பஹாய்கள் மீதும், நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி அவர்களின் மீதும் இரான் நாட்டின் தகவல் சாதனங்கள் நடத்தும் தாக்குதல்கள் “அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை” உருவாக்க முயலுகின்றன


bnsheader

12 ஆகஸ்ட் 2008

(செய்தி பழையதானாலும் இதே செயல்கள் இன்னமும் தொடர்கின்றன)

நியு யார்க் — இரான் நாட்டு தகவல் சாதனங்களில், சிறைவைக்கப்பட்டுள்ள ஏழு முக்கிய பஹாய்களைப் பற்றியும், அவர்களுக்காக வாதாடும் நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி மற்றும் பிறரைப் பற்றியும் தவறான பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது பஹாய்களுக்கு சட்டப்படியான பிரதிநிதித்துவம் கிடைக்காமல் செய்வது மற்றும் அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை உருவாக்கும் ஒரு முயற்சியாகும் இதுவென பஹாய் அனைத்துலக சமூகம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

அரசு சார்பான செய்தி வெளியீடுகளில் வெளிவரும் அறிக்கைகள் தகவல் சாதனங்களைப் பயன்படுத்தி சிறை செய்யப்பட்டுள்ள அந்த ஏழு பஹாய்கள் கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனும் தவறான கருத்தை ஏற்படுத்தவும், அதனால் அந்த ஏழு பேருக்கும் பிரபல இரான் நாட்டு மனித உரிமை சட்ட ஆலோசகரும் நோபல் பரிசாளருமான திருமதி ஷிரின் எபாடியும் அவரின் குழுவினரும் அவர்களைப் பிரதிநிதிப்பதற்கான முயற்சியை அந்த சட்ட ஆலோசகர்களின் நற்பெயர்களை கெடுப்பதன் வாயிலாகவும் தடுக்க முயலுகின்றன. திருமதி எபாடியும் அவர்தம் குழுவினரும் அந்த ஏழு பஹாய்களுக்கு சாதகமாக வாதம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளனர்.

பஹாய் அனைத்துலக சமூகத்தின் இந்த அறிக்கை, திருமதி எபாடியின் மகள் ஒரு பஹாய், பஹாய்கள் ஜியோனிச சித்தாந்தவாதிகள், இரான் நாட்டு பஹாய்கள் இஸ்ரேலில் உள்ள தங்கள் அனைத்துலக தலைமைத்துவத்தோடு தொடர்புகொள்ளும்போது கீழறுப்புச் சதியில் ஈடுபடுகின்றனர் என்பன போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மறுமொழியளிக்கின்றது.

“இரான் நாட்டு அரசாங்கம் பஹாய்களை இழிவுபடுத்தும் எல்லாவித முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. பிறகு, தேவைப்படும்போது தானே உருவாக்கியுள்ள அந்த தவறான கருத்துகளின் அடிப்படையில் அந்த நபர் ஒரு பஹாய் என அறிவிக்கின்றது,” என அந்த அறிக்கை கூறுகின்றது. “இவ்விதமான செயல்களில் இரான் நாட்டு அரசாங்கம் ஈடுபடுவது இது முதல் முறையல்ல மற்றும் அதில் பாதிக்கப்பட்ட முதல் பெண்மனி திருமதி எபாடியும் அல்ல. ஒரு வழங்கறிஞர் எனும் முறையில் திருமதி எபாடி இதுபோன்ற பல தனிநபர்களுக்கும் பலவித பின்னனியைச் சார்ந்த பல குழுக்களுக்கும் வாதாடியுள்ளார்; ஆகவே திருமதி அவர்களின் நம்பிக்கைகளைத் தாமும் பின்பற்றுகிறார் என்பது அர்த்தமல்ல. பிறகு, அவருடைய மகள் ஒரு பஹாய் நம்பிக்கையாளர் என “குற்றஞ்சாற்றுவதன்”வாயிலாக அரசாங்கச் சார்புடைய தகவல் சாதனங்களின் உள்நோக்கம் என்னவாகத்தான் இருக்கமுடியும்?”

இரான் நாட்டில் இதுவரை நிகழ்ந்திராத வகையில் கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்படுகின்றன


bnsheader

இரான் நாடு முழுவதிலுமுள்ள, சாரி, காயெம்ஷாஹர், பன்டார் அப்பாஸ் போன்ற நகரங்கள் உட்பட, பல நகரங்களில் பஹாய்களால் நடத்தப்பட்டு வந்த வணிகநிலையங்கள், 1 மற்றும் 2 நவம்பரில் பஹாய் புனிதநாள்களை அனுசரிப்பதற்கு தற்காலிகமாக அடைக்கப்பட்ட பிறகு, இரானிய அதிகாரிகளால் முத்திரையிடப்ப்டடு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.

சமீப காலமாக ஐநா-வின் சமயம் மற்றும் நம்பிக்கை சார்ந்த சுதந்திரத்திற்கான விசேஷ அறிக்கையாளராலும், இரான் நாட்டிற்கான விசேஷ ஐநா அறிக்கையாளர், பிரபல வழக்குறைஞர்கள் (டாக். அப்டெல்-கரீம் லாஹிட்ஜி, ஷிரின் எபாடி போன்றோர்) ஆகியோரின் அறிக்கைகள், பஹாய் அனைத்துலக சமூகத்தால் இத்தகைய பொருளாதார அடக்குமுறை நிறுத்தப்படவேண்டுமெனும் முறையீட்டிற்குப் பிறகும் இந்த வருந்தத்தக்க செயல் நடந்துள்ளது.

shopssealed1
பஹாய்கள் ஒரு பஹாய் புனித நாளை அனுரிப்பதற்காக மூடிய தங்கள் கடைகளை மீண்டும் திறப்பதை தடைசெய்வதற்கு இரானிய அதிகாரிகள் பயன்படுத்திய முத்திரையின் மாதிரி.

இரான் நாட்டின் அதிபருக்கு பஹாய் அனைத்துலக சமூகம் சமீபத்தில் எழுதிய ஒரு கடிதம், பஹாய் வணிகநிலையங்களை முத்திரையிட்டு மூடுவது பஹாய்களுக்கு எதிரான பொருளாதார இன ஒதுக்கலுக்கான பல சூழ்ச்சிமுறைகளுள் ஒன்றாகும் என்பதை விளக்குகின்றது. மூன்று பஹாய் தலைமுறையினர்க்கு அரசாங்க வேலைகளுக்கு தடைகள் விதிப்பது, வாணிபங்களில் பணிபுரிவதை பகுதி அல்லது முழுமையாக அரசாங்க வழிகாட்டலின் கீழ் தடை செய்வது, தனியார் வேலை அனுமதிப்பத்திரங்களை கிடைப்பதை தாமதப்படுத்துவது அல்லது தடை செய்வது, முறையான பல்கலைக்கழக கல்வி பெறுவதைத் தடைசெய்வது போன்றவை பிற வழிமுறைகளாகும்.

sealedshops2
முத்திரையிடப்பட்டு மூடப்பட் கடை

“பன்மடங்கான பஹாய் வணிகநிலையங்களை (மூடு)முத்திரையிடுவது பஹாய் சமூகம் எவ்வகையிலும் ஒதுக்கப்படுதலுக்கு ஆளாக்கப்படவில்லை எனும் இரான் நாட்டு அரசாங்க உத்தரவாதத்தின் வெறுமையை வெளிப்படுத்துகின்றது,” என பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதானப் பிரதிநிதியான பானி டுகால் கூறினார். “அனைத்துலக சமூகம் இந்த அநீதியான செயல்களைக் கண்டிக்குமாறு கோரிக்கை விடுத்தும், இரானிய அரசாங்கம் வெளிப்படையான, உறுதியான நடவடிக்கைளின் மூலம் இச்சூழ்நிலையை திசைதிருப்புமாறு வலியுறுத்தவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்,” என அவர் மேலும் கூறினார்.

துணிகர மதகுரு சித்திரத்தைப் பகுத்து, ஒற்றுமையை ஊக்குவிக்கின்றார் (bns-1135)


26 அக்டோபர் 2016

1135_00
ஆயத்துல்லா அப்தொல்-ஹமீத் மாசூமி-தெஹ்ரானியின் சித்திரப்படைப்பு; இதை நாட்டிலுள்ள எட்டு சமயங்களுடன் தொடர்புடைய எட்டுப்பகுதிகளாகப் பிரித்துள்ளார்

இச்சித்திரத்தின் சில பகுதிகளை, நாட்டிலுள்ள ஸோராஸ்த்திரிய, யூத, கிருஸ்த்துவ, மன்டேய, யார்ஸானிய, பஹாய், சுன்ன, மற்றும் ஷீயா சமயத்தினர்களுக்கு அர்ப்பணித்துள்ளார், மற்றும் இச்சமய நம்பிக்கைகள் அனைத்தையும் இரான் நாட்டின் தேசிய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாகவும், அம்மண்டலம் முழுமையின் ஆன்மீக மற்றும் சமயங்களின் தேக்கமாகவும் அவர் கருதுகின்றார்.ஓவியத்தை முழுமையாகக் காண்பதற்கு

சமீபமான வருடங்களில், இரான் நாட்டிற்கு உள்ளும், வெளியிலும் உள்ள தனிநபர்களும், குழுக்களும் நாட்டில் நீதி, மனித உரிமை, மற்றும் உள்ளிணைக்கும் ஒரு கலாச்சாரத்திற்கான கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இக்கோசத்துடன் மேலும் பல குரல்கள் சேர்ந்துகொண்டுள்ள போதிலும், ஆதரவுக் குரலொலிகளுள் இரான் நாட்டின் மதகுரு வர்க்கத்தினரிடையே ஒரு குரலைச் செவிமடுப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். அவ்வப்போது பிரஜைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக யாராவது மதகுரு ஒருவர் பரிந்து பேசும்போது அது எண்ணிலடங்கா உள்ளங்களில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

இத்தகைய பின்னணியில், ஓர் கையெழுத்துக்கலைஞரும், ஒவியரும், இரான் நாட்டின் உயர்நிலை சமயகுருவுமான, ஆயத்துல்லா அப்டொல்-ஹமீது மாஸுமி-தெஹ்ரானி ஒற்றுமை குறித்த தமது பொது அர்ப்பணத்திற்காக தனித்து நிற்கின்றார். இரான் நாட்டில் சமுதாய நல்லிணக்கத்திற்கான அவரது பங்களிப்புகள் உலகின் பல பாகங்களில் கவனத்தை ஈர்த்தும், பாராட்டைப் பெற்றுமுள்ளன.

சமீபத்தில், நாட்டிலுள்ள எட்டு சமய வகுப்பினருடன் தொடர்புடைய, எட்டுப் பகுதிகளாக வகுத்துள்ள ஒரு புதிய படைப்பை ஆயத்துல்லா தெஹ்ரானி வரைந்துள்ளார். இந்த ஓவியத்தின் சில பகுதிகளை நாட்டிலுள்ள ஸோராஸ்த்திரிய, யூத, கிருஸ்த்துவ, மன்டேய, யார்ஸானிய, பஹாய், சுன்ன, மற்றும் ஷீயா சமயத்தினர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இவர்கள் அனைவரையும் “இச்சமய நம்பிக்கைகள் அனைத்தையும் இரான் நாட்டின் தேசிய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாகவும், அம்மண்டலம் முழுமையின் ஆன்மீக மற்றும் சமயங்களின் தேக்கமாகவும் அவர் கருதுகின்றார்.”

“இவை ஒவ்வொன்றுமின்றி நமது தேசிய அடையாளமானது நிறைவடையாது,” என தமது இணையத்தலத்தில் எழுதியுள்ளார்.

அச்சித்திரம் பல பிரிவுகளாக்கப்பட்டுள்ளதானது, இரான் நாட்டின் குடிகள் அடங்கிய பல்வேறு மக்கள்திரள் பல துண்டுகளாக்கப்பட்டுள்ளதை குறிக்கின்றது. சமயவெறித்தன்மை, உண்மையை சிலர் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் ஆகியவற்றை இத்துண்டாடலுக்கான காரணங்களாக அவர் குறிப்பிடுகின்றார்.

1135_02

ஒரு பஹாய் குழுவினர் அச்சித்திரத்தின் ஒரு பகுதியை இரான் நாட்டு பஹாய்களின் சார்பாகப் பெறுகின்றனர்

 

தமது ஓவியத்தை பல பிரிவுகளாக்கியுள்ளதன் குறியீட்டியலை விளக்கும் போது, ” கருத்துவேற்றுமை மற்றும் பிரிவினைகளின் காரணமாக மானிட சமுதாய அமைப்பானது அவதிக்குள்ளாக்கப்படுவது போன்றே, இச்சித்திரத்தின் ஒவ்வொரு பகுதியும், மற்ற பகுதிகளின் துணையின்றி பூர்த்தியடைய மாட்டா. எல்லா பாகங்களும் ஒன்றிணைக்கப்படும் போது மட்டுமே இச்சித்திரம் பூர்த்தியாகும்.”

கடந்தகாலங்களில், சமய சிறுபான்மையினரின்பால் நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கான கரத்தை ஆயத்துல்லா தெஹ்ரானி நீட்டியுள்ளார். உதாரணத்திற்கு ஏப்ரல் 2014-இல், பஹாய் எழுத்தோவியங்களிலிருந்து ஒரு புனித வரியை எழுத்தோவியக்கலைப் படைப்பாக உலக பஹாய்களுக்கு ஓர் அன்பளிப்பாக வழங்கினார். இரான் நாட்டின் சமயச் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராக விளங்கும் பஹாய்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அவர் அச்செய்கையின் மூலம் ஒப்புக்கொண்டதாகியது, மற்றும் அவர்களும், தங்களின் நாட்டின் செழுமை மற்றும் மகிழ்ச்சிக்காக உழைப்பதில் தங்களின சக குடியினரிடையே தங்களுக்கு உரிய நிலையை பெறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனும் ஒரு விருப்பத்தையும் வெளிப்படுத்தியது.

1135_01
ஆயத்துல்லா தெஹ்ரானி இரான் நாட்டின் பஹாய் சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ள கலைப்படைப்பின் ஒரு பகுதி

இரான் நாட்டின் சமயகுருமார்களுள ஒருவரெனும் முறையில் அவரது இத்துணிகர செயல்கள் அந்த நாட்டிற்கு உள்ளும் வெளியிலும் உள்ள பலரின் ஒப்புதலைப் பெற்றுள்ளதோடு, அமைதியாக சமயரீதியில் ஒன்றிணைந்த வாழ்விற்கான தங்களின் ஆதரவுக் குரல எழுப்பிட பிற இஸ்லாமிய பிரிவினரையும், உலகம் முழுவதுமுள்ள மற்ற சமயத்தினரையும் ஊக்குவித்துள்ளது. [இது குறித்த மேற்கொண்டு செய்திகளுக்கு (ஆங்கிலத்தில்): www.news.bahai.org செல்லவும்]

தமது சக குடியினர் பலரின் ஆவலான, “இந்த நாடு ஒரு குறிப்பிட்ட சமயம், வகுப்பு, இனம், அல்லது சித்தாந்தத்திற்கு மட்டும் சொந்தமல்ல, மாறாக அது எவ்வித பாகுபாடுமின்றி, இரானியர்கள் அனைவருக்கும், சமயம், மனப்பான்மை அல்லது பால்மை வேறுபாடின்றி சொந்தமாக இருக்கவேண்டுமெனும்” ஆவலை ஆயத்துல்லா தெஹ்ரானி தமது இச்சமீபத்திய செயலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் முதன் முறையாக பஹாய்கள் “இரட்டைப் பிறந்தநாள்களைக்” கொண்டாடவிருக்கின்றனர்


http://www.huffingtonpost.com/shastri-purushotma/bahais-celebrate-twin-holy-days_b_8282546.html

The Bahai House of Worship Samoa, Upolu, British Samoa, South Pacific, Pacific
தென் பசிபிக் நாடான, சமோவா நாட்டு பஹாய் வழிபாட்டு இல்லம்

வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (13 மற்றும் 14 நவம்பர்) முதன் முறையாக, உலகளாவிய நிலையில், பஹாய் சமூகம் அதன் சமயத்தின் இரண்டு ஸ்தாபகர்களின் பிறந்தநாள்கள் குறித்த இரட்டைப் பிறந்தநாள்களைக் கொண்டாடவிருக்கின்றது.

இதற்கு முன் மேலைநாடுகளில் இப்பிறந்தநாள்கள் கிரேகோரிய நாள்காட்டியின்படி கொண்டாடப்பட்டு வந்தன; இந்த நாள்காட்டி, சௌர நாள்காட்டி (solar calendar) எனும் முறையில் அவர்களின் பிறந்தநாள்களை பல வாரங்கள் இடைவெளியில் உள்ளடக்கியிருந்தது. இவ்வருடம், பஹாய் சமூகத்திற்கான மேலும் ஒரு புதிய நாள்காட்டிமுறையின் அமலாக்கத்தோடு, இப்புனித நாள்கள் அந்த நாள்காட்டியின் அடங்கியுள்ள ஓர் சந்திர அம்சத்தின் அடிப்படையில் அனுசரிக்கப்படும், ஆகவே அவை ஒன்றன்பின் ஒன்றான இரண்டு தொடர்ந்துவரும் நாள்களில் அமைந்திருக்கும். கொண்டாட்டங்கள் இரண்டு அடுத்தடுத்த நாள்களில் வருவதானது ஒரு தனிச்சிறப்பை குறிக்கினறது, ஏனெனில் பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின் சமயப்பணிகள், பல வழிகள் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டுள்ளன.

