கிரீன் ஏக்கரில் விவேகானந்தர்


விவேகானந்தர், சாரா ஃபார்மர் (அவரது இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார்), சார்லஸ் மல்லாய் (நின்று), வெள்ளை தொப்பி மற்றும் கைத்தடியுடன். இது மற்றொரு, இதுவரை அறியப்படாத, விவேகானந்தர் அவரது வகுப்பில் ஒருவருடன் அமர்ந்திருக்கும் படம்…
கிரீன் ஏக்கர் – தங்கும் விடுதி

விவேகானந்தர் 12 ஜனவரி 1863-இல் இந்தியா, வங்காளத்தில் பிறந்தார். இவர் இராமகிருஷ்னரின் பிரதான சீடராவார். 1893-இல் சிக்காகோவில் நடைபெற்ற மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்துகொண்ட பிறகு அமெரிக்கர்களிடையே விவேகானந்தர் மிகவும் பிரபலம் பெற்றிருந்தார். அவரது அமெரிக்க விஜயத்தின் போது, இவர் பஹாய் பள்ளியான கிரீன் ஏக்கரின் நிறுவனரான சாரா ஃபார்மரின் அழைப்பின் பேரில் பல வாரங்கள் கிரீன் ஏக்கள் பள்ளியில் தங்கியிருந்தார்.

இந்தப் பாராளுமன்றத்தில்தான் பஹாய் சமயம் பற்றிய முதல் அறிமுக உரை வழங்கப்பட்டது. இந்தக் கூட்டம் பஹாவுல்லா மறைந்த ஒரு வருடத்திற்குள், அதுவும் சிக்காகோ நகரில் ஏன் நடைபெற்றது என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்க ஒன்றாகும்.

“உலகின் கொலம்பிய கண்காட்சி தொடர்பாக சிக்காகோவில் நடைபெற்ற உலக மதங்கள் பாராளுமன்றத்தில், மேற்கில் முதன் முறையாக பஹாய் சமயம் குறிப்பிடப்பட்டது. சிரியா நாட்டில் பணியாற்றிய ரெவரெண்ட் ஹென்றி ஹெச். ஜெஸ்ஸப் எழுதிய ஒரு கட்டுரையில், 1890-இல் பஹாவுல்லா ஓரியண்டலிஸ்ட் எட்வர்ட் கிரான்வில் பிரவுனிடம் பேசிய வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். “மிகவும் உன்னதமான, கிறிஸ்துவைப் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அச்சொற்களை எங்கள் முடிவுரையாக நாங்கள் மீண்டும் கூறுகிறோம்.”:

“எல்லா தேசங்களும் சமயரீதியில் ஒன்றாகவும், எல்லா மனிதர்களும் சகோதரர்களாகவும் ஆகிட வேண்டும்; மனித புத்திரர்களுக்கிடையே பாசம் மற்றும் ஒற்றுமையின் பிணைப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும்; மதங்களின் பன்முகத்தன்மை நிறுத்தப்பட வேண்டும் மற்றும் இன வேறுபாடுகள் நீக்கப்பட வேண்டும். இதில் என்ன தீங்கு இருக்கிறது? இருப்பினும் இது அவ்வாறே ஆகிடும். இந்த பலனற்ற சண்டைகள், இந்த அழிவுகரமான போர்கள் கடந்து போகும்; ‘அதிமகா சமாதானம்’ வரும். ஐரோப்பாவில் உள்ள உங்களுக்கும் இது தேவைப்படவில்லையா? ஒரு மனிதன் தன் நாட்டை நேசிக்கிறான் என்பதில் பெருமை கொள்ள வேண்டாம்; அவன் தனது இனத்தை நேசிக்கின்றான் என்பதில் அவன் பெருமைகொள்ளட்டும்.”

பஹாய் உலகம், தொகுதி 2, பக். 169.
1893-இல் நடைபெற்ற முதல் மதங்களின் பாராளுமன்றம்

1893-இல் நடந்த முதல் உலக மதங்களின் பாராளுமன்றத்தில், பஹாவுல்லா மறைந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, நன்கு பிரபலமான கிறிஸ்தவ மதப்பிரச்சாரகர் டாக்டர் ஹென்றி எச். ஜெஸ்ஸப், உலக மதங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படலாம் என்பது குறித்த கட்டுரையை எழுதினார். பாராளுமன்றத்தில் நடந்த பிரதான அமர்வின் போது மற்றொரு கிறிஸ்தவ மதகுருவால் வாசிக்கப்பட்ட கட்டுரை, பஹாவுல்லாவின் இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டியது. இது முதன் முதலில் அவரைச் சந்தித்த ஒரே மேற்கத்தியரான பிரிட்டிஷ் ஓரியண்டலிஸ்டும் அறிஞருமான எட்வர்ட் கிரான்வில் பிரவுனினால் பதிவு செய்யப்பட்டது”ஜூலை 28 அன்று, பாஸ்டனின் பிராஹ்மணீய மற்றும் உலகப் புகழ்பெற்ற ஈவினிங் டிரான்ஸ்கிரிப்ட்டில் கிரீன் ஏக்கரில் விவேகானந்தர் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இது நிச்சயமாக ரால்ப் வால்டோ டிரைனினால் எழுதப்பட்டது, அவர் பின்னர் மனோதத்துவ பாடங்களில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராக ஆனார். (அந்த நேரத்தில், அவர் க்ரீனேக்கரில் டிரான்ஸ்கிரிப்ட் என்னும் பத்திரிக்கையின் சிறப்பு நிருபராக இருந்தார், அங்கு அவர் தனக்காக ஒரு பைன்மர குழுமத்தின் விளிம்பில் ஒரு சிறிய அறையை கட்டினார்.) கட்டுரையின் ஒரு பகுதி பின்வருமாறு வாசிக்கப்பட்டது: வெள்ளிக் கிழமை க்ரீனேக்கரில் சில வாரங்களைக் கழிக்கும் இந்தியாவின் விவேகானந்தரால் கூடுதல் விரிவுரை வழங்கப்படும். தொடங்கப்பட்ட இந்த ஐக்கியத்துவ பணியில் அவர் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர், மேலும் ஒவ்வொரு காலையிலும் அவர் அலைபாயும் சிவப்பு நிற ஆடைகள் மற்றும் மஞ்சள் தலைப்பாகை அணிந்து, பரந்த பைன்மரங்களின் அருகே தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து, ஆண்களும் பெண்களுமான, ஆர்வத்துடன் செவிமடுக்கும் குழு ஒன்றினால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம், அவர் அறிவு மற்றும் அனுபவம் என்னும் பொக்கிஷங்களைத் தாராளமாகப் பொழிகின்றார். அதை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற நமக்கு இது ஒரு வளமான வாய்ப்பாகும், மேலும் பல பசித்திருக்கும் உள்ளங்கள் அதைப் பெறவில்லை என்பதுதான் எங்களின் ஒரே வருத்தம். கிரீன்ஏக்கர் மிகவும் நிரம்பியுள்ளது, அருகிலுள்ள அரை டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட குடிசைகள் உள்ளன: இன்னும் இடம் உள்ளது. அனைவருக்கும் இலவசமான விரிவுரைகளில் கலந்துகொள்ள விரும்புவோருக்கு இடமளிக்க நகரவாசிகள் தங்கள் அறைகளைத் திறக்கிறார்கள்.”

கிரீன் ஏக்கர் பள்ளி

ஜூலை 31 அன்று விவேகானந்தர் கிரீன் ஏக்கர் விடுதியில் இருந்து ஹேல்ஸின் மகள்கள் மற்றும் உடன்பிறப்புகளின் மகள்கள் ஆனோருக்கு எழுதினார்: “சத்திரத்தின் மக்கள் ஏறத்தாழ வசதி படைத்தவர்கள், மேலும் முகாம் மக்கள் ஆரோக்கியமானவர்கள், இளைஞர்கள், நேர்மையானவர்கள் மற்றும் புனிதமான ஆண்கள் மற்றும் பெண்கள். நான் அவர்கள் அனைவருக்கும் ஷிவோஹம், ஷிவோஹம் என்னும் (மந்திரத்தைக்) கற்பிக்கிறேன், அவர்கள் அனைவரும் களங்கமில்லாதவர்கள், தூய்மையானவர்கள் மற்றும் எல்லா கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட துணிச்சலுடன் அதை மீண்டும் உச்சரிக்கிறார்கள். பின்னர், 1894-ஆம் ஆண்டு செப்டம்பரில், 1893-ஆம் ஆண்டு சென்னையில் தமது விருந்தோம்பலராக இருந்த திரு. மன்மத நாத் பட்டாச்சார்யாவுக்கு விவேகானந்தர் ஒரு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் அவர்: “சிறிது நேரத்திற்கு முன்பு கிரீன்ஏக்கர் என்னும் இடத்தில் பல நூறு அறிவார்ந்த ஆண்களும் பெண்களும் கூடியிருந்தனர், நான் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அங்கு இருந்தேன். ஒவ்வொரு நாளும் நான் ஒரு மரத்தடியில் நமது இந்து பாணியில் அமர்ந்திருப்பேன், என்னைச் சுற்றியிருந்த புல்லில் என்னைப் பின்பற்றுபவர்களும் சீடர்களும் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு காலையிலும் நான் அவர்களுக்குப் போதிப்பேன், அவர்கள்தான் எவ்வளவு ஆர்வமாக இருந்தனர்.”

விவேகானந்தர் 4 ஜூலை 1902-இல் தமது 39-வது வயதில் காலமானார். இவர் நினைவாக இந்திய அரசாங்கம் 12 ஜனவரியில் அவரது பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக அறிவித்துள்ளது.

இக்கட்டுரை ஒரு சுருக்க விவரமே அன்றி முழுமையானதல்ல. இடம் மற்றும் நேரம் போதாமையின் காரணமாகப் பல விஷயங்கள் இதில் விடுபட்டிருக்கலாம்.

BIC அடிஸ் அபாபா: அமைதியை ஊக்குவிப்பதில் பெண்களின் முக்கிய பங்கை காணொளி ஆராய்கிறது


BIC அடிஸ் அபாபா— பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) அடிஸ் அபாபா அலுவலகம், அமைதியை உருவாக்குவதில் பெண்கள் ஆற்றக்கூடிய முக்கியப் பங்கை ஆராய்ந்து, ‘அமைதியில் பெண்கள்’ என்னும் தலைப்பில் ஒரு சிறு காணொளியை வெளியிட்டுள்ளது.

BIC-யின் பிரதிநிதியான சோலமன் பெலே, பெண்களின் முன்னேற்றத்திற்கும் வளமான மற்றும் அமைதியான சமூகங்களை உருவாக்குவதற்கும் இடையிலான உறவை காணொளி ஆராய்கிறது என கூறுகிறார். “சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும், குறிப்பாகத் தலைமைத்துவப் பாத்திரங்களில் பெண்களின் முழுப் பங்கேற்பு அவசியம்” என அவர் கூறுகிறார்.

டாக்டர் பெலே மேலும் கூறுவாதாவது: “முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் உள்ளடக்குதலைப் பராமரிப்பதற்குப் பெண்களின் திறனாற்றல் அவசியம்.” மக்கள் தொகையில் இந்த ஒரு பகுதியினர் இச்செயல்முறையிலிருந்து விலக்கப்பட்டால் அமைதியை உருவாக்குவது சாத்தியமில்லை என அவர் மேலும் வலியுறுத்துகிறார்.

மனித முயல்வுகளின் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முழுப் பங்கேற்பைத் தடுக்கும் சமூகத்தின் சில அம்சங்களைக் காணொளி ஆராய்கிறது. வீடியோவில் சாப்ரினா ஸெலெக்கெ ஷோட்யாய் குறித்துக்காட்டிய ஓர் உதாரணம் குடும்பம் என்னும் ஸ்தாபனமாகும். “பாராட்டத்தக்க ஒழுக்கங்களும் திறன்களும் பேணப்படும் இடமாகக் குடும்பம் என்னும் அலகை நாம் பார்க்கும் போது அதில் பெண்கள் அமைதியின் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.”

திருமதி. ஸெலெக்கெ ஷோட்யாய், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவக் கொள்கை அங்கீகரிக்கப்படாதபோது, குடும்பத்தில் மக்கள் கற்றுக் கொள்ளும் தீங்கான மனப்பான்மை மற்றும் நடத்தைகளானவை வாழ்க்கையின் பிற துறைகளில் அவர்களின் சமுதாய இடைத்தொடர்புகளைத் தொடர்ந்து பாதிக்கின்றன என விளக்குகிறார். “ஒரு குடும்பம் சமத்துவத்தை அங்கீகரிக்கத் தவறினால், பெண்கள் சமூகத்தில் தாழ்த்தப்படுகின்றனர்.” இது பின்னர் ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறையாக மாறுகிறது என அவர் கூறுகிறார்.

இங்கு காணக்கூடிய குறுகிய காணொளியானது, அடிஸ் அபாபா அலுவலகம் பல ஆண்டுகளாகப் பெண்களின் தனித்துவமான பங்களிப்புகளை முன்னிலைப்படுத்துவதற்காக மேற்கொண்ட பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். மிகச் சமீபத்தில், அலுவலகம் பெண்களுக்குக் பருவநிலை நெருக்கடியின் சமமற்ற தாக்கம் குறித்த கலுந்துரையாடல் மன்றத்தை ஏற்பாடு செய்து நடத்தியது, இந்தச் சவாலுக்கு மத்தியிலும் ஆப்பிரிக்காவில் பெண்கள் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் முன்னணி பங்கை வகிக்கின்றனர் என குறிப்பிட்டார்.

அடிஸ் அபாபா அலுவலகம், அமைதி மற்றும் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சொல்லாடல்கள் தொடர்பான தலைப்புகளை ஆராயும் கூடுதல் வீடியோக்களை வெளியிடும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1640/

பஹாய் உலக வெளியீடு: புதிய கட்டுரைகள் நல்லிணக்கம், அடையாளம், நவீனத்துவம் ஆகியவற்றை ஆராய்கின்றன


19 ஜனவரி 2023

பஹாய் உலக மையம் — இணைய வெளியீடான ‘பஹாய் உலகம்’ மூன்று புதிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

“அடையாளம் குறித்த நெருக்கடி” மனிதகுலத்தின் ஒருமைப்பாடு பற்றிய பஹாய் கொள்கை எவ்வாறு ஒற்றுமைக்கும் பன்முகத்தன்மைக்கும் இடையிலுள்ள தீர்க்க முடியாத பதற்றத்தை தீர்க்க முடியும் என்பதை ஆராய்கிறது. “முரண்பாடாக, மனித ஒருமை குறித்த ஆழமான உணர்வின் தேவை மிகவும் வெளிப்படையாக அதிகரித்திருந்தாலும், ‘நாம்’ மற்றும் ‘அவர்கள்’ என்னும் பிரிவுகள் பெருகி, உலகம் முழுவதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன” என ஆசிரியர் எழுதுகிறார்.

“நல்லிணக்கத்தின் சவாலுக்கு முன்னெழுதல்” என்னும் தலைப்பிலான மற்றொரு கட்டுரை, கனடாவில் காலனித்துவம், இனவெறி ஆகியவற்றின் பாரம்பரியத்தை பகுப்பாய்வு செய்வதுடன், உண்மையான நல்லிணக்கம் உட்குறிக்கின்ற சமூக தன்மைமாற்றத்தின் ஆழமான, பன்முக செயல்முறையை ஆராய்கிறது.

“தன்மைமாற்ற காலமாக நவீனத்துவம்” என்னும் கட்டுரை பின்வரும் கேள்வியைக் கேட்கிறது: “நவீனத்துவம்” மனிதகுலத்தின் கூட்டு வளரிளம் பருவத்தின் ஒரு காலமாக மறுபரிசீலனை செய்யப்பட்டால் என்னவாகும்? அத்தகைய முன்னோக்கு, மனிதகுலத்தின் கூட்டு முதிர்ச்சிக்கு ஏற்ற நாகரிகத்தின் அடித்தளத்தை உருவாக்குவதற்குப் பங்களிக்கும் அறிவாற்றல் செயல்பாடுகளின் புதிய மற்றும் நீண்டகால வடிவங்களுக்கான வழியைத் திறக்கிறது என ஆசிரியர் முன்மொழிகிறார்.

பஹாய் உலக இணையதளம், மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்குத் தொடர்புடைய கருப்பொருள்களை ஆராயும் கட்டுரைகள் மற்றும் நீண்ட வடிவக் கட்டுரைகளின் தொகுப்பை வழங்குகிறது, உலகளாவிய பஹாய் சமூகத்தில் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுவதுடன், பஹாய் சமயத்தின் ஆற்றல்மிக்க வரலாற்றின் மீது பிரதிபலிக்கின்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1639/

உயிர்த்தியாகிகள் – சாலமன் ஃகான்


சாலமன் ஃகான்

(அப்துல்-பஹா, தெய்வீகத் தத்துவம், பக். 47-49)

இரண்டு உயிர்த்தியாகிகளின் கதையைச் சொல்ல விரும்புகிறேன்; ஒருவர் பாரசீக பிரபு, அரச சபையில் பிரபலமானவர், அதிக செல்வம் படைத்தவர், நாடு முழுவதும் அறியப்பட்டவர். அவர் பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் என கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​இந்தப் புகழ்பெற்ற மனிதர் மற்றொருவருடன் சேர்ந்து கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார், உணவோ நீரோ இல்லாமல் சிறையில் தள்ளப்பட்டார். சிறைசெய்யப்பட்ட மூன்றாம் நாள் அவர்களில் ஒருவர் தனக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுக்கும்படி சிறை காவலரிடம் கேட்டார். அவரது பணிவு மனப்பான்மையால் தாக்கம் அடைந்திருந்த, காவலர் அம்மனிதர் கேட்டுக் கொண்டபடி தேநீர் வழங்கினார்; அவருக்கு நன்றி தெரிவித்து, கைதி கூறினார்: “உங்களைத் தொந்தரவு செய்வதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால், இன்றிரவு எங்கள் கோரிக்கைகளுக்கு கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள், நாளை இரவு நாங்கள் கடவுளின் விருந்தினர்களாக இருப்போம்,” என கூறினார்.

நான்காவது நாளன்று அவர்கள் சிறையிலிருந்து வெளியே கொண்டுச் செல்லப்பட்டனர்; இரண்டு கரடிகள் அவர்களுக்கு முன்பாக நடனமாட விடப்பட்டன; அவர்களை அவமானப்படுத்துவதற்காக பல குரங்குகள் கொண்டுவரப்பட்டன. சாலமன் ஃகானும் அவரது நண்பரும் ஓர் அறைக்குள் கொண்டுச் செல்லப்பட்டனர்; அவர்களின் மார்பகங்கள் கிழிக்கப்பட்டு, திறந்தநிலையில் இருந்த துளைகளில் ஒளிரும் மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டன. பாரசீகத்தில் இது சித்திரவதைகளில் ஒரு மிகவும் இழிவான வடிவமாகக் கருதப்படுகிறது.

இது உயிர்த்தியாகி சுலைமான் ஃகானின் (நடுவில்) படம்?

பின்னர் நகர் முழுவதும் ஊர்வலமாகப் புறப்பட்டனர். சாலமன் ஃகான் காவலரைப் பார்த்துக் கூறினார்: “இந்தக் குழப்பநிலைக்கு அவசியமில்லை. எங்கள் மரணத்தைப் பற்றி ஏன் இத்தனை அக்கறை? உண்மையில், இது எங்களின் திருமண விருந்து. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். வாத்தியக் குழுவுடன், ஏராளமானோர் பின்தொடர்ந்து, நகரின் சந்தை மற்றும் தெருக்களில் ஊர்வலமாகச் சென்றனர். மக்கள் அவர்களை நீண்ட ஊசிகளால் குத்தி, “எங்களுக்காக நடனமாடுங்கள்!” என கூறினர். தளராத தைரியத்துடனும் களிப்பு நிறைந்த மகிழ்ச்சியுடனும் அவர்கள் நடந்து சென்றனர்; காலை முதல் மாலை வரை நகரின் வழியாக நடந்து சென்றனர். மெழுகுவர்த்திகள் எரிந்து முடிந்த போது, ​​காவலர்கள் புதிய மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தனர்.

தெஹரான் நகர வாசல்களில் ஒன்று

எல்லா நேரத்திலும் நமது வீரமனதினர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்; அவர்கள் அணிவகுத்துச் செல்லும்போது அவர்கள் வலப்புறத்திலும் இடதுபுறத்திலுமு உள்ள மக்களைப் பார்த்து நகைத்தனர்; விண்ணுலகை நோக்கி முணுமுணுத்தனர். இறுதியில் அவர்கள் நகரின் வெளிப்புற வாயில்களுக்கு வந்தனர்; அங்கு அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டனர்.

தெஹ்ரான் நகரில் நான்கு உயரமான வாயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் உடலின் ஒரு பகுதி வாயில்களின் இருபுறமும் அலங்கரித்தது. உடல் துண்டிக்கப்பட்ட போதும், சாலமன் ஃகான் கடவுளிடம் பிரார்த்தித்தும் மன்றாடவும் செய்தார். இந்தக் காரணத்திற்காக ஓர் எதிரியினால் தொகுக்கப்பட்ட வரலாற்றில் இந்தக் கதை காணப்படுகின்றது; ஏனெனில் அனைத்தும் ஷா மன்னரின் வரலாற்றாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. முடிவில், வரலாற்றாசிரியர் சாலமன் ஃகானைப் பற்றி கூறுகிறார், “இந்த மனிதன் ஒரு தீய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டான்.” கடவுளின் விசுவாசிகள் எவ்வளவு எளிதில் தங்கள் உயிரைக் கொடுக்கின்றனர், அவர்கள் எவ்வளவு சுய தியாகம் செய்கின்றனர், நித்தியமாக உறுதியுடனும்  பற்றுறுதியுடனும் இருக்கின்றனர் என்பதை இந்தக் கதை காட்டுகிறது. எல்-அஃபாவின் அடிவானத்திலிருந்து இந்தத் தியாகிகள் நிலையான நட்சத்திரங்களைப் போன்று எப்போதும் பிரகாசிக்கக்கூடிய பிரதிபலிப்பு சக்தியுடன் கடவுளின் ராஜ்யத்திற்கு அவர்களை ஈர்த்த பஹாவுல்லாவின் ஒளியின் விளைவுதான் இந்த ஒளிபெற்ற ஆன்மாக்கள்.

இயற்கை உலகுடன் ஓர் இணக்கமான உறவை ஊக்குவித்தல்


11 ஜனவரி 2023

சான்டியாகோ, சிலி – சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் தளம் சமீபத்தில் ஓர் ஒன்றுகூடலை நடத்தியது. இது, ஆண்டிஸ் மலைகளில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் முறைமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பாதுகாப்புப் பணித்திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்தது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) மலைத் திட்டம், கோயில் அமைந்துள்ள பென்யலோலன் உட்பட சான்டியாகோ பெருநகரம் மற்றும் வால்பரைசோ பகுதிகளின் இயற்கைச் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கப் பொது மற்றும் தனியார் துறைகளை ஈடுபடுத்தியுள்ளது.

பென்யலோலன் நகர மேயரான கேரொலினா லெய்டாவ் அல்வரெஸ், கோவில் திறக்கப்பட்டதில் இருந்து இப்பகுதியில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் அது ஆற்றியுள்ள பங்கிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். “இந்த மைதானங்களுக்கு ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு… ஏனெனில், இந்த மலையடிவாரங்களை மீட்டெடுப்பதற்கான [பஹாய் சமூகத்தின்] முயற்சிகள் மிகவும் முக்கியமானவை,” என அவர் கூறினார்.

உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி மலைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கருத்தரங்கு குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள்.

GEF திட்டத்தின் பிரதிநிதியான மேக்ஸிமிலியானோ கொக்ஸ் லாரேய்ன் கோவில் தளத்தில் வனப் பராமரிப்புடன் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை நிலைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்: “பூர்வீக தாவரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், பார்வைத் தடைகளைக் குறைப்பதன் மூலமும், சுற்றுச்சூழல் முறைமை மறுசீரமைப்பில் ஈடுபடுவதன் மூலமும், வடிவமைப்பும் நிலதோற்றமும் இயற்கையை ரசிப்பதற்கான ஒரு அமைதியான இடத்தை உருவாக்குகிறது. அதில் நகரம் அமைதியைக் காண்கிறது; பார்வையாளர்கள் இயற்கையுடன் இணைந்திட முடியும். இந்த இணைப்பு அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டுவதுடன் தியானம் மற்றும் பிரதிபலிப்பு நிலையில் கோயிலை அணுகிட உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

மற்ற பங்கேற்பாளர்களில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் துணைச் செயலாளரும், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், GEF மலைத் திட்டம் மற்றும் குடிமை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

அதன் இயற்கைச் சூழலில் சில்லி கோவிலின் ஒரு தோற்றம்

வழிபாட்டு இல்லத்தின் இயக்குநரான வெரோனிகா ஓரே, தமது கருத்துகளில், தளத்தில் நிலைப்படுத்தல் முயற்சிகளுக்கும் அப்பால், பஹாய் சமூகம் மனிதகுலத்தின் ஒற்றுமை போன்ற கொள்கைகளின் அடிப்படையில் ஆன்மீக மேம்பாட்டின் உயிரியல்முழுமை தொலைநோக்கை ஆராயும் உரையாடல்களுக்கான இடங்களை உருவாக்குவதன் மூலம் திட்டத்திற்கு மேலும் ஆதரவளிக்க முயன்றதாக விளக்கினார். .

“இந்தப் பூமியும், அதன் மக்களும், அதன் உயிரினங்களும், தனிமனிதனை உலகின் பொருள் வளங்களில் எப்போதும் அதிகரித்து வரும் பங்கைக் குவிக்க மற்றவர்களுடன் போட்டியிடுகின்ற, முற்றிலும் பொருளாதார மற்றும் சுயநலப் பிரிவாகக் கருதும் லௌகீகவாத மனப்பான்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன,” என அவர் கூறினார்.

பஹாய் வழிபாட்டு இல்லம் எல்லா மக்களுக்கும் திறந்திருப்பதுடன், பிரார்த்தனைகளும் தியானங்களும் சமுதாய சேவையை ஊக்குவிக்கும் ஓரிடமாகவும் அது உள்ளது.

மனிதகுல ஒருமைப்பாடு என்னும் கண்ணாடி வில்லையின் வழி மேம்பாட்டைப் பார்ப்பதன் மூலம், உண்மையான செழிப்பு என்பது அனைத்து மக்களின் செழுமை, நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் கிரகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அதிக தெளிவுடன் காணலாம் என திருமதி ஓரே விளக்கினார். லௌகீக முன்னேற்றம் மட்டும் போதாது. உண்மையான முன்னேற்றம் என்பது தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஆன்மீக மற்றும் தார்மீக வளர்ச்சியையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என இது அறிவுறுத்துகிறது.

சிலியின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரான லூயிஸ் சாண்டோவல், இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பிரதிபலிப்பில், இந்தத் தொலைநோக்கை ஊக்குவிப்பதில், வழிபாட்டு இல்லம் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் கூறுகின்றார். அது “மக்கள் தங்களின் ஆன்மீகத் தன்மையை நோக்கித் திரும்புவதற்கு ஊக்குவிப்பு அளித்துள்ளது.”

பஹாய் கோவில், “சமுதாயத்தின் புதுப்பித்தலுக்காக உழைக்க விரும்புவோரை ஈர்க்கும் இடமாக செயல்பட்டுள்ளது” என திரு. சந்தோவல் கூறுகிறார்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1638/

BIC ஜாக்கார்த்தா: தொழில்நுட்ப மேம்பாட்டில் மதம் நுண்ணறிவுகள் வழங்க முடியுமா


3 ஜனவரி 2023

பஹாய் உலக மையம் – பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) ஜாக்கார்த்தா அலுவலகம், சமுதாய மேம்பாட்டிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறது. மிக சமீபத்தில் இந்தோனேசியா, பாலியில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசியாவின் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் (SEAFORB) குறித்த மாநாட்டிலும் இது நடைபெற்றது.

வருடாந்திர சர்வமத மன்றம் பொது அக்கறை சார்ந்த பிரச்சினைகளை ஆராய்ந்திட, அரசாங்க அதிகாரிகள், மத சமூகங்களின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் குடிமை சமூக நடவடிக்கையாளர்களை ஒன்றுகூட்டியது. இந்த ஆண்டு, பங்கேற்பாளர்கள் மத சுதந்திரம் குறித்த இணையவழி தகவல் தொடர்பு மற்றும் சமுதாய ஊடக உலகில் விரைவான மாற்றங்களின் தாக்கத்தை ஆராய்ந்தனர்.

ஒரு குழு கலந்துரையாடலில், BIC ஜகார்த்தா அலுவலகத்தின் பிரதிநிதியான டெஸ்டியா நவ்ரிஸ், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் நெறிமுறைகளைக் கருத்தில் கொள்வதை மதத்தின் அத்தியாவசிய நோக்கங்கள் எவ்வாறு வளப்படுத்த முடியும் என்பதை ஆராய்ந்தார்.

“[மதத்தின்] நோக்கம் மனித இனத்தின் நலன்களைப் பாதுகாப்பதும், ஒற்றுமையை மேம்படுத்துவதும், அன்பு மற்றும் கூட்டுறவு உணர்வை வளர்ப்பதும் ஆகும். …மதத்தின் வழி வெளிப்படுத்தப்படுபவை தனிப்பட்ட மத நடைமுறைகளுக்கும் மேலானைவயும், மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக நாம் சேவைச் செயல்களை வழங்கும் வழிகளைப் பற்றியதும் ஆகும்.

இந்தோனேசியாவின் பாலியில் 2022 தென்கிழக்கு ஆசிய மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் (SEAFORB) மாநாட்டில் பங்கேற்பாளர் குழு புகைப்படம்.

மிஸ். நவ்ரிஸ், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பல முன்னேற்றங்களுக்கு மூலாதாரமாக இருந்தாலும், தொழில்நுட்ப தயாரிப்புகளில் பொதிந்துள்ள சில மதிப்புகள் மற்றும் அனுமானங்கள், ஒரு தொழில்நுட்ப அமைப்பு அல்லது தீர்வு எவ்வளவு நல்ல நோக்கம் கொண்டதாக இருந்தாலும், அவை எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். “எனவே இந்த அனுமானங்கள் மற்றும் நெறிமுறைகளை நேர்மையாக ஆராய்தல் முக்கியமாகும், அவை பெரும்பாலும் சமூக, தார்மீக அல்லது ஆன்மீக தாக்கங்களைக் கருத்தில் கொள்ளாமல் அடிப்படையில் லௌகீகவாதத்தில் மட்டுமே ஆழமான கருத்தூண்றியவையாக இருக்கின்றன.”

அவர் மேலும் கூறியதாவது: “சந்தேகத்திற்கு இடமின்றி, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு பல முன்னேற்றங்களுக்கு ஆதாரமாக உள்ளது, இது மனித நோக்கத்தையும் திறன்களையும் பெருக்க உதவுகிறது. ஆயினும்கூட, எந்தவொரு கருவியையும் போலவே, அதன் வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டிற்கு அடிப்படையான நெறிமுறைக் கருத்தாக்கங்களைப் பொறுத்து, அது உற்பத்தி அல்லது அழிவுகரமான முறையில் பயன்படுத்தப்படலாம்…தொழில்நுட்பம் முன்னேற்றத்திற்கான வழிமுறையாக இருக்க வேண்டும் என்றால், அது ஒற்றுமை, நீதி போன்ற உன்னத அபிலாஷைகளையும் கொள்கைகளையும் வலுப்படுத்த வேண்டும்.”

சமூக மேம்பாட்டுக்கான ஐநா ஆணையத்தின் 59-வது அமர்வில் வழங்கப்பட்ட நமது விழுமியங்கள் மீதான பிரதிபலிப்புகள்: டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் ஒரு நியாயமான மாற்றம் என்னும் தலைப்பில் BIC-யின் அறிக்கையில் இந்த எண்ணங்கள் மேலும் ஆராயப்பட்டுள்ளன. இந்த அறிக்கை டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் “மனிதகுலத்தின் மிக உயர்ந்த லட்சியங்களைப் பிரதிபலிப்பதான ஓர் உலகிற்கு நீதியுடன் மாற்றப்படுதல்” குறித்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றிய கேள்விகளையும் ஆராய்கிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1637/