ஹாஜி முல்லா இஸ்மாயில்


ஹாஜி முல்லா இஸ்மாயில்

ஹாஜி முல்லா இஸ்மாயில்-யி-கூஃமி, பஃராஹானைச் சேர்ந்தவராவார். அவரது இளமையிலேயே தாம் மிகவும் சிரத்தையுடன் அறிந்துகொள்ள முயன்ற உண்மையைத் தேடி அவர் கர்பிலாவுக்குச் சென்றார். நாஜாஃப் மற்றும் கர்பிலாவைச் சேர்ந்த முக்கிய உலாமாக்கள் பலரோடு அவர் தொடர்பு கொண்டிருந்தார். சையிட் காசிம் அவர்களின காலடியில் உட்கார்ந்து அவர் அறிவும் ஞானமும் பெற்றிருந்தார். பின்னாளில், சில வருடங்களுக்குப் பிறகு, அவர் ஷராஸில் இருந்த போது, பாப் அவர்களின் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள இந்த அறிவும் ஞானமும் வழிவகுத்தன.

அவர் தமது நம்பிக்ககையின் திடத்தினாலும், தமது அழ்ந்த பக்தி விசுவாசத்தினாலும் தனிச்சிறப்படைந்திருந்தார். அனைவரும் கூராசானுக்கு விரைந்து செல்லுமாறு பாப் அவர்களின் ஆணையை அவர் செவிமடுத்ததுமே, மிகுந்த உற்சாகத்துடன் அவர் அதற்கு அடிபனிந்தார். பாதாஷ்ட்டை நோக்கி சென்ற அன்பர்களுடன் அவர் சேர்ந்துகொண்டார். அங்கு அவர் சிர்ருல்-வுஜுட் எனும் நாமமும் பெற்றார். அந்த அன்பர்களின் சகவாசத்தினால் சமயம் பற்றிய அவரது அறிவு மேலும் ஆழமடைந்தது. சமயத்தை மேலும் மேம்பாடடையச் செய்ய வேண்டும் எனும் அவரது அவாவும் அதே விகிதத்தில் அதிகரிக்கவும் செய்தது.

அவர் பற்றுறுதியின் மறு உருவமாகவே ஆனார். தமது சமயம் அவருக்கு அளித்த உற்சாக உணர்வைத் தகுந்த முறையில் வெளிப்படுத்திடுவதற்கு அவர் பெரிதும் ஆவலுற்றார். திருக்குர்’ஆனின் வாசகங்களின் அர்த்தங்களையும், இஸ்லாமிய மரபுகளையும் விளக்குவதில் அவர் வெளிப்படுத்திய நுண்ணறிவுக்கு இனையாக வெகு சிலரே இருந்தனர். பேச்சாற்றலுடன் அவற்றின் உண்மைகளை அவர் வெளிப்படுத்தியதானது அவரது சக சிஷ்யர்களின் போற்றுதலை பெற்றது.

பாப் அவர்களின் சிஷ்யர்களுக்கு தபார்சி கோட்டையே ஒன்றுகூடும் மையமாக விளங்கிய நாட்களின் போது, அவர் படுத்தபடுக்கையாக நோய்வாய்ப்பட்டு அல்லலுற்றிருந்தார். அவரால் அந்தக் கோட்டையின் பாதுகாப்பிற்கு உதவிடவோ அதற்குத் தமது பங்கை ஆற்றிடவோ முடியவில்லை. அவர் உடல் சௌகர்யம் அடைந்தவுடன், அந்த நினைவில் நிற்கும் முற்றுகை ஒரு முடிவிற்கு வந்திருப்பதைக் கண்டார். அதில் அவரது சக சிஷ்யர்கள் பெரும் அழிவுக்கு ஆளாகியிருந்தனர். சமயம் அடைந்திருந்த அந்த பெருத்த நஷ்டத்திற்கு அவர் தமது சுயத்தியாகமிக்க உழைப்பால் ஈடுகட்டும் எண்ணத்துடன் அவர் மேலும் அதிகமான உறுதியுடன் முன்னெழுந்தார். இந்த உறுதி, அவரை உயிர்த்தியாகமெனும் களத்திற்கு இட்டுச் சென்றும், அதன் மகுடத்தை அவருக்கு ஈட்டித் தரவும் செய்தது.

சிரசைத் துண்டிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதற்காக காத்திருந்த வேளை, தம்மை முந்திக்கொண்டு சிரம் துண்டிக்கப்பட்டும், ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இருக்கவும் செய்த அந்த இரு உயிர்த்தியாகிகளையும் அவர் கண்ணுற்றார். அவர்களின் இரத்தம் தோய்ந்த சிரங்களை நோக்கியவாறு, “நன்கு செய்தீர்கள் அன்புத் நண்பர்களே,” என முழங்கினார். “தெஹரானையே சுவர்க்கலோகமாக மாற்றிவிட்டீர்,” எனக் கூவினார். “நான் உங்களை முத்திக்கொள்ள முடியவில்லையே!” தமது காற்சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு காசை எடுத்து, தமது சிரச்சேதம் செய்யப்போகும் காவலாளிக்கு அதைக் கொடுத்து, அவர் தமது வாயை இனிப்பாக்கிக்கொள்வதற்கு ஏதாவது வாங்கி வருமாறு வேண்டினார்.

அதில் சிறிதை தாம் அருந்தி மற்றதை காவலாளியிடமே கொடுத்தார். கொடுத்துவிட்டு, “உனது செய்கையை நான் மன்னித்துவிட்டேன்; எம்மை அனுகி எமது சிரசைச் துண்டிக்கலாம், என்றார். முப்பது வருட காலமாக இந்தப் புண்ணியநாளுக்காக நான் ஏங்கியிருந்துள்ளேன். எங்கே எனது இந்த ஆசை நிறைவேறாமலேயே நான் எனது சவக்குழிக்குச் சென்றுவிடுவேனோ என பயந்திருந்தேன்,” என மேலும் கூறினார். விண்ணை நோக்கியவாறு, “இறைவா, எம்மை ஏற்றுக்கொள்வீர்,” எனக் கூவினார். நான் தகுதியற்றவனான போதிலும் “தியாகமெனும் பலிபீடத்தில் தங்கள் உயிர்களை காணிக்கையாக்கியுள்ள அந்த அந்த அமரர்களின் சுருள்சுவடியில் எழுதிட, முயலுகின்றேன்,” என்றார். அவர் தமது வழிபாட்டைக் கூறிக்கொண்டிருக்கையிலேயே, அவரது வேண்டுகோளின் பேரில் காவலாளி அவரது வழிபாட்டை பாதியிலேயே துண்டித்

இஸ்முல்லாஹுல்-அஸ்டக்


மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள்
நினைவோவியங்கள்

இஸ்முல்லாஹுல்-அஸ்டக்

இம்மை நீத்து அதி உயர்ந்த தொடுவானத்திற்கு ஏகிய இறை சமயத்தின் திருக்கரங்களில் ஜிநாப்-இ-இஸ்முல்லாஹுல்-அஸ்டாக் ஒருவராவார்.

மற்றொருவர் ஜிநாப்-இ-நபில்-இ-அக்பர் ஆவார். மற்றும் பலரில் ஜிநாப்-இ-முல்லா அலி-அக்பரும் ஜிநாப்-இ-ஷெய்க் முஹம்மட்-ரிடாய்-இ-யாஸ்டியும் ஆவர். மேலும், பலரிடையே, வணக்கத்திற்குறிய உயிர்த் தியாகியான, அகா மிர்சா வர்காவும் வீற்றிருந்தார்.

இஸ்முல்லாஹுல்-அஸ்டாக் மெய்யாகவே தமது வாழ்வின் ஆரம்பத்திலிருந்து தமது இறுதி சீமுச்சு வரை தேவரின் சேவகனாகவே இருந்தார். இளமைக் காலத்தில், இவர் காலஞ் சென்ற சிய்யித் காசிம் அவர்களின் வட்டத்தில் சேர்ந்துகொன்டு அவரது சீடர்களில் ஒருவரானார்.

பாரசீகத்தில் தமது தூய்மையான வாழ்விற்கு பெயர் பெற்றவர் இவர், புனிதர் முல்லா சாடிக் எனும் புகழும் எய்தினார். ஆசிர்வதிக்கப்பட்டவர் இவர், திறண்வாய்ந்தவர், கற்றவர், பெரும் மதிப்பும் பெற்றவர் எனத் திகழ்ந்தார்.

குராசானின் மக்கள் இவர்பால் அதிகமாய் பற்று கொண்டார்கள், ஏனெனில் இவர் ஒரு சிறந்த பண்டிதரும் மத குருக்களில் ஒப்பற்றவரும் தனிச்சிறப்பு பெற்றவருமாவார்.

சமயத்தின் போதகராக, தனக்கு செவிசாய்ப்போர் எல்லோரையும் வெகு சுலபமாக வென்றிடும் அளவிற்கு இவர் அத்துனை சொல்லாற்றலாலும், அத்துனை சக்தியோடும் உரை நிகழ்த்துவார்.

பக்தாத்திற்கு வந்து பஹாவுல்லாவின் முன்னிலையை அடைந்த பிறகு, ஒரு நாள் ஆண்கள் வசிக்கும் அறையின் வாசலில், ஒரு சிறு தோட்டத்தின் அருகே அவர் அமர்ந்திருந்தார்.

நான் மேலே அந்த வாசலை முன்னோக்கிய வன்னம் இருக்கும் அறைகள் ஒன்றில் இருந்தோன். அத் தருணம், பத்-ஆலி ஷாவின்யீ பேரனான, ஒரு பாரசீக இளவரசர் வீட்டிற்குள் நுழைந்தார்.

அந்த இளவரசர் இவரைக் கேட்டார், *நீங்கள் யார்?* என. *இந்த இல்லத்தின் ஒரு சேவகனாவேன் நான்*. இவ் வாசலைக் காத்திருக்கும் காவலர்களில் ஒருவன் நான் என இஸ்முல்லா பதில் அளித்தார்.

நான் மேலே இருந்து செவிமடுத்துக்கொண்டிருக்க, கீழே இவர் சமயத்தைப் போதிக்கத் துவங்கினார். அந்த இளவரசரோ ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்- ஆயினும், கால் மணி நேரத்திற்குள், சாந்தமாகவும் மரியாதையுடனும், ஜிநாப்-இ-இஸ்முல்லா அவரை அமைதி பெறச்செய்துவிட்டார்.

இவர் சொன்னதை அந்த இளவரசர் மிக்க கோபத்தோடு மறுத்தபிறகு, தனது முகம் தன் கோபத்தை வெகு தௌவீவாக பிரதிபலித்துவிட்ட பிறகு, இப்பொழுது அவரது கோபம் புன்னகைகளாய் மாறின, இஸ்முல்லாவை சந்தித்ததிலும் அவர் உரைத்தவற்றை செவிமடுத்ததிலும் இளவரசர் அதிகபட்சமான மனதிருப்தியினை தெரிவித்தார்.

இவர் எப்பொழுதுமே கலகலப்புடனும் ஆனந்தத்துடனும் போதிப்பார், மற்றும் தான் பேசுபவர் எத்துனை ஆவேசமான கோபத்தை தன்பால் செலுத்திட்ட போதும் இவர் சாந்தத்துடனும் ஏற்கக்கூடிய நகைச்சுவையோடும் பதிலளிப்பார்.

இவரது போதனை முறை தனிச்சிறப்பு வாய்ந்தது. இவர் மெய்யாகவே, இறைவனின் நாமமாகிய இஸ்முல்லாவே, இது அவரது புகழின் காரணமாக அல்ல, மாறாக, இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆன்மா என்பதினாலேயே ஆகும்.

இஸ்முல்லா அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமிய மரபுக்கூற்றுகளை மனனம் செய்திருந்தார் மற்றும் ஷேய்க் அஹ்மத் சிய்யித் காசிம் அவர்களின் போதனைகளில் தேர்ச்சியும் பெற்றிருந்தார். இவர் ஷீராசில், சமயத்தின் ஆரம்ப காலத்தில் அதன் நம்பிக்கையாளர் ஆனார், பிறகு விரைவில் அவ்வாராகவே பரவலான புகழும் பெற்றார்.

இவர் வௌவீப்படையாகவும் அச்சமின்றியும் போதித்ததன் காரணமாக, அவர்கள் இவர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி நகரத்தில் உள்ள சாலைவழிகளிலும் சந்தைவழிகளிலும் இழுத்துச் சென்றனர். அந்த நிலையிலுங்யீ கூட, சாந்தமாகவும் நகைத்துக்கொண்டும், இவர் மக்களோடு பேசிய வன்னமிருந்தார்.

அவர் இணங்கவில்லை@ அவர் ணியீபசுவதை தடுக்கவும் முடியவில்லை.. அவரை அவர்கள் விடுவித்தவுடன் அவர் ஷீராஸை விட்டு குஃராசானுக்குச் சென்றார், அங்குங் கூட சமயத்தைப் பரப்பத் துவங்கினார், அதன் பிறகு அவர் தபார்சி கோட்டையை நோக்கிய பயணத்தை பாபுல்-பாப் அவர்களுடன் துவங்கினார்.

அங்கு இவர் தியாகத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களுடன் ஒருவாராகி கொடுமையான துன்பங்களைத் தாங்கினார். அந்தக் கோட்டையில் அவரைக் கைதியாக்கி அவர்கள் மசிந்தரானின் தலைவர்களிடம், ஆங்காங்கே அவரை இழுத்துச் செல்ல, ஒப்படைத்துவிட்டு இறுதியில் அந்த மாநகரத்தின் ஒரு வட்டாரத்தில் கொல்லப்படுவதற்காக ஒப்படைத்தனர்.

சங்கிலியால் கட்டப்பட்டு, நியமிக்கப்பட்ட இடத்திற்கு இஸ்முல்லா கொண்டுவரப்பட்ட போது, நடு இரவில் அவரை சிறையிலிருந்து விடுவித்து ஒரு ஆபத்தில்லா இடத்திற்குக் கொண்டுச்செல்ல இறைவன் ஒருவரது மனதைத் தூண்டிவிட்டார். நடுங்கச்செய்யும் இந்த சோதனைகள் முழுவதிலும் அவர் தம் நம்பிக்கையில் உறுதியாகவே இருந்தார்.

உதாரணமாக, எதிரிகள் எப்படி அந்த கோட்டையைச் சுற்றி தாக்கினர் என்றும், தங்களது பீரங்கிகளிலிருந்து தொடர்ச்சியாக குண்டுகளைக் கொட்டிக் கொன்டிருந்தனரென்றும் சிந்தித்துப்பாருங்கள். நம்பிக்கையாளர்கள், இஸ்முல்லா உட்பட, பதினெட்டு நாட்களுக்கு உணவின்றி இருந்தனர்.

தங்களது காலனிகளின் தோல்களை உன்டு வாழ்ந்தனர். அதுவும்கூட விரைவில் தீர்ந்துவிட்டது, பிறகு அவர்களுக்குத் தண்ணீரைத் தவிர வேரெதுவும் இல்லை. காலையில் ஒரு மிடர் நீரை அவர்கள் அருந்தி விட்டு பசியோடும் கலைப்போடும் கோட்டையில் கிடந்தனர்.

ஆயினும், தாக்கப்பட்ட பொழுது, அவர்கள் உடனே குதித்தெழுந்து நிற்பர்யீ, மற்றும் எதிரிகளின் முன்னே அற்புதமான அஞ்சாமையையும் தாக்குதல்களின்பால் திகைக்க வைக்கும் தற்காப்பையும் காண்பித்து, எதிரிகளை கோட்டைச் சுவர்களிலிருந்து பின் ஓடச்செய்தனர்.

பசிக் கொடுமை பாதினெட்டு நாட்கள் நீடித்தது. இது ஒரு மோசமான சோதனையாய் ஆயிற்று. ஆரம்பமாக, அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெகு தூரம் இருந்தனர், எதிரிகளினால் தாக்கப்பட்டும் தடுக்கப்பட்டும் இருந்தனர், மேலும் அவர்கள் பசியினால் வாடியுமிருந்தனர் – அதற்கும் மேலாக எதிரிப் படையின் திடீர்த் தாக்குதல்களும், குண்டுகள் மழை போல் பொழிந்து கோட்டையின் மத்தியில் விழுந்த வன்னமுமாக இருந்தது.

இத்தகைய ஓர் சூழ்நிலையில் அசையாத நம்பிக்கையும் பொறுமையும் கொள்வது முற்றிலும் சிரமமானது, அத்தகையதொரு கொடூரமான சேதனைகளைத் தாங்கிடுவது காணக்கிடைக்காத ஒர் அற்புதச் செயலாகும்.

தாக்குதல்களில் இஸ்முல்லா தளரவில்லை. விடுதலை பெற்றவுடன், இவர் முன்பைவிட வெகு பரவலாக போதித்தார். ஒவ்வொரு உயிர் சீமுச்சையும் இவர் மக்களை இறைவனது இராச்சியத்திற்கு அழைப்பதற்கென்றே செலவிட்டார்.

:ராக்கில் இவர் பஹாவுல்லாவின் சந்நிதானத்தை அடையும் வாய்ப்பினைப் பெற்றார், மறுபடியும் அதி பெரும் சிறையில் அவரிடமிருந்து கருணையையும் தயையையும் பேற்றார்.

இவர் ஒரு அலைமோதிடும் கடலைப்போலவும், உயரப் பறந்திடும் இராஜாளியைப் போலவும் திகழ்ந்தார். இவரது வதனம் பிரகாசித்தது, இவரது நா சொல்வன்மை கொன்டிருந்தது, இவரது ஊக்கமும் உறுதியும் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. இவர் தன் உதடுகளை போதிப்பதற்கெனத் திறந்தபொழுது, ஆதாரங்கள் பொழிந்திடும் – இவர் ஓதவோ அல்லது பிரார்த்தனைச் செய்யவோ செய்தாரேயானால், அவரது கண்கள் மேகங்களைப் போல் கண்ணீரைப் பொழிந்திடும்.

இவரது முகம் பிரகாசமாகவும், வாழ்க்கை ஆன்மீகமாகவும், அறிவு கற்றதும் ஓதாது இயல்பானதாகவும் இருந்தது. அவரது ஆர்வம், உலகின்பால் பற்றின்மை, இறைவனின் மீதுள்ள பக்தியும் அச்சமும் யாவும் தெய்வீகமானது.

