BIC: வேலையின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்தல்


BIC நியூயார்க், 4 மார்ச் 2022, (BWNS) – தொற்றுநோயினால் எதிர்பார்க்கப்படாத சவால்கள் உலகெங்கிலும் உள்ள பலரை அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் மற்றும் வேலை (work) செய்கிறார்கள் என்பதைப் பற்றி ஆழமாக சிந்திக்க வழிவகுத்துள்ளது. இது, கோவிட்-க்கு பிந்தைய உலகில் வேலையின் தன்மை மற்றும் நோக்கம் பற்றிய கேள்விகளை அதிக கவனம் செலுத்தி, பணி இட கலாச்சாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல விவாதங்களைத் தூண்டியுள்ளது.

“பஹாய் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதியான லிலியான் நகுன்சிமானா கூறுகையில், “கடந்த சில வருடங்களாகப் பலரால் லௌகீக வளங்களைப் பெறுவது அல்லது அதிக லாபம் ஈட்டுவது போன்ற பணியின் நோக்கத்தை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். (BIC), “நடைமுறையான ஓர் எதிர்காலம்: செழிப்பைக் உருவாக்கிட தலைமுறைகளினூடே கலந்தாலோசனை” என்னும் தலைப்பில் ஒரு விவாத அரங்கில் தனது தொடக்கக் கருத்துரையில் இவ்வாறு கூறினார்.

BIC கலந்துரையாடல் அரங்கத்தில் பங்கேற்பு பின்வருவோரை உள்ளடக்கியுள்ளது: ஸ்டெபானோ குவேரா (மேல்-நடுத்தர), ஐக்கிய நாடுகள் சபைக்கான போர்ச்சுகல் நிரந்தர தூதுவர்; எரிகா தார் (மேல்-வலது), AARP இன்டர்நேஷனலுக்கான குளோபல் அலையன்ஸ்ஸின் இயக்குனர் மற்றும் UN இல் முதுமைக்கான NGO குழுவின் உறுப்பினர்; கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் BIC இன் பிரதிநிதிகள்.

சமூக மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் 60-வது அமர்வின் போது, ​​BIC-இன் நியூயார்க் அலுவலகம் மற்றும் முதுமைக்கான NGO கமிட்டி இணைந்து நடத்திய இணையவழி நிகழ்வு, வேலைக்குத் தேவையான கொள்கைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டியது பற்றிய விவாதத்திற்கு ஒரு தனித்துவமான கருத்தரங்கை வழங்கியது. .

“வேலையின் எதிர்காலம் பற்றிய பல உரையாடல்கள் பெரும்பாலும் வேலைச் சூழல்களில் தொழில்நுட்பத்தின் தாக்கத்தை மையமாகக் கொண்டுள்ளன. புதிய சாத்தியக்கூறுகள், ஒற்றுமை, நீதி, ஒத்துழைப்பு, தன்னலமற்ற தன்மை மற்றும் ஆலோசனை போன்ற கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய மதிப்புகள் மற்றும் கொள்கைகளை அடையாளம் கண்டு பயன்படுத்துவதில் மிகக் குறைவான கவனம் செலுத்தப்படுகிறது, ”என திருமதி நுகுஞ்சிமானா கூறினார்.

இந்த நிகழ்வின் ஒலிப்பதிவை இங்கு செவிமடுக்கலாம்

இருப்பினும், அத்தகைய கொள்கைகளின் பயன்பாடு பலக்கியமானது. BIC தனது முந்தைய அறிக்கைகளில் ஒன்றில், இந்த மதிப்புகளை ஏற்றுக்கொள்வது தற்போதைய பொருளாதார மாதிரிகளுக்கு அடித்தளமாக இருக்கின்ற, பரவலாகவுள்ள அனுமானங்களுக்கு சவால் விடும் என்று குறிப்பிட்டுள்ளது-உதாரணமாக, போட்டி என்பது முன்னேற்றத்தை தூண்டுகிறது மற்றும் மனிதர்கள் பொது நன்மைகளைவிட தங்கள் சொந்த நலன்களை மேம்படுத்துவதிலேயே சிறப்பாக செயல்படுகிறார்கள். .

வேலையின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்வதில் பல்வேறு தடைகள் இருப்பினும், கோவிட் மீட்பு முயற்சிகளுக்கு விடையிறுக்கும் வகையில் பலர், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் காட்டும் தாராள மனப்பான்மை மற்றும் ஒத்துழைப்பு மனித இயல்பு பற்றிய புதிய நுண்ணறிவுகளையும் நம்பிக்கையான கண்ணோட்டத்தையும் வழங்கியுள்ளது என பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.

இளைஞர்களும் சமூக தன்மைமாற்றமும் குறித்த மாதாந்திர கருத்தரங்குகளின் தொடர் மூலம் இந்த உரையாடலைத் தொடர BIC திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வின் பதிவை இங்கே பார்க்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: