BIC ஜெனீவா: ஈரான் நாட்டு ஷிராஸ் நகரில் 10 பஹாய் பெண்கள் தூக்கிலிடப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் “எங்கள் கதை ஒன்று” என்னும் பரப்பியக்கத்திற்கு பல்வேறு பங்களிப்புகளைச் சேகரிப்பதற்கான மையமாக பஹாய் சர்வதேச சமூகம் (BIC) ஒரு புதிய வலைத்தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தைத் தொடங்கியுள்ளது.
உயிருக்கும் மேலாக, ஒருமை, சமத்துவம் மற்றும் நீதி ஆகிய தங்கள் நம்பிக்கை மற்றும் கொள்கைகளைத் தேர்ந்தெடுத்த இந்த பெண்களை நினைவுகூரும் இந்த பிரச்சாரத்திற்குப் பாடல்கள், ஓவியங்கள், கவிதைகள், கிராஃபிக் கலை, கைவினைப் படைப்புகள் மற்றும் பொதுமை நபர்களின் எழுத்துப்பூர்வ அஞ்சலிகள் உள்ளிட்ட ஆதரவு பெருகியுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான BIC பிரதிநிதி சிமின் பஹண்டேஜ் கூறுகையில், “இந்த பிரச்சாரத்திற்கு ஏற்கனவே காணப்பட்ட ஆதரவின் அளவினால் நாங்கள் பெரிதும் நெகிழ்ந்து போயுள்ளோம்.
அவர் மேலும் கூறுகிறார்: “பாலின சமத்துவத்திற்கான ஈரானிய பெண்களின் போராட்டத்தைப் பார்ப்பதற்கான ஒருங்கிணைந்த அழைப்பு அனைவரிலும் எதிரொலிக்கும் அதே கதையின் ஒரு பகுதியாகும் என்பதை இந்த ஆதரவு காட்டுகிறது. நாம் அனைவரும் ஆழமாக ஒருவர் மற்றவருடன் இணைக்கப்பட்டுள்ளோம், நமது கதை இணைக்கப்பட்டுள்ளது, பாலின சமத்துவத்தின் பகிரப்பட்ட விழுமியத்தை நோக்கி நாம் அதே பாதையில் செல்கிறோம், இது இன்று ஈரானில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 10 பஹாய் பெண்களின் கதை ஈரானிய பெண்களின் மீள்திறம் மற்றும் சமத்துவத்திற்கான தியாகத்தின் விரிவடையும் கதையில் ஓர் அத்தியாயமாகும்.
இன்று, ஈரானில் சமத்துவத்தை விரும்பும் ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் இரத்தம், கண்ணீர் மற்றும் காயங்களில், ஷிராஸின் 10 பெண்கள் அனுபவித்த அநீதியின் எதிரொலிகளை நாம் காணலாம்.
கூடுதல் கலை பங்களிப்புகளுக்கான அழைப்பில், திருமதி பஹண்டேஜ் அனைவரையும் ஓர் ஆண்டு கால பிரச்சாரத்தில் சேர அழைப்பு விடுத்தார். BIC ourstoryisone@bic.org மற்றும் ஹேஷ்டேக் (hashtag) #OurStoryIsOne மூலம் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்கிறது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகள், முன்னணி மனித உரிமை வழக்கறிஞர்கள் மற்றும் ஊடக அமைப்புகள் மற்றும் பயிற்சியாளர்களை ஒன்றிணைக்கும் வரவிருக்கும் நிகழ்வுகள் உலகளவில் திட்டமிடப்பட்டுள்ளன. 10 பெண்களின் மரணதண்டனையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் பற்றிய கூடுதல் பின்னணி மற்றும் இந்த பெண்கள் ஒவ்வொருவரையும் பற்றிய சுருக்கமான சுயவிவரங்களை இந்த பிஐசி கட்டுரையில் காணலாம்.
பஹாய் உலக மையம் — செய்தி சேவையின் சமீபத்திய கதை, பஹாய் உலக மையத்தில் ஆலோசகர்கள் கண்ட வாரியங்களின் மாநாட்டின் போது பதிவுசெய்யப்பட்ட தொடர்ச்சியான பாட்காஸ்ட்களை (podcast) அறிமுகப்படுத்தியது. பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தங்கள் அண்டைப்புறங்களிலும் கிராமங்களிலும் சமூக தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கும் விதங்களை பாட்காஸ்ட்டின் முதல் அத்தியாயம் ஆராய்ந்தது.
இந்த ஒலிபரப்பில், பல ஆலோசகர்கள் உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் பெண்கள் மற்றும் ஆண்களிடையே சமத்துவ கலாச்சாரத்தைப் பேணுவதற்கான பஹாய் முயற்சிகளைப் பற்றி விவாதிக்கின்றனர். இந்த உரையாடலில் ஆலோசகர்களான இந்தியாவைச் சேர்ந்த பாவ்னா அன்பரசன், தான்சானியாவைச் சேர்ந்த அகஸ்டினோ இப்ராஹிம், கென்யாவைச் சேர்ந்த டவுன்ஷென்ட் லிஹாண்டா, உக்ரைனைச் சேர்ந்த யெவ்ஜெனியா பொலுக்டோவா, கேனரி தீவுகளைச் சேர்ந்த ஆர்லாண்டோ ராவெலோ மற்றும் இலங்கையைச் சேர்ந்த நிரோஷினி சாலே ஆகியோர் அடங்குவர்.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பெண்களின் முன்னேற்றத்திற்கு பஹாய் தார்மீக மற்றும் ஆன்மீக கல்வி முயற்சிகள் எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை இந்தக் கலந்துரையாடல் எடுத்துக்காட்டுகிறது. இந்த முயற்சிகளில் பங்கேற்கும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெண் அகதிகளின் பின்னடைவு பற்றி திருமதி பொலுக்டோவா ஓர் அழுத்தமான கதையைச் சொல்கிறார். அவர்கள் சவாலமிக்க சூழ்நிலைகளை எதிர்நோக்கியபோதிலும், பெண்கள் தங்கள் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு மனிதனையும் “விலைமதிப்பற்ற இரத்தினங்கள் அடங்கிய சுரங்கமாகக்” கருதும் பஹாவுல்லாவின் வார்த்தைகளைக் குறிப்பிடுகையில், திருமதி பொலுக்டோவா கூறுகிறார்: “நீங்கள் எங்கிருந்தாலும்… அதிகாரம் என்பது ஓர் அரசு சாரா அமைப்பு உங்களுக்குத் தருவது அல்ல. . உங்களுள் இந்தச் சக்தி உள்ளது. மேலும், மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்தச் சக்தி பன்மடங்காகும்.
ரோம் – சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதில் ஊடகங்களின் பங்கு பற்றிய ஒரு கலந்துரையாடல் அரங்கம், தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ரோம் பத்திரிகையாளர்களை ஈர்த்தது.
இத்தாலியின் பஹாய்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கூட்டம், பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் விழுமியங்களைக் கொண்ட மக்களுக்குப் பொதுவான நோக்கம் மற்றும் கூட்டு அடையாளத்தை உருவாக்க, உள்ளடங்கலான விவரிப்புகள் எவ்வாறு உதவும் என்பதை ஆராய, சுமார் 60 வல்லுநர்களை ஒன்றிணைத்தது.
இத்தாலி பஹாய்களின் பிரதிநிதி ஒருவர் சமூக முன்னேற்றத்திற்கான செய்திகள் மற்றும் ஊடகங்களின் சாத்தியக்கூறுகள் பற்றிய அப்துல்-பஹாவின் வார்த்தைகளை முன்னிலைப்படுத்தி விவாதத்தைத் தொடங்கினார்: “உயர்ந்த எண்ணங்களை வெளியிடுவது வாழ்க்கைத் தமனிகளில் இயங்கும் சக்தியாகும்; அதுவே உலகின் ஆன்மா.”
இந்த நிகழ்வில் பத்திரிகை சுதந்திரத்தை ஊக்குவிக்கும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடக ஆய்வு மையம் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் உள்ளடங்கலான மொழிவுகளை ஊக்குவிப்பதில் அவர்களின் பங்கைப் பற்றி சிந்திக்க பங்கேற்பாளர்கள் அழைக்கப்பட்டனர்.
இந்தச் சந்திப்பு ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் தொழில் மூலம் அமைதியான சமூகங்களை எவ்வாறு பேணலாம் என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்கியது.
கடந்த ஆண்டுகளில் இத்தாலிக்குக் குடியேற்றமானது, புலம்பெயர்ந்தோர் பற்றிய மக்களின் கருத்துகளை வடிவமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிய கேள்விகளை எழுப்புவது மற்றும் சொந்தம் என்னும் கருத்து பற்றிய நீண்டகால பார்வைகளை சவால் செய்யும் நேரத்தில் இந்த விவாதம் வருகிறது.
இப்பிரச்சினை இத்தாலியில் உள்ள வெளிவிவகார அலுவலகத்தால் விவாதத்திற்கான ஒரு ஏட்டில் உச்சரிக்கப்பட்டு, அவ்வேடு கூட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது, இது புவியியல் அல்லது கலாச்சார வரம்புகளுக்கு அப்பால் குடிமைப் பங்கேற்பைப் பற்றிய பரந்த புரிதலைக் கோருகிறது, அவர்கள் பிறப்பின் மூலத்தைக் கருதாமல் பன்முகத்தன்மையை கொண்டாடி, அவர்களின் பங்களிப்பு அரவணைக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
“நாடு மாற்றத்திற்கு உள்ளாகும்போது, ஓர் இடத்திற்கு உரியவர் என்பது தனிப்பட்ட முன்முயற்சியின் உணர்வு, ஒருவருக்கொருவர் அக்கறை, பங்களிப்பு மற்றும் ஆதரவளிக்கும் விருப்பத்துடன் வருகிறது” என அந்த அறிக்கை கூறுகிறது. “மாற்றத்தின் பலக்கிய தன்மையின் (complexity)) கதையைச் சொல்லும் மொழியைப் பயன்படுத்துவதற்கு ஊடகங்கள் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளன மற்றும் இத்தாலியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் மக்களை முன்னணியாளர்கள் என்னும் கருத்தைப் பேணுகின்றன.”
கருத்தரங்கில் பல குழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர், அவர்கள் உள்ளடங்கலான கதைகள் எவ்வாறு இணைக்கும் பாலங்களை உருவாக்கலாம் மற்றும் மக்களை ஒன்றிணைக்கலாம் என்பது குறித்து கலந்துரையாடினர்.
பொது சொற்பொழிவை வடிவமைப்பதில் ஊடகங்களின் பங்கை பங்கேற்பாளர்கள் ஆய்வு செய்யும் போது, மொழி குறித்த கருப்பொருள் கலந்துரையாடல்களில் முக்கிய இடம் வகித்தது. ஊடக மொழிவுகள் எவ்வாறு (இணைக்கும்) பாலங்களை உருவாக்கலாம் மற்றும் மக்களை ஒன்றிணைக்கலாம் என்பது பற்றி பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.
