டான் கெய்கர் மற்றும் புனிதநிலத்திலிருந்து ஒரு மிகவும் மாறுபட்ட, இனிமை மிகு கதை
(இது நடந்து பல வருடங்கள் ஆகியபோதும் அதன் மையக்கருத்து எக்காலத்திற்கும் எவ்வேளைக்கும் பொருத்தமானதாகும்)
நாடால்
“மிஸ்டர் டான், நான் உங்களோடு சற்று பேசமுடியுமா?” என என் அறையின் பாதி திறந்திருந்த கதவின் வழியாக, இரு கைகளிலும் காப்பிக் கோப்பைகளை ஏந்தியிருந்த நாடால் கேட்டார். “நான் இங்கு வேலை செய்து வந்து இரண்டு வருடங்களில் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.” என மேலும் கூறினார்.
நாடால் ஜோர்டான் நாட்டைச் சார்ந்த ஓர் அரேபியராவார். அவர் கார்மல் மலை படித்தளங்களில் நிர்மானிக்கப்பட்டுவரும் அலங்கார நீரூற்றுக்களின் நீர்குழாய் அமைப்பாளரிடம் உதவியாளராக கடந்த மூன்றாண்டுகளாக பனியாற்றி வந்துள்ளார். தமது குடும்பத்தை ஜோர்டான் நாட்டிலேயே விட்டு வந்த அவர் ஓர் சிறந்த உழைப்பாளியாவார்.
“நாம் இதயபூர்வமாக சேவையாற்றும் போது வாழ்க்கை வளமாக இருக்கும், ஆனால், வெரும் பணத்திற்காக மட்டுமே நாம் செய்யும் போது நாம் ஒன்றுமற்றவர்களாக ஆகிவிடுகின்றோம்,” என ஆரம்பித்தார். உயரமான, மெலிந்த முப்பதிற்கும் சற்று அதிகமான வயதுடைய அவர் மீசையில்லாத ஒமார் ஷாரிஃப்பைப் போன்று காட்சியளித்தார். கூர்ந்த கருமை நிற கண்களும் எந்நேரமும் சிரித்த முகத்துடனான அவர் தமக்குத் தெரிந்த சிறிதே ஆன ஆங்கிலத்தில் உரையாட தயங்கமாட்டார், அதிலும் அவ்வப்போது ஓரிரு அரபு வார்த்தைகளும் கலந்து வரும்.
“தொழில் என்பது ஒரு நூலைப் போன்றது, அதை முன்புறம் ஆரம்பித்து பின்புறமாக செல்வது நல்லது. மாறாக, அதை நடுவில் ஆரம்பித்து அதை முடிக்காமல் விடுவது நல்லதல்ல. நான் ஆரம்பத்தில் துவங்கி பிறகு முடிவிற்குச் செல்ல விரும்புகிறேன். இந்த அலங்கார நீருற்றுகள் அனைத்திலும் நீர் ஊறுவதைக் காண விரும்புகிறேன்,” நான் இங்கு இரண்டு வருடங்களாக வேலை செய்கிறேன். ஓர் அராபியர் ஒருவரோடு பதினான்கு நாட்கள் ஒன்றாக உணவுண்டாரேயானால் அவர் அக்குடும்பத்தைச் சார்ந்தவராகின்றார் என என் தாத்தா கூறுவார். நான் இங்கு இரண்டு வருடங்களாக இருக்கின்றேன், உங்களுக்கு அது புரிகின்றதா?” என்றார் அவர்.
“ஆமாம், நீர் குடும்ப அங்கத்தினர் போன்றவர். சரி, இங்கு நீர் என்ன கற்றுக்கொண்டுள்ளீர்?” என நான் வினவினேன்.
“இங்கு நாங்கள் ஆற்றும் கடமை நமக்குத் தெரிந்த அளவைவிட மிகவும் முக்கியமானதாகும். ஒரு நாள் நான் ஜோர்டான் நாட்டிற்கோ அமெரிக்காவிற்கோ சென்று அங்கு பஹாய் ஆகிவிடுவேன்,” என தொடர்ந்தார்.
“நீர் ஏன் பஹாய் ஆகிட விரும்புகிறீர்?” என நான் வினவினேன்.
“பஹாய்கள், முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்தவர்களிலிருந்து மாறுபட்டுள்ளனர். நீங்கள் நபி முகம்மது மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையை மதிக்கின்றீர்கள். ஆகவே, உங்கள் நம்பிக்கைகள் நல்லதாகவே இருக்கவேண்டும்,” என்றார்.
“பஹாய்களின் நம்பிக்கை என்னவென்பது உமக்குத் தெரியுமா?” என கேட்டேன்.
“நான் நூல்கள் படிக்காததினால் அது குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது ஆனால் அது ஒரு நதியைப் போன்றது. முகம்மது அந்த நதியின் ஒரு பகுதியாவார் ஆனால் நதி நீர் ஓடிச் சென்று பஹாய்’இல் கலக்கின்றது பிறகு நதி கடலைப் போன்று பெரிதாகின்றது. இப்போது நான் காத்திருப்பேன் ஆனால் ஒரு நாள் நான் நிச்சயமாக நூல்கள் படிப்பேன்,” என மேலும் தெரிவித்தார்.
நான் அவருடைய கண்களில் தேடுதல் மற்றும் அறிவுப்பசியைக் காண்கின்றேன். “நீர் இங்கு கடுமையாக சேவையாற்றியுள்ளீர் மற்றும் கடமைகளை செவ்வனே முடித்திட எங்களுக்கு உதவுவதற்காக நிறைய தியாகங்கள் செய்துள்ளீர். இந்த தியாகம் எனும் வார்த்தையை நீர் அறிவீரா?” என நான் கேட்டேன்.
இரண்டு பேனாக்களை மேஜையின் மீது வைத்து, “இதில் நான் உமக்கு ஒரு பேனாவை வழங்கினால் அது தியாகமல்ல ஆனால், நான் இரண்டையுமே உங்களுக்குக் கொடுத்து என்னிடம் ஒன்றுமே இல்லாது போனால், அது தியாகமாகும்,” என்றேன்.
“ஆமாம், இந்த மலையின் நிர்மானங்களை அமைத்திட நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கின்றேன். அவை வெகு அழகுமிக்கவை. இதன் வாயிலாக பஹாய்கள் ஒன்பது நாட்கள் மட்டுமே வருகின்றனர் ஏனெனில் ஒன்பது நாட்களுக்காக அவர்கள் இதை விட்டு வருவதில்லை,” என்றார்.
“நாடால், அது எனக்குத் தெரியும், கடவுள் அதை மறக்கமாட்டார், ஒருநாள் நீர், உமது குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் இத்தியாகங்களுக்கான பிரதிபலன்கள் வழங்கப்படுவீர்கள்,” என நான் கூறினேன்.
“அப்பிரதிபலன்கள் என்னவாக இருக்கும்?” என்றார் அவர்.
“எனக்குத் தெரியாது, கடவுளுக்கு மட்டுமே அது தெரியும்,” என நான் பதிலளித்தேன்.
நீண்ட தாமதத்திற்குப் பிறகு, நாடால் தமது நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து, நீண்ட புன்முறுவலுடன், கண்கள் பிரகாசிக்க, “ஆமாம், நீர் கூறுவது சரியே, இந்த மலையில் ஏதோ ஒன்று உள்ளது, இப்போது நமக்கே தெரியாத ஒன்று அது ஆனால், சுவர்க்கத்தில் அது என்னவென்பதை நாம் தெரிந்துகொள்வோம்,” என்றார்.
“நிச்சயமாக நீர் தெரிந்துகொள்ளத்தான் போகிறீர் நாடால். கடவுள் அதை மறக்கமாட்டார்,” என்றேன் நான்.
“ஆமான் நீர் கூறுவது உண்மை, கடவுள் என்றுமே மறப்பதில்லை.”