பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமுமான பஹாவுல்லாவின் எழுத்துக்களை சுமார் 100 நூல்களாக தொகுக்கலாம். பல நூல்களையும், ஆயிரக்கணக்கில் நிருபங்களையும் அவரது 40 வருட சமயப் பணிக்காலத்தில் அவர் படைத்துள்ளார். பெரும்பாலான அவரது எழுத்துக்கள் இதுவரை மொழிபெயர்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவற்றுள் ஒன்று “மருத்துவருக்கான நிருபம்” என்பதாகும். உடல் நலம் குறித்து ஓர் அன்பரின் வினாக்களுக்கான பதிலாக இந்த நிருபம் வரையப்பட்டது. இந்த நிருபம் இதுவரை அதிகாரபூர்வமாக மொழிபெயர்க்கப்படவில்லை ஆனால், அதன் சில பகுதிகள் தற்காலிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றை கீழே காணலாம்:
பௌதீக குணப்பாடு
பஹாவுல்லாவினால் வெளியிடப்பட்ட ஒரு நிருபத்திலிருந்து, உடல்நலத்திற்கான சில கோட்பாடுகள்.
கடவுளே! அதிவுயர் அறிவாளரே! தொன்மையான நா மருத்துவர்கள் இல்லாத நிலையில் விவேகமிக்கவர்களை மனநிறைவுறச் செய்யக்கூடியதை உரைக்கின்றது.
மக்களே, பசித்தால் ஒழிய உணவருந்தாதீர்கள். உறங்கச் சென்ற பிறகு நீர் அருந்தாதீர்கள்.
வெற்று வயிறாக இருக்கும்போது உடற்பயிற்சி நன்மைபயக்கும்; அது தசைநார்களை வலுப்படுத்துகிறது. வயிறு நிறைந்திருக்கும்போது அது தீங்குமிக்கதாகும்.
தேவைப்படும் வேளையில், மருத்துவ உதவியை புறக்கணிக்காதீர்கள், ஆனால் உடல் நலமடந்தவுடன் போது அதை கைவிட்டுவிடுங்கள்
ஜீரண(செயற்பாடு) நிறைவுற்றால் தவிர ஆகாரம் அருந்தாதீர்கள். நன்கு அரைபடும்வரை உணவை விழுங்காதீர்கள்.
நோயை முதன்மையாக உணவுமுறையைக் கொண்டே குணப்படுத்துங்கள், மற்றும் மருந்துவகைகளை நாடாதீர்கள். உடல்நலத்திற்கான நிவாரணம் ஒரே ஒரு மூலிகையில் நீங்கள் காணமுடிந்தால் பல்கூட்டான மருந்துவகைகளை பயன்படுத்தாதீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்போது மருந்துவகைகளை விட்டுவிடுங்கள், மற்றும் தேவைப்படும்போது மட்டுமே அதை பயன்படுத்துங்கள்.
வெவ்வேறு நேரெதிரான உணவு வகைகள் இரண்டு மேசைமீது வைக்கப்பட்டால் அவற்றை கலக்கவேண்டாம். அவற்றில் ஒன்றுடன் மட்டும் மனநிறைவுகொள்ளுங்கள். கெட்டிவகை உணவை உட்கொள்ளும் முன் திரவவகை உணவை முதலில் அருந்துங்கள். நீங்கள் ஏற்கணவே உண்ட உணவு ஜீரணமாவதற்குள் மறுபடியும் உணவு உண்பது ஆபத்தானதாகும்…
நீங்கள் உணவு உண்டபின் அந்த உணவு படிவுற சற்று நடக்கவும்
(பற்களால்)அரைபட கடினமானவை விவேகமிக்கவர்களால் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறாகவே அதிவுயரிய எழுதுகோல் உங்களுக்கு ஆணையிடுகிறது.
காலையில் எளிய உணவு உடலுக்கு ஒளி போன்றது.
தீங்குவிளைவிக்கும் பழக்கவழக்கங்களை தவிர்த்துவிடுங்கள்: அவை உலகில் துயரத்தை விளைவிக்கின்றன.
நோய்களுக்கான காரணங்களை கண்டறியுங்கள். இவ்வாக்கே இவ்வாய்மொழிதலின் முடிவாகும்.
(Star of the West, தொ. 13, எண். 9, டிசம்பர் 1922, ப. 252)ஆண்டவரிலேயே நமது நம்பிக்கை இருக்க வேண்டும். குணப்படுத்துபவர், அறிவாளர், உதவுபவர் அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை… மண்ணுலகு அல்லது விண்ணுலகில் உள்ள எதுவுமே கடவுளின் கைப்பிடிக்கு அப்பாற்பட்டதல்ல.
மருத்துவரே! நோயுற்றோரை குணப்படுத்துவதில், முதலில் தீர்ப்பளிக்கும் நாளுக்கு உடையவரான, கடவுளின் நாமத்தை உச்சரியுங்கள், பிறகு கடவுளால் தமது படைப்பினங்களின் குணப்பாட்டிற்கென விதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்துங்கள். என் வாழ்வின் மீது ஆணையாக! எமது அன்பெனும் மதுவை அருந்திய மருத்துவர் (எவரோ), அவரது வருகை குணமளிக்கக்கூடியது, அவரது மூச்சு கருணையும் நம்பிக்கையும் ஆகும். உடல்கட்டமைப்பின் நலனுக்கு அவரையே பற்றிக்கொள்ளுங்கள். தமது சிகிச்சைமுறையில் அவர் கடவுளால் உறுதிபடுத்தப்படுகிறார்.
(Star of the West, தொ. 21, எண். 5, ஆகஸ்ட் 1930, ப. 160)
உகந்த நேரத்தில் சிறந்த கட்டுரை. நன்று.