அக்காநகர மேயரும் மதத்தலைவர்களும் சமயநிகழ்ச்சியில் அப்துல்-பஹாவுக்கு மரியாதை செலுத்துகின்றனர்


அக்காநகர மேயரும் மதத்தலைவர்களும் சமயநிகழ்ச்சியில் அப்துல்-பஹாவுக்கு மரியாதை செலுத்துகின்றனர்

19 ஜனவரி 2020

பஹாய் உலக மையம் — கடந்த திங்களன்று, அக்கநகர மேயர், ஷிமோன் லங்க்ரி, மற்றும் நகரத்தின் மத சமூகங்கள் மற்றும் பிற உள்ளூர் அமைப்புகளைப் பிரதிநிதிக்கும் பிரமுகர்கள், அப்துல் பஹாவின் நினைவாலய க்ட்டுமானத்தின் ஆரம்பத்துடன் இணைவாக நடந்த ஒரு மரம் நடும் விழாவில் அப்துல்-பஹாவுக்கு மரியாதை செலுத்த ஒன்றுகூடினர்.

அப்துல் பஹாவின் நினைவாலயம் கட்டப்படவிருக்கும் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி கட்டுமானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது

“பஹாய்களுக்கு, பன்முகத்தன்மை அழகாகும்” என்று திரு லங்க்ரி தமது உரையில் கூறினார். “ஒரு தோட்டத்தின் மலர்கள் மற்றும் தாவரங்கள் போல, பன்முகத்தன்மை அழகை உருவாக்குகிறது என்பது அவர்களின் உலகக் கண்ணோட்டம். இந்த உலகக் கண்ணோட்டம் உண்மையானது என்று நான் கருதுகிறேன், அதை இங்கே அரவணைத்திடவோம்” என்றார்.

புனித சன்னிதி நிர்மானிக்கப்படவிருக்கும் இடத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் யூத, முஸ்லிம், கிறிஸ்தவர், மற்றும் ட்ரூஸ் சமூகத்தினரின் தலைவர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், மற்றும் அப்பகுதியில் கல்வி நிறுவனங்களின் கல்வியாளர்கள் உட்பட சுமார் 50 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பஹாய் அனைத்துலக சமூகத்தின் செயலாளரான டேவிட் ரட்ஸ்டீன், மற்றும் புனித சன்னிதியின் கட்டிடக்கலைஞர் ஹொசைன் அமானட் ஆகியோர் பஹாய் சமூகத்தைச் சேர்ந்த பல பிரதிநிதிகளுள் அடங்குவர்.

புனித அடக்கத்தலம் பற்றிய கருத்தாக்க வடிவமைப்பைப் பார்த்த பின்னர், அப்துல்-பஹா, திரு லங்க்ரி மற்றும் டாக்டர் ரட்ஸ்டீன் ணலும் முன் சில கருத்துக்களை சுருக்கமாக்க வழங்கினர். அந்த ஒலிவமரம் பல ஆண்டுகள் வளரக்கூடிய தோட்டத்தின் ஒரிடத்தில் மரத்தை விருந்தினர்கள் நடவு செய்ய உதவினர்.

1579282315-akka-mayor-religious-leaders-honor-abdulbaha-ceremony-00

ஒலிவமரம் நடப்பட மேயர் அவர்களாலும் (வலம்) டாக்டர் ரட்ஸ்டீன் அவர்களாலும் எடுத்துச்செல்லப்படுகின்றது.

“ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல்-பாஹாவின் ஆவி பிரகாசிக்கிறது. அப்துல் பஹா தங்களின் நகரத்திற்கு மீண்டும் வருகிறார் எனும் மகிழ்ச்சியில் ஒன்றுகூடிய அக்கநகர மக்களின் பல பிரிவினரைப் பார்த்து—இது அவர் இங்கு ஒற்றுமையை உருவாக்கிட எவ்வாறு பணிபுரிந்தார் என்பதை நினைவுகூர்ந்திட வைக்கின்றது”, என்றார் டாக்டர் ரட்ஸ்டீன்.

அப்துல்-பஹாவுக்கு ஒரு புதிய நினைவாலயம்


ஒரு மகத்தான பெருமுயற்சி ஆரம்பிக்கின்றது: அப்துல்-பஹாவின் நினைவாலயத்திற்கான அடித்தள பணிகள் ஆரம்பிக்கின்றன

13 ஜனவரி 2020

Video-1382
அக்காநகரில் அப்துல்-பஹாவின் புனிதவுடலின் இறுதியடக்கத்தலத்திற்கான ஆரம்பக் கட்ட கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன; அதே வேளை விரிவான திட்டமிடல் தொடர்கின்றது

பஹாய் உலக நிலையம் – அப்துல்-பஹாவின் நினைவாலயத்திற்கான பணிகள் ஆரம்பித்துள்ளன. அதற்காக ரித்வான் பூங்காவிற்கு அருகே தேர்வு செய்யப்பட இடம் தயார் செய்யப்பட்டுள்ளது, மற்றும் கட்டிடத்திற்கான அடித்தல கட்டுமானம் மேம்பாடு கண்டுவருகின்றது.

கடந்த ஏப்ரல் ரித்வான் கொண்டாட்டத்தின் போது, பஹாய் உலகிற்கு உற்சாகமூட்டும் ஓர் அறிவிப்பை உலக நீதிமன்றம் செய்தது: அப்துல்-பஹாவின் புனித பூதவுடலுக்கான இறுதி நல்லடக்கத்தலமாக இருக்கப்போகும் ஒரு பொருத்தமான நினைவாலயத்தைக் கட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஒரு தனிச்சிறப்பான ஸ்தானமுடைய ஒருவருக்கு மரியாதை செலுத்தவிருக்கும் ஒரு தனித்தன்மைமிக்க கட்டுமானத்திற்கான கட்டிடக் கலைஞர் குறித்த அறிவிப்பு, வடிவத்தின் கருத்தாக்கம் வெளிப்படுத்தப்படல் ஆகியவற்றின் அறிவிப்புக்குப் பிறகு வந்த மாதங்களில் உற்சாகம் அதிகரித்து வந்துள்ளது.

1578768443-momentous-endeavor-groundwork-shrine-abdulbaha-01
ரித்வான் தோட்டத்திற்கு அருகிலுள்ள அப்துல்-பஹாவின் நினைவாலயத்திற்கான இடம். (ஆகக் கீழே வலப்புறம்)
வில்லைக்காட்சி

இந்த மேம்பாடுகள் நடத்துவரும்போது, சுமார் 29 இடங்களில் ஆய்வுத்துளைகளை உட்படுத்திய, அந்த இடத்தின் தரை அமைப்பு மற்றும் வடிகால் நிலை குறித்த ஒரு தீவிர ஆய்வுடன் கட்டுமானப் பணி ஆரம்பித்தது.

அடுத்து, ஈரம் நிறைந்த குளிர்கால சூழல்களிலும் கனரக யந்திரங்களுடனான பணிகள் தொடர்வதற்கு ஏதுவாக, நினைவாயத்தையும் சுற்றியுள்ள நிலப்பரப்பையும் சூழ்ந்திடக்கூடிய  50 சென்டிமீட்டர் மொத்தமான—170 மீட்டர்கள் குறுக்களவுடன்—இறுக்கப்பட்ட கற்களினால் ஆன ஒரு மேடை அந்த இடம் முழுவதும் பரப்பப்பட்டது. சிமிட்டிப் பதிகால்கள் 15 மீட்டர் ஆழத்திற்கு அடித்திறக்கப்பட்டுள்ளன. அந்த அஸ்திவாரத்தில் மையக் கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகின்றது.

1578768446-momentous-endeavor-groundwork-shrine-abdulbaha-02
அப்துல்-பஹாவின் நினைவாலயம் “அக்காநகர் மற்றும் ஹைஃபாவிலுள்ள புனித நினைவாலயங்களுக்கிடையில் வரையப்பட்ட அரை வட்டத்தில் வீற்றிருக்கவிருக்கும்” என ஏப்ரல் 2019’இல் உலக நீதிமன்றம் அறிவித்தது.
வில்லைக்காட்சி

அதே நேரத்தில், திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டன: வடிவமைப்புக் கோட்பாட்டை நனவாக்கும் விரிவான கட்டிட நிர்மாண மற்றும் நில அமைப்பு பற்றிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதோடு, பொருத்தமான கட்டுமான பொருள்களுக்கான மூலாதாரங்களின் தேடலும் நடைபெற்று வருகின்றது.

தேவைப்படும் அனுமதிகளைப் பெறுவதிலோ, கட்டுமானத் திட்டம் குறித்த அண்டைப் பகுதியினரின் புரிதலைப் பேணுவதிலோ, அந்த இடத்தின் வளமான சரித்திரம் மதிக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதலை உறுதிப்படுத்திட இஸ்ரேலிய தொல்பொருள் ஆணையத்துடன் சேர்ந்து பணிபுரிதல் ஆகியவற்றிக்காக உள்ளூர் ஆணையங்களுடன் உடனுழைத்தல் இன்றியமையாததாக இருக்கின்றது.

வடிவமைப்புப் பணி முழுவதும் சுற்றுச்சூழல் காரணிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியதரைக் கடலின் கரையில் தாழ்வான சமவெளியில் அமைந்துள்ள ரித்வான் தோட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுவர்கள் மற்றும் மண் வேலையால் பாதுகாக்கப்படுகிறது. உயரும் கடல் மட்டங்களை கருத்தில் கொண்டு மைய கட்டிடத்தை பல மீட்டர்கள் உயர்த்தும் ஒரு மெல்லிய சரிவில் உள்ள சமதளத்தில் நினைவாலயம் கட்டப்படும்.

1578768429-momentous-endeavor-groundwork-shrine-abdulbaha-07
அப்துல்-பஹா தமது வாழ்நாளின் இறுதி வருடங்களை ஹைஃபாவிலேயே கழித்து, அங்கு பாப் பெருமானார் நினைவாலயத்தில் ஒரு கல்லறைக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
வில்லைக்காட்சி

அப்துல்-பஹா நான்கு ஆண்டுகாலம் அக்காநகரில் வசித்துவந்தார். தமது தந்தையாரான பஹாவுல்லாவோடு ஒரு கைதியாகவும் நாடுகடத்தப்பட்டவராகவும் அங்கு வந்தார். அங்கு அவர் அனுபவித்த பல துன்பங்கள் மற்றும் பேரிடர்களையும் பொருட்படுத்தாமல், அவர் அக்காநகரைத் தமது இருப்பிடமாக்கியதோடு, அந்த நகரின் மக்களுக்கு, குறிப்பாக அதன் ஏழை மக்களுக்கு சேவை செய்வதில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். விரைவில், அந்த மண்டலம் முழுவதும் அவர் நன்கு அறிமுகமானவராகவும், மரியாதைக்குறியவராகவும் விளங்கினார்.

அப்துல்-பஹா தமது வாழ்நாளின் இறுதி வருடங்களை ஹைஃபாவிலேயே கழித்து, அங்கு பாப் பெருமானாரின் நினைவாலயத்தில் ஒரு கல்லறைக்குள் அடக்கம் செய்யப்பட்டார். நிரந்தரமான நினைவாலயத்திற்கு அவரது பூதவுடல் இடமாற்றம் செய்யப்படும் போது, அக்காநகரில் தமது நிலையான அடையாளத்தை விட்டுச்சென்ற ஒருவரின் மறுவரவை அந்த நகரம் காணும்.

இந்த மகத்தான பெருமுயற்சி குறித்த மேம்பாடுகளை, கட்டுரைகள் மற்றும் சுருக்க செய்திகளின் மூலம் பஹாய் செய்தி சேவை தொடர்ந்து வழங்கி வரும், மற்றும் அவை யாவும் அதன் இணையத்தளத்தின் ஒரு புதிய பகுதியில் திரட்டப்பட்டு வரும்.

மரணம் என்றால் என்ன?


மரணம் என்றால் என்ன?

மனித அறிவினால் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்களுள் மனிதனின் மரணமும் உள்ளடங்கும். ஆனால், மரணம் என்பது ஒரு மனித வாழ்வின் அல்லது உடல் ரீதியான அஸ்தமனம் என அறிவியலாளர்கள் கூறிடுவர். அந்த மனிதனுக்கு அதற்குமேல் உள்ளமை கிடையாது. மருத்துவத்தைப் பொறுத்த வரை மனித மரணத்தில் அறியப்படாத மர்மம் ஏதுமில்லை. ஓர் உடலில் இன்றியமையா அறிகுறிகள், முக்கியமாக இருதய துடிப்பு ஓய்ந்திடும் போது, மூளையில் செயல்பாடுகளுக்கான  அறிகுறி நின்றுவிட்டபோது, அந்த குறிப்பிட்ட நேரத்தில் மரணம் சம்பவித்துவிட்டது என மரணச் சான்றிதழில் மருத்துவர்கள் குறிப்பிடுவர். அது மரணத்தை வரையறுப்பதற்கென பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறை. ஆனால், மனித உடல் என்பது பற்பல உயிரணுக்களால் ஆனது என்பது எல்லாருக்கும் தெரியும். இருதய துடிப்பு நின்றுவிட்டாலும் கூட, அந்த உடலின் ஆக்கக்கூறுகளான உயிரணுக்களும் மரித்துவிட்டன என அறுதியிட்டு கூற முடியாது. உயிரணுக்கள் உடனடியாக இன்றி அவை படிப்படியாகவே மரணிக்கின்றன. இதை அறிவியல் ரீதியில் அறியலாம். இவை அனைத்தும் பௌதீக ரீதியான கூற்றுகளாகும்.

மக்களிடையே, குறிப்பாக இந்து சமயத்தவரிடையே, ஒருவரின் மரணத்திற்குப் பின் அவருக்காக ஒவ்வொரு வருடமும், அவர் இறந்த நாளன்று சமய ரீதியில் விசேஷ பூஜைகள் செய்வது வழக்கம். ஏறத்தாழ நம்மில் எல்லாருமே ஏதோ ஒரு நேரத்தில் இத்தகைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்போம். மருத்துவம் கூறுவது போன்று மரணத்தோடு மனித வாழ்வு முற்றிலும் அழிந்துவிட்டது என்றால் இந்த திவசங்கள் யாருக்காக அல்லது எதற்காக செய்யப்படுகின்றன? இல்லாத ஒருவருக்காக வருடா வருடம் புஜைகளும் பிரார்த்தனைகளும் ஏன் செய்யப்பட வேண்டும்? இறந்தவர் ஏதோ ஒரு நிலையில் இன்னமும் இருக்கின்றார் எனும் நம்பிக்கையே இதற்குக் காரணமாகும்.

பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம் மனித ஆன்மாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மனித உடல் அழிந்தாலும் ஆன்மா அழிவதில்லை என கிருஷ்னர் இந்த அத்தியாயத்தில் போதிக்கின்றார். அதே போன்று உலகின் மிக இளமையான சமயமாகிய பஹாய் சமயமும் இதைத்தான் கூறுகின்றது.

மனிதனுக்கு இரண்டு மெய்நிலைகள் உண்டு. ஒன்று மிருகநிலையிலான அவது உடல். மனித உடலானது எல்லா வகையிலும் மிருகங்களின் உடல் போன்றதே. பசி, தாகம், தூக்கம் போன்ற மிருக இச்சைகள் அதற்கும் உண்டு. மிருகங்கள் போன்றே காலங் கனியும் போது அந்த உடல் உயிரிழப்புக்கு ஆளாகின்றது. அப்படி உடல் அழிந்திடுமானால் ஆன்மா எனக் கூறப்படும் ஒன்று என்னவாகின்றது?

states of existence

எல்லா படைக்கப்பட்ட பொருள்களுக்கும் ஓர் ஆவி உண்டு. இதைக் கனிம ஆவி, தாவர ஆவி, மிருக ஆவி மற்றும் மனித ஆவி எனப் பிரிக்கலாம். ஒரு செடி சருகாகிடும்  போது அதன் தாவர ஆவியும் இல்லாது மறைந்து போகின்றது. ஒரு மிருகம் இறக்கும் போது அதன் மிருக ஆவியும் அதோடு அஸ்தமனமாகிவிடுகின்றது. ஆனால், மனித ஆவி அல்லது மனித ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. அவ்வாறெனில் மரணத்தின் போது மனித ஆன்மா என்னவாகின்றது?

மனிதனின் மெய்நிலை அவனது ஆன்மாவே அன்றி வேறில்லை. உடலுக்கு மாற்றமுண்டு, ஆனால் ஆன்மாவின் மெய்நிலையில் மாற்றம் ஏதும் கிடையாது. மருத்துவ ரீதியில் சுமார் 7 – 10 வருடங்களுக்குள் மனித உடலின் உயிரணுக்கள் யாவும் அழிந்து மறுவுற்பத்தி செய்யப்படுகின்றன. முற்றிலும் ஒரு புதிய உடல் என்றே இதைக் கூறலாம். இந்த செயல்முறை உடலில் உயிர் இருக்கும் வரை நடைபெறுகின்றது. கனிமப் பொருள்கள் உடலாக உருபெறுகின்றன, பின்னர் மரணத்திற்குப் பிறகு அவற்றுக்கிடையிலான ஈர்ப்பு சக்தி அழிந்து அந்த உடல் மீண்டும் கனிம நிலைக்குத் திரும்புகின்றது. ஆனால் ஆன்மா இவ்வித மாற்றத்திற்கு ஆளாவதில்லை. அது பிரிக்கப்பட முடியாத ஓர் அணுவைப் போன்றது. பின்வரும் உதாரணத்தைப் பார்ப்போம்:

இரசாயன ரீதியில் H2O எனப்படும் நீரைப்பார்ப்போம்.

பனிக்கட்டி இந்த H2O’வால் ஆனது. பனிக்கட்டிக்கு உருவம் உண்டு, பரிமாணம் உண்டு. அது குறிப்பிட்ட சில கோட்பாடுகளுக்கு, அகலம், நீளம், உயரம், பாரம் போன்ற பரிமாணங்களைக் கொண்டது. அதற்கு நிலையான உருவம், தின்மநிலை உண்டு. இந்த பனிக்கட்டி கரையும் போது அது நீராகின்றது. இந்த நீர்ம நிலையில் அதற்கு கொள்ளவு உண்டு, ஆனால் இந்த நீர்ம நிலையில் அகலம், நீளம், உயரம் போன்ற பரிமாணங்கள் அதற்குப் பொருந்தாது. அது எந்த பாத்திரத்தில் உள்ளதோ அந்த பாத்திரத்தின் உருவத்தை அடைகின்றது. இது இப்போது திரவ நிலையில் இருக்கின்றது. அடுத்து, இந்த H2O ஆவியாகும் போது, அதன் பரிமாணங்கள் முற்றிலும் வேறுபடுகின்றன. அது தின்மநிலை, திரவநிலை ஆகியவற்றைத் தாண்டி வளிமநிலையை, ஆவிநிலைய அடைந்துள்ளது. வளிம நிலையில் அது போய்ல்ஸ் (Boyle’s Law) கோட்பாட்டிற்குப் கீழ்ப்படிகின்றது. ஆனால், இந்த நிலைகள் யாவற்றிலும் ஒரு விசேஷம் உண்டு. நீரின் உருவம் மட்டுமே வேறுபடுகின்றது ஆனால் அதன் மெய்நிலையில் மாற்றம் ஏதும் இல்லை, அது எந்த நிலையிலும் H2O’வாகவே இருக்கின்றது.

states of existence-1

இந்த உதாரணத்தைப் பயன்படுத்தி நாம் மனித ஆன்மாவின் மெய்நிலையை உணரலாம். ஆன்மா உடல் கொண்டிருக்கும் போது அது கண்ணுக்குப் புலனாகின்றது. அதை நாம் தொட முடியும், உணர முடியும். ஆனால், உடல் மறைந்து ஆன்மா ஆவிநிலையை அடையும் போது அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை, உணரப்படுவதும் இல்லை. ஆனால் ஆன்மா உடல் கொண்டிருந்தாலும், அது ஆவிநிலை அடைந்தாலும், H2O போன்று அதன் மெய்நிலையில் மாற்றம் ஏதும் கிடையாது. சுருங்கக் கூறின் பனிக்கட்டி, நீர், நீராவி அனைத்தும் H2O’வின் நிலைமாற்றங்களே (change of state) மெய்நிலை மாற்றங்கள் அல்ல. அதே போன்று மரணம் என்பது ஒரு நிலைமாற்றமே அன்றி வேறில்லை. ஆன்மா ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலையை அடைகின்றது, ஆனால் H2O போன்று அதன் மெய்நிலை மாறுவதே இல்லை. மரணம் என்பது புலப்படும் நிலையில் இருந்து உணரப்படா நிலையை அடைதலாகும். உடல் மட்டுமே அழிகின்றது, ஆன்மா நித்தியமானது.