பிரேஸில்: பகிரப்பட்ட அடையாளத்தின் மூலம் பிரிவினைகளை எதிர்கொள்தல்


1 பிப்ரவரி 2023

பிரேசிலியா, பிரேசில் – பிரேசில் நாட்டின் பிரேசிலியாவில் உள்ள தேசிய காங்கிரஸில் சமீபத்தில் நடைபெற்ற பொது விசாரணையானது, மனிதகுலத்தின் ஆன்மீக இயல்பை அங்கீகரிப்பதன் மூலம் நாட்டின் பலதரப்பட்ட மக்களிடையே பகிரப்பட்ட அடையாளத்தை ஊக்குவிப்பதில் மதத்தின் பங்கை ஆய்வு செய்தது.

காங்கிரஸின் கீழ்சபையின் ஃபெடரல் துணை அதிகாரி எரிகா கோகே தமது தொடக்கக் கருத்துக்களில், பின்வரும் யோசனையை வலியுறுத்தினார்: “நமது ஆன்மீக இயல்பை மறுப்பது மனித இருப்பின் அடிப்படை அம்சத்தைப் பிய்த்து எறிவது போன்றது.”

பிரேசிலின் பஹாய் வெளிவிவகார அலுவலகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசாரணையில், கல்வியாளர்கள், சமய சமூகங்கள், பொதுமை சமூக அமைப்புக்கள் ஆகியன அடங்கிய ஒரு சமய ஒருமைபாட்டுக் குழுவின் பங்கேற்பு இருந்தது.

ஆழமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் ஆன்மீகக் கொள்கைகளைத் தழுவுவதன் மூலம் எவ்வாறு பலப்படுத்தப்படலாம் என்பதை விவாதங்கள் ஆராய்ந்தன.

பிரேசில் நாட்டின் பிரேசிலியாவில் உள்ள தேசிய காங்கிரஸில் நடைபெற்ற பொது விசாரணையில் பங்கேற்ற சிலரின் குழு புகைப்படம்.

வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரான லூயிஸா கவால்கன்டி, சமூகத்தில் பிரிவினைகளின் மையத்தில் அடையாள நெருக்கடி உள்ளது என கூறினார். “நாம் மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் வாழ்கிறோம்… கொந்தளிப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய, நெருக்கடி மற்றும் மாற்றத்தின் காலம் அது,” என அவர் கூறினார்.

சில குழுக்கள், பெரும்பாலும் “மற்றவர்” என கருதப்படுபவர்களுக்கு எதிரான எதிர்ப்பின் அடிப்படையாக மாறும் குறுகிய அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட ஒற்றுமை உணர்வைக் கொண்டுள்ளனர், என திருமதி காவலன்டி விளக்கினார்.

இந்த அணுகுமுறைகள் இறுதியில் கலாச்சார மட்டத்தில் வலுப்படுத்தப்படுகின்றன என அவர் கூறினார். “தவறுதலாக, ‘மற்றவர்’ என்னும் இந்தக் கலாச்சாரத்தை சகித்துக்கொள்ள கற்றுக்கொள்வதுதான் இன்றைய நமது சவால் எனவும், இதுவே போதும் எனவும் நாம் எண்ணுகிறோம்.”

திருமதி. கேவல்காண்டி கூறுகையில், “தேவைப்படும தன்மைமாற்றமானது, மனிதத் தொடர்புகளின் கூட்டுறவு வடிவங்களையும்… நமது சமுதாயத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் ஒடுக்குமுறை மற்றும் சிதைவுக்கு வழிவகுக்கும் கலாச்சாரத்தின் கூறுகளை வேறுபடுத்திப் பார்க்க அதிக மக்களுக்கும் சமூகங்களுக்கும் உதவும் ஒரு பரந்த கற்றல் செயல்முறை நிறுவப்படுதலைக் கோருகின்றது.

அத்தகைய கற்றல் செயல்முறையை ஸ்தாபிப்பதற்கு, மதத்திலிருந்து வழிகாட்டும் கொள்கைகள் தேவைப்படும். அதாவது, “மனித கண்ணியத்தின் அசைக்க முடியாத பாதுகாப்பு, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் வகைப்படுத்தும் இடைத்தொடர்பு” மற்றும் கூட்டு நடவடிக்கையும் தீர்மானம் செய்வதற்குமான அடிப்படையாக நீதி, கலந்தாலோசனை ஆகியன. பிரேசில் சமூகத்தின் ஒரு குறுக்குப் பிரிவினருடன் சமூக நீதி மற்றும் கலாச்சார மாற்றத்தின் பிரச்சினையை ஆராய்வதற்கான வெளியுறவு அலுவலகத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விசாரணை இருந்தது. பெரும்பாலும் அது வழக்கமாக நடத்தும் கலந்துரையாடல் மன்றங்கள் மூலம் நடைபெற்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1641/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: