதன் மீது தனியே பிரார்த்தனை செய்வதற்கு வந்தார். அவர் நெடுஞ்சான் கிடையாக தரையில் படுத்தபோது நமது முல்லா ஓடிச் சென்று அவர் கழுத்தில் ஈட்டி முனையை பாய்ச்சினார். அவர் ஓலமிட, முல்லா அவர் உடலைத் திருப்பிப் போட்டு, குத்துவாளை எ டுத்து அவர் வாயில் ஆழமாக குத்தி இரத்தம் பீரிட்டோட அவரை பள்ளிவாசலின் தரையிலேயே கிடக்க விட்டுச் சென்றார்.

அந்தக் கொலையால் காஃஸ்வின் நகரமே அல்லோலகல்லோலமாகியது. அந்த முல்லா தானே கொலை செய்தாரென ஒப்புக்கொண்டும், அவர்தான் கொலை செய்தார் என கொலையுண்டவர் சாவதற்கு முன் வாக்குமூலம் கொடுத்த போதும், ஒரு பாவமும் அறியாத பல மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டு கைதிகளாக்கப்பட்டனர். தெஹரானில், பஹாவுல்லா ஒரு சில நாட்கள் கொண்ட சிறை தண்டனையான தமது முதல் சித்திரவதையை அனுபவித்தார் ஏனெனில் அவர் இவர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உணவும் பணமும் கொடுத்தாராம். இறந்தவரின் வாரிசுகள் ஒன்றுமறியாத ஒரு அராபியரை, கர்பிலாவைச் சேர்ந்த ஷேய்க் சாலே என்பவரை, கொண்றனர். தாஹிரிஃயின் ரசிகரான இவரே பாரசீக மண்ணில் இறைவனின் சமயத்திற்காக இறந்த முதல் மனிதராவார்; அவரை தெஹரானில் கொன்றனர்; அவர் தமது கொலயாளியை தான் மிகவும் நேசிக்கும் ஒரு நண்பரை வரவேற்ப தைப் போல் வரவேற்று, தமது இறுதி வார்த்தைகளாக, “எனது எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையுமாக உள்ளவரே! உங்களைக் கண்ட வினாடி முதல் மனிதர்களின் எதிர்ப்புகளையும் நம்பிக்கைகளையும் நான் கைவிட்டுவிட்டேன்,” எனும் வார்த்தைகளை விட்டுச் சென்றார். மீதமிருந்த மற்ற கைதிகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டதாகவும், புதைப்பதற்கு அவர்கள் உடல்களின் ஒரு பகுதி கூட மிஞ்சவில்லை எனவும் கூறுப்படுகிறது. இருந்தும் இறந்து போன முஜ்டாஹிடின் வாரிசுகள் மன திருப்தி அடையவில்லை. அவர்கள் தாஹிரிஃயை குற்றம் சாட்டினர். அவரை அவரது தந்தையின் வீட்டில் அடைத்து வைத்து, அவரை கொலை செய்யவும் ஆயத்தமானார்கள்; ஆனால் அவரது காலம் கனியவில்லை. அப்போது ஒரு நாள் பிச்சைக்கார கிழவி ஒருத்தி வாசலில் நின்று உணவுக்காக ஓலமிட்டாள்; ஆனால் அவள் பிச்சைக்காரியல்ல பஹாவுல்லாவால் அனுப்பப்பட்ட ஒருவர் மூன்று குதிரைகளுடன் காஃஸ்வின் கோட்டைவாசலருகே நிற்ப தாக தகவல் கொண்டுவந்தவள். தாஹிரிஃ அப்பெண்மணியுடன் தப்பித்துச் சென்று, காலைப்பொழுதிற்குள் தெஹரானை அடைந்து, பஹாவுல்லாவின் வீட்டையும் சேர்ந்தார். இரவு முழுவதும், அவர்கள் அவரைத் தேடினர், ஆனால் அவர் மறைந்துவிட்டார்.

இப்போது காட்சி பாடாஷ்ட் பூங்காவின்பால் திரும்புகிறது. பசுமையான தோட்டங்கள், அவற்றை மறைத்திடும் மண்சுவர்கள், பாலையின் மீது ஓடிய ஒரு நீரோடை, அதற்கப்பால், வானளாவும் உயர்ந்த மலைகள். “துன்பம் தரும் மலை” என பாப் அவர்களால் வ ருணிக்கப்பட்ட ஷிஃரீக்கில் பாப் அவர்கள் சிறையில் இருந்தார். அவர் வாழ இரண்டு குறுகிய வருடங்களே எஞ்சியிருந்தன. இப்போது பஹாவுல்லா, முன்னனி பாப்’இக்கள் என எண்பத்தொரு பேருடன் பாடாஷ்ட் வந்து சேர்ந்தார். அவரது ஸ்தானம் இதுகாரும் அறியப்படாமலேயே இருந்தது. பாப் அவர்களால், முகம்மது அவர்களால், இயேசுவால், ஸாராதுஸ்ட்ராவால், மற்றும் அனேகரால் வாக்களிக்கப்பட்டவர் அவர். நூற்றாண்டுகள் தோறும் தூதருக்குப்பின் வந்த தூதர்களான அவர்களால் முன்கூறப்பட்ட அவர் அறியப்படாமலேயே இருந்தார். அவரது நாமம் உலகம் முழுவதும் நேசிக்கப்படப் போகின்றது என படாஷ்ட்டில் உள்ளோர் எப்படி அறிந்திருக்க முடியும்? உலக முழுவதுமுள்ள நகரங்களில்; சான் பிரான்சிஸ்கோ, அடிலேய்ட், என முன் கேட்டறியப்படாத வினோதமான பெயர்களைக் கொண்ட இடங்களில்? அனுமானிக்கப்படாத ஆண்களும் பெண்களுமென அவரது நாமத்தை சேவிக்க முன்னெழப்போவோரை அவர்கள் எவ்வாறு கண்டிருக்க முடியும்? ஆனால் தாஹிரிஃ கண்டார்..“அவரது முகத்தில் இருந்து பளிச்சிடும் ஒளியில், விட்டில்களைப் போல் நடனமாடிடும் அவரது நேசர்களின் ஆன்மாக்களை பாருங்கள்” என அவர் எ ழுதினார். இந்த பாடாஷ்ட் எனும் ஊரில்தான் பழைய விதிகள் முறிக்கப்பட்டன. இந்நாள் வரை பாப்’இக்கள், அவர்களது தலைவர் இஸ்லாத்தை மறுஸ்தாபிதம் செய்யவே வந்துள்ளார் என நினைத்தனர்; ஆனால் இங்கோ பழைய விதிகள் ஒவ்வொன்றாக மறைவதை கண் ணுற்றார்கள். அவர்களது குழப்பமும், மனக் கிலேசமும், அதிகரித்துக் கொண்டே போனது, ஒரு சிலர் தங்களின் பழைய மார்க்கத்தை இருகப் பிடித்துக்கொண்டு புதிய வழியிற் செல்ல இயலாமலும் நின்றனர். பிறகொரு நாள், அவர்கள் பஹாவுல்லாவுடன் ஒன்றாக உட்கார்ந்திருந்த வேளை, அதிரடி போன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தாஹிரிஃ அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நின்றார். ஆனால் அவர் எப்படி வந்து நின்றார்? அவர்களுக்கு முன் அவர் தமது முகத்திரை இல்லாமல் தோன்றினார்! தாஹிரிஃ, புனிதத் தாஹிரிஃ, எவருடைய நிழலைக் கூட பார்ப்பது தவறு என மக்கள் நினைத்தனரோ; தமது காலத்தில் பெரு மதிப்புடன் திகழ்ந்த அந்த தாஹிரிஃ, தமது முகத்தை மறைத்த திரையை அகற்றிவிட்டு, அவர்களுக்கு களிப்பூட்ட வந்த ஒரு நடன மாதைப்போல் அவர்கள் முன் நின்றார். மின்னும் அவரது உடல் நிறத்தை, கூறிய இரு விழிகளின் மேல் இரு வாட்களைப் போல் ஒன்றினைந்திருந்த அவரது புருவங்களை, அவர்கள் கண்டனரே! ஆனால் அவர்களால் அவரை பார்க்க முடியவில்லை. ஒரு சிலர் தங்கள் முகங்களை தங்கள் கைகளால் மூடிக் கொண்டனர், ஒரு சிலர் தங்கள் ஆடை களை தலை மேல் போட்டு மூடிக் கொண்டனர். ஒருவர் தமது கழுத்தை தாமே அறுத்துக் கொண்டு இரத்தம் கசிந்த நிலையில் வீரிட்டவாறு ஓடிச் சென்றார். பிறகு, அங்கு மீதமிருந்தோரைப் பார்த்து உரத்த குரலில் தாஹிரிஃ பேசினார், அப்போது அவரது உரை திருக்குரானின் வார்த்தைகளை ஒத்திருந்தது எனக் கூறுவர். “இந்த நாள், இந்த நாள் கடந்த காலங்களின் தளைகள் உடைத்தெறியப்பட்டுள்ள நாள் காஃய்யிம் உச்சரிக்கவிருக்கும், பூவுலகின் குடித்தலைவர்களையும் உயர்மட்டத்தில் உள்ளவர்களையும் மருண்டோடச் செய்யக்கூடிய அந்த வார்த்தை நானே!” அவர், மேலும், எவ்விதம் பழைய விதிகள் புதிய விதிகளின்பால் வழிவிட்டுச் செல்கின்றன என்பது பற்றி கூறி, புனித நூலில் இருந்து: “மெய்யாகவே, பூங்காவனங்களிலும், ஆறுகளின் இடையிலும், ஆற்றல் மிகு அரசரின் முன்னிலையில், பக்தியுடையோர் உன்மையின் ஆசனத்தில் வீற்றிருப்பர்.” எனும் தீர்க்கதரிசனமான வார்த்தைகளோடு தமது உரையை முடித்தார். தாஹிரிஃ, பஹாவுல்லா பிறந்த அதே ஆண்டில்தான் பிறந்தார். அவர் கொலை செய்யப்படும் போது அவருக்கு முப்பத்து ஆறே வயது. ஐரோப்பிய கல்விமான்கள் அவரை, அவரது ஒரு பெயரான குர்ராத்துல் அய்ன், ‘கண்களின் ஆறுதல்’ எனும் பெயரால் நெடுங் காலமாக அறிந்து வைத்துள்ளனர். பாரசீகர்கள், மொழிமாற்றத்திற்காக காத்திருக்கும் அவரது கவிதைகளைப் பாடுகின்றனர். பல நாடுகளில் உள்ள பெண்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டு, அவர் மூலமாக மனோபலமும் அடைகின்றனர். ஆண்கள் அவரை வாழ்த்திப் பேசியுள்ளனர். கோபிநோவ், அவரது அழகை வருணிக்கும் போது, “(ஆனால்) இந்த இளம் பெண்ணின் மனமும் சீலமும் அதைவிட (அவரது அழகைவிட) பன்மடங்கு சிறப்பு வாய்ந்தவை” எனக் கூறியுள்ளார். சர் பிராண்சிஸ் யங்ஹஸ்பன்ட் கூறுவது: “… அவர், செல்வங்கள், குழந்தைகள், பெயர் மற்றும் ஸ்தானம் ஆகியவற்றை தமது தலைவரின் சேவைக்காக தியாகம் செய்தார்… பாரசீக மொழியில் அவரது கவிதைகளே மன நெகிழ்ச்சி மிகச் செய்பவைகளாக இருந்தன.” திரு ஜி. ரி. செய்ன், “. . .அவரது அக்னியைப் போன்ற உற்சாகத்தினாலும் அவரது முற்றிலும் உலகைத் துறந்த போக்கினாலும் நாம் முதன்மையாகக் கவரப்படுவோம். உண்மையில், குஃடுஸ்ஸிற்கு இருந்தது போன்றே… இந்த உலகம் தாகிரிஃக்கும் ஒரு கைப்பிடி மண்ணின் மதிப்பே கொண்டிருந்தது”. இப்போது நாம் அவரை தெஹரான் நகரமுதல்வரின் இல்லத்தில் நடக்கும் ஒரு திருமணத்தில் காண்கின்றோம். அவரது நெற்றியில் விழும் கேசச் சுருள்கள் குட்டையாக உள்ளன, அவர் தமது தலையில், முகவாய்க்கட்டையின் கீழ் ஊசியினால் ஒன்று சேர்க்கப்பட்ட, தோற்பட்டை வரை விழும் ஒரு பூப்போட்ட கைத்துனியை அனிந்துள்ளார். இடையை இருகப் பிடிக்கும் உடை தரை வரை நீண் டுள்ளது; அது கைத்தறியினால் ஆனது, சித்திரப்பூ வேளைப்பாடு கொண்டதாகவும், ஜீவமரத்தின் வடிவம் அதில் வரையப்பட்டும் உள்ளது. அவரது சிறிய செருப்புகள் விரல் நுனியின் மேற்பக்கமாக வளைந்துள்ளன. சுகந்த வாசனை திரவியங்கள் அனிந்த மெல்லியலாள்களெனும் பெண்கள் கூட்டம் அவரைச் சுற்றி தள்ளிக்கொண்டும் சலசலத்துக் கொண்டும் உள்ளது. அவர்கள் குவிந்த இனிப்புப் பண்டங்கள் அடங்கிய வெள்ளித் தட்டுகள் உள்ள தங்கள் மேஜைகளை விட்டு வந்துவிட்டனர். திருமண வைபவத்திற்காக அமர்த்தப்பட்ட, தங்கள் கைவிரல்களை சொடுக்கியும் இடுப்பை ஒடித்தும் ஆடக்கூடிய நடனமணிகளை அவர்கள் மறந்துவிட் டனர். விருந்தினர்கள், தாஹிரிஃ கூறுவதை, இங்கு நகரமுதல்வரின் இல்லத்தில் கைதியாக உள்ளவர் கூறுவதை செவிமடுத்துக் கொண்டுள்ளனர். அவர் புதிய சமயத்தைப் பற்றி, அது கொண்டுவரக் கூடிய புதிய வாழ்வு முறையைப்பற்றி அவர்களுக்கு கூறுகின்றார். அவர்கள் நடணப்பெண்களையும் இனிப்புப் பண்டங்களையும் மறந்தே விட்டிருந்தனர். எவருடைய இல்லம் தாஹிரிஃக்கு சிறையாக இருந்ததோ, அந்த மாஹ்முட் காஃன் ஆகிய நகரத் தலைவர், ஒரு வினோதமான முடிவை அடைந்தார். இந்த மாஹ்முட் காஃன் தாஹிரிஃ அவரது இல்லத்தில் கைதியாக இருந்தகாலத்தில் அவர்பால் அன்பாக ந டந்தும் அவருக்கு நம்பிக்கை அளிக்கவும் செய்தார் என கோபினோவ் கூறுகின்றார். அவர் மேலும் கூறுவது, தாஹிரிஃக்கு இவ்வித நம்பிக்கை அளிப்பு எதுவும் தேவைப்படவில்லை, என்பதாகும். மாஹ்முட் காஃன் தாஹிரிஃயின் சிறைவாசத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், அவர் குறுக்கிட்டு, தமது சமயத்தை பற்றியே போதிப்பார்; உன்மை மற்றும் பொய்யைப் பற்றி கூறுவார்; எது நிஜம் எது மாயை என்பது பற்றி விவாதிப்பார். ஒரு நாள் காலை மாஹ்முட் காஃன் அவருக்கு நற்செய்தி ஒன்றை கொண்டுவந்தார்; நாட்டுப் பிரதமரிடமிருந்து; அவர் பாப் அவர்களின்பாலான தமது நம்பிக்கையை துறக்க வேண்டியதுதான், பிரதமர் அவர்கள் அதை நம்பாவிட்டாலும்கூட அவரை உடனேயே விடுதலை செய்துவிடுவார் எனும் செய்தியே அது. “இந்த அநித்தியமான, மதிப்பற்ற உடலை, மேலும் ஒரு சில நாட்கள் உயிருடன் வைத்திருப்பது எனும் இந்த வெற்று காரணத்திற்காக… நான் எனது நம்பிக்கையைத் துறப்பேன் என கனவு காண வேண்டாம்,” என பதிலளித்தார். “ஓ மாஹ்முட் காஃனே! நான் சொல்லப்போவதை இப்போது நீர் கேளும்… நீர் எவருக்கு சேவை செய்கின்றீரோ, அந்த யஜமான் உமது உற்சாகத்தை ஈடு செய்யப்தோவது இல்லை; மாறாக, அவரது உத்தரவின் பேரில் நீர் கொடுமையாக அழியப்போகின்றீர். உமது இறுப்பிற்கு முன், உண்மையான அறிவின்பால் உமது ஆன்மாவை ஏற்றம் அடையச் செய்ய முயற்சிப்பீர்.” என தெரிவித்தார். அதை நம்பாமல் நகரத்தலைவர் அந்த அறையை விட்டகன்றார்.

ஆனால் 1861-இன் பஞ்சகாலத்தில் மக்கள் செய்த புரட்சியில் தாஹிரிஃயின் கூற்று மெய்ப்படுத்தப்பட் டது. அந்த உணவுப் பஞ்சத்தால் ஏற்பட்ட புரட்சி; மற்றும் மாஹ்முட் காஃனின் இறப்பு பற்றிய நேரடி சாட்சியம்: “தெஹரானில் ஏற்பட்ட கொந்தளிப்பு ஒரு முடிவை நெருங்கியது, கடக்க முடியாதபடி இருந்த சாலைகளினால் உணவு மக்களைச் சென்று அடையவில்ல. ஐரோப்பியர் எவரேனும் சாலையில் தென்பட்டவுடன் பஞ்சத்தால் அடிபட்ட பெண்கள் அவரைச் சூழ்ந்து உதவி கோரி முறையிட்ட னர்… மார்ச் முதல் நாளன்று… பாரசீக தலைமை செயலாளர், முகம் வெளுத்தும் நடுங்கியவாறும் உள்ளே வந்து, புரட்சி ஒன்று வெடித்து விட்டதாகவும், கலாந்தர் எனப்படும் நகரத் தலைவர் அப்போதுதான் கொல்லப்பட்டுள்ளதாகவும், சந்தை தெருக்கள் வழியாக மக்கள் அவரது உடலை முழு நிர்வாணமாக இழுத்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். விரைவில் ஒரு பேரிரைச்சல் கேட்டது, சன்னல் வழியாக பார்த்தபோது, தெரு முழுவதும் மிகவும் கொந்தளித்துப் போயிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், கொலைக் கள த்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டும், அங்கு நிர்வாணமாக தொங்கவிடப்பட்டும் இருக்கப்போகும் மூன்று பிணங்களைச் சூழ்ந்திருந்தனர். அவ்விஷயத்தைப் பற்றி தீர விசாரித்த போது, பிப்ரவரி 28-ஆம் திகதி அன்று, வேட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஷா மன்னனை, உணவு பற்றாக்குறை பற்றி கோஷமிட்டும், அவரது கண் முன்னேயே ரொட்டிக் கடைகளை தீயிட்டும் சூரையாடிக் கொண்டும் இருந்த பல ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம் சூழ்ந்தது… அடுத்த நாள், மார்ச் முதல் நாளன்று… ஹாஜி பாபாவின் ஸைனாப் வீசியெரியப்பட்ட கோபுரத்தின் மீது ஷா மன்னன் ஏறி தூரதர்சினியைக் கொண்டு மக்கள் கொந்தளிப்பை பார்த்துக் கெ ணண்டிருந்தான். நன்கு உடையனிந்தும், பல வேலையாட்களுடனும் இருந்த கலாந்தர் கோபுரத்தின் மீது தானும் ஏறி, அவ்வித நிலை ஏற்படும் வரை நடவடிக்கை எடுக்காத, தன்னை கடிந்து கொண்ட அரசனோடு சேர்ந்து தானும் நின்று கொண்டிருந்தான். அரசனின் கண்டிப்பை பொறுக்க மாட்டாத கலாந்தர், அந்த புரட்சியை தானே அடக்கிக் காண்பிக்கின்றேன் என சவாலிட்டு, கீழே இறங்கி ஒரு பெரும் தடியால் பல பெண்களை தன் கைகளாலேயே தாக்கினான். அதை தாங்கமுடியாமல், தாங்கள் பட்ட காயங்களை அரசனிடம் காண்பித்து அதற்கு நியாயம் கேட்டு பெண்கள் கூட்டம் அரசனிடம் வந்தது. அரசன் கலாந்தரை அழைத்து, “என் கண் முன்னாலேயே நீர் எமது பிரஜைகளிடம் இவ்விதம் நடந்து கொள்ளும் போது உமது இரகசியச் செயல்கள் எல்லாம் இன்னும் எவ்வ ளவு கொடியனவைகளாக இருக்கக் கூடும்?” எனக் கூறினான். பிறகு தமது பணியாட்கள் பக்கம் திரும்பி, “இவனை கால்கட்டைகளால் பினைத்து பாஸ்டினாடோவைப் பிரயோகியுங்கள்” என ஆணையிட்டான். அந்த கட்டளை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போதே “தனாப்! கயிறு, கழுத்தை நெறித்துக் கொல்லுங்கள்,” எனும் அந்த பயங்கர வார்த்தையை அரசன் உச்சரித்தான்.

ஓரிரவு கலாந்தரின் மனைவியை தமது அரைக்கு தாஹிரிஃ அழைத்தார். அவர் மின்னும் வெண்மை கொண்ட வெள்ளை பட்டினால் ஆன ஒரு ஆடையை அனிந்து கொண்டிருந்தார்; அவரது கேசம் ஒளிர்ந்தது, அவரது கண்ணங்கள் வெள்ளைப் படுத்தப்பட்டு மென்மையாக வெளுத்திருந்தன. அவர் சுகந்த மணம் வீசும் வாசனை திரவியங்கள் அனிந்திருந்தார், அதனால் அந்த அரையே மணம் வீசியது. “நான் எனது அன்பரைக் காண தயாராகிக் கொண்டிருக்கின்றேன்,” எனக் கூறினார். “… நான் சிறைபடுத்தப்பட்டும், தியாகமரணம் அடையவும் கூடிய நேரம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது” என்றார். அதன் பின், அவர் அந்த பூட்டிய அறையினுள்ளேயே முன்னும் பின்னுமாக நடந்துகொண்டும், பிரார்த்தனைகளை ஓதிக்கொண்டும் இருந்தார். கதவிற்கு வெளியே கலாந்தரின் மனைவி, உயர்ந்தும் தாழ்ந்தும் கொண்டிருந்த அவரது குரல் ஒலியை செவிமடுத்து, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். “இறைவா, இறைவா, அவரது உதடுகள் தொடத் துடிக்கும் அந்தக் கோப்பையை அவரிடமிருந்து அப்பால் கொண்டு செல்லுங்கள்,” எனக் கதறினாள். நாம் அந்த பூட்டிய கதவை உடைத்து உள்ளே செல்ல முடியாது. அந்த கடைசி சில மணி நேரங்கள் எப்படி இருந்திருக்கும் என்பது பற்றி நாம் ஒரு யூகமே செய்யமுடியும். அது அவரது சொத்துக்களை பிரிப்பதற்கோ, நண்பர்களுக்கு பிரியாவிடை சொல்வதற்கோ என்றில்லாமல், மக்கள் அனைவருடைய ஆண்டவரும், அனைவராலும் நேசிக்கப்படுபவருமான அந்த ஒரே கடவுளுடன் தொடர்பு கொள்வதற்காகவே இருந்திருக்கும். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், அவரது புனித ஆன்மாக்கள், மற்றும் அவரது தூதர்கள், அனைவரும் அங்கு இருந்தனர்; இது போன்ற நேரங்களில் அவர்கள் ஆஜராகியிருப்பார்கள்; ஊனைத் தாண்டி அவர்களுடன் தாஹிரிஃயும் ஆன்மீக நிலையில் சேர்ந்திருந்தார். அவர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்த போது, அவர் முகத்திரையிட்டுக் கொண்டு தயாராகவே இருந்தார். “என்னை ஞாபக த்தில் வைத்துக் கொள், எனது களிப்பில் நீயும் சந்தோஷப்படு” என போகும் போது கூறிச் சென்றார். அந்தப் பாரசீக இருளில் அவர் அவர்கள் கொண்டு வந்திருந்த குதிரை மீதேறிச் சென்றார். நட்சத்திர ஒளி மரங்களின் மீது நன்கு விழுந்தது. இராப்பாடிகளின் சலசலப்பு மிகுந்திருந்தது. ஒட்டகங்களின் கழுத்தில் கட்டியிருந்த மணியின் ஓசை ஏதோ ஒரு திசையில் ஒலித்தது. குதிரைகளின் குழம்பொலி சாலையின் மண்ணில் தடதடத்தது. இப்போது தோட்டத்தில் இருந்த வீரர்களின் போதை மிகுந்த சிரிப்போலி கேட்கின்றது. அவர்களது இருக்கமான முகங்களில், விருந்து மேஜை விரிப்புகளில், கொட்டிக் கிடந்த மதுவின் மீது, வர்த்திகளின் ஒளி வீசியது. தாஹிரிஃ அவர்கள் தலைவன் முன் நின்ற போது அவன் அவரை ஏறிட்டு பார்க்கக் கூட இல்லை. “இங்கிருந்து போங்கள், அப்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுங்கள்” எனக் கத்தினான். பிறகு அவன் பார்வை அவனது மதுக் கோப்பை மீது சென்றது. தாஹிரிஃ தம்மோடு ஒரு பட்டுக் கைத்துனியை கொண்டு வந்திருந்தார்; இந்த சந்தர்ப்பத்திற்காகவே அவர் அதை நெடுங்காலமாக சேர்த்து வைத்திருந்தார். இப்போது, அதை, அவர் அவர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அதைக் கொண்டு அவரது கழுத்தை சுற்றி இரத்தம் பீரிடும் வரை நெறித்தனர். அவரது உடல் அசைவுகள் நிற்கும் வரை அவர்கள் காத்திருந்தனர், பிறகு அந்த உடலை பாதி தோண்டப்பட்ட தோட்டக் கிணறு ஒன்றில் கிடத்தி, அதை மண்ணால் நன்கு மூடிச் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்க்கக் கூசிய அவர்கள் பார்வை பூமியின் மீது படர்ந்திருந்தது. அந்தச் சம்பவம் நடந்து தெஹரானில் பல பருவகாலங்கள் கடந்துவிட்டன. வடக்கில் உள்ள மலைகளை பனிக் காலத்தின் பனிக்கட்டிகள், பல ஆயிரம் கண்ணடிகளைக் கொட்டியது போன்று, வெள்ளி மலைகளாக்கின. தோட்டத்தில் பேரி மலர்கள் படர்ந்திடவும், நீல மழைக் குருவிகள் வானத்தில் பாய்ந்திடவும், இளவேனிற் காலங்கள் வந்து சென்றன. கோடை காலத்தில், நகரமே புழுதித் படலம் சூழு, மக்கள், மலைகளின் நீர் படர்ந்த பாறைகளையும், பச்சை படர்ந்திட்ட பள்ளத்தாக்குகளையும் நாடிச் சென்றனர். மரக்கிளைகளெல்லாம் வெறிச்சோடிய சரத் காலத்தில், மயக்கம் தரும் அகன்ற புல்வெளிகளும் வானமும் நகரத்தை மீண்டும் வலம் வந்தன. அந்த இரவுக்குப் பிறகு பல காலம், ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள், ஆகிவிட்டது. ஆனால் அன்று இருந்த அந்த ஒரே குரலின் இடத்தில் இன்று பல ஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றன. பல மொழிகளில் வார்த்தைகள், பல எழுத்துப் படிவங்களில் நூல்கள், மற்றும் கோவில்களும் எழுந்துள்ளன. எந்த அன்பிற்காக அவர் இறந்தாரோ அந்த அன்பு பற்றிக் கொண்டு பரவி, தியாகம் செய்ய ஒரே ஒரு இதயம் இருந்த இடத்தில் இன்று பல ஆயிரம் இதயங்கள் தங்களை அர்ப் பணிக்க காத்திருக்கின்றன. அங்கு புழுதியின் கீழ், அவர் மௌனமாக இல்லை. அவரது உதடுகள் மண்ணோடு மண்ணாகிவிட் டன, ஆனால் அவற்றின் சுவடுகள் பொண்ணான மொழி பேசுகின்றன.