ShrineBabNight
ஹைஃபா இஸ்ரேலில் உள்ள பாப் பெருமானாரின் நினைவாலயம்

பாப் பெருமானார், பஹாவுல்லா இருவரும் முறையே 196 மற்றும் 198 வருடங்களுக்கு முன் பிறந்தனர்; சமய வரலாற்றுத் துறையில் அவர்களின் வாழ்க்கை தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது. பஹாவுல்லாவின் வாழ்க்கை குறித்து பிரேசில் நாட்டுப் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட புகழுரையில், பிரேசில் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான லூயி குஷிகென், பஹாவுல்லாவின் எழுத்துகளை “ஒரு தனிமனிதரின் எழுத்தாணியினால் எழுதப்பட்ட அதி மகத்தான சமயப் படைப்பு,” என வர்ணித்துள்ளார். தமது சமயப்பணியின் பிரகடனத்திலிருந்து 1850-இல் பாரசீக அரசாங்கத்தினால் அவர் மரண தன்டனைக்கு உட்படுத்தப்படும் வரையிலான ஆறு வருட காலத்தில், பாப் பெருமானார் சுமார் ஐந்து லட்சம் வாக்கியங்களை எழுதினார் என அனுமானிக்கப்பட்டுள்ளது; அதே வேளை, தமது சமயப்பணிக் காலத்தில் பஹாவுல்லாவின் எழுத்துகள் சுமார் 100 தொகுப்களாகும். அரபு மற்றும் பாரசீக மொழிகளிலான இவ்வுரைப்பகுதிகளின் ஒரு சிறு பகுதியே இதுவரை பிரசுரிக்கப்பட்டும், அதனினும் சிறிய அளவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுமுள்ளது.

இ்வவார இறுதியின் கொண்டாட்டங்களுக்கு உதவியாக, இந்த இரட்டைப் பிறந்த நாள்களின் தனிச்சிறப்பு குறித்த, இதுவரை பிரசுரிக்கப்படாத பல உரைப்பகுதிகள், ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பஹாய் சமூகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள.

உலகம் முழுவதுமுள்ள கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் பல மில்லியன் பஹாய்கள் இத்திருநாள்களைக் கொண்டாடும் அதே வேளை, தங்கள் நம்பிக்கைகளுக்காக சிறையில் வாடும் சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட பஹாய்கள் இக்கொண்டாடங்களைத் தங்களின் சிறையிலேயே அமைதியாகக் கொண்டாட வேண்டிவரும். இரான் நாட்டு பஹாய் சமூகத்தின் தலைமைத்துவக் குழுவின் ஏழு உறுப்பினர்களை இது உள்ளடக்கும். நீண்ட காலமாக இரான் நாட்டின் ‘மனச்சாட்சிக் கைதிகளான’ இவர்கள், தங்களின் இருபது ஆண்டுச் சிறைவாசத்தின் எட்டாவது ஆண்டை கடந்த மே மாதம் ஆரம்பித்தனர். 1979-இல் இரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சியிலிருந்து பஹாய்கள் துன்புறுத்தப்படுவது தீவிரமடைந்துள்ளது, ஆனால் கண்மூடித்தனமான விடாப்பிடியான வெறித்தனத்தின் முன்னால், ஆக்கபூர்வமான மீள்திறன், இப்பொழுது இரான் நாட்டின் ஜனத்தொகையினரின் மனப்பான்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் இரானிய ஆய்வுத் துறையின் நிர்வாகி பேராசிரியர் அப்பாஸ் மிலானி பின்வருமாறு விவரிக்கின்றார்:

பஹாய் சமயத்தைப் பற்றி இரானிய மக்களின் மனதில் விஷத்தைக் கலக்கும் ஆட்சியாளர்களின் தீவிர முயற்சிகளைப் பார்க்கிலும், அவர்கள் ஊடகங்களை முழுமையாகக் கட்டுப்படுத்திவந்த போதிலும், மில்லியன் கணக்கிலான இரானியர்கள், பன்மடங்கான அறிஞர்கள் ஆகியோரிடையிலும், சில ஷீயா மதத்தலைவர்களிடையிலும்கூட, பஹாய்கள் இவ்விதமாக நடத்தப்படுவது நமது கடந்தகாலத்தின் வெட்கக்கேடான ஒரு பகுதி எனும் ஒரு புதிய விழிப்புணர்வு அலைமோதிவருகின்றது. பிற இரானியக் குடிகள் போன்று பஹாய்களும் தங்களின் சமயத்தைக் கடைப்பிடிக்கும் மறுக்கமுடியாத உரிமையைப் பெற்றுள்ளனர் மற்றும் இரான் நாட்டின் குடிகள் எனும் முறையில், எந்த சமயத்தைச் சார்ந்தவராயினும், எல்லா பிரஜைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என மேலும் மேலும் பல (இரானியர்கள்) நம்புகின்றனர்.

இவ்வார இறுதியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட பல நாடுகளிலும், பிராந்தியங்களிலும் வாழும் பஹாய்கள் இரட்டைப் பிறந்த நாள்களை கொண்டாடுகையில், இயல்பாகவே அவர்கள் பஹாவுல்லாவும், பாப் பெருமானாரும் பிறந்த நகரங்கள் குறித்துத் தங்கள் உள்ளங்களில் நினைத்துப் பார்ப்பர். குறிப்பாக, தெஹரான் மற்றும் ஷிராஸ் நகரங்கள். இரானிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்காக இன்றி, உலகத்தின் எல்லா பகுதிகளிலுமிருந்து பல நூராயிரம் பஹாய்கள் பஹாய்கள் இந்நகரங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு, தங்கள் மரியாதையைச் செலுத்தி, இப்புனித நாள்களைக் கொண்டாடுவர் என்பதில் சிறிந்தும் சந்தேகமில்லை. பாப் பெருமானார் வாழ்ந்திருந்த புனித இல்லம், 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு உடனடியாக அழிக்கப்பட்டது; இரானிய அதிகாரிகள் வட இரானில் பஹாவுல்லாவின் குழந்தைப் பருவத்துடன் சம்பந்தப்பட்ட வீடுகளை வேண்டுமென்றே அழித்துவிட்டிருந்தனர். பல பிரச்சினைகளில் அனைத்துலக ரீதியில் ஏற்புடைய தரமுறைகளுக்கு இணங்க செயல்படுவதில் இரான் அரசாங்கத்தின் இயலாமை குறித்து உலகம் அதிகமான கவனம் செலுத்தி வரும் ஒரு நேரத்தில், அரசாங்கங்கள், பத்திரிக்கையாளர்கள், உயர்கல்வியாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோரின் குரல்களும், சில வேளைகளில் உலகம் முழுவதும் கட்டிடங்களின் செங்கற்கள் கூட, நடப்பிலிருக்கும் துன்புறுத்தல்களுக்கு எதிராக தங்களின் குரல்களை உயர்த்தி வருகின்றனர் என்பது பஹாய் சமூகத்தினர்க்கு ஆறுதலளிக்கும் ஒன்றாக இருக்கின்றது.

ChileTemple
கட்டுமானத்திலுள்ள தென் அமெரிக்காவின் சில்லி நாட்டு பஹாய் வழிபாட்டு இல்லம்

மேலும், பஹாவுல்லா மற்றும் பாப் பெருமானாரின் பிறப்பு குறித்த இருநூறாவது நினைவாண்டுகள் நெருங்கிவரும் அதே வேளை, ஓவ்வொரு கண்டத்திலும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு இல்லங்கள் உட்பட, சில்லி, கம்போடியா, கொலம்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, இந்தியா (புது டில்லியில் ஏற்கனவே உள்ள வழிபாட்டு இல்லம் உட்பட, பீஹார் ஷாரிஃப்), பாப்புவா நியூ கினி, வானுவாத்து ஆகிய நாடுகளிலும் இடங்களிலும் மனதைக் கவரும் புதிய வழிபாட்டு இல்லங்களை உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இரான் நாட்டின் ஆயத்துல்லாக்கள், தாங்கள் அழித்திட முயன்று வரும் ‘இத்தவறான மார்க்கம்’ எவ்வாறு உலகம் முழுவதும் சீராக வளர்ந்து வருகின்றது என்பது குறித்த குழப்பமடையவே செய்வர்.

ஐரோப்பா தழுவிய அகதிகளின் பரவலான நகர்ச்சி


த ஹேய்க், 23 அக்டோபர் 2015 (BWNS)–ஐரோப்பா தழுவிய அகதிகளின் பரவலான நகர்ச்சியானது, ‘மானிடத்தின் உயிரியலான ஒருமை’ குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கின்றது, என ‘அகதிகள் மற்றும் நாடுகடந்தோர்’ மீதான ஒரு முக்கிய மாநாட்டில் பஹாய் அனைத்துலக சமூகம் கூறியுள்ளது.

Cityscape_of_The_Hague,_viewed_from_Het_Plein_(The_Square)

நெதர்லாந்து, ஹேய்க்-இல் கடந்த 14 முதல் 16 அக்டோபர் வரை நடந்த, ‘அகதிகள் மற்றும் நாடுகடந்தோர்’ மீதான ஐரோப்பிய வாரியத்தின் வருடாந்திர பொது மாநாடு, (ECRE) பொதுச் சமூகம் உட்பட, அகதிகள், அடைக்கலம் தேடுவோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்த அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் சுமார் 150 பேரை ஒன்றுகூட்டியிருந்தது.

(UNHCR) எனப்படும் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவாண்மையில் பாதுகாப்பிற்கான உதவி உயர் ஆணையரான, வோல்க்கர் துர்க், அகதிகள் மற்றும் நாடுகடப்போரின் பெருஜன நகர்ச்சிக்கிடையே, ஐரோப்பா, வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத ஒரு தருணத்தை எதிர்நோக்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் மக்களால் ஆதரவளிக்கப்படும் அகதிகளைக் கொண்ட சில மண்டலங்களில் வெளிப்படுத்தப்படும் ஐக்கியத்தின் வெளிப்பாடுகள் பற்றி பேசுகையில், மக்களின் அடிப்படை நற்குணம் வெளிப்படுவது மனதிற்கு ஊக்கமளிப்பதாக இருக்கின்றது என்றார்.

(ECRE)-இன் பொதுச் செயலாளரான, திரு மைக்கள் டீயட்ரிங், பங்கேற்பாளர்களிடம் உரையாற்றுகையில், தமது உரையில் அப்பிரச்சினையின் மனிதப் பரிமாணத்தின் மீது கவனம் செலுத்தினார்.

“எண்ணிக்கை மற்றும் புள்ளிவிவரங்களின்” மீது சமமற்ற கவனம் செலுத்துகையில், அந்த எண்கள் ஒவ்வொன்றும், ஒரு மனிதரை, இயல்பாகவே உள்ளார்ந்த மதிப்பும் மனித உரிமையும் கொண்ட ஒரு தனிநபரைப் பிரதிநிதிக்கின்றன,” என்றார்.

தனது பங்களிப்பில், பஹாய் அனைத்துலக சமூகம், மானிடத்தின் ஆழ்ந்த பரஸ்பரத் தொடர்பின் மீது குறிப்பாக கவனத்தை ஈர்த்தது:

“மக்கள்தொகையினரின் நகர்ச்சியானது, உலகின் பல்வேறு மண்டலங்களின் அமைதி, சமநிலை, செழுமை ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை, மற்றும் இவ்வுலகளாவிய மெய்ம்மை நிலைக்கும் அப்பாற்பட்டு தீர்வுகள் காணப்பட முடியாது.

“ஒரு மண்டலத்தின் தேவைகளை ஈடுசெய்திடும், ஆனால் மற்றொரு மண்டலத்தின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாத, சமூக, ஸ்தாபன மற்றும் சட்டபூர்வமான ஏற்பாடுகள் பற்றாக்குறையானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகையினரின் நகர்ச்சியானது, ஆழ்ந்ததும்,  தீர்க்கமுடையதுமான பிரச்சினையின் நடப்பு அறிகுறிகளாகும்.

மாலை அமர்வின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள், ரெம்ப்ரான்ட், ரூபென்ஸ், பரூகல் ஆகியோர் உட்பட, டச்சு மற்றும் ஃபிலெமிஷ் ஓவியர்களின் உலகப் பிரசித்தி பெற்ற சித்திரங்களை உள்ளடக்கிய, ‘மோரிட்ஷுயில் அருங்காட்சியகத்திற்கு” வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டனர்.

அகதிகளுக்கான டச்சு வாரியத்தின் இயக்குனரான, டோரீன் மேன்சன், டச்சு பொற்காலம் என்ப்படும் ஒன்றுடன் அந்த நிகழ்ச்சியைத் தொடர்புபடுத்தினார்:

ஐரோப்பா முழுவதுமானஅகதிகளின் வருகையே 17-ஆம் நூற்றாண்டில் அம்ஸ்டர்டாமின் செழுமைக்கு வழிவகுத்தது. அவர்களின் பல்வகைத்தன்மை, கைத்திறன்கள், தொழில்முனைவு ஆகியவையே, ஒரு சாதாரன துறைமுக நகராக இருந்த ஒன்றை 1630-க்குள் உலகின் மிக முக்கிய துறைமுகமாகவும், வணிக மையமாகவும் மேம்படுத்தியது. அச்செழுமையின் பயனாகவே, பொற்காலத்தின் ஓவியர்கள் ஐரோப்பா மற்றும் உலகின் கலாச்சார மரபுரிமைக்கு பங்களித்திடவும் முடிந்தது.

(ECRE) அமைப்பு, அகதிகள், அடைக்கலம் நாடுவோர் மற்றும் இடம்பெயர்ந்தோரின் உரிமைகளை மேம்படுத்தும் 90 அரசாங்கச் சார்பற்ற அமைப்புகளின் ஆகப் பெரிய அனைத்து-ஐரோப்பா சங்கமாகும்.

இரான் நாட்டில் பஹாய் சமயத்தினர்க்குக் குடியுரிமை தகுதி கிடையாது


Baha’is Have No Citizenship Rights, Says Grand Ayatollah

கோமேனியின் காலத்தில் செயல்பட்டு வந்து உச்ச நீதித்துறை மன்றத்தின் உறுப்பினரும் ஓர் உயர்நிலை மதத்தலைவருமான ஒருவர் பஹாய்கள் (இரான் நாட்டின்) குடியுரிமை தகுதியைப் பெற்றிருக்கவில்லை என ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இவ்வறிக்கை இரான் நாட்டு நீதித்துறையின் தலைவரான முகம்மது ஜவாட் லாரிஜானி, பஹாய்களுக்கு திட்டமிட்ட வகையில் 13930923000763_PhotoL-300x209உயர்கல்வி மறுக்கப்படுகிறது என்பதை சில வாரங்களுக்கு முன்புதான் மறுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. “பஹாய்களுக்கு கல்விக்கான உரிமையுள்ளது என நாங்கள் கூறவில்லை; பஹாய்களுக்கு குடியுரிமை தகுதிகூட கிடையாது,” என ஆயாத்துல்லா புஜ்னோர்டி ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். “கிருஸ்துவ, யூத மற்றும் ஸோராஸ்த்திரியர்க்குக் குடியுரிமை தகுதியுள்ளது. அவர்களுக்குப் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் உள்ளனர், ஏனெனில், அவை ஆபிரஹாமிய சமயங்களாகும். நாமும் அவர்களுடன் தொடர்புகொண்டுள்ளோம் அவர்களின் பிரதிநிதிகள் நமக்கு நண்பர்களும் ஆவர்,” என அவர் மேலும் கூறினார்.

இத்தகைய அறிக்கைகள் இரான் நாட்டு பஹாய்களின் உரிமைகள் பரவலாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும் அத்துமீறப்படுவதைப் பிரதிபலிக்கின்றன. அதிகரித்துவரும் அனைத்துலக கண்டனங்களை எதிர்நோக்கும் இரான் நாட்டு நீதித்துறை அதிகாரிகளின் மறுப்புரைகள் இதற்கு எதிர்மாறாக இருக்கின்றது. ஒரு செல்வாக்கு மிக்க மதகுருவான ஆயாத்துல்லா முகம்மது மூசாவி போஜ்னோர்டி விடுத்துள்ள அறிக்கைகள், பஹாய்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பஹாய் குடிகளின் அடிப்படை மனிதவுரிமைகள், அடிப்படை மனிதவுரிமைகள் ஆகியவை அத்துமீறப்படுவதற்கான அடித்தலத்தையும் மத ரீதியான நியாயப்படுத்தலுக்கும் வழிவகுக்கின்றன; பல்வேறு அரசாங்க அமைப்புகள், குறிப்பாகப் தேசப்பாதுகாப்பு அமைப்புகள் பஹாய்கள் மீது தாக்குதல்கள் தொடுப்பதற்கான வழிகாட்டிகளாக இவை தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

பஹாய்கள் உட்பட, பிரஜைகள் அனைவரின் கல்வி குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக போஜனோர்டி பின்வருமாறு கூறினார்: “நிச்சயமாக இல்லை! சில விவகாரங்களுக்கு வல்லுனர்கள் கருத்துகள் தெரிவிக்க வேண்டியதில்லை—இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் இக்கலந்துரையாடலில் ஈடுபட அருகதையற்றவர்கள். பஹாய்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் ஆகவே அவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாது.”

அக்டோபர் 2014ல், முகம்மது ஜவாட் லாரிஜானி இரான் நாட்டு பஹாய் பிரஜைகள் மீது எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை எனவும் அவர்கள் “குடியுரிமை உடன்பாட்டிற்கு” இணங்கவே நடத்தப்படுகின்றனர் என மறுப்புத் தெரிவித்தார். இரான் நாட்டின் குடியுரிமைச் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் தனிநபர்களுக்கு இரான் நாடு பாதுகாப்பளிக்கும் எனவும் “ஒரு தனிநபர் சட்டத்தை மீறும்போது, அது ஷீயா, சுன்ன அல்லது இரான் சமுதாயத்தின் பிற சமூகங்களைக் குறிப்பிடவில்லை,” எனக் கூறினார். இவ்வறிக்கைகளுக்குச் சில மாதங்களுக்கு முன், ஏப்ரல் 2014ல் இரான் தொழிலாளர் செய்தி நிறுவனத்திற்கு (ILNA) வழங்கிய ஒரு பேட்டியில் லாரிஜானி பின்வருமாறு கூறினார்: “அவர்கள் பஹாய்கள் என்பதற்காக அதிகாரிகள் பஹாய்களை குறிவைப்பதில்லை, ஏனெனில் அரசியலமைப்பின்படி, எல்லா இரான் நாட்டுக் குடிகளும் சில உரிமைகளைப் பெற்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படவும் முடியாது.”

பஹாய் சமூகத்தின் ஐக்கிய நாடுகள் பிரதிநிதியான டியான் அலாயி மார்ச் 2014ல் ஜவாட் லாரிஜானியால் விடுக்கப்பட்ட அறிக்கைகளுக்குப் பின்வருமாறு மறுமொழியளித்தார்: “திரு லாரிஜானி இரான் நாட்டில் பஹாய் சமூகம் தற்போது எதிர்நோக்கும் சூழ்நிலை குறித்து ஏதும் அறிந்திருக்கவில்லை போலும். இல்லையெனில் பஹாய் இளைஞர்கள் பல்கலைக்கழகம் புகமுடியாது, பஹாய் இடுகாடுகள் புல்டோஸர்களைக் கொண்டு அழிக்கப்படுகின்றன, கடைகளுக்குச் சொந்தக்காரர்கள் பஹாய் புனித நாள்களின்போது கடைகளை அடைக்கும் போது அக்கடைகள் (அதிகாரிகளால் நிரந்தரமாகப்) பூட்டப்படுகின்றன. இவை யாவும் எல்லாரும் அறிந்துள்ள ஒன்றாகும்.”

இரான் நாட்டில் பஹாய்கள் மீது தொடுக்கப்படும் பரவலான மனித உரிமை அத்துமீறல்கள் ஐ.நா-வின் மனித உரிமை வாரியத்தினாலும் ஐ.நா பொதுச் சபையினாலும் என்றுமே கண்டனம் செய்யப்பட்டு வந்துள்ளன. ஐ.நா.-வின் இரான் நாட்டு மனித உரிமைக்கான விசேஷ அறிக்கையாளராக அஹ்மெட் ஷாஹீட் 2011ல் நியமிக்கப்பட்டதிலிருந்து, இரான் நாடு குறித்த அவரது வருடாந்திர அறிக்கைகள் பஹாய்களின் கல்வி சார்ந்த உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் உட்பட மனித உரிமைகள் சார்ந்த மோசமான அத்துமீறல்களைத் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வந்துள்ளன.

இரான் நாட்டிற்கு விஜயம் செய்வதற்கான ஷாஹீடின் வேண்டுகோள்கள் அனைத்துமே இரான் நாட்டு அதிகாரிகளால் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்துள்ளன. இருந்தபோதும், ஆயாத்துல்லா போஜ்னோர்டி விசேஷ அறிக்கையாளரைச் சந்திப்பதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளார். “இரான் நாட்டின் ஐ.நா.விற்கான விசேஷ அறிக்கையாளரான இந்த அஹ்மட் ஷாஹீடுடன் நெருக்கமாகச் சந்தித்துப் பேசிட நான் பெரிதும் விரும்புகிறேன். ஏனெனில், அவர் மிகவும் அதிகமான புரட்சி-எதிர்ப்புச் சொற்களை அள்ளி வீசியுள்ளார். அது குறித்து அவரிடம் எவருமே உட்கார்ந்து பேசியதில்லை. அவரிடம் இஸ்லாமிய உரிமைகள் குறித்துப் பேசிட நான் பெரிதும் விரும்புகிறேன். மீறுபவர் ஒருவரை கைது செய்து சிறைப்படுத்துவது மனித உரிமை குறித்த அத்துமீறலாவென கேட்க விரும்புகிறேன்?…”

எழுபத்தொரு வயதாகிய ஆயாத்துல்லா முஹம்மது மூசாவி போஜ்னோர்டி, நாஜாஃப் நகரில் பல வருடங்களாக ஆயாத்துல்லா கோமேனியின் மாணவராக இருந்துவந்தும் கலைக்கப்படும் வரை அந்த உச்ச நீதித்துறை மன்றத்தின் உறுப்பினராக இரண்டு முறை இருந்துமுள்ளார்.

114 இளைஞர் மாநாடுகள்


கடந்த வருடம் (2013ல்) உலகம் முழுவதும் 114 இளைஞர் மாநாடுகள் உலகம் முழுவதும் நடைபெற்றன.

“இளம் நம்பிக்கையாளர் தலைமுறை ஒவ்வொன்றிற்கும், மனிதகுலத்தின் செழுமைக்குப் பங்களிப்பதற்கு, தங்களின் வாழ்நாள் காலத்திற்கே உரிய தனித்தன்மை வாய்ந்த ஒரு வாய்ப்பு ஏற்படும். நிகழ்கால தலைமுறையினர்க்கு, ஆழச்சிந்திக்கவும், ஈடுபாடுகொள்ளவும், பேரளவிலான ஆசிகள் வழிந்தோடவல்ல அர்ப்பணிப்புத் தன்மை மிக்க வாழ்விற்காகத் தங்களைத் தாங்களே வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய காலம் கனிந்துவிட்டது.”

“மனிதகுலத்திற்குச் சேவை செய்வது” எனும் தலைப்பில் அம்மாநாடுகளின் காணொலிகள் இங்கு வழங்கப்படுகின்றன. வசனங்கள் தமிழில் துணைத்தலைப்புகளாக வழங்கப்பட்டுள்ளன.

துணைத்தலைப்புகள் காணப்படவில்லையெனில், தயவு செய்து காணொலியின் கீழ்க்காணப்படும் பட்டியலிலிருந்து துணைத்தலைப்புகளைச் செயல்படுத்திக்கொள்ளவும்.

(துணைத்தலைப்புகளைச் செயல்படுத்தும் விதம்:)

subtitles-1 subtitles-2

வெட்கக்கேடன்றி வேறில்லை!


முகம்மத் நூரிஸாட், டாக். முகம்மத் மாலெக்கி இருவரும் உயர்கல்வி மறுக்கப்பட்ட சில பஹாய்களைச் சென்று சந்தித்தனர்.

கல்வியில் பாகுபாட்டை எதிர்க்கும் இயக்கம் – இரானிய இயக்குனர், திரைக்கதை மற்றும் பத்திரிக்கையாளரான திரு முகம்மத் நூரிஸாட், தெஹ்ரான் பல்கலைகழகப் பிரதான முகவராக புரட்சிக்குப் பின் நியமிக்கப்பட்ட டாக். முகம்மத் மாலெக்கியுடன், உயர்கல்வி மறுக்கப்பட்ட பஹாய்கள் சிலரைச் சென்று சந்தித்தார். திரு முகம்மத் நூரிஸாட் தமது ஃபேஸ்புக் (facebook) பக்கத்தில், இச்சந்திப்பை “வெட்கக்கேடன்றி வேறில்லை” எனும் தலைப்பில் வர்ணித்துள்ளார்.

வெட்கக்கேடன்றி வேறில்லை!
இஸ்லாமிய புரட்சியை நனவாக்கிய எங்களைப் பற்றியும் நாங்கள் யார், ஆற்றப்பட்ட கொடுங்கோன்மைகள், அடிதடி, மரணம் சிறைவாசம் ஆகியவற்றுக்கு ஆளானோர், குடும்பங்கள் நாசமானோர், திருடப்பட்ட சொத்துகள், நாட்டை விட்டு வெளியேற வற்புறுத்தலுக்கு ஆளான மக்கள், அதை பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. ஓர் உதாரணத்தை மட்டும், அது தங்கள் நாட்டிலேயே அறிவெனும் விருட்சத்திலிருந்து பயனடைவதிலிருந்து எங்களால் தடுக்கப்பட்ட இருபதாயிரம் இளம் பஹாய்களை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

கீழ்காணும் நிழல்படத்தில், தெஹரான் பல்கலைகழகப் பிரதான முகவராகப் புரட்சிக்குப் பின் நியமிக்கப்பட்ட டாக். முகம்மத் மாலெக்கியும் நானும் கீழே தரையில் அமர்ந்திருக்கின்றோம்; அனைத்து மனித நேய, பொதுநலத் தன்மை, சுதந்திரம் விரும்பிகள், நலன்விரும்பிகள், கடவுள் நம்பிக்கையாளர் மற்றும் நல்ல பழக்கமுள்ள ஈரானியர்கள் சார்பில் உயர் கல்வியைஇழந்துள்ள மூன்று தலைமுறையினாரான பஹாய்கள் அடங்கிய இச் சிறிய குழுவினரிடம் மன்னிப்பை வேண்டுகின்றோம்.

shame
உயர்கல்வி பறிக்கப்பட்ட பஹாய் இளைஞர்களுடன்

இக்குழுவினரில் சில வருடங்களுக்கு முன் தேசிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதல் தரத்தில் தேர்வுற்ற ஓர் ஆன்மா உள்ளது. இருந்தும் என்ன பயன், எந்த அதிகாரியோ ஆயத்துல்லாவோ அவர் கல்வியில் அடைந்த சிறப்பைப் பற்றி அக்கறை கொள்ளவோ அவரிடம் அது பற்றி வினவவோ அவருக்காக வாய்ப்பேற்படுத்தவோ முயலவில்லை. திரு ஷாடான் ஷிராஸி இவ்வருட நுழைவுத் தேர்வில் 113ம் இடத்தைப் பெற்றும் தமது சமய நம்பிக்கை காரணமாக கல்வி வாய்ப்புகளை இழந்துள்ள ஒரு சிறு பெண் அடங்கிய நிழல்படத்தில் தாமும் இருக்கின்றார். நான் கூற விரும்புவது: அன்புடையீரே, நாம் நமது தலைப்பாகைகளைச் சற்று உயரமாக அனிந்தால் நன்றாக இருக்கும்! ஏனெனில் சிறிது தூய்மையான காற்று நமது மூளைகளுக்கு புத்துணர்ச்சியளித்து அது புதிய விஷயங்களைக் கற்க உதவிடும்!

முகம்மத் நூரிஸாட்
செப்டம்பர் 14, 2014
தெஹரான்

தென் கெரோலினாவில் பஹாய் சமயம் இரண்டாவது பெரிய சமயம்


மூலம்: http://venitism.blogspot.com/2014/07/bahai-second-largest-religion-in-south.html

மொழிபெயர்ப்பு: B. சுப்பையா

(அமெரிக்காவின்) எல்லா 50 மாநிலங்களிலும் கிருஸ்துவ சமயம் மிகப் பெரிய சமயமாக இருப்பது ஆச்சரியமேயில்லை. ஆனால், எனது சொந்த மாநிலமான தென் கெரோலினாவில் பஹாய் சமயம் இரண்டாவது பெரிய சமயமாக இருப்பது ஓர் ஆச்சரியமே! இச்செய்தி, ச்சால்ஸ்டன் போஸ்ட் மற்றும் விரைவுத்தூது, ச்சால்ஸ்டன் மாநகர் நாளிதழ் எனும் இரு உள்ளூர் நாளிதழ்கள் பஹாய்களைப் பற்றி கட்டுரை வெளியிட தூண்டியுள்ளது. ஒரு நாஸ்திகனான என்னையும் ஓர் உள்ளூரளவிலான பஹாய் கூட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது.

தென் கெரோலினாவில் ஒட்டுமொத்த யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பஹாய்கள் அதிகமாகவே இருந்தனர்; ஆயினும், அவர்கள் நாஸ்திகர்கள் மற்றும் உலோகாயத வாதிகளைக்(agnostics) காட்டிலும் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தனர்.

லூயிஸ் கிரேகரி என்பவரால் பஹாய் சமயம் தென் கெரோலினாவில் பிரபலமடைந்தது. 1874ல் பிறந்த இவர் ச்சால்ஸ்டனில் வளர்ந்தார். அமெரிக்காவில் பஹாய் சமயத்தை ஸ்தாபித்தவர்களில் இவரும் ஒருவராவார். அடிமை ஒருவரின் பேரனான இவர் 1909ல் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டார். இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேலோங்கச் செய்வதற்காக நாட்டின் பல பாகங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். இவர் 1912ல் வெள்ளை இனத்தைச் சார்ந்த பெண்மணி ஒருவரை மணந்தார். அக்கால கட்டத்தில் அந்நாட்டின் பல பாகங்களில், இது போன்ற கலப்புத் திருமணம் செய்துகொள்வது ஒரு குற்றச் செயலாகவே கருதப்பட்டது. லூயிஸ் கிரெகரி பஹாய் அரும்பொருள் காட்சியகம் ச்சால்ஸ்டன் நகரின் மையத்தில் இருக்கின்றது.

அண்டை அயலார் மத்தியில் பஹாய்களும் நாஸ்திகர்களும் சாத்தான்களாகக் கருதப்பட்டதால், அவர்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வதில்லை. பஹாய் சமயம் 1844ல் “பாப்” எனும் இளைஞர் ஒருவரால் நிறுவப்பட்டது. அரேபிய மொழியில் “பாப்” என்பதன் பொருள் “வாசல்” என்பதாகும். இவர் இஸ்லாம் சமயத்தின் இரட்சகராகத் தம்மைக் கோரிக்கொண்டார். இஸ்லாத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது போல் அமைதி மற்றும் நீதி யுகத்தில் இரண்டாவது தேவதூதர் தோன்றிடுவார் எனவும் பாப் அறிவித்தார். இஸ்லாமிய மதகுருக்களால் பாப் அவர்கள் அன்னியப்படுத்தப்பட்டு, 1850ல் தமது 30வது வயதில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாப் அவர்களின் நம்பிக்கையாளர்களுள் ஒருவரான பஹாவுல்லா, 1863ல் தாம்தான் பாப் அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இறைத்தூதரென அறிவித்தார். பஹாவுல்லாவின் போதனைகள்தான் பஹாய் சமயத்தின் அஸ்திவாரமாகும்.

சமீபத்தில், டேவ் மற்றும் போனீ ஸ்பிங்கர் தம்பதியர் இல்லத்தில் 15 பேர் பங்கேற்ற ஒரு பஹாய் கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அவர்கள் அனைவரும் உள்ளூர் தலைவர்களென என நான் எண்ணினேன். ஆனால், பஹாய் தலைவர் என்று எவருமில்லையென அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். பஹாய்கள் அவ்வப்போது தங்கள் இல்லங்களில் பஹாய் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில்தான் நான் கலந்துகொண்டேன். நாங்கள் ஒரு வட்டத்தில் அமர்ந்திருந்தோம். வழிபாடு தொடங்கியது, டேவ் இசைப்பதிவுக் கருவியை முடுக்கினார். அதிலிருந்து இன்னிசை ஒலித்தது. அதனைத் தொடர்ந்து “ஒற்றுமை உணர்வு பற்றிய பிரதிபலிப்பு” எனும் துண்டுபிரசுத்திலிருந்து வருகையாளர்கள் ஒவ்வொருவரும் உரக்க வாசித்தனர். மற்றவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்வதைவிட திருவாசகங்கள் நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைப் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டுமென டேவ் கேட்டுக்கொண்டார். இக்கருப்பொருள் தொடர்பாகக் கருத்துக் கூற வேண்டுமாய் நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

பஹாவுல்லாவின் போதனைகள் கடவுளின் ஒற்றுமை, சமயங்களின் ஒற்றுமை மற்றும் மனிதகுல ஒற்றுமை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. அவை மனிதர்கள் அனைவரின் மதிப்பு மற்றும் சமத்துவத்தை மையப்படுத்தியிருந்தன. இனங்கள் மற்றும் கலாச்சாரங்களின் பல்வகைத்தன்மை போற்றப்பட்டன; இனவெறி, தேசியவாதம், சமூக அந்தஸ்து மற்றும் ஆண் பெண் எனும் பேதம் யாவும் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு செயற்கையான முட்டுக்கட்டைகளாகும். உண்மையில் எங்களது வழிபாட்டுக்கூட்டத்தில் வெள்ளையர் மற்றும் கருப்பர், ஆண்கள் மற்றும் பெண்கள், இளையோர் மற்றும் முதியோர், செல்வந்தர் மற்றும் வறியவர் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

ஆழ்சிந்தனைக்குப் பிறகு, நாங்கள் இரவு விருந்தில் பரிமாறப்பட்ட பல்வகை உணவினை உண்டு மகிழ்ந்தோம். வழக்கமாகப் புதியவர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்வில் அவர்களுள் ஒருவனாக இருப்பது எனக்கு அசௌகரியமாகவே இருக்கும். ஆனால், அன்றைய நிகழ்வு ஒரு விதிவிலக்காக இருந்தது. எல்லோருக்கும் எல்லோரையுமே பிடித்திருந்தது. என்னைத் தவிர எவருமே இன மற்றும் நிற வேற்றுமையை ஒரு பொருட்டாகக் கருதவே இல்லை.

இரவு உணவின்போது டேவ், போனீ இன்னும் பிறரோடு நான் பஹாய் சமயம் குறித்து விவாதித்தேன். கடவுள் நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை தொடர்பான கேள்விகள் கேட்பதும் கேட்கப்படுவதையும் நான் பெரிதும் விரும்பினேன். சில வேளையில் ஒருசிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசத்தொடங்கினர். அதுபோன்ற சந்தர்ப்பத்தில் நான் சற்று பின்வாங்கிவிடுவேன். இந்த பஹாய்களின் மனதைப் புண்படுத்தும் எதையும் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. இயற்பண்புடைய தனியொருமைக் கோட்பாட்டாளர்கள், இயற்பண்புடையோர் யூதமார்க்கம் மற்றும் ஒழுங்குநெறி கலாச்சாரம் போன்ற கடவுளை நம்பாத, மனித நலனுக்கு முக்கியத்துவமளிக்கும் சமயமே எனக்குப் பிடித்தமான சமயமாகும். பஹாய் சமயம் கடவுள் நம்பிக்கையோடு மனிதநலனுக்கு முன்னுரிமையளிக்கும் ஒரு சமயமாக இருப்பதால், அஃது எனக்குப் பிடித்தமான சமயமாகத் திகழ்ந்தது.

சமயங்கள் அதிக மதிப்பளிப்பது நடத்தைக்கா அல்லது நம்பிக்கைக்கா என்பதை வைத்தே நான் சமயங்களைப் பெரும்பாலும் எடைபோடுவேன். பஹாய் சமயம் நம்பிக்கையைக் காட்டிலும் நடத்தைகளுக்கே முக்கியத்துவளிக்கின்றது என மிகத் தெளிவாக என்னிடம் தெரிவித்தார்கள். நான் ஏற்கனவே எழுதியிருந்ததுபோல் நான் கடந்த காலத்தில் விஜயம் செய்த ஒரு தேவாலயத்தின் நடைமுறைக்கு இது சற்று மாறுபட்டு இருந்தது. கடவுளுக்கு அண்மையில் அல்லது தூரத்தில் எனும் “ஆன்மீக” நிலையைப் பொருள்படச் செய்யும் சுவர்க்கம் மற்றும் நரகம் எனும் உருவக வடிவத்தில் பஹாய்கள் நம்பிக்கைகொண்டுள்ளனர். மக்கள் தங்கள் இறப்புக்குப்பின் கடவுளுக்கு நெருக்கமாக அல்லது தூரமாக இருப்பார்கள் என்பதில் நம்பிக்கையுண்டா என டேவிடம் கேட்டேன். அவரும் அவ்வாறு இருக்கலாம் என்றார். நான் சாட்சியங்களை வைத்தே ஒன்றில் நம்பிக்கைகொள்வதால், இறந்த பிறகு நான் அவரையோ அவளையோ சந்தித்தால் அவரை நம்புகிறேன் என்று கடவுளிடம் செஒல்வேன் என சொன்னேன். அதைக் கேட்ட டேவ் சிரித்துவிட்டார். அன்புதான் பஹாய் கடவுள், சினமல்ல.

ஆப்ரஹாம், கிருஷ்ணா, ஜொரோஸ்டர், மோஸஸ், புத்தர், இயேசு மற்றும் முகம்மது உட்பட தொடர்ச்சியாக தெய்வீக இறைத்தூதர்களாக கடவுள் அவதரித்துள்ளார் எனும் பஹாய்களின் நம்பிக்கை பற்றி நான் கேள்வியெழுப்பினேன். கலாச்சாரம் பரிணாமம் காண்பதால் கடவுள் வெவ்வேறு செய்திகளை அனுப்புகின்றார். அவை விளங்கிக்கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் சுலபமாக இருக்கின்றன. அத்துடன் ஒற்றுமை முக்கியம் என்பதோடு எல்லா சமயங்களுக்கிடையேயும் ஒற்றுமை நிலவிடும்போது உலக சமாதானம் அடையப்படும் எனும் அவர்களின் நம்பிக்கையோடும் இது பொருந்துகிறது என டேவ் நியாயப்படுத்தினார்.

தன்பாலினருக்கு இடையிலான திருமணம் (gay marriage) பற்றி நான் கேள்வி கேட்டேன். கணவன், மனைவியர்க்கிடையில் மட்டுமே உடலுறவு அனுமதிக்கப்படுகிறது என்றும் திருமணத்துக்கு முன்பும் திருமண பந்தத்திற்கு வெளியிலும் தன்பாலினத்தினரோடும் உடலுறவு தடைசெய்யப்பட்டுள்ளது எனவும் கூறினர். இங்கு ஒரு நற்செய்தி என்னவென்றால் பஹாய்கள் ஒவ்வொருவரையும் மதித்து கண்ணியப்படுத்த முயல்கின்றனர். அவர்கள் தன்பாலினத்தாரைத் தாழ்ந்த சாதியனராக கருதுவதில்லை. அதே வேளையில் பஹாய் அல்லாதோர் பஹாய் சட்டங்களைப் பின்பற்ற வேண்டுமெனவும் எதிர்பார்ப்பதில்லை.

பஹாய்கள், கட்சி அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அவர்கள் வேட்பாளர்களை வழிமொழிவதோ அரசியல் பதவி வகிப்பதோ அனுமதிக்கப்படவில்லை. இது கவலையளிக்கிறது ஏனெனில், சில பஹாய்களை — குறிப்பாகத் தென் கெரோலினாவில், வேட்பாளர்களாகக் காண நான் விரும்புகிறேன்.

(உங்கள் சிந்தனைக்கு: கட்சி பொறுப்பு வகிப்பதற்காகக் கிருஸ்தவர்கள் தங்களுக்குத் தாங்களே 10 ஆண்டு தற்காலிகத் தடை விதித்துக்கொள்கின்றனர். அப்படியானால் எப்படி நம் நாடு மாற்றம் காணும்.)

இது பஹாய்களுடனான முதல் சந்திப்பல்ல. 1997ல் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, புது டில்லியிலுள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு விஜயம் செய்தேன். உலக சமாதானத்திற்காகப் பாடுபடுவதும் இனவெறியையும் ஏழ்மையையும் துடைத்தொழிப்பதுவுமே பஹாய்கள் முன்னுரிமை வழங்குகின்றனர் என்பதை அங்குதான் முதன்முதலில், நான் தெரிந்துகொண்டேன். நான் அங்கிருந்து புறப்படுவதற்கு முன், ஒரு சிறுதொகையை நன்கொடையாக வழங்க எண்ணினேன். அப்பொழுதுதான், வேறெந்த சமயமோ சமய சார்பற்ற இயக்கங்களிடமிருந்தோ கேள்விப்படாத ஒன்றை முதன்முறையாகக் கேள்வியுற்றேன். “உங்கள் நன்கொடையை ஏற்காததற்காக என்னை மன்னியுங்கள். நிதி வழங்குவது ஒரு பாக்கியமென நாங்கள் கருதுகின்றோம். பஹாய்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.”

அதனால்தான் பஹாய்கள் அரசியலில் ஈடுபடாமல் இருக்கின்றனரோ!

அமரப்பறவை மேலெழுகிறது


அமரப்பறவை மேலெழுகிறது
(பாப் அவர்களின் மரணதண்டனை)

http://www.huffingtonpost.com/shastri-purushotma/phoenix-rises-the-execution-of-the-bab_b_1620138.html

(உலகம் முழுவதும் உள்ள பஹாய்கள் பாப் எனும் திருநாமம் கொண்ட தங்களின் இரு அவதாரங்களில் ஒருவரின் தியாகமரண தினத்தை வருடா வருடம் 9 ஜூலையன்று நினைவுகூர்வர். பின்வருவது அவரின் மரணம் பற்றிய ஒரு குறுவிவரமாகும்.)

நிரபராதியென நீங்கள் நம்பும் ஒருவரைச் சுட்டுச் சாகடிக்கும் கசப்பான கடமை ஒன்றை நீங்கள் நிறைவற்ற வேண்டும் என வைத்துக்கொள்வோம். பிறகு நீங்களும் உங்கள் படைப்பிரிவும் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரைச் சுடுவதற்கு முன் அவரை சுடுவதற்கு உங்கள் உள்ளம் இடந்தரவில்லை என்பதை அவரிடம் நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் அதற்கு அவர் “உங்களுக்கு இடப்பட்ட ஆணையை நிறைவேற்றுங்கள், உங்கள் குறிக்கோள் தூய்மையானதாக இருக்குமானால், கடவுள் நிச்சயமாக உங்கள் குழப்பத்திலிருந்து உங்களை விடுவிப்பார்,” என கூறுகிறார். கைதியும் கைதியின் நண்பர் ஒருவரும் ஓர் உயர்ந்த சுவற்றில் கயிற்றால் தொங்கவிடப்படுகின்றனர். இச்சம்பவத்தை சுமார் 10,000 மக்கள் பாத்துக்கொண்டிருக்கின்றனர், நீங்களும் உங்கள் படைப்பிரிவினர் 750 வீரர்களும் கைதிகளைச் சுடுகின்றீர்கள் மற்றும் துப்பாக்கிகளிலிருந்து கிளம்பிய புகை மண்டலம் ஸ்தலத்தையே மறைத்துவிடுகின்றது. புகை மண்டலம் விலகியபின், கைதிகளைப் பிணைத்திருந்து கயிறுகள் துண்டிக்கப்பட்டும், கைதிகளில் ஒருவர் அங்கு உயிருடன் நின்று கொண்டும், மற்றவர் காணமலும் போய்விட்டதைக் காண்கிறீர்.

9 ஜூலை 1950ல் பாரசீக நாட்டின் தப்ரீஸ் நகரில் ஒரு படைத் தலைவனான சேம் காஃனைப் பீடித்திருந்து சங்கடநிலை இதுவே ஆகும். இதற்கான அவர் மற்றும் அவருடைய படையினரின் மறுமொழி அவர்கள் தங்களின் உத்தியோகத்தை அவ்விடத்திலேயே இராஜினாமா செய்ததாகும். சேம் காஃன் கொலை செய்வதற்குத் தயக்கம் தெரிவித்த அந்த கைதியின் பெயர் சையிட் அலி முகம்மது அல்லது “பாப்” அல்லது “திருவாசல்” என்பதாகும். அவர் மானிடத்திற்கு தாம் ஒரு புதிய செய்தியை கடவுளிடமிருந்து கொண்டுவந்துள்ளதாக அறிவித்ததே அவர் கொல்லப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டதற்கான காரணமாகும். அவர் பஹாய் சமயத்தின் இரு ஸ்தாபகர்களில் ஒருவராவார்.

பாப் அவர்கள் கொல்லப்பட்ட இடம்
பாப் அவர்கள் கயிற்றால் தொங்கவிடப்பட்டு கொல்லப்பட்ட தப்ரீஸ் நகர் முகாமின் சுவர். வலப்புறம் x குறியிடப்பட்ட தூணில் அவர் கயிற்றால் கட்டப்பட்ட இடம்

பாப் அவர்கள் தமது சிறை அறையிலிருந்து கொல்லப்படுவதற்காக கொண்டுசெல்லப்படுவதற்கு முன்பாக, அவர் தமது செயலாளருடன் ஓர் உரையாடலில் ஈடுபட்டிருந்தார். சிறைச்சாலையின் தலைமை ஏவலாளி அவர் உரையாடலில் தலையிட்டு கொல்லப்படுவதற்காக அவரை கொண்டுசெல்ல வந்தான். பாப் அவர்கள் இழுத்துச் செல்லப்படும் வேளையில் அவர் சிறை அதிகாரிகளிடம் பின்வருமாறு கூறினார்: “நான் அவரிடம் (செயலாளர்) கூற விரும்பும் விஷயங்கள் அனைத்தையும் கூறுவதற்கு முன்பாக, எந்த உலக சக்தியும் என் நாவை அடக்க முடியாது.” சுடப்பட்டு கயிறுகள் அறுப்பட்டவுடன், அவர் தமது அறையில் தமது செயலாளருடனான உரையாடலில் சாந்தமாக ஈடுபட்டிருக்கக் காணப்பட்டார். தம்மைக் கண்டுபிடித்த அதே சிறை அதிகாரியிடம் பின்வருமாறு கூறினார்: “நான் என் உரையாடலை முடித்துவிட்டேன். நீர் இப்போது உமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்.” சேம் காஃனைப் போலவே இந்த அதிகாரியும் பெரிதும் ஆட்டம் கண்டு தமது வேலையை உடனடியாக இராஜினாமா செய்தார்.

அதன் பிறகு முற்றிலும் புதிய படைத்தலைவர் ஒருவரும் படைப்பிரிவுகளும் தருவிக்கப்பட்டு மரணதண்டனை முயற்சிகளை மீண்டும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்புதிய படைத்தலைவனுக்கு கடந்த ஒரு மணிநேர வினோத நிகழ்வுகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை மற்றும் சேம் காஃன் போன்று இவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இம்முறை, புகை மண்டலம் நீங்கியபின், துப்பாக்கி ரவைகள் குறி தவரவில்லை என்பதும் முகங்கள் தவிர உடல்கள் இரண்டும் சிதைந்து உருத்தெரியாமல் போயிருந்தன என்பது தெரிந்த்து. இதன் பிறகு, தப்ரீஸ் நகரை மிகவும் அசதாரனமான கடுங்காற்று ஒன்று தாக்கி, நகரம் முழுவதும் தூசி மண்டலம் சூழ்ந்து அன்று இரவு வரை சூரியனின் ஒளியை மறைத்தது. உடல்கள் இரண்டும் நகருக்கு வெளியே ஓர் அகழியின் கரையில் வீசியெறியப்பட்டன, மற்றும் மரணதண்டனைக்கு அடுத்த நாள் நடு இரவில் உடல்களை காவல் காக்க சுற்றிலும் காவலர்கள் இருந்தும் துக்கவசப்பட்ட சில அன்பர்களால் உடல்கள் எப்படியோ மீட்கப்பட்டன.

உடல்கள் ஒவ்வோர் இடமாக கொண்டுசெல்லப்பட்டும் மறைக்கப்பட்டும், பல வருடங்கள் சென்று இறுதியில் இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டன. ஒப்பீடு மிகவும் திகைக்கவைப்பதாக இருக்கின்றது: ஒரு புறம் மிகவும் கேவலமான முறையில் இரான் நாட்டின் தப்ரீஸ் என இன்று பெயர் கொண்ட நகரில் ஒர் அகழியின் கரையில் வீசெயறியப்பட்ட உடல்கள், இன்று இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகரில் மிகவும் பேரழகு வாய்ந்த ஓர் நல்லடக்கத் திருவிடத்தின் மையமாகத் திகழ்கின்றன மற்றும் உலகளாவிய மரபுத்தலமாகவும் புனிதநிலமெனும் பேரழகின் பிரபலமான சின்னம் ஒன்றாகவும் திகழ்கின்றது.

பாப் அவர்களின் நல்லடக்க ஸ்தலம்

ஹைஃபா, இஸ்ரேலில் உள்ள பாப் அவர்களின் நல்லடக்கத் திருவிடம்

இரண்டாம் முறையாக முயன்று பாப் அவர்களைக் கொன்ற காவல் படைப்பிரிவின் உறுப்பினர்கள் அனைவருமே விரைவில் கொல்லப்பட்டனர் – சிலர் நிலநடுக்கம் ஒன்றின் போது ஒரு பெருஞ்சுவர் அவர்கள் மீது சாய்ந்ததனாலும், மற்றவர்கள் அனைவரும் கலகம் செய்ததனால் சுட்டுக் கொல்லவும் பட்டனர். உலகம் முழுவதும் பாப் அவர்களின் போதனைகள் பரவின, மற்றும் அவரது மரணத்தின் வியக்க வைக்கும் சூழ்நிலை பலரின் மனதைக் கவர்ந்தது. உதாரணமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு ருஷ்ய கவிஞர் அச்சம்பவம் குறித்த ஒரு நாடகத்தை இயற்றியும் அது ஐரோப்பாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் மேடையேற்றம் காணவும் செய்தது. இந்த நாடகமே லியோ டால்ஸ்டாயை பாப் அவர்களின் போதனைகளின்பால் கவர்ந்தும் அவற்றோடு பரிச்சயப்படவும் வைத்தது. அன்மைக்காலத்தின் ஓர் உதாரணமாக கிராண்ட் ஹின்டின் மில்லரைக் குறிப்பிடலாம். இவர் நியூ சீலாந்து நாட்டைச் சார்ந்த ஓர் இசைஞர் ஆவார். இவர் தப்ரீஸ் நகரின் செங்கற்களின் மீது படிந்துள்ள சகதியின் கருவில், அந்நகரை என்றென்றும் கரைபடியச் செய்துள்ள அச் சோக நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு “dumb with despair (நம்பிக்கையின்மையால் மடைமை)” எனும் ஓர் அருமையான பாடலை இயற்றியுள்ளார்.

இவ்வருடம் ஜூலை 9ம் திகதி உலகம் முழுவதுமுள்ள பஹாய் சமூகத்தின் அரை கோடி உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் பாப் அவர்களின் உலக வாழ்வின் இறுதி தருணங்களைப் பிரார்த்தனை நிகழ்வுகளுடனும் திருவாக்கு வாசிப்புகளுடன் நினைவு கூர்வர். இம்மனைதைப் பிரமிக்கவைக்கும் நிகழ்வுகளைப் பற்றியோ பாப் அவர்களின் போதனைகள் பற்றியோ மேலும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவோர் உங்களுக்கு அருகாமையிலுள்ள பஹாய்களோடு தொடர்புகொள்ளலாம்.