அவரது காலணிகள்


அருகதைமிகு காலணிகள்…

அப்துல் பஹா இரண்டாவது முறை நியூ யார்க் வந்தபொழுது அவர் கின்னி தம்பதிகளின் இல்லத்தில்தான் தங்கினார், இதே இல்லத்திலிருந்துதான் அவர் ஹைஃபாவுக்கும் திரும்பினார். கப்பல் மூலம் அவர் ஹைஃபா திரும்புவதற்கு முதல் நாள் திரு கின்னிக்கு தமது பொருள்களிலிருந்து பிரியாவிடைப் பரிசாகக் தாம் ஏதாவது கொடுக்க முடியுமாவென அப்துல்-பஹா கேட்டார். முதலில் திரு கின்னி எதையும் தேர்ந்தெடுப்பதற்குத் தயக்கம் காட்டினார், ஆனால் இறுதியில் தமக்கு அப்துல்-பஹாவின் ஒரு ஜோடி காலணிகள் கொடுக்கப்படக்கூடுமா என தெரிவித்தார். கடவுளின் பாதையில் சாந்தமான உறுதிப்பாட்டோடு நடந்திட்ட கால்களை பாதுகாத்த காலனிகள்காலணிகள் அல்லவா? அவற்றைத் திரு கின்னி எல்லாவற்றுக்கும் மேலாக நெஞ்சார நேசிப்பார்.

புன்னகையுடனான அன்புடன், ஒரு ஜோடி காலணிகளை அப்துல் பஹா எட்வர்ட் கின்னியிடம் கொடுத்தார். அவற்றை மெல்லிழைத்தாள்களால் கொண்டு கவனமாகச் சுற்றி தமது படுக்கையறையிலுள்ள ஒரு நிலைப்பேழையின் இழுப்பறையினுள் வைத்தார். பிரத்தியேகமான விலைமதிப்பற்றவையான அவற்றை வெகு அபூர்வமாகவே பிறரிடம் காண்பித்தாலும் தாம் பிரார்த்தனைச் செய்யும் போது மட்டும் அவற்றை  அடிக்கடி தொட்டுக்கொள்வார்.

பிறகு ஒரு நாள், அவற்றை ஒருவரிடம் காண்பிக்க விரும்பினார். அவர் அந்த நிலைப்பேழையருகே சென்று, இழுப்பறையை இழுத்தார், ஆனால் காலணிகள் முற்றாகக் காணப்படவில்லை. மெல்லிழைத்தாளில் அவை இருப்பதற்கான அறிகுறி இல்லை, பிற இழுப்பறைகளிலும் அவற்றின் அறிகுறிகள் இல்லை,  கவனமாகத் தேடியும் அறையின் வேறு  எங்குமே அவற்றின் அறிகுறிகள் இல்லை. காலணிகள் எங்குமே காணப்படவில்லை.

ஆகவே ‘தந்தை’ கின்னி (அவரை நேசித்த நூற்றுக்கணக்கானோருக்கு அவர் ‘தந்தையாகி’ இருந்தார்) பிரார்த்தனைச் செய்ய ஆரம்பித்தார், மிகவும் குழம்பிப்போயிருந்த தமது ஆன்மாவின் ஆழங்களிலிருந்து அவர் பிரார்த்தித்தார். அந்த அன்பார்ந்த காலணிகள் தம்மிடமிருந்து ஏன் பறிக்கப்பட்டன? அவை எங்குதான் சென்றிருக்கக்கூடும்? என்னதான் நடந்திருக்கும்? அவற்றைப் பெற்றிருக்க தாம் தகுதியற்றவராகிவிட்டாரா? இறுதியில், அதுதான் பதில் என்பது அவருக்குத் தெரிந்தது. அவர் அதற்குமேலும் அக்காலணிகளை வைத்திருக்க தகுதியற்றவராகிவிட்டார்.  அப்படியானால் அதற்கான தகுதியை அவர் எவ்வாறு இழந்திருக்கக்கூடும்? அக்காலணிகளை அவர் கடைசியாக தமது கைகளால் தொட்டதிலிருந்து அந்த இடைப்பட்ட காலத்தில் அவை காணாமல் போய்விட்டன என்பதை உணர்ந்த அவர் என்ன தவறு செய்திருக்கக்கூடும்?

எட்வர்ட், கேரி கின்னி தம்பதி

ஏறக்குறைய, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் இருக்கும் என அவர் யூகித்தார். ஆகவே ஒவ்வொரு நாளாக, ஒவ்வொரு மணியாக, ஒவ்வொரு விநாடியாக அவர் அவ்விரண்டு வாரகாலத்தில் ஆழ்ந்து சிந்தித்தார். அவர் தமது செயல்களை நினைவுகூர்ந்தார்; தமது நோக்கங்களை அவர் ஆய்வுசெய்தார்; தமது சிந்தனைகளை மறு ஆய்வுச் செய்தார். பளிச்சென உருவாகிய சிந்தனைத் தெளிவில், அது என்னவென்பது அவருக்குத் தெரிந்தது.  ஆழ்ந்த தன்னலம் மிகுந்த லௌகீகம்; பாசாங்கு நிறைந்த குறிக்கோள்கள்; நியாயமற்ற நடவடிக்கைகள். அவர் இவற்றினாலெல்லாம் குற்றவாளியாக இருக்கின்றார். ஆனால் அவற்றை அழகு நிறைந்த பெயர்களைக் கொண்டு அழைத்து தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டிருந்தார். இப்போதல்லவா தெரிகிறது, ஏன் அக்காலணிகள் காணாமல் போயினவென்று. அவ்விலைமதிப்பற்ற பொக்கிஷங்களைப் பெற அவர் எவ்வகையிலும் தகுதியற்றவர் என்பதை நிரூபித்திருந்தார். பணிவுடனும் வெட்கத்துடனும் தாழ்மையோடும் மன்னிப்புக்காக பிரார்த்தனைச் செய்தார். அதன் பின், சோகத்துடன், நிலைப்பேழை அருகே சென்று காலணிகளைப் பாதுகாத்து வந்த அந்த மெல்லிழைத்தாள்களையாவதுதொட்டிட இழுப்பறையைத் திறந்தார். என்னே ஆச்சரியம்! காலணிகள் இழுப்பறையினுள் இருக்கக் கண்டார். அவை, அங்கு மெய்யாகவும் தெளிவாகவும் காணப்பட்டன; அவரது விரல் நுனிகள் அவற்றின் மென்மையான தோலை ஸ்பரிசித்தன, அவற்றின் நன்கு தேய்ந்திருத்த அடிப்பாகங்கள் தொடுவதற்கு மிருதுவாக இருந்தன. காலனிகள் திரும்பியிருந்தன, ஆனால் அவை வழங்கிய எச்சரிக்கை மறக்கப்படவில்லை – நல்லதொரு பாடம்  கற்கப்பட்டுவிட்டது.

திரு எட்வர்ட் கின்னியால் நியூ யார்க்கில் 1937 கூறப்பட்டது

திருமதி பார்ஸன்


அப்துல் பஹாவின் பண்பியல்புகளையும் செயல்திறன்களையும் ஆய்வு செய்திட உதவக்கூடிய ஒரு கதை இங்கு வழங்கப்படுகிறது.

திருமதி ஏக்னஸ் பார்ஸன்

திருமதி பார்ஸன் என்பார் ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைச் சார்ந்தவராவார். இவர் ஆகஸ்ட் 1912ல் டப்லின், நியூ ஹேம்ப்ஷாயரில் இருந்த தமது எஸ்டேட்டிற்கு வரும்படி அப்துல் பஹாவிற்கு ஓர் அழைப்பு விடுத்தார். கோடைக்காலத்தில், தலைநகர் வாழ்வில் பிரமுகர்களாக இருந்த பலர் திருமதி பார்ஸனின் ஓய்விடத்திற்கு வருகையளிப்பர். திருமதி பார்ஸன் தமது இல்லத்தில் ஒரு மதிய உணவு நிகழ்வை ஏற்பாடு செய்து வாழ்க்கைத் துறைகளில் தனிச்சிறப்புடைய பலரை  அப்துல் பஹாவைச் சந்திப்பதற்காக அழைத்திருந்தார்.

கலாச்சாரம், அறிவியல், கலை, செல்வம், அரசியல், சாதனை — ஆகிய அனைத்துமே அங்கு பிரதிநிதிக்கப்பட்டிருந்தன. சமுதாய தலைவர்களான இவர்களிடம் பஹாவுல்லாவைப் பற்றியும் மனுக்குலத்திற்கு அவர் பிரகடனப்படுத்திய சமயத்தைப் பற்றியும் அப்துல் பஹா அவர்களுடன் உரையாட வேண்டுமென திருமதி பார்ஸன் ஆவலுற்றிருந்தார். விருந்தினர்களும் தாங்கள் ஏதோ ஒரு சொற்பொழிவிற்காகத்தான் வந்திருப்பதாக நினைத்திருந்தனர் போலும். ஆனால் அப்துல் பஹாவோ அவர்களுக்குச் சிரிப்பூட்டும் ஒரு கதையை மட்டும் சொன்னார். அவர்களும் அப்துல் பஹாவின் உதாரனத்தைப் பின்பற்றி பல வேடிக்கைக் கதைகளைக் கூறியபோது அப்துல் பஹாவும் அவர்களுடன் சேர்ந்து வயிறு குலுங்கச் சிரித்தார். அவ்வுணவு நிகழ்வின் போது அப்துல் பஹாவும் அவரது விருந்தினர்களும் மிகுந்த மகிழ்வுடன் இருந்தனர். அவர், ‘சிரிப்பது நல்லது, சிரிப்பு ஆன்மீக ஓய்வாகும்’, என அவர்களிடம் கூறினார்.

அவ்வேளை அவர் தமது சிறைவாசத்தைப் பற்றி குறிப்பிட்டார். வாழ்க்கைச் சிரமமிக்கதாகவும், துயரம் எந்நேரத்திலும் நேரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால், அந்திப்பொழுதில் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, அன்றைய பொழுதின் வேடிக்கையான நிகழ்வுகளை நினைவுகூர்ந்து அவற்றை நினைத்து சிரிப்பார்கள். அத்தகைய வேடிக்கை நிகழ்வுகள் வெகு குறைவானவையாக இருந்தபோதும், அவர்கள் ஆழ ஆராய்ந்து ஏதாவது ஒரு நிகழ்வை நினைவுகூர்ந்து சிரிப்பார்கள். மகிழ்ச்சி என்பது லௌகீக சுகத்தினாலும் செழுமையினாலும் ஏற்படுவதல்ல, என அவர் அவர்களிடம் கூறினார். அவ்வாறு இருந்திருந்தால், அவர்களின் சிறைவாச வாழ்க்கையில் ஒரு நொடிப்பொழுதுகூட அவர்கள் சந்தோஷமாக இருந்திருக்க முடியாது. ஆனால், அவர்களின் ஆன்மாக்கள் எந்நேரமும் களிப்புணர்வுடனேயே இருந்தன.

பொது வாழ்க்கையில் தனிச்சிறப்புப் பெற்றிருந்த அந்த அமெரிக்கர்கள், தங்கள் வாழ்க்கை அனுபவங்களில் பெரும்பாலும் இல்லாதிருந்த உண்மையின் தாக்கத்தை அன்று அடைந்திருந்தும், கிழக்கிலிருந்து வந்திருந்த அந்த வருகையாளரை ஒரு புதிய கோணத்தில், ஆழ்ந்த வியப்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் கண்கள் கொண்டு பார்க்கத் துவங்கினர். அப்துல் பஹாவின் பரந்த உள்ளம் அவர்கள் அனைவரையுமே அரவணைத்திருந்தது.

அதன் பிறகு அப்துல்-பஹா திருமதி பார்ஸனை நோக்கி ‘மகிழ்ச்சிதானே’ எனக் கேட்டார்

(‘Abdu’l-Bahá: The Centre of the Covenant of Bahá’u’lláh, H. M. Balyuzi, 31-32)

தலைமைத்துவம் சார்ந்த பெண்களின் பங்கை நோய்த்தொற்று எடுத்துக்காட்டுகின்றது



8 அக்டோபர் 2021


BIC நியூ யார்க், 25 மார்ச் 2021, (BWNS) – உலகம் ஆழ்ந்த மாற்றத்திற்கு உள்ளாகும்போது, ​​தொற்றுநோய் மகளிர் தலைவர்களின் இன்றியமையாத பங்கையும், தலைமைத்துவ உருமாதிரிகள் மறுசீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த யோசனைகள் ஐ.நா. மகளிர் நிலைமை ஆணையத்தின் (C.S.W) 65’வது அமர்வுக்கு பஹாய் அனைத்துலக சமூகம் (B.I.C) அளித்த பங்களிப்பின் மையத்தில் உள்ளன, இதில் ஆபத்து மற்றும் அமைதி காலங்களில் சமத்துவ கலாச்சாரத்திற்கான தலைமைத்துவம் என்ற தலைப்பில் ஓர் அறிக்கையும் உள்ளது.

“எந்த மட்டத்திலும் பெண்கள் தங்கள் சமுதாயத்தில் தலைமைத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்த நாடுகளில், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குறுகிய கால குறிகாட்டிகளில் ஓர் அளவு ஸ்திரத்தன்மை காணப்படுகிறது” என்று BIC’யின் பிரதிநிதி சஃபீரா ரமேஷ்ஃபர் கூறுகிறார் .

“குடும்பம் அல்லது கிராமம், சமூகம் அல்லது உள்ளூராட்சி, கார்ப்பரேஷன் அல்லது தேசமாக இருந்தாலும் சரி, பெண்களின் தலைமைத்துவம் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஊக்குவிக்கப்படும்போது மனிதகுலம் எவ்வளவு பயனடைகிறது என்பது இதுவரை இவ்வளவு தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை.”

ஆணைக்குழுவிற்கு அளித்த அறிக்கையில், BIC பலவிதமான குணாதிசயங்களையும் திறனுள்ள தலைமைத்துவத்திற்கான திறன்களையும் வலியுறுத்துகிறது. இதில், “வெவ்வேறு குரல்களை இணக்கப்படுத்தும் திறன் மற்றும் பொது முனைவு உணர்வை வளர்ப்பது” ஆகியவை அடங்கும்.

CSW’வின் போது BIC அறிக்கையை மையமாகக் கொண்ட ஓர் இணைய கலந்துரையாடலில், ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக பெண்கள் உலகளாவிய தலைமைத்துவ மையத்தின் சார்லட் பன்ச் கூறுகிறார்: “[BIC] முன்வைத்த உருமாதிரி மிகவும் முக்கியமானது என நான் நினைக்கின்றேன். சமத்துவத்தின் ஓர் உருமாதிரி, பெண்களை மற்றவர்களை விட ஆதிக்கம் செய்பவர்களாக ஆக்குவது பற்றி அல்ல… என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்…”

பல ஐ.நா. உறுப்பு நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்ட மற்றொரு கலந்துரையாடலில், பங்கேற்பாளர்கள் சமீபத்தில் வெளியான பாலின சமத்துவத்தின் சில காட்சிகள் என்னும் திரைப்படத்தைப் பார்த்தனர். படத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஐ.நா.வின் லைபீரிய துணை நிரந்தர பிரதிநிதி, தூதர் இஸ்ரேல் சோகோ டேவிஸ் கூறுகிறார்: “ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நடவடிக்கைகள் மற்றவர்களின் நடத்தையில் நேர்மறையான மாற்றங்களை எவ்வாறு பேணிடும் என்பதை நீங்கள் காண்கிறீர்கள்.

பல ஐ.நா. உறுப்பு நாடுகளின் தூதர்கள் BIC’யின் சமீபத்தில் வெளியான Glimpses of the Spirit of Gender Equality‘க்கு விடையிறுத்துள்ளனர். C.S.W’இன் போது ஒரு திரையிடலில் பேசிய தூதர்கள் இங்கே இடதுபுறத்தில் இருந்து கடிகார திசையில்: போர்த்துக்கல்லின் தூதர் பிரான்சிஸ்கோ டுவர்ட் லோபஸ், லைபீரியாவின் தூதர் இஸ்ரேல் சோகோ டேவிஸ், ஜெர்மனியின் தூதர் கிறிஸ்டோஃப் ஹியூசென் மற்றும் பிலிப்பைன்ஸ் குடியரசின் தூதர் என்ரிக் ஏ. .

“கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தி, தங்களை சமமாக பார்க்கும்போது ஒரு குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியாகிறது என்பதை நாம் பார்க்கின்றோம். பாலின சமத்துவத்தை அடைவதில் நேர்மறையான பங்கு மற்றும் ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஒரு குடும்பம் ஆற்றக்கூடிய முக்கிய பங்கை நீங்கள் உணருகிறீர்கள். ” தூதர் டேவிஸ் இந்தப் படத்தை மேற்கோள் காட்டி, “நேசிக்கும் திறன், படைப்பாற்றல், விடாமுயற்சி ஆகியவற்றுக்குப் பாலினம் இல்லை.”

1995 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் பெண்கள் பற்றிய உலக மாநாடு இங்கே சித்தரிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் நடத்தப்படும் இந்த ஆண்டின் C.S.W. பெய்ஜிங் மாநாட்டிலிருந்து பாலின சமத்துவம் குறித்த சொற்பொழிவை மேம்படுத்துவதில் அரசாங்கங்களும் பொது சமூக அமைப்புகளும் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய கூட்டமாகும்.

இணையத்தில் நடைபெற்ற இந்த ஆண்டு C.S.W’வில் BIC’யை பிரதிநிதித்துவப்படுத்தும் நாற்பத்தொன்பது பிரதிநிதிகள் அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் 25,000’ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் சேர்ந்துகொண்டனர் – இது அரசாங்கங்களையும் பொது சமுதாயங்களையும் ஈடுபடுத்திய பாலின சமத்துவம் குறித்த சொல்லாடலை மேம்படுத்த 1995’ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற பெண்கள் மீதான உலக மாநாட்டிற்குப் பின்னர் நடந்த மிகப்பெரிய ஒன்றுகூடலாகும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1499/

ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் ஒரு சிட்னி நகர அண்டைப்புறத்தில் சமூக-நிர்மாணிப்பு முயற்சிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது



8 அக்டோபர் 2021


சிட்னி – ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் (ABC) சிட்னி நகர், மௌன்ட் டிரூயிட்’டிலுள்ள ஓர் அண்டைப்புறத்தில் இளைஞர்கள் மீது பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் தன்மைமாற்ற விளைவுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. “தங்கள் வீதிகளுக்கான போரட்டம்” எனத் தலைப்பிடப்பட்ட ஒரு கட்டுரையில், அக்கழகம் மௌன்ட் டிரூயிட்’டில் நடைபெறும் கல்வியல் நடவடிக்கைகள் “இளைஞர்கள் தங்கள் சமூகங்களில் காண விரும்பும் மாற்றங்களுக்கு” அவர்களே அந்த மாற்றங்களாக இருப்பதற்கு எவ்வாறு சக்தியளிக்கின்றன என்பதை வர்ணிக்கின்றது.

பிரார்த்தனை, கலந்துரையாடல் மற்றும் இசைக்கான ஒன்றுகூடல்கள் மூலம் வடிவம் பெறுகின்ற துடிப்பான சமூக வாழ்க்கையை அக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது, இது சமீபத்தில் “பன்மடங்கு (manifold)” எனும் தலைப்பில் ஒரு முன்முயற்சியை உருவாக்கியுள்ளது, இது இளைஞர்கள் தங்கள் சமூகத்தின் உயர்ந்த அபிலாஷைகளை வெளிப்படுத்தும் பாடல்களைத் தயாரிக்கிறது.

பஹாய் உலக செய்தி சேவையுடன் பேசிய கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் சியோபன் மாரின், கதையை எழுவதற்கான தனது உந்துதலைப் பகிர்ந்து கொள்கிறார்: “சிட்னியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத சமூகங்களின் கதையைச் செய்திகளில் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன், அவர்களைச் சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும்.”

இந்த அண்டைப்புறம் சமீபத்தில் ஊடகங்களில் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டது என்று திருமதி மரின் விளக்குகிறார், மேலும் வித்தியாசமான ஒன்றை வழங்குவதே அவரது எதிர்ப்பார்ப்பு. “உள்ளூர் சமூகம், குறிப்பாக இளைஞர்கள், இசை மற்றும் சமூக நடவடிக்கைகளை பயன்படுத்தி நிலைமையை மாற்றுகிறார்கள் என்பதைப் பற்றி நான் ஆர்வமாக இருந்தேன்.

இந்த அண்டைப்புறம் சமீபத்தில் ஊடகங்களில் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டது என்று திருமதி மரின் விளக்குகிறார். அதற்கு மாறாக,, வித்தியாசமான ஒன்றை வழங்குவதே அவரது எதிர்ப்பார்ப்பு. “உள்ளூர் சமூகம், குறிப்பாக இளைஞர்கள், இசை மற்றும் சமூக நடவடிக்கைகளைப் பயன்படுத்தி எவ்வாறு நிலைமையை மாற்றுகிறார்கள் என்பதைப் பற்றி அறிய நான் ஆர்வமாக இருந்தேன்.

“பன்மடங்கு (manifold) உறுப்பினர்களும் சமூகத்தின் பிற உறுப்பினர்களும் இளைஞர்களுக்கு ஒரு நேர்மறையான பாதையை–போதைப்பொருள், மது, அல்லது வன்முற–காட்டுவது மட்டுமின்றி, அவர்கள் இந்த இடத்திலுள்ள நிலவும் நல்லனவற்றையும் எடுத்துக்காட்டுகின்றனர். இளைய இளைஞர் தலைமுறையினருக்கு உதவியளிக்கும் முயற்சிகள் குறித்து அறிவது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அவர் மேலும் கூறுவதாவது: “மேலும், இந்த முயற்சிகள் சமூகத்தில் உள்ள சிறார்களுக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், அவை சமூக ஒத்திசைவையும் மரியாதை உணர்வையும் வலுப்படுத்துகின்றன, பழைய தலைமுறையினரிடையிலும் இது நிகழ்கின்றது.”

இந்தக் கட்டுரையை ABC’யின் இணையதளத்தில் படிக்கலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1498/

பாலின சமத்துவமும் பெண்களுக்கு ஆற்றலளித்தலும்


பாலின சமத்துவமும் பெண்களுக்கான ஆற்றலளிப்பும்

Man Stock Illustrations – 2,321,657 Man Stock Illustrations, Vectors &  Clipart - Dreamstime

நாடு தழுவிய பொது உரைகளிலும் தனிப்பட்ட உரையாடல்களிலும், பஹாவுல்லாவின் போதனைகளில் ஆணும் பெண்ணும் சமமாக கருதப்படுகின்றனர் என்பதை அப்துல்-பஹா வெகு துல்லியமாக எடுத்துரைத்துள்ளார், கடவுளின் முன்னிலையில் எவரது உள்ளம் அதி தூய்மையானதாகவும், எவரது வாழ்வும் நடத்தையும் அதி உயர்வாகவும் தெய்வீக அளவுகோலுக்கு வெகு அணுக்கமாகவும் உள்ளதோ அவரே கடவுளின் பார்வையில் பெருமதிப்புடையவர், அதிசிறப்புடையவராவார். அவர் ஆணாயினும் பெண்ணாயினும், இதுவே ஒரே உண்மையான மற்றும் மெய்யான தனிச்சிறப்பாகும்.

“பஹாவுல்லாவின் போதனைகளுள் இது விந்தையான ஒரு போதனை, ஏனெனில் மற்ற சமயங்கள் அனைத்தும் ஆணை பெண்ணுக்கு மேற்பட்டவனாகவே உயர்த்தியுள்ளன,” என அப்துல்-பஹா கூறியுள்ளார்.  இருந்தும், அப்துல்-பஹா பாலினங்களிடையே சமத்துவம் என்பதை ஓர் ஆன்மீக மெய்ம்மையாக கருதியபோதும், சமுதாயத்தில் பெண்கள் முழுமையாக பங்குபெறுவதைத் தடுக்கும் கல்வி மற்றும் பிற வாய்ப்புக்கள் சார்ந்த சமமின்மைகள் சமூகநிலையில் நிலவுவதை அவர் அறிந்தே இருந்தார். இந்த நிலையைத் திருத்தும்படி அவர் அமெரிக்காவை கேட்டுக்கொண்டார்.

கல்வி

1912’இல், கல்லூரி மாணவர்களுள் மூன்றில் ஒரு பங்கினரே பெண்களாக இருந்தனர். சமுதாயத்திற்கு அவர்கள் ஆண்களைப்போல் பங்காற்றுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படவில்லை. அப்துல்-பஹா “மகள்களாயினும் மகன்களாயினும் அவர்கள் ஒரே கற்றல் பாடமுறையைப் பின்பற்ற வேண்டும்,” என அறிவுறுத்தியது மட்டுமல்லாமல், அவர் ஒரு படி மேலே சென்று:

“…ஆண்களின் கல்வியைவிட பெண்களின் கல்வியே முக்கியமானதாகும், ஏனெனில் அவர்களே இனத்தின் தாய்களாவர், மற்றும் தாய்மார்களே குழந்தைகளைப் பேணிவளர்ப்பவர்களாவர். தாய்மார்களே குழந்தைகளின் முதல் ஆசிரியர்களாவர். ஆகவே, அவர்கள் கண்டிப்பாக மகன்கள் மகள்கள் இருவருக்கும் கல்வி புகட்டுவதற்கு ஏதுவாக ஆற்றலோடு பயிற்றுவிக்கப்பட வேண்டும்.”

அமைதி

அப்துல் பஹா அடிக்கடி அனைத்துலக அமைதி இயக்கத்தோடு பெண்களின் மேம்பாட்டை தொடர்புபடுத்தியும், அந்நாளில் அமைதி இயக்கங்களோடு மிக அணுக்கமாகவிருந்த, ஜேன் ஆடம்ஸ் மற்றும் சாரா பாஃர்மரையும் உள்ளடக்கிய சில பெண்களையும் சந்தித்தார்.

Dr. Susan Moody: A Dedicated Pioneer Doctor - Baha'i Blog
இரான் நாட்டு பஹாய் பெண்களுடன் டாக். சூஸன் மூடி

20’ஆம் நூற்றாண்டின் திருப்பத்தில், பெண்களை ஊக்குவித்தும் அவர்களை தலைமைத்துவ நிலைகளுக்கு உயர்த்துவதில் அப்துல் பஹா தாமே ஓர் எடுத்துக்காட்டாக இருந்தார். உதாரணத்திற்கு 59 வயதுடைய அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண்கள்நல மருத்துவரான டாக். சூஸன் மூடி என்பவரைப் பாரசீகப் பெண்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்கிட இரான் நாட்டிற்குக் குடிபெயர்ந்திட அவர் தேர்வு செய்தார். மேலும், இரான் நாட்டிற்கு குடிபெயர்ந்த முதல் அமெரிக்கப் பெண்மனி எனும் முறையில், பெண்களுக்கான தார்பியாட் பள்ளியை நிறுவதற்கு உதவியாக டாக் சூஸன் மூடி அயராது உழைத்தவராவார். 1902’இல் அப்துல் பஹா இரானின் இஸ்லாமிய மதகுருக்களால் பஹாய்கள் துன்புறுத்தப்படுவதை தடுத்திடுமாறு கேட்டுக்கொள்ளும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இரான் நாட்டின் ஷா மன்னருக்கான தமது தூதுவராக ஒரு அமெரிக்கப் பெண்மனியையே நியமித்தார். மற்றும் வில்மட் வழிபாட்டு இல்லத்தின் அடிக்கல்லாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த கல் சிக்காகோ நகரில் வாழ்ந்த ஒரு பஹாய் பெண்மனியான நெட்டி டோபின் என்பவரால் வழங்கப்பட்டதாகும்.

Nettie Tobin and the Cornerstone of the Baha'i House of Worship in Wilmette  | 'Abdu'l-Bahá in America
அமெரிக்க பஹாய் கோவிலுக்கு வழங்கிய அடிக்கல்லுடன் நெட்டி டோபின்

ஆண்களும் பெண்களும் கண்டிப்பாக ஒத்துழைக்கவேண்டும்

அப்துல் பஹா உதாரணம் மற்றும் வாதங்களின் வாயிலாக, வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலமாக, ஆண் பெண் இரு பாலரின் மேம்பாட்டிற்குப் பெண்களின் மேம்பாடும், ஆண்களுடனான அவர்களின் முழு சமத்துவமும், இன்றியமையதவை எனும் கருத்தை ஊக்குவித்தார்: “பெண்களும் ஆண்களும் ஒருங்கிணைவோடு சமமாக மேம்பாடு காணும் போது மனித இனத்தின் மகிழ்ச்சி அடையப்பெறும், ஏனெனில், அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரை நிறைவுசெய்பவர்; உறுதுணையாளரும் ஆவர்.

இன்று, உலகம் முழுவதுமுள்ள பஹாய் பெண்களும் ஆண்களும், பஹாய் சமூகத்தினுள் மட்டுமல்ல, மாறாக சமுதாயம் முழுவதுக்குமாக பாலியல் சமத்துவத்தை மேம்படுத்திட ஒன்றாக உழைக்கின்றனர்.

அப்துல்-பஹாவின் நினைவாலயம்: பிரதான கட்டமைப்பிற்கான தரையின் பூர்த்தி ஒரு முக்கிய மைல்கல்லைப் பிரதிநிதிக்கின்றது


The concrete pour for the central plaza and floor of the main edifice this week signifies a new stage in the project, as two portal walls near completion.
இரண்டு வாசல் சுவர்கள் முடிவுறும் வேளை, இ்வவாரம் மத்திய தளம் மற்றும் பிரதான கட்டமைப்பிற்கு கான்கிரீட் ஊற்றப்படுதல் திட்டத்தின் ஒரு புதிய கட்டத்தைப் பிரதிநிதிக்கின்றது.

14 மார்ச் 2021


பஹாய் உலகமையம் — இவ்வாரம், பிரதான கட்டிடம் மற்றும் சுற்றிவரும் தளத்திற்கான கான்கிரீட் ஊற்றப்பட்டதானது, அப்துல் பஹாவின் நினைவாலய கட்டுமானத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிப்பிடுகின்றது. பல கட்டங்களிலான ஏற்பாடுகளுக்குப் பிறகு, மத்திய தளத்தின் தரை அதன் இறுதி நிலையை அடைந்துள்ளது. அதே நேரம், வடக்கு மற்றும் தெற்கு பிலாஸாக்களின் சுவர்களுள் சில நிறைவை அடையும் நிலையில் உள்ளன.

பின்வரும் படங்கள், தளத்தில் நடைபெறும், இவற்றையும் வேறு சில மேம்பாடுகளையும் சித்தரிக்கின்றன.

Concrete was poured across an area of 2,000 square meters, creating a platform that will be paved with local stone and reach a final floor height of about 3.5 meters above the original ground level of the site.
2,000 சதுர மீட்டர் பரப்பளவில் கான்கிரீட் ஊற்றப்பட்டது, இது உள்ளூர் கல்லால் அமைக்கப்பட்ட ஒரு தளத்தை உருவாக்கி, தளத்தின் அசல் தரை மட்டத்திலிருந்து சுமார் 3.5 மீட்டர் உயரத்தை எட்டும்.

The concrete surface of the floor slab is smoothed after pouring.
தரையின் கான்கிரீட் ஊற்றுக்குப் பிறகு அதன் மேல்புறம் சமப்படுத்தப்படுகின்றது

Views of the central plaza area before (top) and after (bottom) this week’s work.
இந்த வார வேலைக்கு முன் (மேல்) மற்றும் பின் (கீழே) மத்திய பிளாசா பகுதியின் காட்சிகள்.

Once the concrete of the plaza floor sets, the construction of the folding walls around the plaza and the pillars of the main edifice can proceed.
பிளாசா தளத்தின் கான்கிரீட் அமைந்தவுடன், பிளாசாவைச் சுற்றி மடிப்பு சுவர்கள் மற்றும் பிரதான கட்டிட தூண்களின் கட்டுமானம் தொடரும்.

Pictured (center) is the purpose-made formwork that will used as a mold for the eight pillars of the main edifice, each of which will stand at 11 meters.
படம் (மையம்) ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட உருவப்பணி ஆகும், இது பிரதான மாளிகையின் எட்டு தூண்களுக்கு ஒரு அச்சாகப் பயன்படுத்தப்படும், அவை ஒவ்வொன்றும் 11 மீட்டர் உயரம் உடையவை..

Work continues to advance on the portal walls enclosing the north and south plazas, as well as the pillars that will support the floor of the north plaza (foreground).
வடக்கு மற்றும் தெற்கு பிளாசாக்களை உள்ளடக்கிய நுழைவு சுவர்களிலும், வடக்கு பிளாசாவின் (முன்புறம்) தளத்தை ஆதரிக்கும் தூண்களிலும் பணிகள் தொடர்கின்றன.

Formwork is being raised for the portal wall on the west side of the north plaza.
வடக்கு பிளாசாவின் மேற்குப் பகுதியில் உள்ள நுழைவு சுவருக்கு உருவவேலை உருவாகி வருகிறது.

The portal wall on the east side of the north plaza is nearing completion.
வடக்கு பிளாசாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நுழைவு சுவர் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

Pictured here are two views of work on the east portal wall of the south plaza. The wall was built up in several layers, and its sloped upper edge is now being completed.
தெற்கு பிளாசாவின் கிழக்கு போர்டல் சுவர் பணிகளின் இரண்டு காட்சிகள் இங்கே படத்தில் உள்ளன. சுவர் பல அடுக்குகளில் கட்டப்பட்டது, அதன் சாய்வான மேல் விளிம்பு இப்போது நிறைவடைகிறது.

In a view of the site from the west, progress on a path encircling the Shrine can be seen in the foreground.
மேற்கில் இருந்து தள காட்சியில், சன்னதியைச் சுற்றியுள்ள பாதையில் முன்னேற்றம் முன்புறத்தில் காணப்படுகிறது.

With the foundations and central floor slab completed and the portal walls nearing completion, the Shrine and its associated structures will begin to take form before long.
அஸ்திவாரங்கள் மற்றும் மத்திய தரை நிறைவடைந்து, நுழைவு சுவர்கள் நிறைவடையும் தருவாயில், சன்னதி மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புகள் விரைவில் வடிவம் பெறத் தொடங்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1497/

நிறங்கள் யாவும் ஒன்றே, அது கடவுள் சேவகம் என்னும் நிறமே


நிறங்கள் யாவும் ஒன்றே, அது கடவுள் சேவகம் என்னும் நிறமே

கடவுள் சமய திருக்கரம் லூயிஸ் கிரேகரி

1912ல் அமெரிக்க சமூகம் இன பாகுபாட்டை வெகு தீவிரமாக கடைப்பிடித்து வந்தது. கருப்பர்கள் அல்லது “நிறஞ்சார்ந்தவர்கள்” என அப்போது வழங்கப்பட்ட அவர்கள் சட்டப்படி இரண்டாம் நிலை பிரஜைகளாவர். 1896’இல் மாறுபட்ட இனத்தவர்கள் ஒன்றுகூடும் இடங்களில் இன ஒதுக்கல் கொள்கை அமல்படுத்தப்படுவதை உயர்நீதி மன்றம் அங்கீகரித்தது. உண்மையில், 48 மாநிலங்களுள் 30 மாநிலங்கள் கலப்பின திருமணங்களைத் தடைசெய்யும் சட்டங்களை அமல்படுத்தின.

இத்தகைய பின்னணியில், 1912 எப்ரல் மாதத்தில் பஹாய் கோட்பாடான “மனிதகுல ஒருமைத்தன்மை” குறித்த போதனைகளை மனதில் பதியும் விதத்தில் எடுத்துக்காட்டிடுவதற்குத் தயாராக அப்துல் பஹா வந்தார்.

லூயிஸ் கிரகரி (1874-1951) அடிமைகள் விடுதலைக்குப் பிறகு பிறந்த ஓரு கருப்பு-அமெரிக்க வழக்குறைஞ்சராவார். அவர் ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டம் பெற்று வாஷிங்டன் டி.சி.யில் 1902ல் வழங்குறைஞர் கழகத்துள் அனுமதிக்கப்பட்டார். அவர் 1909ல் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டு புனித நிலத்திற்கு பஹாய் புனிதயாத்திரை மேற்கொண்டிட அப்துல் பஹாவால் அழைப்புவிடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர் எனும் தனிச்சிறப்பு பெற்றார்.

விதிவிலக்கின்றி, 1912’இல் வாஷிங்டன் டி.சி. பஹாய் சமூகம் அக்கால பொதுசமூகத்தின் இனபாகுபாட்டைப் பொதுவான நிலையில் பின்பற்றியே வந்தது.

ஏப்ரல் 23, 1912’இல், லூயிஸ் கிரகரி செய்திருந்த ஏற்பாடுகள் மூலம், சரித்திர ரீதியாக கருப்பர் கல்லூரியான, ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் அப்துல் பஹா உரையாற்றினார். அப்துல் பஹா பின்வருமாறு தமது உரையை ஆரம்பித்தார்:

நான் இன்று வெகு ஆனந்தமாக இருக்கின்றேன், ஏனெனில் இங்கு கடவுளின சேவகர்களின் ஒன்றுகூடுதலைக் காண்கிறேன். இங்கு கருப்பரும் வெள்ளையரும் ஒன்றாக அமர்ந்திருக்கக் காண்கிறேன். கடவுள் முன்னிலையில் கருப்பரோ வெள்ளையரோ கிடையாது. நிறங்கள் யாவும் ஒன்றே; அது கடவுள் சேவகம் எனும் நிறமே… உள்ளமே முக்கியமானது. இதயம் வெண்மையாக இருக்குமானால், வெள்ளை, கருப்பு அல்லது வேறு எந்த நிறமும் எவ்வித வேறுபாட்டையும் உருவாக்கமுடியாது. கடவுள் நிறங்களைக் காண்பதில்லை; அவர் உள்ளங்களை மட்டுமே காண்கிறார். இதயம் வெண்மையாக இருப்போர் மேன்மையானவராவார். அதிக நற்பண்புடையோர் அதிகம் திருப்தியளிப்பவராவார்.

File:Louis-and-Louisa-Gregory.png - Wikimedia Commons
லூயிஸ் & லூயிஸா

உரைக்குப் பின், பாரசீகத் தூதரகத்தின் தற்காலிக பொறுப்பாளர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அப்துல் பஹா முக்கிய விருந்தினராக பங்குபெற்றார். விருந்து ஆரம்பிப்பதற்கு முன்பே அப்துல் பஹா அந்நிகழ்ச்சிக்கு லூயிஸ் கிரகரியை கண்டிப்பாக வரச்சொல்லியிருந்தார். அங்கு வந்திருந்த விருந்தினர்கள் சிலர் தலைநகரின் சமூக வாழ்க்கைமுறையில் மிக முக்கிய பிரமுகர்களும் அவர்கள் அனைவருமே வெள்ளையர்களாகவும் இருந்தனர். விருந்து ஆரம்பிப்பதற்கு முன்பாக, அப்துல் பஹா எழுந்து நின்று, அறையைச் சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, “திரு கிரகரி எங்கே,” என வினவினார். “அவரைக் கூப்பிடுங்கள்!” என்றார். விருந்து ஏற்பாட்டாளர் லூயிஸ் கிரகரியைக் கண்டுபிடிப்பதற்காக அவசரமாகக் கிளம்பினார். அப்துல் பஹாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் வலப்புறம் ஏற்கனவே ஓர் இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, திரு கிரகரி முன்னால் கொண்டுவரப்பட்டவுடன் அவ்விருக்கையில் அவர் அமர்த்தப்பட்டு, முன்தீர்மானிக்கப்படாத ஆனால் ஒரு முக்கிய பிரமுகராக்கப்பட்டார்.