இஸ்முல்லாவின் கல்லறை ஹமாதானில் உள்ளது. அதிகமான நிருபங்கள், அவர் இறந்த பிறகு ஒரு விசேஷ நினைவு நிருபம் உட்பட, பஹாவுல்லாவின் அதி உயரிய எழுதுகோலினால் அவருக்காக வௌவீப்படுத்தப்பட்டுள்ளன. இவர் ஒரு அதி பெரும் மனிதராவார், எல்லா வகையிலும் சிறந்தவராவார்.

அத்தகைய சிறப்பான ஜீவன்கள் இப்போது உலகைவிட்டுச் சென்றுவிட்டன. நல்ல வேலை, அவர்கள் பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்யீகு பிறகு நிகழ்ந்த பெருஞ்சோகங்களை – அந்த கோடுரமான பேரிடர்களை – காண இன்னும் இருந்திட வில்லை – ஏனெனில் உறுதியாக ஊன்றப் பட்டிருக்கும் மலைகள் கூட இவைகளால் ஆடி நடுங்கிடக் கூடும், ஊயர்ந்த சிகரமிட்டிருக்கும் மலைகளும் குன்றிடக்குடும்.

மெய்யாகவே இவர், இறைவனின் பெயரான இஸ்முல்லாவே. இவரது கல்லரையை வலம் வருபவரும், அந்த அடக்க ஸ்தலத்தின் மன்னைக் கொன்டு தன்னை ஆசிபெறச் செய்கிறவுரும்யீ பலனடைவார். அப்ஹா இராஜியத்தில் இவர்பால் போற்றுதலும் புகழும் சேரட்டுமாக.

நபில்-இ-அக்பர்


மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள்

நபில்-இ-அக்பர்

நாஜாப் என்ற நகரத்தில், ஷேய்க் முர்தாடா எனும் புகழ் பெற்ற முஜ்டாஹிட்டின் சீடராக, ஈடிணையற்ற மனிதர் ஒருவர் வாழ்ந்தார்.

பிற்காலத்தில் நபில்-இ-அக்பர் எனும் சிறப்புப் பெயரை இறைத்தூதரிடமிருந்து பெறப்போகும் இவரது இயற்பெயர் அகா-முஹம்மத்-இ-காஃயினி என்பதாகும்.

இந்த மாபெரும் மனிதர் அந்த முஜ்தாஹிட்டின் மாணவர்கள் கூட்டத்திலேயே தலைச்சிறந்த அங்கத்தினராக விளங்கினார். அந்த மாணவர்களிலிருந்து நபில் மட்டுமே விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முஜ்தாஹிட் எனும் பட்டம் அளிக்கப்பெற்றார் — ஏனெனில் காலஞ் சென்ற அந்த ஷேய்க் முர்தாடா இந்த முஜ்ாடஹிட் எனும் பட்டத்தை எவருக்குமே கொடுக்க மறுத்து வந்தார்.

இவர் இறையியல் மட்டுமல்லாது, மனித இயல், புத்தொளிபெற்றோர் (இல்லுமினாட்டி) தத்துவங்கள், ஷேய்க்கீ பள்ளியின் இறையியல் வாதிகளின் போதனைகள் போன்ற மற்ற பல அறிவியல் பிரிவுகளாகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர்.

இவர் தமக்குத் தாமே தாம் ஒரு சர்வலோக மனிதர் என்பதற்கு நிறைவான ஆதாரமாக விளங்கினார்.

இவரது கண்கள் இறைவழிகாட்டுதல் எனும் ஒளிதனிற்கு திறந்திட்டபோது, சுவர்க்கத்தின் நறுமணங்களை இவர் சுவாசித்திட்டபோது, இவர் இறைவனது தீச்சுடர் ஒன்றென ஆனார்.

அவருள்ளே அவரது இதயம் துள்ளிக்குதித்தது; பேரானந்தத்தின் போதையிலும் அன்பின் போதையிலும், ஆழ்கடலின் பேருருவென உரக்கக் கர்ஜித்தார்.

புகழ்மாலைகள் இவர் மேல் மழையெனப் பெய்திட, தமது புதிய பட்டத்தை முஜ்தாகிட்டிடமிருந்து பெற்றார். பிறகு நாஜாஃப்பை விட்டு இவர் பாக்தாத் வந்தார்; அங்குதான் இவர் பஹாவுல்லாவைச் சந்திக்கும் பெரும் பாக்கியமும் பெற்றார்.

புனித மாவிருக்ஷத்தின் மீது (தேவதரு) பெருந்தனல்விட்டெரிந்தப் பேரொளியை இங்குதான் இவர் கண்டார். அதன் பிறகு இவர், இரவுபகலென ஒரு நிலையில் இல்லாத மனநிலையை அடைந்தார்.

ஒரு நாள், ஆண்களுக்கான பிரத்தியேக வெளிமாடத்தின் தரையில் பஹாவுல்லாவின் இல்லத்தில், அவரது சந்நிதியில் மதிப்பிற்குரிய நபில் முழந்தாழிட்டவாறு இருந்தார்.

அத்தருணம் கர்பிலாவின் முஜ்டாஹிட்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓர் உடந்தையாளராகிய ஹாஜி மிர்ஸா-அமு, பஃக்ரு’த்-தௌலே ஆகியவரான சைனுல்-அபிடின் காஃனுடன் உள்ளே வந்தார். பணிவுடனும் மரியாதையுடனும் நபில் அங்கு முழந்தாழிட்டு வீற்றிருந்த காட்சி ஹாஜியைத் திகைப்படையச் செய்தது.

ஐயா, இவ்விடத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என அவர் முணுமுணுத்தார். அதற்கு நபில் அவர்கள், “நீங்கள் இங்கு வந்துள்ள அதே காரணத்தை முன்னிட்டுத்தான் நானும் வந்துள்ளேன்,” எனப் பதிலளித்தார்.

அவ்விரு விருந்தினர்களும் தங்களது திகைப்பிலிருந்து மீளவே இயலவில்லை. ஏனெனில், இந்த உத்தமர் முஜ்தாஹிட்களிலேயே நனிசிறந்தவர் எனும் புகழ்பெற்ற ஷேய்க் முர்த்தாடா அவர்களின் பிரத்தியேக சீடராவார் என எங்கும் பரவலாகத் தெரிந்திருந்தது.

பின்னாளில், நபில்-இ-அக்பர் பாரசீகத்திற்குக் — குறிப்பாக அங்கு குஃராசான் நகருக்குச் — சென்றார். ஆரம்பத்தில், காஃ’யின் நகரத்தின் அமீரான – மீர் அலாம் காஃன் – அவருக்குச் சகல மரியாதைகளையும் செய்து, அவரது நட்பையும் பெரிதாக மதித்தார்.

அமீர் அளித்த விசேஷ மரியாதையாகப்பட்டது, அவர் நபிலின் வசமாகிவிட்டார் என மக்களின் மனதில் ஒர் எண்ணத்தை ஏற்படுத்தியது, மேலும் மெய்யாகவே இவர் அந்தப் பண்டிதரின் சொல்வன்மை, அறிவு மற்றும் புத்தி சாதுரியம் ஆகியவற்றின்பால் வசியமாகியிருந்தார்.

இதிலிருந்து நபிலுக்கு மற்றவர்கள் செலுத்திய மரியாதைகள்தாம் எத்தகையவை என்பதை நாம் தீர்மானிக்கலாம், ஏனெனில், “மனிதர்கள் தங்களது மன்னர்களின் நம்பிக்கையையே பின்பற்றுவர்.”

இவ்வாறே நபில் புகழோடும், உயர் இடங்களின் தயையைப் பெற்றவருமாக சில காலங்கள் கழித்தார். ஆனால், இறைவன்பால் இவர் கொண்ட அன்பாகப்பட்டது எல்லா ஒளிவுமறைவுகளுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அது அவரது இதயத்திலிருந்து வெடித்துக் கிளம்பி, அனல் கொண்டு அதன் மூடுதிரைகளை எரித்துவிட்டது.
நான் கொண்ட காதலை மறைத்திட
ஓராயிரம் வகைகளில் முயற்சித்தேன்
ஆனால், பற்றி எரிகின்ற அந்தச் சிதையில்
நான் தீப் பற்றிக் கொள்ளாதிருப்பது எப்படி

இவர் அந்தக் கா’யின் வட்டாரத்திற்கு ஒளியைக் கொண்டு வந்தார்; மற்றும் பெருவாரியான மக்களை மதம் மாற்றிடவும் செய்தார். இப்புதிய நாமத்தால் இவர் புகழ் பெற்ற போது, அழுக்காறும் விரோதமும் கொண்ட மத குருக்கள், அதனால் உந்தப்பட்டு, இவர்மேல் குற்றஞ் சாற்றி, நாசிரி’த்தீன் ஷா குரோதத்துடன் எழும் வகையில் தங்களது அவதூறுகளைத் தெஹரானுக்கு அனுப்பினர்.

ஷாவின்பால் பயங்கொண்டிருந்த அமீர், நபில் அவர்களைத் தன் வலிமைகள் அனைத்தையும் பிரயோகித்து எதிர்த்தார். அந்த நகரம் முழுமையும் கொந்தளிப்பில் ஆழ்ந்தது, அதன் மக்கள் அனைவரும் குரோதத்திற்கு அடிமையாகி, இவர் மேல் பாய்ந்தனர்.

