இரான் நாட்டில் மூன்று வாரங்கள்: “பரவலான ஒடுக்குமுறையை” அனைத்துலக சமூகம் தீவிரமாக கண்டிக்கையில் பஹாய்கள் மீது 200 குறிவைப்பு சம்பவங்கள்


24 ஆகஸ்ட்

BIC நியூ யார்க் – அரசாங்க அதிகாரிகள், சர்வதேச மற்றும் தேசிய செய்தி ஊடகங்கள் மற்றும் டஜன் கணக்கான முக்கிய பொதுமை சமூக நடவடிக்கையாளர்கள் மற்றும் தனிநபர்கள் இந்த மாதம் ஈரான் நாட்டு பஹாய்களின் தற்காப்பிற்கு விரைந்துள்ளனர். இந்த மாதம், சமூகத்திற்கு எதிரான அதிகரித்துவரும் ஒடுக்குமுறை மற்றும் அதிகாரபூர்வ வெறுப்புப் பிரச்சாரத்தால் தூண்டிவிடப்பட்ட அறிக்கைகள், செய்திகள் மற்றும் சமூக ஊடக இடுகைகள், அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோருகின்றன. ஜூலை 31-ஆம் தேதி இந்த ஒடுக்குமுறை, கைதுகளின் அலை மற்றும் வடக்கு ஈரானில் ரோஷான்கூ கிராமத்தில் வீடுகள் வன்முறையாக அழிக்கப்பட்டதுடன் தொடங்கியது.

இந்த நிகழ்வுகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பான ஆதரவு அறிக்கைகள் குறித்த இணைய மற்றும் வழக்கமான ஊடக செய்திகளின் மூலம் கோடிக் கணக்கான மக்கள் சென்றடயைப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பஹாய் சர்வதேச சமூகத்தின் (BIC) சொந்த ட்விட்டர் கணக்கு அதன் அணுகல் மற்றும் துன்புறுத்தல்களை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் திறனில் ஒன்பது மடங்கு அதிகரிப்பைக் கண்டது. ரோஷான்கூவில் உள்ள தங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால் வெளியேற்றப்பட்ட பஹாய்களில் பலரைக் காட்டும் ஒரு வீடியோ மட்டுமே, ஓர் ஒளிபரப்பாளரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 3.4 மில்லியன் முறை காணப்பட்டது மற்றும் பல தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

ஈரானின் மனித உரிமைகள் நிலைமை, மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் மற்றும் சிறுபான்மை பிரச்சினைகள் குறித்து சிறப்பு அறிக்கையாளர்களால் வழிநடத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு–ஜாவித் ரஹ்மான், நஸிலா கானியா மற்றும் ஃபெர்னாண்ட் டி வாரென்னஸ் ஆகியோர்–ஆகஸ்ட் 22 அன்று ஈரானிய அதிகாரிகள் மத சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தல் மற்றும் உபத்திரவங்கள் அடிப்படை மனித உரிமைகளை மறுப்பதற்கு மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியது.

“அதிகரித்து வரும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், பஹாய் சமய உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போவது மற்றும் அவர்களின் சொத்துக்களை அழித்தல் அல்லது பறிமுதல் செய்வது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இது திட்டமிட்ட அடக்குமுறை குறித்த கொள்கையின் அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளது” என நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த ஒடுக்குமுறை நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு பரந்த கொள்கையின் ஒரு பகுதியாகும் என குறிப்பிட்டனர்.

ஈரான் நாட்டில் நிலவும் நிலைமை உலகெங்கிலும் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்களாலும் உரைக்கப்பட்டது.

நியூயார்க் டைம்ஸ் இந்த அடக்குமுறைகள் ஒரு “பரந்த ஒடுக்குமுறைக்கு” சமம் என கூறியுள்ளது. அசோசியேட்டட் பிரஸ் வாஷிங்டன் போஸ்ட் உட்பட பரந்த அளவில் பிரசுரம் செய்யப்பட்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் பஹாய்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை வெளியிட்டிருந்தபோதிலும், “பஹாய்கள் சட்டவிரோதமாக எதையும் செய்கின்றனர் என்னும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமாக ஈரான் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை” என கூறியது.

Agence-France Presse நிலைமையை ஒரு “புதிய உச்சம்” என அழைத்ததோடு, பஹாய்களுடைய “சமயத்தின் கோட்பாடுகள் “ஆக்கபூர்வமான மீள்ச்சித்திறம்” என அழைக்கப்படும் ஒரு மோதல் அல்லாத அணுகுமுறையை ஊக்குவிப்பதாகக் கூறி, ஈரான் நாட்டு பஹாய்கள் அந்நாட்டின் நன்மைக்காக உழைக்க விரும்புவதன்றி விரும்புவதாகவும், அதன் தலைமைக்கு எதிராக செயல்பட அல்ல என வலியுறுத்துவதாகவும் தெரிவித்தது. அசோசியேட்டட் பிரஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவையும் நிலைமையைப் பற்றிய முக்கிய செய்திகளை வெளியிட்டன.

பிரிட்டனின் டைம்ஸ் மற்றும் டெலிகிராப் பத்திரிகைகளில் பல ஒளிபரப்புகளின் போது பிபிசியில் (ஒளிபரப்பு 1, ஒளிபரப்பு 2), ஜேர்மனியின் Deutsche Welle (கட்டுரை 1, கட்டுரை 2), ஜெருசலேம் போஸ்ட், புதிய அரபு, டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் (கட்டுரை 1, கட்டுரை 2) மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸில் இரண்டு முறை இரண்டு கட்டுரைகளில் கவரேஜ் வெளிவந்தது. பிரெஞ்சு செய்தித்தாள்களான Le Figaro மற்றும் Le Monde ஆகியவையும் நிலைமையைப் பிரசுரித்தன. Le Monde-யில் வெளிவந்துள்ள கட்டுரை, அவற்றின் அறிக்கைகளில் மற்ற பல பத்திரிக்கைகள் போலவே ஈரானின் புவியரசியல் நிலைப்பாட்டின் பின்னணியில் சமீபத்திய துன்புறுத்தல்களை அறிவித்தது.

Toronto Star-இல் வந்துள்ள ஒரு அறிக்கை சமீபத்திய நிகழ்வுகளை ஈரானில் பஹாய்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டு வருவது, மற்றும் ஒரு தூரக்-கல்வி கற்கும் ஈரானிய பஹாய் மாணவர் அண்மையில் காணாமல் போனதுடன் தொடர்புபடுத்தியுள்ளது.

ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தால் ஜூலை 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட பெரிதும் ஏளனத்துக்குரிய அறிக்கை, வெறுப்பூட்டும் பேச்சின் வாயிலாக பஹாய்களை “காலனித்துவம்” எனவும் “மழலையர் பள்ளிகளுக்குள் ஊடுருவுகின்றனர்” எனவும் குற்றம் சாட்டி, அதைத் தொடர்ந்து சிறையிலடைப்புக்கள், கைதுகள், பின்னர் வீடுகள் மற்றும் வணிகங்கள் மீதான சோதனைகள். இதனால் அசாதாரணமான அளவு ஆதரவும் செய்திகளும் வெளிவந்தன.

அது முதல் ஈரானிய அதிகாரிகள் 200 தனித்தனி சம்பவங்களில் பஹாய்களைக் குறிவைத்து கைதுகள், தடுப்புக்காவல்கள், வீட்டுப் படையெடுப்புகள் மற்றும் தேடுதல்கள், வீடுகளை அழித்தல் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தல், உயர்கல்வி மறுப்பு, மின்னணு கணுக்கால் குறியிடுதல், அதிகப்படியான ஜாமீன்கள், அடிதடிகள் மற்றும் கைதிகளுக்கு மருந்துகளை மறுத்தல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளனர்.

BIC-யின் பிந்தைய வெளிப்பாடு, அதே நாளில், ஈரானிய பாதுகாப்பு ஏஜன்டுகள் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பஹாய் சமூகத்தின் மீது குற்றம் சாட்டிட ஒரு மழலையர் பள்ளியில் ஒரு ஜோடிக்கப்பட்ட காட்சியை அரங்கேற்றி படமாக்கினர் என்பதை அம்பலப்படுத்தியது.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி, 200 ஏஜண்டுகள் வரை மஸிந்தரானில் உள்ள ரோஷான்கூ கிராமத்தை சீல் வைத்தனர், அங்கு ஏராளமான பஹாய்கள் வசிக்கின்றனர், மேலும் ஆறு வீடுகளை இடிக்க கனரக வாகணங்களைப் பயன்படுத்தினர். பஹாய்களுக்குச் சொந்தமான சுமார் ௨௦ ஹெக்டேர் சொத்துக்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

ஐ.நா.வுக்கான BIC-யின் முதன்மை பிரதிநிதி பானி டுகால் கூறுகையில், அனைத்துலக மற்றும் ஈரானிய ஆதரவானது ஈரானிய அரசாங்கம் பஹாய்களை ஒழித்துக் கட்டவும் தனிமைப்படுத்தவும் மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்றார்.

“மூன்று வாரங்களாக அனைத்துலக சமூகமானது, ஈரானிய அரசாங்கம் பஹாய்கள் மீதான அதன் அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அச்சமூகத்திற்கு எதிரான அதன் வெறுப்புப் பிரச்சாரத்தில் புதிய தாழ்வு நிலைக்குச் சென்று, கடந்த காலத்தில் உயர்கல்வியில் இருந்து தடைசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு மேலாக, இன்னும் கூடுதலான இளம் பஹாய்களுக்கு பல்கலைக்கழகத்தில் சேரும் உரிமையை மறுத்துள்ள நிலையில்,. “ஈரானிய பல்கலைக்கழகங்களில் சமீபத்திய சேர்க்கை மீண்டும் பஹாய்களை விலக்கியது என்ற உண்மையையும் குறிப்பிட்டு மிஸ் டுகால் கூறினார். ” இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும், இப்போதே நிறுத்தப்பட வேண்டும்.”

அமெரிக்காவில், 30-க்கும் மேற்பட்ட பொதுமை சமூக அமைப்புக்களும் மனித உரிமைத் தலைவர்களும் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஒரு கடிதம் எழுதினர், அதில் அவர்கள் ஜனாதிபதியை “ஈரான் பஹாய்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களின் அளவுகள் அதிகரித்து வருவது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலைக்கு குரல் கொடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர், மேலும் “வேண்டுமென்றே ஒரு வெளிப்படையான வடிவம் ஈரானில் உள்ள பஹாய் சமூகத்தின் மீதான அடக்குமுறையை கணிசமாக அதிகரிப்பதற்கான திட்டமிட்ட முயற்சி என கூறுகிறது” எனவும் கூறினார்.

மத சுதந்திரத்திற்கான அமெரிக்க (ஐ.அ) தூதர் ரஷாத் ஹுசைன், “ஈரான் அனைத்து ஈரானியர்களின் மத சுதந்திரத்தை அல்லது நம்பிக்கையை மதிக்கும் அதன் சர்வதேச கடமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், பஹாய்களின் மீதான சோதனைகள், கைதுகள் மற்றும் அநீதியான சிறைவாசம் ஆகியவற்றின் தீவிரமடைந்து வரும் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனவும் கூறினார்.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் குறித்த நாட்டின் வெளியுறவுத் துறையின் பிரிவு, “மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான அனைவரின் உரிமைகளையும் மதிக்க வேண்டும்” என ஈரானுக்குக் கோரிக்கை விடுத்தது, இது வெளியுறவுத்துறை துணை செயலாளர் உஸ்ரா ஜெயாவால் மறு ட்வீட் செய்யப்பட்டது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) ஈரானிய அரசாங்கம் நாட்டில் மத சிறுபான்மையினர் மீதான அதிகரித்த ஒடுக்குமுறையை கண்டனம் செய்கிறது” என ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, அவ்வறிக்கையில் “ஏராளமான பஹாய்கள்” துன்புறுத்தப்படுவதையும் குறிப்பிட்டுள்ளது.

“பாதிக்கப்படக்கூடிய மத சிறுபான்மையினர் மற்றும் அமைதியான அதிருப்தியாளர்களை குறிவைப்பதன் மூலம் ஈரான் அரசாங்கம் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உருவாக்க முடியாது, இருப்பினும் அந்த நாடு மத சுதந்திரத்தின் இந்த திகிலூட்டும் மீறல்களைத் தொடர்கிறது” என (USCIRF) ஆணையர் ஷரோன் க்ளீன்பாம் கூறினார்.

நீண்டகாலமாக ஈரானில் பஹாய்களின் உரிமைகளை ஆதரித்து வந்துள்ள லக்ஸம்பர்க்கின் வெளியுறவு மந்திரியான ஜீன் அஸ்ஸல்போன், தமது அரசாங்கத்தின் கவலையை வெளிப்படுத்தியதோடு, “மனித உரிமைகளை மதித்து, அனைத்து பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான அதன் கடப்பாடுகளை நிலைநிறுத்துமாறும்” ஈரானுக்குக் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய அரசின் விம்பிள்டன் அஹ்மத் பிரபு, மனித உரிமைகள் மற்றும் மதம் மற்றும் சமய சுதந்திரம் மற்றும் நம்பிக்கைக்குப் பொறுப்பான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலக அமைச்சர், கைதுகள், வீடுகள் அழிக்கப்படுவது மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்வது மற்றும் யாரானின் முன்னாள் உறுப்பினர்களை குறிவைப்பது குறித்து இங்கிலாந்து “ஆழ்ந்த கவலை” கொண்டுள்ளது என கூறினார். “மத சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலை 2022 இல் பொறுத்துக்கொள்ள முடியாது … ஈரானை பொறுப்பேற்க வைக்கவும், ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகள் கவலைகளை எழுப்பவும் எங்கள் சர்வதேச பங்காளிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், “எனவும் அவர் கூறினார்.

கனடாவின் மனித உரிமைகள், சுதந்திரங்கள் மற்றும் உள்ளிணைவு அலுவலகம், “பஹாய்களை நசுக்கவும் துன்புறுத்தவுமான திட்டமிட்ட பிரச்சாரம்” குறித்து தனது கவலையை ட்வீட் செய்துள்ளது, மேலும் “ஈரான் மனித உரிமைகளை மதிக்கவும், மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து பாகுபாடுகளையும் அகற்றவும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கடமைகளை நிலைநிறுத்தவும் வேண்டும்” எனவும் கூறியுள்ளது.

மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான இங்கிலாந்தின் தூதரும் சர்வதேச மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான ஃபியோனா புரூஸ் MP., மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின் 18-வது பிரிவு “தெளிவானது” எனவும், நம்பிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான மற்றும் வெளிப்படுத்தும் உரிமை “எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும்” எனவும் ட்விட்டரில் கூறினார்.

ஜெர்மனியின் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான தூதர் ஃபிராங்க் ஷ்வாப், ட்விட்டரில், பஹாய்கள் “அபத்தமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் … சிறைப்படுத்தப் பட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும், என கூறியுள்ளார்.

பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க பிரதிநிதிகளும் அடக்குமுறைக்கு எதிராக தங்கள் எதிர்ப்புக் குரலை அதிகரித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெட் டியூட்ச், தான் அறிமுகப்படுத்திய ஒரு மசோதாவை நிறைவேற்றுமாறு பிரதிநிதிகள் சபையை வலியுறுத்தினார், அது “பஹாய்களின் மீதான ஈரானின் அடக்குமுறையைக் கண்டிக்கிறது மற்றும் பஹாய்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட துஷ்பிரயோகங்கள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு நேரடி பொறுப்பான ஈரானின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு ஜனாதிபதியையும் வெளிவிவகாரச் செயலாளரையும் வலியுறுத்தினார்.”

இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான ரூத் ஜோன்ஸ் எம்.பி., வீரேந்திர சர்மா எம்.பி., மற்றும் டேவிட் ஆல்டன் பிரபு ஆகியோரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் லாம்யா கட்டோர், ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர், பஹாய்கள் மீதான துன்புறுத்தல் “மிகவும் சிக்கலானது” எனவும் பல தசாப்தங்களாக நடந்து வருவதாகவும் கூறினார்.

பிரேசில் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர், Frei Anastácio, தனது “பஹாய்களுடனான ஐக்கியத்தை வெளிப்படுத்தினார்… அவர்கள் அனுபவிக்கும் தாக்குதல்கள் குறித்தும்” ஈரான் அரசாங்கம் “மனித உரிமைகள் உடன்படிக்கைகளை மதிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தும் அதே நேரத்தில் பிரேசில் அரசாங்கத்தை இதில் தலையிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

சர்வதேச மன்னிப்புச் சபையும் ஓர் அவசர நடவடிக்கையை வெளியிட்டது, அதில் ஈரானிய பஹாய்கள் “அவர்களின் மனித உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன” என கூறியதுடன், தேசிய பொதுமன்னிப்பு அத்தியாயங்களை ஈரானின் நீதித்துறையின் தலைவருக்கும் இரண்டு அரசு வழக்கறிஞர்களுக்கும் எழுதுமாறு கேட்டுக்கொண்டது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரான கென்னத் ரோத், நெருக்கடி வெடித்தபோது, ட்விட்டரில் ஆங்கிலத்தில் செய்திகளை முதலில் வெளியிட்ட அனைத்துலக மட்டத்தினருள் ஒருவராக இருந்தார்.

செமிட்டிஸ எதிர்ப்பு, தீவிரவாதம், வெறுப்பு மற்றும் மதவெறி ஆகியவற்றைக் கையாளும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மற்றும் அனைத்துலக பொது சமூக அமைப்பான அவதூறு எதிர்ப்பு லீக்கின் மத்திய கிழக்கு சிறுபான்மையினர் மீதான பணிக்குழு, ஈரானிய அரசாங்கம் ஈரானிய ஆட்சியால் “நீண்டகாலமாக அவதூறு செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டு வரும்” ஈரானிய பஹாய்களுக்கு எதிராக “நடப்பிலிருக்கும் மிருகத்தனத்தை” நிரூபித்துள்ளது என அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

“ஈரான் அரசாங்கத்தின் மேல்மட்டத்தில் இருந்து பாதிக்கப்படக்கூடிய மக்களை இலக்காகக் கொண்ட தொடர்ச்சியான கடுமையான மற்றும் அதிகரித்து வரும் நடவடிக்கைகளில் இந்த தாக்குதல்கள் சமீபத்தியவை, கடந்த சில ஆண்டுகளில் நாம் கண்டதை விட அதிக அளவு அடக்குமுறையைக் குறிக்கின்றன” என அந்த அறிக்கை கூறியது.

மஹ்வாஷ் சபேத், ஃபரிபா கமலாபாடி மற்றும் அஃபிஃப் நயேமி ஆகியோர், கலைக்கப்பட்ட யாரானின் மூன்று முன்னாள் உறுப்பினர்கள், அல்லது ஈரானின் “நண்பர்கள்”, 2008 வரை ஈரானிய பஹாய் சமூகத்தின் முறைசாரா தலைமைக் குழுவாக இருந்த, கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இவர்கள் மூவரும் 2018-ஆம் ஆண்டு விடுதலை ஆவதற்கு முன்பு ஒரு தசாப்தம் சிறையில் கழித்திருந்தனர்.

எழுத்தறிவு வெளிப்பாட்டு சுதந்திரக் குழுவான PEN இன்டர்நேஷனல் மற்றும் அதன் ஆஸ்திரிய, ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் நோர்வே அத்தியாயங்கள், மஹ்வாஷ் சபேத்தின் கைது குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தின. சிறையில் இருந்த முந்தைய பத்தாண்டுகளில் கவிதை எழுதிய திருமதி சபெட், 2017-ஆம் ஆண்டில் ஆங்கில PEN-ஆல சர்வதேச தைரிய எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

கனடாவின் மனித உரிமைகளுக்கான ராவுல் வாலன்பெர்க் மையமும் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில் சமீபத்திய நிகழ்வுகள் “ஈரானில் பஹாய்களுக்கு எதிரான ஈரானிய ஆட்சியின் நீண்டகால வெறுப்பு மற்றும் அடக்குமுறையை ஒரு பிரதிபலிக்கும் கண்ணாடி என பார்க்கின்றன” என கூறியது, ஈரானின் 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இதுபோன்ற குற்றங்களுக்காக எவரும் கைது செய்யப்படவோ அல்லது வழக்குத் தொடரப்படவோ இல்லை” என ஓர் பயமற்ற கலாச்சாரத்தில்” “தடையின்றி” இது தொடர்ந்துள்ளது.

ஈரானிய சிவில் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும், சமூக மற்றும் அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கார்ட்டூனிஸ்டுகள் மற்றும் நகைச்சுவை நடிகர்கள், மத அறிஞர்கள் மற்றும் ஒரு சில மதகுருமார்கள், பத்திரிகையாளர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் மனசாட்சிக் கைதிகள், பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், மத அறிவாளர்கள் மற்றும் சமூக மற்றும் அரசியல் விமர்சகர்கள், மற்றும் நூறாயிரக்கணக்கான பிற ஈரானியர்கள்.ஆகியோரிடமிருந்தும் ஒற்றுமைக்கான முன்கண்டிராத அழைப்புடன் இந்த ஆதரவை வழிநடத்தியது. 

ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய ஈரானியர்கள் அதிகரித்து வரும் துன்புறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு, “பஹாய்களின் பொது மற்றும் மனித உரிமைகள் என வரும்போது, நாங்கள் எங்களையும் பஹாய்கள் என்றே கருதுகிறோம்” எனப் பிரகடனம் செய்தனர்.

கிளப்ஹவுஸில் உள்ள பல குழுக்கள் பஹாய் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் பிற நிபுணர்களுக்கு விருந்தளித்தன, அவர்கள் பத்தாயிரக்கணக்கான பார்வையாளர்களுக்காக, பஹாய்களின் நிலைமை ஏன் அனைத்து ஈரானியர்களையும் கவலைக்குள்ளாக்கியது.என்பதை விவாதித்தனர்.

ஒரு வியத்தகு ஒற்றுமை நடவடிக்கையில், மனித உரிமை ஆர்வலர்கள், நண்பர்கள் மற்றும் ஈரானுக்குள் உள்ள பஹாய்களின் ஆதரவாளர்கள், பாரசீக மொழி ட்விட்டரில் 24 மணி நேரத்திற்கும் மேலாக டிரெண்டிங் ஆன #BahaisUnderMassiveAttacks மற்றும் #BeingBahaiIsNotaCrime ஹேஷ்டேக்குகளுடன் ஒரு ட்விட்டர் புயலை ஏற்பாடு செய்தனர், மேலும் பல மணிநேரங்களுக்கு பாரசீக மொழியில் முதல் இரண்டு டிரெண்டிங் ஹேஸ்டேக்குகளாகவும் அவை இருந்தன

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் மனித உரிமைகள் வழக்கறிஞருமான ஷிரின் எபாடி மற்றும் புகழ்பெற்ற ஈரானிய மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான மெஹ்ராங்கிஸ் கார் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டனர். வரலாற்றாசிரியர் அப்பாஸ் மிலானி ட்விட்டரில், பஹாய் சமயத்தின் தொடக்கத்திலிருந்தே, “பஹாய்களுக்கு எதிரான கொடிய வெறுப்பு மற்றும் அவர்களின் படுகொலை” என்று அவர் குறிப்பிட்டது மத தப்பெண்ணத்தில் வேரூன்றியுள்ளது என கூறினார்.

ஈரானில் மனித உரிமை செயற்பாட்டாளரான அராஷ் சதேகி, பஹாய்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும் என கோரினார்.

ஈரானிய ஷியா மதகுருவான செயித் முகமது அலி அய்யாசி, “பஹாய்களின் வீடுகளை இடிப்பதை எந்த மதக் கட்டமைப்பு நியாயப்படுத்துகிறது?” என கேள்வி எழுப்பினார். … ஏற்கனவே தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்துள்ள குடிமக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை நாம் இப்போது காண்கிறோம்.

ஈரானிய-அமெரிக்க எழுத்தாளரும், வர்ணனையாளருமான ரோயா ஹகாக்கியன், “என்றாவது ஒரு நாள் மற்றவர்கள் ஈரானைத் திரும்பிப் பார்ப்பார்கள், மிகவும் சோகமான கதையும் கூட மிகவும் எழுச்சியூட்டும் கதை- பஹாய்களின் கதைதான் என்பதைக் காண்பார்கள். 43 ஆண்டுகளாக வேறு எந்த சிறுபான்மையினரும் இவ்வளவு முறைமையுடன் தாக்கப்படவில்லை. ஆயினும்கூட, மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மைக்கு அவர்களை விட வேறு யாரும் வாதிடவில்லை.”

பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான ஜாவத் அப்பாஸி தவலாலி கூறுகையில், “பஹாய்’களில் மதகுருமார்கள், முல்லாக்கள் அல்லது முஃப்திகள் இல்லை. ஈரானிய ஆட்சி பஹாய் நம்பிக்கைகளைக் கண்டு அஞ்சுகிறது. நமது பஹாய் சக குடிமக்களின் குரலாக நாம் இருப்போம்.”

நியூசிலாந்தைச் சேர்ந்த ஈரானியரான பெஹ்ரூஸ் பூச்சானி, “பாகுபாடு என்னும் சொல் ஈரானில் பஹாய் சிறுபான்மையினரின் நிலைமையை போதுமான அளவு விவரிக்க முடியாது. அவர்கள் கடந்து வருவது பாகுபாடு அல்ல, மாறாக ஓரங்கட்டுதல், நாடுகடத்துதல் மற்றும் இறுதியில் அகற்றுதல் ஆகியவற்றிற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும். பாரபட்சம் சமத்துவமற்ற வாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பொருந்தும், ஆனால் பஹாய்களுக்கென வரும்போது, அவர்களை ஒழிப்பதே குறிக்கோளாகும்.”

ஜெர்மனியில் ஈரானிய பத்திரிகையாளரான மரியம் மிர்ஸா கூறுகையில், “ஈரானிய பஹாய்களின் தற்போதைய சூழ்நிலையில் நாங்களும் எங்கள் பெற்றோர் மற்றும் எங்கள் பெற்றோர்களின் பெற்றோர்கள் அனைவரும் ஒரு பங்கைக் கொண்டுள்ளோம். நமது வரலாற்றுக் கூட்டு பஹாய் எதிர்ப்பு என்னும் அவமானத்தை ஈடுகட்டும் வகையில் நமது குரலை உயர்த்துவோம்.”

ஈரானிய தத்துவஞானியான சோரூஷ் டப்பாக் கூறுகையில், “ஒரு முஸ்லிமாகவும், ஒரு மத அறிவார்ந்த குடும்பத்தின் உறுப்பினராகவும், அன்புள்ள பஹாய் சக குடிமக்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன், மேலும் ரோஷான்கூ, மஸிந்தரானில் வசிப்பவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன், இது பஹாய் சமயத்தில் உரிமையாளர்களின் சமய நம்பிக்கை காரணமாக நடந்தது. நாம் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, யூதர்களாக இருந்தாலும் சரி, பஹாய்களாக இருந்தாலும் சரி, நாத்திகர்களாக இருந்தாலும் சரி, நமது சிவில் உரிமைகளைப் பாதுகாப்பது சகவாழ்வுக்கான முன்நிபந்தனையாகும், அதை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்க முடியாது.”

ஒரு வரலாற்றாளரான, அபான் தஹ்மாஸ்பி, ஈரானிய பஹாய்களுக்கு ஒரு குரலாக இருப்பது தமக்கு “கௌரவமாகும்” என கூறினார்.

பஹாய் அனைத்துலக சமூக செய்தித் தொடர்பாளர்கள் பல்வேறு பாரசீக மொழி சுயாதீன ஒளிபரப்பாளர்களால் குறைந்தது 37 முறை நேர்காணல் செய்யப்பட்டனர். பி.ஐ.சி. பிரதிநிதிகள் தங்கள் முயற்சிகளின் விளைவாக அச்சுறுத்தல்கள் மற்றும் பிற வகையான வெறுப்பு பேச்சுக்களையும் கூட பெற்றனர்—ஈரானிய பார்வையாளர்களுடன் துன்புறுத்தல் தொடர்பான பொருண்மைகளையும் உண்மைகளையும் பகிர்ந்து கொள்வதில் அவர்கள் பெற்ற வெற்றியின் தெளிவான அறிகுறியாகும்.

எகிப்து, அஜர்பைஜான், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லெபனான், யேமன் மற்றும் குர்திஸ்தான் உட்பட மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதிலும் டஜன் கணக்கான செய்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமை சமூகக் குழுக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆதரவு மற்றும் அனுதாபச் செய்திகளை வெளியிட்டன. “உலகளாவிய சமூகத்தின் விடையிறுப்பு இதயத்தைத் தூண்டும் மற்றும் முற்றிலும் தெளிவாக உள்ளது: ஈரானிய அரசாங்கம் பஹாய்களை இடைவிடாது துன்புறுத்துவது உலகின் பார்வையில் அதன் சொந்த நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் சேதப்படுத்துகிறது” என திருமதி டுகால் கூறினார். ” துன்புறுத்தல் முடிவுக்கு வரும் வரை பொதுக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்படும் என்பதையும், பஹாய்கள் தங்கள் சொந்தத் தாய்நாட்டில் முழு குடிமக்களாக வாழ முடியும் என்பதையும் ஈரான் அறிந்து கொள்ள வேண்டும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1613/

பஹாய் உலக செய்தி சேவை: ரஷ்ய மொழியில் செய்தி சேவையின் ஆரம்பம்


19 ஆகஸ்ட் 2022

பஹாய் உலக மையம் — பஹாய் உலகச் செய்திச் சேவையானது இப்போது ரஷ்ய மொழியில் கிடைக்கிறது, இது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் செய்தித் தளம் முதன்முதலில் உருவாக்கப்பட்டதிலிருந்து சமீபத்திய முன்னேற்றங்களைக் குறிக்கிறது.

2000-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட செய்திச் சேவையானது, சமூக மேம்பாட்டிற்குப் பங்களிப்பதற்கான உலகளாவிய பஹாய் சமூகத்தின் முயற்சிகளில் இருந்து வெளிப்படும் நுண்ணறிவு குறித்த சிந்தனையைத் தூண்டும் கதைகளை வெளியிடுகிறது.

ரஷ்ய தளம் ஆங்கிலம் மற்றும் செய்தி சேவையின் மற்ற மூன்று மொழி பதிப்புகளுடன் அமர்ந்துள்ளது: பிரெஞ்சு, பாரசீக மற்றும் ஸ்பானிஷ்.

வலைத்தளத்திற்கு கூடுதலாக, செய்தி சேவை மொபைல் பயன்பாடு (Android மற்றும் iOS), Facebook, Instagram, Twitter மற்றும் YouTube மற்றும் மின்னஞ்சல் சந்தா மூலமாகவும் கிடைக்கும்.

பஹாய் உலக செய்தி சேவை இணையதளத்தின் சமீபத்தில் தொடங்கப்பட்ட ரஷ்ய மொழி பதிப்பின் முகப்புப்பக்கம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1612/

அப்துல்-பஹாவின் நினைவாலயம்: துப்புரவு வேலைகள் முடிவடைந்ததால் கட்டுமானப் பணி தொடர்கின்றது


16 ஆகஸ்ட் 2022

பஹாய் உலக மையம், 16 ஆகஸ்ட் 2022, (BWNS) – ஏப்ரல் தொடக்கத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் உண்டாகிய தீ விபத்தைத் தொடர்ந்து, ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேம்பாடு கண்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைகளை அகற்றுவதில் திட்டக்குழு முன்னேறியுள்ளது. விரிவான சோதனையைத் தொடர்ந்து, உலக நீதிமன்றம் சன்னதியைப் பற்றிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, கடந்த மாதம், திட்டக் குழு பாதிக்கப்பட்ட பரப்புகளில் மேலும் மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளைத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், தீயினால் பாதிக்கப்படாத திட்டத்தின் பிற அம்சங்களில், வடக்கு பிளாசாவில் உள்ள பூந்தொட்டிகள், இத்தாலியில் ட்ரெல்லிஸிற்கான பளிங்கு உறைகளை வெட்டுதல் மற்றும் வடிவமைத்தல் மற்றும் போர்ச்சுகல் நாட்டில் மெருகூட்டல் உற்பத்தி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. பார்வையாளர்கள் மையம் மற்றும் இதர வசதிகளின் கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

தீயினால் பாதிக்கப்பட்ட கான்கிரீட் சுவர்கள் நீரைக் கொண்டு கழுவி சுத்தம் செய்யப்பட்டுள்ளன. உடைந்த அல்லது தளர்வான கான்கிரீட் துண்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இதே சுவர்கள் ரீபார் மூலம் வலுவூட்டப்பட்டு, கூடுதல் கான்கிரீட் அடுக்கு பயன்படுத்தப்படுகிறது. விவரக்குறிப்புகளின்படி அவற்றின் தடிமன் மீட்டமைக்கப்படும்.
ஒரு சிறப்பு கருப்புப் பூச்சைப் பயன்படுத்தி மேற்கு பெர்ம் நீர்ப்புகாப்பு முடிந்தது. பெர்ம் முடிவடையும் போது புற ஊதா கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க நீர்ப்புகா பொருளின் மேல் பாதுகாப்பு பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒரு சிறப்பு நீர்ப்புகா பூச்சைப் பயன்படுத்தி பூந்தொட்டிவேலை தொடர்ந்தது.
பாலிஸ்டிரீன் (இபிஎஸ்) ஃபார்ம்வொர்க் வைப்பு மேற்கு பெர்மில் வேகமாக முன்னேறி வருகிறது. இவை சன்னதியின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் உள்ள தோட்டங்களின் அமைப்பிற்கு ஆதரவு நல்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1611/

பஹாய் உலகம் வெளியீடு: புதிய கட்டுரை சமுதாய நீதிக்கான முயற்சியை ஆராய்கிறது


12 ஆகஸ்ட் 2022

பஹாய் உலக மையம் – கடந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் ஒருமைப்பாடு பற்றிய அதிகரிக்கும் நனவுணர்வால் தூண்டப்பட்ட, அநீதியை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட சமூக இயக்கங்களின் வளமான பரப்பு வெளிப்பட்டது.

மிக சமீபத்திய பஹாய் உலகக் கட்டுரை, “சமூக நீதிக்கான முயற்சி”, இந்த அதிகரித்து வரும் பரப்பை ஆராய்கிறது. சமூக நீதிக்கான அவற்றின் பணியில் நடைமுறையில் உள்ள இயக்கங்கள் பயன்படுத்தும் அணுகுமுறைகளுடன் பஹாய் முயற்சிகளில் இருந்து அடிப்படை ஆன்மீகக் கோட்பாடுகள் மற்றும் நுண்ணறிவுகளை இக்கட்டுரை தொடர்புபடுத்துகிறது.

பஹாய் உலகம் இணையதளம், மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்குத் தொடர்புள்ள கருப்பொருள்கள் மற்றும் சிந்தனை மற்றும் செயல் நிலைகளில், பஹாய் நம்பிக்கையின் ஆற்றல்மிக்க வரலாறு, உலகளாவிய பஹாய் சமூகத்தில் முன்னேற்றங்களைச் சிறப்பித்துக் காட்டும் கட்டுரைகள் மற்றும் நீண்ட வடிவக் கட்டுரைகளின் தொகுப்பை வழங்குகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1610/

சுவர்க்கத்திற்கான நுழைவாயில்


(சாரா பெர்சிவல் – குழந்தைகளுக்கான கதைகள்)

(அப்துல் பஹாவுக்கு 9 குழந்தைகள் பிறந்தனர், 7 பெண்களும் 2 ஆண்களும். இந்த 9 பிள்ளைகளில் 4 பேர் மட்டுமே முதுமை வரை வாழ்ந்திருந்தனர். சிறு வயதிலேயே இறந்தோரில் ருஹாங்கிஸ் என்னும் பெண் பிள்ளையும் இருந்தார். இந்தக் கதை அவரைப் பற்றியது.)

அப்துல்-பஹாவுக்கும் முனிரி ஃகானுமுக்கும் பல பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்த போது, ஐயோ பாவம், இதுவும் பெண் குழந்தையாகப் பிறந்துவிட்டதே, ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா என்றனர் அங்கிருந்தோர். அதை கேட்ட பஹாவுல்லா, அவர்களைக் கண்டித்து, அவர்கள் அவ்விதம் பேசக்கூடாது என அறிவுரை கூறினார். தாம் இந்தக் குழந்தையை மற்ற குழந்தைகளைவிட அதிகமாக நேசிக்கப்போவதாகக் கூறினார். தமது பேத்தியான இந்தப் பெண் குழந்தையே தமது மிகுந்த பாசத்திற்குரிய பேத்தியாக இருப்பார் எனவும் கூறினார். அவள் ஆணாகப் பிறந்திருக்கக்கூடாதா என யாரும் கூறக்கூடாது என்றார். அந்தப் பெண் குழந்தையின் பெயர் ருஹாங்கிஸ். அப்பெண் குழுந்தையும் வளர்ந்தது. வளரும் போது பஹாவுல்லாவின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தது. ருஹாங்கிஸ்ஸின் அன்பார்ந்த தாத்தா பஹாவு்லலா அவள் மீது பெரும் பாசம் வைத்திருந்தார்.

முனிரிஃ காஃனுமின் கல்லறை

ஒரு நாள் ஒரு சேவகர், அப்துல்-பஹாவை ஒரு செய்தியுடன் காண வந்தார். பஹாவுல்லா நோயுற்றிருக்கின்றார் எனவும் அவர் அப்துல்-பஹாவைக் காண விரும்புகின்றார் எனவும் தெரிவித்தார். அங்கு எல்லாரும் மிகவும் கவலையுற்றிந்தனர். பஹாவு்லலாவை தங்களால் முடிந்த அளவு சௌகர்யமாக வைத்திருக்க முயன்றனர். ஆனால் அவருக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் அதிகமாகியது. 19 நாள்கள் காய்ச்சலுக்குப் பிறகு, ஒரு நாள் அதிகாலை வேளை அவரது ஆன்மா இவ்வுலகை நீத்து ஒளியுலகில் அவரது சிருஷ்டிகர்த்தாவைச் சென்றடைந்தது.

பஹாவுல்லாவின் நினைவாலயம்

எல்லாரும் மனமுடைந்து போயினர். உடனடியாக, ஒரு குதிரைக்காரர் பஹாவுல்லா விண்ணேற்றம் அடைந்துவிட்டார் என்பதை அறிவிக்க அக்காநகரத்திற்கு விரைந்தார். விரைவில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் புனிதமான மனிதர்களுக்கென ஓதப்படும் ஒரு பிரார்த்தனை அங்கிருந்த பள்ளிவாசல்கள் அனைத்திலும் ஒலித்தது. ‘கடவுளே வல்லவர் அவர் உயிரை வழங்குகிறார், அதை எடுத்துக்கொள்ளவும் செய்கின்றார். அவர் இறப்பதில்லை அவர் என்றென்றும் நிலையாக வாழ்கின்றார்.’ விரைவில் அருகிலும் சுற்றிலும் உள்ள கிராமங்களில் இந்த பிரார்த்தனை ஓதப்படும் ஒலி செவிமடுக்கப்பட்டது. அதைக் கேட்ட அனைவரும் தங்களின் மரியாதையைச் செலுத்த வந்தனர்.

நடுவரிசையில் அப்துல் பஹாவின் குடும்பத்தினர்

அப்துல்-பஹாவின் மகள் ருஹாங்கிஸ், பஹாவுல்லாவின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். அது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் சோகம் நிறைந்த நாள்களாக இருந்தன. அப்துல்-பஹா ருஹாங்கிஸுக்கு ஆறுதல் கூறினார். ஆனால் ருஹாங்கிஸ்ஸோ, தமக்கு எதுவும் வேண்டாம், தாம் பஹாவுல்லாவுடன் இருக்கவே விரும்புவதாகக் கூறினார். தாமும், சுவர்க்கத்திற்கு செல்லும் அதே வாசல் வழியாகச் சுவர்க்கம் செல்ல விரும்புவதாகக் கூறினார்.

அவர் எல்லா நேரங்களிலும் பஹாவுல்லா இருக்கும் அந்தத் தெய்வீகமான இடத்தைப் பற்றியே பேசி வந்தார். அவர் அந்த ஒளிமிகு அழகிய இடத்தை பற்றிப் பேசி, விரைவில் அதற்கு மிகவும் அணுக்கமாகிவிட்டது போன்றிருந்தது. அடுத்த நாளே ரூஹாங்கிஸ்ஸும் நோயுற்றார். அந்த நோய் குணமாகவில்லை. அவரும் இவ்வுலகிலிருந்து மறைந்து, என்றென்றும் பஹாவுல்லாவின் அருகிலிருக்க சென்றார்.

_______________________________________________

(Abdu’l-Bahá had 9 children, 7 girls and 2 boys. Only 4 of these 9 children lived to old age. Among those who died young was a girl named Ruhangiz. This story is about her.)

Abdu’l-Baha and Munirih Khanum had many daughters. When a girl child was born to them again, those who were there said, “Oh my God, this one too has been born a girl and shouldn’t she have been born as a boy.” Bahá’u’lláh, on hearing this, rebuked them and advised them not to speak like that. He said that he would love this child more than any other child. He also said that this girl who is his granddaughter will be his most affectionate granddaughter. He said no one should say that she should have been born a boy. The baby girl’s name was Ruhangiz. The girl child grew. While growing up she had great attachment and respect for Bahá’u’lláh. Baha’u’llah, Ruhangis’ beloved grandfather, had great love for her.

One day a servant came to see Abdu’l-Bahá with a message. He announced that Bahá’u’lláh was ill and that he wished to see ‘Abdu’l-Bahá. Everyone there was very worried. They tried to keep Bahá’u’lláh as comfortable as possible. But his fever increased. After 19 days of fever, one morning his soul left this world and reached its creator in the world of light.

Everyone was heartbroken. Immediately, a horseman rushed to Acca to announce that Bahá’u’lláh had ascended. Soon a prayer recited for the most venerable and pious men rang out in all the mosques there. ‘God is Almighty, He gives life and takes it away. He does not die, He lives forever.’ Soon the sound of this prayer being recited was heard in the nearby and surrounding villages. All who heard it came to pay their respects.

Abdu’l-Bahá’s daughter Ruhangiz had great love for Bahá’u’lláh. Those were very sad days for her and her family. Abdu’l-Bahá consoled Ruhangiz. But Ruhangiz said that she wanted nothing, that she only wanted to be with Bahá’u’lláh. She also said that she wanted to go to heaven through the same gate that leads to heaven.

She was always talking about that divine place where Bahá’u’lláh was. She talked about that bright and beautiful place and soon it seemed to be very near. The very next day Rouhangis also fell ill. The disease could not be cured. She also passed away from this world and went to be with Bahá’u’lláh forever.

வழிபாட்டு இல்லங்கள்: DRC கோவிலின் நுண்ணிய வெளிப்புற வடிவமைப்பு வெளிப்படுகின்றது


3 ஆகஸ்ட் 2022

கின்ஷாஷா, காங்கோ ஜனநாயகக் குடியரசு — சமீபத்திய வாரங்களில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) உள்ள பஹாய் வழிபாட்டு இல்ல குவிமாடத்தின் அலங்கார ஓட்டு உறைப்பூச்சு வேலை, பிரதான கட்டிடம் மற்றும் சுற்றியுள்ள மைதானம் ஆகியவற்றின் பிற அம்சங்களின் முன்னேற்றத்துடன் சேர்ந்து குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியுள்ளது, .

குவிமாடத்தின் ஓடுகள் காங்கோ நதியைக் குறிக்கும் நுண்ணிய வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அதன் துணை நதிகள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மழையை ஒரு பெரிய நீரோடையாக சேகரிக்கின்றன. பாரம்பரிய கலைப்படைப்புகளை நினைவூட்டும் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த வடிவமுறை, அனைத்து மக்களும் ஒன்றிணைவதை ஒரு சக்திவாய்ந்த காட்சியாக வழங்குவதுடன் மனிதகுலத்தின் ஒருமைப்பாடு பற்றிய பஹாய் கொள்கையையும் பிரதிபலிக்கிறது.

“வழிபாட்டு இல்லம் அனைத்து பின்னணியிலும் உள்ள மக்களுக்குத் திறந்திருக்கும், மற்றும் மனிதகுலத்திற்கான வழிபாடு மற்றும் தன்னலமற்ற சேவை எண்ணும் பிரிக்கமுடியாத கொள்கைகளை பிரதிநிதிக்கின்றது” என பஹாய் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் ரேச்சல் ககுட்ஜி கூறுகிறார்.

மிஸ். ககுட்ஜி தங்கள் சக குடிமக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதைப் பற்றி ஆழமாகப் பிரதிபலிக்க, அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கும் DRC முழுவதும் உள்ள பலருக்கும் ஊக்கமளிக்கின்றது என விளக்குகிறார்.

“இதனால்தான் சமூக மேம்பாட்டிற்கான ஒரு சக்தியாக வழிபாட்டு இல்லத்தைப் பற்றிய புதிய வீடியோ தொடரை இணையத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என அவர் விளக்குகிறார்.

“வீடியோ வலைப்பதிவு வெளிப்படும் கோவிலின் முன்னேற்றத்தைக் காட்டுவதுடன் நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நாம் அனைவரும் எவ்வாறு செயல்பட முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது,” என அவர் கூறுகிறார்.

கட்டுமானப் பணியின் முன்னேற்றம் கீழே உள்ள படங்களின் தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.

வெளிப்புறச் சுவர்களின் மேல் அமர்ந்திருக்கும் கீழ் விதான எஃகு கட்டமைப்பை உயர்த்துவது கிட்டத்தட்ட முடிந்ததுள்ளது
மேல் விதான எஃகு கட்டமைப்பின் ஒன்பது பிரிவுகளில் முதல் பகுதி நிறுவப்பட்டதன் ஆரம்பக் காட்சியை இங்கே காணலாம். மேல் விதானத்தின் ஒன்பது பிரிவுகளும் இப்போது அதனதன் இடத்தில் உள்ளன.
விதானங்கள் முடிவடைந்தவுடன், அலங்கார ஓடுகளை வைப்பதற்கு தயார்படுத்துவதற்காக குவிமாட கட்டமைப்பின் வெளிப்புற பக்கங்களில் நீர்ப்புகா சிமெண்ட் பலகை பேனல்கள் வைக்கப்பட்டன.
ஓட்டு உறைப்பூச்சு வேலையின் சமீபத்திய காட்சி.
ஓட்டு வேலைப்பாட்டின் ஒரு காட்சி
மத்திய கட்டிடம் மற்றும் சுற்றியுள்ள பகுதியின் ஒரு காட்சி
இந்த படம் வெளிப்புற சுவர்களில் சமீபத்திய வேலைகளைக் காட்டுகிறது, இதில் விளைவுத்திறத்துடன் காற்றோட்டத்தை அனுமதிக்கும் காற்றுக் கற்தொகுதிகள் உள்ளன.
கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்களில் தற்போது முடிக்கப்பட்ட பிரதிபலிப்பு குளம் இங்கே காணப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட பிரதிபலிப்புக் குளம்
கோவிலின் மாலை வேளை காட்சி
வெளியில் ஒன்று கூடும் இடத்திற்கான அடித்தளப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
கோவில் வளாகத்தில் நில வடிவமைப்புப் பணி நடந்து வருகிறது. மைதானத்தில் கின்ஷாசாவில் உள்ள உள்ளூர் நர்சரிகளில் இருந்து பூக்களை உள்ளடக்கியிருக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1609/

சமீப செய்தி: 6 பஹாய் வீடுகள் அழிக்கப்பட்டன மற்றும் ஈரானிய அரசாங்க முகவர்களால் 20 ஹெக்டேர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது


ஆகஸ்ட் 3, 2022

BIC ஜெனீவா – சுமார் 200 ஈரானிய அரசாங்க முகவர்கள் 6 வீடுகளை அழித்துள்ளனர் மற்றும் மஸந்தரான் மாகாணத்தில் உள்ள ரோஷான்கூ கிராமத்தில் பஹாய்களுக்கு சொந்தமான 20 ஹெக்டேர் நிலத்தை அபகரித்துள்ளனர் என செய்தி சேவை அறிந்தது.

மக்களை கலைக்க அரசு முகவர்கள் மிளகு நீரைப் பயன்படுத்தியதுடன் நடவடிக்கையின் போது துப்பாக்கி சத்தமும் செவிமடுக்கப்பட்டு.

இந்த சமீபத்திய நடவடிக்கை பல வாரங்களாக பஹாய்கள் மீதான துன்புறுத்தலை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து வருகிறது: சமீப நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் ஜூன் மாதத்தில் இருந்து குறி வைக்கப்பட்டுள்ளனர்.

“பஹாய்களைத் துன்புறுத்துவது பற்றிய ஈரானிய அரசாங்கக் கொள்கை ஆவணங்களைக் கருத்தில் கொண்டு, சர்வதேச சமூகம் தாமதமாகும் முன் உடனடியாகச் செயல்பட வேண்டும்” என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) பிரதிநிதி டயான் அலாய் கூறினார்.

ஈரானிய அரசாங்க முகவர்களால் மஸந்தரான் மாகாணத்தில் உள்ள ரூஷன்கோவ் கிராமத்தில் உள்ள சில பஹாய் வீடுகள் அழிக்கப்பட்ட காட்சி
ஈரானில் பஹாய்கள் மீதான துன்புறுத்தல் “ஈரானில் பஹாய்கள் மீதான துன்புறுத்தல் ஆவணக் காப்பகம்” என்னும் இணையதளத்தில் பரவலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1608/

சமீப செய்தி: குடியிருப்புகள் இடிக்கப்படுதலும் நில அபகரிப்புகளும் இரான் பஹாய்கள் மீதான தீவிரமடைந்து வரும் அடக்குமுறையை சமிக்ஞை செய்கின்றன


BIC ஜெனீவா, 2 ஆகஸ்ட் 2022, (BWNS) – ஒரு கொடூரமான தீவிரமடைதலில், ஈரான் முழுவதும் பஹாய்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, 200 ஈரானிய அரசாங்க மற்றும் உள்ளூர் முகவர்களும் மசாந்தரன் மாகாணத்தில் உள்ள ரூஷான்கோவ் கிராமத்திற்கு சீல் வைத்துள்ளனர். அங்கு ஏராளமான பஹாய்கள் வசிக்கின்றனர், மேலும் அவர்களின் வீடுகளை இடிக்க கனரக மண் அள்ளும் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.

  • கிராமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
  • முகவர்களுக்கு சவால் விட முயன்ற எவரும் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்டனர்.
  • முகவர்கள் அங்கிருந்தவர்களின் மொபைல் சாதனங்களை பறிமுதல் செய்து படம் எடுக்க தடை விதித்துள்ளனர்.
  • அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், படம் எடுக்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • கட்டுமானப் பணியில் இருந்த நான்கு வீடுகள் ஏற்கனவே இடிந்துள்ளன.
    பஹாய்கள் தங்களுடைய சொந்த வீடுகளுக்குள் நுழைவதைத் தடுக்க அதிகாரிகள் வலுவான உலோக வேலிகளை நிறுவுகின்றனர்.

ரூஷன்கோவில் உள்ள பஹாய்கள் கடந்த காலங்களில் நில அபகரிப்பு மற்றும் வீடு இடிப்புகளுக்கு பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கை பல வாரங்களாக பஹாய்கள் மீதான தீவிர துன்புறுத்தலைத் தொடர்ந்து வருகிறது: சமீபத்திய வாரங்களில் 100-க்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ஒவ்வொருவரும் தங்கள் குரலை உயர்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம் மற்றும் இந்த அப்பட்டமான துன்புறுத்தல் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஈரானில் பஹாய்கள் துன்புறுத்தப்படுவது பற்றிய புதிய செய்திகள் வருகின்றன, ஈரானிய அதிகாரிகள் ஒரு படிப்படியான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படுகிறது, முதலில் அப்பட்டமான பொய்கள் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சு, பின்னர் சோதனைகள் மற்றும் கைதுகள் மற்றும் இன்று. நில அபகரிப்புகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் வீடுகளை அழித்தல்,” என கடந்த பல வாரங்களைக் குறிப்பிட்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான பஹாய் சர்வதேச சமூகத்தின் (BIC) பிரதிநிதி டயேன் அலாய் கூறினார். “அடுத்து என்ன நடக்கும்? காலதாமதமாகும் முன் சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1607/

“குரூரமான கொடுமை”: “காலனித்துவமுறையை” ஆதரிப்போர் என பஹாய்கள் அபத்தமாகக் குற்றம் சாட்டப்பட்டு ஈரான் முழுவதும் கைதுகளும் திடீர் சோதனைகளும்


BIC (பஹாய் அனைத்துலக சமூகம் பி.ஐ.சி.) ஜெனீவா, 1 ஆகஸ்ட் 2022, (BWNS) – ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் ஈரான் முழுவதும் 52 பஹாய்களின் வீடுகள் மற்றும் வணிகங்கள் மீதான சோதனைகளை நியாயப்படுத்தும் முயற்சியாகவும், 13 தனிநபர்கள் கைது செய்யப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்டதை நியாயப்படுத்தும் முயற்சியாகவும், துன்புறுத்தப்பட்ட பஹாய் மத சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு திகிலூட்டும் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

உளவுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைகள் பற்றி ஒரு சம்பிரதாயமான அறிக்கையை வெளியிட்டுள்ளது—இது பல வாரங்களாக பஹாய்களின் மீது தொடுக்கப்பட்ட அழுத்தத்தை அதிகரித்த பின்னர் வெளியிடப்பட்டுள்ளது—கைதுகள் “பஹாய் உளவு [அரசியல்] கட்சியின்” உறுப்பினர்களுக்கு எதிரானவை எனவும், கைது செய்யப்பட்டவர்கள் “தாங்களே நிர்மாணித்துள்ள பஹாய் காலனித்துவ போதனைகளைப் பரப்பி வருவதாகவும், மேலும் மழலையர் பள்ளிகள் உட்பட கல்விச் சூழல்களை ஊடுருவி வருவதாகவும்” அவ்வறிக்கை கூறியது. மழலையர் பள்ளிகளைப் பற்றிக் குறிப்பிடுவது, பாலர் பள்ளி ஆசிரியர்களாக இருக்கும் பல பஹாய்களை குறிவைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வெளிப்படையான சாக்குப்போக்காகும்.

பஹாய் சர்வதேச சமூகம் (BIC) இந்த அபத்தமான மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத குற்றச்சாட்டுக்களை அப்பட்டமான கட்டுக்கதைகள் என நிராகரிக்கின்றது. ஈரானிய அரசாங்கம் செய்து கொண்டிருப்பது, ஒரே நேரத்தில் அப்பட்டமான ஒடுக்குமுறையின் ஒரு செயலும், மிக மோசமான வெறுப்புப் பேச்சுக்களின் திமிர்த்தனமான உதாரணமும் ஆகும்.

பதின்மூன்று தனிநபர்கள் –அவர்களுள் மஹ்வாஷ் சபேத், ஃபரிபா கமலாபாடி மற்றும் அஃபிஃப் நயீமி ஆகியோர் முன்பு சமூக தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் மற்றும் மனசாட்சி சார்ந்த கைதிகள் ஒவ்வொருவரும் ஒரு தசாப்தத்தை சிறையில் கழித்தனர்—இந்த சோதனைகளின் போது கைது செய்யப்பட்டனர். ஒருவர் எவின் சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், மற்ற இருவரின் இருப்பிடம் தெரியவில்லை.

“மஹ்வாஷ் சபேத், ஃபரிபா கமலாபாதி மற்றும் அஃபிஃப் நயீமி ஆகியோர் ஈரானில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது” குறித்து நாங்கள் சீற்றமடைந்துள்ளோம் என ஐ.நா.வுக்கான பி.ஐ.சி.யின் பிரதிநிதியான டயேன் அலாயி கூறினார்.

திருமதி அலாயி மேலும் கூறியதாவது: “ஈரானின் பாதுகாப்பைக் கீழறுக்க முயலும் வெளிநாட்டு சக்திகளின் முகவர்களாக இந்த நபர்களை உளவுத்துறை அமைச்சகம் சித்தரிக்க முயற்சிப்பது மேலும் எரிச்சலூட்டுகிறது. அமைச்சின் அறிக்கை முற்றிலும் முட்டாள்தனமானது, தன்னிலேயே முரண்பாடு உடையது. மேலும் குற்றச்சாட்டுக்கள் தெளிவாகவே அபத்தமானவை மற்றும் ஆதாரமற்றவை. ஈரான் நாட்டு அதிகாரிகள் தங்கள் நாட்டின் சவால்களைக் கையாள்வதற்குப் பதிலாக, அப்பாவிகள் மீதான அவர்களின் தாக்குதல்களை வழிநடத்தி, மத வெறுப்பைத் தூண்ட முயல்கின்றனர்.

“ஈரான் அரசாங்கம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஹாய்கள் வெளிநாடுகளின் உளவாளிகள் என குற்றம் சாட்டி வருகிறது, ஆனால் அந்த நேரத்தில், நம்பகமான ஆதாரங்களின் ஒரு துளியை கூட முன்வைக்கத் தவறிவிட்டது. இப்போது அவர்கள் மழலையர் பள்ளி மற்றும் தினப்பராமரிப்பு ஆசிரியர்களைத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர் என கூறுகின்றனர்.”

சபேத், கமலாபாடி மற்றும் நயீமி ஆகியோர் ஈரானின் “யாரன்” அல்லது “நண்பர்கள்” என்று அழைக்கப்படும் ஒரு குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர்: இது 2008 வரை ஈரானிய பஹாய் சமூகத்தின் முறைசாரா தலைமையாக செயல்பட்டது. அதன் ஏழு உறுப்பினர்களும் 2007 மற்றும் 2008ல் கைது செய்யப்பட்டு ஒரு தசாப்த காலத்திற்குச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரான் நாட்டின் மிகப் பெரிய முஸ்லிமல்லாத மதச் சிறுபான்மையினரான சமூகத்தின் அடிப்படை ஆன்மீக மற்றும் லௌகீகத் தேவைகளை யரான் கவனித்துக் கொண்டார். மேலும், அந்த நேரத்தில் ஈரானிய அதிகாரிகளின் அறிவு மற்றும் ஏற்புடன் அவ்வாறு செய்தார். ஆனால் அவர்களின் முதல் கைதுகளின் விளைவாக யாரான் கலைக்கப்பட்டதுடன், அது ஒருபோதும் மீண்டும் ஒன்றிணைக்கப்படவோ அல்லது மீண்டும் ஸ்தாபிக்கப்படவோ இல்லை. எனவே, அவர்கள் பஹாய் “உளவாளிக் கட்சியின்” “முக்கிய உறுப்பினர்கள்” என அழைக்கப்படுபவர்களின் ஒரு பகுதியாக இருக்கின்றனர் என உளவுத்துறை அமைச்சகத்தின் மறைமுக அறிக்கைகள் ஒவ்வொரு வகையிலும் முற்றிலும் தவறானவை.

ஷிராஸ், தெஹ்ரான், யாஸ்ட் மற்றும் போஜ்னோர்-டில் உள்ள 20 பஹாய்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, அல்லது வீட்டு சோதனைகள் மற்றும் வணிக மூடல்களுக்கு உட்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்த சோதனைகளும் தடுப்புக்காவல்களும் வந்துள்ளன, மேலும்,  ஈரான் முழுவதிலும் உள்ள 44 பேர் கைது செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு அல்லது சிறையில் அடைக்கப்பட்ட  ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குள் இந்தச் சோதனைகளும் தடுப்புக்காவல்களும் வந்துள்ளன.  ஷிராஸில் இருந்த 44 பேரில் 26 பேருக்கு மொத்தம் 85 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே, கடந்த சில வாரங்களில் ஈரான் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பஹாய்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

தெஹ்ரானின் எவின் சிறைச்சாலையில் இருந்த தமது தசாப்தகாலத்தில் கவிதைகளை எழுதிய மஹ்வாஷ் சபேட், அவர் சிறையில் இருந்தபோது பகிர்ந்துகொண்டும் பின்னர் “சிறைக் கவிதைகள்” என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் அவற்றை வெளியிடப்பட்டார். பின்னர், 2017-ஆம் ஆண்டில் ஒர் ஆங்கில PEN துணிச்சலுக்கான சர்வதேச எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார்.

“2017-ஆம் ஆண்டு சர்வதேச துணிச்சல் எழுத்தாளருக்கான PEN Pinter பரிசை வென்ற மஹ்வாஷ் சபேட் ஈரானில் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்னும் செய்திகளால் நாங்கள் மிகவும் கவலையடைகிறோம்” என ஆங்கில PEN இயக்குனர் டேனியல் கோர்மன் கூறினார். “நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவோம்.”

ஒரு மனோதத்துவ மேம்பாட்டினரான ஃபரிபா கமலாபாடி 2008-இல் கைது செய்யப்பட்டார்; ஒரு தசாப்த காலத்தை சிறையில் கழித்தார். 2017-ஆம் ஆண்டில் மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அவரை மனசாட்சி சார்ந்த மதக் கைதியாக அங்கீகரித்து ஆதரித்தது.

2008 இல் கைது செய்யப்பட்ட தொழிலதிபரான அஃபிஃப் நயீமி, தமது 10 ஆண்டுச் சிறைத் தண்டனையின் பெரும்பகுதியை உடல்நலக் குறைவில் கழித்த போதிலும், தமக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அவருக்கு மறுக்கப்பட்டிருந்தது. அவர் முன்னாள் பஹாய் தலைமைக் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் 2018-இல் விடுவிக்கப்பட்டார்.

“இந்த பஹாய்களைத் தடுத்து வைத்திருப்பது ஈரான் நாட்டு அரசாங்கம் முழு பஹாய் சமூகத்தையும் துன்புறுத்துவதற்கான அதன் திட்டமிட்ட பிரச்சாரத்தின் அர்த்தமற்ற குரூரத்தை நிரூபிக்கிறது” என மிஸ். அலாயி கூறினார். “மஹ்வாஷ் சபேத், ஃபரிபா கமலாபாடி மற்றும் அஃபிஃப் நயேமி ஆகியோர் ஈரான் நாட்டு மீள்திறம் சார்ந்த சின்னங்கள், மனசாட்சி சார்ந்த கைதிகளெனும் முறையில் அவர்களின் தைரியத்திற்காக உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்கள்; உதவியற்ற, அமைதியான (பஹாய்) சமூகத்தைத் தாக்குவதற்கான ஈரானிய அரசாங்கத்தின் சாக்குப்போக்குகளை எவரும் நம்பப்போவதில்லை. ஆனால், இந்த இடைவிடாத மற்றும் தீவிரமடைந்து வரும் மனோததுவ போர், வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் பஹாய்களை மேலும் துன்புறுத்துவதற்கான களத்தை அமைக்கிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1606/