
பாப்புவா நியூ கினி: வழிபாட்டு இல்லம் உருபெற்று வருகின்றது
8 அக்டோபர் 2021
போர்ட் மோரெஸ்பி, பாப்புவா நியூ கினி – பாப்புவா நியூ கினி, போர்ட் மோரஸ்பி’யின் வாய்கானி பகுதியை அணுகும் போது, தற்போது கட்டுமானத்தில் இருக்கும் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் உயர்ந்து வரும் கட்டமைப்பு எல்லா திசைகளிலிருந்தும் கண்களுக்குப் புலப்படுகின்றது. பூர்த்தியான பிறகு, எல்லா பின்னணிகளையும் சார்ந்த மக்களுக்குத் திறந்திருக்கும் இந்த வழிபாட்டு இல்லம், வழிபாட்டிற்கும் சமுதாய சேவைக்குமான ஒரு மையமாக செயல்படும்.
“800’க்கும் மேற்பட்ட மொழிகளையும் அதே அளவு பல பழங்குடியினரையும் கொண்ட பப்புவா நியூ கினியில், வழிபாட்டு இல்லம் நாட்டின் அனைத்து மக்களுக்குமான ஒற்றுமையைக் குறிக்கிறது” என்று நாட்டின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் கன்ஃபூசியஸ் இகோய்ரேரே கூறுகிறார். “பாரம்பரிய நெசவு முறைகளை அடிப்படையாகக் கொண்ட கோவிலின் வடிவமைப்பு, ஒற்றுமையை அடையாளப்படுத்துகின்றது. இந்தக் கலை வடிவமானது, சிறப்பு சந்தர்ப்பங்களுக்காக உருவாக்கப்பட்ட கூடைகளிலிருந்து அன்றாட வாழ்க்கையில் அல்லது விசேஷ நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும், குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு நெய்யப்பட்ட பாய்கள் வரை நாட்டில் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. எங்கள் மாறுபட்ட பின்னணிகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கிடையில் நாங்கள் எவ்வாறு ஒன்றாக வருகிறோம் என்பதை நெசவு நினைவூட்டுகின்றது.”

கடந்த டிசம்பரில் வழிபாட்டு இல்லத்தின் அஸ்திவாரங்கள் நிறைவடைந்ததிலிருந்து, வெளிப்புறத்தின் தனித்துவமான நெசவு வடிவத்தை அடையாளப்படுத்தும் மைய கட்டமைப்பின் நுண்ணிய எஃகு கட்டமைப்பில் பணிகள் மேம்பாடு கண்டுள்ளன. ஜெர்மனி மற்றும் போலந்தை தளமாகக் கொண்ட ஒரு பொறியியல் நிறுவனமான Werkstudio’வினால் வடிவமைக்கப்பட்ட எஃகு குவிமாடத்திற்கான ஒரு புதுமையான வடிவமைப்பு, பொருள்களின் சிக்கனமான பயன்பாட்டுடன் அதற்குத் தேவையான பலத்தை வழங்குகிறது.

கோவிலுக்கு பக்கவாட்டு வலிமையை வழங்கும் ஒன்பது நுழைவு விதானங்களுடன் கட்டமைப்பின் முறைமை இடைமுகம் ஆகின்றது. அதன் பகுதிகள் நிறைவடையும் தருவாயிலுள்ள இந்த அமைப்பு, இறுதியில் அதன் உச்சியில் தரை மட்டத்திலிருந்து சுமார் 16 மீட்டர் உயரத்தை எட்டும் ஒரு எஃகு குவிமாட வலையைத் தாங்கி நிற்கும்.

உள்ளூர் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கோயிலின் நுழைவாயில்களை அலங்கரித்திட விருக்கும் மரப் பேனல்களுக்கான வடிவமைப்புகள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. மத்திய கட்டிடத்தைச் சுற்றியுள்ள தோட்டங்களுக்கான திட்டமிடலும் நடைபெற்று வருகிறது.
திரு இகோய்ரேரே, “மக்கள், ஆறுதலையும் அமைதியையும் காண்பதற்கும் தங்களின் சிருஷ்டிகர்த்தாவிற்கு நேரம் ஒதுக்கவும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான உத்வேகத்தைப் பெறுவதற்கும் வழிபாட்டு இல்லம் ஒரு சூழ்நிலையை வழங்கிடும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1469/