அந்தப் பரவசமுற்ற இறைநேசர் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவே இல்லை, மாறாக, அவர்கள் அனைவரையும் எதிர்கொண்டார். ஆனால், இறுதியில், அவர்கள் தன்னை வெளியேற்றினர் – இவர்கள் யாவரும் காணத் தவறிய ஒன்றைக் கண்டுவிட்ட அந்த மனிதரை வெளியேற்றினர் – பிறகு இவர் தெஹரானை நோக்கிச் சென்றார். அங்கு இவர் நாடோடியாகவும் இருப்பிடமற்றவராகவும் இருந்தார்.

இங்கும் அவரது எதிரிகள் அவரை மீண்டும் தாக்கினர். காவலர்களால் இவர் பின்தொடரப்பட்டார் – சிப்பாய்கள் இவரை வீதி வீதியாகவும், முடுக்குகள் தோறும் விசாரித்து  எல்லா இடங்களிலும் தேடி, அவரைப் பிடித்து வதை செய்திட வேட்டையாடினர்.

ஒளிந்துகொண்டு, கொடுமைக்குட்பட்டோர் விடும் பெருமூச்சைப் போல் இவர் அவர்களைக் கடந்து மலைகளை ஏகுவார், அல்லது, தவறிழைக்கப்பட்டோர் விடும் கண்ணீரைப் போல், இவர் பள்ளத்தாக்குகளுக்குள் சென்று மறைந்திடுவார்.

தமது பதவியைக் குறிக்கும் தலைப்பாகையை இவர் தொடர்ந்து அணிய இயலவில்லை – தம்மை அவர்கள் அடையாளம் கண்டிடாது விட்டு விடுவார்கள் என ஒரு சாதாரண மனிதனின் தலைப்பாகையை அணிந்து மாறுவேடம் பூண்டார்.

தனிமையில், இவர் தமது ஆற்றல்கள் அனைத்தையும் உபயோகித்துச் சமயத்தைப் பரப்புவதும் அதன் ஆதாரங்களை முன்வைப்பதுமாக இருந்தார், பல ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காவும் இவர் திகழ்ந்தார். எல்லா நேரங்களிலும் இவர் அபாயத்திற்கு உட்படுத்தப்பட்டார், எல்லா வேளைகளிலும் விழிப்போடும் தற்காப்புடனும் இருந்தார்.

அரசாங்கம் இவரைத் தேடுவதைக் கைவிடவே இல்லை, அல்லது மக்களும் இவர் விஷயத்தைப் பற்றி ஆராய்வதை நிறுத்தவில்லை.

பிறகு இவர் புக்காஃராவிற்கும் இஷ்காபாத்திற்கும், அப்பிராந்தியங்களுக்கான வழிநெடுகவும் சமயத்தைத் தொடர்ச்சியாக போதித்தவாறும்  சென்றார்.

ஒரு மெழுவர்த்தியைப் போல், இவர் தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்; ஆனாலும் தமது சோதனைகளுக்குப் புறம்பாக இவர் தமது உற்சாகத்தில் தளரவில்லை, மாறாக அவரது பேரானந்தமும் ஆவலும் நாட்பட நாட்பட அதிகரிக்கவே செய்தன.

இவர் சொல்வன்மை பெற்றவர்; இவர் திறன்வாய்ந்த மருத்துவர்; எல்லா நோய்களுக்கும் ஔஷதமாகவும், எல்லாக் காயங்களுக்கும் ஒரு நிவாரணியாகவும் திகழ்ந்தார்.

இல்லுமினாட்டிகளை (புத்தொளி பெற்றோர்) அவர்களது சொந்தத் தத்துவக் கோட்பாடுகளைக் கொண்டே கற்பிப்பார், யோகிகளுக்குத் தெய்வீக வருகையைப் பற்றி, “அருட்கிளர்ச்சி” மற்றும் “தெய்வீகத் தோற்றங்களைக்” கொண்டு நிரூபிப்பார்.

ஷேய்க்கீ தலைவர்களைத் தங்களது காலஞ் சென்ற ஸ்தாபகர்களான ஷேய்க் அஹமது மற்றும் செய்யித் காசீமின் சொற்களைக் கொண்டே நம்ப வைப்பார், மற்றும் இஸ்லாமிய பண்டிதர்களைத் திருமறையின் வாசகங்களைக் கொண்டும், மனிதர்களை நேர்வழி நடத்திய இமாம் பெருமானார்களிடம் இருந்து வந்த போதனைகளைக் கொண்டும் மதமாற்றம் செய்திடுவார்.

இவ்வாறாகவே இவர் நோயுற்றோருக்கு ஓர் அற்புத மருந்தாகவும், ஏழைகளுக்கு ஒரு செல்வக் கொடையாகவும் ஆனார்.

இவர் புக்காஃராவில் வறிய நிலைக்கும் பல தொல்லைகளுக்கும் ஆளானார், இறுதியாகத் தாயகத்தை விட்டு வெகு தூரத்தில் இவர் உயிர்த் துறந்து, இல்லாமை என்பதே இல்லாத இராஜ்ஜியத்திற்கு விரைந்தார்.

நபில்-இ-அக்பர் சமயத்தின் உண்மைகளுக்கு ஆதாரமளித்திடும் ஓர் அற்புதக் காவியத்தின் ஆசிரியர் ஆவார், ஆனால் அந்தக் காவியம் தற்போது அன்பர்களின் கைகளில் இல்லை.

அது தேடி எடுக்கப்பட்டு, கற்றோருக்கு ஓர் அறிவுரையாகத் திகழும் என்பதே என் அவா.

இந்த விரைந்தோடிடும் உலகில் இவர் எண்ணிலடங்கா இன்னல்களுக்கு ஆளானார் என்பதே மெய் — ஆயினும், பலம் வாய்ந்த அந்த மத குரு பரம்பரைகள், முர்தாடா, மிர்சா ஹபீபுல்லா, ஆயாத்துல்லா-இ-குராசானி, முல்லா அசாடுல்லா-இ-மசாந்தாரானி – இவர்கள் யாவரும் ஒரு தடையமுமின்றி மறைந்து போய்விடுவார்கள்.

இவர்கள் எந்தப் புகழையோ, தடயத்தையோ, பலன்களையோ விட்டுச் செல்லப் போவதில்லை. இவர்களிடமிருந்து ஒரு சொல் கூட உலக சந்ததியினருக்குப் போய்ச் சேரப் போவதில்லை; எந்த மனிதனும் இவர்களைப் பற்றி விவரிக்கப் போவதும் இல்லை.

ஆனால், தாம் இந்தப் புனித சயமத்தில் உறுதியாக நின்றதன் காரணமாகத் தாம் ஆன்மாக்களை வழிநடத்தி இந்த சமயத்திற்குச் சேவையாற்றி அதன் புகழைப் பரப்பியதன் காரணமாக, நபில் என்ற அந்த விண்மீன், நிலையான ஒளியின் தொடுவானத்தில் இருந்து என்றென்றும் ஜொலிக்கும்.

இறைவனின் சமயத்திற்கு வெளியே சம்பாதிக்கப்படும் எந்தப் பெருமையும் இறுதியில் தாழ்மையாகிடவே செய்யும் என்பது திண்ணம் – இறைவனின் பாதையில் சந்தித்திடாத சுகமும் செழிப்பும் இறுதியில் சுமையும் சோகமுமே ஆகும் – அத்தகைய செல்வங்களெல்லாம் வறுமையே அன்றி வேறெதுவுமில்லை.

வழிகாட்டும் ஓர் அறிகுறியான இவர், இறை அச்சத்திற்கு ஓர் அடையாளமாகத் திகழ்ந்தார். இந்தச் சமயத்திற்காகத் தன் உயிரைப் பணையம் வைத்தார், இறுதியில் தமது மரணத்தில் இவர் வெற்றியே அடைந்தார்.

இந்த உலகையும் அதன் சன்மானங்களையும் இவர் கடந்து சென்றார் – பதவி மற்றும் செல்வத்தின்பால் இவர் தமது கண்களை மூடிக் கொண்டார் – இத்தகைய பிடிப்புகள் பிணைப்புகள் எல்லாவற்றிலுமிருந்து இவர் தம்மை விடுவித்துக் கொண்டு, சகல உலகளாவிய சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்தார்

விசாலமாகக் கற்றவரும், ஒரே நேரத்தில் ஒரு முஜ்தாஹிட்டாகவும், ஞானியாகவும், யோகியாகவும், உள்ளுணர்வு சார்ந்த உட்பார்வை எனும் வரப்பிரசாதம் பெற்றவருமான இவர், வெற்றிகள் பல கண்ட வித்தகரும், இணையற்ற சொற்பொழிவாளரும் ஆவார். இவர் அதிஉயர்ந்ததொரு விஸ்வ சிந்தை படைத்தவர்.

இறுதியில், இவர் ஒரு தெய்வீகக் கொடையைப் பெற்றமைக்காக இறைவன் போற்றப்படுவாராக. எல்லாம் வல்ல இறைவனின் மேன்மை அவரைச் சாருமாக.

இவர் நல்லடக்கமாகியிருக்கும் ஸ்தலத்தின் மீது இறைவன் அப்ஹா இராஜ்ஜியத்தின் பிரகாசங்களைப் பொழிந்திடுவாராக. மீண்டும் ஒன்றிணைதல் எனும் சுவர்க்கத்தினுள் இறைவன் அவரை வரவேற்று, ஒளிச் சமுத்திரத்தில் மூழ்கச் செய்து, நேர்மையாளர்களின் இராஜ்ஜியத்தில் அவரை என்றென்றும் காத்தருள்வாராக.