13-ஆம் அனைத்துலக மாநாடு: தாயகம் திரும்பும் பேராளர்கள் ஒற்றுமை உணர்வுடன் பிரகாசித்தனர்


3 மே 2023

பஹாய் உலக மையம் – அனைத்துலக பஹாய் பேராளர் மாநாட்டு பங்கேற்பாளர்களின் பயணம் நேற்று மாலை மிகவும் உணர்ச்சிகரமாக முடிவடைந்தது, பேராளர்கள் பாஹ்ஜியில் உள்ள பஹாவுல்லாவின் சன்னதியைச் சுற்றியுள்ள புனித மைதானத்தில் ரித்வான் திருவிழாவை நினைவுகூர்ந்தனர் – இது அவர்களை உத்வேகத்தில் ஆழ்த்திய ஆழமான நெகிழ்ச்சி மிக்க அனுபவமாக இருந்தது.

பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, இறைத்தூதராகத் தமது பணியை பகிரங்கமாக அறிவித்த காலகட்டத்தை குறிக்கும் வகையில், ரித்வான் பண்டிகை பஹாய்களின் இதயங்களில் ஒரு விசேஷ இடத்தைப் பிடித்துள்ளது.  ஏப்ரல் 21 முதல் மே 2 வரை கொண்டாடப்படும் இந்த பன்னிரண்டு நாள் திருவிழா, உலகெங்கிலும் உள்ள பஹாய்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பிரதிபலிப்புக்குரிய நேரமாகும். மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்கள் ரித்வான் உணர்விலிருந்து உத்வேகம் பெற்றனர். இது ஒற்றுமை மற்றும் புதுப்பித்தலின் ஒரு முக்கிய தருணத்தை பிரதிநிதிக்கின்றது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் இல்லங்களை நோக்கிய பயணத்தைத் தொடங்கியபோது, பாஹ்ஜியில் நடந்த நினைவேந்தலானது மாநாட்டுக்கு ஒரு உருக்கமான கவசமாக அமைந்தது. கடந்த நாட்களில் அவர்களின் அனுபவத்தால் செறிவூட்டப்பட்ட பேராளர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்குத் திரும்பும்போது, அது அமைதியான சமூகங்களைப் பேணுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு உயிரூட்டுகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1666/

மேலும் மாநாட்டின் நிறைவு நாள் மற்றும் பாஹ்ஜியில் ரித்வான் 12-வது நாள் நினைவேந்தல் படங்களைக் காண:
https://news.bahai.org/story/1666/slideshow/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: