கடவுளுக்கு நன்றியுடையோர்களாக இருப்போமாக


(http://tinyurl.com/2eqjyd8)ன் மொழிபெயர்ப்பு

வேலை தேடி அலைவதில் நான் நினைத்ததைவிட சந்தை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்தும், இடத்திற்கு இடம் வேலை காலி இல்லை எனும் அறிக்கைகளை கண்டும், மனம் மிகவும் தளர்ந்து போவது எளிதே. ஆனால், ஏதாவது ஒரு வழி தோன்றும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இழக்காமல் இருப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பிறக்கப்போகும் அவ்வழி நான் எதிர்ர்பார்த்திருந்த வழியாக இல்லாமலும் இருக்கலாம், அதனால் பாதகமில்லை. பின்வரும் திருவாக்குப் பகுதியை சிறிதுகாலமாக நான் படித்துவருகிறேன். அது மனதிற்கு ஆறுதலும் உறுதியும் அளிப்பதாக உள்ளது. மனம் தளர்வடையும் போதெல்லாம் இவ்வரிகளையே நான் சரனடைகிறேன்:

இறைவனின் இராஜ்ஜியத்தின் முன் பிரார்த்தனையோடு பனிந்து நிற்பவனே! தெய்வீக வதனத்தின் அழகு உன் உள்ளத்தை பரவசம் அடையச்செய்துள்ளது, உள்ளார்ந்த விவேகத்தின் ஒளி அதில் முழுமையாக நிறைந்துள்ளது, இராஜ்ஜியத்தின் பிரகாசம் அதனுள் ஒளிவீசுகின்றது. எல்லா சூழ்நிலைகளிலும் கடவுள் உன்னோடு இருக்கின்றார், இவ்வுலகத்தின் மாற்றங்கள் மற்றும் தற்செயல் நிகழ்வுகளிலிருந்து உன்னை பாதுகாக்கின்றார், மற்றும் அவரது வலுமிகு திராட்சை தோட்டத்தில் உன்னை தமது பணிப்பெண்ணாக்கியுள்ளார் என்பதை அறிவாயாக.

உண்மையில், வாழ்க்கையில் நாம் இதற்கு மேலும் வேறு எதைத்தான் வேண்டக்கூடும்? “இவ்வுலகத்தின் மாற்றங்கள் மற்றும் தற்செயல் நிகழ்வுகளிலிருந்து உன்னை பாதுகாக்கின்றார்…” என்பது மனதுக்கு எத்துனை ஆதரவாக இருக்கின்றது. கடவுள் “வாஞ்சைமிக்கவர்” எனும் வார்த்தைகளை சமீபகாலமாக நான் தியானித்து வருகின்றேன். கடவுள் அதி வாஞ்சை மிக்கவர். ஆகவே அவரது படைப்புக்களாகிய நாமும் அவ்வாறே வாஞ்சைமிக்கவர்களாக இருக்கவேண்டும். போட்டி மற்றும் தன்னலம் மிகுந்த இச்சமூக சூழலில் நாம் ஒருவருக்கு ஒருவர் வன்மையாகவும் கடுமையாகவும் நடந்துகொள்கின்றோம். நான் சிறு வயது முதல் என் வாழ்வில் வாஞ்சைமிகு, அன்பான, மென்மை மிக்கோரை பெற்றுள்ளது என் அதிர்ஷ்டமே, மற்றும் நான் என் வாழ்வில் நன்றி நவிலும் விஷயங்களில் இதுவும் ஒன்றே… (மேல்நாடுகளில் கடைபிடிக்கப்படும் நன்றிநவில்தல் நாளை ஒட்டி எழுதப்பட்ட வரிகள்.)

சில்லி நாட்டின் “ஒளிக்கோவில்”


சில்லி நாட்டு “ஒளிக் கோவிலுக்கான” மண் தோண்டும் பணி ஆரம்பமாகிவிட்டது.

28 நவம்பர் 2010

சான்தியாகோ, சில்லி — சில்லி நாட்டின் தலைநகரான சான்தியாகோவில் அமையவிருக்கும் தென் அமெரிக்க கண்டத்திற்கான புதிய பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான மண் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

சில்லி வழிபாட்டு இல்லத்தின் தோற்றம்

கட்டிட மனைக்கான நீண்டகால தேடுதல் முயற்சிக்குப் பிறகும், கட்டிடத்தின் வெளிப்புறத்தில் வேய்வதற்குறிய முற்றிலும் புதிய வகை பொருளை கண்டுபிடிப்பது உட்பட எதிர்பாராத பல தொழில்நுட்ப சவால்களுக்குப் பிறகும், பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆண்டிஸ் மலை அடிவாரத்தில் உள்ள சான்த்தியாகோ நகருக்கு உட்பட்ட சிறுநகராட்சிப் பிரிவான பெஞ்ஞாலோலன் மலைப் பகுதிகளின் ஓரிடத்தில் கோவில் அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

26 நவம்பர் என திகதியிடப்பட்ட உலக நீதி மன்றம் தனது கடிதத்தில், “கண்ட ரீதியான வழிபாட்டு இல்லங்களுள் இறுதியானது நிறுவப்படவிருக்கும் சில்லி நாட்டில் தோண்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்வுகொள்கிறோம்,” என உலக நீதி மன்றம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பஹாய்கள், “அடையப்பட்டுள்ள திருப்புமுனை குறித்து மனமகிழ்வடைவார்கள் …” என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

“இக்கட்டத்தை ‘அடைவதற்கு பல தடங்கல்கள் கடந்துவரப்பட்டுள்ளன,” என உலக நீதி மன்றம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வழிபாட்டு இல்லத்தை வடிவமைத்த ஹரிரி பொன்ட்டாரினி கட்டடக்கலைஞர்கள் எனும் பெயர் கொண்ட கனடா நாட்டு கட்டடக்கலை நிறுவனத்தின் — சியாமாக் ஹரிரி — பெரிதும் களிப்படைந்துள்ளார். “இது பெரிதும் உவப்பளிக்கும் நேரமாகும்,” என அவர் கூறினார். சான்த்தியாகோ நகர் முழுவதும் காட்சியளிக்கக்கூடிய, ஒரு தனிச்சிறப்புமிக்க இடத்தை நாங்கள் அடையாளங்கண்டுள்ளோம். வெளிநாட்டில் இருந்து வருவோர்கூட விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பாக தூரத்தில் இருந்தே அதை காணமுடியும்.

இவ்வட்டாரத்திற்கே பிரத்தியேகமான தாவர வகைகளைக் கொண்ட நீர்த்தோட்டம் சூழ்ந்த இவ் வழிபாட்டு இல்லம், 50 ஹெக்டர் நிலப்பகுதியில் 10 ஹெக்டர் நிலத்தை உள்ளடக்கியதாகும். கட்டடத்தின் அஸ்திவாரத்திற்கான, 30 மீட்டர்கள் அகலம் கொண்டதும் அடிநில பயன்பாட்டு வசதிகளை உள்ளடக்கிய தோண்டும் வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.

ஆங்கிலத்தில் மேற்கொண்டு விவரங்களுக்கு: http://news.bahai.org/story/800

மோனாவின் கனவு – திரைப்படம்


மோனா

ஆயாத்துல்லா கோமேனி இரான் நாட்டை அது வரை ஆண்டுவந்த ஷாவிடமிருந்து கைப்பற்றிய பிறகு நூற்றுக் கணக்கில் பஹாய்கள் கொலை செய்யப்பட்டனர் அல்லது சிறையிலிடப்பட்டனர். குழந்தைகளுக்காக நடத்தி வந்த தனது குழந்தைகள் வகுப்பின் காரணமாக, மோனாவும் மற்றும் பஹாய்கள் எனும் காரணத்தினால் பல பெண்களும் கைது செய்யப்பட்டனர். தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்த அந்த பத்து பேரும் இறுதில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுள் மோனாவே வயதில் மிகவும் சிறியவள். கைது செய்யப்பட்டபோது அவளுக்கு பதினாறே வயது. இன்று உலகம் முழுவதும் பஹாய் சமூகங்களில் மோனா எனும் பெயரை தெரியாதோர் இருக்கமுடியாது. மோனா தனக்கு ஒத்த வயதுடையோர்களுக்கு மட்டுமல்லாது தன்னைவிட வயதில் மூத்தவர்களுக்கும் ஓர் உதாரணமாக திகழ்கிறாள்.

பஹாய் சமயம் அல்லது சமூகங்கள் குறித்த செய்திப்படங்கள் ஏராளமானவை இதுவரை வெளிவந்துள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இத்தகைய படங்கள் நிறையவே ஒளியேறியுள்ளன. பல பஹாய் தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ள திரைப்படங்களும் வெளிவந்துள்ளன மற்றும் பஹாய் நடிகர்கள் இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்களும் உள்ளன. ஆனால் பஹாய் வரலாற்றை மையமாக வைத்து இதுவரை முழுநீழ திரைப்படங்கள் தயாரிக்கப்படவில்லை. முதன் முறையாக இத்தகைய முயற்சி ஒன்று நடைபெற்றுவருகிறது.

மோனாவின் வரலாற்றை திரைப்படமாக்கும் திட்டம் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன் முன்மொழியப்பட்டது. அது குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் அவை இது வரை தீவிரமாக்கப்படவில்லை. ஆனால், இப்போது கிடைத்துள்ள செய்தியின்படி “மோனாவின் கனவு” திரைப்படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. திரைப்படம் அடுத்த வருடம் (2011) ஜூன் மாதத்திற்குள் வெளிவரும் என ஆரூடம் கூறப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கான பட்ஜட் சுமார் 15 மில்லியன் டாலர்களாகும். இதுவரை அதில் பாதி தொகை கைவசம் உள்ளது.

இதுவரை உறுதிபடுத்தப்பட்டு இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகையர் பெயர்கள் பின்வருமாறு:


கீஷா காசல்-ஹியூஸ் (Keisha Castle-Hughes)

இவர்தான் மோனா மாஹ்முட்நிஸாட்டின் பாத்திரமேற்று நடிக்கவிருக்கின்றார்

கீஷா “வேல் ரைடர்” (2002) எனும் திரைப்படத்தின் வாயிலாக பிரபலமடைந்தார். இவர் இப்படத்தின் வாயிலாக அகாடமி அவார்ட் நோமினேஷன் செய்யப்பட்டார். வயது குறைந்தவராக இருந்த போதும் இவர் ஒரு சிறந்த நடிகை என்பதில் சந்தேகமே இல்லை.

ஷோஹ்ரே அக்டஷ்லூ (Shohreh Aghdashloo)

இவர் மோனாவின் தாயாராக நடிக்கவிருக்கின்றார் . மோனாவின் கனவில் நடிப்பதற்காக அனுகப்பட்ட முதல் முன்னனி நடிகை இவராவார்.

காஸ் அன்வர் (Cas Anvar)

இவர் தலைமை விசாரனையாளராக நடிக்கவிருக்கின்றார் . கனடா நாட்டு நடிகரான இவர் பல மேடை நாடகங்களிலும் சினிமா மற்றும் தொலைக்காட்சி திரைப்படங்களிலும் நிறைய நடித்துள்ளவர்.


நாஸானின் அஃப்ஷின்-ஜாம் (Nazanin Afshin-Jam)

இவர் தாஹிரி-யின் பாகத்தில் நடிக்கவிருக்கும் புதுமுகம் . இவர் கனடா நாட்டின் 2003ன் உலக அழகிகளுக்கான போட்டியில் வென்றவர் மற்றும் உலக அழகிகள் போட்டியில் ரன்னர்-அப் ஆகவும் தேர்வு பெற்றவர் மற்றும் இவர் பல சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்.

இத்திரைப்படம் குறித்த அகப்பக்கம்