“பாலங்களை உருவாக்கும்” மொழியைப் பயன்படுத்துவது, வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளைக் கொண்ட மக்களிடையே உள்ள தடைகளை உடைத்து, புரிதல், பச்சாதாபம் மற்றும் உள்ளடங்கல்நிலையை (inclusiveness) மேம்படுத்துவதைக் குறிக்கிறது என பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர். மாறாக, “சுவர்களை உருவாக்கும்” மொழியானது பிளவுகளை அதிகரிக்கலாம், ஒரே மாதிரியான கருத்துக்களை வலுப்படுத்தலாம் அல்லது சில குழுக்களை ஓரங்கட்டலாம்.
இத்தாலிய மக்கள்தொகையை அதிகரிக்கும் முறையில் வகைப்படுத்தும் பல்வேறு பின்னணிகளின் வெளிச்சத்தில், ஊடகங்கள் பரந்த அளவிலான முன்னோக்குகளைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியம் குறிப்பாக முக்கியமானது என பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்தனர்.
IDOS ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மரியா பாவோலா நேன்னி, புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட பத்திரிகையாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், அவர்கள் “தப்பெண்ணங்களுக்கு சவால் விடுக்கவும் மொழிவை வளப்படுத்தவும் முடியும்.”
இவ்வொன்றுகூடல் இத்தாலி பஹாய்களால் இணைவாக ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை ஊக்குவிக்கும் ஓர் ஊடக அமைப்பின் பிரதிநிதிகள், ஓர் ஊடக ஆராய்ச்சி மையம் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து வரும் பத்திரிகையாளர்களும் இதில் இருந்தனர்.
அவர் மேலும் கூறியதாவது: “புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட பத்திரிகையாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது நமது நாட்டின் புதிய உறுப்பினர்களைப் பற்றிய நமது புரிதலையும் பிரதிநிதித்துவத்தையும் மேம்படுத்துகிறது. ஒரு கூட்டு அடையாளத்தைப் பேணுவது-நமது நாட்டில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான மிக முக்கிய படியாகும்.
“பன்முக கலாச்சார ஈடுபாட்டிற்கும் திறந்த மற்றும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட மக்களின் முன்னோக்குகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு திறந்தும் இருக்கும் ஒரு புதிய சொல்லாடலை உருவாக்கும் குறிக்கோளுடன் இந்த உரையாடலை நாம் முடித்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.” இதற்கு உள்ளூர் செய்திகளின் பங்கு மற்றும் நாட்டின் ஊடக வெளியீட்டில் அடிக்கடி தொலைந்து போகும் பல்வேறு குரல்கள் மற்றும் கதைகளைப் பெருக்குவதற்கான அதன் திறனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்தனர்.
நியூயார்க்—மே 25 அன்று ஏமனின் சானாவில் பஹாய்களின் அமைதியான கூட்டத்தின் மீது ஹௌத்தி ஆயுததாரிகள் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 17 பேரைக் கைது செய்து, வலுக்கட்டாயமாக அவர்களைக் காணடித்துள்ளனர். அந்த நாட்டில் கடுமையாக துன்புறுத்தப்பட்ட மத சமூகத்திற்கு ஏற்பட்ட சமீபத்திய அடியில் இருந்து ஏமன் பஹாய்களை இந்தத் தாக்குதல் தடுமாறச்செய்துள்ளது. பஹாய் சர்வதேச சமூகம் (BIC) தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கிறது.
சமீபத்திய தாக்குதலின் வீடியோ (இணைப்பு வெளிப்புறமானது) ஸூம் மூலம் பஹாய்கள் கூட்டத்தில் சேர்ந்தனர்.
“அரபு மண்டலம் முழுவதும், காலாவதியான சமூக வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அமைதியான சகவாழ்வை மேம்படுத்தி, எதிர்காலத்தை நோக்கிய அரசாங்கங்கள் சமாதானத்தை நோக்கிச் செயல்படுவதை நாங்கள் காண்கிறோம்” என ஐக்கிய நாடுகள் சபைக்கான BIC-யின் முதன்மைப் பிரதிநிதி பானி டுகால் கூறினார். “ஆனால் சனாவில் நடைமுறையில் உள்ள ஹௌத்தி அதிகாரிகள் எதிர் திசையில் செல்கிறார்கள், மத சிறுபான்மையினரை துன்புறுத்துவதை இரட்டிப்பாக்கி, அமைதியான மற்றும் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக வெட்கக்கேடான ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஹௌத்திகள் பஹாய்கள் மற்றும் பலரின் மனித உரிமைகளை மீண்டும் மீண்டும் மீறியுள்ளனர், அது நிறுத்தப்பட வேண்டும்.
சமூகத்தின் தேசிய ஆளும் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக பஹாய்கள் குழு ஒன்று ஒரு தனியார் இல்லத்தில் கூடியிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையானது மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ், மத மற்றும் சமூக விவகாரங்களை ஒன்றுகூடி நடத்துவதற்கான உரிமையை தெளிவாக மீறுவதாகும்.
பஹாய் சயமத்தில் மதகுருக்கள் இல்லை மற்றும் அவர்களின் சமூகங்களின் ஆன்மீக மற்றும் லௌகீக தேவைகளுக்குப் பணியாற்றிட ஆண்டுதோறும் சபைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஏமனில் உள்ள பஹாய்கள் பல ஆண்டுகளாகக் கைதுகள், சிறைவாசங்கள், விசாரணைகள், சித்திரவதைகள் மற்றும் பஹாய்களுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்றிய ஹௌத்திகளின் கைகளில் வன்முறைக்கான பொதுத் தூண்டுதல்களை அனுபவித்துள்ளனர். பல ஏமன் பஹாய்கள் தங்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 24 பஹாய்களுக்கு எதிரான முந்தைய வழக்கை அரசாங்கம் இன்னும் தள்ளுபடி செய்யவில்லை.
“ஏமனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதும், ஹௌத்தி அதிகாரிகள் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக வன்முறையான துன்புறுத்தல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதை நாங்கள் காண்கிறோம்” என திருமதி டுகால் கூறினார். “இந்த வன்முறை, நியாயப்படுத்த முடியாத தாக்குதலில் கைது செய்யப்பட்ட 17 அல்லது அதற்கு மேற்பட்ட அப்பாவி பஹாய்களின் விடுதலையில் தொடங்கி, அனைத்து ஏமன் குடிமக்களின் மனித உரிமைகளையும் மதிக்குமாறு ஹௌத்திகளை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம் இப்போது அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும். ஏமன் பஹாய்கள் தங்கள் நாட்டிற்குச் சேவை செய்ய விரும்புகிறார்கள், அதன் தற்போதைய சவால்களை சமாளிக்க உதவுகிறார்கள், மேலும் அதன் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு வேலை செய்ய விரும்புகிறார்கள். இந்த நல்ல தருணத்தில், ஹௌத்தி அதிகாரிகள் இந்த வெட்கக்கேடான வழியில் செயல்படுவது தயரமூட்டுவதாக இருக்கின்றது.
பஹாய் சமூகத்தின் தேசிய ஆளும் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக பஹாய்களின் ஒரு குழு ஒரு தனியார் இல்லத்தில் கூடியிருந்தபோது ஏமனின் சானாவில் தாக்குதல் நடத்தப்பட்டது.
நியூயார்க்—மே 25 அன்று ஏமனின் சானாவில் பஹாய்களின் அமைதியான கூட்டத்தின் மீது ஹௌத்தி ஆயுததாரிகள் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 17 பேரைக் கைது செய்து, வலுக்கட்டாயமாக அவர்களைக் காணடித்துள்ளனர். அந்த நாட்டில் கடுமையாக துன்புறுத்தப்பட்ட மத சமூகத்திற்கு ஏற்பட்ட சமீபத்திய அடியில் இருந்து ஏமன் பஹாய்களை இந்தத் தாக்குதல் தடுமாறச்செய்துள்ளது. பஹாய் சர்வதேச சமூகம் (BIC) தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கிறது.
சமீபத்திய தாக்குதலின் வீடியோ (இணைப்பு வெளிப்புறமானது) ஸூம் மூலம் பஹாய்கள் கூட்டத்தில் சேர்ந்தனர்.
“அரபு மண்டலம் முழுவதும், காலாவதியான சமூக வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அமைதியான சகவாழ்வை மேம்படுத்தி, எதிர்காலத்தை நோக்கிய அரசாங்கங்கள் சமாதானத்தை நோக்கிச் செயல்படுவதை நாங்கள் காண்கிறோம்” என ஐக்கிய நாடுகள் சபைக்கான BIC-யின் முதன்மைப் பிரதிநிதி பானி டுகால் கூறினார். “ஆனால் சனாவில் நடைமுறையில் உள்ள ஹௌத்தி அதிகாரிகள் எதிர் திசையில் செல்கிறார்கள், மத சிறுபான்மையினரை துன்புறுத்துவதை இரட்டிப்பாக்கி, அமைதியான மற்றும் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக வெட்கக்கேடான ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஹௌத்திகள் பஹாய்கள் மற்றும் பலரின் மனித உரிமைகளை மீண்டும் மீண்டும் மீறியுள்ளனர், அது நிறுத்தப்பட வேண்டும்.
சமூகத்தின் தேசிய ஆளும் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக பஹாய்கள் குழு ஒன்று ஒரு தனியார் இல்லத்தில் கூடியிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையானது மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ், மத மற்றும் சமூக விவகாரங்களை ஒன்றுகூடி நடத்துவதற்கான உரிமையை தெளிவாக மீறுவதாகும்.
பஹாய் சயமத்தில் மதகுருக்கள் இல்லை மற்றும் அவர்களின் சமூகங்களின் ஆன்மீக மற்றும் லௌகீக தேவைகளுக்குப் பணியாற்றிட ஆண்டுதோறும் சபைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஏமனில் உள்ள பஹாய்கள் பல ஆண்டுகளாகக் கைதுகள், சிறைவாசங்கள், விசாரணைகள், சித்திரவதைகள் மற்றும் பஹாய்களுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்றிய ஹௌத்திகளின் கைகளில் வன்முறைக்கான பொதுத் தூண்டுதல்களை அனுபவித்துள்ளனர். பல ஏமன் பஹாய்கள் தங்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 24 பஹாய்களுக்கு எதிரான முந்தைய வழக்கை அரசாங்கம் இன்னும் தள்ளுபடி செய்யவில்லை.
“ஏமனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதும், ஹௌத்தி அதிகாரிகள் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக வன்முறையான துன்புறுத்தல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதை நாங்கள் காண்கிறோம்” என திருமதி டுகால் கூறினார். “இந்த வன்முறை, நியாயப்படுத்த முடியாத தாக்குதலில் கைது செய்யப்பட்ட 17 அல்லது அதற்கு மேற்பட்ட அப்பாவி பஹாய்களின் விடுதலையில் தொடங்கி, அனைத்து ஏமன் குடிமக்களின் மனித உரிமைகளையும் மதிக்குமாறு ஹௌத்திகளை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம் இப்போது அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும். ஏமன் பஹாய்கள் தங்கள் நாட்டிற்குச் சேவை செய்ய விரும்புகிறார்கள், அதன் தற்போதைய சவால்களை சமாளிக்க உதவுகிறார்கள், மேலும் அதன் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு வேலை செய்ய விரும்புகிறார்கள். இந்த நல்ல தருணத்தில், ஹௌத்தி அதிகாரிகள் இந்த வெட்கக்கேடான வழியில் செயல்படுவது தயரமூட்டுவதாக இருக்கின்றது.
பஹாய் உலக மையம் – பஹாய் உலக மையத்தில் ஆலோசகர்களின் கண்ட வாரியங்கள் மாநாட்டின் போது, இளைஞர்கள் மற்றும் சமூக மாற்றம், பெண்களின் முன்னேற்றம் மற்றும் பஹாய் தார்மீக மற்றும் ஆன்மீக கல்வி முயற்சிகள் குறித்த தொடர்ச்சியான ஒலிபரப்புகளுக்காக (podcasts) பஹாய் உலக செய்தி சேவையால் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் பல ஆலோசகர்கள் இணைந்தனர். .
இந்த முதல் பகுதியில், ஸாம்பியாவைச் சேர்ந்த ஆலோசகர்களான முசோண்டா கபுசா-லின்செல், கிரீஸைச் சேர்ந்த ஷிரின் யூசுபியன் மானியன், இத்தாலியைச் சேர்ந்த ரஃபேல்லா கபோஸி, சமோவாவைச் சேர்ந்த பாப் அலே, அஸர்பைஜானைச் சேர்ந்த குல்னாரா எய்வசோவா மற்றும் கனடாவில் இருந்து அயாஃபர் அயாஃபர் ஆகியோரிடமிருந்து எவ்வாறு உலகம் முழுவதும் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் சமுதாய தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கின்றனர் என்பது குறித்த நுண்ணறிவுகளை நாம் செவிமடுப்போம்.
கலந்துரையாடலில், திருமதி யூசுபியன் மானியன், ஒவ்வொரு மனிதனின் உள்ளார்ந்த உன்னதத்தை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இளைஞர்கள் குறித்த ஓர் அழுத்தமூட்டும் பார்வையுடன் ஆரம்பிக்கின்றார். இளைஞர்களை ஓர் எதிர்மறையான வெளிச்சத்தில் காட்டி, அவர்களை கலகக்காரர்கள் அல்லது அக்கறையற்றவர்கள் என முத்திரை குத்தி, நடைமுறையில் இருக்கும் கருத்துகளுக்கு அவர் சவால் விடுகிறார். அவர் கூறுகிறார்: “இருப்பினும் நாம் அனைவரும் பார்த்திருப்போம்… [இளைஞர்களுக்கு] அறிவு மற்றும் கற்றல் மீதான இந்தத் தாகம் எப்படி இருக்கிறது என்பதை. அவர்கள் ஒரு சிறந்த உலகத்திற்கு பங்களிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கும் நீதியின் மீது ஆர்வம் உள்ளது. இளைஞர்கள் தங்கள் சுஅண்டைப்புறங்கள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வாய்ப்பை வழங்கும்போது, அதன் விளைவுகள் வியக்க வைக்கின்றன என அவர் மேலும் கூறுகிறார்.
ஆலோசகர்கள் பஹாய் சமூகத்தில் கற்றலை ஊக்குவிப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பஹாய் ஆன்மீகக் சபைகளுக்கு ஆதரவளிக்கவும், சமூக வாழ்க்கையின் துடிப்பான வடிவத்தை மேம்படுத்தவும் பணியாற்றுகின்றனர். ஆலோசகர்கள் அமைப்பின் மூலம், உலகின் மிகத் தொலைதூர இடங்களிலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்கள், பஹாவுல்லாவின் போதனைகளைத் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அறிவூட்டவும், வளப்படுத்தவும் முடியும்.
நமது எண்ணங்கள் நமது சுய அடையாளத்தின் வடிவமைப்பில் பங்களிக்கின்றன. நிச்சயமாக! நமது நம்பிக்கைகள், அணுகுமுறைகள், மதிப்புகள் மற்றும் நடத்தைகளில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் நமது அடையாளத்தை வடிவமைப்பதில் நமது எண்ணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம்மைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் எண்ணங்கள் நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகள் பற்றிய நமது உணர்வுகளையும் விளக்கங்களையும் வடிவமைக்கின்றன.
நாம் தொடர்ந்து சில சிந்தனை வடிவங்களில் ஈடுபடும்போது, அவை நம் மனநிலையில் பதிந்து, நம் சுய உருவத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, நமது திறமைகள் மற்றும் செயல்திறனைப் பற்றி நாம் தொடர்ந்து நேர்மறையாகச் சிந்தித்துப் பார்த்தால், அது உறுதியான மற்றும் நம்பிக்கைமிக்க அடையாளத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்கும். மாறாக, நம்மைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை நாம் தொடர்ந்து கொண்டிருந்தால், அது குறைந்த சுயமரியாதை மற்றும் எதிர்மறையான சுய கருத்துக்கு வழிவகுக்கும்.
நமது எண்ணங்கள் நமது முடிவெடுக்கும் செயல்முறையையும் பாதிக்கின்றன. நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகள், அவை நமது எண்ணங்களால் வடிவமைக்கப்படுகின்றன; அவை நாம் செய்யும் தேர்வுகள் மற்றும் நாம் எடுக்கும் செயல்களுக்கு வழிகாட்டுகின்றன. இந்தத் தீர்மானங்கள், நமக்கு ஏற்படும் விளைவுகளுக்கும் அனுபவங்களுக்கும் பங்களிக்கின்றன, மேலும் நமது அடையாளத்தை வடிவமைக்கின்றன.
மேலும், நமது எண்ணங்கள் மற்றவர்களுடனான நமது உறவைப் பாதிக்கலாம். மற்றவர்களைப் பற்றி நாம் சிந்திக்கும் விதம் மற்றும் அவர்களுடன் நாம் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதைப் பாதிக்கின்றன. நேர்மறை மற்றும் பச்சாதாபமான எண்ணங்கள் ஆரோக்கியமான உறவுகளைப் பேணும், அதே சமயம் எதிர்மறை அல்லது முன்தீர்மானிக்கும் எண்ணங்கள் தொடர்புகளையும் புரிதலையும் தடுக்கலாம்.
எண்ணங்கள் செல்வாக்கு செலுத்தும் போது, அவை மட்டுமே நம் அடையாளத்தை தீர்மானிப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மரபியல், வளர்ப்பு, வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சமூக சூழல் போன்ற பிற காரணிகளும் நாம் யார் என்பதை வடிவமைப்பதில் பங்களிக்கின்றன. ஆயினும்கூட, நம் எண்ணங்கள் நம்மையும் உலகையும் பார்க்கும் ஒரு கண்ணாடியை வழங்குகின்றன, மேலும் அவை நம் அடையாளத்தின் வளர்ச்சி மற்றும் வெளிப்பாட்டைக் கணிசமாக பாதிக்கின்றன.
இப்போது விஷயத்திற்கு வருவோம். நம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் நாம் நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால், நமது எண்ணங்களுக்கு ஓர் அடிப்படை வேண்டும். நாம் எதைப் பற்றி சிந்திக்கின்றோம், என்பதைத் தீர்மானிப்பதில் நமது வாழ்க்கைச் சூழ்நிலையும் பங்களிக்கின்றது. பரம ஏழை, தன் அன்றாட உணவை, தன் வாழ்க்கைத் தேவைகளை எங்கிருந்து பெருவது என சிந்திக்கின்றான். ஓர் அரசியல்வாதி தன் அரசியல் வாழ்வை எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திக்கின்றான். ஒரு குடும்பத் தலைவன் தன் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்றான், அவன் வாழ்க்கையும் அதன்வழியே செல்கிறது. எப்போதும் பயந்துகொண்டிருப்பவன் தன் பயத்தின் அடிப்படையில் தன் வாழ்க்கையை வடிவமைக்கின்றான்.
அப்படியாயின், நாம் ஒரு முழுமையான மனிதனாக, முறையான சிந்தனையுடன் வாழ வேண்டுமானால் என்ன செய்வது? முதலாவது, நாம் யார், இந்த உலகில் எதற்காக விடப்பட்டுள்ளோம் என்பதற்கான பதில்களைத் தேட வேண்டும். அதாவது நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதற்கான பதிலை பஹாவுல்லா கீழ்கண்ட திருவாக்குகளில் வழங்குகிறார்: “என் கடவுளே, உம்மை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப்படைத்திருக்கின்றீர் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன்…” யான் உன்னை உயர் பண்பினனாய்ப் படைத்துள்ளேன், இருந்தும் நீயே உன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ளாய். எதற்காக நீ படைக்கப்பட்டாயோ அதன்பால் உயர்வாயாக.
அதாவது கடவுளை அறிந்துகொள்ளவும், அவர் வழி நடப்பதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம் என இவ்வாசகம் தெரிவிக்கின்றது. நமது எண்ணங்களுக்கு ஒரு வழிகாட்டியை இவ்வாசகத்தில் நாம் காணலாம். அவ்வாறெனில், நமது சிந்தனைகளும் செயல்களும் இதை ஒட்டியே இருக்க வேண்டும். நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தின் வழி நமது சிந்தனைகள் இருக்குமாயின், அச்சிந்தனைகளே நமது அடையாளத்தை வடிவமைக்கின்றன. அதுவே நமது உண்மையான அலையாளமாகவும் இருக்க வேண்டும்.
பஹாய் உலக மையம் – உலக நீதிமன்றம் மூன்று புதிய பஹாய் வழிபாட்டு இல்லங்களை ஸ்தாபிப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது—காஞ்சன்பூர், நேபாளம் மற்றும் ஜாம்பியாவின் ம்வினிலுங்கா ஆகிய இடங்களில் உள்ள உள்ளூர் கோயில்கள்; கனடாவில் ஒரு தேசிய ஆலயம்.
இந்தச் செய்தி 2012-இல் நீதிமன்றம் முதல் தேசிய மற்றும் உள்ளூர் வழிபாட்டு இல்லங்கள் ஸ்தாபிக்கப்படுவதை அறிவித்த வரலாற்றுத் தருணத்தைப் பின்பற்றி வருகின்றது.
உலகம் முழுவதுமுள்ள பஹாய் கோவில்கள்
வழிபாட்டு இல்லம் — பஹாய் திருவாக்குகளில் ஒரு மாஷ்ரிகுல்-அஸ்கார் என குறிப்பிடப்படுகிறது, அதாவது “கடவுள் வாழ்த்தின் உதயபீடம்” — சமூகத்தின் இதயத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அனைவருக்கும் திறந்திருக்கும், இது பிரார்த்தனை மற்றும் தியானமும் சமூகத்திற்கான சேவையை ஊக்குவிக்கும் இடம்.
வழிபாட்டு இல்லங்கள் ஸ்தாபிக்கப்படுவது உலகளாவிய பஹாய் சமூகங்களின் வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒரு வட்டாரத்தில் வளர்ந்து வரும் பக்தி மனப்பான்மையனது சமூக நல்லிணக்கத்தைப் பேணும் பிரார்த்தனைக் கூட்டங்களிலும், மனிதகுலத்திற்குச் சேவை செய்வதற்கான திறனை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்வித் திட்டங்களிலும் வெளிப்படுகிறது. லௌகீக மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் சமூகங்களில் வழிபாடு மற்றும் சேவையின் இந்த பரஸ்பர தொடர்பு குறிப்பாக வெளிப்படுகிறது.
ஸாம்பியாவில், சமுதாய சேவைக்கான திறனாற்றலை உயர்த்தும் பஹாய் கல்வி முயற்சிகள், அனைத்து வயதினரையும் பல்வேறு பின்னணியில் உள்ள மக்களையும் அதிக ஒற்றுமையைப் பேணும் முயற்சிகளில் ஈடுபடுத்துகிறது.
இந்த முயற்சிகள் தழைத்தோங்கும் உள்ளூர்களில், ஒற்றுமைக்கான அதிக மதிப்புணர்வு பேணப்படுகிறது. வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை ஆராய்வதன் மூலம் எல்லாப் பின்னணியிலிருந்தும் மக்கள் பகிரப்பட்ட நோக்கத்தைக் காண்கிறார்கள். அந்நியர்கள் நண்பர்களாக மாறுகிறார்கள், நம்பிக்கையான எதிர்காலத்தைப் பற்றிய அவர்களின் தொலைநோக்கு, ஒருவர் மற்றவரைப் பற்றி மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது, அதே நேரத்தில் அவர்களின் சமூகத்தின் சமுதாய மற்றும் பொருளாதாரத் தேவைகள் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படும்.
தங்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்கான இந்த சமூகத்தின் திறனாற்றல் விரிவடைவதால், நாளடைவில் ஒரு பஹாய் வழிபாட்டு இல்லம் உருவாகும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இந்தப் புனித கட்டிடங்கள் அவற்றைச் சுற்றியுள்ள மக்களுக்குச் சேவை செய்ய சமுதாய, மனிதாபிமான மற்றும் கல்வி நிறுவனங்களைப் பேணுகின்றன.
கனடா முழுவதும், சமூக மேம்பாடை ஊக்குவிக்கும் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையான பார்வையைப் பேணும் பஹாய் சமூகத்தை நிர்மாணிக்கும் முயற்சிகளில் அண்டை வீட்டாரும், சக ஊழியர்களும், நண்பர்களும் பங்கேற்கின்றனர்.
BIC ஜெனிவா – ஜூன் 18, 2023 ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒரு கொடூரமன ஒடுக்குமுறை செயலை மேற்கொண்ட 40 ஆண்டுகளைக் குறிக்கிறது: ஷிராஸ் நகரில் ஒரு பொது சதுக்கத்தில் ஒரே இரவில் 10 பஹாய் பெண்கள் தூக்கிலிடப்பட்டனர். ஒற்றுமை, நீதி, உண்மை ஆகியவற்றுடன் ஈரானில் இல்லாத மற்றும் குற்றமாக்கப்பட்ட பாலின சமத்துவக் கொள்கைகளை ஊக்குவிக்கும் ஒரு சமயத்தில் தங்கள் நம்பிக்கைகளைத் துறக்க மறுத்தது மட்டுமே அவர்களின் ஒரே ‘குற்றம்’.
ஒவ்வொருவராக தூக்கிலிடப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் அடுத்த பெண்ணின் மரணத்தைப் பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களின் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒருவருக்கு வயது 17 மட்டுமே; பெரும்பாலானோர் 20 வயதை கடந்தவர்கள். ஈரானிய அதிகாரிகளின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலால் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைக் குழுக்களும் சாதாரண குடிமக்களும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.
அப்போதிருந்த உலகத் தலைவர்கள், தண்டிக்கப்படவிருக்கும் பஹாய் பெண்களும் ஆண்களும் அவர்களின் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட ஒரு வேண்டுகோள் அலையை வழிநடத்தினர். ஆனால், எந்தப் பயனும் இல்லை.
பஹாய் அனைத்துலக சமூகம் இப்போது தூக்கிலிடப்பட்ட பெண்கள் மற்றும் ஈரானில் பல தசாப்தங்களாக அனைத்து மதங்கள் மற்றும் பின்னணிகளைச் சேர்ந்த பெண்கள் வாழ்ந்த, இன்றுவரை தொடரும் பாலின சமத்துவத்திற்கான நீண்ட போராட்டத்தை கௌரவிப்பதற்காக #OurStoryIsOne என அழைக்கப்படும் ஓர் உலகளாவிய பரப்பியக்கத்தை ஆரம்பிக்கின்றது,
“10 பஹாய் பெண்களின் இந்தக் கதை முடிந்துவிடவில்லை. இது ஈரானிய பெண்களின் மீள்திறம், சமத்துவத்திற்கான தியாகம் ஆகியவற்றின் விரிவடையும் கதையில் ஒரு அத்தியாயம்” என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) பிரதிநிதி சிமின் ஃபஹண்டேஜ் கூறுகிறார்.
திருமதி ஃபஹண்டேஜ் மேலும் கூறுகிறார்: “இன்று, ஈரானில் சமத்துவத்தை விரும்பும் ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் இரத்தம், கண்ணீர் மற்றும் காயங்களில், ஷிராஸின் 10 பெண்கள் அனுபவித்த அநீதியின் எதிரொலிகளை நாம் காணலாம். நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்காக மிகுந்த முயற்சியுடன் எழுந்து நிற்பது என்ற அதே உணர்வை, அதே தேர்வை நாம் காண்கிறோம். கொடுமைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், இன்றைய பெண்கள் – அவர்களுக்கு முன்பு இருந்தவர்களைப் போலவே – ஒரு நியாயமான மற்றும் வளமான ஈரானுக்காக தைரியமாக போராடி வருகின்றனர்.”
சில சந்தர்ப்பங்களில், தூக்கிலிடப்பட்ட பஹாய் பெண்கள் சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் தார்மீகக் கல்வியை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். 19-ஆம் நூற்றாண்டிலிருந்து, ஈரானில் உள்ள பஹாய்கள் பெண்களுக்கான பள்ளிகளை நிறுவுவது உட்பட ஒவ்வொரு மட்டத்திலும் மேற்கொண்ட முயற்சிகள் மூலம் பாலின சமத்துவத்தை ஊக்குவித்துள்ளனர்.
“ஈரானில் உள்ள பஹாய் சமூகம் எப்போதும் முடிவெடுக்கும் செயல்முறைகள் உட்பட சமூகத்தின் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்களின் முழு பங்கேற்புக்கு அழைப்பு விடுத்துள்ளது, அதற்காக பெரும் விலையை கொடுத்துள்ளது” என திருமதி பஹண்டேஜ் மேலும் கூறுகிறார். “இப்போது அனைத்து ஈரானியர்களுக்கும் சோகமாக விரிவுபடுத்தப்பட்டுள்ள 40 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட துன்புறுத்தலைத் தாங்கிக் கொண்ட பஹாய் சமூகம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பொருட்படுத்தாமல், பாலின சமத்துவம், நீதி மற்றும் கல்விக்கான அணுகலை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு புனித பூமியாகக் கருதும் ஈரானுக்குச் சேவை செய்வதற்கான அதன் உரிமையை வலியுறுத்தியுள்ளது.”
10 பெண்கள் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து நான்கு தசாப்தங்களாக, நூற்றுக்கணக்கான பஹாய் பெண்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளனர், பெண்கள் மற்றும் பஹாய்கள் என்பதில் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள். புரட்சிக்குப் பிறகு, நாட்டில் முக்கிய சமூகப் பதவிகளில் பணியாற்றிய பஹாய் பெண்கள் அவர்களது வேலைகளில் இருந்து நீக்கப்பட்டனர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது தூக்கிலிடப்பட்டனர். வாழ விடப்பட்டவர்கள் பல்கலைக்கழகங்கள், பொது வேலை வாய்ப்பு மற்றும் சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தடை செய்யப்பட்டனர்.
ஈரானில் இந்த நீண்டகாலப் போராட்டம் மற்றும் பாலின சமத்துவத்திற்கான முயற்சிகளை கௌரவிக்கும் வகையில், ஷிராஸின் 10 பெண்களின் ஞாபகார்த்தமாகவும், அவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்த நீதி மற்றும் சமத்துவத்திற்கான காரணத்திற்காகவும், BIC இப்போது உலகெங்கிலும் உள்ள கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் அல்லது பிற படைப்புத் துறைகளில் உள்ளவர்களை அஞ்சலி செலுத்த அழைக்கிறது. பங்களிப்புகளில் பின்வருவன அடங்கும்: 10 பெண்களைப் பற்றிய பாடல்கள், அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய சிறு வீடியோக்கள், அப்பெண்களைப் பற்றி ஞாபகங்கள், கிராஃபிக் கலைகள், எழுத்துப் படைப்புகள், சமூக ஊடக இடுகைகள் அல்லது பொது நிகழ்வுகள் மற்றும் அஞ்சலிகள்.
“மேன்மேலும் அதிக ஈரானியர்கள் சமுதாய நீதிக்கான தேடலில் ஒன்றுபட்டு வருகின்றனர். அவர்கள், நாடு எதிர்நோக்கும் பெரும் சவாலான பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்,” என மிஸ் ஃபஹான்டேஜ் கூறுகின்றார். “ஷிராஸின் 10 பஹாய் பெண்களை மட்டுமல்ல, ஒடுக்குமுறையில் எதிரில் தங்கள் விடாமுயற்சியின் மூலம் நாட்டின் சிறந்த எதிர்காலத்தை நிர்மாணித்திட பங்களித்துள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவக் கொள்கையைப் போற்றும் ஈரான் முழுவதும் உள்ள அனைத்துப் பெண்களையும் நாங்கள் ஒன்றாகக் கௌரவிக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்.”
நம்பிக்கை மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் நாம் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளோம் என்பதைக் காட்ட, ஈரானுக்கான நமது கூட்டு முயற்சிகள் மற்றும் தியாகங்கள் மற்றும் எங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்ட அனுபவங்களால் நாம் ஒன்றுபடுவோம். இந்த 10 பெண்களின் மரணதண்டனையை நினைவில் கொள்வது ஈரானில் நீதி மற்றும் பாலின சமத்துவம் பற்றிய உரையாடல்களை வெளிச்சம் போட்டும் வலுப்படுத்தவும் செய்யும் என நம்புகிறோம். நமது கதை ஒன்றுதான், நமது பகிரப்பட்ட இலட்சியங்கள் உணரப்படும் வரை நாம் குரல் எழுப்பிக் கொண்டே இருப்போம்.
10 பெண்களின் மரணதண்டனையைச் சூழ்ந்துள்ள சூழ்நிலைகள் மற்றும் இந்த ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கை பற்றிய கூடுதல் பின்னணியையும் இந்த BIC கட்டுரையில் காணலாம்.