மரணத்திற்குப் பின் வாழ்வு உள்ளதா?
ஆக்கம்: ஸ்டீவன் பான்கார்ஸல்
வரலாற்றுக் காலம் முதல் மறுமைவாழ்வு என்பது எண்ணிலடங்கா மக்களின் அனுபவமாக இருந்தும், அவர்கள் அவ்வாறு மரணமுற்றப்பின் மீண்டும் இம்மைக்குத் திரும்பி தங்களின் கதைகளைக் கூறியும் உள்ளனர். அவ்வாறான அனுபவங்களுள், 25 வருட கால அனுபவம் பெற்ற ஹார்வார்ட் பயிற்சி பெற்ற நரம்பியல் மருத்துவரான டாக். எபன் அலெக்ஸான்டரின் அனுபவம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. இது வெறும் சித்தபிரமை என ஒதுக்கித்தள்ளப்பட முடியாத ஓர் அனுபவமாக இருக்கின்றது. எவ்வாறு அவரது மறுமைவாழ்வு சகலவித ஆறிவியல் விளக்கங்களுக்கும் எதிர்மாறாக உள்ளது என்பதைக் காண்பதற்கு முன், அவரது அனுபவத்தைச் சற்று ஆராய்வோம்.
தமது அனுபவத்திற்கு முன்பாக, பௌதீகமல்லாத (வஸ்துவல்லாத) ஓர் ஆவி உள்ளது என்பதை அவர் நம்பவில்லை. மேற்கத்திய மருத்துவப் பள்ளிகளில் பயின்றும், பிரபஞ்சம் குறித்த லௌகீகவாதத்தில் ஆழ்ந்திருந்த சக மருத்துவர்களால் சூழப்பட்டுமிருந்த அவர், ஆன்மா குறித்த ஒரு கருத்து நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒன்றென எண்ணினார். பெரும்பாலான “சந்தேகவாதிகள்” போன்று மறுமை வாழ்வு குறித்த கதைகளைச் சித்தபிரமைகள் அல்லது மனித கற்பனையில் உதித்தவதை எனவும் நம்பினார்.
கிருமிகளால் தோற்றுவிக்கப்பட்ட கடுமையான மூளைக் காய்ச்சலால் ஏழு நாள்கள் நினைவற்ற நிலையில் கிடந்த பிறகு அவர் தமது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். மறுமைவாழ்வு எனத் தெரிந்த ஒன்றினூடே அவர் ஓர் ஓளியார்ந்த பயணத்தை அனுபவித்தார். அவ்வேளை, தெய்வீகமானவையும் தெய்வீகமற்றவையுமான உலகங்களினூடே அவர் பயணித்தார்.
தமது உடலுக்குத் திரும்பி, எதிர்ப்பார்புகளுக்கு மாறாக வியக்கத்தக்க வகையில் நோயிலிருந்து குணமாகி, “சுவர்க்கத்தின் சான்று” எனும் நியூ யார்க் டைம்ஸின் #1 சிறந்த விற்பனை நூலை எழுதினார். டாக். அலெக்ஸான்டர், இம்மை வாழ்வென்பது நமது ஆன்மா பரிணமித்து வளர்ச்சியுறுவதற்கு உதவிடும் ஒரு சோதனை மட்டுமே என்பதை உறுதிப்படுத்துகின்றார். அன்பினாலும் கருணையினாலும் செயல்படுவதன் மூலமாகவே நாம் அதில் வெற்றி காண முடியும். அவர் மேலும் குறிப்பிடும் சில விஷயங்கள் பின்வருமாறு.
மறுமை வாழ்வு குறித்த அனுபவம் அத்தகைய “மெய்ம்மை” பொருந்தியதாகவும் விரிவானதாகவும் இருந்ததானது, இவ்வுலகில் ஒரு மனிதனாக வாழ்ந்திடும் அனுபவமானது, ஒப்பீட்டல் ஒரு செயற்கையான கனவு போன்று இருந்தது.
மறுமை உலகின் இழையமைப்பு தூய அன்பாகும். மறுமையில் அன்பின் ஆதிக்கம் அத்தகைய மகத்தானதாக இருந்ததானது, அங்கு தீமையின் பொதுவான பிரசன்னம் நுண்ணிய அளவே ஆகும். பிரபஞ்சத்தை அறியவேண்டுமானால், அன்பை அறிய வேண்டும்.
மறுமையுலகில் தொடர்புகள் அனைத்தும் தொலையுணர்வு (டெலிபதி) மூலமாகவே நடைபெறுகின்றன. வார்த்தைகள் அங்கு தேவைப்படாது அல்லது ஒருவரின் தன்னகத்திற்கும் அவரைச் சுற்றி நடப்பவற்றிற்கும் இடையில் பிரிவு என்பது கிடையாது. மனதில் தோன்றும் கேள்விகள் யாவும் டெலிபதி மூலமாகவே பதிலளிக்கப்படும்.
ஆன்மீக உலகு குறித்த பிறர் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார் என வினவப்பட்டபோது, நீங்கள் விலைமதிப்பற்றவர், நீங்கள் கற்பனையே செய்திட முடியாத அளவிற்கு எல்லையற்ற அன்பு செலுத்தப்படுகின்றீர்கள். நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள், தனியாக விடப்படுவதில்லை. கடவுளின் நிபந்தனையற்ற, முழுநிறைவான அன்பு எந்த ஆன்மாவையுமே புறக்கணிப்பதில்லை.
சந்தேகமின்றி அன்பே அனைத்திற்கும் அடித்தலமாகும். அது ஓர் அருவமான, ஆழங்காண முடியாத அன்பல்ல. ஆனால், அது தினசரி எல்லாரும் அறிந்த, ஒருவர் தமது மனைவியை அல்லது கணவனை, குழந்தையை, அல்லது செல்லப்பிராணியைப் பார்க்கும் போது ஏற்படும் அன்பாகும். அதன் தூய வடிவத்தில், அதிசக்திமிகு தோற்றத்தில், அது பொறாமையோ தன்னலமோ அற்ற, நிபந்தனையற்ற அன்பாகும்.
மெய்ம்மைகளுள் எல்லாம் இதுவே மெய்ம்மையும், இருக்கக்கூடிய, இனி இருக்கப்போகும் அனைத்தின் மையத்திலும் வாழ்ந்தும் சுவாசிக்கவும் செய்யும் அறிந்திடவே முடியாத பேரொளி மிக்க உண்மைகளுளெல்லாம் உண்மையாகும். அதை அறிந்துகொள்ளாத எவருமே, தாம் யார் என்பது குறித்த துல்லியமான புரிந்துகொள்ளலை அடையவே முடியாது, மற்றும் தமது செய்கைகளில் அதை வெளிப்படுத்திடவும் முடியாது.
இப்போது நம்பகத்தன்மை குறித்து சிறிது பேசுவோம். பிறர் அனுபவித்த “மரண வாசல் அனுபவத்திற்கும்” இந்த அனுபவத்திற்கும் என்ன குறிப்பிடத்தகும் வேறுபாடு? கடுமையான மூளைக் காய்ச்சலினால் அவர் நினைவிழந்திருக்கையில், எபன் மூளையின் நவ-புறனிப் பகுதி, முற்றிலும் செயல்பாடு இழந்திருந்தது. ஆகவே, அவர் இந்த அனுபவத்தை அடைந்தார் என்பதற்கான அறிவியல் ரீதியான விவரம் கிடையாது. பொருண்மையாக, அவர் தமது நூலில், மரண வாசல் அனுபவத்திற்கு வழங்கப்படும் நடைமுறையான விளக்கங்களுக்கு தமது அனுபவத்தை ஒட்டி ஒன்பது வெவ்வேறு மறுப்புரைகளை வழங்குகிறார்.
மேற்கொண்டு விவரத்திற்கு: http://www.spiritscienceandmetaphysics.com/harvard-neurosurgeon-confirms-the-afterlife-exists/#sthash.5hx1Qfpo.dpuf