இக்காரியத்தை அப்துல் பஹா வெகு சுலபமாக செய்து முடித்தார். திரு கிரகரி அங்கு இருந்தது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது என கூறி, பிறகு வெகு இயல்பான குரலில் வழக்கத்திற்கு மாறாக ஒன்றுமே நடக்காதது போன்று, மனிதகுல ஒற்றுமை குறித்து ஓர் உரையாற்றினார்.

லூயிஸ் கிரகரியும் ஒரு வெள்ளை ஆங்கிலேய பஹாய் பெண்மணியான, லூயிஸா (லூயிஸ்) A.M. மேத்யூவும் அப்துல் பஹாவின் ஊக்குவிப்பின் மூலமாக செப்டம்பர் 27, 1912’இல் நியூ யார்க் நகரில் திருமணம் புரிந்துகொண்டனர்.

லூயிஸ் கிரகரி மீதமிருந்த தமது வாழ்நாள்களை இன ஒற்றுமை மேம்பாட்டிற்காகவும், பஹாய் போதனைகளைப் பரப்புவதற்காவும் அர்ப்பணித்தார். அவரும் பற்றுறுதிமிக்க அவருடைய மனைவி லூயிஸாவும் எலியட், மேய்னில் உள்ள கிரீன் ஏக்கர் பஹாய் பள்ளிக்கு அருகே ஒன்றாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

https://prsamy.wordpress.com/2015/03/17/ஐக்கிய-அமெரிக்காவின்-மு/

அப்துல்-பஹா: நல்ல தந்தை


“உண்மையில் ஒரு தந்தையானவர் ஒரு நல்ல பரிசாவார்”

இறைசமயத் திருக்கரம் டாக்டர் வர்ஃகா அவர்கள் தம்மிடம் கூறிய ஒரு கதையை திரு. கம்ரான் சஹிஹி இங்கே விவரிக்கின்றார்:

“எனது தந்தையார் அப்துல்-பஹாவுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அவர்கள் நியூயார்க் நகரில் இருந்தபோது ஒரு நாள் அப்துல்-பஹா மிகவும் களைப்படைந்து மேல் மாடியிலுள்ள தமது அறையில் ஓய்வெடுக்கச் சென்றார். அப்போது யாரோ ஒருவர் கதவைத் தட்டினார்.

“கதவு திறக்கப்பட்டபோது, ஒரு வயதான மனிதர் வீட்டினுள் ஒரு கைத்தடியுடன் நடந்து வந்தார். அல்லா-வு-அப்ஹா எனும் வாழ்த்து கூறிய பிறகு, தாம் அப்துல்-பஹாவைச் சந்திக்க விரும்புவதாக அந்த வயோதிகர் தெரிவித்தார். அவரது அந்த வருகை அப்போது பொருத்தமானதல்ல என அவருக்கு எடுத்துரைக்கப்பட்டபோது, அந்த மனிதரும் பின்வருமாறு கூறினார்: “தயவு செய்து அப்துல்-பஹாவினுடைய அறைக்குள் சென்று, ஒருவர் அவரைக் காண விரும்புகிறார் என்று சொல்லுங்கள்” ( தமது தந்தையார் தெரிவித்த அந்த வயோதிகரின் பெயர் டாக்டர் வர்க்காவுக்கு நினைவில்லை). அவரது அந்த அந்த வருகை அப்போது பொருத்தமானதல்ல என அவருக்கு மீண்டும் எடுத்துரைக்கப்பட்டபோது அந்த வயோதிகர் மீண்டும் தமது வேண்டுகோளை அப்துல் பஹாவிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

“எனவே, அவர்கள் அப்துல் பஹாவிடம் சென்று, ஒரு வயோதிகர் அவரைக் கண்டிப்பாகக் காண விரும்புவதாகத் தெரிவித்தனர். அப்துல்-பஹாவும் அனுமதி வழங்கினார். அப்துல் பஹாவின் அறைக்குள் அந்த வயோதிகர் வந்தவுடன் “உங்களுக்கு என்ன வேண்டும்?” என அப்துல் பஹா கேட்டார். “நான்கு மணி நேரம் நான் உங்களுடைய தந்தையாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க நான் வந்துள்ளேன்,” என்று அந்த வயோதிகர் கூறினார்.

“அங்கிருந்த அனைவரும் இந்தப் பதிலைக் கேட்டு வியப்படைந்தனர். அதற்கு அப்துல் பஹா,

“எனது தந்தையாக நீங்கள் ஆக விரும்புகின்றீர்களா? நல்லது. ஆனால், எதற்காக அப்படி ஆக விரும்புகின்றீர்கள்?” என்று பதில் கேள்வி கேட்டார். அந்த மனிதர், “நீங்கள் உங்களுடைய அறைக்குச் சென்று, கதவைத் தாழிட்டு, யாருடனும் பேசாமல், நான்கு மணி நேம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என நான் உங்களுடைய தந்தை எனும் முறையில் சொல்கின்றேன்,” என்றார். அப்துல் பஹா அதற்கு, “ஒரு மகன் என்ற முறையில் நான அதற்குக் கீழ்ப்பணிவேன்,” என்று கூறி தமது அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.”

டாக்டர் வர்க்கா தொடர்ந்து கூறியதாவது: “அந்த வயோதிகர் ஒரு நாற்காலியில் ஆடாமல் அசையாமல், எந்தவொரு வார்த்தையும் பேசாமல் தமது கைகளைத் கைத்தயில் ஊன்றி நான்கு மணி நேரம் உட்கார்ந்திருந்தார். நான்கு மணி நேரம் ஓய்வெடுத்து அப்துல் பஹா புதிய தெம்புடன் வெளியே வந்து, “உண்மையில் ஒரு தந்தையானவர் ஒரு நல்ல பரிசாவார்” என்று கூறினார்.’”

அப்துல் பஹா: நோயுற்றோருக்கு உதவுதல்


அப்துல் பஹாவின் இரக்கம்

“‘நோயுற்றோர்க்கு உதவிக்கரம் நீட்ட அப்துல் பஹாவின் இரக்கமிக்க இதயம் எப்போழுதுமே தயார் நிலையில் இருந்தது. ஒருவருடைய துன்பத்தையோ, துயரத்தையோ தம்மால் தணிக்க இயலுகையில் அவர் உடனே அதனை முன்னின்று நிறைவேற்றி வைப்பார். அக்கா நகரில் வயது முதிர்ந்த ஒரு தம்பதியினர் நோயின் காரணமாக படுக்கையில் ஒரு மாதம் காலமாக அவதியுற்று வந்தனர். அந்நிலையில் அப்துல் பஹா அத்தம்பதியர் இருந்த இடத்திற்கு இருபது முறை விஜயங்கள் மேற்கொண்டார். நோயுற்றிருந்த ஏழை எளியோரை நலம் விசாரித்து உதவி செய்வதற்காக ஒப்வொரு நாளும் அப்துல்-பஹா ஓர் ஊழியரை அவர்களிடம் அனுப்பி வைத்தார். அக்கா நகரில் மருத்துவமனை இல்லாததன் காரணமாக அவர் ஏழை மக்களை நோய் நொடியிலிருந்து காப்பாற்றி கவனித்து வருவதற்கு ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்து அம்மருத்துவருக்கு அச்சேவைக்காக சம்பளமும் வழங்கினார். அந்த மருத்துவச் சேவையை யார் ஏற்பாடு செய்தது என்பதை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அப்துல்-பஹா அந்த மருத்துவரிடம் சொல்லியிருந்தார். ஓர் ஏழைப் பெண்மணிக்கு அம்மை நோய் கண்டு அவரை மற்றவர்கள் ஒதுக்கி வைத்தபோது, அது குறித்து தெரிய வந்த அப்துல்-பஹா, அப்பெண்மணியைக் கவனித்துக் கொள்வதற்கு இன்னொரு பெண்மணியை உடனே ஏற்பாடு செய்து, அம்மை நோய் கண்ட அப்பெண்மணியின் வசதிக்காக அப்துல்-பஹா தமது படுக்கையை வழங்கி, ஒரு மருத்துவரையும் ஏற்பாடு செய்து, உணவையும் அனுப்பி வைத்தார். அப்பெண்மணி முறையாகக் கவனிக்கப்பட்டு வருவதை உறுதி செய்வதற்காக அப்துல்-பஹா அப்பெண்மணியை நேரிடையாகச் சென்று கண்டார். அம்மை நோய் கண்ட அப்பெண்மணி இறந்தபோது, அவரது எளிமையான இறுதிச் சடங்கை அப்துல்-பஹாவே ஏற்பாடு செய்து, அதற்கான செலவுகளுக்கும் பணம் வழங்கினார்.

(அப்துல் பஹாவின் வாழ்வு குறித்த சம்பவங்கள், ப. 43-4)

*******

அக்கா நகருக்கு அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று அங்கு தங்கியிருந்த அமெரிக்காவின் ஆரம்பகால நம்பிக்கையாளர்களுள் ஒருவரான லுவா கெட்ஸிங்கர், அந்நகரில் தமது அனுபவத்தைக் கூறியுள்ளார். அந்த சிறைச்சாலை நகரில் அப்துல்-பஹாவைக் காண்பதற்காக அவர் அங்கு புறப்பட்டுச் சென்றார். ஒரு நாள் அப்துல்-பஹா தமது அன்றாடப் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்த காரணத்தினால், நோயுற்றிருந்த தமது நண்பர் ஒருவரைச் சந்தித்து நலம் விசாரிக்க இயலாத நிலையில் அப்துல்-பஹா இருந்தார். அதனால், அக்காரியத்தை மேற்கொள்ளுமாறு அந்நபருக்கு உணவு கொண்டு சென்று அவரைக் கவனித்துக் கொள்ளுமாறு லுவா கெட்ஸிங்கருக்கு அப்துல் பஹா கட்டளையிட்டார்.

லுவா கெட்சிங்கர்

நோயுற்றிருந்த அம்மனிதர் இருந்த இடத்தின் முகவரியை வாங்கிக் கொண்டு உடனே லுவா கெட்ஸிங்கர் புறப்பட்டுச் சென்றார். அப்துல் பஹா தமது சொந்த பணியை மேற்கொள்ளுமாறு தமக்குக் கட்டளையிட்டிருப்பது குறித்து லுவா கெட்ஸிங்கர் பெருமை கொண்டார். ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்திற்குள் அவர் திரும்பி வந்து அப்துல்- பஹாவிடம், “மாஸ்டர், நீங்கள் என்னை ஒரு மோசமான இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டீர்கள். அங்குள்ள கசடும், அழுக்கும் நிறைந்த இடத்தைக் கண்டும், அம்மனிதரின் கடும் மோசமான நிலையைக் கண்டும் எனக்கு மயக்கமே வந்து விட்டது. அந்த நோய் என்னைத் தொற்றிக் கொள்வதற்குள் நான் ஓடிவந்து விட்டேன்,” என்று பதற்றத்துடன் கூறினார். அதற்குப் பதிலாக அப்துல்-பஹா மிகவும் சோகத்துடனும், ஆனால் அதே நேரத்தில் மிகவும் கண்டிப்புடனும் லுவா கெட்ஸிங்கரை நோக்கினார். லுவா கெட்ஸிங்கர் சேவையாற்ற விரும்பினால், தனது சக மனிதனுக்குச் சேவையாற்ற வேண்டும் என அப்துல்-பஹா கூறினார். ஏனெனில், ஒப்வொரு மனிதனிடமும் இறைவனின் சாயலை லுவா காண வேண்டும் என அவர் கூறினார். மீண்டும் அம்மனிதரின் வீட்டிற்குச் செல்லுமாறு அப்துல் பஹா பணித்தார். அந்த வீடு அழுக்காக இருந்தால் அதனைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், அம்மனிதர் அழுக்காக இருந்தால், அவர் குளிப்பதற்கு உதவிட வேண்டும் என்றும், அம்மனிதர் பசித்திருந்தால் அவருக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் அப்துல்-பஹா கூறினார். இவை அனைத்தும் செய்து முடிக்கப்படாமல் லுவா கெட்ஸிங்கர் திரும்பி வந்து விடக்கூடாது என்றும் அப்துல்-பஹா சொன்னார். அச்செயல்களை அப்துல்-பஹா பல முறை அம்மனிதருக்குச் செய்துள்ளார். அவற்றை லுவா ஒரு முறையாவது செய்ய வேண்டும் என அப்துல்-பஹா கூறினார். தனது சக மனிதனுக்கு எப்படிச் சேவை செய்ய வேண்டும் என்பதை இப்வாறுதான் லுவா கெட்ஸிங்கருக்கு அப்துல்-பஹா கற்றுக் கொடுத்தார்.